உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26623 topics in this forum
-
லிபியாவில் நேட்டோ படை நடத்திய தாக்குதலில் அதிபர் கடாபியின் மகன், பேரன்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.லிபியாவில் ராணுவ புரட்சி மூலம் 1969ம் ஆண்டு ஆட்சியை பிடித்தவர் முகமது அல் கடாபி. 42 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த கடாபி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. எகிப்தில் மக்கள் புரட்சி ஏற்பட்டு அதிபர் ஹோஸ்னி முபாரக் விரட்டப்பட்டதும், லிபியாவில் மக்கள் தீவிரமாக போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் மீது ராணுவ டேங்க்குகள், விமானங்கள் மூலம் குண்டு வீசினார் கடாபி. இதற்கு உலக நாடுகள் விடுத்த கண்டனத்தையும் கடாபி கண்டுகொள்ளவில்லை. இதனால் லிபியா மீது நேட்டோ படை நடவடிக்கை எடுக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அனுமதியளித்தது. இதையடுத்து லிபியா மீது நேட்டோ படை கடந்த மாதம் முதல் வ…
-
- 0 replies
- 941 views
-
-
இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் கனேடியத் தலைவர்கள் கனடாவின் 42ஆவது பாராளுமன்றத் தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் கனடாவின் பிரதான கட்சிகள் இறுதிகட்ட வாக்கு வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள். கொண்சவேட்டிவ் கட்சியினை அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவைப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் அக்கட்சியின் தலைவர் காப்பர் ஞாயிறன்று இறுதிக்கட்டச் சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டிருக்கிறார். இன்று காலையில் ஸ்ராபோட் பகுதியிலிருந்து தனது இறுதிக்கட்டப் பிரச்சாரத்தினை ஆரம்பிக்கும் காப்பர் அங்கிருந்து ஒன்ராரியோவின் லண்டன் நோக்கிப் பயணிப்பார் எனத் தெரிகிறது. லிபரல் கட்சியினை விட புதிய சனநாயகக் கட்சியினருக்கான ஆதரவே அதிகமிருப்பதாக அண்மையில் வெளிவந்திருக்கும் கருத்துக்கணிப்பு தெரி…
-
- 2 replies
- 812 views
-
-
அமெரிக்க கனேடிய எல்லைகள் வழியாக கனடாவிற்குள் நுழையும் சட்டவிரோத குடியேற்ற வாசிகள் - விக்கிலீக்ஸ் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் நுழைவதற்கான தளமாகக் கனடாவினைப் பயன்படுத்துவதாக அமெரிக்க அரசியல்வாசிகள் நீண்ட பல காலமாகக் கருதுகின்ற போதும் உண்மை தலைகீழாகவே இருப்பதாக விக்கிலீக்ஸ் கூறுகிறது. அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் குடியேற்றவாசிகளே பின்னர் அங்கிருந்து கனடாவிற்குள் தப்பிச்செல்வதாகவும் பின்னர் அங்கு வன்கூவரில் தங்களைப் பதிந்துகொள்வதாகவும் விக்கிலிஸ் கூறுகிறது. இவ்வாறு பல ஆண்டுகளாக அமெரிக்காவில் தங்கியிருந்துவிட்டு கனடாவிற்குள் நுழையும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் பின்னர் தாங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்த உண்மையினை மறைத்தே…
-
- 0 replies
- 813 views
-
-
ஒன்ராரியோவினைத் தாக்கிய கடும் புயலைத் தொடர்ந்து 51,000 பேர் தொடர்ந்தும் இருளில் இந்தவாரத்தின் முற்பகுதியில் கனடாவின் ஒன்ராரியோ மற்றும் வின்னிபெக் பிராந்தியங்களைத் தாக்கிய கடுமையான புயலைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மின்சாரத்தினை மீளவும் பெற்றுக்கொடுப்பதற்கான செயற்பாடுகளில் துறைசார் அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் என்பன முழு வேகத்துடன் செயற்பட்டுவருகின்ற போதும் ஒன்ராரியோ பிராந்தியத்தில் இன்னமும் 51,000 பேர் தொடர்ந்தும் இருளிலேயே இருப்பதாகக் கூறுப்படுகிறது. திங்களன்று காலைக்குள் அனைவருக்கும் மீண்டும் மின்சாரத்தினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தாங்கள் செயலாற்றிவருவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள. …
-
- 0 replies
- 582 views
-
-
என்டிபி க்கு வாக்களித்து தமிழன் நன்றி மறப்பவன் அல்ல என்பதை எடுத்துக்காட்டுவோம். தமிழரும் மனிதர்கள் தான் வெர்கள் பிரச்சனைக்குத்தீர்வு வேண்டும் என்று தமிமர்கள் வீதியில் இறங்கிப்போராடியபோது ஆறுதல் வார்த்தை சொல்லவாவது வந்தவர்கள் என்டிபி மட்டுமே. அத்துடன் என்டிபியின் கூட்டு இல்லாமல் யாரும் இத்தடவை ஆட்சிக்கு வரமுடியாது. பக்சார்பின்றி நீதியாக செய்ல்படுபவர்கள். எனவே கூட்டாட்சியில் தமிழருக்கு எதிரான குரலுக்கு எதிர்க்குரல் கொடுப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் தேர்தல் பொழுது வாக்குகளை அபகரித்துக்கொள்ள கூக்குரல் இடும் சந்தர்ப்ப அரசியல்வாதிகள். ஜிம் கரிஜியானிஸ் ஒலு சில தமிழர்கள் சார்ந்தவரே. இவர் தமிழர் நலன்களில் அக்கறையுள்ளவர் போல் நடிப்பவர் என்பதையும் தமிழர்கள் உணரவேண்டும். ஒவ்வொரு…
-
- 0 replies
- 911 views
-
-
'புலி' என்றால் யார் ஒட்டோவாவின் வரவிலக்கணம் பரந்துபட்டதாம் என்கிறார் நீதியாளர். கடந்த ஆண்டு எம்.வி சண் சீ என்ற அகதிகள் கப்பல் ஊடாக 492 ஈழத் தமிழ் அகதிகள் கனடாவின் வன்கூவர் துறைமுகத்தினைச் சென்றடைந்தனர். இவர்களுக்கான கனேடியக் குடிவரவு மற்றும் அகதிகள் அவையினது வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றன. இந்தக் கப்பலில் பயணித்த இளைஞர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களே எனும் வகையில் கனேடிய அரச வழக்கறிஞர்கள் வாதிட்டு வருகிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு நெல் விற்பனை செய்த விவசாயி முதல் அவர்களது வாகனத் திருத்தகத்தில் பணியாற்றிய ஊழியன் வரை அனைவரும் புலியே என்கிறது கனேடிய அரசாங்கம். ஆனால் புலி என்றார் யார் என்ற அரசாங்கத்தின் விரவிலக்கணம் பரந்துப…
-
- 2 replies
- 818 views
-
-
ரொறன்ரோ நகர மேயர் காப்பருக்குத் தனது ஆதரவினைத் தெரிவித்தார் திங்களன்று நடைபெறவுள்ள தேர்தலில் கொண்சவேட்டிவ் தலைவர் ஸ்ரீபன் காப்பருக்கு ஆதரவு வழங்குவதற்கு ரொறன்ரோ நகர மேயர் றொப் வோட் தீர்மானித்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்னர், கொண்சவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளரும் தனது குடும்ப நண்பருமான ஜிம் பிளாஸ்லி அவர்களுக்கே தனது ஆதரவினை வழங்குவதாகவும் தேசியப் பிரசாரங்களுக்குத் தான் பங்களிப்புச்செய்யப் போவதில்லை என்றும் றொப் வோட் குறிப்பிட்டிருந்தார். ஆனால் தற்போது தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்ட இவர் கொண்சவேட் கட்சியின் தலைவரும் கனேடியப் பிரதமருமான காப்பருக்குத் தனது ஆதரவினை வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார். 'கடந்த 30 நாட்களாக இடம்பெற்றுவரும் தேர்த…
-
- 1 reply
- 828 views
-
-
அமெரிக்கத் தூதர் ராஜிநாமா ஏன்? அமெரிக்கத் தூதர் திமோதி ரோமர் ராஜிநாமா செய்திருப்பதற்கான காரணம் குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகியுள்ளன. இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் திமோதி ரோமர் ராஜிநாமா செய்யப் போவதாக வியாழக்கிழமை அறிவித்தார். தனது ராஜிநாமா கடிதத்தையும் வாஷிங்டனுக்கு அனுப்பி வைத்தார். சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் கூறியிருக்கும் நிலையில், இதற்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவுக்கு ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பிலான படை விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்ய முன்வந்த போயிங், லாக்ஹீட் -மார்ட்டின் ஆகிய இரு அமெரிக்க நிறுவனங்களின் விண்ணப்பங்கள் அண்மையில் நிராகரிக்கப்பட்டன. ஐரோப்பிய நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தத்தை வ…
-
- 0 replies
- 600 views
-
-
கும்பி காயுது நிபுணர் குழுக்கள் ஆராயுது ஏ.பாக்கியம் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தப்பித்தவறிகூட மக்களுக்கு நல்லதை செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் உருவாக்குவதில் கொடுக்கிற ஆலோசனைகளும் அறிவிப்புகளும் இதைத்தான் வெளிப்படுத்துகிறது. சோனியாகாந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக்குழு அளித்த பரிந்துரைகளை பிரதமர் நியமித்த ஆர்.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர்குழு ஏற்பது சிரமம் என்று கூறியுள்ளது. ஏதோ சோனியாகாந்தி மக்களுக்கு உணவளிக்க முயற்சி எடுப்பதாகவும் அதிகாரிகள் அதற்கு தடையாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்கள். இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. இரண்டு ஆப்பை இரண்டும் களண்ட ஆப்பை என்ற கிராமத்து சொலவடை போலத்தான…
-
- 0 replies
- 793 views
-
-
மொறொக்கோ குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களுள் இருவர் கனேடியர்கள் மொறொக்கோவின் மராக்கே கபேயில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 7 வெளிநாட்டவர்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களுள் இருவர் கனேடியர்கள். கொல்லப்பட்டவர்களுள் கனடா, பிரான்;ஸ், நெதர்லாந்து மற்றும் மொறொக்கோவைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது. தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என சர்வதேச பொலிஸ் நிறுவனமான இக்ரபோலினால் வரையறுக்கப்பட்டுள்ள மராக்கே கபேயில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 15 பேரில் இரண்டு கனேடியர்கள், இரண்டு பிரெஞ்சு நாட்டவர், ஒரு டச்சு நாட்டவர் மற்றும் இரு மொறொக்கோ குடிமக்கள் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் எவ்வாறு …
-
- 0 replies
- 516 views
-
-
பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேற் ஆகியோருக்கு கனடாவின் திருமணப் பரிசு பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேற் மிடில்ரன் ஆகியோருக்கான கனடாவின் திருமண நாள் பரிசாக கனேடியக் கரையோரத் துணைப் படையினருக்கு 50,000 டொலர்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. தமக்கான திருமணப் பரிசாக கனடா வழங்கும் தொகையினை யாருக்கு வழங்குவது என இந்தப் புதுமணத் தம்பதியினரே தீர்மானித்தனராம். அதற்கமைய இந்தப் பரிசுத்தொகை கனேடிய கரையோரத் துணைப் படையினருக்கு வழங்கப்படுகிறது. அனைத்துக் கனேடியர்களதும் சார்பாக இந்தப் பரிசுத்தொகை வழங்கப்படும் என இன்று விடுத்திருக்கும் செய்திக்குறிப்பில் கனேடியப் பிரதமர் ஸ்ரிபன் காப்பர் அறிவித்திருக்கிறார். கனேடியக் கரையோரத் துணைப் பட…
-
- 0 replies
- 650 views
-
-
Apr 29, 2011 / பகுதி: உலக வலம் / ஒபாமாவையும் ஹிலரி கிளிண்டனையும் கடாபியின் மகள் விமர்சித்ததால் பரபரப்பு லிபிய ஜனாதிபதி கடாபியின் மகள் ஆயிஷா கடாபி அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் , மற்றும் அந்நாட்டு இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டனையும் கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கூட்டுப்படைகளின் லியியா மீதான தாக்குதலைக் கண்டித்துள்ள அவர் ஒபாமா பதவிக்கு வந்த பிறகு என்ன சாதித்துள்ளார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஹிலரி கிளிண்டனின் குடும்ப வாழ்க்கையையும் ஆயிஷா விமர்சித்துளார். ஹிலரியின் கணவர் கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது வேறு ஒரு பெண்ணுடன் கொண்டிருந்த தொடர்பு அம்பலமாகியபோதிலும் ஏன் ஹிலரி அவரை விட்டு பிரியவில்லை எனவும் வினாவியுள்ளார…
-
- 2 replies
- 1k views
-
-
இங்கிலாந்து இளவரசர் திருமணத்திற்கு ஆடம்பர செலவு செய்து வீணப்படிதாக குற்றச்சாட்டு! இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் திருமணத்திற்கு ஆடம்பர செலவு செய்து வீணடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் கதே மிடில்டன் ஆகியோரது திருமணம் ஏப்ரல் 29ம் தேதி காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 3.30 மணி) லண்டனில் உள்ள பாரம்பரிய வெஸ்ட்மின்ஸ்டர் அபே எனும் தேவாலயத்தில் விமரிசையாக நடக்கிறது. திருமணத்தன்று லண்டனில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் "டிவி' மற்றும் இணையதளத்திலும் ஒளிபரப்பப்படுகிறது. இந்த திருமணத்தை படம் பிடிக்க சர்வதேச ஊடங்கள் அங்கு குவிந்துள்ளன. திருமணத்தையொட்டி மாநகரமே விழா கோலமாக காணப்படுகிறது. இந்த திருமணத்தில் கலந்து கொ…
-
- 4 replies
- 1.2k views
-
-
வியாழக்கிழமை, 28, ஏப்ரல் 2011 (23:29 IST) ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நாளை நடக்கிறது. அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் சுந்தர்ராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை, மாவட்ட குடும்ப நல செயலகம், மணலூர்பேட்டை அரிமா சங்கம், மதி அகாடமி ஆகியவை இணைந்து நாளை (29ம் தேதி) திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வாசெக்டமி எனப்படும் ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடத்துகிறது. திருக்கோவிலூர், முகையூர், ரிஷிவந்தியம், திருவெண்ணைநல்லூர், தியாகதுருகம், ஆகிய…
-
- 1 reply
- 981 views
-
-
Part 1 http://www.yarl.com/files/110426-puttaparthi-part1.mp3 Part 2 http://www.yarl.com/files/110426-puttaparthi-part2.mp3
-
- 10 replies
- 4.1k views
-
-
நாளை நடைபெற உள்ள பி்ரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் - கேத் மிடில்டன் திருமணத்திற்கு, நீலமணிக்கல் பொருத்தப்பட்ட ஹேர் பின்னை பரிசாக வழங்குகிறது இலங்கை. இதுதொடர்பாக, இலங்கை ஜெம் அண்ட் ஜீவல்லரி அத்தாரிட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல தலைமுறைகளாக, பிரிட்டிஷ் ராஜகுடும்பத்தினரை தாங்கள் கவுரவித்து வருவவதாகவும், அதன்படியே தற்போதும் இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. கேத் மிடில்டன், ஏற்கனவே, தான் அணிந்துள்ள நிச்சயதார்த்த மோதிரத்தில் தங்கள் நாட்டின் நீலமணிக்கல் உள்ளது. நீலமணிக்கல் பொருத்தப்பட்ட ஹேர்பின், கேத் மிடில்டனிற்கு அனுப்பப்பட்டு விட்டதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலக்கல் ஹேர்பின் படம் பார்க்க.... http://ww…
-
- 0 replies
- 989 views
-
-
வரும் 2020-ம் ஆண்டுக்குள் 60 டன் எடையில் மிகப்பெரிய விண்வெளி ஆய்வுக்கூடத்தை விண்ணில் நிறுவ சீனா தயாராகி வருகிறது. இதற்கான மாதிரி சோதனைக்கூடம் ஒப்புதலை பெற்றுள்ள நிலையில், அடுத்தகட்ட பணிகள் தொடங்கியுள்ளன. புதிய சோதனைக்கூடத்துக்கான பெயரை பரிந்துரைக்க வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய சோதனைக்கூடத்தை விண்வெளியில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் மும்முரம் அடைந்து வருகிறது. இதன் முதல் முயற்சியாக பொருட்களை சுமந்து செல்லும் கார்கோ விண்கலம் தயார் நிலையில் உள்ளது. விண்ணில் ஆய்வுக்கூடத்தை நிறுவ தேவையான பொருட்களை இது சுமந்து செல்லும். 18.1 மீட்டர் நீளமும் 4.2 மீட்டர் விட்டமும் 20 முதல் 22 டன் எடை கொண்ட முதல் மாதிரி ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு செய…
-
- 0 replies
- 697 views
-
-
அமெரிக்காவில் 2012ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அடுத்த தேர்தலில் ஒபாமாவை வீழ்த்துவதற்கான நடவடிக்கையில், இப்போதே இறங்கியுள்ளார் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு ட்ரம்ப். ஒபாமா அமெரிக்காவில் பிறந்தாரா என்பதே சந்தேகமாக உள்ளது. ஒபாமாவின் பிறப்பு சான்றிதழ் போலியானது. அமெரிக்காவில் பிறந்தார் என்பதை ஒபாமா ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்றார் டொனால்டு ட்ராம்ப். ஒபாமாவின் தந்தை கென்யாவை சேர்ந்தவர் என்பதாலும், சிறுவயதில் ஒபாமா இந்தோனேஷியாவில் வளர்ந்தவர் என்ற பின்னணியை வைத்தும் இந்த சர்ச்சை கிளப்பப்பட்டது. இதையடுத்து ஹவாய் மாநிலத்தில் பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழை, தனது வெப்சைட்டில் வெளியிட்டுள்ளார் ஒபாமா. அதில் ஒபாமாவின் தாய் மற்றும் ஹவாய் மாநில அதிகாரிகளின் …
-
- 0 replies
- 636 views
-
-
A நைல் நதிக்கரையை ஒட்டியுள்ள லக்சர் என்ற இடத்தின் தென்பகுதியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 42 அடி உயரம் கொண்ட 3-ம் அமென்ஹோடெப் மன்னரின் மிகப்பெரிய சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் தொடர் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு மேலும் பல அரிய பொருட்கள் மற்றும் தகவல்கள் கிடைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள் .கண்டெடுக்கப்பட்டுள்ள மன்னரின் சிலை 7 தனித்தனி கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி மட்டும் தேடப்பட்டு வருகிறது. 1970-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போதே இந்த சிலை இருப்பது தெரியவந்தது. ஆனால், முழுமையாக எடுக்கும் முன்பு மீண்டும் புதையுண்டது. தற்போது அதை முழுமையாக தோண்டி எடுக்கும் பணி நடந்த…
-
- 0 replies
- 867 views
-
-
உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடு என்ற அந்தஸ்தை அமெரிக்கா இன்னும் 5 ஆண்டுகளில் இழக்கிறது. 2016ம் ஆண்டில் அமெரிக்கப் பொருளாதார நிலையைக் காட்டிலும் சீனாவின் பொருளாதாரம் உயர்ந்து இருக்கும் என சர்வதேச நிதியம் மதிப்பிட்டுள்ளது. 2012ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் தனது 4 ஆண்டு கால பதவி முடிவில் அமெரிக்கப் பொருளாதாரம் சீனாவுக்கு அடுத்த நிலையில் வந்து இருக்கும் நிலையை காண்பார். வாஷிங்டனை மையமாகக் கொண்ட சர்வதேச நிதியத்தின் மதிப்பீட்டை அரசியல் தலைவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஏனெனில் பெய்ஜிங் தொழில்நுட்பம் அமெரிக்காவைக் காட்டிலும் பின்தங்கியே உள்ளது. சீனாவில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் வறுமையில் உள்ள…
-
- 0 replies
- 770 views
-
-
அமெரிக்கா அலபாமா மாநிலத்தில் சூறாவளி இதுவரை 160 உயிரிழப்பு http://edition.cnn.com/2011/US/04/28/severe.weather/index.html?hpt=T1
-
- 1 reply
- 854 views
-
-
http://www.yarl.com/files/110426-arulelilan.mp3
-
- 0 replies
- 1.4k views
-
-
மீனவர் படுகொலை.. அம்பலமாக்கும் சீமான் "தேர்தலுக்காகவே திட்டமிட்டு மறைத்தார்கள்!” உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள வெறியர்கள், தமிழக மீனவர்கள் நால்வரைக் கொடூரமாகக் கொன்றுபோட்டார்கள். தமிழகத்தையே உலுக்கிய அந்த ‘வினையாட்டு’ விவகாரம் அரசியல் தலைவர்களின் துக்க விசாரிப்புகளோடு அமுங்கிவிட்டது. இந்த நிலையில், படுகொலையான மீனவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு வந்த சீமான், ”மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், மத்திய – மாநில அரசுகள் தமிழகத் தேர்தலை மனதில் வைத்து விளையாடிவிட்டன!” எனத் திகீர் கிளப்புகிறார். ”கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஈழக் கோரத்தைத் தடுக்கக் கோரி தமிழகத்தில் தம்பி மு…
-
- 0 replies
- 665 views
-
-
ஜி ஸ்பெக்ட்ரம்: இன்று சிபிஐ 2வது குற்றப் பத்திரிகை; தயாளு அம்மாள்-கனிமொழி பெயர்கள் இடம் பெறுமா? டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் சிபிஐ இன்று தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமார் ரெட்டி ஆகியோரின் பெயர்களும் இடம் பெறும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு இது பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மத்திய அரசில் இருந்து திமுக தனது அமைச்சர்களை வாபஸ் பெறவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. முறைக…
-
- 7 replies
- 1.4k views
-
-
பொலிசார் தொடர்பான நம்பிக்கை கனேடியர்கள் மத்தியில் அதிகம் பெரும்பான்மையான கனேடியர்கள் கனேடியப் பொலிசாரை வரவேற்கினறனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. ஆனால் நாட்டின் இரு பிராந்தியங்களில் பொலிசாருக்கு நல்ல பெயில்லை. கடந்த வருடம் நடாத்தப்பட்ட ஒரு ஆய்வில் 84 வீதமான மக்கள் கனேடியப் பொலிசாரில் நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிவித்த அதேவேளையில் பிரிட்டிஸ்கொலம்பியா மற்றும் யுகொன் ஆகிய இடங்களில் 73 வீதமாகவும் 69 வீதமாகவுமே இது இருந்தது. தலைநகரிலும் சராசரியாக பொலிசாருக்கு ஆதரவு தெரிவித்தோர் வீதத்தைவிடக் குறைவாக இருந்தது. அந்த இடங்களில் அவ்வாறு குறைவாக இருந்தமை ஒன்று ஆச்சரியமானதல்ல என முன்னாள் பொலிஸ் அதிகாரியும் குற்றவியலாளருமான றொப் கோர்டன் தெரிவித்தார். …
-
- 0 replies
- 828 views
-