Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டொரண்டோவில் உள்ள பிரபலமான மதுபார் ஒன்றின் மேனேஜர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட வழக்கு ஒன்றில் டொரண்டோவை சேர்ந்த 32 வயது குற்றவாளி ஒருவரை பிடிக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என டொரண்டோ போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். Gary Scott என்ற 32 வயது டொரண்டோ நபர் ஒருவர், மே மாதம் 4ஆம் தேதி டொரண்டோவில் உள்ள மதுபார் ஒன்றில் மது அருந்தி கொண்டிருந்தபோது, அவருக்கும் மதுபார் மேனேஜருக்கு நடந்த ஒரு கருத்து மோதலில் திடீரென Gary Scott தனது சட்டைப்பையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மேனேஜரை குத்திவிட்டு தப்பியோடி விட்டார். இந்த சம்பவத்தால் மதுபாரில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வரும் டொரண்டோ போலீஸார், Gary Scott என்ற குற்றவாளியில் புகைப்படத்தை அனைத்து ஊ…

  2. டொரண்டோவில் வரும் ஞாயிறு அன்று நடக்கவிருக்கும் Sporting Life 10K என்ற ஓட்டப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 27,000 ஓட்டப்பந்தய வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருப்பதால் டொரண்டோவில் உள்ள முக்கிய சாலைகள சில அன்றைய தினம் மூடப்படும் என டொரண்டோ கவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை செய்துள்ளனர். இந்த போட்டி நடைபெறும் நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 வரை இருப்பதால், கீழ்க்கண்ட சாலைகள் மூடப்படும் என்றும் வாகன ஓட்டிகள் அந்த நேரத்தில் மாற்றுப்பாதையை உபயோகப்படுத்தும்படியும் அறிவுறுத்தபடுகின்றனர். போட்டி நிறைவு பெற்ற இரண்டு மணி நேரத்திற்கு பின்பு, வழக்கம் போல சாலைகள் அனைத்தும் போக்குவரத்திற்காக திறந்துவிடப்படும். Yonge Street between Lawrence Avenue…

    • 0 replies
    • 381 views
  3. இங்கிலாந்து நாட்டின் தனியார் நிறுவனம் ஒன்று 2023ல் செவ்வாய் கிரகத்தில் குடியேற அழைத்து செல்வதாக கூறி $6 பில்லியன் டாலர் பணம் வசூல் செய்கிறது. இந்த பயணத்திற்காக உலகின் 120 நாடுகளில் இருந்து சுமார் 80,000 மக்கள் பதிவு செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த பயணத்திற்காக கனடாவை சேர்ந்த 35 பேர் பதிவு செய்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர். இது ஒரு ஒருவழிப்பயணம் ஆகும். பூமியில் இருந்து செவ்வாய் கிரகம் சென்றவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் திட்டம் எதுவும் இல்லை. ஆனாலும் இந்த பயணத்தில் மக்கள் அதிக அளவு ஆர்வம் காட்டிவருகின்றனர். ஒட்டாவோ நகரை சேர்ந்த Andrew Rader என்பவர் இந்த பயணத்திற்காக பதிவு செய்திருப்பதாகவும், தன்னுடைய வாழ்நாளின் மீதி நாட்க…

    • 0 replies
    • 366 views
  4. கனடாவில் நேற்று நடந்த ஒரு சாலை விபத்தில் பெண் டிரைவர் ஒருவர் பரிதாபமாக பலியானார். நேற்று மதியம் 12.30 மணியளவில் Mayfield Road, east of Airport Road என்ற இடத்தில் பெண் டிரைவர் ஓட்டி வந்த வாகனமும், ஒரு டிராக்டரும் பயங்கரமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே பெண் டிரைவர் பலியானார். இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வரும் காவல்துறையினர், முதல்கட்ட விசாரணை முடியும்வரை, இறந்த பெண் டிரைவரின் இதர விபரங்களை செய்தியாளர்களிடம் தெரிவிக்க முடியாது என கூறிவிட்டனர். இந்த விபத்தில் டிராக்டரில் வந்த ஓட்டுனருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக Airport and Innis Lake road பகுதியில் போக்குவரத்து சிறிது நேரத்திற்கு தடை செய்யப்பட்டது. காவல்துறையினரின் இந்த விபத்து நடந்த…

    • 0 replies
    • 377 views
  5. வடகொரியாவில் தயார் நிலையில் இருந்த ஏவுகணைகள் அகற்றம் தென்கொரியா இடையே சமீபத்தில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. தென்கொரியா, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப் போவதாகவும் வடகொரியாக மிரட்டியது. அதற்காக ஏவுகணைகளையும் நிலைநிறுத்தியது. தற்போது தாக்குதலுக்கு தயாராக வைத்திருந்த இரண்டு ஏவுகணைகளையும் வடகொரியா விலக்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆசியாவின் வடக்குப் பகுதியில் நிலவிய பதற்றம் குறைந்துள்ளது.வடகொரிய அரசு சென்ற முறை, அணுஆயுதப்போர் குறித்து பிரச்சினைகளை ஏற்படுத்தியது போன்று இந்த முறை 3,500 மைல்கள் தூரம் வரை சென்று வெடிக்கக்கூடிய ‘முசுடன்’ ஏவுகணைகளை ஏவலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வடகொ…

  6. இந்திய ரயில்வே அமைச்சர் பதவி விலகினார் பவன் குமார் பன்சல் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்திய ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். ரயில்வே துறையில்இடமாற்றம் செய்ய ஒருவர் கொடுத்த பணத்தை வாங்கிய தனது மருமகன் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சல் ராஜினாமா செய்துள்ளார். பன்சல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிய எதிர் கட்சிகள் கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்கின. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடந்த 2009 ஆம் ஆண்டு மீண்டும் பதவிக்கு வந்ததில் இருந்து அரசு பல ஊழல் புகார்களில் சிக்கியுள்ளது. நிலக்கரி ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையில் சட்ட அமைச்சர் மாற்றம் செய்துள்ள…

  7. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகன் கடத்தப்பட்டார்' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 மே, 2013 - 09:30 ஜிஎம்டி யூசுஃப் ராசா கிலானி பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசூஃப் ராசா கிலானி அவர்களது மகன் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டதாக தற்போது வந்திருக்கும் செய்திகள் கூறுகின்றன. அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் தனது ஒரு மகன் கடத்தப்பட்டதாக அவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார். தென்பகுதி பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் நகரில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, தனது மகனான அலி ஹைதர் கடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார். மதசார்பற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சியில் ஒரு வேட்பாளராக முல்தான் நகரில் அலி ஹைதர் போட்டியிடுகின்றார். தனது தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் அவர் கலந்துகொண்டி…

    • 3 replies
    • 596 views
  8. பங்களாதேசில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர் 17 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தலைநகர் டாக்காவுக்கு அருகே இருந்த ஒரு எட்டு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 1021க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்தக் கட்டிடத்தில் நான்கு ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளும் ஒரு வங்கியும் செயற்பட்டு வந்தன.கட்டிட இடிபாடுகளுக்கிடையே இருந்த ரேஷ்மி என்ற அந்தப் பெண் நான் இங்கே இருக்கிறேன் என்று கத்தியதை கேட்டுள்ள மீட்புப் பணியாளர்கள் அவரை மீட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் மிகப்பெரிய தூணுக்கும், பீமுக்கும் இடையில் சிக்கியிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். அந்தக் கட்டிடத்தில் இருந்த உணவுப் பொருட்களை உண்டும், கட்டிடத்தில் அடிக்கப்பட்ட தண்ணீரைக் க…

    • 1 reply
    • 280 views
  9. புதுடெல்லி: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், தனக்கு அளிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சஞ்சய் தத் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்டது. சஞ்சய் தத் மனு மட்டுமல்லாது, அவரைப்போன்றே இவ்வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 6 குற்றவாளிகள் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்திற்கு விசாரணை நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நிலையில், இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை 5 ஆண்டுகளாக குறைத்தது. இவ்வழக்கில் ஏற்கனவே சஞ்சய் தத் சிறையில் இருந்த நாட்களை கழித்தால், அவர் இன்னும் 42 மாதங்கள் சிறையில் இருந்தால்தான் தண்டனைக…

  10. பல நாட்டு காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர் உலகளவில் இயங்கும் குற்றக்கும்பல் ஒன்று சில மணி நேரங்களில் வங்கி-பண அட்டை ( ஏடிஎம்- டெபிட் கார்ட்) தகவல்களை மோசடி செய்து 45 மில்லியன் (நாலரைக் கோடி) அமெரிக்க டாலர்களை திருடியுள்ளது. இணையதள ஹாக்கிங் மூலம் வங்கிக் கணக்கை ஊடறுத்து நுழைந்தே குற்றக்கும்பல் இந்த பெரும் பணத் திருட்டை நடத்தியுள்ளது. இதுவரை நடந்துள்ள வங்கித் திருட்டுகளில் மிகப்பெரிய சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் நியுயோர்க்கில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆனால் பெரும் உலகளாவிய கும்பலின் உள்ளூர் ஆட்களாக மட்டுமே இவர்கள் இருக்கமுடியும் என்றும் 'பெருந்தலைகள்' வெளிநாடுகளில் இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் நம…

  11. இந்தியச் சிறையில் சக கைதியால் கடந்த வாரம் தாக்கப்பட்ட பாகிஸ்தானியை கைதி மரணமானார். இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள பாகிஸ்தான் அரசாங்கம், அவரது சடலத்தை நாட்டுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கேட்டிருக்கிறது. பாகிஸ்தானியை சிறையில் இருந்த பிரபலமான இந்தியக் கைதியான சரப்ஜித் சிங், சக கைதியால் தாக்கப்பட்டு இறந்ததை அடுத்து இந்தப் பாகிஸ்தானிய கைதி மீதான தாக்குதலும் நடந்தது. பாகிஸ்தானிய தீவிரவாதியாக குற்றங்காணப்பட்டு சனுல்லாஹ் ரஞ்ஜாய் என்னும் இந்தக் கைதி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். http://www.bbc.co.uk/tamil/global/2013/05/130509_pakistanprisonerdies.shtml

    • 5 replies
    • 591 views
  12. அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மூன்று பெண்கள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பெண்கள் அனைவரும் அமெரிக்க மாநிலமான ஒஹையோவின் க்ளீவ்லாண்ட் நகரில் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்கப் போலிசார் கூறுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னர் தனது 16வது வயதில் காணாமல் போன அமாண்டா பெர்ரி என்ற பெண் இந்த வீட்டிலிருந்து பக்கத்து வீட்டார் ஒருவரின் உதவியுடன் தப்பித்து, பின்னர் இந்த விவகாரம் குறித்து மற்றவர்களுக்கு சொன்ன பின்னர்தான் இது அம்பலத்துக்கு வந்தது. 50 வயதுகளில் இருக்கும் மூன்று சகோதரர்கள் இது தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜீனா டிஜீசஸ் என்ற பெண் , 204ம் ஆண்டு , அவரது 14வது வயதில், பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிக்கொண்டிருக்கும்போது …

    • 4 replies
    • 1.4k views
  13. வங்கதேசத்தில் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் குறைந்தபட்சம் 8 பேராவது கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரு வாரங்களுக்கு முன்னதாக மற்றுமொரு ஆடைத்தொழிற்சாலை அமைந்திருந்த கட்டிடம் இடிந்து விழுந்து, நூறுக்கணக்கானோர் இறந்ததை அடுத்து ஆடைத் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு குறித்து கடுமையான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்து நடந்திருக்கிறது. பல மாடிக்கட்டிடத்தில் அமைந்திருந்த இந்த ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு படையினர் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாகப் போராடினார்கள். குளிர் ஆடைகளும் ஏனைய ஆயத்த ஆடைகளும் தயாரிக்கும் இந்த ஆலையில் இருந்து தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்னதாகத்தான் நூற்றுக்கணக்கான தொழிலாளர்…

  14. நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்திவரும் மையப் புலனாய்வுத் துறை, கடந்த மார்ச் 8 அன்று அவ்விசாரணை குறித்த அறிக்கையொன்றை உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. அப்பொழுதே, “சட்ட அமைச்சரிடம் விசாரணை அறிக்கையின் வரைவு காட்டப்பட்டுத் திருத்தப்பட்டுள்ளது” என இவ்வூழல் குறித்து வழக்கு தொடர்ந்திருக்கும் பொதுநல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டன. அச்சமயத்தில் சி.பி.ஐ.-யின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல், “அரசைச் சேர்ந்த யாரிடமும் வரைவு அறிக்கை காட்டப்படவில்லை” என அடித்துக் கூறினார். இக்குற்றச்சாட்டு தொடர்பாக பிரமாண பத்திரமொன்றை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம். …

  15. வெள்ளைமுடியை கருப்பு முடியாக்கவல்ல புதிய மருந்தை கண்டுபிடித்திருப்பதாக ஐக்கியராஜ்ஜியத்தின் பிராட்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்களின் குழு தெரிவித்திருக்கிறது. பேராசிரியை கரின் ஸ்கல்ரூய்டர் தலைமையிலான மருத்துவ ஆய்வாளர்களின் குழு, மனிதர்களின் தலைமுடியின் நரையை மருந்து மூலம் தடுக்க முடியும் என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. மனிதர்களின் முடி தனது இயற்கை வண்ணத்தை இழப்பதற்கான காரணம் என்ன என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக இந்த குழு தெரிவித்திருக்கிறது. அதாவது, கொஞ்சம் கொஞ்சமாக ஹைட்ரொஜென் பெராக்ஸைடு வேதிப்பொருள் மனிதர்களின் முடியில் படிவதனால், மனிதர்களின் முடி தமது இயற்கை வண்ணத்தை இழந்து வெண்மையாக மாறுகின்றன. இந்த நடைமுறையை மருத்துவ ஆய்வாளர்கள் ஆக்ஸிட…

  16. இந்தியாவின் முதன்மையான மற்றும் அடிப்படை ஆதாரமான விவசாயத்தை திட்டமிட்டு ஆளும் வர்க்கத்தின் அழித்துக் கொண்டு வருகின்றனர். விவசாயிகளை கடன்காரர்களாக்கி விவசாயத்தை விரட்டியும் தற்கொலைக்கும் தள்ளி வருகின்றனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளில் 2.5 லட்சம் விவசாயிகள் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் சில மாதங்களுக்கு முன்பு “விவசாயத்தை இவ்வளவு பேரை யார் செய்யச் சொன்னது” என்று திமிராக பேசியுள்ளார். பன்னாட்டு பதுக்கல் கம்பெனிகளுக்கு சாதகமாக மன்மோகன் சிங் பேசியுள்ளார். அரசே திட்டமிட்டு விவசாயத்தை அழித்து வருகிறது. பென்னாகரம் வட்டத்தில் சின்னம்பள்ளி பகுதி ஓரளவு விவசாயம் நடக்கும் பகுதி. இப்பகுதியில் மத்திய பவர் கிரிடு நிறுவனம் தூத்துக்குடியிலிருந்து தருமப…

  17. இந்தியாவின் முதன்மையான மற்றும் அடிப்படை ஆதாரமான விவசாயத்தை திட்டமிட்டு ஆளும் வர்க்கத்தின் அழித்துக் கொண்டு வருகின்றனர். விவசாயிகளை கடன்காரர்களாக்கி விவசாயத்தை விரட்டியும் தற்கொலைக்கும் தள்ளி வருகின்றனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளில் 2.5 லட்சம் விவசாயிகள் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் சில மாதங்களுக்கு முன்பு “விவசாயத்தை இவ்வளவு பேரை யார் செய்யச் சொன்னது” என்று திமிராக பேசியுள்ளார். பன்னாட்டு பதுக்கல் கம்பெனிகளுக்கு சாதகமாக மன்மோகன் சிங் பேசியுள்ளார். அரசே திட்டமிட்டு விவசாயத்தை அழித்து வருகிறது. பென்னாகரம் வட்டத்தில் சின்னம்பள்ளி பகுதி ஓரளவு விவசாயம் நடக்கும் பகுதி. இப்பகுதியில் மத்திய பவர் கிரிடு நிறுவனம் தூத்துக்குடியிலிருந்து தருமப…

  18. பெங்களூர்: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியான பா.ஜ.க. படுதோல்வியை சந்தித்துள்ளது. 223 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. இதுவரை முடிவு அறிவிக்கப்பட்ட தொகுதிகளில், 84 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 24 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 21 இடத்திலும், எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதரகட்சிகள் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நடிகர் அம்ப…

  19. பெங்களூரு: கர்நாடக தேர்தலில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் மந்திரம் எடுபடவில்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளதால், கர்நாடகாவில் மோடி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் பா.ஜனதாவுக்கு வெற்றிவாய்ப்பை தேடித்தரலாம் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே நிலவியது. ஆனால் இன்று அறிவிக்கப்பட்ட கர்நாடக தேர்தல் முடிவுகளில் பா.ஜனதா 2 ஆம் இடத்தில் கூட அல்லாமல், மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, எதிர்கட்சி அந்தஸ்தை கூட இழந்துவிட்டது. இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சீதாராமையா, …

  20. சீனா கடந்த 2007 முதல் 2011ஆம் ஆண்டு வரை 11 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஒப்பந்தம் செய்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சீனா கடந்த 2007 முதல் 2011ஆம் ஆண்டு வரை, சுமார் 11 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களைப் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது. கடந்த 2012 மற்றும் எதிர்வரும் ஆண்டுகளில் சீனாவின் ஆயுத ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும். சீனப் பாதுகாப்பு நிறுவனங்கள் உலகம் முழுவதும் ஆயுதங்களை விற்கின்றன. அவை பெரும்பாலும் ஆசிய, மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளுக…

  21. ஆந்திராவில் தெலுங்கானா தனி மாநில விவகாரம் காங்கிரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா பிரித்தாலும், பிரிக்காவிட்டாலும் அது காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மேலிடம் கவலை அடைந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாளை ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் பேசவேண்டிய விஷயங்கள் குறித்து ஆந்திர மாநில காங்கிரஸ் விவகாரங்களை கவனிக்கும் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத் எம்.பி.க்கள் கூட்டத்தை டெல்லியில் நேற்று கூட்டினார். இதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். அப்போது தெலுங்கானா பிரச்சினையில் காங்கிரஸ் எம்.பி.க்களிடைய…

    • 0 replies
    • 305 views
  22. Auto Trader print edition to stop as focus shifts to digital Trader Media Group, publisher of Auto Trader, will print the final edition of its magazine in June as it moves to become an online digital business. The last edition of its magazines, including Auto Trader, Top Marques, Truck and Plant, Van Trader and Farm Trader, will be published on June 28. The titles will continue online. The company, which is jointly owned by Guardian Media Group and private equity firm Apax Partners, said the decision to stop the print editions "marks the culmination" of its strategy to "migrate all its activities to digital platforms". Zillah Byng Maddick, Interim chief …

  23. ஆரோக்கியமற்ற அன்றாட பழக்கவழக்கங்கள் ஒருவரின் இதயத்தை மட்டுமல்ல மூளையையும் பாதிக்கும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இத்தகைய பாதிப்பு 35 வயது இளைஞர்களுக்குக் கூட ஏற்படக்கூடும் என்றும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, ஆரோக்கியமற்ற அன்றாட பழக்கவழக்கங்கள், ஒருவரின் இதய நோயை அதிகப்படுத்துவதுடன், ஒருவரின் மூளையின் செயற்பாட்டுத் திறனையும் பாதிக்கிறது என்று டொச் நாட்டு ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். 35 வயதுக்கும் 82 வயதுக்கும் இடையிலான 3800 பேரிடம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் நினைவாற்றல், திட்டமிடும் திறன் மற்றும் வாதத்திறமை ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. இந்த பரிசோதனைகளின் முடிவில், அவர்களின் புகைபிடிக்கும் பழக்கமும், அவர்களிடம்…

  24. லடாக் பகுதியில் இந்திய மற்றும் சீனப் படையினர் தமது நிலைகளில் இருந்து பின் வாங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அங்கு நிலவிய பதட்டம் தணிய ஆரம்பித்துள்ளது. கடல் மட்டத்துக்கு 17 ஆயிரம் அடி உயரத்தில் இமாலய பனிப் பாலைவனப் பகுதியான டவுலட் பெக் ஒட்லி என்ற இடத்தில், சீன துருப்புக்கள் மூன்று வாரம் முன்பு அத்துமீறி சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் வரை ஊடுருவியதாக இந்தியா குற்றம் சாட்டியது. சீனத் துருப்புக்கள் அங்கே தற்காலிக முகாம்களையும் அமைத்தனர். இதற்கு பதில் நடவடிக்கையாக இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையைச் சேர்ந்த ஒரு படையணியை சீனத் துருப்புக்களின் முகாமருகே இந்தியா நிலை நிறுத்தியது. இந்த முறுகல் நிலை போரை தோற்றுவித்துவிடுமோ என்ற அச்சங்கள் நிலவிவந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமையன்று இ…

  25. ஜூலைக்குள் இந்தியாவின் முக்கிய இடங்களில் தாக்குவோம் என மிரட்டல்! கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் வந்த கடிதத்தில் மும்பை, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. ´அல் ஜிஹாத்´ என பெயரிடப்பட்டுள்ள லெட்டர் பேர்டில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தின் நகலை கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் மும்பை அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, மும்பை பொலிசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அல் ஜிஹாத் என்ற பெயரில் எந்த தீவிரவாத அமைப்பும் இல்லாததால் ஏற்கனவே இயங்கி வரும் தீவிரவாத குழுக்கள் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியிருக்கலாம் என மும்பை…

    • 0 replies
    • 451 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.