Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலக காணாமல் போனோர் தினம் காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினமாக ஆகஸ்ட் 30 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலகெங்கும் காணாமல்போன பல்லாயிரக் கணக்கானோர் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. முரண்பாடுகள் மற்றும் அமைதியீனத்தைக் கையாள்வதற்காக சில நாடுகளில் ஆட்களை கட்டாயமாக கடத்தி அல்லது வேறு வழியில் காணாமல் போகச் செய்யும் நடைமுறை இன்னமும் மேற்கொள்ளப்படுவதை, இந்தத் தினத்தில், ஐ நா கண்டித்திருக்கிறது. அதேவேளை, காணாமல் போனவர்களின் குடும்பங்களின் தேவைகள் எப்போதாவதுதான் கவனிக்கப்படுவதாகக் கூறும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், அத்தகைய…

    • 0 replies
    • 365 views
  2. சென்னை: ஒருவர் தாக்கல் செய்த கருணை மனு மீது முடிவெடுக்க 11 வருடங்கள், 4 மாத கால தாமதம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 21 வருடங்களை அவர் சிறையில் கழித்த நிலையில் நீ நாளை தூக்கில் தொங்க விடப் படப் போகிறாய் என்று கூறுவது மனிதாபிமானமே இல்லாதது என்று வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக இன்று ஆஜரானார் ராம்ஜேத்மலானி. அப்போது அவர் வாதிடுகையில், கிட்டத்தட்ட 11 வருடங்கள், நான்கு மாதங்கள் தாமதம் செய்துள்ளனர், இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலனை செய்து நிராகரிக்க. இது மிகப் பெரும் வேதனை. ஒரு மனிதனுக்கு கிட்டத்தட்ட 21 வருடங்களை சிறையில் கழித்து விட்ட நபருக்கு, கருணை மனு தாக்கல் செய்து 11…

    • 3 replies
    • 1.1k views
  3. Miami (CNN) -- Forecasters issued watches and warnings for the U.S. East Coast on Thursday in advance of Hurricane Irene, a monstrous storm that could bring large amounts of rain and a storm surge to North Carolina and other states as it tracks north. A hurricane warning was issued for coastal North Carolina from Little River Inlet north to the Virginia border, including the Pamlico, Albemarle and Currituck sounds, the National Hurricane Center said in its 5 p.m. ET advisory. Irene, moving north-northwest at 14 mph, was expected to turn northward from the Bahamas early Friday. In anticipation, Amtrak and major U.S. airlines began canceling routes and flights or …

    • 8 replies
    • 1.7k views
  4. ட்ரிபோலி: பதவியில் இருந்து நீக்கப்பட்ட லிபிய அதிபர் கடாபி தனது பெண் மெய்க்காப்பாளர்கள் 5 பேரை பாலியல் பலாத்காரம் செய்ததுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து சன்டே டைம்ஸ் ஆப் மால்டாவில் கூறப்பட்டுள்ளதாவது, பதவியிறக்கப்பட்ட லிபிய அதிபர் கடாபியின் முன்னாள் பெண் மெய்க்காப்பாளர்கள் 5 பேர் பெங்காஸியைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் செஹாம் செர்கிவாவிடம், கடாபியும், அவரது மகன்களும் தங்களை போதும் என்ற அளவுக்கு அனுபவித்துவிட்டு தூக்கி எறிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். செர்கிவா இந்த வாக்குமூலங்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளார். சர்வதேச நீதிமன்றம் கடாபி, அவரது மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி உள்ளிட்டவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அவர்கள் மீதுள்ள ப…

    • 5 replies
    • 1.1k views
  5. கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது. அவரது தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளது. இது தொடர்பாக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியதாவது: மக்கள் இயக்கத்தின் தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்தனர். சில அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். இதை விஜய் ஏற்றுக் கொண்டார். அ.தி.மு.க.வுடன் எங்களது சுமூகமான உறவு உள்ளது. எனவே உள்ளூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமாறு ரசிகர்களிடம் தெரிவிக்கப்பட்…

  6. நைஜீரியா தலைநகர் அபுஜாவில் உள்ள் ஐ.நா அலுவலகத்தில் சக்தி வாய்ந்த தற்கொலைப்படை குண்டு வெடித்தது. இதில் 18 பேர் கொல்லப்பட்டதாக போலீஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் காவல்துறை மீட்பு படையினர்,மற்றும் பல தனியார் பாதுகாப்பு அணிகள் திரண்டு வந்து மீட்புப்பணியை போர்க்கால அடிப்படையில் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். படுகாயம் அடைந்த பலருக்கு ரத்தம் ஏற்ற வேண்டிய நிலை உள்ளது. ஆனால் நைஜீரிய மருத்துவமனையில் போதுமான அளவு ரத்தம் கையிருப்பு இல்லை. எனவே தன்னார்வத் தொண்டர்கள் ரத்ததானம் செய்ய முன்வந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை நடைபெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெ…

  7. அமெரிக்காவை மையம் கொண்டிருக்கும் ஐரின் சூறாவளி அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்களை தாக்கும் என்ற செய்தியால் குடும்பத்துடன் உல்லாச சுற்றுலா செல்ல இருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா தன் சுற்றுலாவை ரத்து செய்து விட்டார்.' சூறாவளி நேரத்தில் மக்களுடன் இருந்து மீட்புப் பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை கவனிக்க வேண்டி உள்ளதால் விடுமுறைச் சுற்றுலாவை ரத்து செய்துவிட்டேன். மேலும் அமெரிக்க மக்களுக்கு ஒபாமா ஒரு எச்சரிக்கை அறிவிப்பும் விடுத்து உள்ளார். அவருடைய எச்சரிக்கை அறிக்கையில், அமெரிக்காவின் முக்கிய நகரங்களான, நியூயார்க், வாஷிங்டன் மற்றும் கிழக்கு கடற்கரைப் பிரதேசங்களை ஐரின் புயல் வலிமையாக தாக்கக்கூடிய அபாயம் இருப்பதால், அங்குள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் …

    • 0 replies
    • 518 views
  8. ஜப்பானிய பிரதமர் கான் பதவி விலகினார் வீரகேசரி இணையம் 8/26/2011 4:34:21 PM ஜப்பானிய பிரதமர் நயோடோ கான் பதவி விலகுவதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். இவ்வாண்டு மார்ச் மாதம் ஜப்பானைத் தாக்கிய பூமியதிர்ச்சி, சுனாமிப் பேரலைகளுக்குப் பின்னரான நிலைமையைக் கையாள்வதில் முகாமைத்துவக் குறைபாடு உள்ளதாக பல்வேறு தரப்பினராலும் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் அவர் பதவி விலகியுள்ளார். அந்நாட்டு ஆளும் ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருந்த அவர் அப்பதவியிலிருந்தும் இராஜிநாமா செய்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது கட்சியின் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடிய பின்னர் அவர் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளார். இதன்பிரகாரம் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்படுபவர் ப…

  9. நாடற்ற நிலையில் 12 மில்லியன் மக்கள் தென்கிழக்காசியா, மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் 12மில்லியன் மக்கள் நாடற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிரிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரியின் கூற்றுப்படி இவர்கள் மிக மோசமான நாட்டுச் சூழலில் வாழ்வதால் உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர் என்கின்றனர். குடிமகன்களாகப் பதியாததால் இம்மக்கள் சொத்துக்களைச் சொந்தமாக்குவதிலும் வங்கிக் கணக்குகளைத் திறப்பதிலும் சட்டரீதியாகத் திருமணம் செய்வதிலும் பிள்ளைகளின் பிறப்பைப் பதிவதிலும் சிக்கல்…

    • 0 replies
    • 408 views
  10. பதிந்தவர்: ADMIN வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011 லிபியத் தலைநகர் திரிபோலியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி அதன் ஒரு பகுதியை தம்வசப்படுத்தியுள்ளனர். 24 மணி நேரமும் ஆளில்லா அமெரிக்க வேவு விமானங்கள் லிபியா மேல் பறந்தவண்ணம் உள்ளது. அதுமட்டுமா ? நேட்டோப் படைகள் வேறு கண்காணித்து வருகிறது. போதாக்குறைக்கு நேட்டோ நாடுகளின் ஸ்பை சட்டலைட்( உளவு பார்க்கும் செயற்கைக்கோள்) வேறு கமராவில் விளக்கெண்ணையை ஊற்றி அவதானித்து வருகிறது. இது எல்லாம் இப்படி இருக்க அதிபர் கடாபி தலைநகரில் இருந்து எவ்வாறு தப்பிச் சென்றார் என்று எல்லாரும் குழப்பிப்போய் உள்ளனர். இதற்கு விடை நேற்று மாலைதான் கிடைத்தது ! அது என்ன வென்றால் பல மைல் நீளமான சுரங்கப் பாதை. லிபிய அதிபர் கேணல் கடாபியின் மாளிகைக்குள்…

  11. நீங்கள் மனது வைத்தால் முடியும். கடந்த காலங்களில் நீங்கள் எடுத்த கடுமையான நிலைபாட்டினால், நாங்கள் உங்களிடம் பெரிதாக எதையும் எதிர்ப்பார்க்கவில்லை என்பதே உண்மை. ஆனால், நாங்கள் நினைத்ததை பொய்யாக்கும் விதமாக, தமிழக சட்டசபையில், இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நீங்கள் நிறைவேற்றிய போது, இடிந்து போயிருந்த தமிழினத்திற்கு நம்பிக்கை பிறந்தது. போர்க்குற்றங்கள் புரிந்து, அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இன வெறி அரசுக்கு தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒளி தெரிந்தது. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி க்ளின்டனின் இந்திய வருகையின் போது, மாநில முதலமைச்சர்கள் வெளியுறவுக் கொள்கையை விவாதிக்கக் கூடாது என்ற மரபை மீறி தாங்கள் முள…

  12. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மத்திய அரசை ஆளும் பிரதானக் கட்சியான காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர் சோனியா காந்தியும் இந்தப் பிரச்சனையிலே அக்கறையோடு மூன்று உயிர்களை காப்பாற்ற முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். முடிவெடுக்க இன்னும் சில நாட்களே இருக்கின்ற நிலையில் மத்திய அரசும், தமிழக அரசும் இந்தப் பிரச்சினையிலே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, இந்த மூவரின் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்திட வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொ…

  13. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் எழுதிய நூலின் இந்தி பதிப்பு டெல்லியில் வெளியிடப்பட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பரதன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏற்கனவே வெளிவந்துள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கு உண்மை கடிதங்கள் என்ற இந்தி மொழி பெயர்ப்பின் பணியை எழுத்தாளர் சரவணா ராஜேந்திரன் செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்ச்சி முடிந்ததும் அற்புதம்மாள் சென்னை திரும்பினார். டெல்லி செ…

  14. தமிழக கவர்னராக ரோசய்யா நியமனம் தமிழக கவர்னராக உள்ள சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து அடுத்த கவர்னர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக கவர்னராக ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் கே. ரோசய்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. இதேபோல் கேரள மாநில கவர்னராக, ஜார்கண்ட் மாநில கவர்னராக இருக்கும் எம் ஓ எச் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச கவர்னராக மூத்த காங்கிரஸ் தலைவர் ராம் நரேஷ் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் கவர்னர் சையத் அகமது ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். வி.புருஷோத்தமன் மிசோரம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்…

    • 0 replies
    • 280 views
  15. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகிய மூவருக்கும் வரும் செப்டம்பர் 9ம் தேதி தூக்கு தண்டனை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று நாடாளுமன்றத்தில் முழுக்கமிட்டார். மூவரின் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதிய அட்டையை ஏந்தியபடி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். உள்ளே சென்று, அட்டையை உயர்த்தி பிடித்து மூவரின் தூக்கை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் முழக்கமிட்டார்.பின்னர் வெளிநடப்பு செய்தார். வெளியே வந்ததும் செய்தியா…

  16. ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று திடீர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டை ரெயில் நிலைய தண்டவாளத்தில் உட்கார்ந்து 100 மாணவர்கள் போராட்டம் செய்தனர். தகவல் அறிந்து ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். அவர்களை சமாதானம் செய்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் 1/2 மணி நேரம் கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதேபோல கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் நிலையத்தில் மற்றொரு பிரிவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளச்சேரி ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் அ…

  17. இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்னையில் இயக்குநர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் பாரதிராஜா, ’’பேரறிவாளன், சாந்தன், முருகனை தூக்கில் இடுவதை எதிர்த்து திரையுலகினர் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள், மாணவர்கள், வக்கீல்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரமும், தகுதியும் முதல்வருக்கு உள்ளது. எனவே, தூக்கு தண்டனையை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரைத்துறையினர் கடிதம் எழுதுகின்றனர். ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுக்கவும் திரைத்துறையினர் முடிவு செய்துள்ளனர்’’ என்று தெரிவித்தார். http://www.nakkhe…

  18. வாஷிங்டன்: இந்திய எல்லையில் சீனா அதி நவீன ஏவுகணைகளை குவித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தனது இராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கையாக சீனா இந்திய எல்லையில் அதிநவீன அணு ஏவுகணைகளை குவித்து வருகிறது. இந்திய-சீன எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சீனா பெரும் நிதியை செலவிட்டு வருகிறது. இங்கு மேலும் பல சாலைகள், ரயில் தண்டவாளங்களை அமைத்து வருகிறது. இதனால் இந்திய எல்லையோரம் உள்ள பகுதியை மேம்படுத்தினாலும், இந்த வசதிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் தான் செய்யப்படுகின்றன. பாகிஸ்தானுடன் சீனா ஒட்டி உறவாடி வருவது இந்தியாவுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. மேலும் சீனா இந்திய பெருங்க…

  19. போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலில் சக்தி வாய்ந்த பெண்: சோனியா 7வது இடம்! உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 7வது இடத்தை பிடித்துள்ளார். ஆண்டுதோறும் உலகின் செல்வாக்கு மிகுந்த பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிட்டுள்ள பட்டியலில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் முதலிடம் பெற்றுள்ளார். அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளின்டன் 2வது இடத்திலும், பிரேசில் நாட்டின் முதல் பெண் அதிபரான தில்மா ரூஸ்செப் 3வது இடத்திலும் உள்ளனர். பெப்சி கம்பெனி தலைவரான அமெரிக்க வாழ் இந்திய பெண் இந்திரா நூயிக்கு 4வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் வலைத…

  20. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்குத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனு நிராகரிப்பட்டது. இதை எதிர்த்து தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மூவரையும் செப்டம்பர் 7ம் தேதிக்குள் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அறிந்து தமிழ் உணர்வாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இன்று இரவு( 25.8.2011) 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் உணர்வாளர்கள் ஒன்று கூடி இதைதடுப்பது எப்படி என்று சீமான் இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையில் நாளை வெள்ளிக்கிழமை 26.8.2011 அன்று சென்னை உயர்நீதிமன்றத்த…

  21. லிபிய தலைவர் கேர்ணல் கடாபியை யாராவது உயிருடன் பிடித்துத் தந்தாலோ அல்லது கொன்றாலோ அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று கிளர்ச்சிக்காரர்கள் அறிவித்துள்ளனர். அவரைப் பிடித்துக் கொடுப்பவருக்கு பத்து இலட்சம் டொலருக்கும் அதிகமான சன்மானத்தை வழங்க ஒரு லிபிய வணிகர் தயாராக இருப்பதாகவும் கிளர்ச்சிப் படையின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் பி.பி.ஸி. செய்தி வெளியிட்டுள்ளது. கேர்ணல் கடாபி மீண்டும் தாக்குவதை தவிர்ப்பதற்கு அவரை பிடிப்பது மிகவும் அவசியமானதாகும் என்று முன்னதாக கிளர்ச்சிப் படையினர் கூறியிருந்தனர். ஆனால் அவரோ அல்லது அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களோ எங்கு தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்ற சமிக்ஞை எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள…

    • 3 replies
    • 821 views
  22. மூவர் உயிர் காக்க - தமிழருவி மணியன்

  23. 31.08.11 சினிமா சேரன் பேசினால் அதில் அர்த்தமுள்ள பதிவுகள் அதிகமிருக்கும். ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது சேரனின் மனதை மிகவும் பாதித்திருக்கிறது. ‘முரண்’ திரைப்பட வேலைகளில் ஈடுபட்டிருந்த பரபரப்பான சூழலிலும் தமிழர்களின் நிலையை நினைத்துப் பொங்குகிறார். ”தமிழ்ப் பத்திரிகைகளில் இடம்பெறுகிற சில தொடர்கள், கட்டுரைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட, தமிழனின் உயிர் பாதிக்கப்படும்போது யாருமே அதைப்பற்றி கவலைப்படாமல் இருப்பது எப்படி முடிகிறது? எதனால் இவ்வளவு அலட்சியம், அஜாக்கிரதை? மனிதன் மனதில் இந்த மாதிரியான உணர்வுகளை ஏன் உருவாக்கினார்கள்? எப்படி …

  24. தமிழீழத் தேசியக் கொடி ஜேர்மனிய Nordrhein westfalen stadium உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற போட்டி ஆரம்ப அணிவகுப்பில் கடந்த சனிக்கிழமை இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பொறுஜியா டொட்மென்ட் மற்றும் எப்சீ நியூரம்பேர்க் என்ற அணிகளுக்கிடையிலான போட்டியை முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பிலேயே தமிழீழத் தேசியக் கொடி அனைத்து நாடுகளின் கொடிகளுக்கும் குடுக்கப்படும் மரியாதையுடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழ் இளைஞர் அமைப்பும் பொறுஷியா டொட்மென்ட் ரசிகர்கள் அமைப்பும் ஒன்றிணைந்தே இந்த கொடியினை அணிவகுப்பின் போது கொண்டு சென்றுள்ளனர். எமது தேசிய சின்னங்கள் சிங்கள இனவாத அரசினால் அழிக்கப்பட்டுவரும் நிலையில் எமது தமிழீழத் தேசியக்கொடி சுமார் 40 நாடுகளின் தேசியக் கொடிகளுக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.