Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மும்பை: பிரதமர் யார் என்பதை இப்பொழுதுதே அறிவிக்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளக் கட்சியை தொடர்ந்து சிவசேனா கட்சியும் பா.ஜனதாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா கட்சி பத்திரிகையான 'சாம்னா'வில் கூறப்பட்டிருப்பதாவது: " தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை விரைவாக கூட்டி, பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளாரக அறிவித்தால், பா. ஜனதா கூடுதலாக 5ல் இருந்து 10 தொகுதிகளில் வெற்றி பெறும். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பழைய நட்பு கட்சிகள் விலகினால் 25 தொகுதிகளை இழக்க வேண்டியது இருக்கும். பா.ஜனதாவின் ப…

  2. இரானில் கடும் நிலநடுக்கம்- 40 பேர் பலி?, டில்லியில் கட்டிடங்கள் ஆட்டம் இரானின் தென்கிழக்குப் பகுதியில் பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகே 7.8 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது. இலகுவில் செல்ல முடியாத, சனநெருக்கடி மிக்க சிஸ்டான் பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.பலியாகியிருப்போரின் எண்ணிக்கை குறித்து குழப்பம் காணப்படுகிறது.எவரும் இதில் உயிரிழக்கவில்லை என்று மாகாண ஆளுநரை ஆதாரம் காட்டி செய்திகள் கூறுகின்றன.ஆனால், 40 பேர் வரை கொல்லப்பட்டதாக அரசாங்க தொலைக்கட்சி கூறியுள்ளது. எல்லையில் தமது பக்கமாக 13 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்சாரமும், தொடர்பும் த…

    • 0 replies
    • 323 views
  3. முஷாரஃபின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட, முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களை தேர்தல் தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.நாட்டின் வடமேற்கே தொலைதூரத்தில் உள்ள சித்ரால் மாவட்டத்தின் ஒரு தொகுதியில் போட்டியிட அவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனு ஏற்று கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதை தேர்தல் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துவிட்டது.முன்னதாக வேறு மூன்று தொகுதிகளில் போட்டியிட அவர் தாக்கல் செய்திருந்த மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. அவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். ஒன்பது ஆண்டு காலம் பாகிஸ்தானின் அதிபராக இருந்த இந்த முன்ன…

    • 0 replies
    • 295 views
  4. மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் நகரின் அருகில் உள்ள கோலார் டேம் என்ற இடத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை ஏழு பேர் சேர்ந்த கும்பல் கடத்தி சென்று அடித்து உதைத்ததோடு அல்லாமல் பாலியல் வன்புணர்வும் கொண்ட சம்பவம் அந்த மாநிலத்தையே உலுக்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில் கோலார் டேம் பகுதியை சேர்ந்த மகேஷ் வயது 19 மற்றும் அமர் வயது 25 ஆகிய இரண்டு இளைஞர்களும் மீன்பிடிக்க சென்றனர். அவர்களுடன் அவர்களுடைய நண்பர்கள் கைலாஷ் மற்றும் விக்ரம் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். நான்கு பேர்களும் டேமில் மீன்பிடித்து சுட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது மீன்களை பிடிப்பதற்கு குத்தகை எடுத்துள்ள நபர்களில் ஏழு பேர் கொண்ட கும்பல் திடீரென வந்து மீன்களை சாப்பிட்டுக்கொண்டிருந்த இளைஞர்களை விரட்டிப்…

  5. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் Audrie Pott என்ற 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து புகைப்படமும் எடுத்து ஃபேஸ் புக் போன்ற இணையதளத்தில் வெளியிட்ட உடன் படிக்கும் மாணவர்கள் மீது போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். கலிபோர்னியாவில் Audrie Pott என்ற 15 வயது மாணவி, தன்னுடைய ஆண் நண்பர்களுடன் மதுவிருந்தில் கலந்து கொண்ட பின், படுக்கையறையில் அசந்து தூங்கியுள்ளார். அந்த நேரத்தில் போதை தலைக்கேறிய வெறியில் அவருடைய நான்கு நண்பர்களும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து தங்களுடைய மொபைல் போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர் சிறுமியின் உடலில் தங்களுடைய பெயர்களையும் பேனாவினால் எழுதியுள்ளனர். ஒரு வாரத்திற்கு பின், தன்னுடைய ஆபாச புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் வெளியா…

  6. முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் உடல் நேற்று Palace of Westminster என்ற இடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக தகுந்த மரியாதைகளுடன் வைக்கப்பட்டது. பிரிட்டிஷ் தலைவர்களும், முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களும் மறைந்த முன்னாள் பிரதமருக்கு தங்கள் ஆழ்ந்த அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். மார்கரெட் தாட்சரின் இறுதிச்சடங்கு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. http://thedipaar.com/new/news/news.php?id=59935&cat=world

    • 0 replies
    • 275 views
  7. சென்ற திங்கள் அன்று பாஸ்டன் மாரத்தான் போட்டியில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் பலியான ஒரு இளம்பெண் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தில் பலியான இளம்பெண்ணின் பெயர் Krystle Campbell என்ற 29 வயது பெண் ஆவார். இந்த தகவலை வெளியிட்ட mayor of Medford, Massachusetts, இவர் இவருடைய குடும்பத்தின் ஒரே மகள் என்றும் இவருடைய இழப்பை இவருடைய குடும்பத்தினர் ஈடுசெய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். பலியான Krystle Campbell என்ற பெண்ணின் தாயார் William Campbell செய்தியாளரிடம் கூறியபோது, தனது மகள் ஒவ்வொருவர் மீது மிகுந்த அன்பு செலுத்துபவர் என்றும், இவர் தன் தந்தையின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவர் என்றும் குறிப்பிட்டார். தனது மகளின் இறப்பு குறித்த செய்தி அற…

    • 0 replies
    • 497 views
  8. டொரண்டோவில் மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த G20 கூட்டம் நடந்தபோது பொது சொத்துக்களை சேதம் செய்த காரணத்திற்காக தேடப்பட்டு வந்த அமெரிக்க நபர் ஒருவர் தற்போது பிடிபட்டார். அவருக்கு வயது 24. டொரண்டோவில் மூன்று வருடங்களுக்கு முன் நடந்த G20 கூட்டம் நடந்த போது அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் வீதியில் உள்ள கார்கள், மற்றும் கடைகளின் கண்ணாடிகள் முதலியவற்றை உடைத்த சுமார் $400,000 மதிப்புள்ள சொத்துக்களை சேதப்படுத்தினார். மேலும் காவல்துறை வாகனம் ஒன்றையும் அடித்து நொறுக்கியதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக தேடப்பட்டு வந்த அந்த வாலிபரை கனடாவிலும், அமெரிக்காவிலும் டொரண்டோ போலீஸார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அந்த வாலிபரை நியூயார்க் நகர போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து கனடாவிற்…

    • 0 replies
    • 258 views
  9. வடகொரியாவின் எல்லைப்பகுதியில் அமெரிக்காவின் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையில் மோதி நொறுங்கியது. அமெரிக்காவின் விமானங்களை தாக்கி அழிப்போம் என்று வடகொரியா அறிவித்திருக்கும் இந்த வேளையில் இந்த விபத்து அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது. இது விபத்து என்று அமெரிக்க தரப்பில் கூறப்பட்டாலும் இது வடகொரியா ராணுவத்தின் சதியாக இருக்கலாம் என்ற அச்சம் ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உண்மையை மறைத்து விபத்து நடந்ததாக நாடகம் ஆடுகிறதா அல்லது உண்மையில் விபத்துதானா என்பதை இன்னும் உறுதி செய்ய இந்த நாடுகளால் முடியவில்லை. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடம் வடகொரிய எல்லையின் மிக அருகில்தான். எல்லையருகே வந்த ஹெலிகாப்டரை வடகொரியா ராணுவம் தாக்கியிருக்கலாம் என்றும்…

    • 2 replies
    • 986 views
  10. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் 16.04.2013 செவ்வாய்க்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறி, வீதிக்கு வந்தனர். இதேபோல் டெல்லி புறநகர்களான குர்கான், நொய்டா, பஞ்சாப் தலைநகர் சண்டிகர், ஜெய்பூர் அகமதாபாத் ஆகிய இடங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் திரண்டனர். பாகிஸ்தானை மையமாக கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் காரணமாக, பாகிஸ்தான் மற்றும் ஈரானின் பல பகுதிகளிலும் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அதிக அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்க…

  11. புதுடெல்லி: ஈரானை மையமாக கொண்டு இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இதன் தாக்கம் பாகிஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டது. ஈரானை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவானதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஈரானையொட்டிய பாகிஸ்தான் எல்லை மற்றும் டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கட்டிடங்கள் அதிர்ந்ததால், மக்கள் அலறியடித்தபடி வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர். குறிப்பாக டெல்லியின் புறநகரான நொய்டா மற்றும் குர்காவ் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரி…

  12. விக்கிலீக்ஸின் அதிர வைக்கும் அம்பலங்கள்! [ நக்கீரன் ] விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வரும் ரகசிய ஆவணங்கள் இதுவரை அமெரிக்க அரசாங்கத்தின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வந்தது என்றால் இப்போது இந்திய அரசியலிலும் அது பல அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல ஆவணங்கள் இந்திய அரசியல் மற்றும் தமிழக அரசியல் சம்பந்தப்பட்டவை. அவை குறிப்பிடும் பல செய்திகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களிலும் அரசியலிலும் அமெரிக்கா மிகத் தீவிரமான தொடர்பு வைத்திருந்தது அம்பலமாகிறது. உலகெங்கிலுமுள்ள அமெரிக்க தூதரகங்கள் உண்மையில் அமெரிக்காவின் உளவு அமைப்புகளாகத்தான் செயல்பட்டு வருகின்றன. அந்த நாட்டின் ஒவ்வொரு அரசியல் பிரச்சினைகளைப் பற்றி மிகச் சிறிய தகவல்களை…

  13. அலாஸ்கா ராணுவத்தில் பணிபுரியும் ஒரு ராணுவ வீரர் ராணுவ ரகசியங்களை ரஷ்ய உளவாளிக்கு பணத்திற்காக விற்றபோது பிடிபட்டார். அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. ராணுவ வீரரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 16 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இவரைப் போன்ற புல்லுருவிகளை நாட்டில் நடமாடவிடுவதே ஆபத்தான செயல் என்று நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார். ராணுவ ரகசியங்களை விற்ற வீரரின் பெயர் Millay என்பதாகும். இவருக்கு 24 வயதே ஆகின்றது. இவ்வளவு சிறிய வயதில் ஒரு மிகப்பெரிய மோசடியில் சிக்கி 16 ஆண்டுகள் ஜெயில் தண்டனையை பெற்றுள்ளார். மேலும் இவருக்கும் இவருடைய குடும்பத்தினர்களுக்கும் வழங்கிவந்த அனைத்து சலுகைகளும் தி…

    • 0 replies
    • 325 views
  14. பாரதிய ஜனதாக் கட்சியில் மோடியை போன்று அத்வானிக்கும் பிரதமர் வேட்பாளருக்கான ஆதரவு பெருகி வருகின்ற வேளையில், தானும் பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவரே என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு கட்சியின் உயர்மட்டக் குழுவில் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டது. இருப்பினும் பா.ஜ.கட்சிக்கு தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதாத் தளம் கட்சிக்கு மோடியை பிரதமராக முன் நிறுத்துவதற்கு பிடிக்கவில்லை . இதனால் இந்தக் கட்சி இரண்டு நாள் மாநாட்டைக் கூட்டி மோடி பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டால், கூட்டணியில் இருந்து விலகி விடுவது …

  15. ஈராக்கின் பல பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த 32 தாக்குதல்கள் மூலமான தொடர் குண்டு வெடிப்பில் 31 பொது மக்கள் கொல்லப் பட்டும் 200 இற்கும் அதிகமானோர்கள் காயமடைந்தும் இருப்பதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு ஈராக்கின் பக்தாத், கிர்குக், பக்குபா, டுஷ்குர்மாட்டோ மற்றும் ஹில்லா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதில் 2 குண்டு வெடிப்புக்கள் பக்தாத் சர்வதேச விமான நிலையத்துக்கு அண்மையில் உள்ள சோதனைச் சாவடிகளில் நிகழ்ந்துள்ளது. இதில் அதிகமான தாக்குதல்கள் பக்தாத்தின் ஷைட்டி முஸ்லிம்களின் பிரதேசங்களைக் குறி வைத்து மேற்கொள்ளப் பட்டுள்ளன. சுன்னி முஸ்லிம் முற்போக்கு வாதிகளின் உதவியுடன் ஈராக்கில் அல் கொய்தா இயக்கம் சமீப மாதங்களாக அங்கு நிகழ்ந்து வரும…

  16. கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை: டெசோ அமைப்பு அறிவிப்பு By General 2013-04-16 09:41:31 இந்தியா - இலங்கைக்கிடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யவும், அந்தத் தீவு இந்தியாவின் ஒரு பகுதி எனப் பிரகடனப்படுத்தவும் உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாக கருணாநிதி தலைமையிலான டெசோ அமைப்பு அறிவித்துள்ளது. டெசோ அமைப்பின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் மற்றும் டெசோ உறுப்பினர்கள் கி வீரமணி, தொல் திருமாவளவன், சுப வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் வேறு…

    • 1 reply
    • 342 views
  17. முன் எப்போதும் இல்லாத அளவில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் குறைந்துள்ளது. திங்கள்கிழமை மட்டும் மிக அதிகபட்சமாக ரூ.984 குறைந்து ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 72-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்தே சரிந்து வருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ. 2 ஆயிரத்துக்கும் மேல் குறைந்துள்ளது. காரணம் என்ன? சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் இந்திய வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளில் நிலவி வந்த பொருளாதார ஏற்ற இறக்கங்கள் கடந்த வாரத்தில் இந்தியச் சந்தையில் எதிரொ…

    • 0 replies
    • 1.6k views
  18. வெனிசுலா அதிபர் ஹுகோ சாவேஸ் கடந்த மாதம் புற்று நோயால் மரணமடைந்தார். இதன் காரணமாக அந்நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சாவேசின் சோசலிச கட்சியைச் சேர்ந்த நிகோலஸ் மதுரோ வெற்றிபெற்றுள்ளார். வெனிசுலாவில் அதிபராக இருந்த ஹுகோ சாவேஸ் (58) புற்றுநோயால் மரணம் அடைந்தார். அதை தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. நேற்று ஓட்டு பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதில், நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹென்ரிகியூ காப்ரிலேசை விட 3 லட்சம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றார். இத்தகவலை தேசிய தேர்தல் கவுன்சில் தலைவர் திபிசே லுசேனா அறிவித்தார். சாவேஸ் அதிபராக இருந்தபோதே நிகோலஸ் மதுரோ துணை அதிபராக இருந்தார். அவர் சிகிச்சைக்காக கியூபா சென்று இருந்…

  19. மசாசு செட்டில் இன்று மாநில விடுமுறை தினம். நாட்டுப்பற்றாளர் தினம்.( Patriots’ Day’) . அதை கொண்டாட போஸ்டனான அவர்களின் தலை நகரில் இன்று நடந்த ஓட்ட போட்டி முடிவிடத்தில் குண்டு வைக்கப்பட்டிருக்கிறது. மூன்று குண்டுகள். 18 பேர் காயம். 2 மரணம் என ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. ஓட்டவீரர்களின் முடிவிடத்தில் இருந்த குப்பை வாளிகளில் இரண்டு குண்டுகள் போடப்பட்டிருந்திருக்கு. ஒன்று அவர்களின் பிரபல வாசிக சாலை(JFK Library) ஒன்றில் வெடித்திருக்கு. பொஸ்டன் பொலிஸ் மேலதிக குண்டுகளை கண்டு பிடித்து அழித்ததாகவும் கூறுகிறார்கள். பொலிஸ் இது பயங்கரவாதமா இல்லையா எனக கண்டுபிடிக்க முயல்கிறது. ஆனால் நியூயோர்க் மாநகர பொலிஸ் தான் பாதுகாப்பை அதிகரித்துவிட்டதாக கூறுகிறது. http://news.blogs.cnn…

    • 7 replies
    • 768 views
  20. பாகிஸ்தானின் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கை ஒருவர் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.கராச்சி தொகுதியில் போட்டியிட, பிந்தியா ராணா என்பவர் தாக்கல் செய்த வேட்பு மனுவை, தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது குறித்துப் பேசிய பிந்தியா ராணா, பாகிஸ்தான் அரசியல் பற்றி நான் இதுவரை கவலைப்பட்டதில்லை. ஆனால், தேர்தலில் மாபியா, மிகப்பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பணக்காரர்கள் மட்டும் போட்டியிடும் போது பொது மக்களும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று கருதியே இந்த முடிவு எடுத்துள்ளேன். பாகிஸ்தானில் திருநங்கைகள் அனுபவிக்கும் கஷ்டங்களை எடுத்துரைப்பேன் என்று கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=80526&category=WorldNews&language=tami…

  21. உதவிபெறும் நாடுகளின் இறைமைக்கு குந்தகம் விளைவிப்பதில்லை – ரஞ்சன் மத்தாய்! — 15/04/2013 at 8:02 pm| வெளிநாடுகளுக்கு உதவியளிக்கும் போது நிபந்தனைகளை விதிப்பதில்லையென அறிவித்துள்ள இந்தியா உதவிபெறும் நாடுகளின் இறைமைக்கு குந்தகம் விளைவிப்பதில்லை எனவும் தனது உதவிகளை கேட்கும் நாடுகளுக்கு வழங்குவதாகவும் கூறியுள்ளது. இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கும் போது எவ்விதமான நிபந்தனைகளும் விதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.‘எமது ஒத்துழைப்பு உதவிக்கான கேள்வியின் அடிப்படையிலேயே அமையும். அது பங்காளி நாடுகளின் முன்னுரிமை விருப்புகளுக்கு ஏற்பவே இருக்கும். நாம் உதவிகளை நிபந்தனைகளோடு இணைப்பதில்லை. நாம் அவற்றுக்காக கொள்கைகளை வகுக்கப்பபோவதுமில்லை நாம் இந்த நாடுகளின் இறைமைக்கு சவாலாக…

  22. வட கொரியாவிடம் அணு ஆயுதங்கள் ஏதுமில்லை என்று அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகை செயலாளர் ஜே கர்னே இதுகுறித்து கூறிய போது, வட கொரியாவின் அசைவுகளை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதற்கேற்ப, எங்கள் தாய்நாட்டையும், நட்பு நாடுகளையும் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.வட கொரியாவின் அணுதிட்ட செயலாக்கத்தையும் மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறோம்.எல்லாவற்றிற்கும் மேலாக வட கொரியா இதுவரை தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை இதுவரை சோதித்துள்ளதாக எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார். ஜே கர்னியின் பேட்டியின்படி பார்க்கப் போனால் வட கொரியாவிடம் அணு ஆயுதங்கள் ஏதுமில்லை என்று அமெரிக்கா கருதுவதாகவே தோன்றுகிறது. http://www.seithy.…

  23. நேதாஜி இந்தியா முழுமைக்கும் சொந்தமானவர். எனவே, அவரைப் பற்றிய ரகசியங்களை பிரதமர் அலுவலகத்தில் இருந்து பெற்றுத்தர உதவிட வேண்டும். முகர்ஜி கமிஷன் அறிக்கையை நிராகரித்த மத்திய அரசு, அவரது மரணம் தொடர்பான மர்மத்தை தெளிவுப்படுத்த வேண்டும்’ என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் குடும்பத்தினர் குஜராத் முதல்வர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர். இந்திய தேசிய ராணுவ பட்டாளத்தை உருவாக்கி, இந்திய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தி, வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் இருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்ற சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட ஜெர்மணி படைகளுடன…

  24. வடகொரியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்பதற்காக ஜப்பான் தலைநகர் டோக்கியோ முழுவதும் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் வடகொரியாவை கடுமையாக தாக்கவும் ஜப்பான் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாங்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டால், முதலாவதாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தாக்கி அழிப்போம் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. அமெரிக்க ராணுவத்திற்கு ஜப்பான் இடமளித்துள்ளதால் கோபமடைந்து இருக்கும் வடகொரியா தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் அச்சத்தில் ஜப்பானிய அதிகாரிகள் உள்ளனர். பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென் கொரியா விடுத்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது.பதற்றத்தைத் தணிப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடகொரியாவுக்கு தென் கொரியா க…

  25. [url=http://imageshack.us/photo/my-images/13/50122860.jpg/] [url=http://imageshack.us/photo/my-images/442/ghcgho.jpg/] ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி அர்சத்மேதா.................1,35,800 கோடி லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி ராஜீவ் காந்தி..................19,800 கோடி கருணாநிதி....................35,000 கோடி சிதம்பரம்.......................32,000 கோடி சரத் பவார்.....................28,000 கோடி கலாநிதி மாறன்...............15,000 கோடி HD குமாரசாமி................14,500 கோடி JM சிந்தியா......................9,000 கோடி கேடன் பிரகாஷ்..................8,200 கோடி A ராஜா...........................7,800 கோடி சுரேஷ் கல்மாடி...............…

    • 4 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.