Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. திருவனந்தபுரம்: சீன கப்பல்களுக்கு, இலங்கை கொடியுடன் ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதி அளித்ததற்கு, கேரள மாநில மீன்வள அமைப்புகளும், படகு உரிமையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்த அமைப்புகள், ''ஏற்கனவே ஆழ்கடலில் உள்ள மீன்வளங்கள் அழிந்து விட்டது. இதனால் இந்தியாவில் மீன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலுள்ள பொதுவான கடல் பகுதியில் சீன கப்பல்கள் மீன் பிடித்து வருவதால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள். 4000 சதுர கி.மீ. பரப்பளவுள்ள இந்த கடற்பகுதியில் உள்ள மீன்வளங்கள் முழுவதையும், 150 அடி நீளமுள்ள சீனக்கப்பல்கள் அழித்து விடும்'' என எச்சரித்துள்ளன. http://news.vikatan.com…

  2. இந்த சிலையும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது! கடந்த ஒரு வாரமாக வட இந்தியாவின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. வெள்ளமென்றால் சாதாரண வெள்ளமல்ல.. இந்தத் தலைமுறை தன் வாழ்நாளில் கண்டிராத வெள்ளம். இமயமலைச் சுனாமி என்று வர்ணிக்கின்றன மீடியாக்கள். குறிப்பாக உத்தர்கண்டின் பனிபடர்ந்த இமயமலைச் சிகரங்களையொட்டிய சிறு நகரங்களும் கிராமங்களும் முற்றாக உருக்குலைந்து போயிருக்கின்றன. சுமார் 5500 பேர்களுக்கு மேல் மூழ்கிப் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கேதார் நாத் என்ற புனிதத் தலமே முற்றாக மண்ணில் புதைந்திருக்கிறது, அங்கிருந்த சிவன் கோயிலையும் சில கட்டிடங்களையும் தவிர. உத்தர்காசி, ருத்ரப்ரையாக், ரிஷிகேஸ், பத்ரிநாத் போன்ற இடங்களில் ஆறுகளை மறித்துக் கட்டப்பட்டிருந்த அத்தனை…

  3. சுவிட்சர்லாந்தில் கருப்பு பணம் பதுக்கும் பாகிஸ்தானியர்கள் சுவிட்சர்லாந்து மத்திய வங்கி ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது இந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள் அங்கு அதிக அளவில் கருப்பு பணம் முதலீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி நிலவரப்படி பாகிஸ்தானை சேர்ந்தவர்களின் ஒட்டு மொத்த முதலீடு ரூ.9200 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.இது இந்தியர்களின் கருப்பு பண முதலீட்டை விட அதிகமாகும். ஏனெனில் இந்தியர்களின் முதலீடு 9 ஆயிரம் கோடியாக உள்ளது. மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பு அடிப்படையில் இந்தியாவை விட பாகிஸ்தான் மிகச் சிறிய நாடு. இருந்தாலும், அது கருப்பு பண முதலீட்டில் இந்தியாவை மிஞ்சி நிற்கிறது. இருந்தாலும் இது கடந்த ஆண்டை ஒப்பீடுகை…

    • 0 replies
    • 2.5k views
  4. உத்தர்காண்ட் பெரும் வெள்ளத்தில் கேதர்நாத் பகுதியில் மட்டும் 5 ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கேதர்நாத் கோயில் வளாகத்தில் இருந்த ஆதி சங்கரரின் சமாதியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கேதார்நாத் கோயிலை ஒட்டி ஓடும் மந்தாகினி ஆற்றில் கேதார் பனிச்சிகரத்தின் பெரும் பகுதி உடைந்து விழுந்ததால் வெள்ளம் வெடித்துக் கிளம்பி எதிர்பட்டதையெல்லாம் அள்ளிச்சென்றது. இக் காட்டாற்று வெள்ளம் பல இடங்களில் திசை திரும்பியதால் சுமார் 200 கிராமங்கள் அழிந்தேபோயுள்ளன. அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கதி என்ன என்பது தெரிய வில்லை. கேதார்நாத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நூற்றுக் கணக்கான வீடுகள், வாகனங்கள் எங்கே சென்றன என்றே தெரியவில்லை. கேதர்நாத் சிவாலயத்…

  5. அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் உள்ள தலிபான்களுடன் அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு வெளியில் கட்டாரில் பேச்சுக்களை நடத்த இருப்பதாகத் தெரிய வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசைக் கேட்டுக் கொள்ளாமலே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாம். போர்க்கைதிகள் பரிமாற்றம்.. மற்றும் ஆப்கானிஸ்தானில் நல்லிணக்கம்.. ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைப்புப் பற்றி பேச இருக்கிறார்களாம். கட்டாரில் உள்ள தலிபான் தூதரகம். ஐநா,ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளால் பயங்கரவாத அமைப்பு என்று சொல்லப்படும் தலிபான்களுக்கு கட்டார் தூதரகம் அமைக்க வசதி செய்து கொடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் இந்த பேச்சு அறிவிப்பு வந்து ஒரு நாள் ஆவதற்கு …

    • 22 replies
    • 1.7k views
  6. ரிஷிகேஷ்: இந்துக்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரைகளில் ஒன்று இமயமலை சார்தாம் யாத்திரை.. ஆனால் இந்த சார் தாம் யாத்திரை இனி எத்தனை ஆண்டுகள் கழித்து மேற்கொள்ள முடியுமோ? என்ற பெரும் கேள்வியை உருவாக்கி வைத்திருக்கிறது பெரும் வெள்ளப் பேரழிவு. இந்தப் பேரழிவுக்கு இயற்கை மட்டுமே காரணமல்ல..இயற்கையை சீர்குலைத்த நாமே காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.. உத்தர்காண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரைக்குப் போன சுமார் 60 ஆயிரம் பேர் கேதர்நாத்துக்கும் ருத்பிரயாக்குக்கும் நடுவில் சிக்கிக் கொண்டிருப்பதாக செயற்கைக் கோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. அதே செயற்கைக் கோள் புகைப்படங்கள் சில ஒப்பீடுகளையும் நமக்கு அம்பலப்படுத்துகின்றன. 1980களில் கேதர்நாத் கோயில் அருகே சில கட்டிட்டங்கள் மட்டும்தான் இருந்த…

  7. விண்வெளியில் இருந்து மாணவர்களுக்கு பாடம் நடத்திய சீன வீராங்கனை சீனா கடந்த 11-ம் தேதி, ‘ஷென்சு- 10′ என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதில் இரண்டு விண்வெளி வீரர்களும், ஒருவீராங்கனையும் சென்றுள்ளனர். இவர்கள் அங்கு 15 நாட்கள் தங்கி ஆய்வுப்பணிகள் மேற்கொள்கிறார்கள். அதில் சென்றுள்ள வாங் யாபிங் என்ற சீன விண்வெளி வீராங்கனை ஆரம்ப மற்றம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு அங்கிருந்தபடி இயற்பியல் வகுப்புகள் எடுப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, அவர் நேற்று விண்வெளியில் உள்ள ‘டியாங்காங்-1′ ஆராய்ச்சி நிலையத்தில் இருந்தபடி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். பம்பரம், பந்து, தண்ணீர் போன்றவற்றுடன் மற்றொரு வீரரையும் வைத்து புவியீர்ப்பு விசை இல்லாத நிலை குறித்து விளக்கினார். விண்…

    • 0 replies
    • 430 views
  8. டெல்லி: இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் அளவில் சரிந்துள்ளது. இன்று ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 59.93 என்ற நிலையை அடைந்துவிட்டது. அமெரிக்க நிதி நிலையை சீராக்க அந் நாட்டு அரசு சில திட்டங்களை நேற்று அறிவித்தது. அதன்படி அமெரிக்க நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிதிச் சலுகைகளை அந் நாடு குறைக்கவுள்ளது. இதனால் டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது. இது தவிர சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிவதால் டாலர்களில் முதலீடு செய்வது (டாலர்களில் முதலீடு செய்யப்படும் பங்குகள்) அதிகரித்துள்ளது. மேலும் சீன தொழில்துறையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், சீன முதலீடுகளைக் குறைத்துக் கொண்டு அதையும் டாலரில் முதலீடு செய்வதும் அதிகரித்து வருகிறது. அத்தோடு ஐரோப்பாவில் தொடரும் பொருளாதாரத் தேக்கத்த…

  9. தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது. ருவண்டா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவிய நெருக்கடி காலகட்டத்துக்குப் பிறகு இதுதான் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படும் காலமாகும். கடந்த ஆண்டில் 80 லட்சம் பேர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கின்றது. இடம் பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் போர் காரணமாகவே இடம் பெயர்ந்துள்ளனர். இது மிகவும் மோசமான நிலைமை என்றும், சிரியாவின் மோதல் காரணமாகவே மிகவும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாகவும் ஐநாவின் அறிக்கை ஒன்று கூறுகின்றது. 4.5 கோடி அகதிகளில் அரைவாசிப் பேர், ஆப்கானிஸ்தான், சோமாலியா,…

    • 0 replies
    • 384 views
  10. போராளிகளுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்’ : சிரியா அதிபர் எச்சரிக்கை சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரில் பொதுமக்கள் மீது அதிபர் படை இராசயன ஆயுதங்களால் தாக்குகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால் போராளிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி அமெரிக்கா உதவும் என்று கூறியது. இதற்கு சவால் விடும் விதமாக சிரியாவின் முக்கிய ஆதரவு நாடான ரஷ்யாவும், சிரியாவிற்கு ராஜதந்திர உதவிகள் மற்றும் ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படும் என்று கூறியது.இந்நிலையில், ஜெர்மனியில் இருந்து வெளியாகும் நாளிதழுக்கு சமீபத்தில் பேட்டியளித்த சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் ஐரோப்ப…

    • 0 replies
    • 599 views
  11. ட்ரெயின் சாவிய மட்டும் திருடி என்னடா பண்ணுவீங்க...: போலீஸ் விசாரணை. சென்னை: சமீபத்தில் ரயில் இயக்குவதற்கான பெட்டி ஒன்று தாம்பரத்தில் காணாமல் போனது. குற்றவாளியைக் கைது செய்து, பெட்டியை மீட்ட போலீசார், அதில் ரயிலின் சாவி மட்டும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஞாயிறன்று, மின்சார ரயில்களை இயக்குவதற்கான சாவி மற்றும் கருவிகள் அடங்கிய பெட்டி தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து காணாமல் போனது. பெட்டியைத் திருடியவர்கள் பற்றிய விவரத்தை அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் போலீசார் அடையாளம் கண்டனர். விசாரணையில், பெட்டியைத் திருடியவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தெரிய வந்தது. ரமேஷைக் கைது செய்து, அவரிடமிருந்து பெட்டியை மீட்டனர் போலீசார். பெட்டியை சோதனைச் செய்து ப…

  12. இந்தியாவின் முதன்மை வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான "ரா"வை உருவாக்கியவர்களில் ஒருவரும் நாட்டின் மூத்த பாதுகாப்பு ஆய்வாளருமான பி. ராமன் (வயது 77) சென்னையில் நேற்று காலமானார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை பற்றி விவாதிக்கும், எழுதுகிற அனைவருமே பி. ராமன் என்ற மூத்த ஆய்வாளரின் கருத்தை அறியாமல் தாண்டிச் சென்றுவிட முடியாது. மத்திய கேபினட் செயலகத்தில் கூடுதல் செயலராகப் பணியாற்றியவர் பி.ராமன். 1968ஆம் ஆண்டு நாட்டின் வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான ரா வை உருவாக்கியவர்களில் பி.ராமனும் ஒருவர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னையில் Institute for Topical Studies என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் இயக்குநராகப் பணியாற்றினார். இணையதளங்களும் சமூக வலைதளமும் தவிர்க்க முடியாத அ…

  13. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இம்ரான்கான் தலைமையிலான டெரிக்-இ-இன்சாப் கட்சி, ஆட்சியைக் கைப்பற்றியது. அம்மாகாணத்தின் மர்தான் மாவட்டம் ஷெர்கார் பகுதியைச் சேர்ந்தவர் ஹாஜி அப்துல்லா. பெட்ரோல் பங்க் அதிபர் ஆவார். அவரை நேற்று இரவு, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். ஹாஜி அப்துல்லாவின் இறுதி ஊர்வலம், ஷெர்கார் பகுதியில் நடைபெற்றது அப்போது, வெடிகுண்டு உடை அணிந்த ஒரு தீவிரவாதி, வெடிகுண்டுகளை இயக்கி வெடித்துச் சிதறினான். இதில், இம்ரான்கான் மொகமந்த் உள்பட 27 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16055…

  14. வடமாநிலங்களில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக 55 பேர் பலியாயினர், 50 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டதில் 200 வீடுகள் தரைமட்டமாயின. உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், அரியானா ஆகிய வட மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. உத்ரகண்ட் மாநிலத்தில் கேதர்நாத் பகுதியில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 164 வீடுகள் தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கியும், மண்ணில் புதைந்தும் 30 பேர் பலியாயினர். அப்பகுதியில் 50 பேரை காணவில்லை. கங்கை நதியின் துணை நதிகளான மந்தாகினி, அலக்நந்தா ஆகியவற்றில் வெள்ளம் அபாய அளவை தாண்டிச் செல்கிறது. டேராடூன் அருகேயுள்ள ஹேம்குந்த் சாகிப் குருதுவாராவுக்கு சென்ற கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் நிலச்சரிவு காரணமாக வீடு திரும்ப …

    • 0 replies
    • 594 views
  15. அமெரிக்காவின் தொழில்நுட்ப வல்லுனர் எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு இந்தியா அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார். இரகசிய சைபர் நெட்வேர்க்கை பயன்படுத்தி அமெரிக்கர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் தொலைபேசி மற்றும் இணையப்பாவணை தொடர்பில் பல லட்சக்கணக்கில் பிரத்தியேக தகவல்களை அமெரிக்க பாதுகாப்புத்துறை திரட்டி வைத்திருப்பதாக ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் எட்வார்ட் ஸ்னோவ்டென். இவர் முன்னர் அமெரிக்காவின் இரகசிய பாதுகாப்புத்துறையில் பணியாற்றியவர் ஆவார். தற்சமயம் அமெரிக்காவை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் கோரி வருகிறார். சுவிற்சர்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருக்கிறார். இந்நிலையில் இவர் தைரியமாக முன்வந்து வெளிப்படுத்திய தகவல்க…

    • 6 replies
    • 716 views
  16. Print this ஹசன் ருஹானி ஈரானின் புதிய ஜனாதிபதியானார் ஈரான் ஜனாதிபதி தேர்தல் நிறைவடை நிலையில், ஈரானின் மறுசீரமைப்பு கட்சியின் வேட்பாளர் ஹசன் ருஹானி புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமையன்று நடந்த தேர்தலில் ஹசன் ருஹானி ஒரு கோடியே எண்பத்தைந்து லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. பதிவான வாக்குகளில் 51 சதவீதத்துக்கும் சற்று கூடுதலான வாக்குகளை ருஹானி பெறுவதாக இந்த எண்ணிக்கை அமைந்துள்ளது இம்முறை அதிபர் தேர்தலில் அதிகமான அளவில் மக்கள் திரண்டு வாக்களித்தனர் என்றும் ஓட்டுப்போட பதிவுசெய்திருந்த மக்களில் 71 சதவீதமானோர் வாக்களித்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் கூறுகிறது. இரண்டாவது இடத்தில் வந்த தெஹ்ரான் நகர மேயர்…

    • 0 replies
    • 661 views
  17. பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் - மரபணுப் பரிசோதனையில் உறுதி! [saturday, 2013-06-15 07:31:37] பிரிட்டிஷ் முடிக்குரியவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திலிருக்கும் இளவரசர் வில்லியம்மின் தாய் வழி மூதாதையர் இந்தியர் என மரபணுப் பரிசோதனைகள் காட்டியுள்ளதாக, பிரிட்டனின் தி டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இளவரசர் வில்லியமின் தாய் டயானா வழியில் சுமார் ஏழு தலைமுறைகள் முந்திச் சென்றால், வில்லியம்மின் மூதாதையராக அமைந்திருக்கும் எலீஸா கிவார்க் என்ற பெண் பாதியளவிலாவது இந்தியர் என்று எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வில்லியமின் ஏழாம் தலைமுறை மூதாதையரான எலைஸா கீவர்க் இந்தியாவின் சூரத் நகரில் வாழ்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.இந்தப் பெண் ஆர்…

  18. ஹைதராபாத்: ஆந்திராவில் தனித் தெலுங்கானா கோரி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும், போராட்டக்குழுவினரும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், டிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவர் சட்டசபை கட்டடத்திலிருந்து குதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிக்க வேண்டும் என்பது போராட்டக்குழுவினரின் கோரிக்கை. பல ஆண்டுகளாக இந்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கானா போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா கோரி இன்று சட்டசபை நோக்கி பேரணி நடத்த போராட்டக் குழுவினர் அறிவித்து இருந்தனர்.ஆனால் போராட்டக்காரர்கள் போர்வையில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நகரில்ஊடுருவி வன்முறையில் ஈடுபடக் கூடும் என்…

  19. இந்தியாவில் தேர்தல்கள் நெருங்கும் காலகட்டங்களில், இலங்கைத் தமிழர்கள் மீதான கரிசனைகள் அங்குள்ள கட்சிகளுக்கு அதிகரிக்கத் தொடங்கிவிடும். ஆரம்பத்தில் மாநிலக் கட்சிகளுக்கே இருந்த இந்தக் கரிசனைக் கவலை, 2009 தமிழினப் படுகொலையின் பின்னர் தற்போது மத்தியில் ஆளும், எதிர்க் கட்சிகளுக்கும் எழத்தொடங்கிவிட்டது. இந்த வகைக்குள்தான் கடந்தவாரம் பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய ராஜ்யசபா உறுப்பினருமான ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவினரின் ஐந்துநாள் இலங்கைச் சுற்றுலாப் பயணத்தையும் கருதமுடியும். பா.ஜ.கவின் அதிகாரபூர்வ கட்சிப் பயணமாக இது இல்லை எனவும், இது முழுக்க முழுக்க தனது தனிப்பட்ட பயணம் என்று இலங்கை செல்வதற்கு முன்பாக ரவிசங்கர் பிரசாத் இந்திய ஊடகங்களு…

  20. இது நாள் வரை மனிதர்களை ‘எய்ட்ஸ்’ எனும் நோய்தான் மிரட்டி வந்தது. அதற்கு ஓரளவு மருந்து கண்டுபிடித்து விட்ட நிலையில் உடலுறவு மூலம் பரவுகின்ற மற்றோரு நோயான வெட்டை நோய் -ஆங்கிலத்தில் கொணோரியா(Gonorrhea) என்று அழைக்கப்படும் புதிய நோய் பீதியை கிளப்ப ஆரம்பித்துள்ளது. இந்த வகையானது ஆண்டிபயாடிக் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாத போக்கு அதிகரித்து வருவதால், அந்நோய் விரைவில் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி வருவதை இப்போதே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டனில் நடக்கின்ற ஒரு மருத்துவ மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது. உலக அளவில் பார்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பத்து கோடிப் பேருக்கும் அதிகமானோருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டு வருவதாக ஐநா கூறுகிறது.இது நாள் …

  21. சிரியாவில் நடந்துவருகின்ற உள்நாட்டு யுத்தத்தில் அந்நாட்டின் அரசாங்கம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களுக்கு அமெரிக்கா இராணுவ ரீதியில் ஆதரவு வழங்குவதற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு கட்டத்துக்குள் இது இட்டுச்சென்றுள்ளது. நரம்பு மண்டலத்தை பாதிக்கவல்ல சரின் வாயுவைக் கொண்டு சில தாக்குதல் நடத்தப்பட்டதில் நூற்றைம்பது பேர் வரை இறந்திருக்கிறார்கள் என தமக்கு இதுவரை கிடைத்துள்ள உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் அலுவலக அறிக்கை கூறுகிறது. சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களுக்கு இராணுவ உதவிகளை அதிகரிப்பதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தீர்மானித்துள்ளார் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் எந்த வடிவ…

    • 2 replies
    • 352 views
  22. அமெரிக்க ரகசிய கண்காணிப்பு திட்டத்தின் நன்மைகள்: செனெட்டுக்கு விளக்கம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு உளவு நிறுவனமான என் எஸ் ஏ வின் தலைவர் ஜெனரல் கீத் அலெக்ஸாண்டர் அமெரிக்க செனெட் உறுப்பினர்களுடன் ரகசிய விளக்கக்கூட்டம் ஒன்றை வியாழனன்று நடத்துகிறார்.இணையத்திலும் தொலைபேசி வலயமைப்பிலும் ரகசிய கண்காணிப்பு பணிகளை செய்ததன் மூலம் அமெரிக்காவில் டஜன் கணக்கான பயங்கரவாதத் தாக்குதல்கள் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டதாகக் கூறும் அவர் அது பற்றி செனெட் உறுப்பினர்களுக்கு விளக்கவுள்ளார்.மிகவும் அரிதாகவே நடத்தப்படுகின்ற ஒரு கூட்டம் இது. அமெரிக்க தேசியப் பாதுகாப்பு உளவுத்துறையின் கண்காணிப்பு திட்டங்கள் பற்றி உளவுத்துறை முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென் அண்மையில் வெளியில் தகவல் கசியவி…

    • 0 replies
    • 348 views
  23. ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள சுகலி காலனியில் வியாபாரி ஒருவர் வளர்த்து வந்த வாத்து தெருவில் செல்பவரை கொத்தியதால் போலிசார் வாத்தினை கைது செய்துள்ளனர். கடந்த வாரம் சுகிலி காலனியை சேர்ந்த ஒரு பெண் நுன்னா போலிஸ் நிலையத்துக்கு சென்று ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் தன் தெருவில் சுற்றும் வாத்து தன் 5 வயது மகளை கொத்தி காயப்படுத்தி விட்டதாக கூறினார். தெருவில் நடந்து செல்லும் எல்லாரையும் அந்த வாத்து விரட்டி, விரட்டி கொத்துவதால் மிகவும் தொந்தரவாக இருக்கிறது. எனவே அந்த வாத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண் தன் புகார் மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து நுன்னா போலிசார் வழக்கு பதிவு செய்து அந்த வாத்தை கைது செய்தனர். போலிஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு மரத்தி…

  24. சவூதி அரேபியாவுக்குள் போதைவஸ்துகளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் சிரிய பிரஜையொருவருக்கு செவ்வாய்க்கிழமை தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்தது. ஹுஸம் அல் ரஜுப் என்ற மேற்படி சிரிய பிரஜை பெருந்தொகையான போதைவஸ்து மாத்திரைகளை சவூதிக்குள் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. அவருக்கு வட ஜாப் மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவரது மரண தண்டனையுடன் சவூதியில் இவ்வருடம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 51 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் அந்நாட்டில் 76 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. பாலியல் வல்லுறவு, படுகொலை, ஆயுதம் ஏந்திய கொள்கை, போதைவஸ்து கடத்தல் என்பன சவூதியில் மரணதண்டனைக்குரிய குற்றங்களாகும். http://w…

    • 2 replies
    • 525 views
  25. மத்தியகிழக்கின் மேற்குக் கரையில் இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் புதிதாக ஐநூறுக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டுவதற்கான திட்டம் ஒன்று வட்டார அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இட்டாமர் என்ற குடியிருப்பு பகுதியில் உள்ள பாலஸ்தீன நிலங்களில் உரிமம் வாங்காமல் கட்டப்பட்டிருந்த 137 யூத வீடுகளை அங்கீகரித்து உரிமம் வழங்க வேண்டுமென்றும் அதிகாரிகளிடம் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் குடியேற்றத் திட்டத்துக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எஹூத் பராக் ஆரம்பகட்ட ஒப்புதலை சென்ற வருடம் வழங்கியிருந்தார். இஸ்ரேலிகளுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க அமெரிக்கா முயன்றுவருகின்ற சூழ்நிலையில், இந்த குடியேற்றத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.