Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சேனல் 4 செய்தி அலைவரிசை ஒளிபரப்பிய "இலங்கையின் கொலைக்களம்" காணொளியை இந்த வாரம் வியாழன் (7/7 -11.00p.m), வெள்ளி(8/7 - 10.00p.m), சனி (9/7- 11.00p.m)மூன்று நாட்களும் ஒளிபரப்ப போகின்றது Headlines Today செய்தி தொலைக்காட்சி அலைவரிசை... இந்த செய்தியை எல்லோரிடத்திலும் சொல்லுங்கள்........

    • 6 replies
    • 987 views
  2. 'யூரோ'வை கைவிடுகிறது ஜெர்மனி [Wednesday, 2011-06-29 10:58:04] ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனி, யூரோ கரன்சியை கைவிட்டு, பழைய கரன்சியான, டச்மார்க்கிற்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும், ஒரே மாதிரியாக யூரோ கரன்சியை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஜெர்மனி நாட்டின் மத்திய வங்கியான, பண்டெஸ் வங்கி, டச்மார்க் சின்னம் பதித்த ரூபாய் நோட்டுகளை அச்சிட உத்தரவிட்டுள்ளதாகவும், இதையடுத்து, "டச்மார்க்' சின்னம் கொண்ட ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நடந்து வருவதாகவும், அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெர்மன் நாட்டில், இரண்டாம் உலகப் போருக்குப் பின், டச்மார்க் கரன்சி பயன்படுத்தப்பட்டு வந்தது. அமெரிக்காவின் டாலருக்குப் பிறகு, உல…

    • 28 replies
    • 3k views
  3. செலவுகள் அதிகமாகி நேரங்கள் இல்லாது யந்திர வாழ்கை வாழும் எமக்கு யந்திரமே திருமணம் செய்துவைக்கும் காட்சி பிரித்தானியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள்.இங்கு சிறிய கட்டணத்துடன் திருமணம் செய்ய பட்டு மணமக்களின் விருப்பு வெறுப்புகளை கேட்டறிந்து அவர்களுக்கு மாற்று மோதிரங்கள் வழங்கப்படும், நிகழ்சி நிறைவில் பிரபல உணவகம் ஒன்றில் 20- 50 வீத கழிவில் உணவருந்த கூப்பனும் வழங்கபடும் வாழ்க மணமக்கள் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=hs4BRzVV5iM

    • 0 replies
    • 925 views
  4. தேர்தல் நேரத்தில் பிரசாரத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வதும், அதன்பிறகு கறிவேப்பிலையைத் தூக்கி எறிவதுபோல்... கண்டுகொள்ளாமல் போவதும் தி.மு.க. தலைமைக்கு வாடிக்கையாகிவிட்டது என்று இயக்குநர் பாக்யராஜின் ரசிகர்கள் பல ஆண்டுகளாக புலம்பி வருகிறார்கள். நடிகை குஷ்பு, நடிகர் வடிவேலு ஆகியோருக்கு தரப்பட்ட மரியாதையில் சிறு அளவுகூட பாக்யராஜுக்குத் தர வில்லை என்ற ஆதங்கமும் அவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில், பாக்யராஜை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கேள்விகளைத் தொடுத்தோம். தேர்தல் முடிவுகள் பற்றி என்ன நினைத்தீர்கள்? ‘‘இழுபறியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என எதிர்பார்க்கவில்லை.’’ இந்த அளவுக்கு தி…

  5. தி.மு.க.வில் வாரிசுகளுக்கு இது போதாத காலம். கனிமொழி, தயாநிதியை அடுத்து அழகிரியும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராக உள்ள மு.க.அழகிரி, பிரதமருக்கு தவறான சொத்துக் கணக்கைக் கொடுத்துள்ளார் எனவும், கோயில் நிலத்தை சட்டத்திற்குப் புறம்பாக வாங்கியுள்ளார் எனவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்தான் சர்ச்சைகளுக்குக் காரணம். தயாநிதி மாறன் 2ஜி விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த உடனேயே பிரதமர் மன்மோகன் சிங், தனது அமைச்சரவை சகாக்கள் அனைவ ரும், உடனடியாக தங்கள் மற்றும் குடும்பத்தினருடைய தொழில்கள், முதலீடுகள், சொத்துக்கள், கடன்கள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்று கேபினெட் செயலாளர் சந்திரசேகர் மூலமாக அனைத்து அமைச்சர்களுக்…

    • 0 replies
    • 2.2k views
  6. தி.மு.க. ஆட்சியில் தனி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தது மு.க. குடும்பத்தினர் மட்டுமல்ல, அவரது குடும்பத்தில் வேலை பார்ப்பவர்களும், குடும்ப உறுப்பினர்களின் நண்பர்களும்தான். அவர்கள் அனைவரது முகத்திலும் ஆட்சி மாறியதுமே பயம் தென்பட ஆரம்பித்து விட்டது. சன் டி.வி. தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட, அத்தனை அதிகார மையங்களும் அதிர்ந்து போயுள்ளன. ‘சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படங்களைக் கேட்டு மிரட்டுகிறார், வாங்கிய படங்களுக்கு பணத்தை செட்டில் செய்ய மறுக்கிறார்’ என சன் டி.வி. தலைமை நிர்வாகி ஹன் ஸ்ராஜ் சக்சேனா மீது கடந்த ஆட்சியில் ஏராளமான புகார்கள் சொல்லப்பட்டன. ஆனால் மாறன் சகோதரர்களின் ஆதரவை மீறி போலீஸாரால் அவரை நெருங்க முடியவில்லை. இவர்களது அநியாயத்திற்கு ஒரு ம…

    • 0 replies
    • 719 views
  7. பொக்ஸ் நியூஸ் ட்விட்டர் செய்தி இணைப்பு ஊடறுப்பு! - ஓபாமா கொல்லப்பட்டதாக வதந்தி!! அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் ட்விட்டர் செய்தி இணைப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் ட்விட்டர் இணையத்தளத்தில் பொக்ஸ் செய்திகள் மற்றும் அரசியல் எனும் செய்தி இணைப்பிற்குள் சட்டவிரோதமாக ஊடுறுவிய குழு ஒன்றே இவ்வதந்தியை செய்தியாக பரப்பியுள்ளது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மீது இத்தகைய எவ்வித தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் உணவு விடுதி ஒன்றில் வைத்து ஜனாதிபதி பராக் ஒ…

    • 0 replies
    • 592 views
  8. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ராணுவ அதிகாரிகள் குடியிருப்புக்குள் பழம் பறிக்கச் சென்ற சிறுவர்கள் மீது படை வீரர் ஒருவர் சுட்டதின் காரணமாக தில்ஷான் என்ற சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளான். இதைக் கண்டு தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து சுட்டுக் கொல்கிறது. இப்போது இந்திய ராணுவமும் நமது நாட்டு மக்களையே சுட்டுக் கொல்லும் நிலை உருவாகியுள்ளது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். சம்பந்தப்பட்ட படை வீரர் மீது கொலைக்குற்றத்திற்கசான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=5720…

  9. நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் குறித்து இழிவாக பேசி வருதை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என அதன் மாநில தலைவர் யுவராஜ் அறிவித்திருந்தார். அதன்படி கரூர் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் திரண்ட இளைஞர் காங்கிரசார் சீமானின் உருவபொம்மையை எரித்தனர். இதனையொட்டி வெங்கமேடு போலீசார் இளைஞர் காங்கிரஸ் கட்சிதொண்டர்கள் பத்து பேரை கைது செய்தனர். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=57197

  10. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தீவுத்திடல் அருகில் குடியிருக்கும் மக்கள் காலம் காலமாக அங்கு குடியிருந்து வருகின்றனர். இன்று எத்தனையோ மாட மாளிகைகளும் உல்லாச புரிகளும், ராணுவம் சார்ந்த குடியிருப்புகளும், கட்டிடங்களும் அப்பகுதியில் முளைத்திருக்கலாம். ஆனால் இம்மக்கள் அந்த மண்ணின் பூர்வீககுடிகள் அவர்களுக்கே அந்த மண்ணில் அனைத்துக்கும் முதல் உரிமை இருக்கிறது. சிறுவர்கள் மரங்களில் ஏறி விளையாடுவதால் ஒன்றும் இந்த நாட்டின் “இறையாண்மை” கெட்டுப் போய் விடாது. அப்படியே சிறுவன் விளையாடியது தவறு என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் அவனை அழைத்து அன்பாக அறிவுறுத்தி வெளியே அனுப்புவதுதான் நெறி முறை. அதை விடுத்து தன் …

  11. இன்று அமெரிக்காவின் 235 வது சுதந்திர தினம். அமெரிக்காவின் 235ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, வாஷிங்டன் நகரம் விழாக்கோலத்துடன் காணப்படுகின்றது. சில தகவல்கள்: 1. USA is not a democracy, but a republic : People often associate democracy with freedom. But the fact is we are not a democracy. We are a republic. Our Founding Fathers deemed this an important distinction to make and discussed the matter quite a bit. In the end, our Founding Fathers claimed that a democracy was both extreme and dangerous for a country as it would most assuredly result in the oppression of the minority by the majority. Take this one example from Founding Father, E…

    • 0 replies
    • 658 views
  12. . சூடு பிடிக்கும் தெலுங்கானா விவகாரம்-10 அமைச்சர்கள், 61 எம்.எல்.ஏக்கள், 10 எம்.எல்.சிக்கள் ராஜினாமா ஹைதராபாத்: தனி தெலுங்கானா மாநிலம் கோரி இன்று காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள், அமைச்சர்கள் சொன்னபடி தங்களது பதிவிகளை ராஜினாமா செய்தனர். அதேபோல தெலுங்கு தேசம், போட்டி தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் ராஜினாமா செய்ததால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி நீண்டகாலமாக போராட்டம் நடந்து வருகிறது. சமீப காலமாக இது உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் தனி மாநிலம் அமைப்பது தொர்பாக பரிசீலிப்பதாக கூறியது மத்திய அரசு. ஆனால் வழக்கம் போல பல்வேறு ஜெகஜால குழப்பத்தை ஏற்படுத்தி அதை அப்படியே கிடப்பில் …

  13. கறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு ஆணை புதுடில்லி: நாட்டில் உள்ள கறுப்பு பணத்தை மீட்பதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வந்த இந்த தருணத்தில் சுப்ரீம்கோர்ட் அதிரடியாக இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள பதுக்கல்காரர்கள் பலர் வெளிநாடுகளில் கள்ளப்பணத்தை போட்டு வைத்துள்ளனர். இந்த பணத்தை மீட்டு கொண்டு வந்தாலே பல மாநில வளர்ச்சி நிதிக்கு பயன்படுத்த முடியும் என்று சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கை தெளிவுப்டுத்தியது. மேலும் கறுப்பு பணவிவகாரம் தொடர்பாக யோகாகுரு பாபா ராம்தேவ் பெரும் உண்ணாவிரதம் போராட்டத்தை துவ…

    • 0 replies
    • 375 views
  14. திங்கட்கிழமை, 4, ஜூலை 2011 (8:56 IST) தாய்லாந்தில் முதல் பெண் பிரதமர் யிங்லக் தாய்லாந்தில் எதிர்க்கட்சியான ப்யூதாய் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதால், இக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரின் சகோதரியுமான யிங்லக் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளார். மொத்தமுள்ள 500 இடங்களில் 260 இடங்களை ப்யூதாய் கட்சி கைப்பற்றியுள்ளது. ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு 163 இடங்கள் கிடைத்துள்ளன. எதிர்க்கட்சியான ப்யூதாய் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதால் முன்னாள் பிரதமர் ஷினவத்ரேவின் சகோதரியும், இக்கட்சியின் தலைவருமான யிங்லக்,44, புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளார். தற்போதைய பிரதமர் அபிஜித், புதிய பிரதமராகவுள்ள யிங்லக்குக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். யிங்லக், தாய்லாந்து…

  15. 03 ஜூலை 2011 திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இதுவரை ரூ. 1லட்சம் கோடி அளவிலான நகைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே பணக்கார கோவிலாக கருதப்படும் திருப்பதியை மிஞ்சியுள்ளது பத்மநாபசாமி கோவில். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. திருவிதாங்கூர் சமஸ்தான ராஜ குடும்பத்தினர் வசம் இந்தக் கோவிலின் நிர்வாகம் உள்ளது. இந்த நிலையில் பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உச்சநீதிம…

  16. கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை௧4 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது பாலியல் கொடுமைகளுக்குப் பெயர் போன கேரளாவில் மேலும் ஒரு பாலியல் கொடுமை நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. தனது 14 வயது மகளை பலரிடமும் பணம் பெற்றுக் கொண்டு கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொச்சி அருகே உள்ள பரவூரைச் சேர்ந்த 18 வயது மகளை முதலில் தான் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் நூற்றுக்கணக்கானோரிடம் பணத்திற்காக அனுப்பி வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தந்தையைப் போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அச்சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 50 பேர் வரை கைதாகியுள்ளனர். அரபு நாட்டு ஷேக் ஒருவரும…

  17. பாக்கிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தினால் இந்தியாவுக்கும் தமக்கும் பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. பாக்கிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தினால் இந்தியாவுக்கும் தமக்கும் பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தீவிரவாதத் தடுப்புக்கான புதிய கொள்கை தொடர்பான அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அல் கொய்தா இயக்கம் மீண்டும் செயல்படுவதை தடுப்பதில் - அமெரிக்க இராணுவமும் நேட்டோ படையும் உறுதியாக உள்ளது ஆப்கானிஸ்தான் மற்றும் பக்கிஸ்தான் பகுதிகளில் அல் கொய்தா அழிக்கப்பட்டு விட்டாலும், அவர்கள் வேறு இடங்களில் தங்கள் நடவடிக…

  18. மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 5 பேர் பலி? பீகார் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பொதுமக்களில் 5 பேரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று அதிகாலை 5 மணிக்கு முங்கேர் என்னும் ஊரில், 2 ஜீப்புகளில் ஆயுதங்களுடன் வந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று மாவோயிஸ்ட் இயக்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் பிகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை பிடிக்க அப்பகுதியில் போலீஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் பரபரப்பாக செய்தியை வெளியிட்டுள்ளன. …

  19. வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்டோர்ஸ் கான் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஸ்டோர்ஸ் கான் நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டோர்ஸ் கான் மீது பாலியல் குற்றஞ்சுமத்திய பெண்ணின் சாட்சியத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்ததை அடுத்து இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதேவேளை பிணைக்காக ஸ்டோர்ஸ் கான் செலுத்திய ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச்செலுத்த உத்தரவிட்ட நீதிமன்றம் பிணையற்ற விடுதலையை அவருக்கு வழங்கியுள்ளது. வழக்கு விசாரணைகளில் தொடர்ந்து ஆஜராவதாக ஸ்டோர்ஸ் கான் வழங்க…

  20. 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி அப்ரூவராகிறார்? சென்னை, ஜூலை. 1- 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி அப்ரூவராகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, திகார் சிறையிலிருந்து இப்போதைக்கு வெளியே வருவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது, வழக்கில் அவர் அப்ரூவராக வேண்டும். அப்படி ஆக முடிவு செய்தால் அவருக்கு உடனடியாக ஜாமீன் கிடைக்க வழி உள்ளது. ஆனால் கனிமொழி அப்ரூவர் ஆவார் என்பது சந்தேகம்தான். கடந்த 2 மாதங்களாக திகார் சிறையில் வாடி வருகிறார் கனிமொழி. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் டிவிக்கு கிடைத்த ரூ. 214 கோடி கடன் தொகை தொடர்பாக அவரும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர் இதுவரை தாக்கல் செய்த 3 ஜாமீ…

  21. இந்தியர்கள் வேண்டுமானால் ஏழைகளாக இருக்கலாம், ஆனால் இந்தியா ஒன்றும் ஏழைநாடல்ல என ஒரு சுவிஸ் வங்கி இயக்குனர் கூறியிருந்தார்.இவர் கூறும் தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் எங்கோ இருக்க வேண்டிய இந்திய சமுதாயம், தனது சுய நல எண்ணங்களால் சிதைக்கப்பட்டு போயிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. அமெரிக்கர்கள் பணக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க அரசாங்கம் ஒன்றும் பணக்கார அரசாங்கம் இல்லை. அது ஒரு ஏழை அரசாங்கமே.பட்டென ஒரு 150 பில்லியன் டாலர் கடன் கொடேன் எனக் கேட்டால் அதனால் கொடுக்க முடியாது. ஏற்கனவே 14 டிரில்லியன் கடன் வாங்கி தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசாங்கம் தான் அது.இதன் பல மாகாணங்கள் அதனதன் சொத்துக்களை பொதுமக்களுக்கு ஏலம் விட்டு தற்காலிகமாக காசு பார்த்துக் கொண்டிருக்கின்றது. இங்கி…

  22. சவுதியில் தீ விபத்து : 6 இந்தியர்கள் பலி! _ வீரகேசரி இணையம் 7/2/2011 5:37:42 PM Share சவுதி அரேபியா தலைநகர் ரியாத் அருகே அல் பதா என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டின் 2ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 இந்தியர்கள் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இறந்தவர்களில் 5 பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களாவர். இவர்களின் உடலை இந்தியா கொண்டு வர இந்திய தூதரகம் ஏற்பாடு செய்து வருவதாக அமைச்சர் இ.அகமது தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32501 விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  23. பாலியல் குற்றச்சாட்டு:ஸ்ட்ராஸ் கான் விடுவிப்பு பாலியல் குற்றச்சாட்டில் வீட்டுக்காவலில் இருந்த முன்னாள் ஐ.எம்.எப்., தலைவர் ஸ்ட்ராஸ் கான் நிபந்தனை ஜாமின் ஏதுமின்றி விடுவிக்கப்பட்டார்.ஐ.எம்.எப்., தலைவராக இருந்த போது பாலியல் குற்றச்சாட்டில் குற்றம்சாட்டப்பட்டு கைதானார். இதனால் அப்பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் கோர்ட் அவரை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று கோர்ட் அவருக்கு நிபந்தனை ஜாமின் ஏதுமின்றி விடுவித்தது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=267709 Judge agrees to release Strauss-Kahn without bail Former International Monetary Fund leader Dominique Strauss-Kahn walked out of court without bail and free from house arr…

    • 1 reply
    • 473 views
  24. பிரான்ஸ் அதிபர் சர்கோசி மீது திடீர் தாக்குதல்! பிரான்ஸ் நாட்டின் அதிபரான நிக்கோலஸ் சார்கோசியை பார்வையாளர் ஒருவர் திடீரென தாக்கி நிலைகுலையச் செய்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிபர் நிக்கோலஸ் சார்கோசி தெற்கு பிரான்சி்ல் உள்ள டொலுயீசில் நடைபெற்ற மேயர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதன் பின்னர் அவர் பிராக்ஸ் நகருக்குச் சென்றார். அங்கு நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் கையசைத்தும் கைகுலுக்கிக் கொண்டும் சென்ற சர்கோசியைத் திடீர் என்று ஒருவர் பலமாக அவரது சட்டை காலரைப் பிடித்து இழுத்தார். இதில் சார்கோசி நிலை தடுமாறினார். அப்போது அருகிலிருந்த மெய்க்காவலர்கள் சுதாரித்துக்கொண்டு சர்கோசியைப் பிடித்துக் கொண்டனர் உடனே சர்கோசி சுதாரித்துக் கொண்டு வ…

    • 0 replies
    • 513 views
  25. உலகின் அதி நீளமான பாலம் சீனாவில் இன்று திறந்துவைப்பு _ வீரகேசரி இணையம் 6/30/2011 5:38:46 PM சீனாவில் கடலுக்கு மேலாக கட்டப்பட்ட உலகின் அதி நீளமான பாலம் பொதுமக்கள் பாவனைக்கென இன்று வியழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. குயிங்டாஹோ ஹய்வான் எனப் பெயரிடப்பட்டுள்ள 42.4 கிலோமீற்றர் நீளமான இப்பாலம் சீனாவின் கிழக்குக் கரையோர நகரான குயிங்டாஹோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப் பாலமானது இதுவரைகாலமும் உலகின் நீளமான பாலம் என்ற பெருமையைப் பெற்றிருந்த அமெரிக்க லூசியான மாநிலத்தில் அமைந்துள்ள பாலத்தினை விட 3 மைல்கள் நீளம் கூடியதாகும். வெறும் 4 வருடங்களில் சுமார் 960 மில்லியன் பவுண்கள் செலவில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இப்பாலமானது 5,200 இற்கும் அதிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.