உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27026 topics in this forum
-
இந்திய திருநாட்டின் 64 வது குடியரசு தின கொண்டாட்டம் நாடு முழுவதும் கோலாகலமாக நடந்து வருகிறது. டில்லி ,சென்னை, மும்பை உள்ளிட்ட அனைத்து மாநில, மாவட்டம் முழுவதும் விழாவில் மாணவ. மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. டில்லி ராஜ்பாத்தில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தேசிய கொடியேற்றி வைத்தார். ஆகாயத்தில் பறந்தபடி ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பூட்டான் மன்னர் ஜிக்மி கேசார் வாங்சக் பங்கேற்றார். இவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை தளபதிகளும்ஜனாதிபதிக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். சென்னையில் கவர்னர் ரோசையா ; குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த விழாவில் கவர்னர் ரோசையா த…
-
- 6 replies
- 622 views
-
-
சர்வதேச நாணய நிதியம் ஜனவரி 23ஆம் நாள் இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டின் உலகப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் முறையே 3.5 விழுக்காடாகவும், 4.1 விழுக்காடாகவும் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார மீட்சி குறிப்பிடத்தக்க இடர்ப்பாடுகளை எதிர்நோக்க உள்ளது என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டின் சீனப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் முறையே 8.3 விழுக்காடு, 8.5 விழுக்காடு உயரும். இந்தியப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் முறையே 5.9 விழுக்காடு, 6.4 விழுக்காட்டை எட்டும் என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடு செய்துள்ளது. http://tamil.cri.cn/121/2013/01/24/1s124819.htm
-
- 2 replies
- 367 views
-
-
புதுடில்லி: பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மயிலானந்தன், நடிகை ஸ்ரீதேவி, டாக்டர் தேவராஜன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி பத்ம பூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கலை, சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்ற பிரிவுகளில், சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தையொட்டி, பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர், பெயர் விவரம் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம், 108 பேர், பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்ப…
-
- 15 replies
- 1.7k views
-
-
தெலுங்கானா...தெலுங்கானா...! வரும்...ஆனா வராது ? வரும் சனவரி '28க்குள் ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, தெலுங்கானா மற்றும் ஆந்திரா என பிரிவினை பற்றிய முறையான அறிவிப்பை, மத்தியிலுள்ள காங்கிரசு கட்சி வெளியிடப்போகிறதென பல்வேறு ஊடகங்கள் எதிர்வு கூறும் நிலையில், தெலுங்கானா பற்றி வரலாற்றை அறியும்பொருட்டு, இணையத்தில் தமிழில் தேடினேன். கிட்டியதை யாழுக்காக பகிர்கிறேன். குறிப்பு: 'பொட்டி ஸ்றீராமுலு' என்பவரின் தலைமையில் நடந்த ஆந்திரர்களின் அடங்காத கிளர்ச்சியின் விளைவாகவே அப்போதிருந்த ஒன்றுபட்ட சென்னை மாகாணம் (ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளடக்கிய பகுதிகள்) பிரிந்து மொழிவாரியாக மாநிலங்கள் பிளக்கப்பட்ட பின், தமிழர்கள் பல பகுதிகளை அண்டை மாநிலத்த…
-
- 5 replies
- 2.6k views
-
-
எகிப்தில் மீண்டும் கலவரம்! By General 2013-01-26 14:24:20 எகிப்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கலவரம் ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த ஹோஸ்னி முபாரக்கை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து முபாரக் பதவி விலகினார். தற்போது தேர்தல் மூலம் முகமது முர்சி புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தணக்கு அதிகாரம் குவியும் வண்ணம் புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், கலவரம் நடந்த 2-ம் ஆண்டு நிறைவு நேற்று முன்தினம் கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி, எற்கனவே போராட்டம் நடந்த கெய்ரோ தக்ரீக் மைதானத்தில் ஏராளமானவர்கள் திரண்டனர…
-
- 0 replies
- 412 views
-
-
எகிப்தில் சென்ற ஆண்டு போர்ட் செய்யது என்ற கடலோர நகரில் கால்பந்தாட்டம் ஒன்றின்போது நடந்த 70 பேருக்கும் அதிகமானோரை பலிகொண்ட வன்முறை தொடர்பில் அந்நாட்டின் நீதிமன்றம் 21 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. தீர்ப்பு வாசிக்கப்பட்ட நேரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியிருந்து மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது. ஆனால் தண்டனைக்குள்ளான நபர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள போர்ட் செய்யது நகர சிறையின் அருகே ஆட்களின் குடும்பத்தார் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கலவரத்தில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் பொலில் அதிகாரிகள் ஆவர். குறைந்தது ஐம்பத் பேர் இந்த கலவரங்களில் காயமும் அடைந்துள்ளனர். சென்ற வருடம் போர்ட் செய்யது நகரத்து கால்பந்தாட்ட கழகத்துக்கும…
-
- 1 reply
- 448 views
-
-
புளோரன்ஸ் கசே பிரான்சின் வடபகுதிலுள்ள பா து கலே( Pas-de-Calais)மாவட்டத்தில் இருக்கும் பெத்துயின்(Béthune)என்ற ஒரு சிறு நகரத்தைச் சேர்ந்த 39வயதுப் பெண். கடந்த 23.01.2013 புதன்கிழமையும் 24.01.2013வியாழக்கிழமையும் அவர் பிரான்சிலுள்ள அனைத்து ஊடகங்களினதும் கவனத்தை தன்பக்கம் திருப்பிய ஒருவராக இருந்தார்.பிரான்சிலுள்ள முக்கியமான அனைத்து காட்சி ஊடகங்களிலும் அவரது நேர்காணல்கள் ஒளிபரப்பாகின. பிரான்சின் தற்போதைய அரசுத்தலைவர் பிரான்சுவா ஹொல்லாந்த் முன்னாள் அரசுத்தலைவர் நிக்கோலா சார்க்கோசி முதல் அமைச்சர்கள் அரசியல்வாதிகள் புத்திஜீவிகள் என்று அனைத்து தரப்பினரும் அவரைப்பற்றி பேசினார்கள். இத்தனைக்கும் அவர் பிரெஞ்சுக் குடியரசைச் சேர்ந்த ஒரு சராசரிப் பெண்;. ஆனால் அந்நிய நாடொன்றில் ஆபத்…
-
- 5 replies
- 663 views
-
-
மும்பை தாக்குதல் சதிகாரன் ஹெட்லிக்கு மரண தண்டனை விதிக்க இந்தியா வலியுறுத்தல் மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சதிகாரன் டேவிட் ஹெட்லிக்கு அமெரிக்க நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததது போதாது, மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.மும்பையில் கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கடல் வழியே ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் 166 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப்பை தவிர மற்றவர்கள் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.இந்த தாக்கு தலுக்கு மூளையாக செயல்பட்டவன் டேவிட…
-
- 0 replies
- 377 views
-
-
கடந்த சில வாரங்களாகவே கடும் குளிரால் வாடிய அமீரக மக்கள், நேற்றும், இன்றும் துபாயில் கடும் மூடுபனி காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளனர். மூடுபனி காரணமாக அபுதாபி - துபாய் அதிவேக போக்குவரத்து மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. துபாய் விமான நிலையத்தில் இருபது விமான சேவைகளும் ரத்தாகியுள்ளது. மூடு பனியில் மூழ்கிய துபாய் நகரின் சில படங்கள் Sheik zayed Road New Etisalat Building Dubai Metro Clock Tower Sky scrappers in Sheik Zayed Road Poor visibility to walk Dubai Creek Near Gold Souq Women in fog Dangerous driving Image Source: Gulf News.
-
- 34 replies
- 2.6k views
-
-
ஸ்டாலினால் தி.மு.கவைக் காப்பாற்ற முடியுமா? “அடுத்த ஆட்சியை தி.மு.க அமைப்பதை விரும்புகிறேனா என்றால் நிச்சயம் இல்லை. தி.மு.க, அ.இ.அ.தி.மு.க இரு கட்சிகளுமே மீண்டும் ஆட்சிக்கு வருவதை நான் விரும்பவில்லை. அதே சமயம் மக்கள் தி.மு.கவை ஆள்வதற்குத் தேர்ந்தெடுப்பார்களானால், தி.மு.கவின் முதலமைச்சராக ஸ்டாலின் வருவதையே நான் விரும்புகிறேன். அப்பாவின் எல்லா பாவங்களுக்கும் இல்லாவிட்டாலும் பல பாவங்களுக்குப் பரிகாரம் செய்யக்கூடியவராக செயல்படும் வாய்ப்புள்ள ஒரே வாரிசு அந்தக் குடும்பத்தில் அவர் ஒருவர்தான்.” ஆகஸ்ட் 2010ல் நான் எழுதிய இந்த வரிகளைத்தான் இப்போதும் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். ஒரு வழியாக கலைஞர் கருணாநிதி தான் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைத் தாமதமாகவ…
-
- 1 reply
- 317 views
-
-
-
- 6 replies
- 667 views
-
-
புதுடில்லி :""வரும் லோக்சபா தேர்தலில், குஜராத் முதல்வர், நரேந்திர மோடி முக்கிய பங்காற்றுவார்,'' என, பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர், ராஜ்நாத் சிங் கூறினார்.இது குறித்து அவர், நேற்று கூறியதாவது:நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தை, அனைத்து துறைகளிலும், மாதிரி மாநிலமாக மாற்றி காட்டியுள்ளார். மாநில நிர்வாகம் மிக சிறப்பாக உள்ளது; அவரின் புகழ், நாடு முழுதும் பரவியுள் ளது. வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்காக அவர் முக்கிய பங்காற்றுவார்; அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.கட்காரியை மீண்டும் கட்சி தலைவராக ஆக்க வேண்டும் என, எங்கள் தாய் அமைப்பான, ஆர்.எஸ். எஸ்.,சில் இருந்து எந்த நிர்பந்தமும் வரவில்லை. கட்காரி தொடர்புடைய இடங்களில், சோதனை நடத்தப்பட்டதை மீடியாக்கள் பெரிதாக்கி காட்…
-
- 0 replies
- 335 views
-
-
இன்றைய வாழ்க்கை சூழலில் விமானத்தில் பயணிப்பது என்பது தவிர்க்க முடியாத ஒரு ஊர்தியாகும். கடல் கடந்து தொழில் செய்பவர்களுக்கெல்லாம் இது ஒரு வரப்பிரசாதம். உலகை நாம் நேரில் காண வழிவகுக்கும் ஒரு போக்குவரத்து. ஆனால் இது எவ்வளவு வசதியானதோ அந்த அளவுக்கு பாதுகாப்பும் இல்லாதது. Jet Airliner Crash Data Evaluation Centre (JACDEC) என்கின்ற ஒரு நிறுவனம் விமான விபத்துகள் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றிய தகவல்களை சேகரித்து அதன் வருடாந்திர விமானத்துறை பாதுகாப்பு ரேங்கிங்கை வெளியிட்டுள்ளது. இந்த ரேங்கிங் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்றால் எத்தனை விமானங்கள் சேதமாகின, எத்தனை உயிரிழப்புகள் ஏற்ப்பட்டன என்பதை வைத்தும் (கடந்த 30 வருடங்களில்) மேலும் சில அடிப்படைகளை வைத்தும் வழங்கப்படுகின்றன. அ…
-
- 2 replies
- 397 views
-
-
வலியற்ற கொலையின் பண்புநெறியும் சட்டமும் குறித்து இந்தியாகூட விவாதித்திருக்க, எவரிடம் நீர் கேட்கின்றீர் என்பதைப் பொறுத்து, தெற்கு மாநிலமான தமிழ் நாட்டின் மூன்று மாகாணங்கள், ஓசையில்லாது உள்@ரில் விளைந்துவந்த கருத்தொன்றை பத்து அல்லது நூறு ஆண்டாக, எடுத்துச் செல்கிறது. இன்னம்ரெட்டியார்பட்டி, இந்தியா — தெற்கு இந்தியாவின் அந்த வறிய பகுதியில், தனது மனைவி, பிள்ளைகளோடு உடல்வலுவற்ற தாயை வீட்டில் விட்டுவிட்டு, மைக்கேல் ஒரு துணி நெய்யப்படும் ஆலைக்கு வேலைக்குச் சென்றான். அவன் சில மணி நேரத்தின் பின்பு திரும்பிவந்தபோது அவனுடைய மனைவியினால் நஞ்சு போன்ற நீரம் பருக்கி நஞ்சூட்டி, ‘தாலிக்கூதல்’ என அறியப்படுகின்ற, உள்ளூர் வகையான இரக்கக் கொலை செய்யப்பட்டிருந்த அவனது தாயாருடைய உடல் ஒரு நாற்காலிய…
-
- 0 replies
- 426 views
-
-
சிங்கப்பூர்: என்னை பிரதமர் வேட்பாளர் என்று திரும்பத் திரும்பத் கூறுவது எனக்கு ஆச்சரியமாகவும், வினோதமாகவும் இருக்கிறது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக ப.சிதம்பரம் நிறுத்தப்படலாம் என்ற பேச்சு சில மாதங்களாக அடிபட்டு வந்தது. இதற்கு சமீபத்தில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்று கூறியிருந்தார். இந்தநிலையில் சிஎன்பிசி டிவி 18தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியொன்றில், எனது அளவு, எல்லை என்ன என்பது எனக்குத் தெரியும். எனவே நான் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்வி எனக்கு ஆச்சரியமாகவும், வினோதமாகவும் இருக்கிறது. எனது எல்லைக்குட்பட்டு நான் செயல்பட்டு வருகிறேன். …
-
- 2 replies
- 431 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி மிக, மிக மோசமாக உள்ளதாக ஏபிபி நியூஸ்-நீல்சன் நிறுவனம் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. பிரபல ஏபிபி நியூஸ்-நீல்சன் நிறுவனம் சார்பில் யார் சிறந்த பிரதமராகலாம் என்றும் அடுத்த பிரமதராகும் தகுதி குறித்தும் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பு இந்தியாவின் 28 நகரங்களில் சுமார் 10 ஆயிரம் பேரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. முதல் தகவலாக பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. அந்த கூட்டணிக்கு 39 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் பா.ஜ.க.வின் வளர்ச்சி அபரிதமாக இருப்பதாகவும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவர்களில் பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதிய…
-
- 2 replies
- 788 views
-
-
""பள்ளிக்கல்வியை தமிழ் மீடியத்தில் படித்து, "சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்' தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது பெருமையாக உள்ளது,'' என, மும்பையில் ஆட்டோ ஒட்டும் தமிழகத்தை சேர்ந்த, டிரைவர் மகள் பிரேமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பெரிய கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 53; ஆட்டோ டிரைவர். மும்பையில், மலாட் எஸ்.பி., கான்சால் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி லிங்கம்மாள், 45, மகள்கள் மகாலட்சுமி, 27, பிரேமா, 25, மகன் தன்ராஜ், 23. மகாலட்சுமிக்கு திருமணம் ஆகிவிட்டது. கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், பெரிய கொள்ளியூரில் விவசாய கூலிவேலை செய்து வந்த ஜெயக்குமார், போதிய வருவாய் கிடைக்காததால், தன்…
-
- 4 replies
- 650 views
-
-
டேராடூன்: டில்லியில், கடந்த மாதம், 16ம் தேதி இரவு, ஓடும் பஸ்சில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டு, சிங்கப்பூர் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். "பிசியோதெரபி' படித்த இந்த மாணவி, கடைசியாக எழுதிய தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகிஉள்ளன. இதுதொடர்பாக, மாணவி படித்த, சாய் நிறுவனத்தின் டீன் ஹரீஷ் அரோரா கூறியதாவது: பாலியல் பலாத்காரத்தில் பலியான மாணவி, 2008ம் ஆண்டு, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, எச்.என்.பி.கார்வால் பல்கலையின் கீழ் செயல்படும், எங்கள் கல்வி நிறுவனத்தில், பிசியோதெரபி பாட வகுப்பில் சேர்ந்தார். நான்கு ஆண்டு பட்டப்படிப்பான அதில், அவர் கடைசியாக எழுதிய தேர்வில், அனைத்துப் பாடங்களிலும் சேர்த்து, 73 சத…
-
- 0 replies
- 435 views
-
-
சென்னை,ஜன.25 (டி.என்.எஸ்) இன்று (ஜனவரி 25) வெளியாக இருந்த விஸ்வரூபம் படத்திற்கு, இஸ்லாமியர்களின் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து நாளை (சனிக்கிழமை) உயர்நீதிமன்ற நீதிபதிக்கு விஸ்வரூபம் படம் போட்டு காண்பிக்கப்படுகிறது. இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளனவா என்பது பற்றி நீதிபதி ஆய்வு செய்வதற்காக இந்த திரையிடல் நடைபெறுகிறது. நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) திரையரங்குகளில் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்திரிக்கும் ஏராளமான காட்சிகள் உள்ளதாகவும், எனவே இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இஸ்லாமி…
-
- 0 replies
- 405 views
-
-
டெல்லி: ஏர்டெல், வோடபோன் செல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை இரு மடங்கு அதிகரித்துள்ளன. ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் என்பது 2 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஐடியா நிறுவனம், ஒரு நொடிக்கு 1.2 பைசா என்று இருந்ததை 2 பைசாவாக அதிகரித்து உள்ளது. செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இதுவரை கட்டணத்தை உயர்த்தாமலே இருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்ட பிறகு ரூ.23,000 கோடி கட்டணம் செலுத்தும்படி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. ஸ்பெக்ட்ரம் அனுமதி கட்டணம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் சேவைக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 644 views
-
-
சென்னை ,ஜனவரி 25 . ரயில் நிலையங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,” தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள்,பிளாட்பாரங்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க முன்வந்து உள்ளது. இதன் காரணமாக ரயில் நிலையங்களில் எச்சில் துப்புவது,குளிப்பது,சிறுநீர் கழித்தல்,துணி துவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ரயில்வே சட்டபிரிவுபடி ரூ.500 அபராதம் விதிக்கப்படும். ரயில்களில் போஸ்டர் ஒட்டுதல் மற்றும் சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களுக்கும் இந்த சட்டம் ப…
-
- 0 replies
- 430 views
-
-
ராமேஷ்வரம்,ஜன.19 (டி.என்.எஸ்) பாம்பேன் ரயில் பாலத்தின் மீது கப்பல் மோதியதற்கு மாலுமியின் கவனக்குறைவே காரணம் என்று கடலோர படை கூடுதல் இயக்குனர் சைலேந்திர பாபு கூறியுள்ளார். பாம்பன் பாலம் மீது கப்பல் மோதி விபத்து ஏற்பட்ட இடத்தை இன்று நேரில் ஆய்வு செய்த சைலேந்திர பாபு செய்தியாளர்களிடன் பேசுகையில், "இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க கப்பல் மாலுமியின் கவனக் குறைவேக் காரணம். இதனால் பாம்பன் பாலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கும் மேல் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பாலத்துக்கு சுமார் 3.8 நாடிங்கல் மைல் தூரத்தில் நிறுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு கப்பல் நிறுத்தப்படவில்லை. எனவே, கப்பல் மாலுமிகள் மீது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, கவனக்குறைவாக நடந்து கொண்டது…
-
- 0 replies
- 1.5k views
-
-
சென்னை,ஜன.25 (டி.என்.எஸ்) சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் புதிய மருத்துவமனையாகப் போகிறது. ஆம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடந்த திமுக ஆட்சியின் போது சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டப்பட்டு, அதில் தமிழக சட்டசபை இயங்கி வந்தது. இதற்கிடையில் ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு வந்ததும், புதிய கட்டிடத்தில் செயல்பட்ட தலைமை செயலகத்தை, மீண்டும் பழைய ஜார்ஜ் புனித கோட்டைக்கே மாற்றப்பட்டது. மேலும் புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப் போவதாகவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து வழக்குறிஞர் ஆர…
-
- 0 replies
- 504 views
-
-
சென்னை,ஜன.25 (டி.என்.எஸ்) உரத் துறையில் ரூ.1,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ள அந்தத் துறையின் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமன் மன்மோகன் சிங்கிட வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உரங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிலையாக இருக்கும் வகையில், உரத்துக்கான மானியத்தை அவ்வப்போது மாற்றி நிர்ணயிக்கும் முறையை மத்திய அரசு கடைப்பிடித்து வந்தது. இதனால் உரங்கள் விவசாயிகளுக்கு ஓரளவு நியாயமான விலையில் கிடைத்து வந்தன. 2010 ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் என்ற புதிய கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. இந்தக் கொள்கையின்படி, உரங்களுக்…
-
- 0 replies
- 397 views
-
-
உலகளாவிய உணவுப் பொருள் ஊக வணிகத்தில் கோல்டமேன் சாக்ஸ் நிறுவனம் 2012ம் ஆண்டு $400 மில்லியன் (சுமார் ரூ 2,000 கோடி) லாபம் சம்பாதித்திருக்கிறது. தனது வாடிக்கையாளர்களின் பணத்தை கோதுமை, மக்காச் சோளம், காபி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களின் மீதான ஊக வணிகத்தில் ஈடுபடுத்தியதாக கோல்ட்மேன் சாக்ஸின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. “போதுமான உணவு வாங்க முடியாமல் உலகெங்கிலும் சுமார் 100 கோடி மக்கள் பட்டினியாக இருக்கும் நிலையில், உணவுப் பொருட்களின் விலை மீது சூதாடி கோல்மேன் சாக்ஸ் அலுவலர்கள் தங்களது போனசை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் உலக முன்னேற்ற இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த கிறிஸ்டீன் ஹெய்க். 1990களில் இறுதியில் தாராளமய கொள்கைகள் செயல்படுத்தப்பட்ட பிறகு உணவுப் பொரு…
-
- 0 replies
- 393 views
-