உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
உள்நாட்டு பாதுகாப்பு தற்போதும் பாரிய சவால் மிக்க ஒன்றாக உள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்விகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர்கள் சிலரின் கோரிக்கையின் பிரகாரம் சர்ச்சைக்குரிய தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பாக அடுத்த மாதம் 05ஆம் திகதி கலந்துரையாடவுள்ளதாகவும் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநில முதலமைச்சர்களின் மாநாடு டெல்லியில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இம்மாநாட்டில் ஆரம்ப உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.…
-
- 2 replies
- 505 views
-
-
உலக வங்கியின் புதிய தலைவராக ஜிம் யோங் தெரிவு உலக வங்கியின் தலைவராக அமெரிக்க வாழ் தென்கொரியரான ஜிம் யோங் கிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக வங்கியின் தலைவராக உள்ள ரூபர்ட் ஜிலோயிக்கின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் புதிய தலைவரை உலக வங்கி தலைமை நிர்வாகம் அறிவித்தது. கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அமெரிக்கவாழ் தென்கொரியாவைச் சேர்ந்த ஜிம் யோங் கிம்மை பரிந்துரை செய்தார். அதன்படி உலக வங்கி இவரை புதிய தலைவராக அறிவித்துள்ளது. தென்கொரியாவின் சியோல் நகரைச் சேர்ந்த ஜிம் யோங் கிம்(52) இதற்கு முன்பு ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பின் எச்.ஐ.வி. எய்ட்ஸ் ஒழிப்புத் துறையின் இயக்குனராக இருந்தார். முன்னதாக அமெ…
-
- 0 replies
- 523 views
-
-
புதுடெல்லி:டெல்லி மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 272 இடங்களில் 142 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில்,காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. காலை 10.30 மணி நிலவரப்படி பா.ஜனதா 142 இடங்களிலும், காங்கிரஸ் 85,பகுஜன் சமாஜ் 12 மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 33 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில்,மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு என, மூன்றாகப் பிரிக்கப்பட்ட மாநகராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 15-ம் தேதி நடந்தது.மூன்று மாநகராட்சிகளி…
-
- 1 reply
- 784 views
-
-
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று 10 இடங்களில் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். பிரிட்டன் மற்றும் அமெரிக்க தூதரகங்கள் அருகில் உயர் அதிகாரிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தபட்டதாக அஙகிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தூதரகத்தின் மீது எவ்வித தாக்குதலும் நடக்கவில்லை என இந்திய தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒரே நேரத்தில் 10 இடங்களில் புகுந்த பயங்கரவாதிகள் தொடர்ந்து சில நிமிடங்களில் குண்டுகளை வெடிக்க செய்தனர். துப்பாக்கியால் சுட்டனர். ஆப்கன் பார்லி., மீதும் ராக்கெட்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. நேட்டோ படைகள் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலை அடுத்து ஆப்கனில் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது. இந்த …
-
- 2 replies
- 736 views
-
-
சீனா தனது இந்து சமுத்திரப் பிராந்திய நடவடிக்கைகளுக்காக மிக நீண்டகாலத் திட்டமிடலுடன் மேற்கொண்ட குறிப்பாக இந்தியாவைச் சுற்றி போட்டுவைத்த முத்துமாலைத் திட்டத்தைப் சிதறடிக்கும் வகையில், அந்த முத்துமாலையைச் சுற்றி அமெரிக்கா பாரிய வளையம் ஒன்றை அமைத்துவருவது தற்போது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. மலாக்கா ஜலசந்தி ஊடாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நுழையும் தமது கப்பல்களுக்கு பாதுகாப்பாக சீனா சில நாடுகளில் துறை முகங்ளை அமைத்துவந்தது. இது String of pearls (முத்துமாலை) திட்டம் என பரவலாக அறியப்பட்டது. உலக அளிவில் 75 வீதமான எரிபொருள் வளைகுடாவின் ஊடாகவே வெளியேறுகின்றது. இந்த எரிபொருளைப் பாதுகாப்பாக சீனா கொண்டுசெல்வதற்காக, வளைகுடாவில் இருந்து தென் சீனா வரையான கடற்பிராந்திய…
-
- 0 replies
- 1.3k views
-
-
காரைக்கால்: நாடாளுமன்றத்தில் கட்சிகளின் எம்பிக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இலங்கை செல்லும் எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோ, திருமாவளவனோ இக் குழுவில் இடம் பெறமுடியவில்லை என்றும் பிரதமர் அலுவலகத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி கூறினார், திருமாவளவன் இந்தக் குழுவில் இடம் பெறுவதை இலங்கை அரசு விரும்பவில்லை. இதனால் தான் அவரை இதில் சேர்க்காமல் விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந் நிலையில் காரைக்காலில் நிருபர்களிடம் பேசிய நாராயணசாமி, இலங்கைக்கு இந்திய எம்.பிக்கள் குழு செல்கிறது. இவர்கள் அங்கு செல்வதன் மூலம் அங்குள்ள தமிழர்கள் போருக்குப் பிறகு உள்ள நிலையை தெரிந்து கொள்ள முடியும். இந்தக் குழு அங்கு செல்வதால்…
-
- 0 replies
- 724 views
-
-
பிரபல மலையாள நடிகர் கிஷோர் வீரப்பனாகவும், அவரைச் அதிரடிப் படை மூலம் சுட்டுக்கொண்ட விஜயகுமார் ஐபிஸாக அர்ஜூனும் நடித்துள்ள படம் 'வனயுத்தம்.’ இந்தபடத்தை குப்பி, காவலர் குடியிருப்பு படங்களின் மூலம் உண்மைச் சம்பவங்களை படமாக்கிய ஏ.எம்.ஆர் ரமேஷ் இயக்கியிருகிறார். உண்மையில் இந்தப் படத்துக்கு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிதான் தடை வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் தடைவாங்கியிருப்பது கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வனயுத்தம் படத்தின் கன்னடப் பதிப்பான ‘அட்டகாசத்துக்கும்’ தடைகோரிப்பெற்றிருகிறார் கோபால்! முன்னதாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் தாக்கல் செய்த மனுவில், "பல ஆண்டுகளாக வீரப…
-
- 0 replies
- 553 views
-
-
யாஹூ (Yahoo) இணைய நிறுவனம் மீண்டும் வேலைக் குறைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் மீண்டும் 2000 பணியாளர்களை நீக்கப் போவதாக யாஹூ அறிவித்துள்ளது. நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ள ஸ்கொட் தொம்ஸன் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். கடந்த இரு ஆண்டுகளில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், கூகுள், பேஸ்புக் போட்டிகளைச் சமாளிக்கத் தவறியதால் பல மில்லியன் டொலர் நட்டத்தை யாஹூ சந்தித்து வருகிறது. எனவே ஆட்குறைப்பு மூலம் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் ஸ்கொட். 2011ல் யாஹூவில் 14,000 பணியாளர்கள் இருந்தனர். இப்போது இவர்களில் 2000 பேரை நீக்குவதன் மூலம் ஆண்டுக்கு 375 மில்லியன் டொலர்களை சேமிக்கவும், வரிகள் …
-
- 0 replies
- 706 views
-
-
குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய இரு மாநிலங்களிலும் நேற்று (சனிக்கிழமை -ஏப்ரல் 14) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வீச்சு ரிக்டர் அளவுகோலில் 5 அலகாகவும், குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வீச்சு 4.1 அலகாகவும் பதிவாகியிருந்தது. இரு மாநிலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த ஒரு மணிநேரத்தில் பிந்தைய அதிர்வு ஏற்பட்டது. அதன் வீச்சு ரிக்டர் அளவுகோலில் 2.9 அலகாகப் பதிவானது. குஜராத்தில் காலை 8.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கட்ச் பகுதியில் உள்ள வம்கா தாலுகாவில் மையம் கொண்டிருந்தது.நிலநடுக்கத்தின் அதிர்வை கட்ச் மாவட்டம் முழுவதும் வசிக்கும் மக்கள் உணர்ந்துள்ளனர். தவிர, செளராஷ்டிர பகுதியில் வசிக்கும் மக்களும் நிலநடுக்கத்தை உணர்ந்ததா…
-
- 1 reply
- 449 views
-
-
இரான்-உலக வல்லரசுகள் இடையிலான பேச்சுவார்த்தை இரானின் அணுத்திட்டம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இரானுக்கும் ஆறு முக்கிய வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை துருக்கியில் நடைபெறுகின்றது. பிராந்தியத்தில் அதிகரித்துவரும் குழப்பநிலைமையை கட்டுப்படுத்த இந்த சந்திப்பு உதவும் என்று அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ்,ரஷ்யா மற்றும் ஜேர்மனியின் பிரதிநிதிகள் நம்புகின்றனர். தனது அணுத்திட்டம் சிவில் தேவைக்கானது என்று இரான் வாதிட்டு வருகின்றது; ஆனால் அந்நாடு அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிப்பதாக மற்றபல நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன. இரானின் நடவடிக்கையை தடுப்பதற்காக அந்நாட்டின் மீ…
-
- 5 replies
- 712 views
-
-
சூடான் : பிராந்திய மோதல் தீவிரமடைகிறது சுடானுக்கும், தென் சுடானுக்கும் இடையே எலைப்பகுதியில் தொடரும் மோதல்கள் மேலும் அதிகரித்துள்ளன. தமது பகுதியில் உள்ள ஒரு சந்தைப் பகுதியில் சுடானிய வான்படை குண்டு வீசி குறைந்தபட்சம் 5 பேரைக் கொன்றதாக தென் சுடான் குற்றஞ்சாட்டியுள்ளது. தெற்கு சுடானிய நகரான பெட்டியுவில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. தென்சுடானிய படைகளால் செவ்வாயன்று கைப்பற்றப்பட்ட பெட்ரோலிய வளம் மிக்க பிராந்தியமான ஹெக்லிக்கு அருகில் சுடானிய இராணுவம் நடத்திய தாக்குதலை தாம் முறியடித்த்தாக தென்சுடான் முன்னதாகக் கூறியிருந்தது. சுடானிய அரசாங்கத்திடம் இருந்து இது குறித்து கருத்து எதுவும் வரவில்லை. http://www.bbc.co.uk...nfighting.shtml
-
- 1 reply
- 584 views
-
-
UN Security Council (file photo). The United Nations Security Council unanimously gave the go ahead Saturday for a small group of observers to be deployed to Syria to monitor a fragile truce between the government and armed opposition fighters. Some last-minute negotiations were required to win the full 15-nation council’s approval. Resolution 2042 authorizes up to 30 monitors to be deployed immediately to Syria, where a shaky truce held Saturday despite reports of government shelling in the flashpoint city of Homs. Britain's ambassador, Mark Lyall Grant, noted that the resolution is clear about the commitments both the Syrian government and the opposition …
-
- 0 replies
- 619 views
-
-
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் பின்னடவைச் சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி நிலையான வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக "சாதி" ஆயுதத்தை கையிலெடுத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தலித்துகளின் நண்பனாக, இஸ்லாமியர்களின் நண்பனாக வேஷம் போட்டு காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்து பார்த்தது. கட்சியின் "நம்பிக்கை நட்சத்திரம்" என அழைக்கப்படும் ராகுல்காந்தி தலித்துகளின் குடிசைகளுக்குள் ஓடி, உட்கார்ந்து சாப்பிட்டு போட்டுக் காண்பித்த அத்தனை காட்சிகளுமே அட்டர் பிளாப்பில்தான் முடிந்தது! பிற்படுத்தப்பட்ட மக்களும் இஸ்லாமியர்களும் சமாஜ்வாதி கட்சியை நம்புகின்றனர். தலித்துகள் மாயாவதி பக்கம் சாய்கின்றனர். இதனால் உத்தரப்பிரதேசத்தில் …
-
- 5 replies
- 1.1k views
-
-
சிரியா: ஐ.நா. கண்காணிப்பு சிரியா நாட்டில் ஐ.நா. கண்காணிப்பு குழு யுத்த நிறுத்தத்தை கண்காணிக்க அனுப்பப்படவுள்ளது. முதலில் எதிர்ப்பைக்காட்டி வந்த உருசியா சில மாற்றங்களுடன் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு குழுவில் ஆதரித்தது. The U.N. Security Council voted unanimously Saturday to approve a resolution to allow international observers into Syria to monitor a shaky cease-fire, as reports of clashes continue to emerge from across the country. The resolution calls on the Middle Eastern nation to allow the deployment of an advance team of up to 30 international observers and give them unimpeded freedom of movement. It remains unclear, however, if the deploy…
-
- 0 replies
- 378 views
-
-
பர்மாவுக்கு ஆயுதங்களை விற்பதற்கான தடை தவிர்ந்த, அந்த நாட்டுக்கான ஏனைய தடைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதை தான் ஆதரிப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறியுள்ளார்.பர்மாவில் ஒரு வருடத்துக்கு முன்னதாக ஒப்பீட்டளவிலான சிவிலியன் அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், அங்கு சென்றுள்ள முதலாவது மேற்கத்தைய தலைவரான கேமரன், ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூ சியுடன் பேச்சு நடத்திய பின்னர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இத்தகைய தடைக்கான இடைநிறுத்தம் மறுசீரமைப்பு இயக்கத்தில் நிலையை பலப்படுத்தும் என்று ஆங் சான் சூ சி கூறியுள்ளார். முன்னதாக பர்மிய அதிபரான தெய்ன் செய்னை சந்திந்த கேமரன், பர்மா அரசியல் கைதிகளை விடுதலை செய்து, பாரிய ஜனநாயகத்தை நோக்கிய நகர்வுகளை உறுதி செ…
-
- 1 reply
- 498 views
-
-
இப்போது திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் என்று பிரிக்கப்பட்டுவிட்ட - ஒரு காலத்தில் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அந்த மாவட்டத்திலேயே தோன்றி, அதே மாவட்டத்தில் கடலில் கலக்கும் தனித்துவம் அப்போது தாமிரவருணி ஆற்றுக்கு இருந்தது. பொதிகைமலைச் சாரலில், தாமிரவருணி ஆற்றின் தண்ணீரைக் குடித்து அந்தத் தண்ணீரில் குளித்து வளர்ந்தவன் நான் என்பதால் என்னில் ஓடுவது தாமிரவருணி ரத்தமாக இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது? இப்போது 'சத்யம்' தொலைக்காட்சியின் இணை ஆசிரியராக இருக்கும் எம். பாண்டியராஜன் 'தாமிரவருணி: சமூக-பொருளியல் மாற்றங்கள்' என்கிற புத்தகத்தை என்னிடம் தந்தபோது, பாவநாசம், விக்கிரமசிங்கபுரம், மணிமுத்தாறு நினைவுகளில் நான் ஆழ்ந்தேன். எனக…
-
- 0 replies
- 542 views
-
-
'விட்டாச்சு லீவு...’ என்று, விபரீதம் புரியாமல் கடந்த 11-ம் தேதி மதியமே துள்ளிக் குதித்துக் கிளம்பினார்கள். யார்...? சென்னை பள்ளிக் குழந்தைகள்தான். நில நடுக்கம் உணரப்பட்டதுமே சென்னை முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. நில நடுக்கம் என்றால் என்னவென்றே அறியாத குழந்தைகள், சந்தோஷமாக ஓடினார்கள். வீதி யெங்கும் பெரியவர்கள் பயந்த விழிகளுடன் வீட்டுக்கு வெளியே நிற்பதைக் கண்டபிறகுதான் குழந்தைகளுக்கும் பயம் வந்தது. முன்பெல்லாம் நிலநடுக்கம் எப்போதாவது வரும் என்றாலும், பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பாதிப்புக்குப் பிறகு தலைகீழாகி விட்டது நிலைமை. நிலநடுக்கத்தை உணர்ந்ததும், அலறி அடித்துக்கொண்டு அலுவலகத்தையும் வீட்டையும் விட்டு ரோட்டுக்கு…
-
- 0 replies
- 787 views
-
-
அதிபர் ஒபாமாவின் 2011 ஆம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கீது வருட ஆண்டு - 2011 குடும்ப வருமானம் - 790,000 USD இதில் கிட்டத்தட்ட அரைவாசி ஒபாமாவின் சம்பளம் மிகுதி புத்தக விற்பனை வருமானம் வருமான வரி வீதம் - 20 % நன்கொடையாக கொடுத்த பணம் - 172,000 USD ஆதாரம் - வெள்ளை மாளிகை http://www.theglobeandmail.com/news/world/obamas-tax-return-reveals-hes-no-million-dollar-man/article2401244/
-
- 2 replies
- 455 views
-
-
நியூயார்க்: இந்தி நடிகர் ஷாரூக்கானை 2 மணிநேரத்துக்கும் மேலாக நியூயார்க் விமான நிலையத்தில் தடுத்து வைத்ததற்காக மன்னிப்பு கோருவதாக அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஷாருக் கான் விவகாரத்தில் அமெரிக்கா தொடர்ந்து நடந்து கொள்ளும் விதத்தை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. முன்னதாக ஷாரூக்கான் தடுக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்குமாறு இந்திய தூதர் நிருபமா ராவிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியிருந்தார். ஒவ்வொருமுறையும் தடுப்பதும் பின்னர் மன்னிப்பு கோருவதும் ஒரு கொள்கையாகவே அமெரிக்கா வைத்திருப்பதை ஏற்க முடியாது என்று கூறுமாறும் கிருஷ்ணா தெரிவித்திருந்தார். இதைத் தொ…
-
- 3 replies
- 660 views
-
-
உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், அனைத்து மருத்துவர்களும் குறிப்பிட்ட பெண்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு அவர்களுக்கே தெரியாமல் மருத்துவர்கள் கருத்தடை செய்து விடுகின்றனர். கர்ப்பபையில் இருந்து முட்டையை வெளியேற்றும் குழாயில் முடிச்சு போட்டு கருத்தடை செய்கின்றனர். சில பெண்களுக்கு கர்ப்பபையையே அவர்களுக்கு தெரியாமல் மருத்துவர்கள் அகற்றி விடுகின்றனர். இந்த தகவல் தற்போது தான் வெளியே தெரியவந்துள்ளது, இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. http://world.lankasri.com/view.php?22IOld0bcE80Qd4e24MC302cBnB2ddeZBnL302eMAA2e4U08qacb3lOK42
-
- 0 replies
- 498 views
-
-
பிரான்சில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் மிக தீவிரமாக நடந்து வருகிறது. இத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கும், எதிர் வேட்பாளர் ஹோலாண்டேவுக்கும் போட்டி கடுமையாக இருக்கும். LH2 என்ற நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு ஹோலாண்டேக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்ததும், சர்கோசி அதற்குப் பதிலடி தரும் வகையில் அவர் வெற்றி பெற்றால் முதலீட்டாளர் பிரான்சில் தொழில் நடத்த அஞ்சுவர், பின்பு கிரீஸ், ஸ்பெயின் நாடுகளுக்கு ஏற்பட்ட நிலைமையே பிரான்சுக்கும் ஏற்படும் என்றார். ஹோலாண்டே இடதுசாரி இயக்க ஆதரவாளர் என்பதால் பிரான்ஸ் நாட்டின் அரசாங்கம் முழுக்க முழுக்க இடதுசாரி ஆதரவுடையதாக உருமாறிவிடும் என்றார். ஹோலாண்டேக்கு எதிரான இந்த அச்சுறுத்தல்களோடு சர்கோசி கடந்த…
-
- 0 replies
- 544 views
-
-
வட கொரியா நீண்ட தூரம் செல்லும் செயற்கைகோளை ஏவி சோதனை செய்தது. ஆனால் சிறிது நேரத்தில் செயற்கைகோள் வெடித்து சிதறி தோல்வியில் முடிந்தது. வடகொரியாவின் நிறுவன தலைவர் கிம் 2 சங் 100-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவாக விண்ணில் கண்காணிப்பு செயற்கைகோள் ஒன்றை ஏவ வடகொரியா முடிவு செய்தது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இதற்கு ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை சோதனை நடத்தவே இந்த ஏவுகணை ஏவப்படுவதாக குற்றம் சாட்டின. இதை வடகொரியா மறுத்தது. வானிலை ஆய்வுக்காகவே அனுப்பப்படுவதாக கூறியது. அதே நேரத்தில் உலக நாடுகளின் எதிர்ப்…
-
- 0 replies
- 418 views
-
-
சென்னை: தை திங்கள் முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டு மொத்த எல்லா தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்ட உண்மை என்று பொத்தாம் பொதுவாக கூறி தமிழர்களின் மனம் புண்படும் வகையில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றி அமைத்தவர் கருணாநிதி என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. தமிழக அரசின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழா இன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு ஜெயலலிதா பேசுகையில், தாயிற்சிறந்த கோவிலும் இல்லை. தமிழ் மொழியிற் சிறந்த தெய்வமும் இல்லை என்பதற்கு ஏற்ப சித்திரை திருநாளாம் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் வண்ணம் நடைபெறும் இந்த அரசு விழாவில் கலந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் புத்தாண்டை…
-
- 0 replies
- 548 views
-
-
சீக்கியராக மாறியவரை அவமதித்த அமெரிக்க நிறுவனம், 75 ஆயிரம் டாலர் நஷ்ட ஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.வாஷிங்டனில், ஈவ்ரெட் பகுதியில் உள்ள ஆட்டோ சோன் நிறுவனத்தில் கடந்த, 2009ம் ஆண்டு வேலை பார்த்தவர் பிராங்க் மகோனி,. சீக்கியராக மதம் மாறிய மகோனி, தலைப்பாகை அணியவும், சிறிய கத்தி வைத்துக் கொள்ளவும் இந்த நிறுவனம் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாது, இவரை அல்குவைதா இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் தீவிரவாதி என்றும் நிர்வாகம் அவமதித்து வந்தது. இவர் தாடி வைத்திருந்த காரணத்தால் இவருடைய பதவி உயர்வும் ரத்து செய்யப்பட்டது.பாகுபாடற்ற வேலைவாய்ப்பு கமிஷனிடம் இது குறித்து, மகோனி புகார் தெரிவித்தார். இந்த கமிஷனின் உதவியுடன், ஆட்டோ சோன் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்க…
-
- 0 replies
- 394 views
-
-
கண்துடைப்புக்காக இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் இருந்து அதிகமுக விலகியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் குழுவில் அதிமுக இடம்பெறாது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். இந்திய நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் இடம்பெற வேண்டிய பல கட்சிப் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை. எடுத்துக்காட்டாக இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா புறக்கணிக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். இந்த நாடாள…
-
- 0 replies
- 560 views
-