Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாக்.கில் சொகுசு வாழ்க்கை வாழும் தாவூத்: ஆதாரத்துடன் வீடியோ வெளியீடு! புதுடெல்லி: நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஆதாரத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, தாவூத் இப்ராகிம் குறித்து ரகசிய புலனாய்வு மேற்கொண்டது. இதில், தாவூத் இருக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவை சேகரித்துள்ளது. இது தொடர்பான வீடியோவை அந்த தொலைக்காட்சி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானின் கராச்சி நகரில், D 13, Block 4, Clifton என்ற முகவரியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது வீட்டைச் சுற்றி…

  2. டெல்லி: மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ, லஷ்கர் ஏ தொய்பா, ஜெய்ஷ் ஏ முகம்மத், அந் நாட்டு அரசின் பாதுகாப்பில் உள்ள தாவூத் இப்ராகிம் மற்றும் அல் கொய்தாவுக்கு தொடர்பிருப்பது தெளிவாகி வருவதையடுத்து பாகிஸ்தான் மீது சில கடும் நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி பாகிஸ்தானுடன் டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு காலவரையின்றி ரத்து செய்துவிட்டது. மேலும் பாகிஸ்தானுடான போர் நிறுத்தத்தை ரத்து செய்யும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. போர் நிறுத்தம் ரத்து என்றால் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்தியா படைகளை குவிக்கும், தாக்குதலுக்கும் தயாராகும் என்பது குறிப்பிடத்தக்கது.…

    • 11 replies
    • 1.9k views
  3. சென்னை: தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நாசவேலையை செய்வதற்காக 40 கிலோ வெடி பொருட்களுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் பதுங்கியுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் போல மீண்டும் ஒரு தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்ட மிட்டிருப்பதாக மத்திய உளவு பிரிவினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். நெல்லை மேலாப்பாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 17½ கிலோ மட்டும் சிக்கிய நிலையில் மீதமுள்ள வெடி பொருட்கள் வேறு எங்காவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் தீவிரமாக தேடத் தொடங்கியுள்ளனர் . கடலோர தாக்குதல் தமிழகத்தில் மதுரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, மயிலாடுதுறை போன்ற முக்கிய நகரங…

  4. பாக்.துறைமுகம் சீனா வசம் - இந்தியாவுக்கு செக் வைக்க புதிய திட்டமா? February 19, 2013 12:07 pm இதுநாள் வரை சிங்கப்பூர் வசம் இருந்த, பாகிஸ்தான் கவ்தார் துறைமுகத்தை சீனா தனது பொறுப்பில் எடுத்துள்ளது. இங்கு தனது கடற்படைத் தளத்தை அமைக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தியா கடும் எரிச்சலும், அதிர்ச்சியும் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவைச் சுற்றி வளைக்கும் சீனாவின் பூமாலைத் திட்டத்தின் கீழ்தான் இந்த துறைமுகத்தை சீனா கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவைச் சுற்றிலும் சீனா தனது நிலைகளைப் பலப்படுத்தி வருகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி கூறுகையில்... முறைப்படி கவ்தார் துறைமுகம் சீனாவிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்…

  5. பெஷாவர்: பாகிஸ்தானில் இரு இடங்களில் தேவாலயங்களை தற்கொலைப்படையினர் தாக்கியத்தில் 45க்கும் அதிகமானோர் பரிதாபமாகப் பலியானார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமையாகையால், கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு பிரார்த்தனை செய்ய செல்வது வழக்கம். அந்த வகையில், பாகிஸ்தான் பெஷாவர் நகர் கீசா கவானி பஜாரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று 600 பேர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், பிரார்த்தனை முடிந்து மக்கள் தேவாலயத்தை விட்டு வெளியே வந்தபோது அவர்களை குறிவைத்து இரு இடங்களில் தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இக்கொடூரத் தாக்குதலில் சிக்கி சுமார் 45 பேர் பலியானார்கள். படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்கு உடனடிய…

  6. கிழக்கு பாக்கிஸ்தான் இந்தியாவின் உதவியோடு வங்காள தேசமாக உருவாகியதைப் போல் பாக்கிஸ்தான் எனப்படும் முன்னாள் மேற்கு பாக்கிஸ்தான் அமெரிக்கா, இந்தியா ஆகியவற்றின் ஆதரவுடன் மீண்டும் உடையும் வாய்ப்பு இருக்கிறது. இம்முறை பாக்கிஸ்தானின் நான்கு மாநிலங்களில் மிகப் பெரியதும் இயற்கை வளங்களில் பெறுமதி கூடியதுமான பலுச்சிஸ்தான் (Baluchistan) புதிய நாடாக உருவாகும் வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன. பாக்கிஸ்தானின் முழு நிலப் பரப்பில் 44 விழுக்காட்டைக் கொண்டிருக்கும் பலுச்சிஸ்தானில் எரிபொருள்களான எண்ணை, எரிவாயு மற்றும் தங்கம், செம்பு போன்ற தனிமங்களும் காணப்படுகின்றன. அண்மையில் எடுக்கப்பட்ட கணக்குப்படி 19 டிரில்லியன் கன அடி (19 Trillion Cubic feet) எரிவாயு பலுச்சிஸ்தான் மண்ணடியில் கிடக்கிறத…

  7. பாக்கிஸ்தானை சேர்ந்த பெண் மனித உரிமை செயற்பாட்டாளர் கனடாவில் சடலமாக மீட்பு Rajeevan ArasaratnamDecember 23, 2020 பாக்கிஸ்தானை சேர்ந்த பெண் மனித உரிமை செயற்பாட்டாளர் கனடாவில் சடலமாக மீட்பு2020-12-22T23:04:53+05:30உலகம் FacebookTwitterMore பாக்கிஸ்தானை சேர்ந்த பெண் மனிதஉரிமை செயற்பாட்டாளர் ஒருவர் கனடாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கரிமா பலோச் என்ற 37வயது பெண் மனித உரிமை செயற்பாட்டாளரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாக்கிஸ்தான் அரசாங்கத்தையும் இராணுவத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்த கரிமா பலோச் ஞாயிற்றுக்கிழமை காணாமல்போயிருந்த நிலையில் கனடா பொலிஸார் அவர் குறித்த விபரம் தெரிந்தவர்கள் தங்களை தொடர்புகொள்ள…

  8. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப் புற மாகாணத்தில் உள்ள வசிரிஸ்தானில் தீவிரவாதிகளின் இலக்குகளை குறி வைத்து அமெரிக்கா குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 11 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்த தாக்குதல் சரியான நடவடிக்கைதான் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்குள் உள்ள பகுதியில் அமெரிக்க படைகள் நடத்தியுள்ள இந்த தாக்குதலால் பாகிஸ்தான் அரசு கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளது. வசிரிஸ்தான் பகுதி, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது. தலிபான்கள் மற்றும் அல் கொய்தா அமைப்பினரின் முழுக் கட்டுப்பாட்டில் இப்பகுதி உள்ளது. இங்குள்ள தீவிரவாதிகளை எதிர்த்துப் போராட முடியாமல் பாகிஸ்தான…

    • 2 replies
    • 863 views
  9. போராட்டத்தில் பெரும் வன்முறை!! பாகிஸ்தான் அரசாங்கம் பதவி விலகக் கோரி மதகுரு தாகீர் உல் காத்ரி ஆதரவாளர்கள் நடத்திய நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் பெரும் வன்முறையாக உருவெடுத்தது. பாகிஸ்தானின் மதகுருவான தாகீர் உல் காத்ரி கனடாவில் வசித்து வந்தார். தற்போது பாகிஸ்தான் திரும்பியிருக்கும் அவர் புரட்சி எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார். தாகீர் உல் காத்ரி தலைமையிலான தெக்ரீக் இ மின்ஹாஜுல் குரான் கட்சி, ஆளும் அரசு பதவி விலக வலியுறுத்தி லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் வரை மிக பிரமாண்டமான 2 நாள் பேரணியை நடத்தியது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். பேரணியின் முடிவில் பேசிய காத்ரி, தற்போது பேரணி முடிந்து விட்டது. ஆனால் புரட்சி தொடங்கி விட்டது, பாகிஸ்தானில் நி…

  10. பாக்கிஸ்த்தான் கராச்சி நகரில் சீன தூதரகம் மீது பாலுசிஸ்த்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் பாக்கிஸ்த்தானின் பாலுசிஸ்த்தான் பிராந்தியத்தில், பாக்கிஸ்த்தானின் அடக்குமுறைக்கெதிராகப் போராடிவரும் விடுதலைப் போராளிகள் அமைப்பொன்று இன்று கராச்சி நகரில் அமைந்திருக்கும் சீனத் தூதரகம் மீது தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இத்தாக்குதலில் 4 தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதோடு, 3 தாக்குதலாளிகளும் கொல்லப்பட்டதாக பாகிஸ்த்தான் அரசு கூறியிருக்கிறது. பாலுசிஸ்த்தான் ஊடாக அரேபியக் கடலுக்கான தனது வழங்கல்ப் பாதையொன்றினை பாக்கிஸ்த்தான் அரசின் அனுசரணையுடன் அமைக்க பாரியளவு முதலீட்டைச் சீனா செய்துவரும் வேளையில், தங்களது தாயகம் மீதான சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்பிற்கெதிராகவும், சுரண்டலு…

  11. பாக்கு நீரிணையில் இலங்கை கடற்படைக்கும் சோதனை பாகு நீரிணையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்கா கடற்படை கப்பல்களும், படகுகளும் இந்திய கடற்படையால் சோதனைக்கு உட்படுத்தப்படும் இதற்கான சகல அதிகாரங்களும் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாம் என தமிழக முதல்வர் கருணாநிதி எனும் நபர் அறிவித்துள்ளாராம் என PTI செய்தி ஸ்தாபனத்தை மேற்கோள் காட்டி இலங்கை சூரியன் வானொலி அறிவித்துள்ளது. ஆதாரம்: இலங்கை சூரியன் FM

  12. இராக்கின் தலைநகர் பாக்தாதின் மையப்பகுதியில் ஒரு கார் குண்டு வெடித்ததில் குறைந்தபட்சம் 9 பேராவதுகொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் 16 பேர் அதில் காயமடைந்திருக்கிறார்கள். இதேபகுதியில் கடந்த வாரம் இராணுவத்துக்கு சேர்க்கப்பட்டவர்கள் மத்தியில் ஒரு தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்ததில் 23 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். கடந்த வருடத்தில் இராக்கில் அரசியல் பதற்றமும், வன்செயல்களும் கடுமையாக அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டில் சுமார் 9000 பேர் அங்கு வன்செயல்களில் கொல்லப்பட்டதாக ஐநா கூறியுள்ளது. கடந்த 5 வருடங்களில் இதுதான் மிகவும் அதிகமான தொகையாகும். http://www.bbc.co.uk/tamil/global/2014/01/140112_iraqblast.shtml

  13. பாக்தாத் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல் : 75 பேர் பலி (Video) ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று நடத்திய இரட்டை கார் குண்டு தாக்குதலில் 75 பேர் உயிரிழந்தனர். பாக்தாத் நகரில் உள்ள கர்ராடா பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு முன்பாக இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 75 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த தாக்குதலுக்கு ஈராக்கில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த 130 இற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று…

  14. பாக்தாத் நகரில் புதிய பாதுகாப்புத் திட்டம் அமுலாகி சில நாட்களில் பாரிய குண்டுத் தாக்குதல் ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து 50 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 42 பேர் பலியாகியுள்ளனர். ஈராக்கில் வன்முறைகளால் கொல்லப்படுவோரின் தொகை குறைவடைந்திருப்பதாக ஈராக்கிய பிரதமர் நூரி மலிக்கி தெரிவித்த சில மணி நேரங்களிலேயே இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஹபானியா நகரிலுள்ள பள்ளிவாசலுக்கருகிலேயே இக் குண்டுவெடிப்பு இடம்பெற்றதாகவும் இதில் மேலும் 60 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பத்து நாட்களுக்கு முன்னர் பாக்தாத் நகரில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாதுகாப்புத் திட்டத்தால் கொல்லப்படுவோர் மற்றும் கடத்தப்…

  15. பாக்தாத் மருத்துவமனையில் தீ விபத்து: 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு பாக்தாத்தின் பெரிய மருத்துவமனை ஒன்றில் உள்ள மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தால், குறைந்தது 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. விபத்து நடந்த மருத்துவமனை (கோப்பு படம் ) இராக் தலைநகர் பாக்தாத்தின் மேற்கு பகுதியில் உள்ள யார்மூக் மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தினை மூன்று மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து இராக் சுகாதார அமைச்சக பேச்சாளர் ஒருவர் கூறுகையில், தீ விபத்து ஏற்பட்டது குறித்த ஆரம்ப விசாரணைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட மின்சார பழுதே காரணம் என்று சுட்டிக்காட்டுவதாக தெரிவித்தார். …

  16. பாக்தாத் முதல் கோராசான் வரை, தாக்குதல் தொடரும்: ஐ.எஸ். அமைப்பு எச்சரிக்கை! பாக்தாத் முதல் கோராசான் வரை தாக்குதல் தொடரும் என ஐ.எஸ். அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஷியா முஸ்லிம்கள் எங்கும் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவார்கள். பாக்தாத் முதல் கோராசான் வரை இந்தத் தாக்குதல் தொடரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல்க…

  17. பாக்தாத் வன்முறைகளில் 200 பேர் பலி ஈராக் பிரதமர் கடும் கண்டனம் ஈராக்கின் பாக்தாத் நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வன்முறைகளில் சுமார் 200 பேர் பலியானமைக்கு ஈராக் பிரதமர் நூறி மாலிகி கண்டனம் தெரிவித்துள்ளார். பாக்தாத்தில் அமெரிக்க- ஈராக்கிய படைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்திய பின்னர் இடம்பெற்ற அதிகளவு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய சம்பவம் இதுவாகும். சட்றியா மாவட்டத்திலுள்ள சந்தை ஒன்றில் இடம்பெற்ற கார்க் குண்டுத் தாக்குதலில் 140 பேர் பலியானதைத் தொடர்ந்து அம்மாவட்டத்திற்கு பொறுப்பான இராணுவத் தளபதியை கைது செய்வதற்கும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இவ்வருட இறுதிக்குள் ஈராக்கிய படைகள் ஈராக்கினது பாதுகாப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுமென …

  18. பாக்தாத்: இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 35 பேர் பலி படத்தின் காப்புரிமைREUTERS இராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த இரட்டை தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தபட்சம் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த மூன்று நாட்களில் நடந்த இரண்டாவது தாக்குதலாகும். அந்நகரத்தின் மையப்பகுதியில் உள்ள டயரன் சதுக்கத்தில் நடந்த இந்த தாக்குதலில் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஐஎஸ் அமைப்பு கடந்த 2014 ஆம் ஆண்டில் அந்நாட்டின் பெரும்பகுதியை கைப்பற்றியது முதல் பாக்தாத்தில் தொடர்ச்சியாக வெடிகுண்டு மற்றும் ஆயுத தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் அனைத்து பிராந்தியங்களையு…

  19. பாக்தாத்தில் 5 இடங்களில் கார் குண்டு தாக்குதல்: 26 பேர் சாவு பிரதி ஈராக்கில் முக்கிய நகரங்களைப் பிடித்து தனி நாடாக அறிவித்துள்ள ஐ.எஸ். போராளிகள், ராணுவத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர். பாக்தாத்தை நோக்கி முன்னேறி வரும் அவர்களை ஈராக் ராணுவமும், ஷியா போராளிகளும் இணைந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இழந்த பகுதிகளை மீட்பதற்கும் ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. அதேசமயம் இனவாத தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பாக்தாத்தில் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து 5 இடங்களில் இன்று தற்கொலைப் படையினர் கார் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். முதல் குண்டு அபு தஷீர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில் வெடித்தது. இத…

    • 0 replies
    • 420 views
  20. பாக்தாத்தில் 9 அமெரிக்கப் படையினர் பலி ஈராக்கின் வீதியோரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் 6 அமெரிக்க படையினர் பலியாகியுள்ளதுடன் பிறிதொரு சம்பவமொன்றில் 3 படையினர் பலியாகியுள்ளனர். ஸுன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் பாக்தாத்தின் வடபகுதியிலுள்ள சலஹட்டின் மாகாணத்தில் அமெரிக்கப் படையினரின் வாகனத்திற்கருகிலேயே இச் சம்பவம் இடம்பெற்றதாகவும் இதில் மேலும் மூவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தியலா மாகாணத்திலும் மூன்று அமெரிக்கப் படையினர் பலியாகியுள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளார். வீதியோர குண்டுகள் கிளர்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதாகவும் இவை ஈரானில் தயாரிக்கப்பட்டவை எனவும் அமெரிக்க தளபதிகள் இவ் விடயம் தொடர்பாக அக்கறை செல…

  21. பாக்தாத்தில் அடுத்தடுத்து கார் குண்டு தாக்குதல்: 42 பேர் பலி பாக்தாத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கும் இடங்களில் நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் 42 பேர் பலியானதாக அந்நாட்டு மருத்துவ மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு வெவ்வேறு தாக்குதல்களால் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. முதல் தாக்குதல் புதன்கிழமை மாலை சத்ர் நகரின் கடை வீதியில் இரண்டு கார் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. அதில் 31 பேர் பலியானதுடன் 34 பேர் காயமடைந்தனர். பின்னர் இரவு நேரத்தில் உர் அருகே நடைபெற்ற மற்றொரு கார் குண்டு தாக்குதலில் 11 பேர் பலியானார்கள். அந்நாட்டில் சன்னி போராளிகள் எனப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் மொசூல் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கைப்பற்றியதால் தலைநகர் ப…

    • 0 replies
    • 462 views
  22. பாக்முட் அருகே உள்ள கிராமத்தை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு ! உக்ரேனிய நகரமான பாக்முட் அருகே உள்ள கிராமத்தை வான்வழி படையினரின் உதவியோடு கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நகரத்தை சுற்றி வளைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சுமார் 75 ஆயிரம் சனத்தொகையை கொண்ட பக்முட் நகரை கைப்பற்றுவது ரஷ்யாவின் முதல் பெரிய போர்க்கள சாதனையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம் பக்முட் மீது ரஷ்யா நடத்திய பீரங்கி தாக்குதலில் சிறுவன் உட்பட இரண்டு பொது மக்கள் கொல்லப்பட்டதாக அப்பிராந்திய ஆளுநர் தெரிவித்திருந்தார். இந்த மாத தொடக்கத்தில், சுமார் 400 …

  23. பாக்முட் நகரத்தை ரஷ்யா நாசம்செய்துவிட்டதாக உக்ரைன் குற்றச்சாட்டு ரஷ்யாவின் தாக்குதல்கள் கிழக்கு உக்ரைனின் பாக்முட் நகரத்தை எரிந்த இடிபாடுகள் கொண்ட நகரமாக மாற்றியுள்ளதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் ஏவுகணை, ரொக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைனின் இராணுவம் தெரிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களில் உள்ள பல முக்கிய நகரங்களில் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார். தெற்கு உக்ரேனிய நகரமான ஒடேசாவில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் தாக்குதல்களினால் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் …

  24. பாக்முத்திலிருந்து வெளியேறுவோம்! - வாக்னா் குழு கிழக்கு உக்ரைனில் தீவிர சண்டை நடைபெற்று வரும் பாக்முத் நகரில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து வெளியேறப்போவதாக ரஷிய தனியாா் படையான வாக்னா் குழுவின் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின் திடீா் மிரட்டல் விடுத்துள்ளாா். பாக்முத்தில் தொடா்ந்து போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களை ரஷியா அனுப்பாததாலும், அந்த நகரில் நடைபெறும் சண்டையில் தங்களது வீரா்கள் அதிக எண்ணிக்கையில் பலியாவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவா் கூறினாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாக்முத் நகரில் நாங்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளிலிருந்து வரும் 10-ஆம் தேதி வெளியேற முடிவு செய்துள்ளோம்.…

  25. பாங்காக்கில் தீயணைப்பு வாயுக் கசிவால் 7 பேர் பலி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், வங்கி ஒன்றின் தீயணைப்பு வாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். திடிரென ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் அங்கிருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது தாய்லாந்தின் மிகப் பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான சியாம் வர்த்தக வங்கியின் தலைமையகத்தில் தீயணைப்பு கட்டமைப்பில் திருத்த வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது, விபத்தொன்று ஏற்பட்டுவிட்டதாக அந்த வங்கி கூறியுள்ளது. இந்த வாயுவில் நச்சுத் தன்மை ஏதும் இல்லை என்று கூறப்படுகின்றது. ஆனால், குறிப்பிட்ட பகுதியில் திடிரென ஆக்ஸிஜன் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.