Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாங்கொக்கில் தீ விபத்து; 1000 விலங்குகள் உயிரிழப்பு! தாய்லாந்தின் பாங்கொக் நகரில் உள்ள பிராணிகள் விற்கும் சந்தையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 1000 விலங்குகள் உயிரிழந்துள்ளன. இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் 100 கடைகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்த விலங்குகளில் நாய்கள், பூனைகள், பாம்புகள் உள்ளிட்டவை அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாகவே குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதில் மனிதர்கள் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1387212

  2. மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி சென்ற விமானம் மாயம்…! தேடுதல் பணி தீவிரம்..! தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போனதால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. மலாவி தலைநகர் லிலாங்வேயில் இருந்து துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா (51) மற்றும் 9 பேருடன் திங்கட்கிழமை காலை புறப்பட்ட மலாவிய பாதுகாப்பு படை விமானம், ராடாரில் இருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ரேடாரில் இருந்து விலகியதில் இருந்து விமானத்துடன் தொடர்பு கொள்ள விமான அதிகாரிகளின் அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளன” என்று மலாவியின் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை தெரிவித்த…

  3. இன்று பிராந்சில் நடந்து முடிந்த ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தேசியவாத தீவிர வலதுசாரி கட்சி (RN) 31.5 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. வெற்றிபெற்ற Rassemblement national கட்சி உறுப்பினர்கள் நாசிகளுடன் தொடர்புடையவர்களாக பல தடவை சர்ச்சைக்குட்பட்டவர்கள். இக் கட்சியின் தலைவர் மரின் லுபென் ரஸ்ய அதிபர் புதினிடம் சட்டவிரோதமகப் பணம் பெற்று ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர். இவர்கள் பிரான்சிலுள்ள அனைத்து வெளிநாட்டவரையும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். ஏனைய தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் 40 வீதமான வாக்குகள் தேசியவாதக் கட்சிகளுக்குக் கிடைத்துள்ளது. இத் தேர்தலில் ஆளும் கட்சி பலத்த தோல…

  4. 09 JUN, 2024 | 12:50 PM ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் புதல்விகள் வழமைக்கு மாறாக நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளனர். ரஸ்யாவின் சென்பீட்டர்ஸ்பேர்க்கில் இடம்பெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் புட்டினின் புதல்விகள் கலந்துகொண்டுள்ளனர். மரியா வொரொன்ட்சோவாவும் கட்டரினாஎடிகோனோவாவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் 30 வருட திருமண வாழ்க்கையின் பின்னர் 2013 இல் புட்டின் விவகாரத்து செய்த முதல் மனைவியின் பிள்ளைகள் என்பதுகுறிப்பிடத்தக்கது. தனது பிள்ளைகள் விஞ்ஞான கல்வித்துறையில் பணிபுரிவதாகவும் தனக்கு பேரப்பிள்ளைகள் உள்ளதாகவும் புட்டின் தெரிவித்துள்ளார்- எனினும் அது ஒருபோதும் உறுதி செய்யப்படவில்லை.' …

  5. சுவிட்சர்லாந்தில் KP.2 என்ற புதிய கொவிட் மாறுபாடு பரவ ஆரம்பித்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கோடை மாதங்கள் முழுவதும் இந்த கொவிட் மாறுபாடு காணப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கொவிட் மாறுபாடு வேகமாகப் பரவி வருவதாகவும் இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அந்த நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், புதிய கொவிட் மாறுபாடு அதன் தீவிரப் போக்கை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/303392

  6. நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல் கடந்தவருடம் அக்டோபர் மாதத்தில் ஹமாஸ் அமைப்பினால் இஸ்ரேலினுள் நடத்தப்பட்ட தாக்குதலின்போது பணயக கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களில் நால்வரை இஸ்ரேல் நேற்று விடுவித்திருக்கிறது. இஸ்ரேலிய விசேட படைகளும், பொலீஸாரும் இணைந்தே இந்த மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறார்கள். பலஸ்த்தீன அகதிகள் முகாம் ஒன்று அமைந்திருக்கும் நஸ்ரெயிட் பகுதியின் இரு வேறு மறைவிடங்களின்மேல் இஸ்ரேலிய படைகள் நடத்திய மீட்பு நடவடிக்கையின்போதே இந்த நான்கு இஸ்ரேலியர்களும் மீட்கப்பட்டிருக்கிறார்கள். விசேட படைகள் இப்பகுதிக்குள் நுழையுமுன் இப்பகுதி மீது மிகக் கடுமையான ரொக்கெட் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டிருக்கிறது. …

  7. திறந்த வெளிச்சிறைச்சாலையில் சிக்குண்டுள்ளோம் - பாதுகாப்பற்றவர்களாக உணர்கின்றோம் வீதியில் நடமாடவும் பயமாக உள்ளது - டியாகோகார்சியாவிலிருந்து ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட இலங்கை தமிழர்கள் Published By: RAJEEBAN 07 JUN, 2024 | 03:22 PM By Alice Cuddy & Swaminathan Natarajan, BBC News டியாகோ கார்சியாவிலிருந்து ருவாண்டாவிற்கு பிரிட்டிஸ் அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகள் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பற்றவர்களாக உணர்வதாக பிபிசிக்கு தெரிவித்துள்ளனர். இலங்கையர்களில் ஒருவர் ருவாண்டாவை திறந்தவெளிசிறைச்சாலை என வர்ணித்துள்ளார். …

  8. Published By: RAJEEBAN 08 JUN, 2024 | 09:37 AM டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் மீது கொப்பன்ஹேகன் வீதியில் நபர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டு;ள்ளார். நகரத்தின் சதுக்கத்தில் நபர் ஒருவர் பிரதமரை நோக்கி சென்று அவர் மீது தாக்குதலை மேற்கொண்டார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஐரோப்பாவில் நாம் நம்புகின்ற குரல் கொடுக்கின்ற அனைத்திற்கும் எதிரான இழிவான செயல் இதுவென ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் உருசுலா வொன்டெயர் லெயென் தெரிவித்துள்ளார். கொப்பன்ஹேகனின் குல்டிரோவேர்ட் பகுதியில் நபர் ஒருவர் டென்மார்க் பிரதமரை தாக்கினார், இந்த சம்பவத்தினால் பிரதமர் அதிர்ச்சியட…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் இங்கிலாந்து அரசர் சார்லஸ் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் நார்மண்டி தரையிறக்கத்தின் 80-வது ஆண்டு நிறைவை 'டி-டே' வீரர்களுடன் கொண்டாடினர். இங்கிலாந்து அரசர், அரசி மற்றும் வேல்ஸ் இளவரசர் ஆகியோர் ஆண்டு நிறைவைக்குறிக்க புதன்கிழமை போர்ட்ஸ்மவுத்தில் நேற்று (ஜூன் 6-ஆம் தேதி) நடந்த விழாவில் கலந்துகொண்டனர். டி-டே (D Day) என்றால் என்ன? இது ஏன் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது? பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். டி-டே என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து, அம…

  10. பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், 84 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த சிறுபடகொன்று ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய அரசு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டாலும், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்ந்தோர் சற்றும் தங்கள் முயற்சியை தொடர்கின்றனர். இன்று காலை, 84 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் சிறுப டகொன்று பிரான்ஸிலிருந்து புறப்பட்டுள்ளது. குழந்தை உட்பட மூன்று சிறுவர்கள் அந்தப் படகு ஆங்கிலக்கால்வாயில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென அதன் இயந்திரம் பழுதடைந்துள்ளது. ஆகவே, மீண்டும் திரும்பி பிரான்சுக்கே சென்றுவிடலாம் என …

  11. மத்திய காசாவில் இஸ்ரேலின் புதிய படை நடவடிக்கையில் 75 பேர் பலி - மக்கள் இரவோடு இரவாக வெளியேற்றம் Rizwan Segu MohideenJune 6, 2024 காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான எதிர்பார்ப்பு குறைந்து வரும் நிலையில் மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய சரமாரி தாக்குதல்களில் 75 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய காசாவில் புரைஜ் மற்றும் மகாசி அகதி முகாம்களை இலக்கு வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் இஸ்ரேலியப் படை தரை மற்றும் வான் வழியாக கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள ஹமாஸ் இலக்குகள் மீது தரைப் படை நடவடிக்கைக்கு மத்தியில் இஸ்ரேல் வான் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அல் புரைஜ…

  12. Published By: RAJEEBAN 05 JUN, 2024 | 01:09 PM லெபனான் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. மூவர் தூதரகத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தினை உறுதி செய்துள்ள அமெரிக்க தூதரகம் தூதரக வாசலை இலக்குவைத்து சிறிய ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டனர் லெபானின் பாதுகாப்பு தரப்பினர் உட்பட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அனைவரும் விரைந்து செயற்பட்டதால் தூதரகமும் எங்கள் குழுவினரும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவித்துள்ளது. இதேவேளை சிரியாவை சேர்ந்த ஒருவரே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடு…

  13. ஐரோப்பா முழுவதும் பயணம் செய்த சுற்றுலாப் பயணி ஒருவருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து பிரித்தானியா முழுவதும் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், ஐரோப்பா முழுவதும் பயணம் செய்ததுடன் கடந்த மே மாதம் 10ஆம் மற்றும் 11ஆம் திகதிக்கு இடையில் Seattle-Tacoma சர்வதேச விமான நிலையத்தைக் கடந்து சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த சுற்றுலாப் பயணியுடன் தொடர்பில் இருந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா? என்பதைக் கண்டறிய அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதிக காய்ச்சல், இருமல், தும்மல், கண்களில் நீர் வடிதல் மற்றும் ஆரம்ப அறிகுறிகளுக்குப் பிறகு பொதுவாகத் தோன்றும் சரும அழற்ச…

  14. இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக பிடியாணையா? சர்வதேச நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை விதிக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றியது அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபை Published By: RAJEEBAN 05 JUN, 2024 | 10:22 AM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் உள்ள இஸ்ரேல் சார்பு குடியரசுகட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த சட்டமூலத்தை சனப்பிரதிநிதிகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. அமெரிக்க குடியரசுகட்சி பெரும்பான்மை பெற்றுள்ள சனப்பிரதிநிதிகள் சபையில்…

  15. சுவிற்சர்லாந்து நாட்டு பிரஜையொருவர் அந்நாட்டில் நடாத்தப்படும் தமிழ் பரீட்சையில் சித்திப்பெற்று பலரையும் திரும்பி பார்க்கச் செய்துள்ளார். சுவிற்சர்லாந்து நாட்டில் பொருளியல் வணிகத்துறையில் முதுகலைமானி நிலையினை நிறைவு செய்துள்ள உறோயர், பேர்ண் வள்ளுவன் பாடசாலையில் தமிழ் கற்றுவருகின்றார். வளர்நிலை ஒன்றில்(ஆண்டு ஒன்றில்) கற்கும் இவரை சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்படி பாடசாலை அதிபர் பூநகரியான் பொன்னம்பலம் முருகவேள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி விரும்பி விண்ணப்பித்து பரீட்சையில் தோற்றி நூறு புள்ளிக்கு நிகரான ஆறு புள்ளி பெற்றுள்ளார். மேலும் இவர் எழுத்து, பேசுதல், கேட்டுவிளங்குதல், வாசிப்பு நிலைகளிலும் மிகச்சிறப்பான தகமை …

  16. உத்தியோகபூர்வ முதற்கட்ட முடிவுகளின்படி, கிளாடியா ஷீன்பாம் மெக்சிகோவின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அரசாங்கத்தை வழிநடத்தும் முதல் பெண்மணி ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலை விஞ்ஞானியும் மெக்ஸிகோ நகரத்தின் முன்னாள் மேயருமான அவரது நீண்டகால அரசியல் கூட்டாளியான, வெளியேறும் இடதுசாரி மெக்சிகன் ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் மற்றும் அவர்களது மொரீனா கட்சியின் பிரபல அலையில் சவாரி செய்தார். https://www.cnn.com/americas/live-news/mexico-presidential-election-results-06-02-24/index.html

  17. 03 JUN, 2024 | 10:57 AM இஸ்ரேலிய பிரஜைகள் மாலைதீவிற்குள் நுழைவதை தடை செய்துள்ளதாக மாலைதீவு அரசாங்கம் அறிவித்துள்ளது. காசா யுத்தம் குறித்து மாலைதீவில் மக்களின் சீற்றம் அதிகரித்துவரும் நிலையிலேயே அந்த நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளை தடை செய்வதற்கு ஜனாதிபதி முகமட் முய்சு தீர்மானித்துள்ளார்என அவரது அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இஸ்ரேலிய பிரஜைகளை மாலைதீவிற்கு செல்லவேண்டாம் என இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது. காசா யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இஸ்ரேலியர்களிற்கு தடைவிதிக்கவேண்டும் என எதிர்கட்சியினரும் அரசாங்கத்தின் கூட்ட…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் ஷியா பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட முதல் முன்னாள் அமெரிக்க அதிபர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். வியாழன் அன்று மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் டிரம்பை குற்றவாளியாக அறிவிக்க காரணமான 34 குற்றங்களில், சிறைத்தண்டனைக்கான வாய்ப்புகள் குறைவு என்பதை பெரும்பாலான நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஒருவேளை நிலைமை மோசமானால், அதாவது அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், டிரம்ப் அதிபர் வேட்பாளராக நீடிக்க முடியும் என்பதுடன், அமெரிக்க அதி…

  19. ஜெர்மனியில் அவசர நிலை அறிவிப்பு! ஜெர்மனியில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ஜெர்மனியின் பவேரியா, பாடன் வுர்ட்டம்பேர்க் (Baden-Württemberg) மாகாணங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள டோனாவ், நெக்கர், குயென்ஸ் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன இதன் காரணமாக சில ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அங்குள்ள 10 மாவட்டங்களுக்கு அவசர நிலை விடுக்கப்பட்டு உள்ளது. எனவே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதுடன் இதற்காக அங்கு…

  20. 02 JUN, 2024 | 10:21 PM அமெரிக்காவின் ஒகையோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 25க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அக்ரோன் நகரில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. கெலி ஏவ் என்ற பகுதியில் துப்பாக்கிபிரயோக சத்தம் கேட்பதாகவும் பலர் சுடப்பட்டுள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து உடனடியாக அந்த பகுதிக்கு சென்றதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணைகள் இடம்பெறுகின்றன இதுவரை சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் இல்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து விபரங்களை கோரியுள்ளனர். நாங்கள் நீதியை நிலைநாட்டுவோம் இந்த பயங்கரமான துப்பாக்கி பிரயோகம் குற…

  21. பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு,நிதியமைச்சர் பெஸோலெல் ஸ்மாட்ரிக் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஈடமார் பென்-கவிர் இருவரும் அமெரிக்காவின் முன்மொழிவை புறக்கணித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜராஸ்லாவ் லூகீவ் பதவி, பிபிசி நியூஸ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட காஸா போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக்கொண்டால் அமைச்சரவையிலிருந்து விலகி, கூட்டணி ஆட்சியை கவிழ்ப்போம் என இரு தீவிர வலதுசாரி அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிதியமைச்சர் பெஸோலெல் ஸ்மாட்ரிக் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஈடமார் ப…

  22. புளோரிடாவைச் சேர்ந்த ப்ருஹத் சோமா, 12, வியாழன் இரவு 96வது ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீயில் மற்ற ஏழு இறுதிப் போட்டியாளர்களையும் தோற்கடித்து, தேனீயின் இரண்டாவது ஸ்பெல்-ஆஃபில் தனது இறுதிப் போட்டியாளரை தோற்கடித்து வென்றார். ப்ருஹத் 29 வார்த்தைகளை சரியாக உச்சரித்தார், அதே நேரத்தில் டெக்சாஸைச் சேர்ந்த 12 வயது பைசான் ஜாக்கி 20 வார்த்தைகளை சரியாக உச்சரித்தார். ப்ருஹத் இந்த ஆண்டு சாம்பியனாக அறிவிக்கப்பட்ட பிறகு இருவரும் கைகுலுக்கினர். ஸ்பெல்-ஆஃப்கள் என்பது ஸ்பெல்லிங் பீயின் விதிகளின்படி, போட்டி ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டியதும், ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் எஞ்சியிருந்தால், ஒரு சாம்பியனைத் தீர்மானிக்கச் செயல்படுத்தப்படும் சிறப்புச் சுற்றுகள் ஆகும். ஒரு எழுத…

  23. ஹெலிகொப்டர் விபத்தின் பின்னணியில் நாசவேலை?- ஈரான் திட்டவட்டமாக அறிவிப்பு! ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பலியான ஹெலிகொப்டர் விபத்தின் பின்னணியில் நாசவேலை எதுவும் இல்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி, கடந்த மாதம் 19-ஆம் திகதி அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக அங்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து இராணுவ ஹெலிகொப்டரில் ஈரானுக்கு புறப்பட்ட நிலையில், ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள ஜோல்பா நகருக்கு அருகே மலைப்பகுதியில் ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட 8 பேர் சம்பவ இடத…

    • 3 replies
    • 533 views
  24. Published By: RAJEEBAN 01 JUN, 2024 | 10:44 AM யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான இஸ்ரேலின் யோசனையை வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸ் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக நேரம் இது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆறுவாரகால யுத்தநிறுத்த திட்டத்தினை அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தின்படி காசாவில்பொதுமக்கள் அதிகமாகவாழும் பகுதிகளில்; இருந்து இஸ்ரேலிய படையினர் வெளியேறுவார்கள். மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்படும் பணயக்கைதிகள் சிலர் விடுதலை செய்யப்படுவார்கள் என ஜோபைடன் முன்வைத்துள்ள திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை …

  25. முன்னாள் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவின் தாயார் மரியன் ராபின்சன் இறந்துவிட்டதாக ஒபாமா மற்றும் ராபின்சன் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது 86. "சகோதரியாக, அத்தையாக, உறவினர், பக்கத்து வீட்டுப் பெண், தோழியாகப் பலருக்கு வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்குப் பிரியமானவள், அவ இருப்பால் அவர்களின் வாழ்க்கை மேம்பட்டது" என்று பராக் மற்றும் மிச்செல் ஒபாமா, கிரேக் மற்றும் கெல்லி ராபின்சன் மற்றும் அவர்களது குழந்தைகளின் அறிக்கை. பகுதியாக கூறினார். https://www.cnn.com/2024/05/31/politics/michelle-obama-mother-marian-robinson-dies/index.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.