உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27029 topics in this forum
-
கனடிய பெண் போட்டோகிராபர் ஒருவர் ஈரானிய சிறை அதிகாரிகளால் கொல்லப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. கனடிய பெண் போட்டோகிராபர் Zahra Kazemi, கடந்த 2003 ஆம் ஆண்டு ஈரானில் அரசுக்கு எதிராக நடந்த ஒரு போராட்டத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை கைது செய்த ஈரானிய போலீஸார் சிறையில் அடைத்து துன்புறுத்தி கொலை செய்தனர். இதுகுறித்து அதிர்ச்சியடைந்த Zahra Kazemi மகன் ஈரான் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். வழக்கை திறமையாக நடத்திய ஈரான் அரசு தரப்பு வழக்கறிஞர்கள், Zahra Kazemi செய்தது சட்டவிரோதமே என்று நிரூபித்தனர். எனவே தீர்ப்பும் ஈரான் அரசுக்கு சாதகமாகவே வந்தது. ஆனாலும் தனக்கு நியாயம…
-
- 0 replies
- 447 views
-
-
டொரண்டோவில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் 248 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப Toronto District School Board trustees பட்ஜெட்டில் $50 மில்லியன் மிச்சபப்டுத்தப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் டொரண்டோவில் கிட்டத்தட்ட 50 பள்ளிகள் மூடப்படும். கடந்த புதன்கிழமை நடந்த மாரத்தான் கூட்டத்தில் இந்த முடிவை TDSB அறிவித்துள்ளதை அடுத்து வேலை இழந்தவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதில் 115 முழுநேர ஆசிரியர்களும், 133 செகண்டரி பள்ளி ஆசிரியர்களும், மேலும் நூலக அலுவலர்கள், பிரின்சிபால் போன்றோர்களும் அடங்குவர். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளமும் அடுத்த மூன்று மாதங்களில் பிரித்து கொடுக்கப்படும் என்றும் இதன் மூலம் $25 மில்லியன் மிச்சப்படும் என்றும் த…
-
- 0 replies
- 364 views
-
-
இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மதிமுக எம்.பி., கணேச மூர்த்தி, தமிழ் இனத்தை அழிக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு தொடர்ந்து வருகிறது; ஐ.நா., வே தவறு செய்வதாக சொன்னால் யாரிடம் சென்று முறையிடுவது; ஐ.நா.,வில் அமெரிக்காவுக்கு பதிலாக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்; இலங்கையில் பொது வாக்கெடுப்பு கோர இந்தியாவுக்கு தார்மீக உரிமை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13182:kanesamoorthy&catid=36:tamilnadu&Itemid=102
-
- 2 replies
- 374 views
-
-
காணாமல் போன, ரஷ்ய படை வீரர், 33 ஆண்டுகளுக்கு பின், ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டார்.கடந்த, 1979ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் நவீன சோஷலிச அரசை உருவாக்கும் நோக்கத்தில், அங்குள்ள முஜாகிதீன் அமைப்பினருடன் போரிட, ரஷ்யா தனது செஞ்சேனை படைகளை, அந்நாட்டுக்கு அனுப்பியது.தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடந்த போரில், ஆப்கனை சேர்ந்த, 10 லட்சம் பேரும், 15 ஆயிரம் ரஷ்ய வீரர்களும், கொல்லப்பட்டனர். மேலும், 200 ரஷ்ய வீரர்கள் காணாமல் போயினர். இவர்களில், 20 பேர், தாமதமாக நாடு திரும்பினர்.காணாமல் போனவர்களில், சிலர் இறந்து விட்டனர். எனினும், ஒரு சிலர் பற்றி, எந்த தகவலும் கிடைக்கவில்லை.இந்நிலையில், பாக்ரடின் காகிமோவ் என்ற ரஷ்ய வீரர், ஆப்கானிஸ்தானின், ஹெராத் மாகாணத்தில், வசித்து வருவதாக …
-
- 0 replies
- 573 views
-
-
தமிழர் படுகொலைக்கு இந்தியா உடந்தையாக இருந்தது மட்டுமல்லாமல் விடுதலைப் புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டி உள்ளார். லோக்சபாவில் இன்று நடைபெற்ற சிறீலங்கா தொடர்பான சிறப்பு விவாத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் நமது காலத்தில் நடந்த துயரம் கொடூரமானது. கனத்த இதயத்துடன் இந்த விவாதத்தில் பங்கேற்கிறேன். இலங்கையில் மிகப் பெரும் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மனித உரிமை மீறல்கள் நடந்தேறி வருகின்றன. இலங்கை இராணுவ பங்கர் ஒன்றில் 12வயது சிறுவன் பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற ஒன்றை கொறித்துக் கொண்டிருக்கும் அந்தக் காட்சியையும் அவன் சிறிது நேரத்தில் சுட்டுப் படுகொலை செய…
-
- 3 replies
- 418 views
-
-
மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு! மீனவர் படுகாயம்.[PHOTO ] இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு மீனவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2.03.2013 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் 06.03.2013 அன்று இரவு கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. நடுக்கடலில் மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதில் செண்பககுமார் என்ற மீனவர் காயம் அடைந்தார். வலது தோல்பட்டையில் காயம் அடைந்த அவர், நாகப்பட்டிணம் அரசு மரு…
-
- 0 replies
- 479 views
-
-
மாலியில் கிளர்ச்சியாளர்களுக்கும், மாலிராணுவம், பிரான்ஸ் கூட்டுப்படைக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டயில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். மாலியில், அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய மெக்ரூப் என்ற கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு கெதிராக போர் தொடுத்து வருகின்றனர். மாலி ராணுவத்திற்கு கடந்த ஜனவரி முதல்பிரான்ஸ் உதவிசெய்து வருகிறது. மாலியின் வடகிழக்கே கோவா நகரில் , கிளர்ச்சியாளர்களுக்கும், பிரான்ஸ், மாலிராணுவ கூட்டுப்படைக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் பிரான்ஸ் வீரர்கள் உள்பட 10 பேர் பலியானதாக பிரான்ஸ் ராணு செய்தி தொடர்பாளர் கூறினார். தொடர்ந்து அங்கு துப்பாக்கிச்சண்ட நடந்து வருகிறது. http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%A…
-
- 1 reply
- 536 views
-
-
டெல்லி: 42 வயதாகும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு திருமணம் செய்து கொள்ள இஷ்டம் இல்லையாம். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு 42 வயதாகிறது. ஆனால் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அவரது பிறந்தநாள் தோறும் திருமணம் குறித்து கட்சியினர் பேசி வருகின்றனர். இந்நிலையில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று ராகுல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மற்றும் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் திருமணம் செய்து கொண்டு, குழந்தைகள் பெற்றால் என்னுடைய பதவியை அவர்களுக்கு அளிப்பது பற்றி யோசிக்க வேண்டும் என்றார். வழக்கமாக அவரிடம் திருமணப் பேச்சு எடுத்தால் உரிய நேர…
-
- 3 replies
- 627 views
-
-
கனடாவின் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பழமையான கல்வெட்டுக்கள் திடீரென மாயமாக மறைந்து உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவின் விக்டோரியா பார்க் அவென்யூ பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கல்வெட்டுகள் அவ்வழியே போவோரை கவர்ந்து இருக்கும். இந்த இரண்டு கல்வெட்டுக்களும் கனடிய போர்வீரர்கள் ஒரு குழந்தையின் கைகளைப் பிடித்து நடந்து போவது போன்றும் பின்புறத்தில் கனடிய தேசிய கொடி பறந்து கொண்டிருப்பது போலவும் இருக்கும். இந்த கல்வெட்டுக்களை சிறிது நாட்களாக காணவில்லை. விசாரணையில் இவை இரண்டும் திருடப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த திருட்டு குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க வே…
-
- 1 reply
- 537 views
-
-
இலங்கையில் தமிழீழம் அமைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் உதவித்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் காங்கிரஸ் தரப்பு உறுப்பினர்கள் ராகுல் காந்தியை சந்தித்து இலங்கை தமிழர் விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்கள் பக்கமே இந்தியா இருக்கிறது. அவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம். எனினும் அந்த தீர்வு தனி ஈழமாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை புதுடில்லியில் நாளை நடைபெறவுள்ள தமிழீழு ஆதரவாளர் டெசோ மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பது தொடர்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும், அதன் பின்னர் இது குறித்த இறுதி தீர்மானத…
-
- 5 replies
- 2.3k views
-
-
முத்துக்குமார் உடலுக்கு எரியூட்டப்பட்ட ஜனவரி 31 ஆம் நாள், தமிழகத்தில் பொது வேலை நிறுத்தத்துக்கு, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமும், தமிழ் உணர்வாளர்களும் அறிவித்தபோது, இதில் ஈடுபட்டால் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று காவல்துறையின் மூலம் மிரட்டியும், தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக தலைமைச் செயலாளர் மூலம் கட்சித் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கடிதங்கள் அனுப்பியும், இந்திய அரசின் துரோகத்தை மூடி மறைக்க படாதபாடுபட்ட, அன்றைய முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, இப்போது, மார்ச் 12 இல் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளார் என்று சாடியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உலக வரலாற்றில் கொடூரமான மனிதப் பேரழிவுகளுள் …
-
- 2 replies
- 540 views
-
-
கனடாவில் பிற நாடுகளிலும் கிரெடிட் கார்டுகளில் மோசடி செய்யும் கும்பலின் கைவரிசையால் பல வாடிக்கையாளர்கள் தங்களது மில்லியன் டாலர் பணத்தை இழந்துள்ளனர். அவ்வாறு கிரெடிட் கார்டு கும்பலில் ஈடுபட்ட குழு ஒன்றை மலேசிய போலீஸார் வலைவீசி பிடித்துள்ளனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இவ்வளவு நாட்களும் கிரெடிட் கார்டு கொள்ளையடிக்கும் கும்பலுக்கு தலைவராக இருந்தவர் ஒரு கனடிய தமிழர் என்பது தான் அந்த அதிர்ச்சியளிக்கும் செய்தி. முகுந்தன் என்ற பெயருடைய கனடிய தமிழர் ஒருவரின் தலைமையில் தான் இந்த கும்பல் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகளில் கொள்ளையடித்துள்ளது. முதலில் ஒரு குழுவினரை தேர்ந்தெடுத்து சுற்றுலா பயணிகளின் விசாவி…
-
- 2 replies
- 934 views
-
-
கடந்த 2010 ஆம் ஆண்டு டொரண்டோவில் G20 மாநாடு நடந்த போது நடந்த வன்முறையில் ஈடுபட்டதாக இரண்டு அமெரிக்கர்கள் தற்போது டொரண்டோ போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் Metro Toronto Convention Centre என்ற இடத்தில் நடந்தது. அப்போது அந்த மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் வன்முறையில் இறங்கினர். வன்முறையில் ஈடுபட்ட இரண்டு அமெரிக்கர்கள் Toronto Police Museum அருகேயுள்ள கடைகளின் கண்ணாடிகள் மற்றும் வாகனங்கள் முதலியவற்றை அடித்து நொறுக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு அவர்களை டொரண்டோ போலீஸார் தேடி வந்தனர். Kevin Chianella மற்றும் Richard Dean Morano என்ற இருவரும் நேற்று டொரண்டோவில் கைது செய்யப்பட்டனர். அவர்களை Finch …
-
- 0 replies
- 304 views
-
-
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வழக்கறிஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு திடடத்தின்கீழ் வீடுகள் வழங்க வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தின்போது, வழக்கறிஞர்கள் அனுமதி பெறாமல் பேரணி செல்ல முயன்றனர். இதனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது போலீசார் மீது வழக்கறிஞர்கள் கற்களை வீசித் தாக்கினர். இதில் உதவி ஆணையாளர் காயம் அடைந்தார். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் பலர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13162:police-rajasthan&cat…
-
- 0 replies
- 406 views
-
-
''மார்ச் 1-ம் தேதி மு.க.ஸ்டாலினுக்கு மணி விழா. பிறந்த நாள் விழா என்றாலே, போஸ்டர்கள், கட்அவுட்டுகள், வாண வேடிக்கைகள், பிரியாணி விருந்துகள் என்று அமர்க்களப்படுத்துவார்கள். மணிவிழா என்றால் கேட்க வேண்டுமா? தூள் கிளப்பத் திட்டமிட்டனர். உஷாரான ஸ்டாலின், 'ஆடம்பரம் இல்லாமல் அடக்கமாய் கொண் டாடுங்கள்’ என்று அறிவித்தார். எனவே, பல இடங்களில் கொண்டாட்டங்கள் அமைதியாக நிகழ்ந்தன. 60-ம் கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் அடையாறு கேட் ஹோட்டலில் நடக்கின்றன என்று சொல்லி இருந்தேன். வெள்ளிக்கிழமை காலையில் அடையாறு கேட் ஹோட்டல் ஆனந்த கேட்டாக மாறியது. சொந்தங்கள் மட்டுமே பங்கேற்கும் விழாவாக இதை நடத்துவதற்கு ஸ்டாலின் திட்டமிட்டார். அதனால் சில வருத்தங்களும் ஏற்பட்டன!'' '' 'மணிவிழா மாலை மாற்றல், தாலிக…
-
- 0 replies
- 568 views
-
-
டெல்லிக்கு மீண்டும் ஒருமுறை ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கத் தயாராகி விட்டனர் வாசன் ஆதரவாளர்கள். இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து யுவராஜா நீக்கப்பட்டதே இந்தக் கோபத்துக்குக் காரணம். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளரான யுவராஜா மீதான நடவடிக்கை, வாசன் ஆதரவாளர்களை ஆத்திரம் அடைய வைத்துள்ளது. கடந்த 2-ம் தேதி, ஆதரவா ளர்களை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சந்தித்து, பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார் வாசன். அவரது வீட்டில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கட்சிக்காரர்கள் கூடுவது வழக்கம்தான். ஆனால், அன்று திரண்டு வந்திருந்தனர். 22 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், 4 முன்னாள் எம்.பி-க்கள், 20 மாவட்டத் தலைவர்கள் உட்பட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும் ஏராளமானோர் வாசன் வீ…
-
- 0 replies
- 708 views
-
-
உளவு பார்த்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சக ஊழியர் ஒருவர் ஜெய்ப்பூரில் நேற்று கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் போக்ரான் அருகே நடந்த விமானப்படை போர்ப் பயிற்சியை வேவு பார்த்து, பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.க்கு தகவல் அனுப்பியதாக சுமர் கான் என்பவர் கடந்த மாதம் 24ம் தேதி கைது செய்யப்பட்டார். இவரிடம் உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டினர் பிரிவில் பணியாற்றும் டி பிரிவு ஊழியர் சுரேந்திர குமார் என்பவர் சுமர் கானுடன் பல முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து சுரேந்திர குமாரை, டெல்லியிலிருந்து ஜெய்ப்பூர் வரவழைத்து உளவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உளவு வேலைக்கு அவர் உடந்தையாக …
-
- 0 replies
- 504 views
-
-
புதுடில்லி: ""பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறீர்களா என, பலரும் என்னிடம் கேட்கின்றனர். இது, தவறான கேள்வி. பிரதமர் பதவி மீது, எனக்கு விருப்பம் இல்லை. உடனடியாக திருமணம் செய்வதிலும், எனக்கு ஆர்வம் இல்லை. திருமணம் செய்தால், குழந்தைகள் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும்,'' என, காங்., துணை தலைவர் ராகுல், பரபரப்பு தகவலை தெரிவித்தார். லோக்சபா தேர்தலுக்கான, காங்., ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராகவும், கட்சியின் துணைத்தலைவராகவும், ராகுல், 42, சமீபத்தில் நியமிக்கப்பட்டார். "லோக்சபா தேர்தலில், காங்., பிரதமர் வேட்பாளர் ராகுல் தான்' என்றும், கூறி வந்தனர்.இந்நிலையில், காங்., எம்.பி.,க்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, ராகுல் கூறியதாவது: கட்சியின் அனைத்து விவகாரங்களையும், மேலிடம் தான் முடி…
-
- 3 replies
- 594 views
-
-
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீட் மீண்டும் கைது மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முஹம்மட் நஷீட் மீண்டும் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். மாiலைதீவில் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த அப்துல் கயிப்பை கடந்த 2008ஆம் ஆண்டு முஹம்மட் நஷீட் தோற்கடித்து ஜனாதிபதியாக பதவியேற்றார். பின்னர் உள்நாட்டு கிளர்ச்சியின்போது பதவியிழந்த அவர் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தார். இந்நிலையில், நஷீட் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக இந்திய தூதரகத்தில் கடந்த 13ஆம் திகதி தஞ்சம் அடைந்தார். இதனால் அவரை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. …
-
- 2 replies
- 544 views
-
-
ஜெனிவா: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் நடைமுறை சார்ந்ததாக இருக்குமேயன்றி, வலுக்கட்டாயமாக நிவாரணம் தேடும் தீர்மானமாக இருக்காது என கூறப்படுகிறது. மேலும், சர்வதேச சமுதாயத்திற்கு இலங்கை அளித்த உறுதிமொழிகளை அந்த நாடு நிறைவேற்றாததாலும், இலங்கையின் நடவடிக்கைகளில் சர்வதேச நாடுகள் தலையிட முடியாத அளவில் இந்த தீர்மானம் இருப்பதாலும், தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. Dinamalar
-
- 3 replies
- 662 views
-
-
டொரண்டோவில் முன்னாள் பாலியல் தொழில் புரிந்த பெண்கள் ஒன்றுசேர்ந்து நடத்தவிருக்கும் ஃபேஷன் ஷோ வருகிற மார்ச் 8 ஆம் தேதி நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 8ஆம் தேதியன்று உலக பெண்கள் தினம் கொண்டாட இருப்பதால் அந்த நாளில் ஃபேஷன் ஷோவை நடத்துவதை பெருமையாக கொள்வதாக அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். டொரண்டோவில் உள்ள கலாச்சார நிலையம் சார்பில் Regent’s Park என்ற இடத்தில் நடக்கவிருக்கும் இந்த பேஷன் ஷோவிற்கு பெருமளவில் நிதிகுவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வரும் பணத்தை சமூக சேவைகளுக்கு பயன்படுத்த அன்பளிப்பாக கொடுக்கவிருப்பதாக இதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். உடைகளே இல்லாமல் பாலியல் தொழில் புரிந்துவந்த பெண்கள் நடத்தும் உடை சம்பந்தமான ஃப…
-
- 1 reply
- 515 views
-
-
டெபிட் கார்டு மற்றும் கிரிடிட் கார்டு மூலம் செய்யப்படும் மோசடிகள் இந்த ஆண்டு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது என டொரண்டோவில் உள்ள Interac Association இன்று விடுத்த ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்த நடந்த டெபிட் கார்டு மோசடி தொகையில் இந்த ஆண்டுதான் மிகக்குறைவான அளவான $38.5 மில்லியன் அளவிற்கு மோசடிகள் நடந்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு அதிகபட்சமாக $142 மில்லியன் அளவிற்கு கனடாவில் டெபிட் கார்டுகள் நடந்ததே அதிகபட்சமாகும். கடந்த 2012 ஆம் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகளில் சிப் சிஸ்டம் பொருத்தப்பட்டதே இந்த மோசடியை கட்டுபடுத்தியதற்கான முக்கியமான காரணம் ஆகும். தற்போது உருவாக்கப்பட்டுள்ள மேக்னடிக் கார்டுகள் அனைத்திலும் சிப் சிஸ்டம…
-
- 2 replies
- 682 views
-
-
ஒண்டோரியோ மாகாணத்தின் பிரிமியர் Kathleen Wynne அவர்கள் $100 தொகையை அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்கு ஒண்டோரியோ பிரைய்ன் நிறுவனத்திற்கு ஒதுக்குவதாக இன்று அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்த பணத்தின் மூலம் நியுரோசயின்ஸ் ஆராய்ச்சி முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த ஆராய்ச்சி மையத்தில் மன ஆய்வு, பெருமூளை வாதம், மன இறுக்கம் மற்றும் வலிப்பு நோய்களுக்கான புதிய வகை மருந்துகளை கண்டுபிடிக்க இந்த தொகை செலவழிக்கப்படும் என ஆராய்ச்சி மைய செய்திக்குறிப்பு ஒன்று கூறியுள்ளது. ஒண்டோரியோ மாகாணத்தின் நிதிநிலைமை $12 பில்லியன் அளவிற்கு பற்றாக்குறை இருந்தாலும், இதுபோன்ற மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு செலவு செய்வது இன்றியமையாததாகும் என பிரிமியர் Kathleen Wynne இன்று …
-
- 0 replies
- 438 views
-
-
சென்னை: தமிழகத்தில் டெசோ அமைப்பின் சார்பில், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வலியுறுத்தி, வரும் 12ம் தேதி பொது வேலை நிறுத்தம் நடத்தப்படும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். Dinamalar
-
- 0 replies
- 423 views
-
-
பிரியங்கா காந்தி திடீர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா(41). இவருக்கு வயிற்றில் வலி ஏற்படவே, வலியால் துடித்துள்ளார். இதையடுத்து அவரை கங்காராம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் பித்தபையில் கல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று திங்கட்கிழமை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது பிரியங்கா நலமுடன் இருப்பதாக பிரியங்காவை நேரில் சென்று நலம் விசாரித்த சோனியா காந்தி, மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் த…
-
- 1 reply
- 599 views
-