உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26581 topics in this forum
-
காசா போர் நிறுத்தம் – ட்ரம்பும், நெதன்யாகுவும் இணக்கம் – ஹமாஸ் இணங்குமா? adminSeptember 30, 2025 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் காசாவிற்கான புதிய அமைதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். அதை ஹமாஸூம் ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தத் திட்டம் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முன்மொழிகிறது. ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள உயிருடன் உள்ள 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்ததாக கூறப்படும் பலரது எச்சங்களையும் 72 மணி நேரத்திற்குள் விடுவிக்கப்படுமானால், இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான காசா மக்கள் விடுவிக்கப்படுவார்கள் என நம்பப்படுகிறது. போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் …
-
- 2 replies
- 164 views
- 1 follower
-
-
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக துனிசியாவில் ஒருவருக்கு மரண தண்டனை! ஜனாதிபதி கைஸ் சயீதை அவமதிக்கும் வகையிலும், அரச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் கருதப்படும் முகநூல் பதிவுகளுக்காக துனிசியாவில் உள்ள நீதிமன்றம் 51 வயது நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. அதன்படி, அரசை கவிழ்க்க முயற்சித்தல், ஜனாதிபதியை அவமதித்தல் மற்றும் ஒன்லைனில் தவறான தகவல்களைப் பரப்புதல் போன்ற மூன்று குற்றச்சாட்டுகளுக்காக சபர் சௌசென் என்ற நபர் இந்த தண்டனையை எதிர்கொண்டுள்ளார். இந்தப் பதிவுகள் வன்முறை, குழப்பத்தைத் தூண்டுவதாகவும், துனிசியாவின் தண்டனைச் சட்டம் மற்றும் சர்ச்சைக்குரிய 2022 சைபர் கிரைம் சட்டத்தை மீறுவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டினர். 2021 ஜூலை சயீத் அனைத்…
-
- 0 replies
- 155 views
-
-
காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு! 01 Oct, 2025 | 01:16 PM (இணையத்தள செய்திப் பிரிவு) காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் அறிவித்த 20 நிபந்தனைகள் கொண்ட விரிவான திட்டத்தை சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்றுள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் காசா தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன…
-
- 2 replies
- 167 views
-
-
அத்து மீறிய ட்ரோன் ஊடுருலால் ஜெர்மன் விமான சேவை பாதிப்பு! ஜெர்மனின் மியூனிக் விமான நிலையத்தில் வியாழக்கிழமை (02) மாலை சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் பறந்ததை அடுத்து, விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக, 17 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், ஜெர்மன் நகரில் சுமார் 3,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். அத்துடன், மியூனிக் விமான நிலையம் மேலும் 15 விமானங்களை அருகிலுள்ள நகரங்களுக்கு திருப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, மியூனிச்சில் தரையிறங்க வேண்டிய விமானங்களை ஸ்டட்கார்ட், நியூரம்பெர்க், வியன்னா மற்றும் பிராங்பேர்ட்டுக்கு திருப்பி அனுப்பி விடப்பட்டன. ட்ரோன்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து உடனடியாக உறுதிப்படுத்தப்படாத நிலையி…
-
- 0 replies
- 162 views
-
-
பிரிட்டனில் யூதர்களின் தேவாலய வளாகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்! October 3, 2025 பிரிட்டனில் யூதர்களின் தேவாலயம் ஒன்றிற்குக்கு அருகில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். பிரிட்டன், வட மான்செஸ்டர், க்ரம்சால் பகுதியில் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரஸ் என்ற யூத தேவாலயம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர். உள்ளுர் நேரப்படி காலை 9.30 மணியளவில் அப்பகுதி வழியே நபர் ஒருவர் காரை ஓட்டி வந்து ஆலயம் அருகே சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளார். மேலும் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 ப…
-
- 0 replies
- 122 views
-
-
பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்; 12 பேர் உயிரிழப்பு! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்தனர். இது அண்மைய ஆண்டுகளில் மிகவும் கடுமையான அமைதியின்மை அத்தியாயங்களில் ஒன்றாகும். இந்திய ஊடக செய்திகளின்படி, 38 முக்கிய கோரிக்கைகளை பாகிஸ்தான் அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால் போராட்டம் தொடங்கியதாக கூறப்படுகிறது. இப்போது இராணுவ அத்துமீறல்களுக்கு எதிராக பாரிய அளவிலான போராட்டமாக அது விரிவடைந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வியாழக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக கொந்தளிப்பு தொடர்ந்தது, தத்யாலில் போராட்டக்காரர்களுக்கும் பா…
-
- 0 replies
- 130 views
-
-
02 Oct, 2025 | 01:05 PM பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் பெய்து வரும் தொடர் மழையாலும், அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்காலும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 1,006ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு, கைபர் பக்துன்குவா, பஞ்சாப், சிந்த், கில்ஜித்-பல்திஸ்தான், பலுசிஸ்தான், ஆசாத் ஜம்மு காஷ்மீர் மற்றும் இஸ்லாமாபாத் தலைநகர் பிரதேசம் ஆகிய மாகாணங்களை கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் பலியானவர்களில் 275 குழந்தைகள், 163 பெண்கள் மற்றும் 568 ஆண்கள் அடங்குவர். வெள்ளம் தொடர்பான அனர்த்தங்களில் மொத்தம் 1,063 பேர் காயமடைந்துள்ளனர…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
500 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்பை எட்டிய முதல் நபராக எலோன் மஸ்க்! குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையாக, வரலாற்றில் 500 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிகர மதிப்பினை விஞ்ஞசிய தனிநபராக டெஸ்லாவின் (TSLA.O) தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk) உருவெடுத்துள்ளார். இந்த அசாதாரண சாதனை ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்கள் குறியீட்டின் தரவுகளால் உறுதிப்படுத்தப்பட்டது. இது நிதித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. 2023 ஒக்டோபர் நிலவரப்படி, மஸ்க்கின் செல்வம் முதன்மையாக டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸில் அவர் வைத்திருக்கும் உரிமைப் பங்குகளிலிருந்து வருகிறது. உலகின் மிகப் பெரிய செல்வந்தராக மாறுவதற்கான எலோன் மஸ்க்கின் பயணம் அசாதாரணமானது. 1971 ஜூன் 28 அன்று தென்னாப்பி…
-
- 0 replies
- 104 views
-
-
செனட் வாக்கெடுப்பு தோல்வி; முடக்கத்தை எதிர்கொள்ளும் அமெரிக்க அரசாங்கம்! செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு செனட் இடைநிறுத்த நிதி சட்டமூலத்தை அங்கீகரிக்கத் தவறியதை அடுத்து, அமெரிக்கா கூட்டாட்சி அரசாங்க முடக்கத்தை நோக்கிச் சென்றது. அதே நேரத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூட்டாட்சி ஊழியர்களின் புதிய பணிநீக்கங்களை அச்சுறுத்துவதன் மூலம் பதற்றங்களை அதிகரித்தார். செனட் ஜனநாயகக் கட்சியினர், அரசாங்கத்திற்கு நிதியுதவி அளிக்கும் குடியரசுக் கட்சி சட்டமூலத்தை நிராகரித்து. கூட்டாட்சி நிதியுதவியை ஏழு வாரங்களுக்கு நீட்டிப்பதற்கான சட்டமூலத்தின் மீதான 55-45 வாக்குகள் சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் தேவையான 60 வாக்குகளை விட குறைவாக இருந்தது. சட்டமியற்றுபவர்கள் வருடாந்திர செலவின சட்டமூலங்களில் தங…
-
- 2 replies
- 212 views
- 1 follower
-
-
01 Oct, 2025 | 03:12 PM இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோயர்ஜோ (Sidoarjo) நகரில் இயங்கிவரும் 'அல் கோஜினி' (Al Khoziny) என்ற இஸ்லாமியப் பாடசாலையின் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் பலியாகினர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் 91 மாணவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கட்டடப் பணிகள் நடைபெற்று வந்த ஒரு கட்டடத்தின் கீழ்த்தளத்தில் உள்ள மசூதியில் மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, கட்டடத்தின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 13 வயது சிறுவன் உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 99 மாணவர்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
-
- 0 replies
- 87 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Win McNamee/Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஒப்புதலுடன் காஸாவில் அமைதிக்காக 20 அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ளார். கட்டுரை தகவல் தில்நவாஸ் பாஷா பிபிசி செய்தியாளர் 1 அக்டோபர் 2025, 12:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திங்கட்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில் காஸாவில் அமைதிக்கான ஒரு திட்டத்தை முன்வைத்தார். 20 அம்சங்களை கொண்ட இந்தச் சமாதானத் திட்டத்தின் கீழ், காஸாவில் சண்டை நிறுத்தப்படும், இஸ்ரேலியப் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், மேலும் காஸாவின் நிர்வாகத்திற்காக ஒரு சர்வதேச 'அமைதி வாரியம்' (Board of Peace) அ…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
01 Oct, 2025 | 12:39 PM அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனடியாக நாட்டுக்குத் திரும்பிய நிலையில், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் திட்டம் குறித்து அவர் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். டெல் அவிவ் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது, பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கவுள்ளீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த நெதன்யாகு, "பாலஸ்தீனத்தை தனியாக ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டேன்" என ஆவேசமாகக் கூறினார். நெதன்யாகு மேலும் கூறுகையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அமைதி உடன்படிக்கை மற்றும் 20 அம்சத் திட்டத்திற்கு மட்டுமே இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது என்றார். அவர…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
அமெரிக்காவுடன் இணையுமாறு கனடாவுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கும் ட்ரம்ப்! கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ இராஜினாமா செய்து பதவி விலகிய போது அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா ஏன் மாறக்கூடாது என ட்ரம்ப் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் கனடா பிரதமர் பதவி விலகல் குறித்து கருத்து பதிவிட்ட ட்ரம்ப், கனடாவில் உள்ள பலர் தங்கள் நாடு அமெரிக்காவின் 51வது மாகாணமாக இருப்பதை விரும்புகிறார்கள். கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறைய சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம்.இனி அப்படி எல்லாம் வழங்க முடியாது. ஜஸ்டின் ட்ரூடோ இதை அறிந்திருந்தார், ராஜினாமா செய்தார். கனடா அமெரிக்…
-
- 0 replies
- 148 views
-
-
பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 27 பேர் உயிரிழப்பு! மத்திய பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், இடிந்து வீழ்ந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதனால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர். பிலிப்பைன்ஸின் மத்திய விசாயாஸ் பகுதியில் உள்ள செபு மாகாணத்தில் உள்ள போகோ நகரின் கடற்கரையில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு 10 மணிக்கு (1400 GMT) முன்னதாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மின்சாரம் தடைப்பட்டதுடன்,100 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு தேவ…
-
- 0 replies
- 97 views
-
-
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் டாம் பேட்மேன் வெள்ளை மாளிகை வெளியுறவுத்துறை செய்தியாளர் 30 செப்டெம்பர் 2025, 08:44 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காஸா போரை முடிவுக்கு கொண்டுவரும் தனது திட்டம் "மனிதகுல வரலாற்றின் சிறந்த நாட்களில் ஒன்றாகவும், மத்திய கிழக்கில் நிலையான அமைதியைத் தரக்கூடியதாகவும்" இருக்கும் என்று கூறினார். இப்படி மிகைப்படுத்திப் பேசுவது டிரம்பின் வழக்கமான பாணிதான். ஆனால், திங்கள்கிழமை வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்தபோது அவர் வெளியிட்ட 20 அம்சங்களைக் கொண்ட இந்தத் திட்டம், அவரது சொற்களுக்கு இணையாக இல்லாவிட்டாலும், ராஜ்ஜீய ரீதியாக ஒரு முக்கியத் தருணமாகவே உள்ளது. இந்த…
-
- 1 reply
- 148 views
- 1 follower
-
-
லண்டனிலுள்ள மகாத்மா காந்தி சிலை சேதம்; இந்தியா கடும் கண்டனம்! ஒக்டோபர் 2 ஆம் திகதி ஆண்டுதோறும் நடைபெறும் காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு, லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு இங்கிலாந்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடரபில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய வெட்கக்கேடான செயலுக்கு வருத்தத்தையும், கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம். இது வெறும் நாசவேலை மட்டுமல்ல, சர்வதேச அகிம்சை தினத்திற்கு மூன்று நாட்…
-
- 1 reply
- 197 views
-
-
அமெரிக்காவில் இன்று ஒரு இலட்சம் அரச ஊழியர்கள் பதவி விலகல் 30 September 2025 அமெரிக்காவில் இன்று ஒரு இலட்சம் அரச ஊழியர்கள் பதவி விலகவுள்ளனர். நிர்வாக செலவுகளைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தானாக முன்வந்து அரசு ஊழியர்கள் தங்கள் பதவி விலகலை இந்த மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார். அவர் கொடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று ஒரு இலட்சம் ஊழியர்கள் பதவி விலகவுள்ளனர். அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக கொள்கைகளினால், அந்த நாட்டு அரசு ஊழியர்கள், 3 இலட்சம் பேர் இந்தாண்டு இறுதிக்குள் பதவி விலகவுள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில், 23 இலட்சமாக இருந்த சிவில் பணியாளர்களின் எண்ணிக்கை, இந்த மாத இறுதியில் 21 இலட்சமாகக் குறையும…
-
- 0 replies
- 233 views
-
-
Published By: Digital Desk 3 30 Sep, 2025 | 11:08 AM ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கம், ஃபைபர்-ஆப்டிக் இணைய இணைப்புகளைத் (fibre-optic internet connections) துண்டிக்கத் தொடங்கிய சில வாரங்கள் கழித்து, நாடளவிய ரீதியில் தொலைத்தொடர்புகளை முடக்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் தற்போது "முழுமையான இணைய முடக்கத்தை" சந்தித்து வருவதாக, இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் தெரிவித்துள்ளது. தலைநகர் காபூலில் உள்ள அலுவலகங்களுடனான தொடர்பை சர்வதேச செய்தி நிறுவனங்கள் துண்டித்துள்ளதாகக் கூறுகின்றன. ஆப்கானிஸ்தான் முழுவதும் கையடக்க தொலைபேசிக்கான இணைய வசதி மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முடக்கத்திற்கான உத்தியோகபூர்வ காரணத்தை தலிபான்கள் இன்னும் தெரிவிக்கவில்லை. …
-
- 0 replies
- 107 views
- 1 follower
-
-
4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள ஜேர்மன் விமான நிறுவனம்! ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா (Lufthansa), 2030 ஆம் ஆண்டுக்குள் 4,000 வேலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது. நிறுவனம் செலவுகளைக் குறைத்து புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றியமைக்க முயற்சிப்பதன் விளைாவக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக AFP செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் தற்போது உலகளவில் சுமார் 103,000 பேரைப் பணியமர்த்துகிறது. அதன் வலையமைப்பில் யூரோவிங்ஸ், ஆஸ்திரிய ஏர்லைன்ஸ், சுவிஸ், பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் இத்தாலியின் புதிய முதன்மை விமான நிறுவனமாக அண்மையில் கையகப்படுத்திய ஐடிஏ ஏர்வேஸ் ஆகியவை அடங்கும். ஜேர்மனி இரண்டாவது வருட மந்தநிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்…
-
- 1 reply
- 139 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கே முன்னுரிமை! -ஜேர்மனி திட்டவட்டம். ஜேர்மனி அரசு 2025 செப்டம்பர் முதல் 2026 டிசம்பர் வரை 154 முக்கிய பாதுகாப்பு ஆயுத கொள்முதல்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஆயுதங்களுக்கு வெறும் 8% மட்டுமே ஒதுக்கப்படும் என்றும், மீதமுள்ள பெரும்பான்மையான கொள்முதல்கள் ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனி எடுத்துள்ள இந்த “யூரோப் ஃபர்ஸ்ட்” கொள்கை, ஐரோப்பிய பாதுகாப்பு தொழில் துறையை வலுப்படுத்துவதோடு, உக்ரைன்–ரஷ்யா போரை அடுத்து ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்பு உற்பத்தியில் சுயாதீனமாக இருக்க வேண்டிய அவசியத்தையும் …
-
- 1 reply
- 141 views
-
-
திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிப்பு அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரியை விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரியை விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். அமெரிக்க திரைப்படத்துறையை வௌிநாடுகள் திருடியுள்ளதாக அவர் கூறியுள்ளது. இது குழந்தையிடம் இருந்து மிட்டாயினை பறிப்பது போன்ற செயலாகும் என குறிப்பிட்டுள்ளார். எனவே அமெரிக்காவுக்கு வௌியில் வௌிநாடுகளில் தயாரிக்கப்படும் அனை…
-
- 1 reply
- 157 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் அகமது அல் கதீப் பிபிசி உருது 37 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் - சௌதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் அதன் தாக்கம் மற்றும் சர்வதேச அரசியலில் அதன் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. இது பாகிஸ்தானில் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை உள்ளடக்கிய ஒரு உத்தி சார்ந்த பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை (SMIDA) மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் அந்த இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகவே கருதப்படும். சௌதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒப்ப…
-
- 1 reply
- 255 views
- 1 follower
-
-
மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு September 26, 2025 11:41 am அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவரது இந்த அதிரடி அறிவிப்பு மருந்து ஏற்றுமதி வணிகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது. “வரும் ஒக்டோபர் 1-ம் திகதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பிராண்டு மற்றும் உரிமம் பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். மருந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக் கூடங்களை அமெரிக்காவில் நிறுவ வேண்டும். அது கட்டுமானத்தில் இருந்தால் எந்தவித வரி விதிப்பு நடவடிக்கையும் இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்…
-
- 4 replies
- 317 views
-
-
Published By: Digital Desk 1 28 Sep, 2025 | 03:28 PM 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு பெரிய ரஷ்ய வான்வழித் தாக்குதலில் உக்ரேனில் சுமார் நால்வர் பேர் உயிரிழந்துள்ளதுடன், 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரேனின் தலைநகர் கீவ் மீது குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 12 வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாக உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா, யுக்ரைனின் ஏழு பகுதிகளை நோக்கி சுமார் 600 ட்ரோன்கள் மற்றும் பல ஏவுகணைகளை ஏவியதாக அதன் விமானப்படை தெரிவித்துள்ளது. மோசமான இந்த தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட சபோரிஜியா பகுதியில் குறைந்தது 16 பேர் காயமடைந்ததாகவும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறிப்…
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான அமெரிக்க ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்கள் அடுத்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துடனான சந்திப்புக்காக வர்ஜீனியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று பல அமெரிக்க அதிகாரிகள் CNN இடம் தெரிவித்தனர், இருப்பினும் சந்திப்புக்கான காரணம் தெளிவாக இல்லை. வர்ஜீனியாவின் குவாண்டிகோவில் உள்ள இராணுவ நிறுவலில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பல அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் ஜெனரல் மற்றும் கொடி அதிகாரிகள் உட்பட இந்த சந்திப்பு எதைப் பற்றியது அல்லது அது ஏன் திடீரென காலண்டரில் சேர்க்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது என்று கூறினார். குழு உடல் தகுதி சோதனை முதல் பாதுகாப்புத் துறையின் நிலை குறித்த விளக்கத்தைப் பெறுவது, அதிக…
-
-
- 6 replies
- 300 views
- 1 follower
-