Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதுடில்லி: காவிரி தண்ணீர் தர மறுத்து வரும் கர்நாடகா அரசுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் கருத்து கூறியிருப்பது இந்த வழக்கில திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு பாதகமான தீர்ப்பு வந்து விடுமோ என்று தமிழக டெல்டா விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காவிரி கண்காணிப்பு குழு உத்தரவின் படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அவமதிப்பு , உடனடி தண்ணீர் தேவை, நிவாரணம் வழங்கிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. ஆர். எம். லோதா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. நீதிபதிகள் அதிருப்தி : விசாரணையின்போது தமிழக அரசு…

  2. பஞ்சம்: வடகொரியாவில் நரமாமிசம் உண்ணும் மனிதர்கள்! திங்கள், 28 ஜனவரி 2013( 12:51 IST ) வடகொரியாவில் வெளி உலகிற்கு மறைக்கப்பட்டு வரும் மிகப்பெரிய பஞ்சம் அந்த நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு ஹவாங்கேயிலி தலைவிரித்தாடுகிறது. இதுவரை 10,000 பேர் பட்டிணியால் பலியாகியிருப்பார்கள் என்று விசாரணை தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பசியால் தனது குழந்தைகளை கொன்று தின்ற தந்தை ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் செய்திகள் காட்டுத் தீயாக பரவி வருகிறது. வடகொரிய கட்சி அதிகாரிகள் உணவுப்பொருட்களை பதுக்குவதால் பஞ்சமும் பட்டிணியும் தலைவிரித்தாடுவதாக தெரிகிறது. நாட்டின் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாட வடக்ரொயா இரண்டு ராக்கெட்டுகளை பெரும் செலவில் விண்ணில் செலுத்தி மகிழ்ந்துள்ளதாக அங்…

  3. பல மில்லியன்களை செலவழித்து டொரொன்டோவில் அமைக்க பட்டுள்ள ஒரு ஆலயம். இவ் ஆலயம் கைவேலைப்பாடுகளையும் பல சிற்ப வேலைப்பாடுகளையும் உள்ளடக்கியதாகவுள்ளது.முன்பு பல கட்டுபாடுகளைக்கொண்ட இவ்வாலயம் இன்று முதல் பல கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதாகத்தகவல் http://toronto.baps.org/info.php# http://toronto.baps.org/info.php Toronto BAPS Shri Swaminarayan Mandir 61 Claireville Drive, Toronto, ON M9W 5Z7. Canada Tel: 416 798 2277 Fax: 416 798 4498 Email: info@canada.baps.org Web: http://toronto.baps.org/index.php

  4. மக்களின் பணத்தை செலவிட்டு தனது மனைவி மும்தாஜூக்காக தாஜ் மகால் கட்ட ஷாஜஹானுக்கு ரைட்ஸ் இல்லை என உ.பி., அமைச்சர் அசம்கான் தெரிவித்துள்ளார். உ.பி., மாநிலம் முஷாபர்நகரில் நடந்த பயனாளிகளுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை செலவிட்டு, உ.பி., முன்னாள் முதல்வர் மாயாவதி பூங்காக்களையும், சிலைகளையும் அமைத்துள்ளார். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை கூட, கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு, தனது அருமை மனைவிக்காக கட்ட ஷாஜஹானுக்கு எந்த ரைட்சும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். Dinamalar

  5. சென்னை: நான் யாரை பாராட்டினாலும், உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருப்பேன். யாராக இருந்தாலும், என் கண்களுக்கு தப்ப முடியாது. திராவிட இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டுமென, போலியாக சொல்லிக் கொண்டு, மறைமுகமாக தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை நான் மன்னிப்பதில்லை. ஏனென்றால், எனக்கு அவர்களை விட, என்னை விட, கட்சி பெரியது; கொள்கை பெரியது என கருணாநிதி கூறியுள்ளார். Dinamalar

  6. டெல்லி பாலியல் வழக்கில் 6வது நபர் சிறுவர்: சிறார் குற்றவிசாரணை அமைப்பு புதுடெல்லி: டெல்லி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6-வது நபரை சிறுவர் என சிறார் குற்றவிசாரணை அமைப்பு இன்று அறிவித்தது. டெல்லியில் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6-வது நபரின் பள்ளிச்சான்றிதழில் உள்ளதன்படி 17 வயது என்பதை சிறார் குற்றவிசாரணை நீதிபதி ஏற்றுக்கொண்டார். இதனால், சிறார் நீதிச் சட்டத்தின்பட்டி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டஅந்த ஆறாவது நபருக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இதர 5 நபர்கள் மீது இந்திய தண்டனைச்சட்டத்தின்கீழ் கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் பே…

  7. அணிவகுப்பில் அக்னி-5 ஏவுகணை: சீன பத்திரிகைகள் பிரமிப்பு தினமலர் புகைப்படத்தைக் காண் அணிவகுப்பில் அக்னி-5 ஏவுகணை: சீன பத்திரிகைகள் பிரமிப்பு பீஜிங்: இந்தி‌யாவின் 64-வது குடியரசு தின விழாவில்இடம்‌பெற்ற அக்னி -5 ஏவுகணை குறித்து சீன பத்திரிகைகள்முக்கியத்துவம் தந்து செய்திகள் வெளியிட்டுள்ளது. நாட்டின் 64-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.ஒவ்வொரு குடியரசு தனி விழாவின் போதும் வெளிநாட்டை சேர்ந்த தலைவர் ஒருவரைசிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்கப்படுவர். மேலும் நாட்டின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் அணிவகுப்பும் நடைபெறும். இந்த அணிவகுப்பு சுமார் 100 நிமிடங்கள் அதாவது சுமார் ஒன்றரை மணி நேரம் வரையில் நடைபெறுவது …

    • 11 replies
    • 1.8k views
  8. ஒன்று இரண்டல்ல மொத்தம் ஆறு பற்றியாற்றிக் ஏவுகணை எதிர்ப்புப் பீரங்கிகளை நேட்டோ துருக்கி – சிரிய எல்லைப் பகுதியில் நிறுத்தி முடித்துள்ளது. சிரியாவில் இருந்து கிரனைட் தாக்குதல்களை சந்திக்கும் அடானா பகுதியில் இவை நிறுத்தப்பட்டுவிட்டன. சிரியாவின் கடைசிக்கட்டப் போர் துருக்கி மீதான ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்தலாம் என்ற கணிப்பில் இந்த ஆறு கருவிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் முதல் துருக்கியின் விமானப்படையுடனான கோடினேட் பணிகளை நேட்டோ ஆரம்பித்துவிட்டதென்று நேட்டோ அதிகாரி ஜேம்ஸ் ஸ்ராவிறிட்ஜ் தெரிவித்தார். கடந்த டிசம்பர் 4ம் திகதி நேட்டோ நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் துருக்கி விடுத்த வேண்டுதலுக்கு அமைய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். …

  9. ஹைதரபாத்: ஆந்திராவில் வரலாறு திரும்புகிறது... 1940களின் இறுதியில் இந்தியாவையே அதிர வைத்தது தெலுங்கானா விவசாயிகளின் ஆயுத முனையிலான வர்க்கப் போராட்டம்.. இப்போது அதே தெலுங்கானா பிரதேசம் "தனி மாநில" கோரிக்கைக்காக ஆயுதமேந்தப் போவதாக பிரகடனம் செய்திருக்கிறது. தெலுங்கானா யுவசேனா மற்றும் தெலுங்கானா செம்புலிகள் ஆகியவற்றின் பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், தெலுங்கானாவை எதிர்ப்போர் அழித்தொழிக்கப்படுவர்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. "ஆந்திர அரசே விலகிக் கொள்.. தெலுங்கானாவே எங்களது இலக்கு" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தெலுங்கானா செம்புலிகள் இயக்கத்தின் செயலாளர் சத்ரபதியின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமைதி வழியில் தெலுங்கானாவை வென்றெடுக்க முடியாது. தெலுங்கான…

  10. கொச்சி: "நாட்டிலேயே, கொச்சியில்தான், உடல் பருமனானவர்கள் அதிகம் உள்ளனர்' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் பருமனானவர்கள், எந்த நகரத்தில் அதிகமாக உள்ளனர் என்பது தொடர்பாக, அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றின் சார்பில், ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு, டில்லி, லூதியானா, ஜெய்ப்பூர், மும்பை, கோல்கட்டா, ஆமதாபாத், நாக்பூர், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கொச்சி என, 11 நகரங்களில் நடந்தது. தனி நபர்கள் மற்றும், 8,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கொச்சி நகரில், உடல் பருமனானவர்கள் அதிகம் வசிப்பது தெரிய வந்துள்ளது. கொச்சியின், மொத்த மக்கள் தொகையில், 46 சதவீதம் பேர், உடல் பருமனானவர்கள். இவர்களில், 42 சதவீதம் பேர், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய நோய…

  11. லோக்சபா தேர்தலில், 16 சீட்டுகளை ஒதுக்க வேண்டும் என, தி.மு.க.,விடம் காங்கிரஸ் முரண்டு பிடித்து வருகிறது. ஆனால், எட்டு சீட்டுகளை மட்டுமே ஒதுக்க தயாராக உள்ள தி.மு.க., காங்கிரசை வழிக்கு கொண்டுவர, மீண்டும், "டெசோ' ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவராக, ராகுலை தேர்வு செய்ததும், அவருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி, வாழ்த்து அனுப்பினார். அக்கடிதத்திற்கு, நன்றி தெரிவித்து, ராகுல் தரப்பில் எவ்வித பதிலும் அனுப்பவில்லை. இதனால், ராகுல் மீது, தி.மு.க., தரப்பில், அதிருப்தி உருவாகியுள்ளது.ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், மதச்சார்பற்ற கட்சிகளுக்கு, சோனியா விடுத்த அழைப்பு, தி.மு.க., தரப்புக்கு கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் உள்…

  12. புதுடில்லி:""பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும், பயங்கரவாத அமைப்புகள் என, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கருதினால், அதற்கான ஆதாரங்கள் இருந்தால், இரண்டையும், அவர் தடை செய்யலாம்; அவற்றின் தலைவர்களையும் கைது செய்யலாம்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் சவால் விடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், காங்., தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, ""ஐதராபாத் மெக்கா மசூதி, மகாராஷ்டிராவின் மாலேகான், பாகிஸ்தான் செல்லும், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் போன்றவற்றில், நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரே காரணம்'' என, கூறியிருந்தார். …

    • 0 replies
    • 358 views
  13. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், திருச்சியில் நடக்கும் அக்கட்சி எம்.பி., மகள் திருமணத்திற்கான அழைப்பிதழ், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திடம் நேரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கருணாநிதி - விஜயகாந்த் சந்திப்பு நடக்குமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க.,வை துவங்குவதற்கு முன், 2004ம் ஆண்டு, பிப்., மாதம், 4ம் தேதி, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, விஜயகாந்த் சந்தித்து பேசினார். கட்சி ஆரம்பித்த பிறகு, 2006ம் ஆண்டு, சட்டசபை, தேர்தலில் தனித்து போட்டியிட்ட விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வானார்.அந்த தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிராக, விஜயகாந்த் தீவிர பிரசாரம் செய்தாலும், அக்கட்சியே ஆட்சியை கைப்பற்றியது. அதே ஆண்டு, டிச., 14ம் தேதி, அப்…

    • 7 replies
    • 941 views
  14. காங்கிரசுக்கு காத்திருக்கு தோல்வி ! கணிப்பு சொல்கிறது வரவிருக்கும் 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெரும் தோல்வியை சந்திக்கும் என பிரபல ஆங்கில நாளேடு ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. சமீபத்திய ஊழல் பிரச்னையினால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிதின்கட்காரி மீதான ஊழல் புகாரினால் பா.ஜ.,வின் மதிப்பு சற்று குறையவிருந்த நேரத்தில் புதிய தலைவராக ராஜ்நாத்சிங் தேர்வு செய்யப்பட்டிருப்பதால் சற்று எழுந்து நிற்க முடியும் என கணிப்பில் தெரிய வந்துள்ளது. மோடிபிரதமராக விருப்பம் : @@வரும் 2014 லோக்சபா தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு, 152 முதல் 162 இடங்களை மட்டுமே கிடைக்கும் . பா.ஜ., தலைமைய…

  15. நெல்லை: கூடங்குளம் அணு உலையில் கசிவு இருந்தது. ஆனால் அதை சரிசெய்தாகி விட்டது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூடங்குளம் அணு உலையில் 99.8 சதவீத பணிகள் முடிந்துவிட்டது. கடந்த 15ம் தேதியே அணு உலையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் சோதனை தள்ளிப்போனதால் தாமதமானது. இது குறித்து அணு சக்தி ஒழுங்குமுறை ஆணைய தலைவருடன் தொலைபேசியில் பேசினேன். விரைவில் பதில் கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும் என்றார். அணு உலையில் கசிவு இருந்ததாக உதயகுமார் உள்ளிட்டோர் கூறி வருவது பற்றி கேட்டதற்கு அவர் கூறுகையில், அணு உலையில் கசிவு ஏற்பட்டது உண்மையே. வெப்ப நீரை கடத்திச் செல்லும் அமைப்பில…

    • 3 replies
    • 890 views
  16. சிட்னிக்கு லண்டனிலிருந்து செல்வதற்கு 90 நிமிடங்களே போதும்! [sunday, 2013-01-27 10:45:07] SpaceLiner எனும் விமான நிறுவனம் தயாரிக்கவுள்ள அதிகூடிய தொழிநுட்பத் திறன் மிக்க Hypersonic விமானத்தில் இலண்டனில் இருந்து சிட்னிக்கு 90 நிமிடங்களில் சென்று விட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Hypersonic விமானம் ஒலியின் வேகத்தை விட 24 மடங்கு அதிக வேகத்துடன் பயணிக்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விமானத்தில் 50 பயணிகள் வரை பயணிக்க முடியும். இவ்விமானத்துடன் பொருத்தப்பட்டுள்ள ராக்கெட்டின் உதவியோடு பூமியின் தரையிலிருந்து 8 நிமிடங்களுக்குள் 50 மைல் உயரத்துக்கு வானில் ஏறக்கூடிய இந்த விமானம் திரவ நிலை ஆக்ஸிஜனை விமான எரிபொருளாகவும் ஐதரசன் வாயுவை ராக்கெட்டின் எரிபொருளாகவும் உபயோகித…

  17. இந்திய திருநாட்டின் 64 வது குடியரசு தின கொண்டாட்டம் நாடு முழுவதும் கோலாகலமாக நடந்து வருகிறது. டில்லி ,சென்னை, மும்பை உள்ளிட்ட அனைத்து மாநில, மாவட்டம் முழுவதும் விழாவில் மாணவ. மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. டில்லி ராஜ்பாத்தில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தேசிய கொடியேற்றி வைத்தார். ஆகாயத்தில் பறந்தபடி ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பூட்டான் மன்னர் ஜிக்மி கேசார் வாங்சக் பங்கேற்றார். இவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை தளபதிகளும்ஜனாதிபதிக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். சென்னையில் கவர்னர் ரோசையா ; குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த விழாவில் கவர்னர் ரோசையா த…

    • 6 replies
    • 621 views
  18. சர்வதேச நாணய நிதியம் ஜனவரி 23ஆம் நாள் இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டின் உலகப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் முறையே 3.5 விழுக்காடாகவும், 4.1 விழுக்காடாகவும் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார மீட்சி குறிப்பிடத்தக்க இடர்ப்பாடுகளை எதிர்நோக்க உள்ளது என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டின் சீனப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் முறையே 8.3 விழுக்காடு, 8.5 விழுக்காடு உயரும். இந்தியப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் முறையே 5.9 விழுக்காடு, 6.4 விழுக்காட்டை எட்டும் என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடு செய்துள்ளது. http://tamil.cri.cn/121/2013/01/24/1s124819.htm

    • 2 replies
    • 366 views
  19. புதுடில்லி: பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மயிலானந்தன், நடிகை ஸ்ரீதேவி, டாக்டர் தேவராஜன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி பத்ம பூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கலை, சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்ற பிரிவுகளில், சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தையொட்டி, பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர், பெயர் விவரம் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம், 108 பேர், பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்ப…

  20. தெலுங்கானா...தெலுங்கானா...! வரும்...ஆனா வராது ? வரும் சனவரி '28க்குள் ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, தெலுங்கானா மற்றும் ஆந்திரா என பிரிவினை பற்றிய முறையான அறிவிப்பை, மத்தியிலுள்ள காங்கிரசு கட்சி வெளியிடப்போகிறதென பல்வேறு ஊடகங்கள் எதிர்வு கூறும் நிலையில், தெலுங்கானா பற்றி வரலாற்றை அறியும்பொருட்டு, இணையத்தில் தமிழில் தேடினேன். கிட்டியதை யாழுக்காக பகிர்கிறேன். குறிப்பு: 'பொட்டி ஸ்றீராமுலு' என்பவரின் தலைமையில் நடந்த ஆந்திரர்களின் அடங்காத கிளர்ச்சியின் விளைவாகவே அப்போதிருந்த ஒன்றுபட்ட சென்னை மாகாணம் (ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளடக்கிய பகுதிகள்) பிரிந்து மொழிவாரியாக மாநிலங்கள் பிளக்கப்பட்ட பின், தமிழர்கள் பல பகுதிகளை அண்டை மாநிலத்த…

    • 5 replies
    • 2.6k views
  21. எகிப்தில் மீண்டும் கலவரம்! By General 2013-01-26 14:24:20 எகிப்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கலவரம் ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த ஹோஸ்னி முபாரக்கை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து முபாரக் பதவி விலகினார். தற்போது தேர்தல் மூலம் முகமது முர்சி புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தணக்கு அதிகாரம் குவியும் வண்ணம் புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், கலவரம் நடந்த 2-ம் ஆண்டு நிறைவு நேற்று முன்தினம் கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி, எற்கனவே போராட்டம் நடந்த கெய்ரோ தக்ரீக் மைதானத்தில் ஏராளமானவர்கள் திரண்டனர…

  22. எகிப்தில் சென்ற ஆண்டு போர்ட் செய்யது என்ற கடலோர நகரில் கால்பந்தாட்டம் ஒன்றின்போது நடந்த 70 பேருக்கும் அதிகமானோரை பலிகொண்ட வன்முறை தொடர்பில் அந்நாட்டின் நீதிமன்றம் 21 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. தீர்ப்பு வாசிக்கப்பட்ட நேரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியிருந்து மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது. ஆனால் தண்டனைக்குள்ளான நபர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள போர்ட் செய்யது நகர சிறையின் அருகே ஆட்களின் குடும்பத்தார் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கலவரத்தில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் பொலில் அதிகாரிகள் ஆவர். குறைந்தது ஐம்பத் பேர் இந்த கலவரங்களில் காயமும் அடைந்துள்ளனர். சென்ற வருடம் போர்ட் செய்யது நகரத்து கால்பந்தாட்ட கழகத்துக்கும…

  23. புளோரன்ஸ் கசே பிரான்சின் வடபகுதிலுள்ள பா து கலே( Pas-de-Calais)மாவட்டத்தில் இருக்கும் பெத்துயின்(Béthune)என்ற ஒரு சிறு நகரத்தைச் சேர்ந்த 39வயதுப் பெண். கடந்த 23.01.2013 புதன்கிழமையும் 24.01.2013வியாழக்கிழமையும் அவர் பிரான்சிலுள்ள அனைத்து ஊடகங்களினதும் கவனத்தை தன்பக்கம் திருப்பிய ஒருவராக இருந்தார்.பிரான்சிலுள்ள முக்கியமான அனைத்து காட்சி ஊடகங்களிலும் அவரது நேர்காணல்கள் ஒளிபரப்பாகின. பிரான்சின் தற்போதைய அரசுத்தலைவர் பிரான்சுவா ஹொல்லாந்த் முன்னாள் அரசுத்தலைவர் நிக்கோலா சார்க்கோசி முதல் அமைச்சர்கள் அரசியல்வாதிகள் புத்திஜீவிகள் என்று அனைத்து தரப்பினரும் அவரைப்பற்றி பேசினார்கள். இத்தனைக்கும் அவர் பிரெஞ்சுக் குடியரசைச் சேர்ந்த ஒரு சராசரிப் பெண்;. ஆனால் அந்நிய நாடொன்றில் ஆபத்…

    • 5 replies
    • 652 views
  24. மும்பை தாக்குதல் சதிகாரன் ஹெட்லிக்கு மரண தண்டனை விதிக்க இந்தியா வலியுறுத்தல் மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சதிகாரன் டேவிட் ஹெட்லிக்கு அமெரிக்க நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததது போதாது, மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.மும்பையில் கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கடல் வழியே ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் 166 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப்பை தவிர மற்றவர்கள் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.இந்த தாக்கு தலுக்கு மூளையாக செயல்பட்டவன் டேவிட…

  25. கடந்த சில வாரங்களாகவே கடும் குளிரால் வாடிய அமீரக மக்கள், நேற்றும், இன்றும் துபாயில் கடும் மூடுபனி காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளனர். மூடுபனி காரணமாக அபுதாபி - துபாய் அதிவேக போக்குவரத்து மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. துபாய் விமான நிலையத்தில் இருபது விமான சேவைகளும் ரத்தாகியுள்ளது. மூடு பனியில் மூழ்கிய துபாய் நகரின் சில படங்கள் Sheik zayed Road New Etisalat Building Dubai Metro Clock Tower Sky scrappers in Sheik Zayed Road Poor visibility to walk Dubai Creek Near Gold Souq Women in fog Dangerous driving Image Source: Gulf News.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.