உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
அமெரிக்காவுடன் இணையுமாறு கனடாவுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கும் ட்ரம்ப்! கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ இராஜினாமா செய்து பதவி விலகிய போது அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா ஏன் மாறக்கூடாது என ட்ரம்ப் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் கனடா பிரதமர் பதவி விலகல் குறித்து கருத்து பதிவிட்ட ட்ரம்ப், கனடாவில் உள்ள பலர் தங்கள் நாடு அமெரிக்காவின் 51வது மாகாணமாக இருப்பதை விரும்புகிறார்கள். கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறைய சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம்.இனி அப்படி எல்லாம் வழங்க முடியாது. ஜஸ்டின் ட்ரூடோ இதை அறிந்திருந்தார், ராஜினாமா செய்தார். கனடா அமெரிக்…
-
- 0 replies
- 188 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. - அகதிகளை துரத்திவிடுவது பலன் தராது என்கிறது ஐநா அகதிகள் அமைப்பு. பெண் குடியேறிகள் நிலவரம் குறித்தும் கவலை. - பத்து ஆண்டுகள் கொடூரத்துக்கு வழி செய்த சீன கலாச்சார புரட்சியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு. ஆனால், சீன ஊடகங்கள் பெருத்த மௌனம். - ருவண்டாவின் கொரில்லாக்களுக்கு பெரும் மவுசு. வடபகுதி மலைக் கொரில்லாக்களை பார்க்க வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
-
- 0 replies
- 569 views
-
-
ஊரடங்கின் மூலம் ஒற்றுமையை நிலைநாட்டி, தனது செயல்பாடுகள் மூலம் உலக தலைவர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளார் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல். ஏஞ்சலா மெர்கெல் கொரோனா தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மாகாண கவர்னர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே முடிவு எடுத்தார்.நோய் தடுப்பு பணியில் மாகாண கவர்னர்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்தார். அதுவே மெர்கலின் நிர்வாகத்திறமைக்கு சரியான எடுத்துகாட்டு. நாட்டை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்பதை தனது ஒவ்வொரு பேட்டியிலும் மக்களிடம் உணர்த்தினார். எதிர்கட்சிகளை சேர்ந்த மாகாண கவர்னர்களும் மெர்கலின் பேச்சை ஏற்றுக்கொண்டு செயலாற்றினர். அமெரிக்காவை போலவே ஜெர்மனியும் விரைவில் அதிபர் தேர்தலை சந்திக்க உள்ளது. ஆனாலும் தேர்தலையும், தங…
-
- 3 replies
- 662 views
-
-
பிரேசிலில் வீசிய பலத்த காற்றில் சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்தது! 16 Dec, 2025 | 11:02 AM பிரேசிலின், குவைபாவில் வீசிய பலத்த காற்று காரணமாக சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிரேசில் நேரப்படி பிற்பகல் 3மணியளவில் மணிக்கு 90 கிலேமீற்றர் வேகத்தில் வீசிய கடுமையான காற்று மற்றும் புயல் காரணமாக குவைபா நகரில் உள்ள 'ஹவன்' சில்லறை விற்பனைக் கடையின் முன் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய சுதந்திர தேவி சிலை திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சிலை சரிந…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
2030ஆம் ஆண்டளவில் சீனாவின் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதார நிலையை விட முன்னேற்றம் காண்பதுடன், வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆசியாவின் பொருளாதார ஆதிக்கம் உயர்வடைந்து காணப்படுமென அமெரிக்காவின் புலனாய்வு பிரிவின் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் பொருளாதார நிலை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியான நிலையிலேயே காணப்படுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. '2030இல் சர்வதேச பொருளாதாரத்தின் போக்கு' என பெயரிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, இதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் 'மதிநுட்பமாக சிந்திப்பது – எதிர்காலத்தை எதிர்வுகூறுவதை தவிர்ப்பது' குறித்த வி…
-
- 2 replies
- 729 views
-
-
டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் கொடூரக் கொலையால் இதயம் படைத்த அத்தனை பேரும் பதறிப் போய் நிற்கும் நிலையில் இலங்கையர்கள் நமது நண்பர்கள், பார்ட்னர்கள், பங்காளிகள் என்று மனிதாபிமானம் சற்றும் இல்லாமல் கருத்து தெரிவித்துள்ளார் மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித். ராஜபக்சே கும்பல் என்ன செய்தாலும் அதை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது என்பதை கொள்கையாகவே வைத்துக் கொண்டுள்ளது இந்தியா. ஆனால் மிகக் கொடூரமான கோரக் கொலைகளையும் கூட அது கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் அதிர்ச்சியாக உள்ளது. லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது குறித்த புகைப்படங்கள் உள்ளிட்டவை வெளியானபோதும் கூட இந்தியா அதைக் கண்டுகொள்ளவில்லை. இலங்கை நமத…
-
- 3 replies
- 700 views
-
-
கொலைப்பட்டியலை வெளியிட்டது அல்கைதா! "இஸ்லாத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததற்காக உயிருடனோ பிணமாகவோ தேவை" என்ற தலைப்பில், அல் கொய்தா இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் பலரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட இந்த இணையதள இதழை வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள "மிடில் ஈஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டியுட்" என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2001 செப்டம்பர் 11-இல் அமெரிக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தில் குரானின் பிரதியை எரித்த பாஸ்டர் ஜான் டெர்ரி, அமெரிக்காவின் கேலி சித்திர ஓவியர் மொல்லி நோரிஸ், சோமாலிய நாட்டைச் சேர்ந்த பெண்ணியவாதியான அயான் ஹிர்சி அலி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இதில் படங்களுடன் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றன. …
-
- 0 replies
- 436 views
-
-
இலங்கையில் தமிழீழம் அமைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் உதவித்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் காங்கிரஸ் தரப்பு உறுப்பினர்கள் ராகுல் காந்தியை சந்தித்து இலங்கை தமிழர் விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்கள் பக்கமே இந்தியா இருக்கிறது. அவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம். எனினும் அந்த தீர்வு தனி ஈழமாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை புதுடில்லியில் நாளை நடைபெறவுள்ள தமிழீழு ஆதரவாளர் டெசோ மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பது தொடர்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும், அதன் பின்னர் இது குறித்த இறுதி தீர்மானத…
-
- 5 replies
- 2.3k views
-
-
ஆயிரக்கணகான டொரண்டோ நகர மக்கள் கடந்த 19 மணி நேரங்களாக மின்சாரம் தடைபட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். Don Mills Road and Eglinton Avenue East என்ற பகுதியில் உள்ள 10அபார்ட்மெண்ட் குடியிருப்புகளில் தொடர்ச்சியாக கடந்த 19 மணிநேரமாகமின்சாரம் இல்லை. வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியில் இருந்து மின்சாரம்தடைப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் கஷ்டத்தில் உள்ளனர். அந்தபகுதியில் மீண்டும் மின்சாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர டொரண்டோ மின்சாரஊழியர்கள் இரவுபகலாக வேலை பார்த்து வருகின்றனர். அந்த பகுதியில் வாழும் Ted Bradley என்பவர் அளித்த பேட்டி ஒன்றில் நான் ஒருமாதத்திற்கு தேவையான உணவு மற்றும் காய்கறி பழங்கள் போன்றவற்றை வாங்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாத…
-
- 8 replies
- 789 views
-
-
-
- 1 reply
- 988 views
-
-
லோக்சபா தேர்தல்: அதிமுக விரித்த "ஈழம்' வலை- சிக்கிய கட்சிகள்! உருவாகும் புதிய கூட்டணி! Posted by: Mathi Published: Monday, April 1, 2013, 11:32 [iST] சென்னை: தமிழக சட்டசபையில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உலகத் தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதிமுகவுக்கு மட்டுமே தெரியும் அது லோக்சபா தேர்தலுக்கு விரிக்கப்பட்ட 'கூட்டணி' வலை என்பது! லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களத்தில் அணி சேர்க்கையும் ஒரு ஒழுங்குக்கு வந்து கொண்டிருக்கிறது. இலங்கை விவகாரத்தில் இனியும் காங்கிரஸ் கட்சியுடன் கரம் கோர்த்துக் கொண்டிருந்தால் லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்தே ஒருவழியாக ஐக்கிய முற…
-
- 2 replies
- 1k views
-
-
ஃபுளோரிடா தாக்குதல் தொடர்பாக முன்னாள் படை வீரர் மீது வழக்குப்பதிவு வெள்ளியன்று ஃபோர்ட் லோடர்டேல் விமான நிலையத்தில் ஐந்து பேரை கொன்றதாக போர் வீரர் ஒருவர் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். எஸ்டீபன் சாண்டியாகோ எஸ்டீபன் சாண்டியாகோ துப்பாக்கிச்சூட்டில் கொலை மற்றும் காயம் ஏற்படுத்தியதாக நிருபிக்கப்பட்டால் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். அதிகாரிகள் இந்த தாக்குதல் குறித்து பல கேள்விகளை சந்தித்து வருகின்றனர் நவம்பரில் அலாஸ்காவில் உள்ள எஃப்பிஐ அலுவலகத்திற்கு வந்த சாண்டியாகோவிற்கு மனநல மதிப்பீடு பரிந்துரைக்கப்பட்டதாக எஃப்பிஐ ஒப்புக் கொண்டுள்ளது. அந்த மதிப்பீட்டிற்க…
-
- 0 replies
- 223 views
-
-
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதிக்கு மூன்று வருட சிறைத் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு! ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சார்க்கோசி குற்றவாளியென நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. இந்நிலையில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இரண்டு வருட தண்டனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சார்க்கோசிக்கு வழங்கப்பட்ட தண்டனையின் ஒரு வருடத்தை சிறையில் கழிக்கத் தேவையில்லை என்றும், வீட்டில் இருந்தவாறே ஒரு மின்னணு வளையலை அணிந்து தண்டனையை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 முதல் 2012 வரை ஜனாதிபதியாக இருந்த சார்க்கோசி, தேர்தல் பிரசார நிதிப் பயன்பாடு…
-
- 0 replies
- 289 views
-
-
ரத்தம் உறைதலுக்கும்.. தடுப்பூசிக்கும், எந்தத் தொடர்பும் இல்லை – அஸ்ட்ராசெனகா நிறுவனம் ஒஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில் சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ரத்தம் உறைதலுக்கும் தங்களின் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அஸ்ட்ராசெனகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஒஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட டென்மார்க்கைச் சேர்ந்த ஒருவர் வெய்ன் த்ராம்போசிஸ் எனப்படும் நரம்பில் ரத்தம் உறைந்து உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, நோர்வே, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, ஜேர்மன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ராசெனகா ஊசி போடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தன. …
-
- 0 replies
- 331 views
-
-
பிரித்தானியாவில் காரணமின்றி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் எவருக்கும் 5,000 பவுண்டுகள் அபராதம்! புதிய கொரோனா வைரஸ் சட்டங்களின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவில் காரணமின்றி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் எவருக்கும் 5,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கும் சட்டம், அடுத்த வாரம் நடைமுறைக்கு வர உள்ளது. இன்று (திங்கட்கிழமை) வீட்டில் தங்கும் விதி முடிவடைகின்ற போதிலும், வெளிநாட்டு விடுமுறைகள் தற்போது அனுமதிக்கப்படவில்லை. கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான தற்போதைய திட்டத்தின் கீழ், பிரித்தானியாவில் மக்கள் விடுமுறைக்கு வெளிநாடு செல்லக்கூடிய ஆரம்ப திகதி மே 17 ஆகும். இருப்பினும், ஐரோப்பாவில் கொவிட் நிகழ்வுகளின் மற்றொரு எழுச்சி, ஐரோப்பா முழுவதும் தடுப்பூசிகளின் மெதுவான வெளியீடு ஆக…
-
- 0 replies
- 430 views
-
-
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை மீது தலிபான்கள் தாக்குதல் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையின் மீது இன்று (25) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலிபான் ஆயுததாரிகள் ஆப்கானிஸ்தான் நேரப்படி இன்று காலை 6.30 மணியளவில் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி மாளிகை பாதுகாப்பு படையினர் மற்றும் மாளிகைக்கு அருகிலுள்ள கட்டடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியின் பாதுகாவலர்களுடன் தீவிரவாதிகள் மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் அமெரிக்க உளவுப் பிரிவான சீ.ஐ.ஏ வின் காரியாலயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.adaderana.lk/tamil/news.php?nid=40817
-
- 4 replies
- 658 views
-
-
இஸ்லாமிய மதத் தலைவர் அபு குவாட்டா நாடு கடத்தப்பட்டார் 07 ஜூலை 2013 இஸ்லாமிய மதத் தலைவர் அபு குவாட்டா பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளுக்காக குவாட்டா ஜோர்தானுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். அடிப்படைவாத இஸ்லாமிய மதத் தலைவராக அபு குவாட்டா கருதப்படுகின்றார். கடந்த 20 ஆண்டுகளாக அபு குவாட்டா தனது சொந்த நாடான ஜோர்தானுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையை பிரித்தானிய மக்கள் வரவேற்பார்கள் என உள்துறை செயலாளர் திரேஸியா மே தெரிவித்துள்ளார். குறித்த மதத் தலைவர் மிகவும் ஆபத்தானவர் எனவும், சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டமை ஓர் வெற்றியாகவே கருதப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அபு குவாட…
-
- 0 replies
- 407 views
-
-
"ஈழத்தில் தமிழின அழிப்பில் ஈடுபட்ட, துணைநின்ற இனப்பகைவர்களை அடையாளம் காண்போம்!" என்ற தலைப்பில் பா.ம.க ராமதாசின் வன்னிய சொந்தங்களுக்காக நடத்தப்படும் தமிழ்ப் படைப்பாளிகள் இயக்கம் 10.06.2009 புதனன்று சென்னை அண்ணா கலையரங்கத்தில் ஒரு மாலை நேரக் கருத்தரங்கை நடத்தியது. மாபெரும் கருத்தரங்கமென்றாலும் உள்ளே சுமார் 250 தலைகளே இருந்தன. ஓவியர் வீர.சந்தானம் தலைமை வகிக்க, புதுவை செயமூர்த்தி என்ன பிழை செய்தோமென்ற பாடலைப் பாட கவிஞர் ஜெயபாஸ்கரன், கவிஞர் பச்சியப்பன் கவிதை வாசிக்க கருத்தரங்கம் தொடங்கியது. யார் யார் என்ன தலைப்பில் பேசினார்கள் என்பதை அந்த அழைப்பிதழில் உள்ளபடியே கீழே தருகிறோம் தமிழகச் சக்திகள்- அய்யா பழ.நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு இந்திய அரசின் நிலைப்பா…
-
- 8 replies
- 3.1k views
-
-
உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தமது பதவிக் காலத்தில் சர்ச்சைக்குரிய பாரபட்சமான தீர்ப்புகளை வழங்கியிருப்பதை மாற்றி தற்போதைய தலைமை நீதிபதி சதாசிவம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருவது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த அல்டமாஸ் கபீர் அண்மையில் ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த சதாசிவம் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவர் தொடர்ந்தும் நீதித்துறை நேர்மை பற்றி விரிவாக பேசி வரும் நிலையில் அல்டமாஸ் கபீர் தமது பதவி காலத்தில் பாரபட்சமாக நடந்து கொண்ட வழக்குகளில் புதிய உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொழிலதிபர்களுக்கு ஆதரவு ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்குகளை உச்சநீ…
-
- 0 replies
- 388 views
-
-
சிறுவயதினர் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை தடுக்கும்வகையில் அமெரிக்க புலனாய்வுத்துறை சென்ற வார இறுதியில் நாடு முழுவதும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது. சமூக ஊடக தளங்களில் இது போன்ற விபச்சாரங்கள் நடைபெறுவதும், நெடுந்தொலைவு பயணங்களில் டிரக்குகள் நிறுத்தப்படும் இடங்களில் நடைபெறும் இத்தகைய காரியங்களும் சோதனையாளர்களால் கண்காணிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மூன்று தினங்களாக 230 சட்ட அமலாக்கப்பிரிவினர் 76 நகரங்களில் நடத்திய இந்த சோதனைகளில், 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 105 இள வயதினர் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள். குழந்தை விபச்சாரம் அமெரிக்கா முழுவதும் உள்ள ஒரு தொடர் அச்சுறுத்தலாகும். இ…
-
- 0 replies
- 315 views
-
-
கரீபியன் நாட்டின் தலைநகருக்கு வெளியே தனது தனியார் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது ஹைட்டிய ஜனாதிபதி ஜோவெனல் மோஸ் ஒரு ஆயுதமேந்திய தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார் என்று நாட்டின் செயல் பிரதமர் புதன்கிழமை தெரிவித்தார். முதல் பெண்மணி மார்ட்டின் மோஸும் அதிகாலை வன்முறையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் தெரிவித்துள்ளார். https://www.nydailynews.com/news/world/ny-haitian-president-jovenel-moise-killed-attack-home-20210707-q4dxxwwmnvfftp5atncwsterzm-story.html#nt=pf-double%20chain~top-version1~flex%20feature~curated~haiti-703a~Q4DXXWWMNVFFTP5ATNCWSTERZM~1~1~3~7~art%20yes ஹைட்டிய ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் புத…
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-
-
அணு ஆயுதங்களில் பயன்படுத்தும் அளவிற்கு யுரேனியத்தை எங்களால் செறிவூட்ட முடியும்: ஈரான்! அணு ஆயுதங்களில் எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கேற்ப யுரேனியத்தை தங்களால் 90 சதவீதம் வரை செறிவூட்ட முடியும் என ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி, எதிர்வரும் தனது ஆட்சியில் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்கலாம் என்று வல்லரசு நாடுகளை எச்சரிக்கும் வகையில் ஹஸன் ரௌஹானி இந்த கருத்து அமைந்துள்ளது. நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துதெரிவித்த ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி, “ஈரான் நினைத்தால், அணு ஆயுதங்களில் பயன்படுத்தும் அளவிற்கு 90 சதவீதத்துக்கும் மேல் யுரேனியம…
-
- 0 replies
- 230 views
-
-
சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற பஸ் பள்ளத்தில் சரிந்து விபத்து ஏற்பட்டதில் 23 பேர் பலியானதோடு, 11 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கியிலுள்ள சுற்றுலாத்தளமான மர்மாரிஸ் மலைப்பிரதேசத்தில் நேற்று சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த பஸ் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வீதியின் ஓரத்திலிருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 23 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகினர். மேலும், விபத்து குறித்து தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பஸ்ஸின் பிரேக் பகுதியில் ஏற்பட்ட திடீர் கோளாறுதான் விபத்திற்கான ம…
-
- 0 replies
- 345 views
-
-
புதுக்கோட்டை: இலங்கையில் தமிழர்கள் மிகவும் துயரப்படவில்லை.. நன்றாகவே வாழ்கின்றனர் என்று மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அருகே மிரட்டுநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுதர்சன நாச்சியப்பன், கச்சத்தீவில் இந்தியா - இலங்கை இணைந்து தொழில் மையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கச்சத்தீவை இந்தியா கேட்டு பெறும் பட்சத்தில் இந்தியாவின் அனுபவத்தில் உள்ள இலங்கையின் ஆழ்கடல் பகுதியை நாம் இழக்க நேரிடும். இலங்கையில் தமிழர்கள் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வாழவைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை சென்று வர விரும்புகிறார். இலங்கையில் தமிழர்கள் துயரப்படவில்லை. நன்றாகவே வாழ்கிறார்கள். அதே போல தமிழக மீனவர்கள் மீது கடந்த 4 ஆண்டுகளாக இலங்…
-
- 7 replies
- 814 views
-
-
மாவோயிஸ்டுகள் திரவ ரசாயன ஆயுதங்கள் மூலம் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக ஜார்க்கண்ட் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிஷா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்குவங்கம், பீகார், அசாம் என பல மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் கை ஓங்கி இருக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக பழங்குடி இன மக்கள் ஆதரவுடன் தாக்குதல் நடத்தி வருகின்றனர் மாவோயிஸ்டுகள். இம்மாநிலங்களின் மலைகளும் வனப்பகுதியும் பழங்குடி மக்களும்தான் மாவோயிஸ்டுகளுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றன. மாவோயிஸ்டுகள் நவீன ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றிருப்பது பலமுறை வெளிச்சத்துக்கு வந்தது . தற்போது அவர்களிடம் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக ஜார்க்கண்ட் மாநில போலீஸ் செய்தித் …
-
- 2 replies
- 526 views
-