Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்திய தூதரக துணை கவுன்சிலர் மகள் கைது அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் துணை கவுன்சிலராக இருக்கிறார் தேபாசிஷ் பிஸ்வாஸ். இவரது மகள் கிருத்திகா, நியூயார்க் குயின்ஸ் பள்ளியில் கணிதம் பாடப்பிரிவில் சேர்ந்தார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியைப் பற்றி கிருத்திகா தரக்குறைவான இ மெயில் அனுப்பியதாக புகார் எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து கிருத்திகா பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக கிருத்திகா போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக 24 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டார். மேலும் சிறையில் துன்புறுத்தியதாக கிருத்திகா தெரிவித்தார். இது தொடர்ப்பாக கடந்த 6-ந் தேதி நியூயார்க் நீதிமன்றத்தில் கிருத்தி…

  2. சோனியாவை ஏன் சந்திக்கவில்லை : கலைஞர் சென்னையில் அறிவாலயத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் திமுக தலைவர் கலைஞர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கனிமொழி கைது செய்யப்பட்டிருப்பது குறித்தும், டெல்லி சென்றும் சோனியாகாந்தியை சந்திக்காமல் திரும்பியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ’’டெல்லி திகார் சிறையில் இருக்கும் எனது மகள் கனிமொழியையும், ராஜாவையும் பார்ப்பதற்காக சென்றேன். கனிமொழி 2ஜி வழக்கை துணிவோடும், உறுதியோடும் எதிர்கொள்வார். இப்பிரச்னையை சட்டரீதியாக அணுகலாம் என நம்புகிறோம். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது. அ‌தனால் தான் சோனியாவை சந்திக்கவ…

  3. ''திரும்பிப் பாருங்கள் திருமா!'' தேர்தல் பரபரப்பு களைகட்டிய நேரம்... ஈழ ஆதரவுக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் நிச்சயம் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்காது என்கிற நிலைமை. ஆனாலும், தி.மு.க-வுடனான நெருக்கத்தில் காங்கிரஸை சகித்துக்கொள்ள திருமாவளவன் தயாராகிவிட்டதாகத் தகவல் கசிய... நாம் அப்போது அவரிடம் ஒரு பேட்டி கேட்டோம். ''ஈழ அழிவுக்கு காங்கிரஸ்தான் காரணம் எனச் சொல்லும் நீங்கள், அதே கூட்டணியில் நீடித்தால் மக்கள் ஏற்பார்களா?'' இந்தக் கேள்வியை நாம் கேட்டதுதான் தாமதம். திருமாவுக்கு சிலுப்பிக்கொண்டு வந்தது கோபம். ''நீங்கள் எனக்கு நண்பர். உங்களுக்கு யாரோ ஓர் அயோக்கியன் நண்பர் என்றால், அதற்காக உங்களின் நட்பை நான் உதற முடியுமா? நான் தி.மு.க-வுடன்தான் கூட்டணி …

  4. சிவன் கோவில் நிலத்திற்காகத் தாய்லாந்து- கம்போடியாச் சண்டை Posted by சங்கீதா on 25/05/2011 in பிரதான செய்தி | 0 Comment இரு நாட்டு இராணுவங்களும் ஒருவர் மீது ஒருவர் கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்துவதால் தாய்லாந்து- கம்போடியா எல்லையில் கடும் பதற்றம் நிலவுகிறது. இந்த எல்லையில் கிட்டத்தட்ட ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த மூன்று கோவில்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது பெரிய விகார் என்ற சிவாலயம். தனக்குச் சொந்தம் என்று தாய்லாந்தும் கம்போடியாவும் அதற்கும் அது அமைந்துள்ள நிலத்திற்கும் உரிமை கோருகின்றன. 1962ம் ஆண்டில் இந்த சர்ச்சை முதன் முறையாக வெடித்த போது இரு நாடுகளும் அனைத்துலக நீதி மன்றத்திடம் நீதி கேட்டு முறைப்பாடு செய்தன. விசாரணைக்கு பிறகு அனைத்துலக நீதி மன்றம்…

  5. ராஜிவ் கொலைக்குப் பின்னால் திராவிட முன்னேற்ற கழகம்! தமிழக முதல்வர் குற்றச்சாட்டு புதன், 25 மே 2011 01:39 இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலையில் மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் மறைமுகமாக தொடர்புபட்டு உள்ளது என்று இந்தியாவின் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று குற்றம் சாட்டினார். இவர் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேசியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவர் மேலும் கூறியபோது இக்குற்றச்சாட்டை அண்ணா திரவிட முன்னேற்ற கழகம் மிக நீண்ட காலமாக முன்வைத்து வந்திருக்கின்றது. ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்னால் திராவிட முன்னேற்ற கழகம் இருந்தது என நாம் கூறி வந்திருக்கின்றோம் என்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களின் ஒ…

  6. எத்தியோப்பியா, தான்சானியாவுக்கு பிரதமர் பயணம் எத்தியோப்பியா மற்றும் தான்சானியாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் 6 நாள் பயணமாக இன்று புறப்பட்டுச் சென்றார். ஆப்பிரிக்க நாடுகளிடையே உள்ள உறவை வலுப்படுத்தவும் சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் மன்மோகன் சிங் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். ஆப்பிரிக்க யூனியன் நாடுகளின் மாநாடு மே 24, 25-ம் தேதிகளில் அடிஸ் அபாபா நகரில் நடைபெறவுள்ளது. அல்ஜீரியா, எகிப்து, கென்யா, லிபியா, நமீபியா, நைஜீரியா, ஸ்விட்சர்லாந்து உள்பட 15 நாட்டுப் பிரதிநிதிகள் பங்கு கொள்ளும் அந்த மாநாட்டில் மன்மோகன்சிங் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்கிறார். அடிஸ் அபாபாவில் அவர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். அப்போது ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர…

  7. மதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர்: வைகோ நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடாமல் புறக்கணித்ததை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர் என, வைகோ பேசினார். ம.தி.மு.க. 18ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிவகாசி பகுதியில் ம.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது. விழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். பின்னர் ஆலங்குளம் டி.என்.சி. முக்குரோட்டில் ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வைகோ, வெற்றி, தோல்விகளை சமமாக கருதுபவன் நான். என் அரசியல் பயணம் ஒளி மண்டலமாகவும், இருள் சூழ்ந்ததாகவும் இருந்து வருகிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பு கொலைப் பழி சுமத்தப்பட்டு வெளியேற்…

  8. சொக்கத்தங்கம்.. சோனியா என்று வழிந்து வழிந்து சோனியாவிற்கு புகழாரங்களாகச் சூட்டினார் ஐயா கறுப்புத் தங்கம் கருணாநிதி. இன்று அவரின் அன்பு மகள் கனிமொழி.. அதே சொக்கத்தங்கத்தால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சோனியா நினைத்திருந்தால் இந்த வழக்கில் இருந்து கனிமொழியை என்ன ராசாவையே காத்திருக்க முடியும். அப்பேற்பட்ட.. போர்பாஸ் பீரங்கி ஊழலையே தூக்கிச் சாப்பிட்ட சோனியாவிற்கு இவை என்ன புதிதா..??! இருந்தாலும்.. கருணாநிதி மீது சோனியாவிற்கு உள்ளூர பல ஆத்திரங்கள். பகைகள். ஆனால் அரசியலுக்காக அதனை வெளியில் காட்டாது கூட்டணி அமைத்து முதலில் ஈழத்தமிழர்களைப் பழிவாங்கினார் சோனியா. கருணாநிதியும் வருவாய் கருதி வாயைப் பிளந்து கொண்டு கிடந்தார். கூட்டணி ஆட்சியில் கருணாநிதியின் எ…

  9. ராஜீவ் படுகொலையை அரசியல் ஆக்க வேண்டாம்: ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கண்டனம் ராஜீவ் காந்தி படுகொலையை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் என்று ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் 24.05.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா, ராஜீவ்காந்தி கொலையில் திமுகவை தொடர்பு படுத்திப் பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, ராஜீவ்காந்தி கொலை மிகவும் உணர்வு பூர்வமான நிகழ்வு. இந்த சம்பவம் நாடு முழுவதும் மட்டுமின்றி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு. மிகவும் உணர்ச்சிகரமான அந்த துயரச் சம்பவத்தை யாரு…

  10. ஜெயலலிதாவை சோனியா டீ-பார்ட்டிக்கு அழைத்தாரா? இல்லையா? செவ்வாய்க்கிழமை, மே 24, 2011, சென்னை: நாங்கள் வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். அவர் டீ-பார்ட்டிக்கு அழைத்ததாக பத்திரிகைகளில்தான் படித்தேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதன்மூலம் அவரை சோனியா காந்தி டீ-பார்ட்டிக்கு அழைத்தாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம்: கடந்த வாரம் நான் உங்களை சந்தித்தபோது வாரம் ஒரு முறை உங்களை சந்திப்பதாக கூறினேன். நேற்று சந்திப்பதாக இருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அமைச்சர் மரியம் பிச்சை இறந்ததால் திருச்சி செல்ல வேண்டியதாகிவிட்டது.…

  11. இந்தியாவின் 3 கலைகளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் மத்திய அரசு 2010-11 ஆம் ஆண்டில் பண்பாடு குறித்த அறிக்கையில், ’’ரவீந்திரநாத் தாகூர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக பிரதமர் தலைமையில் தேசிய குழுக்கள் அமைக்கப்பட்டன. ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் வங்கதேசத்துடன் இணைந்து கூட்டாக கொண்டாடப்பட்டது. பண்டித மதன்மோகன் மாளவியாவின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும் தேசிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திராகாந்தி தேசிய கலைகள் மையமானது 12 முக்கிய கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தியது. இதில் சுமார் ஐந்து லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இதுவரை இல்லாத ஒரு சாதனை அளவாகும். …

  12. கவிஞராக, மனித உரிமையாளராக எளிமையாக அறியப்பட்ட ஒரு பெண்ணை ‘அதிகாரத்தின் ருசி’ எந்த எல்லைக்கும் கொண்டு போகும் என்பதற்கு கனிமொழி ஒரு உதாரணம். பெரிதாக இலட்சியங்களோ, அரசியல் ஆர்வமோ இல்லாத ஒரு சாதாரணப் பெண்ணாகத் தான் கனிமொழியின் ஆரம்ப கால வாழ்க்கை இருந்தது. 90-களின் ஆரம்பத்தில் கனிமொழியின் முதல் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரிவுக்குப் பின்னர் அவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘கருவறை வாசனை’ வெளிவருகிறது. ‘கவிஞர் கனிமொழி’ கருணாநிதி என்று அறியப்பட்ட அவர் இலக்கிய உலகில் கொண்டாடப்பட்டதற்கு பின்பாதி பெயரும் ஒரு முக்கியக் காரணம். சர்ச் பார்க்கில் பள்ளிப்படிப்பும், எத்திராஜ் கல்லூரியில் முதுநிலை பொருளாதாரமும் படித்திருந்த கனிமொழி 92-ம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து வருடங்கள் ‘தி…

  13. முல்லா உமர் கொல்லப்பட்டாரா??? Taliban leader Mullah Omar killed 2011-05-23 11:27:30 Kabul: Afghan Taliban leader Mullah Mohammad Omar has been killed in Pakistan, Xinhua cited a private television channel as stating on Monday. "Mullah Omar was killed on way from Quetta to North Waziristan," Afghanistan's TOLO television stated. However, it did not provide details on how he was killed and by whom. Meanwhile, a security official confirmed the killing, saying: "It is correct that Mullah Omar has been killed." But he did not disclose details. Omar was considered the spiritual leader of the Taliban m…

    • 1 reply
    • 765 views
  14. பாகிஸ்தான் கடற்படை முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் முகாமில் தரித்து நின்ற இரண்டு பாரிய யுத்த விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் கடற்படை முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 11 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. கராச்சியில் அமைந்துள்ள மஹரான் கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் சில இராணுவ வீரர்களை பணயமாக பிடித்து வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் சீன இராணுவப் படைவீரர் ஒருவரும் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை எனினும் அல் கய…

    • 0 replies
    • 661 views
  15. கனிமொழியை சந்தித்தார் கலைஞர் ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கிறார் கனிமொழி. தனது மகள் கனிமொழியை சந்திக்க கலைஞர் இன்று டெல்லி சென்றார். அவர் இன்று மாலை திகார் சிறையில் கனிமொழியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது மனைவி ராசாத்தி அம்மாள், கனிமொழியின் கணவர் அரவிந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் உடன் இருந்தனர். கனிமொழியுடன் சிறிது நேரம் கலைஞர் பேசிக் கொண்டிருந்தார். பின்னர், அவர் அங்கிருந்து விடைபெற்றார். நக்கீரன்.

  16. கனிமொழியைக்கண்டு காந்திஅழகிரி கண்ணீர் ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் கனிமொழியை மத்திய அமைச்சர் அழகிரியின் மனைவி காந்தி இன்று டெல்லி நீதிமன்றத்தில் சந்தித்தார். இன்று காலை டெல்லி வந்த காந்தி, தனது மகன் துரை தயாநிதி உள்ளிட்ட சிலருடன் பாட்டியாலா வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்துக்கு வந்தார். காந்தி நீதிமன்ற அறையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவுடன் கனிமொழி நேராக அவரிடம் சென்றார். இருவரும் தங்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டனர். ஆனால் சிறிதுநேரத்தில் காந்தி அழ ஆரம்பித்துவிட்டார். எனினும் கனிமொழி உணர்வுகளை கட்டுப்படுத்தியவராக காந்தியிடம் பேசினார். இருவரும் நீதிமன்ற பார்வையாளர் பகுதிக்கு சென்றனர். அங்க…

    • 1 reply
    • 898 views
  17. இந்தியாவை சுற்றி வளைக்கும் சீனா பீ.பீ.சி May 23, 2011 உலகப் பொருளாதாரத்தில் முதன்மை நிலையை எட்டித் தொட்டுக்கொண்டிருக்கும் சீனா தற்போது தனது இராணுவ பலத்தையும் நல்ல முறையில் விஸ்தரித்து வருகிது என்று இன்றைய பீ.பீ.சி செய்தி தெரிவித்தது. சிறீலங்காவின் அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைத்து தனது கரங்களை பதித்துக் கொண்ட சீனா இப்போது தனது பார்வையை பாகிஸ்தான் பக்கமாக திருப்பியுள்ளது. இன்றைய செய்திகளின்படி தென் மேற்கு பாகிஸ்தானில் சிறந்ததொரு துறைமுகத்தை அமைத்துத் தரும்படி பாகிஸ்தான் சீனாவிடம் கோரியுள்ளது. இதன் மூலமாக தெற்கே சிறீலங்காவில் முத்திரை பதித்த சீனா இப்போது இந்தியாவின் வடக்கே தனது கரங்களை இறக்கவுள்ளதாகவும் பீ.பீ.சி ஆய்வாளர் கூறினார். அவர் மேலும் கூறும்போது சீனா மஞ…

  18. ரஜினி நலம்பெற வேண்டி பாரதிராஜா தலைமையில் 500 இயக்குநர்கள் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை கமலா திரையரங்கில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, எழில்,பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார்,வசந்த், சேரன், எஸ்.பி.ஜனநாதன், பேரரசு, அகத்தியன், ஆர்.வி.உதயகுமார்,ஈ.ராமதாஸ், சீனு ராமசாமி, வெற்றிமாறன், ஏ. ஜெகந்நாதன், டி.கே.சண்முகசுந்தரம், சசிமோகன், மேலும் பல இயக்குநர்களும், 1000 உதவி இயக்குநர்கள்,செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். கூட்டம் ஆரம்பம் ஆகி, தமி…

  19. ‘’விடுதலை’’க்கு தடையா? : ஜெ.வுக்கு கி. வீரமணி கண்டனம் திராவிட இயக்கப் போர் வாளான “விடுதலை” நாள் ஏட்டை ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைக்கே அவசர அவசரமாக ஆணை பிறப்பித்து அரசு நூலகங்களில் இடம் பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு “விடுதலை” ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ’’தமிழர்களின் “கெசட்” என்றால் அது “விடுதலை” என்பது சுவர் எழுத்தாகும். நம் ஆயுதம் “விடுதலை” என்று சுருக்கமாகச் சொன்னார் அதன் உரிமையாளரான தந்தை பெரியார். தமிழன் வீடு என்பதற்கு அடையாளம் “விடுதலை” என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். “ஒரு காலத்தில் நீ உன்னத நிலையில் இருந்தாய்; இந்நாட்டு ஆட்சி உன்னுடையதாய் இருந்தது. ஆனால், இன்று! நீ ஆண…

  20. பின்லேடன் மீதான தாக்குதலை போன்று மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தப்படும்: ஒபாமா உறுதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகே உள்ள அபோதாபாத் நகரில் மே மாதம் 2ஆம் திகதி அல்கொய்தா தீவிரவாதத் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படைகள் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தான் மண்ணில் இன்னொரு தீவிரவாதத் தலைவரை கண்டறிந்தால் அதே போன்ற தாக்குதலை அமெரிக்கா நடத்தும் என ஜனாதிதி ஒபாமா திட்டவட்டாக தெரிவித்தார். தங்கள் மண்ணில் அத்துமீறிய அமெரிக்கா பின்லேடனை கொன்ற விவகாரம் பாகிஸ்தானுக்கு எரிச்சலை தந்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நிர்வாகத்தை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில் பின்லேடனை போன்ற இன்னொரு தீவிரவாதி பதுங்கி இருந்தால் மீண்டும்…

  21. . பாக். கடற்படைத் தளத்தில் பயங்கர தாக்குதல் - 10 பேர் பலி-சண்டை நீடிக்கிறது கராச்சி: கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளத்தில் புகுந்துள்ள தலிபான் தீவிரவாதிகள் பெரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 2 விமானங்களை அவர்கள் குண்டு வைத்துத் தகர்த்து விட்டனர். 12 மணி நேரமாக நடந்து வரும் சண்டையில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். கராச்சியில் பாகிஸ்தான் கடற்படையின் பிஎன்எஸ் மேஹ்ரான் என்ற கடற்படைத் தளம் உள்ளது. இங்கு நேற்று இரவு பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் 12 முதல் 15 பேர் வரை புகுந்தனர். அருகில் உள்ள விமானப்படை அருங்காட்சியகம் வழியாக இவர்கள் கடற்படைத் தளத்துக்குள் புகுந்து விட்டனர். உள்ளே நுழைந்த அவர்கள் அங்கிருந்த 2 விமானங்களை அவர்க…

  22. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான ஹஸன் அலியை தோற்கடித்தவரும், ஈழ நண்பருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு மனிதம் பாராட்டு பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் அன்மையில் மனித நேய மக்கள் கட்சி சார்பாக இராமநாதபுரம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய இந்திய நண்பரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரான ஹஸன் அலியின் பணபலம், அதிகார பலம், ஆள் பலம் என அனைத்தையும் மீறி தமிழக சட்ட மன்ற தேர்தலில் 15,000 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற செய்து, உலக தமிழர்களின் பாராட்டை பெற்றார். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஈழ பிரச்சனையில் எப்போதும் கரிசனம் கொண்டிருந்து வருபவர். மனிதம் அமைப்பின் நெடுங்க…

  23. கனிமொழி கைதும் அரசியல் வெளிச்சமும் - குட்டி ரேவதி கனிமொழி கைது செய்யப்பட்டது, அவர் இழைத்த குற்றத்திற்கானதாக ஒரு புறம் இருந்தாலும், எனக்கு அதனுடன் பிணைந்த வேறு பல விஷய முடிச்சுகளையும் உடன் இழுத்து வருகிறது. அரசியல் நோக்கிய நகர்வைப் பெண்கள் எளிதாக எடுத்து வைக்கமுடிவதில்லை. குடும்பம், தான் சார்ந்துள்ள சமூகம் போன்ற வெளிகளைத் தாண்டி, அல்லது அந்த வெளிகளைத் தனக்கான அளவில் சமாதானப்படுத்திவிட்டு, நிறைவு பெறச் செய்து விட்டுத்தான் அரசியல் என்ற ஆண்களுக்கு மட்டுமே என இருந்த வெளியை எட்டிப் பிடிக்க முடிந்தது. இன்று அது, தன் தந்தை, சகோதரர், கணவர் என்று யார் மூலமாகத் தனக்குச் சாத்தியப்பட்டாலும், அது இன்னும் ஆண்களின் வெளியாகவே இருப்பதைத்தான் உணர்த்துகிறது. அந்த இடத்த…

  24. வடக்கு மற்றும் தெற்கு சூடானுக்கு இடையில் மீண்டும் மோதல்கள் ஆரம்பித்துள்ளன. தென்சூடான் படைகளுக்கும் வட சூடான் படைகளுக்குமிடையில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. இந்த நிலையில், தென் சூடானின் எல்லைப்பகுதியின் அபே(Abyei) நகரம் -வட சூடானின் படையினரின் கட்டுப்பாட்டினுள் வந்திருப்பதாக கார்ட்டொமினைத் (Khartoum) தளமாகக் கொண்டு இயங்கும் சூடான் தொலைக்காட்சி அறிவித்திருக்கிறது. வடக்கு மற்றும் தெற்கு சூடானுக்கு இடையில் மீண்டும் மோதல்கள் ஆரம்பித்திருப்பதை ஐக்கிய நாடுகள் அமைப்பும் உறுதி செய்திருகிறது. எண்ணெய்வளச் சிறப்பு மிக்க இந்தப் பிரதேசம் மீண்டுமொரு போர் ஆரம்பமாவதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்துவிடுவதற்கான சாத்தியம் தென்படுவதாக எச்சரித்…

    • 1 reply
    • 542 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.