உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27030 topics in this forum
-
மும்பை: தமது உயிருக்கு ஆபத்து இருப்பதால் புனே சிறையில் சரணடைய அனுமதிக்க கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ள சஞ்சய் தத், நாளை தடா கோர்ட்டில் சரணடைகிறார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக ஆயுதங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததற்காக, சஞ்சய் தத்திற்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து கடந்த மார்ச் 21 ஆம் தேதியன்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தது. இவ்வழக்கில் ஏற்கனவே அவர் 18 மாதங்களை சிறையில் கழித்துவிட்டதால், இன்னும் மூன்றரை ஆண்டுகள் அவர் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டியது உள்ளது. இந்நிலையில் தாம் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படப்பிடிப்புகள் பாக்கி இருப்பதால், த…
-
- 0 replies
- 570 views
-
-
இத்தாலியின் பிரதமராக இருந்து பெண் விவகாரத்தில்சிக்கி பதவியை இழந்த சில்வியோ பெர்லுஸ்கோனி, பெண்களுடன் பார்ட்டி, உல்லாசம், உற்சாகமாக இருந்து கும்மாளமிட்ட இடம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 76 வயதான பெர்லுஸ்கோனி 17 வயதுப் பெண்ணையும் கூட விடவில்லை. இதயத் திருடி என்ற செல்லப் பெயர் கொண்ட ரூபி என்ற 17 வயதுப் பெண்ணுடனும் இந்த இடத்தில்தான் ஜாலியாக இருந்தார் பெர்லுஸ்கோனி என்பது அவர் மீதான முக்கியக் குற்றச்சாட்டாகும். இதைத் தொடர்ந்து அவரது பிரதமர் பதவிக்கு சிக்கல் வந்து விலக நேரிட்டது. பூமிக்குக் கீழே உள்ள இந்த ரகசிய மாளிகையில்தான் பெர்லுஸ்கோனியின் அத்தனை அஜால் குஜால் வேலைகளும் நடந்ததாக கூறப்படுவதால் இந்த மாளிகை குறித்த தகவல்கள் பரபரப்பாக படிக்கப்படுகின்றன…
-
- 0 replies
- 696 views
-
-
மேற்கு வங்க மாநிலம், புர்ட்வான் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:- திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எங்கள் அரசுக்கும் இடையூறு ஏற்படுத்த தனது கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லா துறைகளையும் மத்திய அரசு ஏவி விட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஊழல் கதாநாயகர்கள் எங்களுக்கு எதிராக சதிவலை பிண்ணத் தொடங்கியுள்ளனர். நாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த போதே எங்கள் கட்சி எம்.பி.க்கள் மீது வருமான வரி துறையினரை மத்திய அரசு ஏவி விட்டது. உங்களோடு இருந்த காலத்தில் நாங்கள் கெட்டவர்களாக இருந்தோம் என்னும் போது உங்களுடன் இல்லாத நேரத்திலும் நாங்கள் கெட்டவர்கள் தான். நாங்கள் மாயாவதியை தொட்டுப்பார்த்து விட்டோம். முலாயம் சிங்கை தொட்…
-
- 2 replies
- 623 views
-
-
பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகுவாரா?: முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு Written by tharsan // May 14, 2013 // நிலக்கரி சுரங்க ஊழல், ரெயில்வே முறைகேடு ஆகியவற்றுக்கு பொறுப்பு ஏற்று மத்திய மந்திரிகள் அஸ்வினிகுமார், பவன்குமார் பன்சால் இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் இருவரையும் காப்பாற்ற பிரதமர் மன்மோகன்சிங் தீவிரமாக முயன்றார். ஆனால் சோனியா வற்புறுத்தியதால் 2 மந்திரிகளும் பதவியை பறிகொடுக்க நேரிட்டது. 2 மந்திரிகள் விலகல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் அதை மறுத்தனர். மந்திரிகளை ராஜினாமா செய்ய வைக்கும் முடிவை பிரதமரும், சோனியாவும் சேர்…
-
- 0 replies
- 354 views
-
-
பதவி ஏற்பு விழாவிற்கு வரும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நவாஸ் செரீப் அழைப்பு பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் செரீப் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. விரைவில் அவர் பிரதமர் பதவியை ஏற்க இருக்கிறார். இதை யொட்டி அவரை பாராட்டி, பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து கடிதம் அனுப்பி இருந்தார். அதில் இரு நாட்டு நல்லுறவு மேம்பட வேண்டும் என்று மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்திருந்தார். அத்துடன் இந்தியாவுக்கு வருகை தரும்படி நவாஸ் செரீப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.இந்நிலையில் ராவல்பிண்டியில் இன்று நவாஸ் செரீப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியளித்த போது பதவி ஏற்பு விழாவிற்கு பிரதமர் மன்மோகன்சிங்கை அழைப்பீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘பிரதமர் மன்மோகன…
-
- 0 replies
- 518 views
-
-
சிரியாவில் பஷார் அல் அசாத் ஆதரவு படைகளுக்கு எதிரான மோதல் உக்கிரமடைந்து வரும் நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள காணொளியொன்று பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காணொளியில் கிளர்ச்சியாளரொருவர் அசாத் ஆதரவுப் படை வீரர் ஒருவரின் இதயத்தைக் கிளித்தெடுத்து உட்கொள்கின்றமை காட்டப்பட்டுள்ளது. பார்ப்பவர்களை பீதிக்குள்ளாக்கும் வகையில் குறித்த காணொளி உள்ளது. தன்னார்வ அமைப்பொன்றினால் வெளியிடப்பட்டுள்ள இக்காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காணொளியில் காட்டப்பட்டுள்ள நபர் 'பாருக்' எனும் படையணியின் ஸ்தாபகரான அபு ஸகார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் இதயத்தை உன்ணும் முன்னர் “I swear to God we will eat your hearts and your livers, you soldiers of…
-
- 1 reply
- 456 views
-
-
உலகளவில் பசிக் கொடுமையை ஒழிப்பதில் எதிர்காலத்தில் மனிதர்களால் உட்கொள்ளக் கூடிய பூச்சிகள் ஆற்றக் கூடிய பங்களிப்பை ஐ நா அறிக்கை ஒன்று முன்னிலைப்படுத்தியுள்ளது. ஏற்கனவே 200 கோடி மக்கள் தமது உணவில் வெட்டிக் கிளி, வண்டு, எறும்பு உள்ளிட்ட பூச்சிகளை சேர்த்துக் கொள்வதாக ஐ நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு கூறியுள்ளது. பெரிய அளவில் பண்ணைகள் வைத்து தொழில் முறையில் பூச்சிகளை உற்பத்தி செய்வது வருங்காலத்தில் உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதத்தை அளிக்கும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வேகமாக இனப் பெருக்கம் செய்யும் தன்மை கொண்ட பூச்சிகளிடம், புரதச் சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் மற்றும் கால்நடைகளின் உணவாகவும் இவை பயன்படும் வாய்ப்புள்ளது. அதேநேரம் பூச்சியை சாப்பிடு…
-
- 3 replies
- 630 views
-
-
Canada is the Most Educated Country in the World Organization for Economic Cooperation and Development (OECD), 24/7 Wall St. hascompiled a list of the 10 most educated countries in the world. Canada tops the list. Here's their top 10: Canada Israel Japan United States New Zealand South Korea United Kingdom Finland Australia Ireland In 2010, 51% of our Canadian population had completed a tertiary education, which takes into account both undergraduate and graduate degrees. I'm part of that 51% having earned an Honours Bachelor of Arts degree from the University of Toronto back in 1998. You probably know what I'm about to ask you... Do you have a degree or di…
-
- 13 replies
- 940 views
-
-
கடந்த 1961ம் ஆண்டுகளில் நிறுவப்பட்ட ரான்பாக்சி என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் 125 நாடுகளுக்கு தனது மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனம் இந்திய ஆலைகளில் தயாரித்த மருந்துகளை அமெரிக்காவில் விற்பனை செய்து வருகிறது. இதில் 2005, 2006ம் வருடங்களில் கலப்பட மருந்துகள் விற்பனை செய்ததாக குற்றம் சாற்றப்பட்டது. அமெரிக்காவில் உள்ள ரான்பாக்சி கிளை தவறான ஆவணங்களை, அமெரிக்க தர நிர்ணய சோதனையில் வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 500 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய்) தொகையை அமெரிக்க அரசு அபராதமாக விதித்தது. அதை செலுத்த ரான்பாக்சி நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம், கடந்த 2008ம் ஆண்டு இந்நிறுவனத்தின் 30 மருந்…
-
- 3 replies
- 596 views
-
-
பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பல கோடி பணத்தை ஏமாற்றிய, சாரதா சீட்டுக் கம்பெனிக்கு எதிராக மேற்கு வங்கத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாரதா சீட்டுக் கம்பெனி உரிமையாளர் சுதிப்தா சென் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய சோசலிச ஐக்கிய மையத்தின் மாணவர் பிரிவு சார்பில் இன்று பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மாணவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபை நோக்கி சென்றனர். தடை செய்யப்பட்ட பகுதியை தாண்டி மாணவர்கள் முன்னேறியபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது மாணவர்கள் போலீசாரின் தடுப்பை மீறி சட்டசபை நோக்கி செல்ல முயன்றதுடன், போலீஸ்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை விரட்டியட…
-
- 0 replies
- 376 views
-
-
120 பெண்கள் விதவைகள் நேரடியாக சாட்சியம் அளித்து வங்காளதேச எதிர்க்கட்சி தலைவருக்கு தூக்கு தண்டனை வங்காளதேசத்தில் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த சுதந்திர போராட்டத்தின்போது துன்புறுத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். அவர்கள் மீது கோர்ட்டில் போர்க் குற்ற வழக்குகள் நடந்து வருகின்றன. அதற்காக டாக்காவின் போர்க்குற்ற நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போதைய எதிர்க் கட்சியான ஜமாத்-இ- இஸ்மாகி கட்சி தலைவர் முகமது கமாருஷமான் மீது வழக்கு தொடரப் பட்டிருந்தது. சுதந்திர போராட்டத்தின் போது வடக்கு பகுதியில் உள்ள சோஹாபூர் கிராமத்தில் பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் 120 விவசாயிகளை சுட்டுக் கொன்றார். அதன்மூலம் அக்கிராமத்தில் உள்ள பெண்களில் பெரும்பாலானோர் விதவைகளாகினர். விசாரணையின்போது அப்போது…
-
- 0 replies
- 335 views
-
-
பேஸ்புக்கில் கருத்து : மனித உரிமை அமைப்பின் பெண் அதிகாரி கைது இந்தியாவில் பேஸ்புக்கில் மிக மோசமான கருத்துக்களை பதிவு செய்த குற்றத்துக்காக மனித உரிமை அமைப்பின் மூத்த பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலத்தில் பணியாற்றி வரும் ஜெயா விந்தயலா, தமிழக ஆளுநர் ரோசய்யா, காங்கிரஸ் எம்எல்ஏ கிருஷ்ண மோகன் ஆகியோரைப் பற்றி மிக மோசமான கருத்துக்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார். இதையடுத்து, கிருஷ்ணா மோகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏப்ரல் 18ம் திகதி அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் அவரது குற்றம் நிருபிக்கப்பட்டதை அடுத்து ஜெயா விந்த்யாலயா கைது செய்யப்பட்டுள்ளார். http://www.adaderana.lk/tamil/news.php?ni…
-
- 0 replies
- 472 views
-
-
வங்காளதேசத்தில் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த சுதந்திர போராட்டத்தின்போது துன்புறுத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். அவர்கள் மீது கோர்ட்டில் போர்க் குற்ற வழக்குகள் நடந்து வருகின்றன. அதற்காக டாக்காவின் போர்க்குற்ற நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போதைய எதிர்க் கட்சியான ஜமாத்-இ- இஸ்மாகி கட்சி தலைவர் முகமது கமாருஷமான் மீது வழக்கு தொடரப் பட்டிருந்தது. சுதந்திர போராட்டத்தின் போது வடக்கு பகுதியில் உள்ள சோஹாபூர் கிராமத்தில் பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் 120 விவசாயிகளை சுட்டுக் கொன்றார். அதன்மூலம் அக்கிராமத்தில் உள்ள பெண்களில் பெரும்பாலானோர் விதவைகளாகினர். விசாரணையின்போது அப்போது நடந்த கொடுமைகளை கோர்ட்டுக்கு வந்து விதவை பெண்கள் நேரடியாக சாட்சியம் அளித்தனர். அதை ஏற்றுக் கொண…
-
- 0 replies
- 532 views
-
-
பெங்களூர்: பிரதமர் நாட்டுக்கு சுமையாகிவிட்டார் என்று கூறியுள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அரசு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மன்மோகன் சிங் நாட்டுக்கு பெரிய சுமையாகி விட்டார் என்றும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தீவிர சிகிச்சை பிரிவிலே உள்ளது என்றும் விமர்சித்தார். சி.பி.ஐ.யை கொண்டே ஆட்சி நடைபெற்று வருகிறது என்று குற்றம்சாட்டிய நாயுடு, உயிர் காக்கும் கருவிகள் துணையுடனே அரசு செயல்பட்டு வருகிறது என்றும் மற்றொரு நாட்டின் ஊடுருவலை கூட தடுக்க முடியாத அரசாக உள்ளது என்றும் கூறினார். ஊழலுக்காக ஊழல்வாதிகளால் அமைக்கப்பட்ட அரசு புகார் தெரிவித்த வ…
-
- 0 replies
- 474 views
-
-
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று பாரதீய ஜனதா வலியுறுத்தி வருகிறது. பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வற்புறுத்தி அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக பாரதீய ஜனதா அறிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து டெல்லி ரேஸ்கோர்சில் உள்ள பிரதமர் அலுவலக இல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் இல்லம் வரும் பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளது. பாரதீய ஜனதாவினர் ஊர்வலமாக புறப்பட்டு பிரதமர் வீடு நோக்கி வருகிறார்கள். http://dinaithal.com/index.php?option=com_content&vi…
-
- 0 replies
- 390 views
-
-
ஜெயலலிதா பிரதமரானால் இலங்கை பிரச்சினை முழுமையாக தீரும் - நாஞ்சில் சம்பத் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை விளக்கப்பொதுக் கூட்டம் பேருந்து திடலில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. துணை கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசிய போது, ’’இலங்கை பிரச்சினைகளை தீர்க்க தமிழக முதல்வர் தொடர்ந்து முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது உள்ளிட்ட துணிச்சலான நடவடிக்கைகளால் உலக முழுவதும் வலுவான அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவிற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வரும் இலங்கையை இனியும் நட்பு நாடாக கருதக் கூடாது என முதல்வர் தெரிவிப்பதை மத்திய அரசு கேட்க வேண்டும…
-
- 0 replies
- 2.4k views
-
-
இந்திய மத்திய அமைச்சர்கள் இருவர் பதவி விலகினர் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்திய ரயில்வே அமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர் ஆகியோர் இராஜினாமா செய்துள்ளார். ரயில்வே துறையில்இடமாற்றம் செய்ய ஒருவர் கொடுத்த பணத்தை வாங்கிய தனது மருமகன் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சல் ராஜினாமா செய்துள்ளார். பன்சல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிய எதிர் கட்சிகள் கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்கின. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடந்த 2009 ஆம் ஆண்டு மீண்டும் பதவிக்கு வந்ததில் இருந்து அரசு பல ஊழல் புகார்களில் சிக்கியுள்ளது. அதேவேளை சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் அவர்களும் இ…
-
- 1 reply
- 557 views
-
-
1999 ஆம் ஆண்டு இராணுவ புரட்சி மூலம் அகற்றப்பட்ட அவரது ஆட்சி மீண்டும் 14 வருடங்களின் பின் பாகிஸ்தான் மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்திருக்கின்றார்.... விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எதிலும் எப்பிடியும் எவ்விதமாகவும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்..... வாழ்த்துக்கள்
-
- 0 replies
- 465 views
-
-
ஈரானின் இன்று காலை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் காயமடைந்தனர், 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவலில் வெளியாகியுள்ளது. ஈரானின் பெர்சியன் வளைகுடாப் பகுதியில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் அந்நாட்டின் நேரப்படி காலை 6.59 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இதன் அதிர்வுகள் ஹோர்முஸ் ஜலசந்தியின் கடலோரப் பகுதிகளில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் 70 கிராமங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமானதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழப்புகள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. http://www.seithy.com/breifNews.php?newsID=82460&category=WorldNews&language=ta…
-
- 2 replies
- 520 views
-
-
FEB 28 இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே உள்ள ''அவாள்''களின் அதிகார பாரீர்! ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்! உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்! உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்! வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்! பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்! மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்! கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர். அதில் பிராமணர்கள் 2376 பேர்! பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்! ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்!…
-
- 0 replies
- 474 views
-
-
மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் 1982-83 காலப் பகுதியில்.. அந்த நாட்டின் பூர்வீக மக்களான மாயன்களுக்கு எதிரான உள்நாட்டுப் போரில்.. அப்போதைய இராணுவத் தளபதியாக இருந்த.. Efrain Rios Montt.. சிறீலங்காவின் கோத்த பாய.. சரத் பொன்சேகா கணக்கில் இராணுவத்தை ஏவிவிட்டு.. பாலியல் சித்திரவதைகள்.. சித்திரவதைகள்... படுகொலைகள்... இடம்பெயர்வுகள் மூலம் அரசுக்கு எதிராக போராடிய இடதுசாரி பூர்வீக மக்கள் இயக்க ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கப்படும்.. 1771 பேரை இனப்படுகொலையை செய்ததற்காக.. அந்த நாட்டு நீதிமன்றம்.. இப்போதுதான் 80 ஆண்டுகாலச் சிறைத் தண்டனை அளித்துள்ளது. மேற்படி இராணுவத் தளபதிக்கு வயசு 86 ஆகும். மேற்படி நாட்டில் 1960 - 1996 வரையான.. உள்நாட்டுப் போரில் சுமார் 200,000 நிலப்பூர்வீக ம…
-
- 0 replies
- 388 views
-
-
கழிப்பறைகள் இல்லாமையால் பீஹாரில் பாலியல் வல்லுறவுகள் அதிகம்' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 மே, 2013 - 07:14 ஜிஎம்டி பீஹாரில் காலை, மாலை வேளைகளில் வெளியிடங்களுக்குச் செல்லும் பெண்கள் இலக்குவைக்கப்படுகிறார்கள்: காவல்துறை இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் கழிப்பறை வசதிகளின்றி, காலைக்கடன்களை கழிக்க மறைவான வெளியிடங்களுக்குச் செல்வதாலேயே பெரும்பாலான பெண்களும் சிறுமியரும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதாக காவல்துறையினரும் சமூக ஆர்வலர்களும் தெரி்விக்கின்றனர். இந்தியாவின் வறிய மாநிலங்களில் ஒன்றான பீஹார் மாநிலத்தில் 85 வீதமான கிராமப்புற வீடுகளில் கழிப்பறை வசதிகள் கிடையாது. இதனால் அங்குள்ள மக்கள், இயற்கைக் கடன்களைக் கழிக்க மறைவான காட்டுப் புதர்களையும் ஆற்றோரங்களையும் ஏனைய த…
-
- 8 replies
- 1k views
-
-
$45 மில்லியன் பணத்தை உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் கிரெடிட் கார்ட் மூலம் மோசடி செய்த இரண்டு ஜெர்மன் நாட்டினரை அமெரிக்க போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அமெரிக்காவின் சைபர் க்ரைம் போலீஸாரின் அதிரடி நடவடிக்கையை அனைவரும் பாராட்டியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் பல்வேறு போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பேங்க் ஆப் மஸ்கட் என்ற வங்கியில் இருந்து 170,000 யூரோ பணத்தை ஆன்லைன் மூலம் மோசடி செய்த இரண்டு ஜெர்மன் நாட்டினரை அமெரிக்க போலீஸார் கைது செய்தனர். அவர்களின் ஒருவருக்கு 35 வயது மற்றொருவருக்கு வயது 56 ஆகும்.. அவர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் கிரெடிட் கார்டுகள் போன்று போலியாக தயார் செய்து $2.4 மில்லியன் பணத்தை ஜெர்மன் நாட்டில் மட்டும்…
-
- 1 reply
- 459 views
-
-
மெக்சிகோ தலைநகரின் வடக்கு பகுதியில் கேஸ் டாங்கர் வெடித்து பயங்கர விபத்து ஒன்று நடந்துள்ளது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் கேஸ் டாங்கர் அருகில் நின்றிருந்த 15 கார்களும் தீயில் கருகியது. அதோடு அருகிலுள்ள சுமார் 20 வீடுகள் பயங்கரமாக சேதமடைந்துள்ளது. மெக்சிகோவின் public safety secretary Ecatepec அவர்கள் இன்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தலைநகரின் வடக்கு பகுதியில் கேஸ் டாங்கர் ஒன்று திடீரென தீப்பிடித்த வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதங்கள் மற்றும் பொருட்சேதங்கள் குறித்து விளக்கியுள்ளார். கேஸ் டாங்கர் மெக்சிகோ நகரின் தேச…
-
- 0 replies
- 467 views
-
-
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த மாரத்தான் போட்டியில் வெடிகுண்டு வைத்த குற்றவாளியை சென்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி அமெரிக்காவின் FBI போலீஸார் சுட்டுக்கொன்றனர். அவரது உடலை அவரது உறவினர்கள் யாரும் வாங்குவதற்கு முன்வரவில்லை. எனவே இஸ்லாமிய முறைப்படி அமெரிக்க அரசு இறந்த குற்றவாளியின் இறுதிச்சடங்கை நடத்தியுள்ளது. பாஸ்டன் மாரத்தான் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளி Tamerlan Tsarnaev அதிரடியாக சுட்டுக்கொல்லப்பட்டவுடன் முறைப்படி பிரெதப்பரிசோதனை செய்த பின்னர் அவரது உடலை பெற்றுக்கொள்ளுமாறு உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவரது உடலை பெற்று இறுதிச்சடங்கு நடத்த உறவினர் யாரும் முன்வரவில்லை. ஒருவார காலம் பொறுத்திருந்து பார்த்த அரசு அதிகாரிகள் வேறு வழியின்றி அவர்கள…
-
- 0 replies
- 651 views
-