Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Started by akootha,

    [size=4]ஐசக் சூறாவளி எதிரொலி காரணமாக, லூசியானா மாகாணத்தில் எமர்ஜென்சி நிலைக்கு அதிபர் பாரக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஐசக் சூறாவளி, அமெரிக்காவின் பல பகுதிகளை புரட்டிப் போட்டுள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதற்கு தீர்வு காணும் பொருட்டு, லூசியானா மாகாணத்தில் எமர்ஜென்சி நிலையை பிறப்பிக்க உத்தரவிடுமாறு அதிபர் ஒபாமாவிடம் லூசியானா மாகாண கவர்னர் பாபி ஜிண்டால் கோரிக்கை விடுத்திருந்தார். எமர்ஜென்சி நிலையின் மூலம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் உதவிகள் அளிக்கப்பட வேண்டும் என்றடிப்படையில், அதிபர் ஒபாமா, எமர்ஜென்சியை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளார். [/size] http://tamil.yahoo.c...-073100999.html

  2. [size=4]சீன தலைநகர் பீஜிங்கில், ஜப்பான் தூதரகம் நோக்கி சென்று கொண்டிருந்த ஜப்பான் தூதர் உய்ச்சிரோ நிவாவின் கார் மிது மர்மநபர் தாக்கு‌தல் நடத்தியுள்ள சம்பவம், இருநாடுகளிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [/size] [size=4]தீவுகள் பங்கிடுவது தொடர்பாக, சீனா மற்றும் ஜப்பான் நாடுகளிடையே அசாதாரண சூழ்நிலை நிலவிவரும் நிலையில், ஜப்பான் தூதர் மீதான தாக்குதல், மேலும் பரபரப்பை அதிகமாக்கியுள்ளது.[/size] [size=4]http://tamil.yahoo.com/ச-ன-வ-ல்-ஜப்ப-044300230.html[/size]

  3. [size=4]பார்லி.,யை முடக்கி ஜனநாயக்தை கேலிக்கூத்தாக்கி வரும் பா.ஜ.,வை கண்டிப்பதாகவும், இது போன்ற எதிர்கணைகளுக்கு கட்சி எம்.பி.,க்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் காங்., எம்.பி.,க்கள் குழு கூட்டத்தில் கட்சி தலைவர் சோனியா பேசினார்.[/size] [size=4]பார்லி., தொடர் முடக்கம் காரணமாக கட்சி எம்.பி.,க்களை கூட்டி சோனியா அவசர ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசுகையில்: மும்பை, அசாம் கலவரத்திற்கு கண்டிக்கத்தக்கது. இது மிகவும் கவலை தரும் செயல். சமீப காலமாக பார்லி.,யை பா.ஜ., தொடர்ந்து முடக்கி வருகிறது. இது காங்கிரஸ் அரசுக்கு பா.ஜ., தேவையில்லாமல் கொடுக்கும் இடையூறு. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணியை மிரட்டும் செயலாக இருக்கிறது.[/size] [size=4]எதிர்த்து போரிட கட்சியினர…

    • 0 replies
    • 669 views
  4. ‘தல’யின் குடும்பத்தில் தயாராகிறது ஒரு ஒலிம்பிக் தங்கம்! செய்தி-46 பேட்மிட்டன் வீராங்கனை ஷாலினி பர்கரை நொறுக்கியும் கோக்கை உறிஞ்சியும், ” 120கோடி மக்கள் தொகையில் ஒரு தங்கப் பதக்கம் கூட இல்லையா, என்ன எழவு நாடிது” என்று சலித்துக் கொள்ளும் அவநம்பிக்கை அம்பிகள் எல்லாம் இடத்தைக் காலி செய்யுங்கள்! உங்களைப் போன்ற நடுத்தர வர்க்க கருத்து கந்தசாமிகளின் புலம்பலை வேரறுத்து பாசிட்டிவ் வெள்ளத்தை பாய்ச்சும் எங்கள் ‘தல’யின் சமீபத்திய சாதனையைப் பாருங்கள்! அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் மனைவியான ஷாலினி திருமணத்திற்கு முன் எந்த விளையாட்டையும் ஆடியதில்லை. ஏன் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. மணமுடிந்த பிறகு விளையாட்டாய் பேட்மிட்டன் – இறகுப்பந்து – விளையாட ஆரம்ப…

  5. “திறந்தவெளி முகாமிற்காவது மாற்றுங்கள்” – செந்தூரன் உண்ணாவிரதம்! செங்கற்பட்டு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர் செந்தூரன் என்பவர் கடந்த 4 ஆம் தேதி பூந்தமல்லி சிறப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். காரணம் எதுவும் குறிப்பாக சொல்லப்படாத நிலையில் தன்னையும் தன்போல வாடும் 8 பேரையும் திறந்தவெளி முகாமுக்கு மீண்டும் அனுப்புமாறு கோரி உண்ணாவிரதம் துவங்கிய செந்தூரன், கடந்த சில நாட்களாக நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செந்தூரனை சந்தித்த வைகோ உண்ணாவிரதத்தை கைவிடக் கோரினார். ஆனால் இதன்மூலமாவது எங்கள் மக்களுக்கு விடிவு காலம் கிடைக்கட்டும் என்பதற்காகத்தான் உண்ணாவிரதம் இருக்கிறேன். மன்னித்த…

  6. இளவரசர் ஹாரிக்கு ஆதரவாக 12,000 பேர் நிர்வாண போஸ்! லண்டன்: லாஸ் வேகாஸுக்குப் போன இடத்தில் நிர்வாணமாக தோன்றி சுதந்திரமாக இருந்த இளவரசர் ஹாரியின் புகைப்படங்களை மீடியாக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹாரிக்கு ஆதரவாக ஒரு குரூப் கிளம்பியுள்ளது. இவர்கள் ஹாரிக்கு ஆதரவாக, 'Support Prince Harry with a naked salute! என்ற பெயரில் ஒரு பேஸ்புக் பக்கத்தைத் திறந்துள்ளனர். அதில், நிர்வாண போஸ் கொடுத்து அசத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 12,000 பேர் இவ்வாறு நிர்வாண கோலத்தில் விதம் விதமான போஸ்களைக் கொடுத்துக் கலக்கியுள்ளனர். இவர்கள் இங்கிலாந்துப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். லாஸ் வேகாஸில் விடுமுறையைக் கழிக்கப் போன ஹாரி, அங்…

  7. 27.8.12 அன்று அதிமுக அடிமைகளின் செயற்குழு அல்லிராணி தலைமையில் கூடி, ‘அரசியல் முக்கியத்துவம்’ வாய்ந்த 16 தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறதாம். சரி அதில் என்ன முக்கியத்துவம் என்று “நமது எம்ஜிஆர்” பத்திரிகையை வாங்கிப் பார்த்தோம். நிறுவனர் ஜெயலலிதா என்று தலையில் ஆரம்பித்து வெளியீடு ஸ்ரீ ஜெயா பப்களிகேஷன்ஸ் என்ற வால் வரைக்கும் மொத்தம் 12 பக்கங்களிலும் எங்கெங்கு பார்த்தாலும் ஜெயலலிதாதான். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதையே விஞ்சும் அளவுக்கு துண்டு துக்காணியிலும், சந்து பொந்துகளிலும் இருப்பாள் என்று ரணகளம்தான். அந்த இதழில் இன்று மட்டும் கூட்டிப் பார்த்தால் மொத்தம் எழுபது முறை “முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா” என்ற ஜிஞ்சக்கு ஜிஞ்சா வார்த்தை ஓதப்பட்டிருக்க…

  8. பாலஸ்தீனிய குழந்தைகளை இரக்கமில்லாமல் கொடுமைப்படுத்தியதாக முன்னாள் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர். 30 முன்னாள் படைவீரர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை இஸ்ரேலிய படைவீரர்கள் செய்த எண்ணற்ற கொடுமைகளை விவரிக்கிறது. 2004-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரேக்கிங் சைலன்ஸ் (மௌனத்தை கலைக்கிறோம்) என்ற முன்னாள் இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கான அமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இப்போதைய மற்றும் முன்னாள் இஸ்ரேலிய படைவீரர்கள் பங்கேற்ற அல்லது கண்ணுற்ற கொடுமைகளை பற்றி விவரிக்கும் 850 நிகழ்வுகளை திரட்டியிருக்கிறார்கள். இஸ்ரேலிய படைவீரர்கள் மீது கல்லெறியும் மைனர் குழந்தைகளை பிடித்து அடைத்த…

  9. [size=3][size=4]சென்னை: தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும், கச்சத் தீவை மீட்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடிய அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த இக்கூட்டத்துக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு: தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் மறுவாழ்வு மற்றும் மீட்புப் பணிகளை சிறப்பாக செயல்படுத்திய முதல்வர் ஜெயலலிதாவுக்கு இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்…

  10. அரிசி விலையை ஒரு ரூபாய் ஏற்றினால் கூச்சலிடுவதா? நடுத்தர மக்களை கிண்டலடிக்கிறார் சிதம்பரம். [size=2] [/size][size=3] ""பாட்டில் குடிநீருக்கு, 15 ரூபாய் செலவழிக்க தயாராக இருக்கும் மத்திய தர வகுப்பினர், அரிசிக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால் கூச்சல் போடுகின்றனர்," என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் விமர்சித்துள்ளார். பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, கொள்முதல் விலையை அதிகரித்ததால், லட்சக்கணக்கான விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது. நாம் ஒவ்வொரு விஷயத்தையும், மத்திய தர வகுப்பினரை கருத்தில் கொண்டே பார்க்க முடியாது. பாட்டில் குடிநீருக்கு, 15 ரூபாய் அல்லது ஐஸ்கிரீமிற்கு …

  11. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு, கச்சத்தீவு மீட்பு - அதிமுக செயற்குழுவில் தீர்மானம் Published: திங்கள்கிழமை, ஆகஸ்ட் 27, 2012, 19:03 [iST] Posted by: Shankar சென்னை: தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும், கச்சத் தீவை மீட்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடிய அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த இக்கூட்டத்துக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு: தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில்…

  12. கடவுளுக்கும் ‘கட்டிங்’ கொடுத்த சாராய மல்லையா! தங்கக் கதவுகளுடன் மல்லையா (இடது மூலை) கடந்த சனியன்று சீமைச் சாராய முதலாளி மல்லையா 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கதவுகளை கர்நாடக மாநிலத்திலுள்ள சுப்ரமணியர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இது போதையில் வந்த பக்தியா, நிதானத்தில் தோன்றிய உத்தியா என்றெல்லாம் ஆராயக்கூடாது. தன்னிடம் வேலை பார்க்கும் விமானிகளுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிப்பது, விமான நிலையங்களுக்கு வாடகை தராமல் இருப்பது, நிரப்பிய பெட்ரோலுக்கு காசு கேட்டால் அரசிடமே பெயில் அவுட் கேட்பது, கொடுத்த கடனை அடைக்க வீழ்ச்சியடையும் தனது பங்குகளையே பொதுத்துறை வங்கிகளுக்கு தருவது என இவர் நடத்தும் அக்கிரமங்கள் பராக்கிரமத்துடன் வெற்றி ப…

  13. மோசடின்னா ஈமு மட்டுமல்ல, ரீபோக் ஷூ கம்பெனியும்தான்! விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனமான ரீபோக் இந்தியா அதன் உரிமதாரர்களின் (கடைக்காரர்கள்) பணத்தை மோசடி செய்ய முயற்சிப்பதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். “கடைக்காரர்கள் செய்துள்ள முதலீட்டுக்கான குறைந்த பட்ச லாபத்தை மாதா மாதம் ரீபோக் நிறுவனம் கொடுத்து விடும், கடைக்கான வாடகையை ரீபோக் நிறுவனமே செலுத்தி விடும், விற்பதற்கான பொருட்களை அனுப்பி வைக்கும்” என்ற அடிப்படையில் ரீபோக்கின் உரிமக் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. கடந்த மே மாதம் ரீபோக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சுபீந்தர் சிங் பிரேம் மற்றும் விஷ்ணு பகத் மீது ரூ 870 கோடி மோசடி செய்ததாக நிர்வாகம் கிரிமினல் புகார் பதிவு செய்தது. அதைத் தொட…

  14. பூட்டை உடைக்கும் அமெரிக்க வங்கிகள்! அமெரிக்காவில் 2008-ம் ஆண்டில் வீட்டுச் சந்தை ஊகக் கடன் சூதாட்டக் குமிழி வெடித்த பிறகு பல குடும்பங்கள் கடனை அடைக்க முடியாமல் வீடுகளை கைவிட்டு தமது கார்களிலேயே வசிக்க போய் விட்டார்கள். அப்படி கைவிடப்பட்ட வீடுகளை கைப்பற்றுவதற்காக அமெரிக்க வங்கிகள் தனியார் நிறுவனங்களை அமர்த்தியுள்ளனர். வங்கிகளின் கைக்கூலிகள் “ஒரு வீட்டை கடந்து போகும் போது அங்கு யாரும் வசிப்பது போல தெரியா விட்டால், வீட்டின் பூட்டை உடைத்து மாற்றி விடுகிறார்கள்” என்கிறார் ரிச்சர்ட் பெர்ஷ் என்ற பென்சில்வேனியா சார்ஜன்ட். கன்சாஸில் ஒரு வீட்டில் அறைக்கலன்கள் மாயமாகியிருந்தன. புளோரிடாவில் ஒரு தம்பதியினரின் மடிக்கணினி, ஐபாட், ஆறு பாட்டில் ஒயின் திருட்டுப…

  15. வாய்தா ராணிக்கு சட்டம் ஒரு செருப்பு! பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா கும்பல் வாங்கும் வாய்தாக்கள், நீதிபதி மேலே போடும் மனுக்கள், தன்மீது தொடுக்கப்படும் அவதூறுகள் இதையெல்லாம் பார்த்த பிறகு மனம் வெதும்பி கடந்த 14 ஆம் தேதி தனது அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்து விட்டார், மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா. 1996 இல் போட்ட சொத்துகுவிப்பு வழக்கு ஓரடி கூட நகரவில்லையே என்பதற்காக உச்சநீதிமன்ற வழிகாட்டலின்படி 2005 இல் பெங்களூருவுக்கு அல்லிராணியின் வழக்கு மாற்றப்பட்டது. ஆறு மாதத்தில் முடியும் என நம்பி அரசு சார்பு வழக்கறிஞராக பொறுப்பேற்றாராம் ஆச்சார்யா. முதலில் வாய்தாவாக நீதிமன்றத்தை புறக்கணித்த அம்மையார் …

  16. இந்தியன் நாஷனல் ஆர்மி (Indian National Army) என்றும் ஐஎன்ஏ (INA) என்றும் அழைக்கப்படும் இந்திய தேசிய இராணுவத்தை நேத்தாஜி சுபாஸ் சந்திர போஸ் ஜப்பான் ஆட்சிக்கு உட்பட்ட சிங்கப்பூரில் நிறுவினார். அதில் இருந்தவர்களில் பாதிப் பேர் தமிழர்கள். மேஜர் ஜெனரல் அழகப்பா, கேணல் சோமசுந்தரம், பிரிகேடியர்கள் நாகரத்தினம், எஸ்.ஏ அய்யர், திவி, கப்டன் டாக்டர் லக்சுமி சைகல், என்போர் தமிழர்கள். நேத்தாஜிக்குப் பிடித்த தமிழர் உணவைத் தயாரித்துக் கொடுத்த சமையற்காரர் காளி தமிழராவர். மறு பிறவி ஓன்று இருக்குமானால் நான் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன் என்று சொன்னவர் சுபாஸ். அவருடைய ஜான்சி ராணி பெண்கள் அணியில் தமிழ்ப் பெண்கள் இடம்பெற்றனர். அவர்கள் பெருமளவில் மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள்…

  17. மதுரை விமான நிலையம் இப்பொழுது சர்வதேச விமான நிலையங்களின் பட்டியலில் இணைந்திருக்கிறது. மலேசியாவிலிருந்து 23 பயணிகளுடன் 2 சிறிய ரக தனியார் விமானங்கள் நேற்று மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கின. இமிக்ரேஷன் சோதனையை எம்.பி. மாணிக்கம் தாகூர் தொடங்கி வைத்தார். மதுரை விமான நிலையமானது ரூ130 கோடியில் சர்வதேச தரத்துடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுதளமும் 7,500 அடியாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மதுரையிலிருந்து கொழும்புக்கு விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இலங்கை அதிபர் ராஜபக்சவின் பெயரிலான மிகின் லங்கா நிறுவனம் செப்டம்பர் 8-ந் தேதி முதல் கொழும்பில் இருந்து மதுரைக்கு விமான சேவையை தொடங்க இருந்தது. ஆனால் அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளத…

  18. டில்லி: சி.பி.ஐ.,யின் கணக்கில் இருந்து ரூபாய் 18 லட்சத்தை மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பள கணக்கு அலுவலர் புகார் கொடுத்ததை தொடர்ந்து இந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டில்லியை சேர்ந்த பிரசாந்த் குமார் ஜா என்ற வாலிபர் தானியார் நிறுவனத்தின் மூலம் சி.பி.ஐ.யின் கணக்குகளை கையாண்டு வரும் சம்பள மற்றும் கணக்கு அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி பணியில் அமர்த்தப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்த அந்த வாலிபர் இரண்டு காசோலைகள் மூலம் ரூபாய் 18 லட்சத்தை பணத்தை எடுத்து மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பளம் மற்றும் கணக்கு அலுவலக அதிகாரிகள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து ஏமாற்று வேளை, சதி…

    • 0 replies
    • 965 views
  19. குவஹாத்தி: அஸ்ஸாமில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. சிராங் மாவட்டத்தில் ஏற்பட்ட புதிய வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அந்த மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ' இந்தக் கலவரப் பலியைச் சேர்த்து இதுவரை அஸ்ஸாம் கலவரத்திற்கு 85 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோக்ரஜார், சிராங், துப்ரி உள்ளிட்ட மாவட்டங்களில் போடோ பழங்குடியினருக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர வன்முறையில் பாதிக்கப்பட்டு 5 லட்சம் பேர் அகதிகளாக இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இடையில் சற்று அடங்கி கலவரம் தற்போது சிராங் மாவட்டத்தில் மீண்டும் வெடித்துள்ளது. இன்று அதிகாலையில், பிஜ்னி என்ற இடத்தில் ஐந்து பே…

  20. நிலவில் கால் பதித்த முதல் மனிதன் நீல்ஆம்ஸ்ரோங் இயற்கை எய்தி விட்டார். US astronaut Neil Armstrong dies, first man on MoonComments (362) Advertisement The BBC's Pallab Ghosh, who interviewed Armstrong, says he had an ''ice cool attitude'' which made him an excellent astronaut Continue reading the main story Related Stories Obituary: Neil Armstrong Neil Armstrong has heart surgery Apollo 11 astronauts awarded medals Watch US astronaut Neil Armstrong, the first man to set foot on the Moon, has died at the age of 82. His family says he died from complications from heart surgery he had earlier this month. He walked on the Moon on 20 July …

    • 14 replies
    • 1k views
  21. [size=4]ஏவுகணை பாதுகாப்பு சோதனை மற்றும் தொழில்நுட்பத்தில் உலக வல்லரசான அமெரிக்காவை நெருங்கும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [/size] [size=4]புதிய தலைமுயை தொழில்நுட்பத்துடன் கூடிய நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவுகணைகளை ஏவும் சாதனங்களைமுற்றிலும் உள்நாட்டிலேயே தயாரி்க்கும் நடவடிக்கைகளில் சீனா களமிறங்கியுள்ளது. [/size] [size=4]இதுகுறி்த்து, அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, அதிக தூரம் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழிக்க வல்ல திறமை கொண்டதும், ஏவுகணை‌ எங்கிருந்து ஏவப்பட்டது என்பதை எவரும் அறிந்துகொள்ள இயலாத வகையிலான தொழில்நுட்பத்தையும் சீனா உருவாக்கி வருவதாக அதில் தெ…

    • 4 replies
    • 1k views
  22. [size=1][/size] [size=1][size=4]பெருந்தன்மையானவன்… மரியாதை கொடுப்பவன்… சுய மரியாதைக்காரன், எளிமையானவன்… பழிவாங்கும் சிந்தனை இல்லாதவன்… ஏழைகளுக்கு போராடுபவன், கம்யூனிச சிந்தனையாளன்…- இப்படியெல்லாம் தன்னை விளித்துக் கொள்ளும் ஒரு தலைவர் கருணாநிதி. ஆனால், இந்த பண்புகளுக்கு எல்லாம் இவர் சொந்தக்காரர் இல்லை என்பதை [/size][size=4]பல்வேறு கட்டங்களில் நிருபித்தவர்[/size] [size=4]என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய தேசமே உணர்ந்த உண்மை. தனது இறுதிக்காலத்தில், தமிழ்நாடே கொண்டாட வேண்டிய தலைவராக வலம் வர வேண்டிய இந்த கருணாநிதி, பழிச் சொல்லுக்கும் இழி சொல்லுக்கும் இன்னலாகி இருக்கும் வேளையில், கடந்த வியாழக்கிழமை ஓர் அறிக்கை விட்டு இருக்கிறார். அது வெள்ளிக்கிழமையன்று பத்திரிகை…

  23. Started by Nellaiyan,

    தமிழ் ஈழ தலைவர்??????? ... கேபி, உருத்திரகுமாரர்களுக்கு போட்டியாக கருணா!!!!!!

    • 10 replies
    • 910 views
  24. [size=4]நார்வே நாட்டில், 77 பேரை சுட்டுக்கொன்ற கொலையாளிக்கு, 21 ஆண்டு சிறை தண்டனை, வழங்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டில், கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், உத்தேயா என்ற தீவில், நடந்த கோடை முகாமில், கலந்து கொண்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், 77 பேர் கொல்லப்பட்டனர்.[/size] [size=4]நியோ நாசிச அமைப்பை சேர்ந்த ஆண்டர்ஸ் பெரிங் பிரேவிக், என்பவன் கைது செய்யப்பட்டான். இந்த படுகொலை செய்ததை ஒப்பு கொண்ட ஆண்டர்சுக்கு, ஆஸ்லோ, நகர கோர்ட், 21 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, இன்று தீர்ப்பளித்தது.[/size] [size=4]http://tamil.yahoo.com/ந-ர்வ-பட-க-ல-141200637.html[/size]

    • 6 replies
    • 934 views
  25. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 2 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் 8 பேர் மீதும் குண்டுகள் பாய்ந்தன. இது பயங்கரவாத சம்பவம் அல்ல என போலீசார் தெரிவித்தனர். http://tamil.yahoo.com/அம-ர-க்க-வ-ல்-134800295.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.