Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஸ்ரீநகர் : ""அப்சல் குரு, தூக்கிலிடப்பட்டது, இயல்பாக நடந்ததா அல்லது அதற்கு பின்னணி உள்ளதா என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு, மத்திய அரசுக்கு உள்ளது,'' என, ஜம்மு - காஷ்மீர் முதல்வர், உமர் அப்துல்லா, கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீர் முதல்வரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும், தேசிய மாநாட்டு கட்சியின், தலைவர்களில் ஒருவருமான, உமர் அப்துல்லா கூறியதாவது: தூக்கிலிடப்பட்ட, அப்சல் குரு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர். எனவே, இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கவும், கேள்விகளை எழுப்பவும், எனக்கு உரிமை உள்ளது. மும்பை தாக்குதல் சம்பவ குற்றவாளி, அஜ்மல் கசாபை தூக்கிலிட்டபோதே, அடுத்ததாக, அப்சல் குருவுக்கும், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற சந்தேகம் எனக்கு இருந்த…

  2. உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகளை நாடாளுமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரக் கோரிய பொதுநல மனு தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறை, புலனாய்வுத்துறை போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளை நாடாளுமன்றம் மற்றும் இதர அரசியல் சாசன அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் எனக்கோரி பொதுநல வழக்குகளுக்கான மையம் சார்பில் கடந்த 2-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அனில் திவான் மற்றும் பிரசாந்த் பூஷண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அரசியல் காரணங்களுக்காக இந்த அமைப்புகள் தவறாக வழி நடத்தப்படுவதை…

    • 0 replies
    • 411 views
  3. ஒவ்வொரு வருடங்களையும் ஒவ்வொரு விலங்கினங்களைக் கொண்டு அழைக்கும் சீனர்கள் பிறக்கவுள்ள புத்தாண்டை பாம்பு வருடமாக அழைக்கின்றனர். சீனர்களின் நம்பிக்கைப்படி பாம்பு என்பது நெருப்பை குறிக்கிறதாம். ஆகையால் அதிக சக்தியை அளிக்கவுள்ளதாம். ஆனால் அதே நேரம் இதற்கு எதிர்மறையான பண்புகளையும் தர இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதைவிட பொருளாதார நிலையில் வளர்ச்சியும் மந்தமும் இருக்குமென கூறுகின்றனர். மேலும் ஆசிய கண்டத்தில் இயற்கை பேரழிவுகள், பாதிப்புக்கள் ஏற்படலாம் என பண்டைய சீனக் கலை நிபுணர்கள் கணித்துள்ளனர். எதுவாகிலும் சீனா, ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளில் சீனர்களுடன் ஏனைய மக்களும் பிறக்கப்போகும் புத்தாண்டை மகிழ்ச்சியாக உற்சாகத்துடன் வரவேற்க தயாராகிவருகின்றனர். http://www.4tam…

    • 5 replies
    • 501 views
  4. பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் டேவிட் கேமரூன், ஸ்காட்லாந்தை வலியுறுத்தி உள்ளார். பிரிட்டனில் ஸ்காட்லாந்தின் பங்கு குறித்த ஆய்வறிக்கையை பிரிட்டன் அரசு திங்கள்கிழமை வெளியிட உள்ளது. இந்நிலையில், கேமரூன் கூறுகையில், ""300 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்திருந்த நாம் பிரிந்தால் சர்வதேச அரங்கில் பிரிட்டனின் பலம் குறைந்து விடும். பிரிட்டன் இப்போது நன்றாக செயல்படுகிறது. இதை ஏன் உடைக்க வேண்டும்?'' என்றார். பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்ல ஸ்காட்லாந்து திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த ஆண்டு மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதே நேரம், கடந்த மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 23 சதவீத ஸ்காட்லாந்து மக்கள் மட…

    • 14 replies
    • 1.1k views
  5. சுதந்திரத் தமிழ் ஈழ விடியலை நோக்கி வீரத் தியாகி முருகதாசன் நினைவு நாளான பிப்ரவரி 12 ஆம் நாள் இலண்டன் மாநகரில் இருந்து மானமும் தியாக உணர்வும் கொண்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் மனித குலத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப தியாகப் பயணம் தொடங்குகின்றனர். நெஞ்சைப் பிளக்கும் ஈழத் தமிழர் படுகொலை அவலக் காட்சிகள் காணொளிகளாக உள்ளத்தை உருக்கும் புகைப்படங்களாக மக்கள் விழிகளையும் உள்ளங்களையும் கண்ணீரோடு ஈர்க்கும் வகையில் பரப்புரை செய்கின்றனர். பிரெஞ்சு தேசம் பெல்ஜியம் ஜெர்மனி நெதர்லாந்து நாடுகளின் 54 நகரங்களில் ஈழ விடியலுக்கான கருத்துப் பரப்புரை செய்தவாறு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவுக்குச் செல்கின்றனர். இனப் படுகொலை செய்த ராஜபக்சே கொடியோர் கூட்டத்தைஇ அனைத்துலக நீதிமன்றக் …

  6. பேஸ்புக் மூலம் திருடனையும் பிடிக்கலாம் : அசத்திய மும்பை போலீசார் பேஸ்புக் சமூக வலைதளம் மூலமாக, ரூ. இரண்டரை லட்சம் திருடி தலைமறைவாக இருந்த வாலிபரை மும்பை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் விஜய் சவுத்ரி.மும்பையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி, வங்கியில் கட்டுவதற்காக கம்பெனி கொடுத்த பணம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்துடன் தலைமறைவானார் விஜய் சவுத்ரி. அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட போது, மொபைல் போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. பணம் கட்டக்கொடுத்த நாள் முதல் சவுத்ரி வேலைக்கு வருவதையும் நிறுத்தி விட்டான். இதையடுத்து பணத்தை சவுத்ரி கையாடல் செய்து விட்டதை உணர்ந்த தனியார் நிற…

  7. பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் ஊழல் புகாரை விசாரிக்க சுவிஸ் அரசு மறுப்பு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது சுவிட்சர்லாந்து வங்கியில் பணம் முதலீடு செய்தது தொடர்பாக ஊழல் புகார் இருந்தது. இதை முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் கடந்த 2007-ம் ஆண்டு தள்ளுபடி செய்தார். இது போன்று ஆயிரக்கணக்கான ஊழல் புகார்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவர் பதவி விலகி 2 ஆண்டுகள் கழித்து இப்புகாரை நீக்கியது தவறு.எனவே, இவற்றை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், அதிபர் சர்தாரியின் ஊழல் பணம் சுவிட்சர்லாந்து பாங்கிகளில் முதலீடு செய்தது குறித்து அந்நாட்டு அரசிடம் இருந்து அறிக்கை பெற வேண்டும் என பிரதமருக்கும் உத்தரவிட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த முன்னாள்…

  8. இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு குற்றவாளி அப்சல் குருவுக்கு தில்லியில் சனிக்கிழமை திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதை எதிர்த்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹூரியத் அமைப்புகளும் அதன் சார்பு இயக்கங்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களான லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ- முகம்மது ஆகிய இயக்கங்களின் தளபதிகள் கூட்டம் கடந்த சனிக்கிழமை இரவு பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்றதாக இந்திய உளவுத் துறைக்கு…

  9. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாக கசாப்பும், தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், அப்சல் குருவும் தூக்கிலிடப்பட்ட சம்பவங்களை ஒப்பிடும் போது, தூக்குத்தண்டனைகளை காங்கிரஸ் தனது அரசியல் லாபத்திற்காக நிறைவேற்றுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. வரும் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. கடந்த 2004ம் ஆண்டு முதல் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. எதிர்வரும் லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் விதமாக தற்போது அதற்கான பணிகள் துவங்கியுள்ளன. மறுபுறம் கடந்த 9 ஆண்டு…

  10. இலங்கை அரசோடு மத்திய அரசும் உறவைத் துண்டித்து விட்டால், ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்க ஆள் இருக்காது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்தது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அதேசமயம், இலங்கை அரசோடு மத்திய அரசும் உறவைத் துண்டித்து விட்டால், ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்க ஆள் இருக்காது என்று அவர் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை திருப்பதி கோவிலுக்கு வந்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தின. டெல்லி, திருப்பதி உள்ளிட்ட இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. http://puthiyathalaimurai.tv/narayanasamy-on-srilankan-…

  11. அலகாபாத்: உத்தரபிரதேசத்தின் அலகாபாத் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேம்பாலம் ஒன்று விழுந்து நொறுங்கியதால், பயணிகளிடையே பீதி உண்டாகி கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பலரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகா கும்பமேளாவுக்காக குவிந்த கோடிக்கணக்கான பக்தர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், அலகாபாத்தில் இன்று இரவு இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. http://news.vikatan.com/?nid=12379

  12. சொந்த மக்களைக் கொல்ல உத்தரவிட்டுள்ளார் ஒபாமா: அசாஞ்ஜே குற்றச்சாட்டு சொந்த நாட்டு மக்களையே கொல்ல அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார் என்று விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜூலியன் அசாஞ்ஜே குற்றம்சாட்டியுள்ளார். அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் அமெரிக்கர்களுக்கு தொடர்பு இருந்தால் அவர்களை எதிரிகளாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்துக்குரிய அமெரிக்கர்களைக் கொன்றுவிட ஒபாமா அளித்துள்ள உத்தரவாகவே இது கருதப்படுகிறது. இந்த உத்தரவு அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தங்கியுள்ள அசாஞ்ஜே…

  13. கொழும்பு: தரம் குறைவாக இருப்பதாக புகார் எழுந்ததையடுத்து இந்தியா அனுப்பி வைக்கவிருந்த 5 ஆயிரம் டன் டீசலை இலங்கை நிராகரித்துள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனமான ஐ.ஓ.சி.யிடமிருந்து டீசலை, கப்பல் வழியாக இலங்கை, இறக்குமதி செய்து வந்தது. இந்நிலையில் இலங்கை அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேசன் (சி.பி.எஸ்.டி.எல்) ‌எண்ணெய் சேமிப்பு நிறுவனத்திற்கு 5ஆயிரம் டன் டீசலை கப்பல் வாயிலாக ஐ.ஓ.சி. ஏற்றுமதி செய்தது. இது அந்நாட்டு எண்ணெய் சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்க திட்டமிருந்தது. இவ்வாறு இறக்குமதி செயயப்பட்ட டீசல் தரம் குறைந்ததாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் டீசலை சப்ளை செய்ததால் இழப்பீடு கேட்டு சிலோன் எண்ணெய் நிறுவனம் மீதும், அந்நாட்டு மூத்த பெட்ரோலியத்…

  14. மிகப் பெரிய பனிப்புயலால் நகரமே வெள்ளை துணியால் மூடப்பட்டது போல காட்சியளிக்கிறது. வீடுகளுக்கு முன் பலமணிநேர பனி பெய்துள்ளதால், வீடுகளில் வசிக்கும் அனைவரும் அதிக நேரம் செலவிட்டு தங்கள் வீட்டிற்கு முன் உள்ள பனிக்குவியலை அகற்றினார்கள். அனைத்துபள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்படுள்ளன, அதனால் குழைந்தைகள் அனைவரும் வீடிற்கு முன் உள்ள பனிக்குவியலில் விழுந்து விளையாடி மகிழ்ந்தனர். வீடுகளுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை மூடியபடி பனி பொழிந்திருந்தது. கடந்தஇரண்டு வருடங்களாக பொய்த்து போன பனிப்பொழிவு இந்த வருடம் வட்டியுடன் முதலையும் சேர்த்து இன்னும் கொட்டிகொண்டிருக்கிறது. குறைந்தது 25 முதல் 40 செ.மீ பனி பொழியும் என எதிர்பார்க்கப் படுகிறது. …

  15. கும்ப மேளா ‘3 கோடி’ பக்தர்கள் புனித நீராடுகின்றனர் இந்தியாவில் மஹா கும்ப மேளா பண்டிகையின் முக்கிய நீராடல் தினமான ஞாயிறன்று கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் மூன்று கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.6 நீராடல் நிகழ்வுகளைக் கொண்ட மஹா கும்ப மேளா நிகழ்ச்சிதான் உலகின் மிகப் பெரிய மனித ஒன்று கூடல் என்று வர்ணிக்கப்படுகிறது.கும்ப மேளா ஆரம்பமான ஜனவரி 14ஆம் தேதியன்று 80 லட்சத்துக்கும் அதிகமானோர் நன்னீராடினார்கள். புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் குளித்தால் பாவங்கள் கழியும் என்றும் விமோச்சனம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்ற இந்த மஹா கும்ப மேளா ஜனவரியிலும் பிப்ரவரியிலுமாக 55 நாட்கள் காலத்து…

  16. அமெரிக்காவில், வரலாறு காணாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருவதையடுத்து, அங்கு ‌1000க்கும் மேற்பட்ட விமானஙகளின் சேவை தாமதப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாது விமானப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குமுன், 1978ம் ஆண்டில் அதிக அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டதன் ‌விளைவாக, விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. http://tamil.yahoo.com/%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9-110800819.html http://www.cnn.com/2013/02/08/us/northeast-blizzard/index.html?hpt=hp_c1

    • 8 replies
    • 886 views
  17. இந்திய மத்திய அரசு இலங்கை அரசுடன் சேர்ந்து முள்ளிவாய்க்காளில் 146,000 அப்பாவிப்பொது மக்களை பொசுக்கி தள்ளிய போது தான் கூட்டு வைத்திருந்த மத்திய அரசை தட்டி கேடக மறுத்துவிட்டு என்றோ ஓய்ந்து போய்விட்ட சகோர யுத்தம் என்ற நொண்ட்டிச்சாட்டில் தூங்கிய கருணாநிதி , தனது குடும்ப சண்டையை மூடி மறைக்க அடுத்தகட்டமாக, ஈழத்தமிழர் விவகாரம் சம்பந்தமாக அமெரிக்காவினதை விட இன்னொரு பிரேரணையை இந்தியா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரவேண்டும் என்று கேட்டதற்காக, ஜெயலைத்தாமீது பாயந்திருக்கிறார். செய்தி: ஈழத்தமிழர் விடயத்தில் காலம் கடந்து நாடகம் ஆடுகின்றார் ஜெயலலிதா - கருணாநிதி குற்றச்சாட்டு! [saturday, 2013-02-09 23:02:35] இலங்கைத் தமிழர்கள் மீது தான் மிகுந்த அக்கறை கொண்டவரைப் போல தன…

    • 2 replies
    • 547 views
  18. நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: பா.ஜ. தகவல் ஹைதராபாத்: வருகிற அக்டோபர் அல்லது நவம்பரில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வரலாம் என்று பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று ஹைதரபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது.அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. மழைக்கால கூட்டத்தொடர் முடிந்த பிறகு இது குறித்து முடிவு செய்யலாம். முன்கூட்டியே தேர்தல் நடத்த இருப்பதால் மக்களுக்கு ஆதரவான பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம்.சில மசோதாக்களை நிறைவேற்றலாம்.ஆனால் மக்களுக்கான சலுகைகளை வழங்க மத்திய அரசிடம் …

  19. அப்சல்குரு தூக்குக்கு பழிவாங்குவோம்: லஷ்கர் மிரட்டல்! மும்பை: அப்சல்குருவுக்கு தூக்கிலிடப்பட்டதற்கு பழிக்கு பழிவாங்க தாக்குதல் நடத்துவோம் என லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல்குரு நேற்று காலை தூக்கிலிடப்பட்டார். இந்நிலையில் அப்சல் குருவை தூக்கிலிட்டதற்காக பழிக்கு பழி வாங்க இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. அந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா என்பவர் பத்திரிகை அலுவலகம் ஒன்றை தொடர்பு கொண்டு இந்த மிரட்டலை விடுத்துள்ளார். "அப்சல்குருவை தூக்கிலிட்டதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை.பழிக்குப…

  20. சென்னை: திமுகவின் முக்கிய பிரமுகராக வளைய வந்த குஷ்புவின் வீடு மீது கல்வீசித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு அப்படி என்னதான் சொல்லிவிட்டார் குஷ்பு? இதோ... அவர் இந்த வார ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியின் சில பகுதிகள்: ஸ்டாலினுக்குத் தலைவர் பதவி, கோபாலபுரத்துக்குள் நுழையத் தடை, விஜயகாந்துடனான கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி, திமுகவில் இருந்து ஒதுக்கப்படுகிறாரா என்ற எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் குஷ்பு. ''திமுகவுக்கு ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா வரணும்னு கருணாநிதியே அறிவித்துவிட்டாரே?'' ''நாமளே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி செயல்படுத்துவார்னுதான். திமுக தலைவரைத் தேர…

  21. நீங்கள் கனடிய குடியுரிமை பெற்றவராக இருப்பின் வேறு நாட்டுக் குடியுரிமையுடன் இருக்கக் கூடாது. அப்படி இரட்டைக் குடியுரிமையை வைத்துக் கொண்டு குற்றச் செயல்களில் இறங்குவோரின் கனடியக் குடியுரிமை விரைவில் பறிக்கப்படுவதற்கான ஆபத்தும் உள்ளது. இதற்கான தனி நபர் சட்டமூலம் ஒன்று பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விவாதம் ஒன்றும் இரு நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றில் நடந்துள்ளது. அப்போது பேசிய ஜேசன் கென்னி பல்கேரியா உள்ளிட்ட சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தோர் இரட்டைக் குடியுரிமையை கையில் வைத்துக் கொண்டு கனடாவை அச்சுறுத்தும் வகையிலும் , நாட்டிற்கு அவப்பெயர் தேடித் தரும் வகையிலும் நடந்து கொள்வதாகக் கூறினார் எனவே இரட்டைக் குடியுரிமையை வைத்துக் கொண்டு தீவிரவா…

  22. தலிபான் தற்கொலைப்படை தலைவர் சுட்டுக் கொலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 450 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கந்தகார் மாகாணத்தில் நேற்று பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மெய்வண்ட் மாவட்டத்தில் அவர்கள் தேடுதல் வேட்டை நடத்திய போது அப்துல் பகி என்ற தலிபான் தீவிரவாதியை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.ருஜி என்ற பெயராலும் அறியப்பட்ட இவன், கந்தகார், உருஸ்கன், ஹெல்மண்ட் உள்ளிட்ட மாகாணங்களில் இயங்கி வரும் தலிபான் தற்கொலை படைகளின் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளான். ஆப்கானிஸ்தான் மற்றும் பன்னாட்டு பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த அலுவலகங்களின் மீது தாக்குதல் நடத்த தலிபான் தற்கொலை படையினரை ஏவியவன் அப்துல் பகி என ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் கூறியுள்ளனர…

  23. ஜனாதிபதி மஹிந்த இந்தியா விஜயம் வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013 08:56 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/58491-2013-02-08-03-27-37.html

    • 23 replies
    • 1.1k views
  24. டிசம்பர் 13- நாடாளுமன்ற தாக்குதல்-அப்சல் தூக்கு: அருந்ததி ராய் எழுப்பிய 13 கேள்விகள்! டிசம்பர் 13, 2001-இல் நாடாளுமன்ற வளாகம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரையான விவகாரத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்சல் குரு இவையனைத்தையும் திட்டமிட்டதாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இன்று தண்டனை ரகசியமாக நிறைவேற்றப்படவும் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தபோது சமூக ஆர்வலரும், இலக்கிய எழுத்தாளரும் அறிவு ஜீவியுமான அருந்ததி ராய் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் ஒரு 13 கேள்விகளை எழுப்பினார். அதன் தமிழ் வடிவம் இதோ: கேள்வி 1: நாடாளுமன்றம் தாக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்பே அரசும் போலீசும் நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று …

  25. டெல்லியைப் போல தென்னாப்பிரிக்காவில் பாலியல் வன்முறை: தொடர் போராட்டம் கேப் டவுன்: தென் ஆப்பிரிக்காவில் 17 வயது பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்ணின் கொடூர மறைவுக்கு நீதி கேட்டு மக்கள் போராட்டங்களில் இறங்கியிருக்கிறார்கள். வெஸ்டர்ன் கேப் (Western Cape) பகுதியில் உள்ள ப்ரெடஸ்டார்ப் (Bredasdorp) சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது நண்பர்களுடன் கேளிக்கை விடுதிக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். கட்டுமான பணியிடம் ஒன்றில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இறப்பதற்கு முன் அந்த பெண், தனது நிலைக்கு காரணமான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.