Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரதமரும், சிதம்பரமும் முதலில் பதவிவிலகட்டும்: எடியூரப்பா July 26, 2011 சட்டவிரோத சுரங்கத் தொழில் விவகாரத்தில் லோக்ஆயுக்தவின் அறிக்கை கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை குற்றம்சாட்டியுள்ளதையடுத்து அவர் பதவிவிலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்துப் பேசிய எடியூரப்பா, தொலைத்தொடர்பு ஊழல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் முதலில் பதவிவிலக வேண்டும் என்றார். ராசா நேரடியாகக் கூறியுள்ளதால் பிரதமரும், உள்துறை அமைச்சரும் முதலில் பதவிவிலக வேண்டும். அவர்கள் பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை என எடியூரப்பா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கர்நாடக லோக்ஆயுக்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே…

    • 0 replies
    • 431 views
  2. பிரதமரினதும் சிதம்பரத்தினதும் ஒப்புதலுடனேயே அலைக்கற்றை உரிமங்களை வழங்கினேன்! நீதிமன்றில் ராசா வாதம் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்பனையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இடம்பெற்ற விசாரணையின்போது இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ராசா, பிரதமர் மன்மோகன் சிங்கையும் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்தையும் இணைத்து குற்றம்சாட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அலைக்கற்றை விற்பனையை பிரதமர் மன்மோகன் சிங்கினதும் நிதியமைச்சர் சிதம்பரத்தினதும் ஒப்புதலுடனேயே மேற்கொண்டேன் என முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார். பிரதமர் மன்மோகன் சிங்கின…

  3. சீமானை கைது செய்ய வேண்டும்: இளைஞர் காங்கிரஸ் புகார் July 25, 2011 தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து இன்று ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- இயக்குனர் சீமான் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்தும், சோனியா, ராகுல் ஆகியோரை விமர்சித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். ஏற்கனவே அவர் மீது புகார் செய்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார். அவருடன் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் வில்லிவாக்கம் சுரேஷ், தமிழ்செல்வன் உள்பட பலர் வந்தனர். சீமானுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர். http://www.a…

  4. தென் சூடானைப் போன்று சூடானிலும் புதிய நாணயம் அறிமுகம் தென் சூடான் தனியாகப் பிரிந்து சென்று தனக்கான சொந்த நாணயத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது போன்று சூடானும் தனக்கான புதிய நாணயம் ஒன்றை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. சூடானின் புதிய நாணயம் வங்கிகளிலும் நாடு முழுவதிலுமுள்ள எல்லா நாணயமாற்று முகவர்களிடமும் பெற்றுக் கொள்ள முடியும் என அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது. அத்துடன், பழைய நாணயத்தை மூன்று மாத காலத்துக்குள் புதிய நாணயத்துக்கு மாற்றிவிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ள அந்நாட்டின் மத்திய வங்கி, தென் சூடான் ஏற்கனவே புதிய நாணயத்தை நடைமுறையில் கொண்டு வந்துள்ள நிலையில், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இதனைக் கொண்டு வருவதாக சூடான் அறிவித்த…

    • 0 replies
    • 469 views
  5. தெற்காசியாவைச் சேர்ந்த 4 ஆயிரம் பேருக்கு அவுஸ்திரேலியாவில் குடியுரிமை :அவுஸ்திரேலியா - மலேசியா புதிய ஒப்பந்தம் _ வீரகேசரி இணையம் 7/25/2011 4:25:29 PM புகலிடக்கோரிக்கை தொடர்பாக அவுஸ்திரேலியா மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையில் இன்று திங்கட்கிழமை ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது. எதிர்வரும் வருடங்களில் அவுஸ்திரேலியாவில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட அகதிகள் 4 ஆயிரம் பேருக்கு குடியுரிமை வழங்குவதெனவும் மேலதிகமாக தங்கியுள்ள 800 பேரை மலேசியாவுக்கு அனுப்புவதெனவும் ஒப்பந்தத்தினூடாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவோர் அனைவரும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தோர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலேசியாவின் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடீன்…

  6. Jul 26, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / இந்தியாவில் புதிய நிர்வாக மாவட்டம் உதயம் -இளந்தி இருபது வருடப் போராட்டத்தின் பயனாய் இந்தியாவின் குர்க்கா இனத்தவர்கள் தனி நிர்வாக அலகைப் பெற்றுள்ளனர். மேற்கு வங்காளத்தின் வடபால் அமைந்துள்ள டார்ஜீலிங் (Darjeeling) பகுதி வாழ் குர்க்கர் இனத்தவர்கள் குர்க்கர் ஜன்முக்தி மோர்ச்சா (Gorkha Janmukti Morcha) தலைமையில் தனி நிர்வாக அலகு வேண்டிப் போராடி வந்தனர். சென்ற திங்கட்கிழமை (18/07/2011) இது தொடர்பாக ஒரு முத்தரப்பு உடன்படிக்கை எட்டப்பட்டது. இந்திய அரசு, மேற்கு வங்க அரசு குர்க்கா ஜன்முக்கி மோர்ச்சா அமைப்பினர் இணைந்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். மேற்கு வங்கத்தின் தரைப்பரப்பு அளவு இதன் மூலம் குறையும் என்ற காரணத்தால் மக்…

  7. http://www.youtube.com/watch?v=R9K6bs_fIWU ஐந்து பிள்ளைகளுக்கு தகப்பனான, இத்தாலியப் பிரதமர், தனது பாதுகாப்பு பெண் அதிகாரிக்கு வீதியில் வைத்து செய்யும் அசிங்கம். அவர் இதனை பகிடிக்கு செய்தாரா, அல்லது தான் வரும் போது அசட்டையாக பின் பக்கதை காட்டிக் கொண்டு நின்றமையால்... கடுப்பில் செய்தாரா? என்ன, இருந்தாலும் ஒரு பிரதமர் இப்படிச் செய்யலாமா?

  8. ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் காந்தி சிலையருகே 'மனவாடுகள்' ஈழத்தமிழர்களின் படுகொலையை எதிர்த்து போராட்டம் நடத்திய படங்களை முகநூலில் கண்டேன்...உங்கள் பார்வைக்கு... திரு.வெங்கடேஸ்வரலு பேச்சு திரு.புரேந்தரின் பேச்சு Source: FB. .

  9. வீரகேசரி இணையம் 7/24/2011 4:15:46 PM சீனாவில் அதிவேக ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு விபத்திற்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்துள்ளதோடு 210 பேர் காயமடைந்துள்ளனர். சீனாவின் கிழக்கு மாகாணமான ஹிஜியாங்கில் பாலத்தின் மீது சென்றுக் கொண்டிருந்த புல்லட் ரயில் ஒன்று மின்சாரம் தடைபட்டதால் நின்றுள்ளது. இது தெரியாமல் அதே தடத்தில் பின் தொடர்ந்து வந்த மற்றொரு புல்லட் ரயில் நின்றுக்கொண்டிருந்த புல்லட் ரயில் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் புல்லட் ரயிலின் பல பெட்டிகள் கடும் சேதமடைந்துள்ளன. சில பெட்டிகள் பாலத்தின் மீது கீழே விழுந்துள்ளன. விபத்தில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். 210 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் சீன பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …

  10. அமெரிக்கா தள்ளாட்டம்: அச்சப்படுகிறது சீனா அமெரிக்கா தற்போது தனது பெரும் கடன் சுமையில் இருந்து மீள வழி தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது. தற்போதைய சூழலில், சீனா தன்னைக் காத்துக் கொள்வதற்கு மிகச் சில வழிகளே இருப்பதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மொத்தக் கடன், தற்போது 14.3 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, கடன் பத்திரங்களாக, அமெரிக்காவிடம் இருந்து 1.16 டிரில்லியன் டாலர் அளவுக்கு வாங்கியுள்ளது. 2010 அக்டோபரில், இது 906 பில்லியன் டாலராக இருந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகியவை அமெரிக்காவிடம் இருந்து க…

  11. டயானா மரணம் தொடர்பில் மீண்டும் விசாரணை _ வீரகேசரி இணையம் 7/23/2011 6:52:25 PM Share இங்கிலாந்து இளவரசி டயானா 1997-ம் ஆண்டு பெரீஸ் நகரில் காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பலியானார். இந்த விபத்தில் சதி ஏதும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக பெரீஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் மரணம் இயற்கையானது தான் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் இங்கிலாந்து நாட்டு போலீஸ் அதிகாரிகள் 2 பேர் தாங்கள் டயானா மரணம் குறித்த முக்கிய ஆவணங்களை நீதிமன்ற விசாரணையில் இருந்து மறைத்துவிட்டோம் என ஒரு பத்திரிகை நேர்காணலில் தெரிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து இந்த விசாரணை பெரீஸ் நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. பிரான்ஸ் நீதி…

  12. என் அண்ணன் அழகிரிக்கு... : மதுரை போலீஸ் சோதனையில் சிக்கிய பரபரப்பு கடிதம் மதுரை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி நில அபகரிப்பு புகாரில் சிக்கியுள்ளார். இவரது வீடு- தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை புறநகர் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கின என்று தகவல் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சோதனையில் ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் எஸ்ஸார். கோபி குறிப்பிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில், ’’என் உயிராக நினைத்து கொண்டிருக்கும் என் அண்ணன் அழகிரிக்கு... என் குடும்பமே கவுன்சிலர் லீலாவதி கொலையில் சம்பந்தப்படாமலேயே சிக்கியதால் மருது…

  13. நாளை திமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: ஸ்டாலினை செயல் தலைவராக்க முடிவு? சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு ஓய்வளிக்கும் வகையில், தற்போது பொருளாளராக உள்ள மு.க.ஸ்டாலினை, செயல் தலைவர் பதவியில் அமர்த்த பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அழகிரி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்பதால் பெரும் பரபரப்பும் நிலவுகிறது. திமுகவில் நிலவும் கோஷ்டிப் பூசல் அனைவரும் அறிந்ததே. ஸ்டாலின் தலைமையில் ஒரு கோஷ்டியும், அழகிரி தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்படுகின்றன. இதுபோக கனிமொழி குரூப், தயாநிதி மாறன் குரூப் என குட்டி குட்டி குரூப்களும் உள்ளன. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் பெரும் தோல்விக்குப் பின்னர் திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக…

  14. தங்கபாலு ராஜினாமாவை கட்சி மேலிடமும் ஏற்றுக் கொண்டு உள்ளது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நடிகர் சிவாஜிகணேசனின் 10வது ஆண்டு நினைவு தினம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு ஒதுக்கியுள்ள இடத்தில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா விரைவில் மணிமண்டபம் கட்ட வேண்டும். அவரது ஆட்சி காலத்தில் சிறப்பாக செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தங்கபாலு ராஜினாமா செய்து விட்டார். அவரது ராஜினாமாவை கட்சி மேலிடமும் ஏற்றுக் கொண்டு உள்ளது.…

  15. கருணாநிதி சுறுசுறுப்பாக இருக்கையில் புதிய தலைவர் தேவையில்லை: அழகிரி சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சுறுசுறுப்பாகத் தான் உள்ளார். அதனால் புதிய தலைவர் தேவையில்லை என்று தென்மண்டல திமுக அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். நாளையும், நாளை மறுநாளும் கோவையில் திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கட்சி பொருளாளரான முக ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது. மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் முக அழகிரி கலந்துகொள்ள மாட்டார் என்ற பேச்சும் அடிபடுகிறது. இதனால் திமுக கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய தலைவர் நியமிக்கப்…

  16. Westminster, California (CNN) -- The arraignment of Catherine Kieu Becker, the Southern California woman accused of cutting off her husband's penis and throwing it into a garbage disposal, was continued Friday to September 23 at the request of her public defender. http://www.cnn.com/2011/CRIME/07/22/california.penis.knifing/index.html?npt=NP1

  17. வீரகேசரி இணையம் 7/22/2011 7:00:04 PM அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்களைத் தாக்கிய அனல் காற்றால் இதுவரை 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர். குறித்த பிராந்தியங்களின் சில பகுதிகளில் 43 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தென் டகோடாவில் பெருந்தொகையான கால்நடைகள் இக் காலநிலை காரணமாக உயிரிழந்துள்ளன. மேலும் நியூயோர்க்கில் குளிரூட்டிகளின் பாவனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து எதிர்வரும் தினங்களில் மின்சார துண்டிப்புகள் இடம்பெறலாம் என மின்சார பாவனை நிறுவனமான கொன்எடிஸன் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் சுமார் 50 சதவீதமான மக்கள் வெப்பநிலை அதிகரிப்பு அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். அந்நாட்டில் ஒ…

  18. வீரகேசரி இணையம் 7/22/2011 7:44:48 PM கிறீன்லாந்திலிருந்து உடைப்பெடுத்த மிகப் பெரிய பனிக்கட்டியொன்று கனடாவின் நியுபவுண்லேண்ட் கரைப்பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால் அப்பகுதியூடாக பயணிக்கும் கப்பல்கள் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப் பனிக்கட்டியின் நீளம் 6.2 மைல்கள் என்பதுடன் அகலம் 3.1 மைல்களாகும். இது கடந்த வருடம் கீறீன்லாந்தில் உள்ள பீட்டன்மேன் பனிப்பாறையிலிருந்து உடைந்து விழுந்த கட்டியென தெரிவிக்கப்படுகின்றது. அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட வெப்ப அதிகரிப்பே இது உடைந்து வீழ்ந்ததிற்கான காரணமென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சராசரியாக 6 முதல் 7 மைல்கள் வேகத்தில் இது நகர்ந்துவருவதாகவும் சிலவேளைகள் 11 மைல்கள் வேகத்தினை அடைவதாகவும்…

  19. தமிழக பெட்ரோல் வளங்களை தமிழக அரசிடமே ஒப்படை! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம் பெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் எரிவளி(கேஸ்) வளங்களை இந்திய அரசு தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி 23.07.2011 அன்று சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல், எரிவளி(கேஸ்), மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையைக் குறைக்க தமிழகத்தின் நரிமணம், அடியக்க மங்கலம், கோவில் களப்பால், கமலாபுரம், புவனகிரி ஆகிய இடங்களில் கிடைக்கும் பெட்ரோலியத்தையும் குத்தாலத்தில் கிடைக்கும் எரிவளியையும்(கேஸ்) இந்திய அரசு தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும். பற்றாக்குறைக்கு வெளிநாடுகளில் கச்…

  20. 'கிரேக்கத்தின் மீட்சி'- பிரசல்ஸ் மாநாட்டில் பேச்சு கிரீஸுக்கான இரண்டாவது பொருளாதார மீட்சித் திட்டத்திலுள்ள மிக சிக்கலான விடயங்கள் பற்றி ஐரோப்பியத் தலைவர்கள் விவாதித்துவருகின்றனர் கடன் நெருக்கடி ஏனைய ஐரோப்பாவில் யூரா நாணயத்தைப் பயன்படுத்துகின்ற மற்றைய நாடுகளுக்கும் பரவிவிடாதபடி நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் இந்தப் பேச்சுவார்த்தைகள இடம்பெறுகின்றன. ஆட்சித் தலைவர்களான நிக்கோலா சார்கோஸி மற்றும் அங்கேலா மேர்க்கல் ஆகியோருக்கு இடையில் புதன்கிழமை நடைபெற்ற ஏழு மணிநேர பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட கூட்டுத் தி்ட்டமொன்றை ஜேர்மனியும் ஃபிரான்ஸூம் பிரசல்ஸ் மாநாட்டில் முன்வைத்திருக்கின்றன. புதிய திட்டம் பற்றிய விளக்கங்கள் இன்னும் பகிரங்கப்படுத்தப்பட வில்லை…

    • 1 reply
    • 509 views
  21. உலகின் மிகப்பெரிய அகதி முகாம். ஆபிரிக்காவின் கொம்பு (Horn Of Africa) நாடுகளில் மீண்டும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த இரு வருடங்களாக வானம் பொய்த்த காரணத்தால் விவசாயம் படுத்துவிட்டது. பல மில்லியன் மக்கள் வாழும் இந்தப் பகுதியில் பாரிய உணவு நெருக்கடி தோன்றியுள்ளது. சீரான அரசமைப்பு இல்லாத சொமாலியாவில் ஏற்பட்ட வறட்சி மக்களை அயல் நாடு கென்யா (Kenya) அகதி முகாம்களில் தஞ்சம் அடைய வைத்துள்ளது. வட பகுதி கென்யாவிலும் கடும் வறட்சி நிலவுகிறது. அது போல் எதியோப்பியா, டிஜிபுட்டி ஆகிய நாடுகளிலும் கடந்த இரு வருட வறட்சி மக்களை அகதி முகாமுக்குச் செல்ல வைத்துள்ளது. உலகின் மிகப் பெரிய அகதி முகாம் கென்யாவில் இயங்குகிறது. யூனிசெப் சிறுவர் நிதியம், ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவன…

    • 2 replies
    • 1.2k views
  22. அதிகாரிகளின் கவனயீனத்தால் 3 பேர் நீர்வீழ்ச்சியில் அள்ளுண்டு மரணம்!பலவீன இருதயம் உடையவர்கள் இதை பார்க்க வேண்டாம் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தோர் நகரில் அமைந்துள்ள பட்டல் பாணி நீர்வீழ்ச்சியில் அள்ளுண்டு 3 பேர் உயிரிழந்த சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நீர்வீழ்ச்சியானது அப்பிரதேசத்தில் மிக முக்கியமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவ்விடத்திற்கு சுற்றுலா சென்றவர்களில் 3 பேர் திடீரென பெருக்கெடுத்த நீர் ஓட்டத்தால் அந்நீர்வீழ்ச்சியில் விழுந்து நீரில் மூழ்கி மரணமடைந்தனர். இச்சம்பவத்தின் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து அ…

  23. கென்யாவில் 5 டொன் சட்டவிரோத யானை தந்தங்கள் எரிப்பு சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டு கென்யாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்ட 5 டொன் யானை தந்தங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. சிங்கப்பூர், தான்சானியா ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக சுமார் 5 டொன் யானை தந்தங்கள் கென்யாவிற்கு கொண்டுவரப்பட்டன. இவற்றினை கைப்பற்றினர் அந்நாட்டு போலீசார். அவற்றை ‌மொத்தமாக அடுக்கி வைத்து தீயிட்டு கொளுத்தும்படி அந்நாட்டு அதிபர் மிவாய் கிபாகி உத்தரவிட்டார். சிங்கப்பூர், தான்சானியா , மாலாவி ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான யானை தந்தங்கள் கென்யாவிற்கு விற்பனைக்காக ‌கடத்தி வரப்படுவதாக கென்யா அரசுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி நேற்று 335 யானைகளிடமிருந்து ‌வெட்டி எடுக்கப்பட்ட 40 ஆயிரம் தந்தங…

  24. மாறிய மக்கள்! மாறாத அம்மா? சில வழக்கு மொழிகள் பழமொழிகளாக, பொன்மொழிகளாக உருபெறுதல் காலம் தரும் பதிவாகும். 'அம்மா திருந்த மாட்டார்' எனக் கூறிய பொழுதெல்லாம் நம்மை விரோதியாய் நோக்கியவர்கள் சொல்கிறார்கள்: 'அம்மா, எந்தக் காலத்திலும் திருந்தவே மாட்டார்' என்று. அம்மா பதவியேற்பு விழா யாருக்கு மகிழ்ச்சி என விழாவை தொலைக்காட்சியில் உற்றுநோக்கியவர்கள் அறிவார்கள். ஆர்.எஸ்.எஸ்.சின் தமிழக இந்துத்துவா தீவிர ஆதரவாளர் 'துக்ளக்' சோவிற்கு மகிழ்ச்சி. அவரது தோழர் அரசு தீவிரவாதத்தை குஜராத்தில் அரங்கேற்றிய நரேந்திர மோடிக்கு மகிழ்ச்சி! நாம் ஒரு பிரபல நாளிதழில் கட்டுரையாளராக எழுதும்போது அடிக்கடி குறிப்பிடுவதுண்டு: 'அவாள் மடி பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது'. ஆம்! அம்மாவ…

    • 1 reply
    • 744 views
  25. வீரகேசரி இணையம் 7/21/2011 12:22:31 PM தமது வான் பரப்பில் அனுமதியின்றி நுழைந்து அணு செறிவாக்கல் செயற்பாடுகளை உளவு பார்த்த அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் குவாம் மாகாணத்தில் உள்ள போர்டோ அணு செறிவாக்கும் ஆலைகளை குறித்த விமானம் உளவு பார்க்கும் வேளையிலேயே அது சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரி ஒருவரே இத்தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் உளவுச் சேவையான சி.ஐ.ஏ யுக்கே அவ்விமானம் தகவல்களை திரட்டிக்கொண்டிருந்தாக அவ்வதிகாரி குற்றஞ்சாட்டியுள்ளார். இதேவேளை இத்தகைய எதிரிகளின் விமானங்கள் பலவற்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.l…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.