Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சராக ஹினா ரப்பனி கர் நியமிக்கப்பட்டு ஒரு வார காலம்தான் ஆகிறது. அதற்குள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துவிட்டார் ஹினா. அவரது புகைபடங்களை பிரசுரிப்பதிலும், அவர் தொடர்பான வீடியோ கிளிப்பிங்குளை ஒளிபரப்பவும் சர்வதேச ஊடகங்கள் போட்டிபோடுகின்றன. இதுவரை "பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் அக்கறை காண்பிப்பதில்லை; தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது..." என்றெல்லாம் பாகிஸ்தான் குறித்து எதிர்மறை கருத்துக்களையும், அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்த உலகின் முன்னணி நாளிதழ்கள் மற்றும் வார சஞ்சிகைகளெல்லாம், தற்போது மாடல் அழகி போன்ற வசீகர தோற்றமும், அறிவு திறனும் கொண்ட இளம் பெண் ஒருவரை அயலுறவுத் துறை அமைச்சராக நியமித்து, பாகிஸ்தா…

  2. கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்? டெல்லி: கலைஞர் டிவி சொத்துக்களை பணமோசடி தடுப்புச் சட்டவிதியின் கீழ் கொண்டுவர அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரூ 215 கோடி மதிப்பிலான கலைஞர் டிவி சொத்துக்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த சொத்துக்கள் உள்ளன," என்றார். கலைஞர் டிவியில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும் உள்ளன. அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு 20 சதவீதப் பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2 ஜி விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ள டிபி ரியலி…

    • 6 replies
    • 1.2k views
  3. பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய எடியூரப்பா பணிந்தார் கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பு பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., மேலிடத்தின் உத்தரவை ஏற்று நேற்று பதவி விலகினார். தன் ராஜினாமா கடிதத்தை, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரிக்கு, பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். ஆனால், எடியூரப்பா ராஜினாமா செய்யவில்லை, என்று பா.ஜ., தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளதால், கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பு காட்சிகள் அரங்கேறியுள்ளன. சுரங்கத்தொழில் மோசடி குறித்து, கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அறிக்கை தாக்கல் செய்தவுடன், பா.ஜ., மேலிட அழைப்பின் பேரில், முதல்வர் எடியூரப்பா நேற்று முன்தினம் இரவு, டில்லி புறப்பட்டுச் சென்றார். டில…

  4. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக சென்னை, ஜூலை.27: திமுக கூட்டணியில் இருந்து வெளியேற இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. பாமக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் அதன் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பலரும் திமுக கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என்று கட்சித் தலைமையை வலியுறுத்தினர். பாமக மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன் பேசுகையில், ஈழத் தமிழர்களுக்கு திராவிட கட்சிகள் எதுவும் செய்யவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியும் துரோகம் செய்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விஞ்ஞான பூர்வமாக 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. தமிழர்களின் நலனுக்காக வாழ்த்து கொண்டிருக்கும் கட்சி பா.ம.…

  5. ஜெயலலிதா, மோடிக்கு அல்கொய்தா கொலை மிரட்டல்! தமிழக முதல்வர் ஜெயலலிதா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அல் கொய்தா அமைப்பினர் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும் புகழ்பெற்ற கேரள கோயில்களான குருவாயூர் கிருஷ்ணர் கோயில் மற்றும் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்தவர்கள் தாங்கள் அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் இந்தக் கடிதம் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதம் குருவாயூர் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் கிடைத்தவுடன் குருவாயூர் அருகே உள்ள ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்து…

  6. வீரகேசரி இணையம் 7/27/2011 7:21:59 PM லிபியாவில் கடாபி அரசுக்கெதிரான கிளர்ச்சிக் குழுவை சட்டரீதியான அரசாங்கமாக தாம் ஏற்பதாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹோக் தெரிவித்துள்ளார். கிளர்ச்சியாளர்களின் போராட்டத்தை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் எனவே தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ள லிபிய அரசாங்கத்தின் சொத்துக்களை விடுவிக்கவுள்ளதாகவும் அவற்றின் மூலம் அவர்களுக்கு நிதியுதவி அளிக்கவுள்ளதாகவும் ஹோக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரித்தானியாவிலுள்ள லிபியாவின் தூதரக அதிகாரிகள் அனைவரையும் வெளியேற்றவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை லிபிய தேசியத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய கடாபி ஆதரவு ஊர்வலமொன்றில் லொக்கர் பீ விமானக் குண்டு வெடிப்பின் சூத்திரதாரி மொஹமட் அல் ம…

  7. 5 கி.மீ., ஆழத்தில் நீர்மூழ்கியை இயக்கி சீனா சாதனை கடலுக்கடியில் 3 மனிதர்களுடன் சுமார் 5057 மீட்டர் ஆழம் வரை நீர்மூழ்கியை இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது. ஜியோலாங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி, பசிபிக் கடலின் மிக ஆழமான பகுதியில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில் நீர்மூழ்கியை சுமார் 5057 மீட்டர் ஆழம் வரை இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது. இதுவரை அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளே, 3500 மீட்டர் ஆழத்திற்கும் கீழே நீர்மூழ்கிகளை இயக்கி சாதனை படைத்த நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. சீனா இந்த வரிசையில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=282758

  8. ஆகஸ்ட் 2 - அமெரிக்கா தனது கடனில் சறுக்குமா? இன்றுவரை இழுபறி தொடர்கின்றது. இரண்டு கட்சிகளும் குறை கூறப்படுகின்றன. கடனில் தவறினால் இதன் விளைவுகள் பாரதூரமாக உலகம் முழுக்க இருக்கும். அமெரிக்க அரசு பெறக்கூடிய கடன்களின் அளவை அதிகரிப்பதற்கு குடியரசுக் கட்சியினர் முன்வைத்துள்ள திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி குறைகூறினார். அமெரிக்க அரசு, பெறக்கூடிய கடன்களின் அளவை அதிகரிக்கக் கொங்கிரஸ் சபை தவறினால், மிகப் பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென அமெரிக்க ஜனாதிபதி பறாக் ஒபாமா தெரிவித்தார். நேற்றிரவு நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி மூலம் அவர் உரையாற்றினார். செலவினத்தைக் கடுமையாகக் குறைக்கும் திட்டங்களுக்கு இணக்கம் தெரிவித்தால் மட்டும் அமெரிக்க அரசு பெறக்கூடிய கடன்களின்…

    • 33 replies
    • 2.3k views
  9. பிரதமரும், சிதம்பரமும் முதலில் பதவிவிலகட்டும்: எடியூரப்பா July 26, 2011 சட்டவிரோத சுரங்கத் தொழில் விவகாரத்தில் லோக்ஆயுக்தவின் அறிக்கை கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை குற்றம்சாட்டியுள்ளதையடுத்து அவர் பதவிவிலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்துப் பேசிய எடியூரப்பா, தொலைத்தொடர்பு ஊழல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் முதலில் பதவிவிலக வேண்டும் என்றார். ராசா நேரடியாகக் கூறியுள்ளதால் பிரதமரும், உள்துறை அமைச்சரும் முதலில் பதவிவிலக வேண்டும். அவர்கள் பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை என எடியூரப்பா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கர்நாடக லோக்ஆயுக்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே…

    • 0 replies
    • 434 views
  10. உலக தமிழ் இனமே உஷார்.....துளிர்விடத்துடிக்கும் தி.மு.க.வும் துளிர்க்க நினைக்கும் காங்கிரசும் உலக தமிழ் இனத்தின் புவிசார் நலன்களும்,ராஜ தந்திர பலமும் தாயக தமிழகத்தோடு தொடர்புடையதாகத்தான் இருக்கிறது, இப்போது தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம்,ஈழத்து தமிழ் இனத்தை காட்டிக்கொடுத்த காங்கிரசுக்கும்,கூட்டிக்கொடுத்த கருணாநிதிக்கும் மரண அடி கொடுத்திருப்பதாக நினைக்கும் தமிழர்களே...உண்மையில் காங்கிரசும்,கருணாநிதியும் காயப்பட்டிருக்கிறார்கள்,மீண்டு எழுவதற்கு அவர்கள் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள்,அந்த ஓநாய்கள் எழுந்துவிட்டால்,முத்துக்குமார் தொடங்கிய தியாக மறவர்களின் போராட்டம் வீணாகிவிடும் ஆபத்து,அண்மிக்கிறது. சீமான்,மற்றும் தமிழ் இயக்கவாதிகளின் அளப்பரிய ப…

  11. சீமானை கைது செய்ய வேண்டும்: இளைஞர் காங்கிரஸ் புகார் July 25, 2011 தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து இன்று ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- இயக்குனர் சீமான் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்தும், சோனியா, ராகுல் ஆகியோரை விமர்சித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். ஏற்கனவே அவர் மீது புகார் செய்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார். அவருடன் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் வில்லிவாக்கம் சுரேஷ், தமிழ்செல்வன் உள்பட பலர் வந்தனர். சீமானுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர். http://www.a…

  12. பிரதமரினதும் சிதம்பரத்தினதும் ஒப்புதலுடனேயே அலைக்கற்றை உரிமங்களை வழங்கினேன்! நீதிமன்றில் ராசா வாதம் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்பனையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இடம்பெற்ற விசாரணையின்போது இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ராசா, பிரதமர் மன்மோகன் சிங்கையும் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்தையும் இணைத்து குற்றம்சாட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அலைக்கற்றை விற்பனையை பிரதமர் மன்மோகன் சிங்கினதும் நிதியமைச்சர் சிதம்பரத்தினதும் ஒப்புதலுடனேயே மேற்கொண்டேன் என முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார். பிரதமர் மன்மோகன் சிங்கின…

  13. தென் சூடானைப் போன்று சூடானிலும் புதிய நாணயம் அறிமுகம் தென் சூடான் தனியாகப் பிரிந்து சென்று தனக்கான சொந்த நாணயத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது போன்று சூடானும் தனக்கான புதிய நாணயம் ஒன்றை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. சூடானின் புதிய நாணயம் வங்கிகளிலும் நாடு முழுவதிலுமுள்ள எல்லா நாணயமாற்று முகவர்களிடமும் பெற்றுக் கொள்ள முடியும் என அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது. அத்துடன், பழைய நாணயத்தை மூன்று மாத காலத்துக்குள் புதிய நாணயத்துக்கு மாற்றிவிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ள அந்நாட்டின் மத்திய வங்கி, தென் சூடான் ஏற்கனவே புதிய நாணயத்தை நடைமுறையில் கொண்டு வந்துள்ள நிலையில், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இதனைக் கொண்டு வருவதாக சூடான் அறிவித்த…

    • 0 replies
    • 473 views
  14. தெற்காசியாவைச் சேர்ந்த 4 ஆயிரம் பேருக்கு அவுஸ்திரேலியாவில் குடியுரிமை :அவுஸ்திரேலியா - மலேசியா புதிய ஒப்பந்தம் _ வீரகேசரி இணையம் 7/25/2011 4:25:29 PM புகலிடக்கோரிக்கை தொடர்பாக அவுஸ்திரேலியா மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையில் இன்று திங்கட்கிழமை ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது. எதிர்வரும் வருடங்களில் அவுஸ்திரேலியாவில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட அகதிகள் 4 ஆயிரம் பேருக்கு குடியுரிமை வழங்குவதெனவும் மேலதிகமாக தங்கியுள்ள 800 பேரை மலேசியாவுக்கு அனுப்புவதெனவும் ஒப்பந்தத்தினூடாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவோர் அனைவரும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தோர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலேசியாவின் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடீன்…

  15. Jul 26, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / இந்தியாவில் புதிய நிர்வாக மாவட்டம் உதயம் -இளந்தி இருபது வருடப் போராட்டத்தின் பயனாய் இந்தியாவின் குர்க்கா இனத்தவர்கள் தனி நிர்வாக அலகைப் பெற்றுள்ளனர். மேற்கு வங்காளத்தின் வடபால் அமைந்துள்ள டார்ஜீலிங் (Darjeeling) பகுதி வாழ் குர்க்கர் இனத்தவர்கள் குர்க்கர் ஜன்முக்தி மோர்ச்சா (Gorkha Janmukti Morcha) தலைமையில் தனி நிர்வாக அலகு வேண்டிப் போராடி வந்தனர். சென்ற திங்கட்கிழமை (18/07/2011) இது தொடர்பாக ஒரு முத்தரப்பு உடன்படிக்கை எட்டப்பட்டது. இந்திய அரசு, மேற்கு வங்க அரசு குர்க்கா ஜன்முக்கி மோர்ச்சா அமைப்பினர் இணைந்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். மேற்கு வங்கத்தின் தரைப்பரப்பு அளவு இதன் மூலம் குறையும் என்ற காரணத்தால் மக்…

  16. வீரகேசரி இணையம் 7/24/2011 4:15:46 PM சீனாவில் அதிவேக ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு விபத்திற்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்துள்ளதோடு 210 பேர் காயமடைந்துள்ளனர். சீனாவின் கிழக்கு மாகாணமான ஹிஜியாங்கில் பாலத்தின் மீது சென்றுக் கொண்டிருந்த புல்லட் ரயில் ஒன்று மின்சாரம் தடைபட்டதால் நின்றுள்ளது. இது தெரியாமல் அதே தடத்தில் பின் தொடர்ந்து வந்த மற்றொரு புல்லட் ரயில் நின்றுக்கொண்டிருந்த புல்லட் ரயில் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் புல்லட் ரயிலின் பல பெட்டிகள் கடும் சேதமடைந்துள்ளன. சில பெட்டிகள் பாலத்தின் மீது கீழே விழுந்துள்ளன. விபத்தில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். 210 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் சீன பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …

  17. http://www.youtube.com/watch?v=R9K6bs_fIWU ஐந்து பிள்ளைகளுக்கு தகப்பனான, இத்தாலியப் பிரதமர், தனது பாதுகாப்பு பெண் அதிகாரிக்கு வீதியில் வைத்து செய்யும் அசிங்கம். அவர் இதனை பகிடிக்கு செய்தாரா, அல்லது தான் வரும் போது அசட்டையாக பின் பக்கதை காட்டிக் கொண்டு நின்றமையால்... கடுப்பில் செய்தாரா? என்ன, இருந்தாலும் ஒரு பிரதமர் இப்படிச் செய்யலாமா?

  18. ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் காந்தி சிலையருகே 'மனவாடுகள்' ஈழத்தமிழர்களின் படுகொலையை எதிர்த்து போராட்டம் நடத்திய படங்களை முகநூலில் கண்டேன்...உங்கள் பார்வைக்கு... திரு.வெங்கடேஸ்வரலு பேச்சு திரு.புரேந்தரின் பேச்சு Source: FB. .

  19. டயானா மரணம் தொடர்பில் மீண்டும் விசாரணை _ வீரகேசரி இணையம் 7/23/2011 6:52:25 PM Share இங்கிலாந்து இளவரசி டயானா 1997-ம் ஆண்டு பெரீஸ் நகரில் காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பலியானார். இந்த விபத்தில் சதி ஏதும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக பெரீஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் மரணம் இயற்கையானது தான் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் இங்கிலாந்து நாட்டு போலீஸ் அதிகாரிகள் 2 பேர் தாங்கள் டயானா மரணம் குறித்த முக்கிய ஆவணங்களை நீதிமன்ற விசாரணையில் இருந்து மறைத்துவிட்டோம் என ஒரு பத்திரிகை நேர்காணலில் தெரிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து இந்த விசாரணை பெரீஸ் நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. பிரான்ஸ் நீதி…

  20. என் அண்ணன் அழகிரிக்கு... : மதுரை போலீஸ் சோதனையில் சிக்கிய பரபரப்பு கடிதம் மதுரை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி நில அபகரிப்பு புகாரில் சிக்கியுள்ளார். இவரது வீடு- தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை புறநகர் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கின என்று தகவல் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சோதனையில் ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் எஸ்ஸார். கோபி குறிப்பிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில், ’’என் உயிராக நினைத்து கொண்டிருக்கும் என் அண்ணன் அழகிரிக்கு... என் குடும்பமே கவுன்சிலர் லீலாவதி கொலையில் சம்பந்தப்படாமலேயே சிக்கியதால் மருது…

  21. Westminster, California (CNN) -- The arraignment of Catherine Kieu Becker, the Southern California woman accused of cutting off her husband's penis and throwing it into a garbage disposal, was continued Friday to September 23 at the request of her public defender. http://www.cnn.com/2011/CRIME/07/22/california.penis.knifing/index.html?npt=NP1

  22. நோர்வே தலைநகரில் பாரிய குண்டுவெடிப்புகள்; ஒரு பலி, பலர் காயம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் சற்றுமுன் இரு பாரிய குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. பிரதமர் அலுவலகம் உட்பட அரச கட்டிடங்கள் பல அமைந்துள்ள பகுதியில் இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதனால்இச்சம்பவத்தினால் குறைந்தபட்சம் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நோர்வே பிரதமர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பர்க்கிற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நோர்வேயின் அதிகம் விற்பனையாகும் டெப்லொய்ட் பத்திரிகையான எஸ்.வி யின் தலைமையகம் அமைந்துள்ள 17 மாடி கட்டிடமொன்று தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37…

    • 62 replies
    • 5.6k views
  23. கருணாநிதி சுறுசுறுப்பாக இருக்கையில் புதிய தலைவர் தேவையில்லை: அழகிரி சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சுறுசுறுப்பாகத் தான் உள்ளார். அதனால் புதிய தலைவர் தேவையில்லை என்று தென்மண்டல திமுக அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். நாளையும், நாளை மறுநாளும் கோவையில் திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கட்சி பொருளாளரான முக ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது. மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் முக அழகிரி கலந்துகொள்ள மாட்டார் என்ற பேச்சும் அடிபடுகிறது. இதனால் திமுக கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய தலைவர் நியமிக்கப்…

  24. நாளை திமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: ஸ்டாலினை செயல் தலைவராக்க முடிவு? சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு ஓய்வளிக்கும் வகையில், தற்போது பொருளாளராக உள்ள மு.க.ஸ்டாலினை, செயல் தலைவர் பதவியில் அமர்த்த பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அழகிரி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்பதால் பெரும் பரபரப்பும் நிலவுகிறது. திமுகவில் நிலவும் கோஷ்டிப் பூசல் அனைவரும் அறிந்ததே. ஸ்டாலின் தலைமையில் ஒரு கோஷ்டியும், அழகிரி தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்படுகின்றன. இதுபோக கனிமொழி குரூப், தயாநிதி மாறன் குரூப் என குட்டி குட்டி குரூப்களும் உள்ளன. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் பெரும் தோல்விக்குப் பின்னர் திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக…

  25. வீரகேசரி இணையம் 7/22/2011 7:00:04 PM அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்களைத் தாக்கிய அனல் காற்றால் இதுவரை 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர். குறித்த பிராந்தியங்களின் சில பகுதிகளில் 43 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தென் டகோடாவில் பெருந்தொகையான கால்நடைகள் இக் காலநிலை காரணமாக உயிரிழந்துள்ளன. மேலும் நியூயோர்க்கில் குளிரூட்டிகளின் பாவனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து எதிர்வரும் தினங்களில் மின்சார துண்டிப்புகள் இடம்பெறலாம் என மின்சார பாவனை நிறுவனமான கொன்எடிஸன் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் சுமார் 50 சதவீதமான மக்கள் வெப்பநிலை அதிகரிப்பு அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். அந்நாட்டில் ஒ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.