உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
இடா நகர்: வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் காலூன்ற சீனா உதவி வருவதாக அருணாசலப் பிரதேசத்தில் அண்மையில் கைது செய்ய மூன்று மாவோயிஸ்ட் இயக்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர். அசாமில் அண்மையில் சில மாவோயிஸ்டுகள் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களை வைத்து அருணாசலப் பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு அசாம் ரைபிள்ஸ் படையினரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினரும் தீவிர தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டனர். அப்போது நிபெஞ்யோதி செதியா, டோடோங் நியோக் மற்றும் ஜிந்து செதாய் ஆகிய மூன்று மாவோயிஸ்டுகள் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது மாவோயிஸ்டுகள் வடகிழக்கு மாநிலத்தில் காலூன்றுவதற்கு நிதி உதவி மற்றும் ஆயுதங்களை சீனா வழங்குவதுடன் ஆயுதப் பய…
-
- 2 replies
- 597 views
-
-
மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இருந்து கிடைத்த உணவு "மெனு' ரூ.40 லட்சத்துக்கு பிரிட்டனில் ஏலம் எடுக்கப்பட்டது. கப்பல் மூழ்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்த 100-க்கும் அதிகமான பொருள்கள் ஏலம் விடப்பட்டதாக "பிபிசி செய்தி' தெரிவித்துள்ளது. டைட்டானிக் கப்பலின் முதல் வகுப்பில் பயணித்த பயணிகளுக்கு பரிமாறப்பட்ட உணவு வகைகள் அடங்கிய "மெனு' (உணவு வகைகளின் பெயர் பட்டியல்) ரூ.40 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. மெனுவில், 1912 ஏப்ரல் 12-ம் தேதியிடப்பட்டிருந்தது. 1912-ம் ஆண்டில் தனது முதல் பயணத்தின்போதே பனிப்பாறையில் மோதி டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கியது. இதில் பயணித்தவர்களில் 1522 பேர் நீரில் மூழ்கி உயிரிழ…
-
- 1 reply
- 549 views
-
-
மங்களூர்: மங்களூரில் போதை மற்றும் மது விருந்தில் கலந்து கொண்ட மாணவிகள் மீது இந்து அமைப்பினர் நடத்திய வெறித் தாக்குதலின்போது பல மாணவிகளை அவர்கள் மானபங்கப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் குமுறலுடன் தெரிவித்துள்ளனர். மங்களூரில் உள்ல ஒரு ரிசார்ட்டில் என்ஜீனியரிங் கல்லூரி மாணவ, மாணவியர் சிலர் கூடி பார்ட்டி வைத்தனர். அப்போது இரவில் மது விருந்து நடந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென இந்து ஜாகிரண் வேதிகே என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் கும்பலாக வீட்டுக்குள் புகுந்து வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த மாணவர்களை விரட்டி விரட்டி சரமாரியாக அடித்தனர். மாணவிகளையும் அவர்கள் விடவில்லை. சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படு…
-
- 0 replies
- 912 views
-
-
வைகோவின் விஷன் (Vision) சரியான பாதையில் பயணிக்கிறதா????? என்று திடீரென்று இங்குள்ள என் அமெரிக்க தமிழ் நண்பர்கள் என்னிடம் கேள்விக் கேட்டார்கள். அவர்களுக்கு நான் சொன்ன பதிலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்! வைகோ ஆயிரம் தான் அவர் தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் நெல்லையின் சிங்கம் எனதான் தமிழ் மக்கள் அவரைப் பார்க்கின்றனர். 1944ல் மதராஸ் பிரஸடன்ஸி என அழைக்கப்பட்ட நெல்லையில் உள்ள கலிங்கபட்டியில் பிறந்த கண்ணியமிக்க ஒரு எம் பி (பாராளுமன்ற உறுப்பினர்) அதுவும் ஒன்று இரண்டு வருடங்கள் இல்லை 18 வருடங்கள் தொடர்ந்து இருந்த ஒரு தமிழர். இவருக்கு பாராளுமன்றத்தில் – பாராளுமன்ற புலி என பெயர் கூட இருந்தது. ஆனாலும் இவரின் நல்ல பண்பு, பழக்க வழக்கம் பலரை அனுசரித்து போகும் தி…
-
- 2 replies
- 1k views
-
-
[size=4]மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடந்த வார இறுதி விருந்தில் கலந்து கொண்ட இளம்பெண்களை அடித்து உதைத்த இந்து அமைப்பைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.[/size] [size=3][size=4]கர்நாடக மாநிலம் மங்களூரின் புறநகர் பகுதியான பாடிலுவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நேற்று இரவு மது விருந்து நடந்தது. அதில் அரை குறை ஆடையணிந்த இளம் பெண்களும், வாலிபர்களும் கலந்து கொண்டனர். இந்த விருந்து நடப்பது பற்றி தகவல் அறிந்த இந்து ஜகரன் வேதிகே அமைப்பைச் சேர்ந்த 50 பேர் அந்த ரிசார்டுக்குள் புகுந்து அங்கிருந்த இளம் பெண்களையும், வாலிபர்களையும் ஓட, ஓட அடித்து உதைத்தனர். இதில் 2 பெண்களும், பல வாலிபர்களும் காயம் அடைந்தனர்.[/size][/size] [size=3][si…
-
- 2 replies
- 4.7k views
-
-
நித்தியானந்தா:மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா? நித்தியானந்தா விவகாரம்: அசிங்கத்தில் விஞ்சி நிற்பது மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா? ஆதினமாக முடி சூட்டப்படும் நித்தியானந்தா இலஞ்சம் கொடுத்து அரசுப் பதவிகளைப் பெறுவதைப் போல, ஆன்மீகப் பதவிகளையும் பெற முடியும் என எடுத்துக் காட்டியிருக்கிறார், நித்தியானந்தா. மதுரை ஆதீனத்தின் 292வது குரு மகாசந்நிதானமான அருணகிரிக்குக் கோடி ரூபாய் பணம் கொடுத்து, தங்கக் கிரீடம் கொடுத்து, வெள்ளி செங்கோல் கொடுத்து இன்னும் என்னவோவெல்லாம் கொடுத்து, நித்தியானந்தா அடைந்துள்ள இந்தப் ‘பெரும் பேற்றை’ வேறெப்படிச் சொல்ல முடியும்? மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டுள்ள இந்த ‘ஆன்மீகப் புரட்சி’யைக் கண்டு …
-
- 0 replies
- 643 views
-
-
தாய்வானில் காய்கறி விற்கும் பெண்ணுக்கு நோபல் பரிசுக்கு நிகராகக் கருதப்படும் ராமன் மகசேசே விருது வழங்கப்படவுள்ளது. பிலிப்பைன்சின் மணிலா நகரில் இயங்கி வரும் ராமன் மகசேசே விருது அறக்கட்டளை, சமூக சேவைக்கான விருதை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. இவ்வாண்டு கம்போடியா, பங்களாதேஷ், தாய்வான், இந்தியா,இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராக காய்கறி விற்கும் இப்பெண்ணும் தெரிவாகியுள்ளார். இது குறித்து மகசேசே அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாய்வானைச் சேர்ந்த சென் ச்சூ-சூ காய்கறி விற்பனை செய்து வருகிறார். ஆறாம் தரம் வரை மட்டுமே படித்துள்ள இவர் வீடின்றி வீதியோரம் உறங்குகிறார்.ஆனால், தினம் தோறும் க…
-
- 7 replies
- 1.9k views
-
-
[size=4]லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் அணிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய அணி உடன் மர்மப்பெண் ஒருவர் நடந்து வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.[/size] [size=3][size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று அதிகாலையில் 1.30 மணிக்கு நடைபெற்ற துவக்க விழா உடன் கோலாகலமாக துவங்கியது. இதில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிகளின் அணிவகுப்பு, வாணவேடிக்கை, இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி என்று பல நிகழ்ச்சிகள் அரங்கேறியது.[/size][/size] [size=3][size=4]இதில் அணிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் மல்யுத்த வீரர் விரேந்தர் சிங் தேசிய கொடியை ஏந்தி செல்ல மற்ற இந்திய வீரர்கள் கொடியின் கீழ் நடந்து வந்தனர். அணிவகுப்பின் போது…
-
- 8 replies
- 1.6k views
-
-
[size=1] [size=4]தற்போது ஒண்டோரியோ மக்களின் தேவையெல்லாம் நிலைத்தன்மையுடன் கூடிய பெரும்பான்மை அரசே என ஹாலிபாக்ஸில் நேற்று நடைபெற்ற மாநாடு ஒன்றின் செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் டால்டன் மக்கென்றி சூசக அழைப்பு விடுத்துள்ளார். பெரும்பான்மை அரசாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே சில முக்கிய முடிவுகளை அரசு சுதந்திரமாக எடுக்க முடியுமென்றும், நாட்டின் நலனிற்காக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு பிற கட்சியினரிடம் மண்டியிட்டுக் கொண்டிருப்பது சரியாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். [/size][/size][size=1] [size=4] [/size][/size][size=1] [size=4]கிட்செநேர்-வாட்டர்லூ தொகுதி இடைத்தேர்தலில் லிபரல் கட்சி பெரும்பான்மையினைப் பெரும் பட்சத்தில் தற்போது ஒண்டோரியோ மக்களின் தேவையெல்லாம் ந…
-
- 0 replies
- 516 views
-
-
[size=5]ஒலிம்பிக் போட்டிகளுக்காக லண்டன் சென்றுள்ள கனடிய அணியினர் எத்தனை பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பர் என்பதே தற்போது கனடாவில் உள்ள விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் நோக்கும் விடயமாகி விட்டது. பதக்கப் பட்டியலில் முதல் நாடாக கனடா வருவது சாத்தியமே இல்லை என்பதால் தர வரிசைப் பட்டியலில் முதல் 12 நாடுகளில் ஒன்றாக இடம் பெற்று விட வேண்டும் என்பதே தற்போது கனடாவின் இலக்கு. கடந்த ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெற்ற போது முதல் 7 நாட்களிலும் கனடாவால் பதக்கங்கள் பெற முடியாமல் போனது பெரும் பின்னடைவினை ஏற்படுத்தியதால் இந்த ஒலிம்பிக்கில் முதல் ஏழு நாட்களில் பெறப் போகும் பதக்கங்களே கனடிய அணிக்கு வலுச் சேர்க்கும் என்கின்றனர் இத்துறை வல்லுனர்கள். கன…
-
- 0 replies
- 413 views
-
-
ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது! 2012 ஆம் ஆண்டு ஜூலைஆகஸ்டு மாதங்களில் இலண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் புரவலராகக் கொலைகார டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் சேர்ந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானத்தை அலங்கரிக்க டௌ கெமிக்கல்ஸிடமிருந்து 370 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி முடிவு செய்துள்ளது. போபால் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான டௌ கெமிக்கல்ஸை ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றக் கோரியும், இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் தலைவரான செபஸ்டின் கௌ மற்றும் இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்தும் தங்கள் எதிர்…
-
- 0 replies
- 790 views
-
-
[size=5]"நான் குற்றவாளி எனில், என்னை தூக்கிலிடுங்கள்': மோடி ஆவேசம்[/size] [size=3] [size=4]குஜராத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களுக்காக, நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன். அதேநேரத்தில், நான் குற்றவாளி எனில், என்னை தூக்கிலிடுங்கள், என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.[/size] [/size] [size=3] [size=4]உருது வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது:[/size] [/size] [size=3] [size=4]மன்னிப்பு கோர மாட்டேன்: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின், குஜராத் மாநிலத்தில் வன்முறைகள் நிகழ்ந்தன. அந்த நேரத்தில், நான் என்ன சொன்னேன் என்பதை, நீங்கள் சரி பாருங்கள். [/size] [/size] [size=3] [size=4]2004ம் ஆண்டில், பத்திரிகை ஒன்ற…
-
- 1 reply
- 648 views
-
-
திருவண்ணாமலை: எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை என்றும், மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தாவை மாற்றும் எண்ணமும் இல்லை என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதன் கூறியுள்ளார். நித்யாவுடன் சண்டை பின்னர் சமரசம் என்று மாறி, மாறி அந்நியன் விக்ரன் ரேஞ்சுக்கு ஸ்பிளிட் பெர்சனாலிட்டியாக மாறிவிட்டார் ஆதீனம். இந் நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்ய நித்யானந்தாவுடன் வந்தார் மதுரை ஆதீனம். அவர்கள் வந்தபோது கோயில் நடை சாத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கோயில் கொடிமரம் அருகே உள்ள விநாயகரை இருவரும் வழிபட்டனர். பின்னர் மதுரை ஆதீனம் நிருபர்களிடம் பேசுகையில், மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தர், 20 நாள்கள் கையிலாய யாத்திரை புறப்படுகிறார். அவரை வ…
-
- 4 replies
- 3.4k views
-
-
பள்ளிச் சிறுமி ஸ்ருதி பரிதாப பலி- தாம்பரத்தில் கடையடைப்பு- மக்கள் கண்ணீர் அஞ்சலி-உடல் இன்று தகனம் 26 ஜூலை 2012 பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்ததது- குழந்தையை ஏற்றிச் சென்ற ஓட்டை பஸ் ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி மிகப் பரிதாபமாக தனது பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தால் தாம்பரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தொடர்ந்து மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். தாம்பரம், முடிச்சூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சிறுமியின் உடல் இன்று குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலிருந்து வீடு வரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சென்னை மக்களை பெரிய அளவில் உலுக்கி விட்டது ஸ்ருதியின் பரிதாபச் சாவு. ச…
-
- 11 replies
- 1.7k views
-
-
[size=4]"அமெரிக்காவில் துப்பாக்கி சூடு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர சட்ட திருத்தம் கொண்டுவரப்படும்" என்று அதிபர் ஒபாமா கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலாராடோ மாகாணத்தில் அரோரா என்ற இடத்தில் உள்ள தியேட்டரில் 'பேட்மேன்' படம் திரையிடப்பட்டிருந்தது. இந்த தியேட்டருக்கு வந்த ஜேம்ஸ் ஹோம்ஸ் என்ற வாலிபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 14 பேர் உயிர் இழந்தனர். மேலும் 60 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.[/size] [size=4]இது மட்டுமின்றி அமெரிக்காவில் பள்ளிக்கூடம், கல்லூரி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி பலர் உயிர் இழப்பது அடிக்கடி நடைபெற்று வரு…
-
- 1 reply
- 465 views
-
-
புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய கழிப்பறை 'இந்தியன் ரயில்வே’ என்று மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: "திறந்தவெளி கழிப்பிடத்தின் உலக தலைநகராகவும் நாம்தான் திகழ்கிறோம்; உலகில் உள்ள திறந்தவெளி கழிப்பிடங்களில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளன.இது மிகவும் வெட்கக்கேடானது. இந்தியாவின் இரண்டாவது சுகாதார பிரச்னை இருப்பது இந்தியன் ரயில்வேயில்தான்.உண்மையிலேயே உலகின் மிகப்பெரிய திறந்தவெளி கழிப்ப்பிடமாக இருப்பது அதுதான்.தினமும் 11 மில்லியன் பயணிகள் பயணிக்கும் நிலையில்,நமது ரயில்வேயின் சுகாதாரம் என்ன என்பது நமக்கெல்லாம் தெரிந்த சங்கதிதான். இன்றைய தேதியில் 9 ரயில்களில் உள்ள 436 பெட்டிகளில் மட்டுமே ‘பயோ’…
-
- 0 replies
- 846 views
-
-
மதுரை: மதுரையில் பள்ளிக்கூட பெஞ்சை விற்று மாணவர்கள் மது குடித்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 5 பேருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.சமீபத்தில் ஒருநாள் மதுக்குடிக்க அவர்களிடம் பணம் இல்லை. என்ன செய்வது என்று யோசித்த அவர்கள், வகுப்பறையில் உள்ள ஒரு பெஞ்சை விற்று மது வாங்கி குடிக்க முடிவு செய்தனர். வகுப்பு முடிந்து மற்ற மாணவர்கள் சென்றதும், குறிப்பிட்ட அந்த 5 மாணவர்களும் ஒரு பெஞ்சை உடைத்தனர்.பல துண்டுகளாக உடைக்கப்பட்ட அந்த பெஞ்சின் பாகங்களை ஆளுக்கு கொஞ்சமாக எடுத்துச் சென்று அருகில் உள்ள மரக்கடையில் கொடுத்து காசாக்கினர். அந்த பணத்தை வைத்து அங்குள…
-
- 0 replies
- 458 views
-
-
சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவில் அரச படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் உக்கிரமோதலுக்கு தயாராகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அலெப்போ நகரில் ஊடுருவியுள்ள போராளிகளை வெளியேற்ற ஆட்சியாளர் படைகள் மிகப் பெரிய தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகத் தெரியவருகின்றது. சிரியாவின் தலையெழுத்தையெத் தீர்மானிக்கும் மோதலாக இது அமையவுள்ளதெனக் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இம் மோதல் உக்கிரமடையும் பட்சத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. சிரியப் படைகள் மிகப் பெரிய மனிதப்படுகொலைகளுக்குத் தயாராகி வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. சிரியா முழுவதிலும் இடம்பெற்று வரும் மோதல்களில் நேற்று மட்டும் பொதுமக்கள் …
-
- 0 replies
- 473 views
-
-
பச்சிளங்குழந்தையொன்றை 200 ரூபா பணம் காவு கொண்ட சம்பவம் ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். தினக்கூலி தொழிலாளரான இவர், பிரசவத்திற்காக தனது மனைவியை ஜலந்தர் அரசு பொது வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார். இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு இவர்களுக்குக் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை, அதிக ௭டையுடனும் உடல் நலக்குறைவுடனும் பிறந்ததால், அதனை இன்கியூபேட்டரில் வைத்திருக்க மருத்துவமனை வைத்தியர்கள் அறிவுறுத்தினர். அப்போதும், குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை ௭ன்பதால் சஞ்சீவ் குமார் தனது மனைவியுடன் அவ் வைத்தியசாலையின் பிரதான வைத்தியரைச் ச…
-
- 0 replies
- 398 views
-
-
அ.தி.மு.க., அரசின் அடக்குமுறையை கண்டித்து தி.மு.க., சார்பில் வரும் 4-ந்தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடக்க உள்ளது. அந்தவகையில் காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறை நிரப்பும் போராட்டத்துக்கான விளக்க கூட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்று நடந்தது. காஞ்சீபுரம் மாவட்ட எல்கையான ஆலந்தூர் கத்திப்பாரா சந்திப்பில் இருந்து தாம்பரம் வரை வழிநெடுகிலும் கொடி, தோரணங்கள், வரவேற்பு பதாகைகள் மற்றும் வண்ண விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் வெள்ளி வீரவாள் பரிசளிக்கப்பட்டது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி …
-
- 8 replies
- 772 views
-
-
வழக்கு எண் 18/9 இரசிக்கப்பட்டதா? ஆழமில்லாத பாராட்டும் நிராகரிப்பும்! சக்தி வாய்ந்த ஒரு கலை தன்னை நாடி வரும் மனிதர்களை, அறிமுகமான வாழ்க்கையினூடாக பழக்கப்பட்ட உணர்ச்சிகளில் ஆழ்த்தி பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் அறிந்திராத முரண்பாடுகளில் சிக்க வைத்து புத்தம் புதிய உணர்வுகளில் கரை ஒதுக்கி, சமூக உணர்வின் அறத்தை மேம்பட்ட நிலையில் பருக வைத்து ஆற்றுப்படுத்தும். அதனால் அந்தக் கலையின் பாதிப்பிலிருந்து வாழ்வை உள்ளது உள்ளபடி கொஞ்சம் உறுதியோடு எதிர் கொள்ளும் புத்துயிர்ப்பான உற்சாகத்தை பெறுகிறோம். அந்தக் கலையின் செல்வாக்கிலிருந்து புதிய ஆளுமையின் குருத்துக்கள் உரத்துடன் நம்மிடம் முளை விடத் தொடங்கும். அது சமூக வாழ்வின் புதிய எல்லைகளை எண்ணிறந்த முறையில் திறந்து விடுகிறது. களைப்…
-
- 1 reply
- 964 views
-
-
[size=3] உலகின் மிகவும் ஆபத்தான நாடு அமெரிக்காவே – விமல் வீரவன்ச [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] உலகின் மிகவும் ஆபத்தான நாடு அமெரிக்காவே என வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கியூப சர்வதேச ஆதரவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகில் மிகவும் பாதுகாப்பற்ற நாடாக அமெரிக்க விளங்குவதாக சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்க மக்கள் பாதுகாப்பற்ற மனோ நிலையில் வாழ்ந்து வருவதாகக் குற்றம்சுமத்தியுள்ளார். இதன் காரணமாகவே கியூப தேசப்பற்றாளர்களை அமெரிக்கா தீவிரவாத முத்திரை குத்திகைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். http…
-
- 0 replies
- 387 views
-
-
[size=3] சுற்றிவளைக்கப்படும் சீனா! இந்திய அரசு, ஏற்கெனவே ஆப்கானில் பல இந்தியர்களைக் காவு கொடுத்ததைப் போல, சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் இன்னும் பலரைக் காவு கொடுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. லிபியாவை மறுகாலனியாக்கி, புதிய உத்தியுடன் ஆப்பிரிக்க கண்டத்தில் தனது காலனியாதிக்க ஆக்கிரமிப்பையும் மேலாதிக்கத்தையும் நிறுவியுள்ள அமெரிக்க வல்லரசு, இப்போது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவின் மீது தனது மேலாதிக்க இரும்புப் பிடியை உறுதிப்படுத்தக் கிளம்பியுள்ளது. குறிப்பாக, இப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைத் தகர்த்து, அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்துடன் இப்போது போர்த் தாக்குதலுக்கான ஏற்பாடுகளை வேகமாகச் செய்து வருகிறது. மேற்காசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்தி…
-
- 3 replies
- 790 views
-
-
அமெரிக்காவில் Batman படம் ஓடிக்கொண்டிருந்த பட மாளிகையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சுட்டுச் சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு ஆயுத தாரி புகைக் குண்டுகளையும் வெடிக்க வைத்துள்ளதாக கூறப்படுகின்றது At least 14 people have been killed in a shooting at a Batman film premiere in the US city of Denver, police say. About 50 people have been injured in the incident at the cinema complex in the suburb of Aurora. Witnesses say a gunman wearing a gas mask opened fire during a midnight showing of The Dark Knight Rises. A man was arrested in a car park nearby in possession of a rifle and hand-gun. He told police that…
-
- 19 replies
- 1.5k views
-
-
மேற்குநாடுகள் தமது தலைவர்களின் மனைவிமாரை முதலம்மையார் (First Lady) என அழைத்து கனம் பண்ணிக்கொள்வார்கள். வீட்டில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளபவர் நாட்டிலும் அவ்வாறே நடந்து கொள்வார் என எதிர்பார்க்கிறார்கள். இதனால் அதிபர் ஒபாமாவின் மனைவி மிசேல் ஒபாமா அமெரிக்க முதலம்மையார் ஆவார். ஆனால் வடகொறிய அதிபரின் தந்தை தனது அரச நிகழ்வுகளில் தனது குடும்பத்தை அதிகம் சேர்த்துக்கொள்வதில்லை. இது மேற்கு நாடுகளின் வழமைக்கு மாறானது. அவர் எதிலுமே மேற்கு நாடுகளுக்கு மாறான போக்கையே கடைப்பிடித்து வந்தார். புதிய தலைவர் கிம் யொங் உன் வந்த போது பலர் இவர் மேற்கே சாயலாம் என ஆரூடம் கூறினார்கள். பிரதானமாக இவர் மேற்கில் படித்தவர் எனவே உல்லாச வாழ்க்கையை அனுபவித்தவர், ஆகவே அதை எளிதில் மறக்கமாட்டார் எ…
-
- 7 replies
- 2.5k views
-