உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
7 வயது சிறுமியை கெடுத்த கொடூரன்: ஊர் மக்களே அடித்துக் கொன்றனர். ஜெய்ப்பூர்: 7 வயது சிறுமியை பாலியல் கொடூரம் புரிந்தவரை ஊர் மக்களே அடித்துக் கொன்றனர். ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கார்க் மாவட்டம், குடியா கிராமத்தைச் சேர்ந்த திரிலாக் சிங் (53). இவர் தனது பக்கத்து வீட்டில் உள்ள 7 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டவுடன், ஊர் மக்கள் வீட்டிற்குள் புகுந்து சிறுமியை மீட்டனர். ஆத்திரம் அடைந்த மக்கள், அந்த நபரை சரமாரியாக தாக்கினர். காயம் அடைந்த அவரை உடனே மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். கடந்த வாரம் பில்வாரா என்ற இடத்தில், பாலியல் கொட…
-
- 1 reply
- 476 views
-
-
மனிதக் கணினி சகுந்தலா தேவி காலமானார் உலகின் வேகமான மனிதக் கணினி என்று புகழ்பெற்ற கணிதப் புலமையாளர் சகுந்தலா தேவி காலமானார். அவருக்கு வயது 83. ஆரம்பத்தில் சுவாச நோயினால் பீடிக்கப்பட்டிருந்த அவர், பின்னர் இதய மற்றும் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர் இலக்கங்களைக் கொண்ட மிகச் சிக்கலான கணக்குகளுக்கு கூட மிகக்குறுகிய நேரத்தில் மனக்கண்ணிலேயே தீர்வுகாண்பதில் வல்லவர் என்று சகுந்தலா தேவி புகழ்பெற்றவர். அவர் சிறுவயதில் முறையான கல்வியைப் பெறவில்லை. ஆனால் தானாக வந்த அறிவைக் கொண்டே அவர் இந்தக் கணக்குகளைத் தீர்க்கப் பழகிக்கொண்டுள்ளார். பழைய நூற்றாண்டொன்றின் திகதியைக் கூறினால் மறுநொடியிலேயே அதன் நாளை (கிழமையை) சொல்லுமளவுக்கு அவர் திறமைகொண்டவர். …
-
- 13 replies
- 881 views
-
-
வெள்ளை மாளிகையில் இரண்டு குண்டுகள் வெடித்ததாகவும் , அமெரிக்க அதிபர் பராக் ஒபமா காயம் அடைந்ததாகவும் Associated Press பெயரால் போலி டுவிட்டர் நேற்று அனுப்பப் பட்டது. இதனால் சில முதலீட்டாளர்கள் 250B USD இழந்தனர். மீண்டும் சில நிமிடங்களில் அந்த இழப்பு மீள பெறப்பட்டது. சில முதலீட்டாளர்கள் 250B USD இனை பெற்றனர்.
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈரானில் கடந்த 1979-ம் ஆண்டு முதல் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப் படுவதாக அதிபர் மகமூத் அகமதி னேஜத் தெரிவித்தார். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் மேலை நாடுகளுடன் அதற்கு இணையாக போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமெனி இக்கருத்தை ஏற்றுக் கொண்டார். அதன்படி தற்போது 7 கோடியே 50 லட்சம் ஆக உள்ள ஈரானின் மக்கள் தொகையை 15 கோடியாக உயர்த்த வேண்டும். அதற்காக ஈரானில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ரத்து செய்யும் படி உத்தரவிட்டார். ஈரானில் மக்கள் தொகை பெருக்கத்துக்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டுள்ளன. அதற்…
-
- 7 replies
- 599 views
-
-
“இந்திய பகுதியில் இருந்து உடனடியாக பின்வாங்கி செல்லுங்கள்” என இந்தியா, சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது. தற்போது, இந்திய எல்லைக்குள் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை விட்டு அசையாமல் நிற்கிறது சீனா! ஜம்மு – காஷ்மீர் லடாக் பகுதியின் கிழக்கே, கடல் மட்டத்திலிருந்து, 17,000 அடி உயரத்தில் உள்ள பனிமலைப் பகுதியில், கடந்த 15-ம் தேதி இந்தியாவுக்குள் ஆக்கிரமிப்பு செய்தது சீனா. 50 சீன ராணுவ வீரர்கள் நடைமுறை எல்லைக் கோட்டைத் தாண்டி, 10 கி.மீ. முன்னோக்கி இந்திய எல்லைக்குள் வந்து, கூடாரம் அடித்து முகாமிட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான பொருட்களை, சீனா ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்திய வான் பகுதிக்குள் பறந்து வந்து இறக்கிச் சென்றுள்ளன. இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு, சீனாவின் இந்த அத்துமீறல…
-
- 0 replies
- 665 views
-
-
சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் டெல்லியில் ஒரு பச்சிளம் குழந்தையை 8 லட்ச ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லூதியானாவைச் சேர்ந்த நூரி என்பவர் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதியன்று மருத்துவமனையில் பிறந்த தன் குழந்தையைக் காணவில்லை என்று காவல்துறையிடம் புகார் அளித்தார். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி நூரியின் தந்தை பெரோஸ் கான், செவிலியர் சுனிதா, மருத்துவமனை ஊழியர் குர்ப்ரீத் சிங் ஆகியோரின் உதவியுடன் குழந்தையைக் கடத்தியுள்ளனர். பின்னர், ஃபேஸ்புக் மூலமாக டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் அமித் குமார் என்பவருக்கு குழந்தையின் புகைப்படத்தை காட்டி, அவருக்கு விற்றது தெரிய வந்தது. கணவரைப் பிரிந்த மகள் நுாரிக்கு மறுமணம் செய…
-
- 0 replies
- 636 views
-
-
பெங்களூரு: கர்நாடகாவில் ஒரு ரூபாய் விலையில் ரேஷன் கடையில் 30 கிலோ அரிசி வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. கர்நாடகா சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் பங்கேற்றனர். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி வெளியிட்டார். அதில், ஒரு ரூபாய் விலையில் ரேஷன் கடையில் 30 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை வட்டி இல்லாத வேளாண் கடன் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் வரை 3 சதவீத வட்டியில் விவசாயக் கடன் வழங்கப்பட…
-
- 1 reply
- 355 views
-
-
சிறிலங்கா, செசெல்ஸ் போன்ற நாடுகளில் நிலைகளை அமைக்க வேண்டும் என்ற இந்து சமுத்திரம் தொடர்பான இந்தியாவின் கொள்கை குறித்து சீனா கவலை கொண்டுள்ளதாக ஆயுதக் கட்டுப்பாடுகள் தொடர்பான அமெரிக்க நிபுணர் கலாநிதி லோறா சால்மன் தெரிவித்துள்ளார். சீனாவின் ஆயுதக்கட்டுப்பாட்டுக் கொள்கை, இந்திய - சீன மற்றும் சீன- ரஸ்ய மூலோபாய உறவுகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்ட கலாநிதி லோறா சால்மன், அது தொடர்பான விபரங்களை இந்திய ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் இது தொடர்பாக ஹைதராபாத்தில் ஊடகவியலாளர்களுடன் பேசிய கலாநிதி லோறா சால்மன், “சீனாவில் உள்ள சில நிபுணர்கள், கடற்படைப் பலத்தில் சீனாவுக்குச் சமமாக இந்தியா இருக்கிறது அல்லது அதனை முறியடிக்கக் கூடிய நிலையில் உள்ளது என்று உணர்கிறார்கள…
-
- 0 replies
- 531 views
-
-
அமெரிக்கர்கள் பிறவியிலேயே புத்திசாலிகள் : ஒபாமா பெருமிதம். வாஷிங்டன்: கண்டுபிடிப்புகள் அமெரிக்கா மக்களின் டி.என்.ஏ.வில் கலந்துள்ளதாக ஒபாமா பாராட்டியுள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஆண்டு தோறும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சியில், அமெரிக்காவின் பல மாகாணங்களில் இருந்து வந்துள்ள மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை பார்வைக்கு வைத்துள்ளனர். இந்த மாணவர்களிடையே உரையாற்றிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியதாவது:- பொறியியல், அறிவியல் கண்டுபிடிப்புகள், புதிய கண்டறிதல்கள் ஆகியவற்றை மேற்கொள்வதில் அமெரிக்கா அதிக முனைப்பு காட்டியுள்ளது. அதுதான் நாம். அது நமது டி.என்.ஏ.வில் கலந்துள்ளது. இது போன்ற கண்டுபிடிப்புகளால் தான் நமது நாடு உலகி…
-
- 5 replies
- 920 views
-
-
துருக்கியைச் சேர்ந்த பயணிகள் ஹெலிகாப்டரில் இருந்த 11 பேரை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சிறை பிடித்துச் சென்றுள்ளனர். துருக்கியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆப்கானிஸ்தானில் கோஸ்ட் நகரில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்பார்வையிட அதன் அதிகாரிகள் குழு கோஸ்ட் நகருக்குச் சென்றுவிட்டு காபூலுக்கு ஹெலிகாப்டரில் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது அஸ்ரா மாவட்டத்தில், கடும் சூறைகாற்றும், பலத்த மழையும் பெய்ததால், ஹெலிகாப்டர், ஒரு கிராமத்தில் அவசரமாக தரையிறங்கியது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டரைச் சூழ்ந்த தலிபான்கள் அதில் இருந்த 11 பேரையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=81063&category=WorldNews&language=tamil
-
- 3 replies
- 465 views
-
-
உலகின் மிக அரியவகை மதுபான பாட்டில் ஒன்று டொரண்டோ மதுநிலையத்தில் திருடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு $26,000 ஆகும். இந்த பாட்டிலில் 700 மிலி உயர்வகை மதுபானம் இருந்ததாகவும், இந்த அரியவகை மதுபானம் உலகிலேயே மொத்தம் 50 பாட்டில்கள்தான் உள்ளன எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. Glenfiddich Single Malt scotch என்று அழைக்கப்படும் இந்த மதுபாட்டிலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர்தான் திருடியிருக்க வேண்டும் என கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் ஊகிக்கப்படுகிறது. அந்த நபரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த Glenfiddich Single Malt scotch மதுபாட்டில் ஒண்டோரியோ மாகாணத்திலேயே மொத்தம் 15 பாட்டில்கள்தான் உள்ளது. உலகிலேயே 50 பாட்டில்கள் தான் உள்ளது. மதுபாட்டில் வாங்க வந்த ஒரு வாடிக்கையா…
-
- 4 replies
- 471 views
-
-
நேற்று முன் தினம் டொரண்டோ வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்களில் ஒருவரை டொரண்டோ காவல்துறையினர் இன்று காலை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவாக உள்ள மற்றொரு கொள்ளையனை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது . கடந்த ஞாயிறு அன்று மதிய நேரத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த டொரண்டோ வங்கியொன்றில் துப்பாக்கி முனையில் இரண்டு கொள்ளையர்கள் வங்கியினுள் புகுந்த ஒரு வங்கி அதிகாரிம் மற்றும் ஒரு பெண் வாடிக்கையாளர் மீது துப்பாக்கியால் சுட்டு, கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் டொரண்டோவை பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்து வரும் டொரண்டோ காவல்துறையினர், வங்கியில் கேமராவில் பதிவான காட்சிகளின் அடையாளங்களை வைத்து ஒரு குற்றவாள…
-
- 0 replies
- 397 views
-
-
ரோம் நகரம் உருவாகி 2766 ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் முகமாக ஏப்ரல் 21ஆம் தேதியன்று அந்நகர மக்கள் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். அந்த ஊர்வலத்தில் பண்டைய ரோமாபுரியில் தேடிப்பார்.காம்வாழ்ந்த மக்களின் உடையலங்காரத்தை அணிந்து நடிகர்கள் பங்கேற்றனர்.இந்தப் படத்தில் அக்காலத்து ரோமாபுரியின் பணிப்பெண்கள் போல உடையணிந்து வருகின்றனர் ரோமா என்றப் பெண் தெய்வத்தின் உடையணிந்து இத்தாலி நடிகை ஒருவர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டது முக்கியத்துவம் பெற்றது. அக்காலத்து ரோமாபுரியின் இளம் பெண்கள் போன்று உடையணிந்து இளம்பெண்கள் வலம் வந்த காட்சியை பொதுமக்கள் ரசித்து பார்த்தனர். மேலும் ரோமாபுரி சிப்பாய்கள் போலவும் இளம் ஆண்கள் உடையணிந்து ஊர்வலத்தில் தேடிப்பார்.காம் கலந்து கொண்டனர். கிளாடியேட்டர் படத்தில் வ…
-
- 0 replies
- 467 views
-
-
துப்பாக்கி ஏந்தும் பிஞ்சுகள்: அதிர்ச்சியளிக்கும் படங்கள்! அல் கொய்தா இயக்கத்தினர் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கும் படங்கள் சில வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப் படங்கள் அல் கொய்தாவுக்குச் சொந்தமான, பலரால் அறியப்படாத இணையத்தளமொன்றில் வெளியாகியுள்ளது. இவற்றை டேர்கிஸ்தான் இஸ்லாமியக் கட்சியே குறித்த இணையத்தளத்துக்கு வழங்கியுள்ளதாகவும், அக்கட்சியே ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் இணைந்து போராடும் பொருட்டு போராளிகளுக்கு பயிற்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. படங்களில் சிறுவர்கள் AK 47 துப்பாக்கிகள், பிஸ்டல்கள் போன்ற ஆயுதங்களுடன் பயிற்சி பெறுவது போல காட்டப்படுகின்றது. இச் சிறுவர்கள் உயிரிழந்த போராளிகளின் பிள்ளைகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது…
-
- 1 reply
- 455 views
-
-
CANADA says it has thwarted an al-Qaeda-supported plot to attack a passenger train in the greater Toronto area. Two men have been arrested and charged but police said there was no imminent threat. The Royal Canadian Mounted Police said Monday that Chiheb Esseghaier and Raed Jaser were conspiring to carry out an attack against Via Rail. "It was definitely in the planning stage but not imminent," RCMP chief superintendent Jennifer Strachan told reporters. The duo received "direction and guidance" from al-Qaeda, officials said. Charges against the two men include conspiring to carry out an attack and murder people in association with a terrorist group. Police…
-
- 17 replies
- 950 views
-
-
புதுடெல்லி:தொடர்ந்து வெளியாகும் ஊழல் புகார்களுக்கு பொறுப்பேற்றும், ஊழல்களை மூடி மறைப்பதற்காகவும் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். டெல்லியில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அத்வானி தலைமையில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், பிரதமர் பதவி விலக கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊழல்களுக்கு பொறுப்பு ஏற்கும் வரை மத்திய அரசுக்கு ஒத்தழைப்பு தரப் போவதில்லை என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற பா.ஜனதாவின் கோரிக்கைக்கு இடதுசாரிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரதமர் தமது கடமையை செய்ய பலமுறை தவறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா கருத்து தெரிவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
புதுடெல்லி: லடாக் ஊடுருவலைத் தொடர்ந்து இந்திய வான்வெளியில் சீன ஹெலிகாப்டர்களும் பறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 15 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள தொலத் பெக் ஒல்டி என்ற இடத்தில், சீன ராணுவத்தின் பிளாடூன் படைப் பிரிவினர், இந்திய எல்லைக்குள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அத்து மீறி ஊடுருவி, கூடாரம் அமைத்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்த தகவல் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து,நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, "நாட்டின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. எதிர்காலத்திலும் நடவடிக்கை எடுக்கும்'' என்று கூறியிருந்தார். அதன்படி எல்லைப் பகுதியில் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, இந்திய …
-
- 0 replies
- 313 views
-
-
அமெரிக்காவின் புளோரிடா மாநிலமானது இராட்சத நத்தைகளின் படையெடுப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் அங்கு தாவரங்கள் உட்பட பொதுசொத்துக்கள் பலவும் பாரிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இராட்சத ஆப்பிரிக்க நத்தைகளே புளோரிடாவில் பெருகி வருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவை சாதாரண எலியின் அளவுக்கு வளரக்கூடியது. மேலும் அவற்றின் வழியில் காணப்படும் எதனையும் உண்ணக்கூடியன. தென் புளோரிடாவின், மியாமி டெட் சீ பகுதியில் ஒவ்வொரு வாரமும் சுமார் 1000 இராட்சத நத்தைகள் பிடிக்கப்படுவதாக புளோரிடா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அங்கு மட்டும் கடந்த 2011 செப்டம்பர் மாதம் முதல் இதுவரை 117,000 நத்தைகள் பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். மேலும்…
-
- 0 replies
- 647 views
-
-
அண்மையில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மரதன் ஓட்டப்போட்டியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூவர் பலியாகியிருந்ததுடன் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து போலிஸ் புலனாய்வுத் துறையினரின் அதிரடித் தேடுதலிலும் வீடியோ ஆதாரங்கள் மூலமாகவும் இதில் சம்பந்தப்பட்ட ஒரு சந்தேக நபராகக் கைது செய்யப்பட்ட Dzhokhar Tsarnaev மீது தண்டனை விதிப்பதற்கு வழக்கறிஞர்கள் முயன்று வருகின்றனர். இந்நபர் மீது பொதுமக்களைக் கொல்வதற்கு ஆயுதங்களைப் பாவித்த குற்றத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப் படும் சாத்தியம் அதிகம் எனக் கூறப்படுகின்றது. மேலும் இவரும் இக்குண்டுவெடிப்பில் சிக்கியிருந்ததால் தற்போது தொண்டையில் காயம் ஏற்பட்டு பேச முடியாத சூழ்நிலையில் வைத்திய சாலையில் உள்ளார். இதனால் பத்திரத்தில…
-
- 0 replies
- 350 views
-
-
22 ஏப்ரல், 2013 நைஜீரியாவின் வடக்கில் இஸ்லாமியவாத ஆயுததாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே நடந்த உக்கிர சண்டையில் குறைந்தபட்சம் 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. சாட் நாட்டுடனான எல்லைக்கு அருகில் உள்ள பாகா என்ற ஊரில் ராக்கெட் எறிகுண்டு வீச்சுகள் மற்றும் பெருமளவான துப்பாக்கிச் சூட்டுடன் கடந்த வெள்ளியன்று கடும் சண்டைகள் மூண்டிருந்தன என்று அரசாங்கமும் இராணுவ அதிகாரிகளும் கூறுகின்றனர். போக்கோ ஹராம் இயக்கத்தைச் சேர்ந்த ஆயுததாரிகளை விரட்டுவதற்கு இராணுவத்தினர் முயன்றபோது இந்த மோதல்கள் வெடித்தன. மோதல்களில் இருந்து தப்பிப்பதற்காக வெள்ளியன்று வாழ்விடங்களை விட்டு வெளியேறி அக்கம்பக்கத்தில் இருந்த காடுகளுக்குள் அவ்வூர…
-
- 0 replies
- 286 views
-
-
5 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் பெண்கள் அமைப்பினர் நடத்தி வரும் போராட்டம் வலுத்து வருகிறது. அவர்கள், டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், ராஜினாமா செய்ய அவர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக நிருபர்களிடம் நீரஜ்குமார் கூறுகையில், ‘‘எனது ராஜினாமா சமுதாயத்தில் நிகழும் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த உதவுமானால், நான் ஆயிரம் முறை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால், இதனால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படப்போவதில்லை’’ என்று தெரிவித்தார். மேலும், சிறுமி பாலியல் வல்லுறவு சம்பவம் உளவியல் சம்பந்தப்பட்டது என்றும், யாரும் ராஜினாமா செய்வதால் இதற்கு தீர்வு ஏற்படப்போவதில்லை என்றும் கமிஷனர்…
-
- 0 replies
- 386 views
-
-
அமெரிக்காவில் பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்களில் உடல் முழுக்க ரத்தம் தோய்ந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். ஒருவரது வீட்டின் பின்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றுக்குள் மறைந்திருந்த நிலையில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்குமுன் இவரது மறைவிடத்தை சூழ்ந்துகொண்ட போலீஸ் சுமார் 30 தடவைகள் சுட்டபோது, இவருக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. அந்தக் காயத்துடன் ரத்தம் சொட்டச் சொட்ட தப்பியோடி, வீடு ஒன்றின் பேக்-யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுக்குள் மறைந்த 19 வயது சந்தேக நபர் ஷோக்கர் சர்னயேவ் கைது செய்யப்பட்டார் என்பதை பாஸ்டன் போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது. சந்தேக நபர்கள் இருவரும்…
-
- 8 replies
- 841 views
-
-
சென்னை: 19 ஈழத் தமிழர்களை துபாயில் இருந்து இலங்கைக்கு அனுப்பாமல், வேறு நாடுகளுக்கு அனுப்ப, இந்திய வெளிவிவகாரத்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மன்மோகன் சிங், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். துபையில் உள்ள 19 ஈழத் தமிழர்களை, இலங்கைக்கு அனுப்ப துபாய் அரசு திட்டமிட்டு உள்ளது. அவர்களை இலங்கைக்கு அனுப்பினால், கொடூரமான சித்ரவதைக்கும் உயிர்க்கொலைக்கும் ஆளாவார்கள்; எனவே, அவர்களை இலங்கைக்கு அனுப்ப விடாமல் உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 2 ஆம் தேதி கடிதம் எழுதினார். இது தொடர்பாக, ஏப்ரல் 6 ஆம் தேதி, பிரதமரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வைகோ பேசினார். அப…
-
- 0 replies
- 358 views
-
-
புதுடெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடாளுமன்றத்தில் இன்று பெரும் அமளியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, " பாலியல் பலாத்காரம் டெல்லியில் மட்டுமல்ல...நாடு முழுவதும்தான் நடைபெறுகிறது” என்று கூறினார். அவர் மேலும் பேசுகையில், "டெல்லி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், அவள் காணாமல் போனது தொடர்பான புகாரை விசாரிப்பதில் காவல்துறையினர் மெத்தனம் காட்டினார்களா என்பது குறித்தும், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை மூடிமறைக்க முயன்றதாக கூறப்படுவது குறித்தும் அறிந்துகொள்ள டெல்லி காவல்துறையின் கண்காணிப்பு பிரிவு இணை போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்த உத்தரவிடப…
-
- 0 replies
- 333 views
-
-
பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் இருவருடைய தாயார் அதிர்ச்சிக் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். “எனது மகன்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டது உளவுத்துறை எஃப்.பி.ஐ.யின் செட்டப். அவர்கள் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக உளவுத்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தார்கள்” என்கிறார் இவர். பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் இருவரும் செசன்யா அருகே உள்ள ரஷ்ய பகுதியைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து சிறு வயதில் கஸகஸ்தான் நாட்டுக்கு குடிபெயர்ந்து, பின்னர் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்கள். இருவரும் சகோதரர்கள். இருவரில் மூத்தவர் போலீஸ் சூற்றிவளைப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றையவர் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும்தான் குண்டு வைத்தவர்கள் என்பதை ஏறக்கு…
-
- 3 replies
- 731 views
-