உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26887 topics in this forum
-
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை அடுத்து பரிஸில் அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்ததையடுத்து பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே அமைச்சரவை கூட்டத்தைகூட்டி ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்ய உத்தரவு பிறப்பித்தார் அதிபர் ஹோலாண்டே. சர்வதேச எல்லைகளை மூடவும் உத்தரவிட்டார். இந்நிலையில், கால்பந்தாட்ட போட்டியை பார்வையிடுவதற்காக சென்றிருந்த பிரான்ஸ் அதிபர் ஹோலாண்டை இலக்குவைத்து இந்த தற்கொலைக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளன. இந்த சம்பவங்களை உலக நாட்டுத்தலைவர்கள் கண்டித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, மனிதாபி…
-
- 0 replies
- 643 views
-
-
பரிஸில் பாரிய வெடிப்பு பிரான்ஸின் தலைநகர் பரிஸில் சற்று முன்னர் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. எராளமாக எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக பரிஸ் நகரம் புகைமண்டலத்தால் சூழ்ந்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 12.30 மணியளவில் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. பரிஸ் நகரத்துக்கு செல்லும் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவே இந்த வெடிப்புக்கு ஆரம்ப காரணம் …
-
- 2 replies
- 1.3k views
-
-
பரிஸ் - பெய்ரூட்: தேர்ந்தெடுக்கப்பட்ட கோபமா? -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அந்தத் தாக்குதல் தொடர்பான செய்திகள் பரவியதோடு, மக்களின் அனுதாபங்களும் குவிந்திருந்தன. ஆனால், அவற்றைத் தவிர, 'ஏன் நீங்கள் லெபனானைப் பற்றிக் கதைக்கிறீர்களில்லை?' என்ற கேள்வியும் அதிகமாகவே எழுப்பப்பட்டிருந்தது. பரிஸ் மக்களின் உயிர் மாத்திரம் தான் பெறுமதியானதா, லெபனான் மக்களின் உயிர்கள் ஏன் பெறுமதியில்லை போன்று செயற்படுகிறீர்களா எனக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருந்தன. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நவம்பர் 12ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தாக்குதலில் குறைந்தது 43 பேர் க…
-
- 0 replies
- 493 views
-
-
பரிஸ் சார்சலில் வெடிமருந்து வாகனம்! தப்பியோடியவர்களை தேடி வேட்டை!! தமிழ்மக்களும் அதிகமாக வசிக்கும் பரிஸ் சார்சல் பகுதியில் வெடிமருந்து வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சார்சலில் உள்ள வணிக அங்காடி தொகுதி ஒன்றின் வாகனத்தரிப்பிடத்தில் இந்த வாகனம் கண்டுபிடிக்கபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலையில் வீதிச்சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் சந்தேகத்துக்கு இடமான ரெனோ லகுனா ரகத்தை சேர்ந்த வானம் ஒன்றை எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வைத்து சோதனையிட முனைந்தனர். ஆயினும் அந்தவாகனம் அவர்களிடமிருந்து தப்பித்து வேகமாக சார்சல் பகுதியை நோக்கி சென்றுவிட்டது. அந்த வாகனத்தில் சாரதியுடன் வேறு ஒரு நபர…
-
- 0 replies
- 313 views
-
-
பரிஸ் தாக்குதலாளியாக்கப்பட்ட மொரோக்கோவின் அப்பாவிப் பெண் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களோடு சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் பெண்ணொருவர், பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது மரணமடைந்திருந்தார். அங்கு உயிரிழந்தவர் எனக் கருதப்பட்டு, சில ஊடகங்களால் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் காணப்படுபவர், உயிரிழந்தவர் அல்லர் எனத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் பெயர் ஹஸ்னா அய்ட் பௌலசென் என இனங்காணப்பட்டார். தற்கொலை அங்கியை வெடிக்க வைத்தே அவர் உயிரிழந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும், ஆணொருவரே அதை வெடிக்க வைத்ததாகப் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. அவர் தொடர்பில் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் சரியென்ற போத…
-
- 0 replies
- 673 views
-
-
கனடா- பிரான்ஸ் நாட்டு கொடி ரொறொன்ரோ நகரசபைக்கு வெளியே வெள்ளிக் கிழமை பறக்க விடப்பட்டது. பிரான்ஸ் மக்களுடனான ஒருமைப்பாடு மற்றும் பரிஸ் பத்திரிகை நிறுவனத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொலையுண்ட 12-பேர்களின் நினைவாகவும் இக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. ரொறொன்ரோ மக்கள் பேச்சு சுதந்திரம் மீதான தங்கள் நம்பிக்கை மற்றும் உலகம் பூராகவும் அதற்காக போராடுபவர்களிற்கு ஆதரவாகவும் உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருக்க வேண்டுமென்று ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி கூறியுள்ளார். பிரதம மந்திரி Stephen Harper சார்ளி ஹெப்டு தாக்குதல் சம்பந்தமாக வியாழக்கிழமை பேசுகையில் இந்த பத்திரிகை தாக்குதல் ஒரு ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் என தெரிவித்திருந்தார். பரிசிலுள்ள கனடிய தூதுவராலயம் தனது கொடியை அ…
-
- 0 replies
- 223 views
-
-
பரிஸ் தாக்குதலை திட்டமிட்ட 15 வயதுச் சிறுவன் கைது உடனடியான வன்முறை நடவடிக்கையை திட்டமிட்டதாக சந்தேகிக்கப்பட்ட 15 வயதுச் சிறுவன், பிரான்ஸ் தலைநகர் பரிஸில் கைது செய்யப்பட்டதாக நீதி தகவல் மூலங்கள் இரண்டு தெரிவித்துள்ளன. இது, கடந்த ஒரு வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவுடன் தொடர்புடைய இரண்டாவது தாக்குதல் திட்டமாகும். எரிவாயு உருளைகள் மற்றும் டீசல் கொள்கலன்களுடன் நோற்றே டாமே கதிட்றல் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (04) கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் வழிகாட்டலில் பரிஸ் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதல் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததுடன், பெண்கள் நா…
-
- 0 replies
- 423 views
-
-
பரிஸ் தாக்குதல் சந்தேகநபர் துருக்கியில் கைது தெற்கு துருக்கிய நகரான அன்டல்யாவில் வைத்து, பரிஸ் தாக்குதல்களில் அங்கம் வகித்ததாகச் சந்தேகிக்கப்படும் மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த பெல்ஜிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், அரச வழக்கறிஞர் அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கைது பற்றிய ஏனைய விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டால் ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வது தாமதமாகும் என்பதால் ஏனையை விபரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. - See more at: http://www.tamilmirror.lk/159656/%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4…
-
- 0 replies
- 491 views
-
-
பரிஸ் தாக்குதல்கள்; மூன்றாவது சடலமும் மீட்கப்பட்டது கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பரிஸ் தாக்குதல்களையடுத்து பரிஸ் புறநகரான சென்ற் டெனிஸில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டை இடம்பெற்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து மூன்றாவது சடலமும் அரச வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை இடம்பெற்ற தாக்குதலையடுத்து, நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டபோதும், அவரது அடையாளம் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. எனினும் மேற்படி நடவடிக்கையின்போது தன்னை வெடிக்க வைத்துக் கொண்ட பெண்ணான ஹஸ்னா எய்த்பௌலாசென்னின் …
-
- 0 replies
- 760 views
-
-
பரிஸ் நகர மக்களிற்கு இலவசமாக 22 மில்லியன் முகக்கவசங்களை வழங்க பரிஸ் நகரசபை முடிவு! பிரான்ஸில் உள்ள பரிஸ் நகர மக்களிற்கு, மேலதிகமாக 22 மில்லியன் முகக்கவசங்களை இலவசமாக கொடுக்க பரிஸ் நகர சபை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ கூறுகையில், ‘இந்த முகக்கவசங்கள் மருத்துவர்களுக்கும், பராமரிப்பாளர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட உள்ளன. இது முக்கியமான பாதுகாப்பு கருவி. அவசியம் தேவையான ஒன்று. பரிஸ் மக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்’ என கூறினார். இதுவரை பரிஸ் நகர மருத்துவமனைகளுக்கு ஆறு மில்லியனுக்கும் மேலான முகக் கவசங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலதிகமாக, 22 மில்லியன் முகக்கவசங்கள் வாங்க …
-
- 0 replies
- 352 views
-
-
பரிஸ் நகரம் 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாயை இழந்துள்ளது! கடந்த 2020ஆம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பரிஸ், 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இல் து பிரான்சுக்கான பிராந்திய சுற்றுலாத்துறை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகையே முடக்கிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால், பரிஸூக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதனால், விமான போக்குவரத்துக்கள், தங்குமிடங்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதற்கமைய பரிஸ் 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 33.1 மில்லியன் பயணிகள் வரத்த…
-
- 0 replies
- 388 views
-
-
பரிஸ் வீதியில் கத்திக்குத்து - இரு பெண்கள் பலி பிரான்ஸ் தலைநகர் பரிசின் புறநகர் பகுதியான டிரப்பசில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரு பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதன் பின்னா கத்திக்குத்தில் ஈடுபட்டவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலின் பின்னர் அந்த நபர் வீடொன்றிற்குள் மறைந்திருந்தார் பின்னர் வீட்டிலிருந்து வெளியே வந்து பொலிஸாரை அச்சுறுத்தினார் அவ்வேளை அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலிற்கான காரணத்தை இதுவரை வெளியிடாத அதிகாரிகள் கொல்லப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இது குடும்ப தகராறு என கருதலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை இ…
-
- 0 replies
- 605 views
-
-
சனநாயகத்தின் கோமாளித்தனங்களில் இதுவும் ஒன்று. கட்சி விட்டு கட்சி தாவும் தொற்று நோய். காசிற்கு பதவிற்கு சுகபோகத்திற்கு மனிதர்களை இலகுவில் விலைக்கு வாங்கும் தன்மை சனநாயகத்தின் சாபக்கேடுகளில் ஒன்று. போராளி அமைப்புக்களைப் பலவீனப்படுத்தவும் அதிகார வர்க்கங்கள் இதே வழிமுறைகளைக் கையாள்வதுண்டு. அப்போதெல்லாம் அதிகார வர்க்கங்கள் அதற்கு வழங்கும் முக்கியத்துவமும் அடைமொழிகளும் மக்கள் மத்தியில் பாரிய உளவியல் தாக்கங்களைச் செய்யவல்லனவாக அமைந்து விடும். ஆனால்.. இங்கே ஒரு தாவல்... சகோதர யுத்தம்.. காதும் காதும் வைத்தாற்போல் நடந்து முடிந்துள்ளது. நாளை பருதி இளம்வழுதி லொறி மோதி இறந்தால் கூட அது.. விபத்தாக இருக்கும். சகோதர யுத்தத்தின் விளைவாக இருக்காது. ஈழத்தமிழர்கள் மீது சகோதர யுத்…
-
- 4 replies
- 1.4k views
-
-
பருந்தின் உயிரை காப்பற்றிய நபர்: - உயிர் காத்தவனை தினமும் பார்க்க வரும் பருந்து [Saturday 2017-04-29 07:00] பருந்தின் உயிரை ஒருவர் காப்பற்றியதையடுத்து அது தினமும் அந்த நபரின் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் பொள்ளாச்சி அருகில் இருக்கும் கிராமத்தில் வசித்து வருபவர் அனில்குமார். கள் இறக்கும் தொழிலாளரான அனில்குமார் 5 மாதங்களுக்கு முன்னர் கள் பானையை இறக்கி கொண்டிருக்கும் போது ஒரு பருந்து குஞ்சு சிறகு ஒடிந்து காலில் அடிபட்ட நிலையில் பறக்க முடியாமல்திணறியிருக்கிறது அந்த பருந்தை காப்பாற்றிய அனில்குமார் அதை தன் வீட்டுக்கு அழைத்து சென்று காயங்களை குணமாக்கி 3 மாதங்களுக்கு தன் வீட்டிலே அதை வைத்துள்ளார…
-
- 1 reply
- 440 views
-
-
பருவநிலை ஒப்பந்தம்: டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு - சீனாவுக்கான அமெரிக்க தூதர் ராஜினாமா பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது என்ற அதிபர் டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீனாவுக்கான அமெரிக்க தூதர் ராஜினாமா செய்துள்ளார். வாஷிங்டன்: பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாக ஒப்புதல் அளித்த வண்ணம் இருந்தன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒப்புதல் அளித்திருந்தார். பாரீஸ் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெர…
-
- 0 replies
- 226 views
-
-
கடல் மட்டம் அதிகரிப்பால் வரும் 2050-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐ.நா. சுற்றுச்சூழல் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பருவநிலை மாறுபாடு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சூழலில் ஐ.நா.வின் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கென்யா தலைநகர் நைரோபியில் ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாடு அடுத்த வாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு "சர்வதேச பருவநிலை மாறுபாடு' என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை ஐ.நா. வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பருவநிலை மாறுபாட்டால் உலக நாடுகள் அனைத்தும் எதிர்காலத்தில் பேரிடர்களைச் சந்திக்கும் என்றபோதிலும், பசிபிக், தெற்கு மற்றும் தென்கிழக்க…
-
- 0 replies
- 428 views
-
-
பருவநிலை மாற்ற பிரச்சினை விவகாரம்: அமெரிக்காவும் சீனாவும் இணைந்து செயற்படுவதாக அறிவிப்பு! எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு பருவநிலை மாற்ற பிரச்சினை தொடர்பான தீர்வு நடவடிக்கைகளில், சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. க்ளாஸ்கோவில் நடைபெற்று வரும் COP26 பருவநிலை மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமீப காலமாக சீனா மற்றும் அமெரிக்கா இடையே பதற்ற நிலை நிலவி வருகின்ற நிலையில், இந்த அரிய உறுதிப்பாட்டு கூட்டு அறிவிப்பினை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. இதில், பரிஸ் ஒப்பந்தத்தில் 1.5 செல்சியஸ் வெப்பநிலை என்ற இலக்கை நோக்கி இருநாடும் இணைந்து செயற்படும் என்று வழங்கிய உறுதிப்பாட்டை மீண்டும் நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளன. அதேபோன்று …
-
- 0 replies
- 217 views
-
-
பல இடங்களில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துவருகிறது. புவியில் ஏற்பட்டுவரும் பருவநிலை மாற்றங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆதாரங்கள் காட்டுகின்றன என்று ஐநா மன்றம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்காமல்விட்டால், பருவநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்க நேரிடும் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு, வறட்சி, உணவுத் தட்டுப்பாடு, மனித குலத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது போன்றவை வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடிய ஆபத்து அதிகமாக உள்ளது என பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநாவின் சர்வதேச குழு கணித்துள்ளது. ஆனால் ஏற்படக்கூடிய மாற்றங்களில் பலவற்றுக்கு நம்மால் ஈடுகொடுக்க முட…
-
- 0 replies
- 459 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,நவீன் சிங் கட்கா பதவி,சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி உலக சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் விஞ்ஞானிகள் என்றால் அறிவியல் ஆய்வுக் கூடங்களில் அமர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டிருப்பார்கள், தங்களது ஆய்வுகளை அறிவியல் இதழ்களில் எழுதிக் கொண்டிருப்பார்கள் என்ற புரிதல் தான் உலக அளவில் வெகுஜென மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. தங்களை பற்றிய இந்த வரையறைக்கு மாறாக, தற்போது உலகெங்கிலும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர் அவர்கள். சாலை மறியல், அரசு அலுவலகங்களுக்கு முன் மனிதச் சங்கிலி என விஞ்ஞானிகளின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பருவநிலை மா…
-
- 0 replies
- 364 views
- 1 follower
-
-
பருவநிலை மாற்றம்: உலகின் வயிற்றில் புளியை கரைக்க போகும் ஐபிசிசி அறிக்கை: விஞ்ஞானிகள் எழுத தொடங்கினர் மேட் மெக்கிராத் சுற்றுச்சூழல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,JUSTIN SULLIVAN படக்குறிப்பு, வரலாறு காணாத வகையில் வற்றிய கலிபோர்னியா ஏரி ஒன்று. பேய் மழையும் பெருவெள்ளமும் ஒரு பக்கம் பல நாடுகளை உருக்குலைக்கின்றன. மறுபுறம், காட்டுத் தீயும், வெப்பமும் பல நாடுகளை கதிகலங்கச் செய்கின்றன. இயற்கை பேரிடர்கள் பேரபாயமாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இவற்றால் புவி என்ன மாதிரியான ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது? தீர்வு என்ன என…
-
- 0 replies
- 685 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை 2020க்குள் செயல்படுத்த போலாந்தில் கூடியுள்ள பேச்சுவார்த்தையாளர்கள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கான இறுதி உடன்படிக்கையை எட்டியுள்ளனர். முன்னர், கரியமில வெளியேற்றத்தைச் சார்ந்துள்ள பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்பது குறித்த அச்சுறுத்தல்கள் காரணமாக கூட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தில் இந்த கூட்டம் மேற்கொண்டு தொடருமா என்றிருந்த நிலையில், இறுதி உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட புதிய விதிகள், உலக …
-
- 0 replies
- 650 views
-
-
பருவநிலை மாற்றம்: வெள்ளத்தையும், வெப்பத்தின் தீவிரத்தையும் முன் கணிக்கத் தவறிய அறிவியல் ரோஜர் ஹர்ராபின் பிபிசி சுற்றுச்சூழல் பகுப்பாய்வாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஐரோப்பிய வெள்ளம். ஜெர்மனி வெள்ளப்பெருக்கையும், வட அமெரிக்காவில் வீசிய வெப்ப அலையையும் கணிக்கத் தவறிவிட்டதாக முன்னணி சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டனர். ஆனால், புவி வெப்பநிலை வேகமாக அதிகரிப்பது நாசம் விளைவிக்கும் வெப்ப அலைகளையும், பெரு வெள்ளத்தையும் கொண்டுவரும் என்று பல பத்தாண்டுகளாக சரியாகவே எச்சரித்து வந்தனர். ஆனால், அது போன்ற வா…
-
- 0 replies
- 372 views
- 1 follower
-
-
பருவநிலைமாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் வேலைகளை இழக்கச்செய்யும் நியாயமற்ற ஒப்பந்தம் என்று கூறி, அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஒரு புதிய உடன்படிக்கையை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தை நடத்த அல்லது மேம்படுத்தப்பட்ட விதிமுறைகள் இருந்தால் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீண்டும் ஒப்புக்கொள்ளும் என்று வெள்ளை மாளிகளியில் பேசியபோது டிரம்ப் தெரிவித்தார். '' அர்த்தமுள்ள கடமைகளை உலகின் முன்னணி மாசுபாட்டாளர்கள் மீது சுமத்த முடியாதுபோது…
-
- 4 replies
- 751 views
-
-
பர்கினோ பாசோவில் அல்காய்தா தாக்குதலுக்கு 20 பேர் பலி (அதிர்ச்சி வீடியோ) பர்கினா பாசோ நாட்டில், நட்சத்திர விடுதி ஒன்றில் அல்-காய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு 20 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். ஆப்ரிக்க நாடான இங்கு, குவாகோடாங் என்ற இடத்தில் ஸ்ப்லெண்டிட் என்ற விடுதி உள்ளது. இங்கு அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம். இதனை குறிவைத்தே அல்காய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது விடுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தீவிரவாதிகள் பிணையாக பிடித்துவைத்திந்த 30 சுற்றுலாப்பயணிகளையும் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். …
-
- 0 replies
- 369 views
-
-
பர்தாவை அகற்ற மறுத்தால் சிறை.. ஆஸ்திரேலியா புதிய சட்டம் போலீசார் சோதனையிட வந்தால், பர்தாவை அகற்றி முகத்தைக் காட்ட வேண்டும். அதைச் செய்ய மறுத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் அடுத்த வாரம் புதிய சட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த சட்டத்தின்படி போலீஸ் சோதனையின்போது வாகனம் ஓட்டுபவர்கள் பர்தா, ஹெல்மட்கள், முகமூடிகள், முகத்தை மூடி இருக்கும் திரை சீலைகள் போன்றவற்றை அகற்ற வேண்டும். இவை தவிர போலீசாரின் சோதனையின் போது தேவைப்பட்டால் உடலில் அணிந்திருக்கும் ஆபரணங்களையும் கூட கழற்ற வேண்டும். சோதனையின்போது, அவற்றை அகற்ற மறுத்தால் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்படும். சோதனையின…
-
- 0 replies
- 501 views
-