உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26673 topics in this forum
-
அவுஸ்திரேலியாவில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்ள இருநாடுகளும் இணக்கம்; சீனா எதிர்ப்பு அவுஸ்திரேலிய மண்ணில், அமெரிக்கப் படையினரை நிலைகொள்ளச் செய்வதற்கு இரு நாடுகளும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட்டும் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு பராக் ஒபாமாவும் அவுஸ்திரேலிய பிரதமர் கில்லார்ட்டும் அவுஸ்திரேலிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இத்தகவலை வெளியிட்டனர். அவுஸ்திரேலியாவின் வடபகுதியில் 200 - 250 அமெரிக்கப் படையினரை 6 மாத காலத்திற்கு நிறுத்தி வைத்திருப்பதற்கு இணக்கம் காணப்…
-
- 9 replies
- 1.2k views
-
-
ராகுல் காந்தி ஒரு முட்டாள்: சுப்பிரமணிய சாமி கடும் தாக்கு.... அகமதாபாத்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை முட்டாள் என்று விமர்சித்துள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி அகமதாபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கேள்வி: ராகுல் காந்தியைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்களேன்? பதில்: அவர் ஒரு முட்டாள். கேள்வி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராகத் தகுதியானவரா? பதில்: 250 பேருக்கு பிரதமராகும் தகுதி இருந்தால் அது நம் ஜனநாயகத்திற்குத் தானே நல்லது. அது பற்றி முடிவு செய்ய நான் யார். தனிப்பட்ட முறையில் எனக்கு மோடியைத் தெரியும். அவரை நான் மதிக்கிறேன். அவர் மிகவும் நல்ல மனிதர்.…
-
- 5 replies
- 1.3k views
-
-
வீரகேசரி இணையம் 11/13/2011 4:31:02 PM அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை, பாதுகாப்பு என்ற பெயரில் அமெரிக்க அதிகாரிகள் சோதனை செய்த முறைமை தொடர்பில், இந்திய மத்திய அரசு கடும் அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி அப்துல் கலாம் அமெரிக்கா சென்றிருந்தார். நியூயோர்க் கில் உள்ள ஜோன் எப் கென்னடி விமான நிலையத்தில் இந்திய விமானம் நின்றத…
-
- 12 replies
- 1.3k views
-
-
உதட்டோடு உதடு முத்தமிடும் பிரபலங்கள்: சர்ர்சையைக் கிளப்பியுள்ள புதிய விவகாரம் (பட இணைப்பு) _ கவின் / வீரகேசரி இணையம் 11/17/2011 5:47:28 PM இத்தாலியைச் சேர்ந்த பிரபல 'பெனிட்டன்' என்ற ஆடை நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரங்கள் சில பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இதில் ஒரு விளம்பரத்தில் கத்தோலிக்க மதத் தலைவர் போப் எகிப்து இமாம் ஒருவருடன் உதட்டோடு உதடு முத்தமிட்டுக் கொள்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இன்னொரு விளம்பரத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும், சீன ஜனாதிபதி ஹூஜிண்டாவோவும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துக் கொள்வது போன்று உள்ளது. மேலும் ஒபாமா, ஹூகோ சாவேஸை முத்தமிடுவது போலவும், சர்கோஸி ஏஞ்சலா மேர்கலை முத்தமிடுவது போலவும், வடகொரியத் தலைவர் கிம் ஜொ…
-
- 5 replies
- 1.6k views
-
-
சீனாவுடனான இந்திய எல்லையில் 1 லட்சம் படை வீரர்களை நிறுத்தும் இந்தியாவின் முடிவு இரு நாடுகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் செயல் என சீனா தெரிவித்துள்ளது. இந்திய எல்லையில் சீனா உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவும் சீனாவுடனான எல்லையில் சாலை மேம்பாடு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், எல்லையில் 1 லட்சம் வீரர்களை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது. இந்தியாவின் இந்த செயலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவு இரு நாடுகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் செயல் என சீனா தெரிவித்துள்ளது. இந்நிலையில், சீனாவின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த டி.ஆர்.டி.ஓ., தலைவர் சரஸ்வத், பாதுகாப்பு விஷ…
-
- 4 replies
- 1k views
-
-
உ.பி. மக்களை பிச்சைக்காரர்கள் என்று ராகுல் கூறியதால் சர்ச்சை! டெல்லி: காங்கிரஸ் கட்சியின் வருங்காலத் தலைவரான ராகுல்காந்தி வன்முறையை தூண்டும் வகையிலும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசிவருவாக புகார் எழுந்துள்ளது. நவம்பர் 14 –ம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி ஒன்றில் அம்மாநில மக்களை பிச்சைக்காரர்கள் என்று ராகுல்காந்தி சித்தரித்துள்ளது வன்முறையை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் ஒளி, இளைய தலைமுறையினரை காக்க வந்த ரட்சகன் என்றென்றாம் ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியினர் புகழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர் கூறும் அளவிற்கு தலைவருக்குரிய தகுதியோடு ராகுல் காந்தி நடந்து க…
-
- 3 replies
- 1.1k views
-
-
சாக்கடை நீரைப் பீய்ச்சி, புதுவிதமாக தாக்கும் இலங்கை கடற்படை? மண்டபம்: தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்துக் கொண்டே இருக்கும் இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் நேற்றிரவும் நடந்தது. இதில் ஒருவர் காயமடைந்தார். முதன்முறையாக மீனவர்கள் மீது சாக்கடை கலந்த கழிவுநீரை பீய்ச்சி அடித்து விரட்டியுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 400-க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் நேற்றிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நான்கு விசைப்படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், திடீரென மீனவர்கள் மீது கற்கள் மற்றும் உருட்டுகட்டைகளை வீசி தாக்கினர். கல் எரிந்து தாக்குதல்! இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த சேசு என்ற மீனவருக்கு கா…
-
- 1 reply
- 728 views
-
-
ஈரான் இராணுவ தள வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் உளவுப் பிரிவு உள்ளதாக புதிய தகவல் புதன், 16 நவம்பர் 2011 08:24 சுடர் World ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் உள்ள இராணுவ தளத்தில் கடந்த சனிக்கிழமை இடம் பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் உளவுப் பிரிவான “மொசாட்” இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் ஈரான் இராணுவத்தில் ஏவுகணை பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ஹஸன் மொகடாம் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். இநத இராணுவ தளத்தில் ஆயுதங்களை இடமாற்றம் செய்யும் போதே இந்த வெடிப்பு இடம் பெற்றதாக ஈரான் இராணுவம் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வெடிப்புச் சம்பவத்திற்கு பின்னணியில் “மொசாட்” …
-
- 4 replies
- 968 views
-
-
இலங்கை கடற்படை அயோக்கியர்களை ஒடுக்க நடவடிக்கை எடுங்கள்- பிரதமருக்கு ஜெ. கோரிக்கை சென்னை: தங்களது வாழ்வாதாரத்திற்காக, பாக் ஜலசந்தியில் காலங்காலமாக மீன்பிடித்து வரும் அப்பாவி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையில் உள்ள அயோக்கியர்களின் செயல்களை இலங்கை அரசாங்கம் தடுக்க வேண்டும். அதனை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில், தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம்: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, துன்புறுத்தப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்பாக நான் உங்களுக்கு 7-…
-
- 3 replies
- 584 views
-
-
கலைஞர் தொலைக் காட்சிக்கு சிக்கல்! புதன், 16 நவம்பர் 2011 18:08 வெற்றி Business கலைஞர் தொலைக் காட்சி சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு இன்னும் சில தினங்களில் உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அமலாக்கப் பிரிவு நடவடிக்கைக் காரணமாக கலைஞர் தொலைக் காட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி.பி ரியாலிடி மற்றும் சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக கலைஞர் தொலைக் காட்சிக்கு ரூ 200 கோடி பணம் மாற்றப் பட்ட விவகாரத்தில் கலைஞர் தொலைக் காட்சி கடனாகப் பெற்றப் பணத்தை வட்டியோடு சேர்த்து ரூ 214 கோடியாக திருப்பிச் செலுத்தப் பட்டது என்று கூறி வந்தது. எனினும் சி.பி.ஐ தரப்பு கலைஞர் தொலைக் காட்சியின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வில்லை. டி.பி.ரியாலிடி …
-
- 1 reply
- 634 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளைப் பலப்படுத்தலே இதற்கான நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விஜயத்தின் போது இரு நாடுகளுக்கிடையில் இராணுவ ரீதியான பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இவற்றை விடவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இடையிலான நெருக்கம் தொடர்பில் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது. அதாவது ஒபாமாவை விமானநிலையத்தில் வைத்து கிலார்ட் வரவேற்றவிதம் அவர்களிடையே பரிமாறப்பட்ட முத்தம் என்பனவற்றை புகைப்படங்களுடன் ஊடகங்கள் வெளியிடத் தொடங்கியுள்ளன. இது மட்டுமன்றி வேறு சில சந்திப்பு…
-
- 1 reply
- 697 views
-
-
Obama will pledge to increase America's military presence in the Asia-Pacific region when he begins Australia tour Pledge: Barack Obama will announce plans tomorrow to increase the United States' military presence in Australia Barack Obama will unveil plans to deepen America's military presence in the Asia-Pacific region during a trip to Australia, which begins tomorrow. The President is visiting the country in a bid to boost ties with the U.S. ally and amid growing tensions over the South China sea. The shipping lane is worth more than $5trillion in annual trade and the United States and has been previously been described as 'incredibly vital' to the reg…
-
- 3 replies
- 1.1k views
-
-
பொது மன்னிப்புக்கான இறுதி இரங்கல் கோரிக்கையும் இந்தோனேசிய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில், எதிர்வரும் சில வாரங்களுள் ஒரு நாளில், பாலித் தீவில் உள்ள மனித நடமாட்டம் தடை செய்யப்பட்ட கடற்கரையொன்றில், மயூரன் சுகுமாரன், அண்ட்றூ சான் ஆகிய இருவரும் இதயப் பகுதியில் சிவப்பு நிறத்தில் துப்பாக்கியால் சுடுவதற்கான இலக்கு வரையப்பட்ட வெள்ளை நிற மேலாடைகள் அணிவிக்கப்பட்டு, தனித்தனி கம்பங்களுடன் சேர்த்து கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், பன்னிரு துணை இராணுவ பொலிசார் (Paramilitary Police) 10 மீற்றர் தூரத்தில் வைத்து தமது துப்பாக்கிகளை இயக்குவதன் வைப்பதன் மூலம், அவ்விருவருக்குமான மரண தண்டனையை நிறைவேற்றுவர். http://thamiram.blogspot.com/2011/11/blog-post.html ஓ…
-
- 9 replies
- 1.8k views
-
-
ராஜினாமா முடிவை எடுத்த பின் 26 வயதுப் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த பெர்லுஸ்கோனி ரோம் கடைசி வரை தனது கட்டில் விளையாட்டை நிறுத்தவில்லை பெர்லுஸ்கோனி என்பது தெரிய வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று தான் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்த பெர்லுஸ்கோனி, அன்றைய இரவை 26 வயதுப் பெண்ணுடன் உல்லாசமாக கழித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெர்லுஸ்கோனியின் பெர்சனல் வாழ்க்கை காமக் களியாட்டங்கள் நிறைந்தது. அவரைப் போல காதல் லீலைகளில் ஈடுபட்ட தலைவர் யாரும் இல்லை என்று கூறும் அளவுக்கு ஏகப்பட்ட லீலைகளில் ஈடுபட்டிருந்தவர் பெர்லுஸ்கோனி. தற்போது அவர் பிரதமர் பதவியை விட்டு விலகி விட்டார். இதுதொடர்பான முடிவை கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவர் அறிவித்தார். அதற்குப் பி…
-
- 83 replies
- 6.2k views
-
-
மிக குறைவான அணுக்கதிர் வீச்சு இரண்ட்வாவது வாரமாக ஐரோப்பாவின் ஏழு நாடுகளில் மிக குறைவான, ஆனால் வழமைக்கு மாறாக அணு கதிர்வீச்சு தாக்கங்கள் உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செக் குடியரசு, ஆஸ்திரியா, சிலவேக்கியா, ஜெர்மனி, சுவீடன், போலந்து, பிரான்ஸ் ஆகியனவே அந்த ஏழு நாடுகளும் ஆகும். இந்த நாடுகளில் மிக குறைவான தாக்கம் அளவிடப்பட்டுளதாக சர்வதேச அணுக்கதிர் மையம் அறிவித்தது. அதேவேளை இதன் தாக்கம் மிகவும் குறைவானது எனவும் அந்த அமைப்பு கூறியது. Low, but unusual, radiation persists across Europe VIENNA—The U.N. nuclear agency says that seven European countries are reporting low but unusual levels of radiation for a second week. An International Atom…
-
- 0 replies
- 680 views
-
-
புதுடில்லி : தி.மு.க., கட்சி பி்ன்னணியிலான கலைஞர் டிவியின் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு விரைவில் முடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2ஜி ஸ்பெக்ட்ரத்தை முறைகேடாகப் பெற்ற ஷாகி்த் பால்வா, சினியூக் பிலிம்ஸ், குசேவகான் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி வழங்கப்பட்டது. 2008 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்த பணம் 33 தவணைகளாக கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த பணம் கடனாக மட்டுமே பெறப்பட்டதாகவும், வட்டியுடன் சேர்த்து ரூ. 214 கோடியாக திருப்பிச் செலுத்தப்பட்டதாக கலைஞர் டிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை சி.பி.ஐ., ஏற்கவில்லை,. இவ்விவகாரத்தில், கலைஞர் டிவி நாடகமாடுவதாக சி,பி.ஐ., கூறியது. இதன்காரணமாக, கலைஞர் டிவியின் 20 பங்குகளை வை…
-
- 0 replies
- 661 views
-
-
சிரியாவில், படையில் இருந்து தப்பிச் சென்றவர்கள் படைத் தளம் ஒன்றை தாக்கினார்கள் சிரிய இராணுவத்தில் இருந்து விலகிச் சென்ற படையினர் தலைநகர் டமாஸ்கசின் ; (Damascus) அருகில் உள்ள முக்கியமான படை முகாம் ஒன்றைத் தாக்கினார்களென அரசுக்கு எதிரான குழுக்கள் அறிவித்தன. வான்படைப் புலனாய்வுப் பிரிவின் அலுவலகக் கட்டத்தின் சில பகுதிகள் இந்தத் தாக்குதலில் அழிவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. உயிரிழப்புக்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை. சிரியப் படைகளில் இருந்து விலகிய சுமார் பதினையாயிரம் பேர், அரசுக்கு எத…
-
- 0 replies
- 461 views
-
-
Tue Nov 15, 8:33 pm ET JAKARTA, Indonesia – A strong earthquake hit Indonesia's eastern province of Papua on Wednesday, causing panic among residents, but there were no immediate reports of damage or casualties. The earthquake, with a preliminary magnitude of 6.2, struck at 8:42 a.m. local time Wednesday (11:42 p.m. GMT Tuesday), said Indonesia's Meteorology, Climatology and Geophysics Agency. The agency said the quake was centered about 34 kilometers (21 miles) southwest of the mountainous town of Oksibil at a depth of 57 kilometers (35 miles). It shocked residents in Oksibil, which is located south of Papua's provincial capital, Jayapura. "We all ran out fr…
-
- 0 replies
- 536 views
-
-
இந்தியப் போலிசினது நாகரீகமான நடத்தை, உலகெங்கும் கிழிகின்றது! தயவு செய்து இரண்டே நிமிடங்கள் ஒதுக்கி இந்த விடியோவைப் பாருங்கள்! உங்கள் கருத்தையும் பதியுங்கள்!
-
- 8 replies
- 1.2k views
-
-
நாஞ்சில் சம்பத்து லேட்டஸ்ட் உரை
-
- 0 replies
- 819 views
-
-
.எல். சிசில் / வீரகேசரி இணையம் 11/15/2011 11:06:08 PM பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி குளோரியா மகபகல் அரோயோ மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதித்த போதிலும் பிலிப்பைன்ஸ் அரசு பயணத் தடை விதித்துள்ளது. 64 வயதான திருமதி அரோயோ எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல அம்புலன்ஸ் வண்டி மூலம் சக்கர நாற்காலியில் மணிலா விமான நிலையம் வந்திருந்த நிலையிலேயே தடுக்கப்பட்டுள்ளார். …
-
- 0 replies
- 732 views
-
-
வீரகேசரி இணையம் 11/15/2011 8:20:37 PM சிரிய ஜனாதிபதி பஷார் அல்அஸாத் பதவி விலக வேண்டுமென ஜோர்தானின் மன்னர் வலியுறுத்தியதையடுத்து அங்கு இடம்பெற்ற வன்முறைகளில் 90 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஜோர்தானிய எல்லைக்குரிய சிரிய நகரான கிரிபெட் கஸலெஹ்ஹில் படையினருக்கும் இராணுவத்திலிருந்து வெளியேறியவர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் சுமார் 20 படை வீரர்கள் உட்பட 50 பேர் வரை பலியாகியுள்ளனர். அஸாத் பதவி விலக வேண்டுமென பகிரங்க அழைப்பு விடுத்த …
-
- 0 replies
- 393 views
-
-
ராமேஸ்வரம் மீனவரின் மண்டையை உடைத்த இலங்கை கடற்படை.. கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் மீனவர் ஒருவரின் மண்டை உடைந்தது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 659 விசைப் படகுகளுடன் நேற்று மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் செல்வராஜ் என்ற மீனவருக்கு மண்டை உடைந்தது. மேலும் 3 மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிர் பிழை…
-
- 0 replies
- 459 views
-
-
சவூதி: 78 செக்ஸ் வியாதியஸ்த வெளிநாட்டவர் வெளியேற்றம்(inneeram.com) செவ்வாய், 15 நவம்பர் 2011 16:39 Ji World சவூதி அரேபியாவின் புனித மக்கா நகருக்கு இந்த வருடம் வேலை வாய்ப்பு நிமித்தம் வந்த 23,000 வெளிநாட்டவர்களில் 78 பேர் பாலியல் தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டதால் திருப்பி அனுப்பப்பட்டனர். மக்கா மாநகராட்சி இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. மக்கா நகரின் கடைகள், பேரங்காடிகள், உணவகங்கள், தேநீரகங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிய இந்த வருடம் சுமார் 23,000 பணியாளர்கள் வந்ததாகவும், சவூதி மருத்துவச் சோதனையில் அவர்களில் 78 பேருக்கு பாலியல் தொற்றுநோய்கள் இருப்பது கண்டறியப்பட்டதால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர்.…
-
- 0 replies
- 688 views
-
-
உ.பியை 4 மாநிலங்களாக பிரிக்க மாயாவதி அமைச்சரவை ஒப்புதல் 75 மாவட்டங்களுடன் பரந்து விரிந்திருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தை 4 மாநிலங்களாக பிரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வருமான மாயாவதி 2012ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்குத் தயாராகி வருகிறார். இந்த ஆட்சியில் மாயாவதியின் பெயர் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி கெட்டுவிட்டது. இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் அவ்வப்போது சர்பிரைஸ் விசிட் கொடுத்து விவசாயிகளை ஆச்சரியப்படுத்தி விவசாயிகள் தோழன் என்று பெயர் வாங்கியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி. இவர் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம்…
-
- 0 replies
- 536 views
-