உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
வெள்ளை மாளிகையின் உயர் விருது பெற்ற சாதனைத் தமிழன் பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தனுடன் நேர்முகம் தன்னம்பிக்கை + முயற்சி = சாதனை வெள்ளை மாளிகையின் உயர் விருது பெற்ற சாதனைத் தமிழன் பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தனுடன் நேர்முகம் செவ்வி கண்டவர் : ஆதிரையன் பேராசிரியர் சிவநாதனைப் பற்றி ஒன்பது பேர் அடங்கிய குடும்பத்தில் ஆறாவது பிள்ளை பிறப்பிடம்: மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி தந்தையார்: தமிழ்ப் பண்டிதர் – ஓய்வுபெற்ற அதிபர் (ஊரிக்காடு, வல்வெட்டித்துறை), தாயார்: ஆசிரியர் ஆரம்பக்கல்வி: மட்டுவில் சரஸ்வதி மகாவித்தியாலயம் இரண்டாம் நிலைக் கல்வி: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1967-1975) உயர்கல்வி: பேராதனைப் பல்கலைக்கழகம் (1976-1980) முதல் தொழில்: விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம…
-
- 0 replies
- 849 views
-
-
அமெரிக்க வரலாற்றில் நடந்துள்ள மிகப்பெரிய பாதுகாப்பு விதி மீறல்களில் ஒன்றான, அந்நாட்டின் புலனாய்வு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பான நபர் தாமாக முன்வந்து தனது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார். 29- வயதான எட்வர்ட் ஸ்நோவ்டென் என்ற இந்த இளைஞன் அமெரிக்க உளவுத்துறையான சீஐஏ-இன் முன்னாள் கணினி நிபுணர்.அமெரிக்காவின் மிகவும் ரகசியமானதும் வெளியிடப்பட முடியாததுமான மிக நுணுக்கமான உலக கண்காணிப்பு செயற்திட்டத்தை அம்பலப்படுத்தியதை அவர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். கோடிக்கணக்கான தொலைபேசி உரையாடல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் ஏனைய உலகளாவிய நாளாந்த தொடர்பாடல்களைக் கண்காணிக்கின்ற புலனாய்வு பொறிமுறை செயற்திட்டத்தையே அவர் அம்பலப்படுத்தியிருந்தார். அமெரிக்க உளவுத்துறையினர்…
-
- 8 replies
- 2.2k views
-
-
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா, டி.எல்.எப். என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து மிகக்குறைந்த விலைக்கு நிலங்களை பெற்றதாக ‘ஆம் ஆத்மி‘ கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இந்த சர்ச்சைக்குரிய நில பேரம் குறித்த வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை தனக்கு தருமாறு நுதன் தாக்குர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், மனுதாக்கல் செய்தார். அனால் , பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தர பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது. ‘இந்த விவகாரம் ரகசியமானது என கருதுகிறோம். இதுபோன்ற ரகசியங்களை வெளியிட சுப்ரீம் கோர்…
-
- 0 replies
- 452 views
-
-
உச்சாணிக்கொம்பில் சில நிமிடம்... 'ஜோ மெக்னாலி' என்ற புகைபட கலைஞர், உலகின் மிக உயரமான கட்டிடமான துபை "புர்ஜ் கலீஃபா" (Burj Khalifa - 2722' அடி) மாடியின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள இடி தாங்கி கொம்பின் மேல் வரை ஏறி நின்று மயிர்கூச்செறியும் பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து சாதனை புரிந்துள்ளார். இவர் மொத்தமுள்ள 160 மாடிகள் ஏறியபின், உச்சியில் அமைந்துள்ள உலோகத்தாலான 450 அடி உயர குழாயினுள் நுழைந்து ஏறி, கயிற்றல் இடுப்பை கட்டிகொண்டு தொங்கியவாறு படமெடுத்ததை ஓர் புதிய அனுபவமென தெரிவித்துள்ளார். http://youtu.be/30_b22TVY7s செய்தி மூலம்:http://www.dailymail.co.uk/news/article-2338050/Joe-McNally-Photographer-scales…
-
- 3 replies
- 501 views
-
-
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு, தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் பதவி கொடுத்து அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதை விரும்பாத அத்வானி, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். இது, பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பா.ஜ.க.வுக்கு கட்சி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு நடக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவானது. ஆனால், அத்வானியின் ராஜினாமாவை பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து நேற்றிரவு பா.…
-
- 2 replies
- 567 views
-
-
Germany appears to be the most snooped on EU country by the US, a map of secret surveillance activities by the National Security Agency (NSA) shows. EU officials are to question their US counterparts on data snooping in Europe. The color-coded map of secret surveillance activities by the NSA ranks countries according to how much surveillance they are currently undergoing - green for the least and red for the most watched. While all EU member states boast variant shades of green, Germany stands out, color-coded orange. The source behind the revelation of the top-secret NSA surveillance program, already referred to as one of the most significant intelligence leaks in US…
-
- 0 replies
- 453 views
-
-
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் கடந்த 2007ம் ஆண்டு காலை நேர நடைபயிற்சிக்கு சென்ற பிரபல ஆன்மிகவாதி சுவாமி சங்கர் தேவ் திடீரென்று மாயமானார். இச்சம்பவத்திற்கு சில தினங்களுக்கு பிறகு சுவாமி சங்கர் தேவை யாரோ கடத்தி விட்டார்கள் என்று அவருடன் திவ்ய யோக் மந்திர் அறக்கட்டளை மடத்தில் தங்கியிருந்த நண்பர் பாலகிருஷ்ணா என்பவர் போலீசில் புகார் அளித்தார். மாயமான சுவாமி சங்கர் தேவ், யோகா குருவான பாபா ராம்தேவ்-வின் ஆன்மிக குருவாக கருதப்படுபவர். திவ்ய யோக் மந்திர் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை கைப்பற்றும் நோக்கில் பாபா ராம்தேவ் அவரை கடத்தியிருக்கலாம் என்று கூட ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டன. சில நாட்களில் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. எனினும், 6 ஆண்டுகளாகியும் சுவாமி சங…
-
- 0 replies
- 454 views
-
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வி.சி.சுக்லா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவடா வனப்பகுதியில் கடந்த மாதம் 25-ந் தேதியன்று காங்கிரஸ் கட்சியினர் நடத்திய யாத்திரை மீது மாவோயிஸ்டுகள் மிகப் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தினர். இந்த தாக்குதலில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான சல்வா ஜூதும் அமைப்பை உருவாக்கிய அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் மகேந்திர கர்மா உட்பட 28 பேர் பலியாகினர். மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வி.சி.சுக்லா உள்ளிட்ட 35 பேர் படுகாயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.…
-
- 1 reply
- 877 views
-
-
அத்வானியின் ராஜினாமா விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பிரதமர் பதவிக்கு குறிவைத்தே அவர் இந்த ராஜினாமா நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாக அத்வானியின் நடவடிக்கைகளை நன்கு அறிந்த அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. பிரதமர் பதவி பிரதமர் பதவி மீது அத்வானிக்கு இருக்கும் தீரா காதல் நாடறிந்த ஒன்று. தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதிலும், அதற்கு முன்னதாக அந்த பதவிக்கு வர துடியாய் துடித்தார் அத்வானி. ஆனால் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தால் அத்வானி மீது படிந்த தீவிர இந்துத்துவா தலைவர் என்ற இமேஜ் அதற்கு வில்லனாய் அமைந்தது. அத்வானியை பிரதமராக ஏற்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால், மிதவாத முகமூடி கொண்ட வா…
-
- 0 replies
- 382 views
-
-
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, தனது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள ராஜினாமாக் கடிதத்தில், நான் எனது வாழ்நாள் முழுவதும் ஜனா சங் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சிக்காகவே உழைத்துள்ளேன். அதில் நான் அடைந்த திருப்திக்கு முடிவே இல்லை. ஆனால், அண்மையில் கட்சியின் தற்போதைய நிலைமையோடு என்னால் ஒத்துப் போக முடியாது என்பதை நான் அறிந்து கொண்டேன். கட்சி போகும் பாதை எனது கருத்துக்கு மாறானது. டாக்டர் முகர்ஜி, பண்டிட் தீனதயாள்ஜி, நானாஜி, வாஜ்பேயிஜி ஆகிய தலைவர்களின் கொள்கைகளோடு உருவாக்கப்பட்ட கட்சியில் தற்போது அந்தக் கொள்கைகள் இல்லை. பாஜகவில் இருக்கும் பல தலைவர்கள், தங்கள் சொந்த நலனை முக்கியமாகக் கொண்டே செயல்படுகின்றனர்.…
-
- 7 replies
- 762 views
-
-
இந்தோனேசியா நல்லெண்ண அடிப்படையில் அமெரிக்காவுக்கு 15 அடி உயரமுள்ள சரஸ்வதி தேவி சிலையை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. பாலி கலை நுணுக்குத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சரஸ்வதி தேவி சிலை வெண்ணிறத்தில் தங்க முலாம் பூசப்பட்டு எழிலுற காணப்படுகிறது. ஒரு கையில் ஜெப மாலையுடன் தாமரைப் பூவின் மீது அமர்ந்து சரஸ்வதி வீணை வாசிப்பது போல் தோன்றும் இந்த சிலை இரும்பினால் செய்யப்பட்டது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தூரத்தில் மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகே சரஸ்வதி தேவியின் இந்த சிலையும் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக இந்த சிலை இன்னும் திறந்து வைக்கப்படவில்லை.எனினும், இப்போதே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சரஸ்வதி தேவியின் சிலையை கண்டு வியக்கின்றனர் …
-
- 14 replies
- 1.1k views
-
-
நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடைபெற்றதாக எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டின. நிலக்கரி சுரங்க ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பிய எதிர்கட்சிகள், கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரை முழுமையாக முடக்கி வைத்தன. இதனையடுத்து, சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டலின் பேரில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. நிலக்கரி ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் மற்றும் சில இடைத்தரகர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே ஊடகங்களுக்கு கசிய விட்டதாக சி.பி.ஐ. இயக்குன…
-
- 0 replies
- 374 views
-
-
உலக வெப்பமயமாதலின் காரணமாக உலகில் நிலப்பரப்பு குறையும் என்று டோக்கியோ பல்கலைக்கழகம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. பெருகி வரும் உலக வெப்பமயமாதலின் காரணமாக இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 42 சதவிகித நிலப்பரப்பு, குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் இயற்கை மற்றும் காலநிலை துறையை சேர்ந்த science journal Nature Climate Change என்ற பத்திரிகை தனது ஆய்வில் தெரிவித்துள்ளது . பெருகி வரும் மக்கள் பெருக்கத்தாலும் காலநிலை மாற்றங்களாலும் 2100-ம் ஆண்டிற்கு முன்னர் உலக வெப்பத்தின் அளவு 3.5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று டோக்கியோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித்துறை தலைவர் Yukiko Hirabayashi தெரிவித்துள்ளார். இந்த காலநிலை மா…
-
- 0 replies
- 722 views
-
-
மகராஷ்டிர மாநிலத்தலைநகர் மும்பையில் உள்ள மஹிம் நகர் கேடல் சாலையில் உள்ள 4 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. மழை பெய்ததை அடுத்து இடிந்து விழுந்த இந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த நிறைய பேர் அருகில் உள்ள பாபா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு படைப்பிரிவு வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மும்பையில் நேற்றிலிருந்து தென்மேற்கு பருவமழை காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மீட்புப்பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.http://dinaithal.com/index.php?option=com_co…
-
- 2 replies
- 409 views
-
-
பாகிஸ்தானில் மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விஷம் வைத்து கொன்றதாகக் கூறப்படும் தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவது, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜராத் மாவட்டத்தின் நவன் கோட் பகுதியை சேர்ந்தவர் சப்தார் ஹூசைன். இவரது மகள் சுமார் இரண்டு வாரத்துக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால் இந்த பெண்ணின் தோழி சோபியா அமான் என்பவர் லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தனது தோழி அவளது தந்தையால் பாலியல் வல்லுறவுகுட்படுத்தப்பட்டு விஷம் வைத்து கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை வாசித்த நீதிபதி சோபியா அமானின் தோழி இறந்தது குறித்து விசாரிக்கும் படி உத்தரவிட்டுள்ளார். தா…
-
- 1 reply
- 424 views
-
-
முதுகுவலி சிகிச்சைக்குப் போன, மரதன் வீராங்கனைக்கு பிரசவம்... அமெரிக்காவில் அதிசயம். வாஷிங்டன்: அமெரிக்காவில் மராத்தான் ஓட்டப்பந்தைய வீராங்கனை ஒருவர் முதுகுவலி பிரச்சினைக்காக மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவர் நிறைமாத கர்பிணியாக இருப்பது கண்டறியப்பட்டு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதாகும் ட்ரிஸ் ஸ்டெயின் என்ற அந்த வீராங்கனை மராத்தான் விளையாட்டு போட்டிக்காக கடந்த சில மாதங்களாக பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதனால் கடுமையான முதுகுவலி ஏற்பட்டு அவதிப்பட்டார். சிகிச்சைசக்காக அவர் மருத்துவமனைக்குச் செல்லவே அங்கு எதிர்பாராத விதமாக அவர் கர்ப்பமடைந்திருப்பது கண்டறியப்பட்டது. பிரசவ வலிதான் அவருக்கு முதுகுவலியாக ஏற்பட்டுள்ளது. இதனை…
-
- 6 replies
- 678 views
-
-
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரதான சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே தாலிபன் இயக்கத்தினர் இன்று அதிகாலை அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அந்நாட்டின் எல்லா பயணிகள் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆப்கன் இராணுவ முகாமுக்கு அருகே இருந்த கட்டிமுடிக்கப்படாத- 5 மாடிக் கட்டிடமொன்றை ஆயுததாரிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துகொண்டு இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். மூன்று மணிநேரம் இந்த மோதல் நீடித்துள்ளது. குண்டுச் சத்தங்களால் அந்தப் பகுதியே அதிர்ந்துள்ளது. ஆப்கன் பாதுகாப்புப் படையினரும் தாலிபன் ஆயுததாரிகளும் இயந்திரத் துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி கடுமையான சண்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினர் 5 தாலிபன் ஆயுததாரிகளை இதன்போது ச…
-
- 0 replies
- 378 views
-
-
பாரதீய ஜனதா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மூத்த தலைவர் அத்வானி ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் அவர் அளித்த ராஜினாமா கடித்தில் கூறியிருப்பதாவது:- தற்போது கட்சியில் உள்ள தலைவர்கள் எல்லோரும் தங்களது தனிப்பட்ட ஆதாயத்துக்காக மட்டும்தான் செயல்படுகிறார்கள். இவ்வகையில் தனிநபர் ஆதாயத்துக்காக செயல்படுபவர்களுடன் இணைந்து பணியாற்றுவது கடினமாக உள்ளது. பா.ஜ.க.வை ஆரம்பித்த தலைவர்கள் எதிர்பார்த்த பாதையில் கட்சி இப்போது செல்லவில்லை. ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய் போன்ற தலைவர்களால் எந்த நோக்கத்துடன் பா.ஜ.க. தொடங்கப்பட்டதோ அந்த சித்தாந்தத்தின்படிதான் தற்போது கட்சி செல்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என…
-
- 3 replies
- 450 views
-
-
கோவா: பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சார குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், தன்னை நியமித்த தலைவர்களுக்கு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இன்று கோவாவில் நடந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் மோடி 2014 தேர்தல் பிரச்சார குழு தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இதையடுத்து தன்னை தேர்ந்தெடுத்த தலைவர்களுக்கு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். அவர் கூறுகையில், ''எனக்கு பிரச்சார குழு தலைவர் பொறுப்பு கொடுத்து ஆசி வழங்கிய அனைத்து தலைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை நிறை…
-
- 0 replies
- 423 views
-
-
6th June 2013 ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தொடர்மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் ரைன், சாலே (Saale) ஆகிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ரைன் நதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சாலே (Saale) ஆற்றின் கரையில் உள்ள ஹல்லே (Halle) நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். செக். குடியரசு தலைநகர் ப்ரேக் (Prague) -இல் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்குள்ள ரசாயன தொழிற்சாலையை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஆபத்து கால நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆஸ்திரியா, போலந்து, ஸ்லோவாக்கியா உள்ளிட்ட பிற மத்திய ஐரோப…
-
- 14 replies
- 1.1k views
-
-
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும் அந்த நாட்டின் கறுப்பர் மட்டும் அல்லாது உலக கறுப்பர் இன தலைவராகவும் கருதப்படும் முக்கிய தலைவர் நெல்சன் மண்டேலா (வயது 94) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸமாவின் செய்தித் தொடர்பாளர் மேக் மஹராஜ் கூறுகையில், "அவரது உடல்நிலை சனிக்கிழமை அதிகாலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து பிரிட்டோரியா மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது' என்று தெரிவித்தார். நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த மண்டேலா, கடந்த 7 மாதங்களில் 3-வது முறையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். Reference : A…
-
- 2 replies
- 695 views
-
-
பாராளுமன்றத்துக்கு 2004, 2009-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி 2014-ம் ஆண்டு தேர்தலிலும் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஓசையின்றி காய்களை நகர்த்தி வருகிறார். இந்த தடவை தனிப்பெரும்பான்மை பெறும் வகையில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் நினைக்கிறார். தனது திட்டத்தை நிறைவேற்ற அவர் கடந்த சில தினங்களாக காங்கிரஸ் முதல்-மந்திரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் தற்போது 15 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி உள்ளது. 2 மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி உள்ளது. இந்த மாநிலங்களில் கூடுதல் எம்.பி.க்களை பெற்றாலே போதும் தனி மெஜாரிட்டி பெற்று விடலாம் என்று…
-
- 3 replies
- 639 views
-
-
லண்டனில் வீடுகளிலும் கடைகளிலும் வாங்கும் பொருட்களில் ௦20 % சதவீதம் விரயமாவதை தடுக்க பல்வேறு உத்திகளை உணவுப் பொருட்களின் அளவைக் குறைக்க அரசாங்கம் கூடுதலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று வலியுறுத்தியுள்ளது. உலகின் மதிப்புமிக்க வளங்களைப் பயன்படுத்தி இந்த உணவுப் பொருட்களைத் தயாரித்துவிட்டு, அதைப் பிற்பாடு எவருமே பயன்படுத்தவில்லை என்பது வளங்களை வீணாக்குவதற்குச் சமமானது. எனவே உணவு விரயமாவதைத் தடுக்க வேண்டும் என சர்வதேச அபிவிருத்திக் குழுவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாதிட்டுள்ளனர். பிரிட்டனில் மக்கள் வாங்குகின்ற உணவு மற்றும் பானங்களில் இருபது சதவீதத்தை அவர்கள் பயன்படுத்தாமலேயே குப்பையில் வீசுவதாக மதிப்பிடப்படுகிறது. 1. உணவு உற்பத்த…
-
- 12 replies
- 996 views
-
-
லண்டனில் தினசரி பிச்சையெடுத்து வாழும் ஒரு பிச்சைக்காரருக்கு சொந்தமாக மாளிகை போன்ற வீடு ஒன்று இருப்பதை அறிந்து அவர் பிச்சையெடுக்க தடை போட்டது லண்டன் நீதிமன்றம். லண்டனில் Natwest bank வங்கியின் முன் தினசரி Simon Wright என்ற 37 வயது பிச்சைக்காரர் வங்கிக்கு வருவோரிடம் பிச்சையெடுத்து கொண்டிருந்தார். அவருக்கு தினசரி £300 வரை வருமானம் வந்தது. அவர் கிழிந்த அழுக்கு உடையுடன் அருகில் நாய் ஒன்றையும் உட்கார வைத்து கொண்டு பிச்சையெடுத்து கொண்டிருந்தார். ஆனால் மாலை 6 மணி ஆனவுடன் அந்த இடத்தை காலி செய்து விட்டு, Fulham High Street என்ற இடத்தில் உள்ள தனது மாளிகை போன்ற வீட்டிற்கு சென்று விடுகிறார். அவருடைய வீட்டின் மதிப்பு சுமார் £300,000 ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன் பிச்சை…
-
- 22 replies
- 1.2k views
-
-
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று துப்பாக்கி சூடு நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார். கடந்த ஒருவார காலத்தில் பாகிஸ்தான் ராணுவம் 3வது முறையாக இன்று ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தியத் தரப்பும் பதிலடி கொடுத்தது. இதை இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்வதை பாகிஸ்தான் வாடிக்கையாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/07/india-j-k-pakistani-troops-vio…
-
- 5 replies
- 420 views
-