Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பொஸ்னிய போர்க்குற்றவாளி சேர்பியாவின் வடபகுதியில் கைது பொஸ்னியாவில் இடம்பெற்ற படுகொலைகளில் நெருங்கிய தொடர்புடையவரும், போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவருமான ஜெனரல் Ratko Mladic சேர்பியாவின் வடபகுதியில் இன்று (26.05.11) கைது செய்யப்பட்டுள்ளார். நீண்டகாலமாக தலைமறைவாக வாழ்ந்து வந்த இவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சேர்பிய ஜனாதிபதி Boris Tadic உறுதிப்படுத்தியுள்ளார். 1995ஆம் ஆண்டு Srebrenicaவில் இடம்பெற்ற மிகப்பெரிய மனிதப்படுகொலையில் இவர் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இதன்போது சுமார் 7,500 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொஸ்னிய போர்க்குற்றங்கள் தொடர்பில் 2008ஆம் ஆண்டு, Radov…

    • 4 replies
    • 658 views
  2. சிறைப் பறவைக்குத் துணையாக... ''மூன்று முறை தோல்விகளுக்குப் பிறகு வெற்றி பெற்று அமைச்சரான மரியம்பிச்சையை, சட்டசபைக்குள் காலடிவைப்பதற்கு முன்பே காலன் அழைத்துக்​கொண்டானே...'' என்றபடியே 'உச்’ கொட்டி அமர்ந்த கழுகாரிடம், ''புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு விழாவுக்குப் போயிருந்தீரா?'' என்றோம். ''புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே திங்கள்கிழமை அதிகாலையில் மந்திரி மரியம்பிச்சையின் மரணச் செய்தி வந்தது. அந்த நியூஸ் ஜெ-வுக்கு சொல்லப்பட்டதும் ஏகத்துக்கும் அப்செட். சும்மாவே நல்லது கெட்டது பார்த்துதான் எல்லாமே செய்வார். முதல் நாள் சட்டசபைக்குச் செல்லும் நாளில் இப்படி ஒரு செய்தி வந்தால் எப்படி இருக்கும்? 'சட்டசபையில் பதவி ஏற்பு நடக்குமா?’ என்று பேச்சுகள் கிளம…

    • 0 replies
    • 872 views
  3. சென்னை காவல்துறைக்கு இன்று இ-மெயில் மூலம் மர்ம கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் ’’இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அனைத்தையும் குண்டு வைத்து தகர்ப்போ’’ என்ற மிரட்டல் வாசகங்கள் இருந்தன. இந்த கடிதத்தின் நகல் மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கடிதம் தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு, சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நக்கீரன்.

  4. பா‌கி‌ஸ்தா‌ன் செ‌ன்றா‌ர் ‌ஹ‌ி‌ல்லா‌ரி ‌கி‌ளி‌ண்ட‌ன் வெள்ளி, 27 மே 2011( 09:33 IST ) அமெ‌ரி‌க்கா அயலுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் ஹ‌ி‌ல்லா‌ரி ‌கி‌‌ளி‌ண்ட‌ன் இ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் செ‌ன்றா‌ர். இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் அமை‌ச்ச‌ர்க‌ள், அ‌திகா‌ரிகள‌் ச‌ந்‌தி‌த்து ஹ‌ி‌ல்லா‌ரி பேச உ‌ள்ளா‌ர். அ‌ல் கா‌ய்தா இய‌க்க‌த் தலைவ‌ர் ஒசாமா ‌பி‌ன்லேட‌ன் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌பி‌ன்ன‌ர் முத‌ன் முறையாக ஹ‌ி‌ல்லா‌ரி ‌கி‌ளி‌ண்ட‌ன் பா‌கி‌ஸ்தா‌ன் செ‌‌ன்று‌ள்ளா‌ர். ‌பி‌ன்லேட‌ன் கொலை‌யி‌ல் அமெ‌ரி‌க்கா - பா‌கி‌ஸ்தா‌ன் உற‌வி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌வி‌ரிசலை ச‌ரி செ‌ய்ய ஹ‌ி‌ல்லா‌ரி முய‌ற்‌சி மே‌ற்கொ‌ள்வா‌ர் எ‌ன்று தெ‌ரி‌கிறது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1105/27/…

    • 1 reply
    • 479 views
  5. நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். கடந்த 13ந் தேதி முதல் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து மாறி 7 வது மாடியில் உள்ள தனி வார்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது மேல்சிகிச்சைக்காக மனைவி, மகள் மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோருடன் இன்று (27.05.2011) இரவு 11 மணிக்கு மேல் ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்கிறார். ராமச்சந்திரா மருத்துவனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக ரஜினியை அழைத்து செல்கிறார்கள். அந்த ஆம்புலன்ஸ் விமானத்தின் அருகே செல்லும் வகையில் சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறார்கள். இதனால் ர…

  6. இலங்கை அரசின் போர்க்குற்றங்களை வெளியிட்ட சனல்-4 தொலைக்காட்சிக்கு சிறந்த செய்திக்கான விருது! இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்ட சனல் - 4 செய்திச்சேவைக்கு சர்வதேச மன்னிப்புச் சபையின் சிறந்த தொலைக்காட்சி செய்திக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைவரம் தொடர்பாக விரிவான - சிறந்த - செய்தியை தொகுத்தளித்த சனல் - 4 செய்திச்சேவைக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்களுக்கு: http://www.channel4.com/news/channel-4-news-awarded-by-amnesty-for-third-year-running

  7. தமிழக அரசு சர்வதேச கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டதல்ல.. இந்தியா மீதான அழுத்தங்கள் தொடரும்… செயற்பாட்டு ரீதியான விடையை தரவேண்டிய நிலையில் சோனியா அரசு.. இன்று அதிகாலை பிரிட்டனில் இருந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிரான்ஸ் புறப்படுகிறார். பிரான்சில் இன்று நடைபெறும் ஜி-8 நாடுகளின் விசேட மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். பிரிட்டனுடன் அவர் போராடிப் பெற்ற உடன்பாடுகளுடன் இன்று ஜி – 8 நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார். இந்தச் சந்திப்பில் முக்கியமாகப் பேசப்படப்போவது மூன்று விடயங்கள். 1. லிபிய விவகாரம் 2. ஜப்பானில் ஏற்பட்ட அணு உலைக்கசிவு, மற்றும் வறிய நாடுகளின் அணு ஆயுதங்கள் மீதான பாதுகாப்பு 3. உலகப் பொருளாதாரம். இதற்குள் நேற்று மாலை கையெழுத்தான உலக ஜனநாயக மறுமலர்…

    • 3 replies
    • 858 views
  8. தமிழகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு, மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், ‘’காங்கிரஸ் கட்சியின் தமிழர் விரோதப் போக்கை மக்களிடம் கொண்டு சேர்த்து, அக்கட்சியின் முகத்திரையை கிழித்ததில் நாம் தமிழர் கட்சிக்கும், உங்களுக்கும் உள்ள பங்கை யாரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் புரிந்த ராஜபக்சே மற்றும் ராணுவ அதிகாரிகள் போர்க்குற்றவாளிகளே என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தாங்களும் நாம் தமிழர் கட்சியும் முயற்சி எடுப்பீ…

  9. ஜெகத் கஸ்பார் ஊழல் வழக்கில் மாட்டுவாரா? Posted by சங்கீதா on 26/05/2011 in பிரதான செய்தி | 0 Comment (செய்தி தொகுப்பு – இளந்தி -26/05/2011) கனிமொழியை திகார் ஜெயிலில் இருந்து விடுவித்து அவரை 2ஜீ ஸ்பெக்ற்ரம் ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கருணாநிதி குடும்பம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக திமுக அஞ்சுகிறது. தோண்டும் போது புதையல் வருவது போல் உலக வரலாற்றுச் சாதனையான ரூபா1.76 இலட்சம் கோடி வழக்கில் இன்னும் பலர் சிக்கவுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. கலைஞர் தொலைக்காட்சி இயக்குநரான கருணாநிதியின் மனைவி தயாளு அதில் முதலிடம் பிடிக்கிறார். அடுத்தவர் அரசியல் துறவி ஜெகத் கஸ்பார் அடிகளார் என்று விஷயம் அறிந்த வட்…

  10. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு ஒரு வாரகால சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் அயர்லாந்திற்கு செல்லும் ஒபாமா, அங்கிருந்து இங்கிலாந்து சென்று, 3 நாட்கள் அங்கு முக்கிய சந்திப்புக்களில் கலந்து கொள்கிறார். பிரிட்டிஸ் பிரதமர் டேவிட் கமரன் உட்பட, பிரிட்டிஷ் மகாராணியையும் ஒபாமா சந்திக்கவுள்ளார். அங்கிருந்து பிரான்ஸ் பயணமாகும் அவர், பிரான்சில் இடம்பெறவுள்ள ஜி-8 எனும், உலகின் பலமிக்க எட்டு நாட்டுத் தலைமைகளின் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள ஒபாமா, பின்னர் போலந்து ஊடாக அமெரிக்கா திரும்புவார். அண்மையில் அல்கைதா அமைப…

    • 3 replies
    • 592 views
  11. இன்றைய விடிகாலை உலகமும் விடியலை நோக்கிய புதிய தீர்மானங்களும் உலகின் கொள்கைகள் மாற்றமடையும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்தாகிறது.. பிரிட்டன் அமரிக்க புதிய நிலைப்பாடு சிறீலங்காவிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.. இன்று அதிகாலை உலகில் முக்கியமாகப் பேசப்படும் விடயங்கள் மூன்று. முதலாவது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தற்போது இங்கிலாந்தில் பிரதமர் டேவிட் கமரோனுடன் பேச்சுக்களை நடாத்துகிறார். இது மிகவும் பாரதூரமான விடயங்களை உள்ளடக்கிய பேச்சு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். லிபியா, மத்தியகிழக்கு, உலகப் பொருளாதாரம் ஆகிய மூன்று தலைப்புக்களில் இந்த விவகாரம் பேசப்பட இருக்கிறது. இதில் முக்கியமான விடயம் 2001 அமெரிக்கா வகுத்த உலகின் கொள்கைகள் முற்றாக மாற்றமடைகின்றன. இந்த மாற்றம்…

  12. அந்தக் காலத்து வீடு என்பதற்கு அத்தாட்சியாக வீட்டிற்கு முன் னால் நிற்கிறது ஒரு பழைய அம்பாஸிடர் கார். கதர் வேட்டி, முண்டா பனியனுமாக வெளியில் வந்து நம்மை வரவேற்கிறார் பழ.கருப்பையா. கடந்த தி.மு.க. ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சித்தவர். முதிர்ந்த நாகரிகமான அரசியல்வாதி. உடுப்பில் சுத்தம் பழகுவதைப் போலவே வார்த்தையில் சுத்தம் பழகுபவர். தப்பென்றால் உடனே தட்டிக் கேட்கும் தைரியக் குரல் மனிதர். தற்போதைய அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர். அடுத்த சபாநாயகர் என்று பலரால் முணுமுணுக்கப்படுபவர். அவரைச் சந்தித்தோம். கலைஞரின் கணிப்பு எப்படி பொய்த்துப் போனது? ‘‘ஸ்பெக்ட்ரம் ஊழலில் கொள்ளையடித்த பணத்தை வைத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று அவர் நம்பினார். ஆகவே வெற்றி உறுதி என…

  13. இந்திய தூதரக துணை கவுன்சிலர் மகள் கைது அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் துணை கவுன்சிலராக இருக்கிறார் தேபாசிஷ் பிஸ்வாஸ். இவரது மகள் கிருத்திகா, நியூயார்க் குயின்ஸ் பள்ளியில் கணிதம் பாடப்பிரிவில் சேர்ந்தார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியைப் பற்றி கிருத்திகா தரக்குறைவான இ மெயில் அனுப்பியதாக புகார் எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து கிருத்திகா பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக கிருத்திகா போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக 24 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டார். மேலும் சிறையில் துன்புறுத்தியதாக கிருத்திகா தெரிவித்தார். இது தொடர்ப்பாக கடந்த 6-ந் தேதி நியூயார்க் நீதிமன்றத்தில் கிருத்தி…

  14. சோனியாவை ஏன் சந்திக்கவில்லை : கலைஞர் சென்னையில் அறிவாலயத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் திமுக தலைவர் கலைஞர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கனிமொழி கைது செய்யப்பட்டிருப்பது குறித்தும், டெல்லி சென்றும் சோனியாகாந்தியை சந்திக்காமல் திரும்பியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ’’டெல்லி திகார் சிறையில் இருக்கும் எனது மகள் கனிமொழியையும், ராஜாவையும் பார்ப்பதற்காக சென்றேன். கனிமொழி 2ஜி வழக்கை துணிவோடும், உறுதியோடும் எதிர்கொள்வார். இப்பிரச்னையை சட்டரீதியாக அணுகலாம் என நம்புகிறோம். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது. அ‌தனால் தான் சோனியாவை சந்திக்கவ…

  15. ''திரும்பிப் பாருங்கள் திருமா!'' தேர்தல் பரபரப்பு களைகட்டிய நேரம்... ஈழ ஆதரவுக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் நிச்சயம் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்காது என்கிற நிலைமை. ஆனாலும், தி.மு.க-வுடனான நெருக்கத்தில் காங்கிரஸை சகித்துக்கொள்ள திருமாவளவன் தயாராகிவிட்டதாகத் தகவல் கசிய... நாம் அப்போது அவரிடம் ஒரு பேட்டி கேட்டோம். ''ஈழ அழிவுக்கு காங்கிரஸ்தான் காரணம் எனச் சொல்லும் நீங்கள், அதே கூட்டணியில் நீடித்தால் மக்கள் ஏற்பார்களா?'' இந்தக் கேள்வியை நாம் கேட்டதுதான் தாமதம். திருமாவுக்கு சிலுப்பிக்கொண்டு வந்தது கோபம். ''நீங்கள் எனக்கு நண்பர். உங்களுக்கு யாரோ ஓர் அயோக்கியன் நண்பர் என்றால், அதற்காக உங்களின் நட்பை நான் உதற முடியுமா? நான் தி.மு.க-வுடன்தான் கூட்டணி …

  16. சிவன் கோவில் நிலத்திற்காகத் தாய்லாந்து- கம்போடியாச் சண்டை Posted by சங்கீதா on 25/05/2011 in பிரதான செய்தி | 0 Comment இரு நாட்டு இராணுவங்களும் ஒருவர் மீது ஒருவர் கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்துவதால் தாய்லாந்து- கம்போடியா எல்லையில் கடும் பதற்றம் நிலவுகிறது. இந்த எல்லையில் கிட்டத்தட்ட ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த மூன்று கோவில்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது பெரிய விகார் என்ற சிவாலயம். தனக்குச் சொந்தம் என்று தாய்லாந்தும் கம்போடியாவும் அதற்கும் அது அமைந்துள்ள நிலத்திற்கும் உரிமை கோருகின்றன. 1962ம் ஆண்டில் இந்த சர்ச்சை முதன் முறையாக வெடித்த போது இரு நாடுகளும் அனைத்துலக நீதி மன்றத்திடம் நீதி கேட்டு முறைப்பாடு செய்தன. விசாரணைக்கு பிறகு அனைத்துலக நீதி மன்றம்…

  17. ராஜிவ் கொலைக்குப் பின்னால் திராவிட முன்னேற்ற கழகம்! தமிழக முதல்வர் குற்றச்சாட்டு புதன், 25 மே 2011 01:39 இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலையில் மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் மறைமுகமாக தொடர்புபட்டு உள்ளது என்று இந்தியாவின் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று குற்றம் சாட்டினார். இவர் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேசியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவர் மேலும் கூறியபோது இக்குற்றச்சாட்டை அண்ணா திரவிட முன்னேற்ற கழகம் மிக நீண்ட காலமாக முன்வைத்து வந்திருக்கின்றது. ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்னால் திராவிட முன்னேற்ற கழகம் இருந்தது என நாம் கூறி வந்திருக்கின்றோம் என்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களின் ஒ…

  18. எத்தியோப்பியா, தான்சானியாவுக்கு பிரதமர் பயணம் எத்தியோப்பியா மற்றும் தான்சானியாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் 6 நாள் பயணமாக இன்று புறப்பட்டுச் சென்றார். ஆப்பிரிக்க நாடுகளிடையே உள்ள உறவை வலுப்படுத்தவும் சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் மன்மோகன் சிங் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். ஆப்பிரிக்க யூனியன் நாடுகளின் மாநாடு மே 24, 25-ம் தேதிகளில் அடிஸ் அபாபா நகரில் நடைபெறவுள்ளது. அல்ஜீரியா, எகிப்து, கென்யா, லிபியா, நமீபியா, நைஜீரியா, ஸ்விட்சர்லாந்து உள்பட 15 நாட்டுப் பிரதிநிதிகள் பங்கு கொள்ளும் அந்த மாநாட்டில் மன்மோகன்சிங் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்கிறார். அடிஸ் அபாபாவில் அவர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். அப்போது ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர…

  19. மதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர்: வைகோ நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடாமல் புறக்கணித்ததை 75 சதவீதம் மக்கள் வரவேற்று உள்ளனர் என, வைகோ பேசினார். ம.தி.மு.க. 18ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிவகாசி பகுதியில் ம.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது. விழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். பின்னர் ஆலங்குளம் டி.என்.சி. முக்குரோட்டில் ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வைகோ, வெற்றி, தோல்விகளை சமமாக கருதுபவன் நான். என் அரசியல் பயணம் ஒளி மண்டலமாகவும், இருள் சூழ்ந்ததாகவும் இருந்து வருகிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பு கொலைப் பழி சுமத்தப்பட்டு வெளியேற்…

  20. சொக்கத்தங்கம்.. சோனியா என்று வழிந்து வழிந்து சோனியாவிற்கு புகழாரங்களாகச் சூட்டினார் ஐயா கறுப்புத் தங்கம் கருணாநிதி. இன்று அவரின் அன்பு மகள் கனிமொழி.. அதே சொக்கத்தங்கத்தால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சோனியா நினைத்திருந்தால் இந்த வழக்கில் இருந்து கனிமொழியை என்ன ராசாவையே காத்திருக்க முடியும். அப்பேற்பட்ட.. போர்பாஸ் பீரங்கி ஊழலையே தூக்கிச் சாப்பிட்ட சோனியாவிற்கு இவை என்ன புதிதா..??! இருந்தாலும்.. கருணாநிதி மீது சோனியாவிற்கு உள்ளூர பல ஆத்திரங்கள். பகைகள். ஆனால் அரசியலுக்காக அதனை வெளியில் காட்டாது கூட்டணி அமைத்து முதலில் ஈழத்தமிழர்களைப் பழிவாங்கினார் சோனியா. கருணாநிதியும் வருவாய் கருதி வாயைப் பிளந்து கொண்டு கிடந்தார். கூட்டணி ஆட்சியில் கருணாநிதியின் எ…

  21. ராஜீவ் படுகொலையை அரசியல் ஆக்க வேண்டாம்: ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கண்டனம் ராஜீவ் காந்தி படுகொலையை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் என்று ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் 24.05.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா, ராஜீவ்காந்தி கொலையில் திமுகவை தொடர்பு படுத்திப் பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, ராஜீவ்காந்தி கொலை மிகவும் உணர்வு பூர்வமான நிகழ்வு. இந்த சம்பவம் நாடு முழுவதும் மட்டுமின்றி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு. மிகவும் உணர்ச்சிகரமான அந்த துயரச் சம்பவத்தை யாரு…

  22. ஜெயலலிதாவை சோனியா டீ-பார்ட்டிக்கு அழைத்தாரா? இல்லையா? செவ்வாய்க்கிழமை, மே 24, 2011, சென்னை: நாங்கள் வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். அவர் டீ-பார்ட்டிக்கு அழைத்ததாக பத்திரிகைகளில்தான் படித்தேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதன்மூலம் அவரை சோனியா காந்தி டீ-பார்ட்டிக்கு அழைத்தாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம்: கடந்த வாரம் நான் உங்களை சந்தித்தபோது வாரம் ஒரு முறை உங்களை சந்திப்பதாக கூறினேன். நேற்று சந்திப்பதாக இருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அமைச்சர் மரியம் பிச்சை இறந்ததால் திருச்சி செல்ல வேண்டியதாகிவிட்டது.…

  23. இந்தியாவின் 3 கலைகளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் மத்திய அரசு 2010-11 ஆம் ஆண்டில் பண்பாடு குறித்த அறிக்கையில், ’’ரவீந்திரநாத் தாகூர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக பிரதமர் தலைமையில் தேசிய குழுக்கள் அமைக்கப்பட்டன. ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் வங்கதேசத்துடன் இணைந்து கூட்டாக கொண்டாடப்பட்டது. பண்டித மதன்மோகன் மாளவியாவின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும் தேசிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திராகாந்தி தேசிய கலைகள் மையமானது 12 முக்கிய கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தியது. இதில் சுமார் ஐந்து லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இதுவரை இல்லாத ஒரு சாதனை அளவாகும். …

  24. கவிஞராக, மனித உரிமையாளராக எளிமையாக அறியப்பட்ட ஒரு பெண்ணை ‘அதிகாரத்தின் ருசி’ எந்த எல்லைக்கும் கொண்டு போகும் என்பதற்கு கனிமொழி ஒரு உதாரணம். பெரிதாக இலட்சியங்களோ, அரசியல் ஆர்வமோ இல்லாத ஒரு சாதாரணப் பெண்ணாகத் தான் கனிமொழியின் ஆரம்ப கால வாழ்க்கை இருந்தது. 90-களின் ஆரம்பத்தில் கனிமொழியின் முதல் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரிவுக்குப் பின்னர் அவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘கருவறை வாசனை’ வெளிவருகிறது. ‘கவிஞர் கனிமொழி’ கருணாநிதி என்று அறியப்பட்ட அவர் இலக்கிய உலகில் கொண்டாடப்பட்டதற்கு பின்பாதி பெயரும் ஒரு முக்கியக் காரணம். சர்ச் பார்க்கில் பள்ளிப்படிப்பும், எத்திராஜ் கல்லூரியில் முதுநிலை பொருளாதாரமும் படித்திருந்த கனிமொழி 92-ம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து வருடங்கள் ‘தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.