Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துவிட்ட நிலையில், அடுத்தபடியாக வரப் போவது 'ஏ-6' என்று பெயரிடப்பட்டுள்ள ஏவுகணை. இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் பல அணு குண்டுகளை ஏந்திக் கொண்டு 10,000 கி.மீ. வரை சென்று ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. 17.5 மீட்டர் உயரம் கொண்ட அக்னி 5 ஏவுகணை திட எரிபொருளால் இயக்கக் கூடியதாகும். இதனால், இதை மிக எளிதாக ராணுவ வாகனங்களில் எந்த இடத்துக்கும் கொண்டு சென்று ஏவ முடியும். சுமார் 1.5 டன் (1,500 கிலோ) எடை கொண்ட அணு குண்டையோ அல்லது வேறு ஆயுதங்களையோ இந்த ஏவுகணையால் ஏந்திக் கொண்டு 5,000 கி.மீ. வரை பயணிக்க முடியும். 'இன்டர் காண்டினென்டல் பேலிஸ்டிக் மிஸைல்' (Inter-Contine…

  2. நோர்வேயில் அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது, பதவியிழந்த சிறிலங்காவுக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிர அரசியலில் இருந்து விலகி, இராஜதந்திரப் பணியில் இணைந்து கொள்ளும் நோக்கில் அவர் முக்கியத்துவம் மிக்க ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்குப் போட்டியில் குதித்துள்ளார். நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான நோர்வேயின் தூதுவராகப் பணியாற்றும் மோர்டென் வெற்லன்ட் நான்கு ஆண்டு பதவிக்காலத்தை முடித்து ஒஸ்லோ திரும்பவுள்ளார். ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு எரிக் சொல்ஹெய்முடன் மேலும் மூவர் போட்டியில் உள்ளனர். எனினும் இந்தப் பதவிக்கு எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. …

  3. சீனா போட்டுள்ள முத்துமாலை குறித்தும், அதனை முறியடிக்க அமெரிக்கா போட்டு வருகின்ற பாதுகாப்பு வளையம் குறித்தும் கடந்த இதழில் பார்த்திருந்தோம். பலுசிஸ்தான் மாகாணத்தை தனிநாடாகப் பிரிப்பதற்கு நடந்துவரும் நகர்வுகளைப் பார்ப்பதற்கு முன்பாக இந்து - பசுவிக் சமுத்திரத்திரங்களுக்கு இடையில் அமைந்திருக்கும் தென் சீனக் கடற் பிராந்தியம் குறித்தும், இதற்காக சீனாவும் - இந்தியாவும் முட்டி மோதிக்கொள்வது ஏன் என்பது குறித்தும் இந்தத் தொடரில் பார்ப்போம். இந்திய - சீன எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேசம் இந்தியா தனக்கு சொந்தமானது என்கின்றது. ஆனால், இதனை தனக்கு சொந்தமென சீனா உரிமை கொண்டாடி வருவதுடன், அப்பகுதி மக்கள் சீனாவிற்குள் நடமாடுவதற்கும் விசா தேவையில்லை எனக்கூறி, தனது சொந்த நாட்டு மக்கள்…

  4. April 20, 2012 ஈராக்கில் நான்கு இடங்களில் நேற்று குண்டு வெடித்ததில் 30 பேர் பலியாயினர்.ஈராக்கில் பாக்தாத், கிர்குக், சலாஹிதின் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 30 பேர் பலியாயினர். பாக்தாத் குண்டு வெடிப்பில் 17 பேரும், கிர்குக் மாகாண குண்டு வெடிப்பில் ஒன்பது பேரும், சலாஹிதின் மாகாணத்தில் சமாரா என்ற இடத்தில் மூன்று பேரும் குண்டுவெடிப்பில் பலியாயினர். தியாலா மாகாணத்தில் வெடித்த குண்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியானார். http://www.paristami...Tg0NjYxNDQ4.htm

  5. தமிழகத்தில் உள்ள கண்மாய், குளங்களில் மணற் கொள்ளையில் ஈடுபட தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதனை தடுக்க பொதுமுக்கள் முன்வருமாறும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். தமிழகத்தின் ஆற்றுப்படுகையில் ஆளும் கட்சியினர் கணக்கின்றி மணலை அள்ளி விற்பனை செய்து, நமது ஆற்று வளத்தை சூறையாடி வருகிற செயல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. உயர்நீதிமன்றத்தின் தலையீடு, பொதுமக்களின் விழிப்புணர்வு காரணமாக, பிரதான ஆற்றுப்படுகைகளில், மணல் திருட்டு குறைந்து உள்ளது. எனினும் ஆளும் கட்சிக்கு வருவாய் ஈட்டும் முக்கியத் தொழிலாக சட்டவிரோத மணல் திருட்டு அமைந்து உள்ளதால், பிரதான ஆற்றுப்படுகைகளைத் தவிர்த்து பல சிற்றாறுகள், கால்வரத்துப் பகுதிகள் காட்டாறுகளை…

  6. Sri Lanka: Urge United Nation to hold Referendum on "Free Tamil Eelam" http://www.change.org/petitions/sri-lanka-urge-united-nation-to-hold-referendum-on-free-tamil-eelam http://www.petitions.in/petition/sri-lanka-urge-united-nation-to-hold-referendum-on-free-tamil-eelam/10072 Circulate to your Contacts

  7. டரைவோன் மார்டின் கொலையும் அமெரிக்காவும் ஒபாமாவும் கறுப்பினத்தவரான 17 வயதான டரைவோன் மார்டின் கொலை அமெரிக்காவை உலுக்கியதுடன் வழமையாக இனம் சம்பந்தப்பட்ட விடயங்களில் விலகி இருக்கும் அதிபர் ஒபாமாவையே தனக்கு ஒரு மகனிருந்தால் என ஒப்பிட வைத்து பேசவைத்துள்ளது ! இந்த இளையவர் 'முதலில் கொல் பின்னர் காரணத்தை கூறு' என்ற சட்டத்திற்கு அமைய கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு பலரும் கொல்லப்பட்டு, கொன்றவர்கள் எவருமே தண்டனை அனுபவித்ததில்லை. ஆனால், இம்முறை இந்த சட்டம், அதன் தீமைகள் விவாதிக்கப்படலாம்.

    • 12 replies
    • 1.4k views
  8. டென்மார்க்கின் பிரபலமான தொழில் அதிபர் மாஸ்க் கெனி மக் மூலரின் இறுதிக்கிரியைகள் கொல்மன்ஸ் தேவாலயத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இது தனிப்பட்ட குடும்ப நிகழ்வாகவே நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டேனிஸ் மகாராணியார் இந்த வைபவத்தில் பங்கேற்க இருக்கிறார். மாமனிதன் மாஸ்க் ஒரு வரலாற்றுப் பார்வை 1903 ம் ஆண்டு யூலை மாதம் 23 ம் திகதி பிறந்தார். 1930 ல் கப்பல் மாலுமிக்கான பரீட்சையில் சித்தியடைந்தார். 1932 ல் பிரான்ஸ், ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மாலுமியாக பணியாற்றினார். 1938 ல் கோப்பன்கேகன் திரும்பி தந்தையின் ஏ.பி.மூலர் நிறுவனத்தில் சேர்ந்தார். 1939 ல் டென்மார்க் நீராவிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகத்தில் இடம் பெற்றார். 1940 ல் உயர்நிலை பா…

    • 1 reply
    • 342 views
  9. கராச்சியிலிருந்து 127 பயணிகளுடன் புறப்பட்ட பொஜா ஏயார்லைன்ஸ்விமானம் பாகிஸ்தானின் ராவல்பிண்டிக்கு அருகாமையில் வெடித்துச் சிதறியுள்ளது. குறித்த விமானம் கராச்சியிலிருந்து இஸ்லாமபாத்திற்கு புறப்பட்ட வேளையில் மோசமான காலநிலை காரணமாக ராவல்பிண்டிக்கு அருகாமையில் வைத்து வீழ்ந்து வெடித்துச்சிதறியுள்ளது. மேலும் விமானம் முற்றாக தீப்பிடித்து சேதமாகியுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரியான அக்பர் தெரிவித்துள்ளார். உயிரழப்பு மற்றும் சேதம் தொடர்பான விடயங்கள் குறித்து இதுவரையில் எதுவும் தெரிவிக்க்படவில்லை. மேலும் தற்போது அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37694

  10. இன்னும் சிறிது நேரத்தில் நேரலை சாதி மத மூடநம்பிக்கைகளால் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழனை விடுவிக்க வந்த ஆயுதமே திராவிடம். சுயநலவாதிகளுக்கும், சாதி வெறியர்களுக்கும், பெண்ணடிமைவாதிகளுக்கும், மதத்தால் மனிதனை அடிமை செய்வோருக்கும் எதிரியே திராவிடம். தமிழீழ விடுதலைப்போருக்கு ஆயுதப்பயிற்சிக்களத்தை தமிழகத்தில் அமைத்துக்கொடுத்ததும் திராவிடர்களே. சாதி மத வேற்றுமைகளை நீக்கி தமிழர்களை ஒற்றுமைப்படுத்தும் ஆயுதமான திராவிடத்தை ஒழிக்கும் முயற்சியில் முதலாளித்துவ சுயநலவாதிகள் சிலர் ஈடுபட்டுள்ளனர். இளைய தலைமுறையினருக்கு தந்தைப்பெரியாரின் சிந்தனைகளையும் திராவிடக்கருத்துக்களையும் விளக்கும் வகையில் “குடி அரசு வாசகர் வட்டத்தினர் ஏற்பாட்டில் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர்…

    • 0 replies
    • 379 views
  11. வருபவர்களை வரவேற்க வேண்டும் என்பது திமுகவில் சட்டமா என்ன?: அழகிரி அதிரடி மதுரையில் மு.க. ஸ்டாலின் நடத்திய திமுக இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு குறித்தும், அவர் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் குறித்தும் எனக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறினார். முன்னதாக மதுரையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளைத் தேர்வு செய்ய அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் நடத்திய நேர்காணலையும், ஸ்டாலின் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தையும் மதுரை மாவட்டத்தின் அனைத்து திமுக நிர்வாகிகளும் புறக்கணித்தனர். பொதுக் கூட்டத்துக்கு திமுக சார்பில் போலீசாரிடம் அ…

    • 0 replies
    • 515 views
  12. புவி வெப்பமடைவதால் பனி மலைகள் உருகி வருகின்றன. ஆனால் இமயமலையின் மேற்கு பகுதியான காரகோரம் மலையில் பனி இறுகி, கெட்டியாகி வருவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இந்த மலைத்தொடரில் பனியின் அளவு அதிகரித்து வருவதை பிரெஞ்சு விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. புவி வெப்பமடைவதால் இமய மலையின் மற்ற பகுதிகளில் உள்ள பனி மலைகள் உருகி வரும் நிலையில், இந்த மலை மட்டும் இறுகி வருவதன் காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. இந்த பிராந்தியத்தில் உள்ள பனிமலைகள் 10 கோடி மக்களுக்கு நீர் வழங்கும் ஆதாரமாக இருந்து வருகின்றன. இமயமலையில் உள்ள மொத்த பனியும் 2035 ஆம் ஆண்டில் உருகிப் போய்விடும் என்று 2007 ஆம் ஆண்டு வெளியான காலநிலை மாற்றத்துக்கான குழுவின் அறிக்கை கூறியது. இதையடுத்து, இமயமலை பனி …

  13. சென்னை சிறுவன் கொலை: முன்னாள் ராணுவ அதிகாரிக்கு ஆயுள் சிறை சென்னையில், ராணுவக் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவனை சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு, சென்னை விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் ராமராஜுக்கு, ஆயுள் தண்டனையுடன், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதில் 50 ஆயிரம் ரூபாயை, கொல்லப்பட்ட 13 வயது சிறுவன் தில்ஷனின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் துவங்கிய வழக்கு விசாரணை 7 மாதங்களில் முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். …

    • 2 replies
    • 616 views
  14. செங்கல்பட்டு காந்திபுரம் நெடுஞ்சாலையில் உள்ள கிளை சிறையில் கைதிகள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதம் இன்று 5வது நாளாகவும் தொடர்கிறது. இச்சிறையில் ஈழத்தை சேர்ந்த 32 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியது, சந்தேகப்படும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இராமேஸ்வரம், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் பிடிபட்ட இவர்கள் கடந்த சில மாதங்களாக இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி கடந்த 3 மாதங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தனர். அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 45 நாட்களுக்குள் உங்கள் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்…

  15. ரூ.4400 கோடியில் புதிய பென்ஸ் டிரக் ஆலை சென்னை அருகே கட்டப்பட்டுள்ள டெயம்லர் குழுமத்தின் புதிய டிரக் தயாரிப்பு தொழிற்சாலையை முதல்வர் ஜெயலலிதா இன்று துவங்கி வைத்தார். ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் குழுமம் மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் கார் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. மேலும், டெய்ம்லர் பிராண்டில் கனரக வாகன விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தனது வர்த்தகத்தை இந்தியாவில் விரிவாக்கம் செய்யும் விதமாக கனரக வாகனங்கள் தயாரிப்பு துறையிலும் டெய்ம்லர் இறங்கியுள்ளது. இதற்காக, பாரத் பென்ஸ் என்ற புதிய பிராண்டையும் கடந்த ஆண்டு இந்தியாவில் டெய்ம்லர் குழுமம் அறிமுகம் செய்தது. மேலும், சென்னை அருகே ஒரகடத்தில் ரூ.4000 கோடி முதலீட்டில் உலகத் தர…

  16. Started by ஈசன்,

    . இந்தியா அக்னி 5 என்னும் நீண்ட தூர ஏவுகணையை இன்று இரவு 7 மணிக்கு பரிசோதனை செய்ய உள்ளது. இது 5000 கிலோமிட்டர் வீச்சுக் கொண்டது. இப்பரிசோதனை வெற்றி அளிக்கும் பட்சத்தில் ஐ.நா. வின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உரிமைகொண்ட நாடுகளிற்கு இராணுவத்தொழில்நுட்பத்தில் சமமான நிலையை இந்தியா அடையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இது ஒன்றிற்கு மேற்பட்ட அணுவாயுதங்களைக் காவிச்செல்லக் கூடிய பல்லிலக்கு ஏவுகணையாகும். விண்வெளியில் 800 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து செல்லும். இந்த ஏவுகணை செய்மதியைக் கொண்டுசெல்லக்கூடியவாறும் மாற்றப்படக்கூடியது. ஒரிஸ்ஸாவின் சிறிய தீவொன்றில் இருந்து ஏவப்படவுள்ளது. இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைமூலம் இந்தியா ஆசியாமுழுவதையும், ஐரோப…

    • 12 replies
    • 2.4k views
  17. கருநாடகத்தில் நடைபெறவுள்ள ‘பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வு’ தமிழ் மக்களின் உரிமைக்கான உன்னத நிகழ்வாக அமைய வேண்டுமென்று ஈழத் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிகழ்வின் மூலம் தமிழ் மக்களின் உரிமைக்குரல் உலக நாடுகளின் காதுகளில் ஒங்கி ஒலிக்கட்டும் என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில், எதிரியின் இரும்புக் கரங்களுக்குள் பிரசவமாகிய பொங்கு தமிழ் உலகின் மூலை முடுக்கெங்கும் தவழ்ந்து சென்று இன்று கருநாடகத்தில் வளர்ந்து நிற்கிறது. புலம்பெயர் தமிழர்களால் வளர்க்கப்பட்டுள்ள இந்தப் பொங்கு தமிழ் நிகழ்விற்கு, ஈழத் தமிழ் மக்கள் தமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். காற்றாடியை முறித்தால் காற்றே வீசாதென்று சிங்களம் கனவு காண்கிறது. ஈழத் தமிழரின…

  18. சூடானின் திபர் ஒமர் அல் பஷீர் வியாழக்கிழமை தென் சூடானுக்கு எதிராகத் தனது யுத்தப் பிரகடனத்தை விடுவித்துள்ளார். தென் சூடான் அரச தலைவர்களை பூச்சிகள் என வர்ணித்துள்ள அவர் விரைவில் அவர்களுக்கு எதிராக பாடம் கற்பிக்க போவதாகவும் கூறியுள்ளார். தென் சூடான் அரசாங்கத்தைக் களைப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்த யுத்தப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். மிக நீண்ட உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் தென் சூடான் மிகச் சமீபத்திலேயே அதாவது ஜூலை 9 2011 இல் விடுதலை பெற்று தனி நாடானாது. தற்போது எண்ணெய் வளம் மிக்க தென் சூடானின் எல்லைப் பகுதிகளை கைப் பற்றுவதற்காக சூடான் அவ்வப்போது தாக்குதல்களை மேற்கொண்டு வந்தது. சூடானின் பாராளுமன்றத்தில் தென் சூடானின் ஆள…

  19. அமெரிக்காவுடன் மீண்டும் சுமுக உறவைத் தொடர முடிவு மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது குறித்து தெஹ்ரிக்-இ-தலிபான் தலைவர் ஹகீமுல்லா மெஹ்சூத் தலைமையில் ரகசிய ஆலோசனை நடைபெற்றது. இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை சேர்ந்த தலிபான்கள் மற்றும் அல்கொய்தா அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும், இதற்காக 21 பேரை கொண்ட தற்கொலைப்படையை தயார்படுத்தி இருப்பதாகவும் உளவுத்துறையை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் பத்திரிகை கூறியுள்ளது. தினம் ஒரு குண்டு வெடிப்பும், தற்கொலைப் படைத் தாக்குதலையும் சந்தித்து வரும் பாகிஸ்தானிற்கு தலிபான்களின் இந்த ரகசிய திட்டம்…

    • 0 replies
    • 454 views
  20. உலகிலேயே பெரிய அணை சீனாவில் உள்ள யாங்சி ஆற்றில் 2006-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து 22 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணை கட்டுமான பணி 1994-ம் ஆண்டு தொடங்கி 2006-ல் முடிவடைந்தது. இந்த அணையை கட்டி முடிக்க ரூ.2லட்சம் கோடி செலவிடப்பட்டது. அப்போது அணை பகுதியில் இருந்த 14 பெரிய நகரங்கள், 133 சிறு நகரங்கள், 1350 கிராமங்கள் காலி செய்யப்பட்டு 14 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். அணை கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து அடிக்கடி அணை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதுவரை 96 தடவை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இனியும் 5386 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கண்டறிந்து உள்ளனர். நிலச்சரிவை தடுக்க 355 இடங்களில் தடுப்பு நடவ…

    • 0 replies
    • 780 views
  21. ஐ.நா. அகதிகள் அமைப்பின் சிறப்புத் தூதுவராக பிரபல ஹொலிவூட் நடிகை அஞ்ஜெலினா ஜோலி நியமிக்கப்பட்டுள்ளார். இதே அமைப்பின் நல்லெண்ணத் தூதுவராகக் கடந்த 10 வருடங்களாகப் பதவி வகித்த ஜோலி தற்போது பதவி உயர்வு பெற்று சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். நல்லெண்ணத் தூதுவராகப் பதவி வகித்தபோது உலகிலுள்ள 40 இடங்களுக்குச் சென்று அகதிகள் மறுவாழ்வுக்காக ஜோலி அரும்பணியாற்றியுள்ளார். கடந்தாண்டு ஒஸ்கார் விருது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் ஆப்கானில் அகதிகள் மறுவாழ்வுக்காக ஜோலி செயலாற்றினார். அவரது சிறப்பான பணிக்காக பதவிஉயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஐ.நா. அகதிகள் அமைப்பு முதல் முறையாக சிறப்பு தூதர் பதவியை உருவாக்கி உள்ளது. இதுபோன்ற பதவிகள் பொதுவாக ஓய்வு பெற்ற அரசியல்வாதிகளுக…

  22. மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக 22 ஆண்டுகள் போராடிய ஆங் சாங் சூகி இராணுவத்தால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 24 ஆண்டுகளுக்குப் பின் தற்போது முதன் முறையாக ஆங் சாங் சூகி எதிர் வரும் ஜூன் மாதத்தில் ஓஸ்லோவிற்கு வருகை தருவதாக நோர்வே நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்பயணம் குறித்து கடந்த ஞாயிறன்று நோர்வே நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜோன்ஸ் கர் ஸ்டோயிர், ஆங் சாங் சூகி உடன் தொலைபேசியில் பேசியதாக நோர்வே நாட்டின் வெளிவிவகாரத் துறையின் செய்தி தொடர்பாளர் ஸ்வீன் மிச்செல்சன் தெரிவித்தார். மேலும் 1989ம் ஆண்டிற்கு பிறகு மியான்மரில் இருந்து நோர்வே வரும் முதலாவது எதிர்க்கட்சி தலைவர் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக இவருக்கு ந…

  23. மகாத்மா காந்தியின் ரத்தம் படிந்த புல் ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம் போனது. லண்டனை சேர்ந்த முல்லாக் ஏல நிறுவனம் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை நேற்று ஏலம் விட்டது. காந்தியின் ரத்த துளி படிந்த புல் மற்றும் சிறிது மண், ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம் போனது. இவை 1948,ம் ஆண்டு ஜனவரி 30,ம் தேதி காந்தி கொல்லப்பட்டபோது, அங்கிருந்த கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பி.பி.நம்பியார் என்பவரால் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நம்பியார் எழுதிய கடிதமும் வைக்கப்பட்டிருந்தது. இதுபோல காந்தியின் கண்ணாடி, அவர் பயன்படுத்திய ராட்டை, எழுதிய கடிதங்கள், அரிய புகைப்படங்கள், படித்த புத்தகம் போன்றவையும் ஏலம் விடப்பட்டன. கண்ணாடி ரூ.27 லட்சம், ராட்டை ரூ.22 லட்சம், அவர் படித்த…

  24. பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அட்டூழியங்களைக் கூறும் ஆவணங்கள் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் இறுதி ஆண்டுகளில் சித்ரவதைகளும் கொலைகளும் நடந்தமை குறித்து பிரித்தானிய அமைச்சர்களுக்கு தெரிந்திருந்தது என்பதைக் கூறும் அரசாங்க ஆவணங்கள் பொதுமக்களின் பார்வைக்கு புதனன்று திறந்துவிடப்படும். பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகள் சுதந்திரமடைந்த போது, இது குறித்த கோப்புகள் ரகசியமாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கென்யாவின் மவு மவு கிளர்ச்சிக்காரர்கள் மற்றும் 1950 இல் மலாயாவின் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள் ஆகியோருக்கு எதிரான பிரிட்டனின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் இதில் அடங்குகின்றன. டியோகோ கார்சியாவில் அமெரிக்க தளத்தை நிறுவ, வழி செய்வதற்காக சாகோஸ் தீவுகளில் நீண…

    • 0 replies
    • 426 views
  25. மும்பையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதியான ஹபிஸ் சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு தொகையை அறிவித்தது. இதற்கு போட்டியாக இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியான அகமது என்பவர் ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஆகியோரை பிடித்து கொடுத்தால் ரூ.80 கோடி (10 மில்லியன் பவுண்ட்) பரிசு தொகை வழங்குவேன் என அறிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு தொகை அறிவித்து இருப்பதால் நானும் இந்த ரூ.80 கோடி பரிசை அறிவிக்கிறேன் என்று கூறினார். இவர் இங்கிலாந்தில் வசிக்கும் கோடீசுவரர் ஆவார். முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர். இந்த பர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.