உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
ரஷ்யாவின் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மூன்று முஸ்லீம் இளைஞர்களை அங்கு வந்த ரஷ்ய காவல்துறையினர் அவர்களது நீண்ட தாடியை வலுக்கட்டாயமாக நீக்க கட்டாயப்படுத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரஷ்யாவின் Surgut என்ற நகரத்தில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு அருகிலுள்ள ஓரு உணவகத்தில் சாப்பிடுவதற்காக மூன்று முஸ்லீம் இளைஞர்கள் சென்றனர். அப்போது அங்கு வந்த ரஷ்ய காவல்துறையினர் சிலர் அந்த மூன்று இளைஞர்களையும் நெருங்கிவந்து, அவர்கள் முகத்தில் வைத்திருந்த தாடியைக் கண்டு பொதுமக்கள் அச்சப்படுவதாகவும் எனவே உடனே தாடியை நீக்க வேண்டும் என்றும் மறுத்தால் தாடியை தீயிட்டு கொளுத்துவோம் என்றும் துப்பாகி முனையில் பயமுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. …
-
- 0 replies
- 488 views
-
-
இங்கிலாந்து நாட்டில் உள்ள Bridgend, South Wales என்ற இடத்திலுள்ள ஒரு குடும்பத்தில், சில மணி நேரங்களில் அடுத்தடுத்து மூன்று நபர்கள் வெவ்வேறு சம்பவங்களில் மரணம் அடைந்த ஒரு சோக சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்பாகி உள்ளது. Hillary Dennis என்ற பெண்ணின் மகள் Caryl உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பலனளிக்காமல் இறந்துவிட்டதாக முதலில் தகவல் வந்தது. இந்த செய்தி கிடைத்த அதிர்ச்சியில் அவர் உறைந்து இருந்த போது அவருடைய மகனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் Hillary Dennis அவர்களில் சகோதரி ஒரு விபத்தில் இறந்துவிட்டதாக தெரிய வந்தது. அதையடுத்து சிலமணி நேரங்களில் தொலைபேசியில் சகோதரியின் மரண செய்தியை கூறிய மகன் Nigel அவர்களும் விப…
-
- 1 reply
- 315 views
-
-
சிலருக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்று சொல்வார்கள். அதுபோல பல்கேரியை சேர்ந்த ஒரு நபருக்கு அடுத்தடுத்து இரண்டு தடவை மிகப்பெரிய தொகையை லாட்டரியில் வென்றிருக்கின்றார். அவருக்கு மீண்டும் அதிர்ஷ்ட தேவதை அருகே சென்றிருக்கிறார் என்பதே இந்த புதிய செய்தி. பல்கேரியாவை சேர்ந்த George Traykov என்ற 41 வயது நபர் கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள லாட்டரி பரிசை வென்றார். பின்னர் மூன்றே மாத இடைவெளியில் மீண்டும் £160,873மதிப்புள்ள பரிசை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இவ்வாறு இரண்டு தடவை மிகப்பெரிய தொகையுள்ள பரிசை வென்ற இவருக்கு மூன்றாவது முறையும் பரிசு நெருங்கி வந்துள்ளது. அதாவது சென்ற வாரம் நடந்த ஒரு பரிசு கு…
-
- 0 replies
- 833 views
-
-
இந்தியாவை விட்டு வெளியேற இத்தாலி தூதர் மறுப்பு: வழக்கிலிருந்து வக்கீல் விலகல். டெல்லி: நேற்று பாராளுமன்றம் கூடியதும், எதிர்க்கட்சிகள் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு இத்தாலி விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். இந்திய மீனவர்களை, சுட்டுக் கொலை செய்த இத்தாலியர்கள் இந்தியா திரும்பாதது குறித்து விவாதிக்க வலியுறுத்தினர். அதற்கு பதிலலிக்கும் விதமாக, பிரதமர் மன்மோகன் சிங் இத்தாலி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இத்தாலிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த பிரச்சினையில் கடும் விளைவுகளை இத்தாலி சந்திக்க வேண்டும் என எச்சரித்தார்என்று கூறினார்.இந்நிலையில் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய இத்தாலி தூதர் டேனியல் மன்சினி, ‘…
-
- 6 replies
- 909 views
-
-
மூன்றாவது உலகப் போர் என்ற நாவலைத் தொடர்ந்து, ஈழத்தையும் அதன் மனிதர்களையும் மையப்படுத்தி தன் அடுத்த படைப்பை உருவாக்குகிறார் வைரமுத்து. வைரமுத்துவின் சமீபத்திய படைப்பான மூன்றாவது உலகப் போர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நாவலுக்கு இலக்கியச் சிந்தனை விருதும் கிடைத்துள்ளது. இந்த நாவல் மூலம் தான் ஈட்டிய வருவாயில் ஒரு பகுதியை தஞ்சைப் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட 11 விவசாயக் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் என பகிர்ந்தளித்தார். இந்த நிலையில், இப்போதே தனது அடுத்த படைப்புக்கான பணிகளை ஆரம்பித்துள்ளார் வைரமுத்து. இப்போது அவர் எழுதப் போவது தமிழ் ஈழம் தொடர்பான ஒரு நாவல். எனவே அதை தமிழகத்திலிருந்து எழுதாமல், இலங்கைக்கே போய் சில காலம் தங்கியிருந்து அந்த மண்ணையும் மனிதர்களையும…
-
- 6 replies
- 641 views
-
-
இராஜதந்திரப் போர்க்களமான ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக இன்று தாக்கல் செய்யவுள்ள பிரேரணையின் இறுதிவரைவு குறித்து விளக்கமளிப்பதற்கு அமெரிக்கா நேற்று நடத்திய முக்கிய கூட்டத்தின்போது குறித்த பிரேரணைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட கியூபா, இவ்விவகாரம் தொடர்பில் வோஷிங்டனுடன் நேரடிச் சொற்போரிலும் ஈடுபட்டது. கியூபா பிரதி நிதிகளுக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் சூடான வாதப் பிரதி வாதங்கள் இடம்பெறுகையில், இலங்கைக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா குரல்கொடுத்தன. இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்கப் பிரேரணையை நலிவடையச் செய்வதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டன. இவ்வேளையில், குறுகீடு செய்து களமிறங்கிய ஐரோ…
-
- 1 reply
- 547 views
-
-
விளைவுகளை சந்திக்க நேரிடும்:இத்தாலிக்கு மன்மோகன் எச்சரிக்கை புதுடெல்லி: வாக்குறுதியை காப்பாற்றாவிடில் அதற்கான விளைவை இத்தாலி சந்திக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் அனுமதியோடு இத்தாலி வீரர்கள் இரண்டு பேர் நாடு சென்றனர். இதனிடையே, இந்த வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இரண்டு வீரர்களையும் இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று இத்தாலி அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள இத்தாலி தூதரை நேரி்ல் வரவழைத்து இந்தியா கண்டித்தது. இந்த நிலையி்ல், மக்களவை இன்று காலை கூடியதும் இத்தாலி வீரர்கள் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.…
-
- 11 replies
- 645 views
-
-
இத்தாலி தூதர் Daniele Mancin இந்தியாவை விட்டு வெளியேறத் உச்சநீதி மன்றம் தடை. கிருஸ்தவ விடுமுறை களிற்க்காக இத்தாலி சென்ற, கேரளா மீனவர்களை சுட்டு கொலை செய்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட 2 இத்தாலியர்கள், அவர்கள் நாட்டிற்கு சென்றதும் இந்தியா திரும்ப முடியாது என்று சொல்லி உள்ளனர். இதற்க்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆட்சேபனையை , இந்திய வெளியுறவு துறை அலுவலர் ரஞ்சன் மதாய் (India's foreign secretary Ranjan Mathai) மூலம் இத்தாலி தூதர்,டானிலி மன்சினி ( Italian Ambassador to India Daniele Mancini)என்பவருக்கு சம்மனாக, நேரில் நேற்று கொடுக்கப்பட்டாது. இந்த நிலையில் இன்று இந்தியாவுக்கான இத்தாலி தூதர் டானிலி மன்…
-
- 1 reply
- 493 views
-
-
சிவசேனா கட்சிக்குச் சொந்தமான புலித் தலை சின்னத்தை, நாம் தமிழர் கட்சி பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்' என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சிவசேனா மாநில தலைவர் குமாரராஜா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்: சிவசேனா, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி. சிவசேனா கட்சியின் சின்னம், புலித் தலை. இதுவும், பதிவு செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சி நடத்தி வரும் சீமான், சிவசேனாவுக்கு சொந்தமான புலி தலையை, கட்சி கொடிகளில் பயன்படுத்தி வருகிறார். இது சட்ட விரோத செயல் ஆகும். இந்திய அரசால் தடை செய்யப்பட்ட, விடுதலை புலிகள் இயக்கத்தை, சீமான் பகிரங்கமாக ஆதரிக்கிறார். இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க, சதி செயலில் ஈடுபட்டு வருகிறார்.…
-
- 0 replies
- 612 views
-
-
ரோம்: புதிய போப்பாக அர்ஜென்டினாவின் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டார். புதிய போப் இனி போப் முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படுவார். உடல் நிலையை காரணம் காட்டி, 16வது பெனடிக்ட், கடந்த மாதம் பதவி விலகியதால், புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக, வாடிகனின், சிஸ்டன் தேவாலயத்தில், 115 கார்டினல்கள் கூடி ரகசிய ஓட்டு பதிவை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு, புதிய போப்தேர்வு செய்யப்பட்டு விடுவார், என்ற எதிர்ப்பார்ப்பில், ஏராளமான மக்கள், சிஸ்டைன் தேவாலயத்தின் வெளியே கூடி, புகைபோக்கியை ஆவலோடு பார்த்து காத்திருந்தனர். ஆனால், கரும்பு புகை வெளியேறியதால், புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை, என்பது தெரிந்தது. கார்டினல்கள…
-
- 3 replies
- 1.1k views
-
-
உலகத்தின் நம்பர் வண் யார்… முதலிடத்தைக் கைப்பற்ற வான்வெளியில் வெடித்திருக்கிறது அமெரிக்கா – சீனா இரண்டு நாடுகளுடைய சைபர் யுத்தம்.. 21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய பயங்கரவாதம் என்று வார்ணிக்கப்படும் சைபர்கிரைம் மோதல் ஆரம்பித்துவிட்டதை தமிழ் மக்கள் அவசரமாகவும் அவசியமாகவும் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் பேள்காபர் துறைமுகத்தை ஜப்பானியர் தாக்கியதைப் போல இப்போது சீனா அமெரிக்கா மீது நடாத்தியிருப்பது சைபர் பேள்காபர் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. இதுவரை சைபர்கிரைம் நடக்கிறது என்று பேசி வந்த அமெரிக்க அதிபர் முதல் தடவையாக சீனாவை நோக்கி கோபமாக கையை நீட்டியுள்ளார். சைபர் கிரைம் என்றால் என்ன..? இது சற்லைற் போர்.. சற்லைற்றை பயன்படுத்தி இணையம் மூலமாக நடைபெறும் போர…
-
- 1 reply
- 1.8k views
-
-
இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தான் தூதுவரிடம் முறைப்பாடு செய்ததாக தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளரான அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடக்கும் ஐநா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை முஸ்லிம்கள் விவகாரம் பற்றிய பேச்சுக்களின்போது, பாகிஸ்தானும், இந்தோனீசியாவும் ''இலங்கையில் முஸ்லிம்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் கிடையாது'' என்ற வகையில் பேசியதாக கூறிய அசாத் சாலி அவர்கள், அது தவறு என்றும் ஆகவே அவர்களுக்கு அது குறித்து விளக்கும் வகையில் இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய தூதுவரைக் கண்டு தாம் பேசியதாகக் கூறியுள்ளார். இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் இடிக்கப்படும் போது, அவர்கள் ஹலால் போன்ற பல பிரச்சினைகள் எதிர்கொள்ளு…
-
- 6 replies
- 494 views
-
-
அமெரிக்க கம்ப்யூட்டர்களில் உள்ள ரகசிய தொழில் தகவல்கள், அமெரிக்காவுக்கு சொந்தமான தொழில்நுட்ப தகவல்கள், சீனாவிலிருந்து திருடப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையேயான வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் இணைய பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து அந்நாட்டின் தனியார் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஒபாமா ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை இன்று வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ளது. இணையதள திருட்டு பிரச்சினைகளை அரசும் தனியாரும் இணைந்து எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து அதிகாரிகள் தங்கள் யோசனைகளை தெரிவிக்க உள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலன் கூறுகையில், இணையத்தின் மூலம் த…
-
- 0 replies
- 350 views
-
-
பிராம்டன் நகரில் உள்ள இரவு விடுதியில் இன்று புதன்கிழமை அதிகாலையில் மூன்று பெண்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியை மிகுந்த பரபரப்பாக்கியுள்ளது. இந்த துப்பாக்கி சூடு அந்த பெண்களை குறிவைத்து சுடப்பட்டதா? அல்லது வேறு யாரேனும் வைத்து குறிக்கு இவர்கள் தாக்கப்பட்டார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகின்றது. பிராம்டன் நகரில் மிகவும் புகழ்பெற்ற இரவு கிளப் The Office Gentleman Club ஆகும். இங்கு வழக்கமாக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் நடைபெறும் Twerk it Tuesdays என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் பலர் பங்கேற்று விழா நடந்துகொண்டிருந்தபோது அதிகாலை 1.30 மணியளவில் திடீரென துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதால் விடுதி பரபரப்புக்கு…
-
- 0 replies
- 493 views
-
-
சிறு பிராயத்தில் கொள்ளை: சவுதியில் 7 பேருக்கு மரண தண்டனை! சிறு வயதில் நகைக் கடை ஒன்றைக் கொள்ளை அடித்ததற்காக 7 பேருக்கு சவுதி அரேபியா மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது மனித உரிமைகள் அமைப்பு மற்றும் சர்வதேந நாடுகளிடையே கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. சர்ஹான் அல் மஷைக், சயீத் அல் ஜஹரானி, அலி அல்-ஷாரி, நாசர் அல் கடானி, சயீத் அல் ஷரானி, அப்துல் அஜீஜ் அல் ஆம்ரி, மற்றும் அலி அல் கடானி ஆகிய 7 பேர் தலையும் வெட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2006ஆம் ஆண்டு இவர்கள் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்டு அபா பொதுச் சிறையில் அடைக்கப்பட்டனர். சவுதி அரேபியா இஸ்லாமிய அடிப்படைவாத நாடாகையால் ஷரியா சட்டத்தைக் கடைபிடித்து வருகிறது. இந்த சட்டத்தின் படி, கொலை, பாலியல் வல்ல…
-
- 0 replies
- 449 views
-
-
கோழைத்தனமும் ஊழலும் நிறைந்த இந்தியா உன் தூதரகத்தை மூடு மலேசியாவில் தமிழர்கள் கர்ச்சனை. [படங்கள்] மலேசியா தலை நகரம்கோலாலம் பூரில் அமைந்துள்ள இந்தியா தூதரகம் முன்பு தமிழர்கள் நேற்று முற்றுகைப் போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர். இதில் ஈழ தமிழருக்கு தமிழீழம் தான் ஒரே தீர்வு என போராட்டத்தின் போது மக்கள் தெரிவித்தனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13325:malesiya-news-13-03-2013&catid=37:india&Itemid=103 Share this post
-
- 3 replies
- 585 views
-
-
பேஸ்புக் எனப்படும் முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம், அரசியல் சார்பு நிலை, புத்திசாலித்தனம் வரை அவரது அனைத்து குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் கணிக்கமுடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பேஸ்புக் என்பது மனிதர்களின் இன்றியமையாத அடிப்படை அடையாளமாக மாறிவருகிறது. இந்த முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம் என்ன என்பதில் துவங்கி, அவரது அரசியல் சார்பு நிலை, அவரது புத்திசாலித்தனம் வரை ஒருவரின் குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் தெரிவித்துவிட முடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். பேஸ் புக்கில் இருக்கும் ஒருவர் தனக்கு பிடித்தமான செய்தி, கருத்து…
-
- 3 replies
- 691 views
-
-
சனிக்கிழமை, 9, மார்ச் 2013 (10:32 IST) புதிய போப் ஆண்டவர்! மார்ச் 12ம் தேதி தேர்வு! புதிய போப் ஆண்டவரை தேர்ந்து எடுபபதற்கான நடைமுறைகள் வரும் 12ஆம் தேதி தொடங்குகின்றன. வாடிகன் நகரில் கடந்த ஆறு நாட்களாக ஆலோசனை செய்து வந்த கத்தோலிக்க மத கார்டினல்கள், தற்போது தேர்வு தேதியை அறிவித்துள்ளனர். புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் 115 கார்டினல்களும் வாடிகன் நகருக்கு வந்து சேர்ந்துள்ளனர். தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய போப் ஆண்டவர் யார் என்ற எதிர்பார்ப்பு, கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடையே ஏற்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=93749
-
- 2 replies
- 534 views
-
-
நடுவானிலேயே வெடித்துச் சிதறடிக்கப்பட்ட இந்தியாவின் நிர்பயா இந்திய வடிவமைத்துத் தயாரித்துள்ள ´நிர்பயா´ என்ற ஏவுகணையின் சோதனை தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒலியின் வேகத்தைவிட குறைந்த வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணையின் சோதனை இன்று ஒரிஸ்ஸாவின் பாலாசூர் பகுதியில் சண்டிபூர் ஏவுகணை மையத்தில் நடந்தது. டிஆர்டிஓ தயாரித்துள்ள இந்த ஏவுகணை காலை 11.50 மணிக்கு ஏவப்பட்டது. ஆனால், அது இலக்கை விட்டுத் தவறி பாதை மாறிச் சென்றது. இதையடுத்து அந்த சோதனை நடுவானிலேயே வெடித்துச் சிதறடிக்கப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. பாதை மாறிய இந்த ஏவுகணை கடலோரப் பகுதியில் வந்து விழுந்து வெடிக்கலாம் என்று தெரியவந்ததால் அதை வழியிலேயே விஞ்ஞானிகள் வெடிக்கச் செய்தனர்.…
-
- 12 replies
- 817 views
-
-
ராம் சிங்கின் மரணம் தற்கொலையே : பரிசோதனையில் உறுதி இந்தியாவின் புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஈவிரக்கமற்ற முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பஸ் சாரதி ராம்சிங் உள்பட 6 பேரை பொலிசார் கைது செய்தனர். இதையடுத்து குற்றவாளிகளில் 5 பேர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரு குற்றவாளி 18 வயதுக்கு உட்பட்டவன் என்பதால் அவன் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான பஸ் சாரதி ராம்சிங், நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். ராம்சிங்கின் பிரேத பரி…
-
- 0 replies
- 428 views
-
-
ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 நேட்டோ வீரர்கள் பலி தெற்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் பயணம் செய்த . அதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். விபத்துக்காரன காரணம் குறித்து உடனடி தகவல்கள் ஏதுமில்லை. எனினும், அப்பகுதியில் எதிரிப்படைகளின் நடமாட்டம் ஏதும் காணப்படவில்லை என அங்கிருந்து வரும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் நேட்டோ படையில் இடம்பெற்றுள்ளனர். இந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் ஒரு லட்சம் வீரர்களை கொண்ட நேட்டோ படை முகாமிட்டுள்ளது. பெரும்பாலும் வான்வழி போக்குவரத்தையே …
-
- 0 replies
- 352 views
-
-
வாடிகன்: உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளில் ஒன்றான புகை குழாய் பொருத்தப்பட்டிருக்கிறது. இன்று கர்டினால்கள் வாக்களிக்க இருக்கின்றனர். போப் ஆண்டவராக பொறுப்பு வகித்த ஜெர்மனியைச் சேர்ந்த 16-ம் பெனடிக்ட் பதவி விலகியதையடுத்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் வாடிகன் நகரில் நடந்தது. இதில் புதிய போப்பைத் தேர்வு செய்வதற்கு தகுதியான 115 கார்டினல்கள் கலந்துகொண்டனர். இவர்கள் வாடிகன் சென்று ஆலோசனை நடத்தி வந்தனர். இக்கூட்டத்தின் முடிவில் இன்று புதிய போப் ஆண்டவர் தேர்வுக்கான நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. கார்டினல்கள் 115 கார்டினல்களும் வாக்களித்து போப் ஆண்டவரை தேர்வு செய்ய உள்ளனர். இந்த 115 கார்டினல்…
-
- 1 reply
- 447 views
-
-
டெல்லி: தமிழக மீனவர்களை படுகொலை செய்த கொலைகார மாலுமிகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்று இத்தாலி அறிவித்திருப்பதற்கு பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். அரபிக் கடற்பரப்பில் தமிழக வீரர்களை படுகொலை செய்த இத்தாலிய மாலுமிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக நாட்டு சென்று வர அனுமதிக்கப்பட்டனர். இதனடிப்படையில் அந்நாட்டு தேர்தலில் வாக்களிக்க இருவரையும் உச்சநீதிமன்றம் அனுப்பி வைத்தது. ஆனால் தற்போது இரு இத்தாலிய மாலுமிகளை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று இத்தாலி கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன்சிங், இத்தாலியின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாதது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சருடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக…
-
- 3 replies
- 612 views
-
-
"" எதிர்காலத்தில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும், போர் நடப்பதற்கு, மிக குறைந்த வாய்ப்புகளே உள்ளன,'' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சிவசங்கர் மேனன் கூறினார். டில்லியில் நேற்று நடந்த ஒரு விழாவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சிவசங்கர் மேனன் பங்கேற்றார். அவரிடம்,"அடுத்த, 30 ஆண்டுகளில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் போர் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளதா?' என, செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, அவர் அளித்த பதில்: எதிர்காலத்தில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் போர் நடப்பதற்கான வாய்ப்பு, மிகவும் குறைவு. இரு நாடுகளுக்கும் இடையே, பல, 1,000 ஆண்டுகளாக, கலாசார ரீதியிலான உறவும், தொடர்பும் உள்ளது. எனவே, போர் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. சமீபத்தில் கூட, இரு நாடுகளுக்கும் இடையே, கடற்பாதுகாப்…
-
- 4 replies
- 569 views
-
-
சோனியாவின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா அரசு நிலத்தை அபகரித்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டை எழுப்பி மத்திய அரசை திணற வைக்க பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக முழு அளவில் விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும். இதற்கு அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என சபாநாயகரிடம் பா.ஜ., தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது . வதோரா என்ன தான் செய்தார்? @@காங். தலைவர் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா , டி.எல்.எப். என்ற நிறுவனத்திடமிருந்து சொத்து வாங்கியுள்ளார். இந்த நிலம் முன்னதாக அரியானா மற்றும் டில்லி, ராஜஸ்தான் மாநில அரசிடம் இருந்து பெறப்பட்டது. .ரூ. 300 கோடி மதிப்பிலான இந்த சொத்தினை வெறும்ரூ. 50 லட்சம் கொடுத்து பெற்றுள்ளார…
-
- 0 replies
- 454 views
-