Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரஸ்ஸிய அரசுக்கெதிராகத் திரும்புகிறதா வாக்னர் கூலிப்படைப்பிரிவு? உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்புப் போரில் முன்னின்று போராடிவரும் ப்ரிகோஷின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை பெரும்பாலான களங்களில் உக்ரேனிய ராணுவத்திற்குச் சிம்ம சொப்பனமாக விளங்கி வருவதுடன் பல முக்கிய களங்களையும் ரஸ்ஸியாவுக்காக கைப்பற்றி வந்திருக்கிறது. அண்மைய சில மாதங்களாக வாக்னர் படைப்பிரிவின் தலைவர் ப்ரிகோஷின் தனது படைகளுக்கு தருவதாக ரஸ்ஸிய உறுதியளித்த வளங்களை கிரமமாகத் தருவதில்லையென்றும், ரஸ்ஸிய உயர் பாதுகாப்புப் பீடம் தனது படைகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறிவந்தார். வாக்னர் தலைவருக்கும் ரஸ்ஸிய ராணுவ உயர்பீடத்திற்கும் இடையிலான இந்த முறுகல் நிலை நேற்று முக்கிய திருப்பம் ஒன்றினை அடைந்தி…

  2. அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி நீக்கம்! அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார். குடியரசு கட்சி உறுப்பினர்களின் 08 வாக்குகளும், ஜனநாயக கட்சியின் 208 உறுப்பினர்களும் இதற்காக வாக்களித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, 216க்கு 210 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளதால் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஒருவர் இவ்வாறு நீக்கப்படுவது இதுவே முதல் முறை எ…

  3. Published By: RAJEEBAN 05 OCT, 2023 | 08:45 PM சிரிய இராணுவத்தின் பயிற்சிக்கல்லூரி மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆளில்லா விமானதாக்குதலில் 60 இராணுவத்தினரும் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். கடேட்களின் குடும்பத்தினர் கலந்துகொண்ட பட்டமளிப்பு நிகழ்வை இலக்குவைத்து ஹோம்சில் உள்ள இராணுவபயிற்சிக்கல்லூரி பல ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றதாக சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத அமைப்பே தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள சிரிய இராணுவம் அமைப்பின் பெயரை குறிப்பிடவில்லை. ஜிகாத்தீவிரவாதிகளும் கிளர்ச்சிக்காரர்களும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள பகுதியிலிருந்தே தாக்குதல் இடம்பெற்றுள்ளது. htt…

  4. Published By: DIGITAL DESK 3 05 OCT, 2023 | 12:56 PM இளைஞர்கள் சிகரெட் கொள்வனவு செய்யும் செயற்பாட்டுக்கு தடை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த பிரேரணை சட்டமாக நிறைவேற்றப்பட்டால் ஒவ்வொரு வருடமும் சிகரெட் வாங்குவதற்கான வயது ஒரு வருடமாக அதிகரிக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த திட்டத்திற்கமைய 2040ஆம் ஆண்டுக்குள் இளைஞர் சமூகம் மத்தியில் புகைப்பிடிப்பதை விரைவில் நிறுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பிரித்தானிய சுகாதார சேவைக்கு ஒவ்வொரு வருடமும் 17 பில்லியன் பவுண்டுகள் செலவாகுவதா…

  5. பாரிஸ் முழுவதும் பெருகி வரும் பூச்சித் தொல்லைகள் பற்றிய பீதி அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் போது உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த வாரங்களில் பூச்சிகளைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது - மேலும் அந்த மேல்நோக்கிய போக்கு பல ஆண்டுகளுக்கு முந்தையது. திரையரங்குகளில் பூச்சியின் உறுதிப்படுத்தப்படாத காட்சிகள் பதிவாகியுள்ளன, மேலும் ரயில்களில் மக்கள் கடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிபிசியின் பாரிஸ் நிருபர் ஹக் ஸ்கோஃபீல்ட் அவர்களை நேரில் சென்று பார்க்கச் சென்றார். https://www.bbc.com/news/av/world-europe-67010255

  6. கிழக்கு உக்ரைனில் ரஸ்யா மேற்கொண்ட தாக்குதலில் 51 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கார்கிவ் பிராந்தியத்தின் ரோஜ என்ற கிராமத்தின் மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதலில் ஆறு வயது சிறுவன் உட்பட 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரஸ்யாவின் இந்த தாக்குதலை இனப்படுகொலை என உக்ரைன் ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார். கிழக்கு உக்ரைனில் ரஸ்ய தாக்குதலில் 51 பொதுமக்கள் பலி | Virakesari.lk

  7. பிரேசில் நாட்டில் வடமேற்கில் தொடங்கி கொலம்பியா, பெரு உட்பட பல தென் அமெரிக்க நாடுகள் வரை அமேசான் மழைக்காடு பரவியுள்ளது. வடக்கு பிரேசிலில் அமேசோனாஸ் மாநிலத்தின் தலைநகரமான மனோஸ் நகருக்கு அருகே உள்ளது டெஃப் பிராந்தியம். இப்பகுதியிலும் அமேசான் காடுகள் பரவியுள்ளது. இப்பகுதி முழுவதிலும் சமீப காலமாக பெரும் வரட்சி ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகளில் வெப்பம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் வெப்பம் 102 டிகிரி ஃபேரன்ஹீட் அளவை தொட்டு விட்டது. இதன் காரணமாக இங்குள்ள டெஃப் ஏரியில் நூற்றுக்கணக்கான டொல்பின்கள் உயிரிழந்து மிதக்கின்றன. இத்தகைய சம்பவம் இதற்கு முன்பு நடைபெறாது. டொல்பின் மீன்கள் இறந்ததற்கும் அதிகளவு வெப்பத்திற்கும் உறுதியான தொடர்புள்ளது. ஆனால், …

  8. அடுத்த தலைமுறை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் கடற்படையை உருவாக்க திட்டம்! அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியாவின் தலைவர்கள், அடுத்த தலைமுறை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் கடற்படையை உருவாக்குவதற்கான புதிய விபரங்களை வெளியிட்டுள்ளனர். கலிபோர்னியாவின் சான் டியாகோவில் உள்ள மற்ற தலைவர்களுடன் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனடிப்படையில், பிரித்தானியாவின் ரோல்ஸ் ராய்ஸ் தயாரித்த உலைகள் உட்பட, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு புதிய கடற்படையை உருவாக்க குறித்த மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும். Aukus ஒப்பந்தத்தின் கீழ், அவுஸ்ரேலியா முதலில் அமெரிக்காவிலிர…

  9. Published By: RAJEEBAN 27 SEP, 2023 | 12:11 PM நகர்னோ கரபாக்கில் ஆர்மேனிய இனத்தவர்கள் இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பை எதிர்கொள்கின்றனர் என துருக்கியின் 123 கல்விமான்கள் எச்சரித்துள்ளனர். சர்வதேச சமூகம் வெறும் பார்வையாளராக இருப்பதற்கு பதில் புதிய மனித துயரத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நகர்னோ கரபாக்கை 9 மாதங்களாக தன்னுடைய முற்றுகையின் கீழ் வைத்திருந்த அஜர்பைஜான் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடர் இடம்பெறும் காலப்பகுதியில் அந்த பகுதி மீது முழுமையான தாக்குதலை மேற்கொண்டது என கல்விமான்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். முழு உலகமும்…

  10. பிரித்தானியாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஸ்கொட்லாந்திலுள்ள குருத்வாரா ஒன்றின் முன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவிலுள்ள குருத்வாரா ஒன்றில், கமிட்டி உறுப்பினர்களுடனான சந்திப்பு ஒன்றிற்காக, பிரித்தானியாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகரான விக்ரம் தொரைசாமி (Vikram Doraiswami) சென்றிருந்த நிலையில், அவர் குருத்வாரா வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இதன்போது, குருத்வாராவின் முன் கூடியிருந்த சீக்கியர்கள் சிலர், உயர் ஸ்தானிகர் இங்கு வரக்கூடாது, அவர் திரும்பிச் செல்லவேண்டும் என்று குரல் எழுப்பிய நிலையில், சிலர் அவரது காரைத் திறக்க முயன்றுள்ளனர். காணொளி காட்சி சிறிதுநேர குழப்பத்துக்குப் பின், கார…

  11. தனது அண்மை பதிவின் மூலமாக, கொரோனா தடுப்பூசிக்கு எதிரான பிரசாரத்தில் சேர்ந்திருக்கிறார் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க். கொரோனா பிடியிலிருந்து உலகம் இன்னமும் முழுமையாக விடுபடவில்லை. நாள்தோறும் கணிசமான எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருகிறார்கள். இவற்றின் மத்தியில் புதிய ரக கொரோனா திரிபுகள் குறித்தும் அவ்வப்போது அச்சுறுத்தல்கள் எழுந்தடங்கி வருகின்றன. கொரோனா பிடியிலிருந்து உலகைக் காத்ததில் தடுப்பூசிக்கு பிரதான பங்குண்டு. அறிவியல்பூர்வமாக உறுதிசெய்யப்பட்ட தடுப்பூசியின் நற்பலன்கள் காரணமாக உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் உயிர் தப்பியிருக்கிறார்கள். ஆனபோதும் இந்த தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தொடர்பான பிரசாரம், அதனை எதிர்ப்பவர்கள் மத்தியில் தணிந்தபாடில்லை. அ…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி செய்தியாளர் 1 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு மாநாடு நடைபெற்றது. தொடர்ந்து மூன்று மணிநேரம் தொடர்ந்த உரைகள் அந்த மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் சலிப்பை ஏற்படுத்தியது. ஒருங்கிணைப்பாளர் நன்றியுரைக்கு தயாராகிக்கொண்டிருந்தார், அங்கிருந்த மக்களும் மதிய உணவுக்கான நேரம் வந்துவிட்டது என்ற நம்பிக்கையில் எழுந்து நின்றனர். அப்போது, இரு நபர்கள் அரங்கின் பின்னால் இருந்து ஓடி வந்து மேடைக்கு…

  13. Published By: RAJEEBAN 01 OCT, 2023 | 01:04 PM ஆஸ்திரியாவில் ஜேர்மனியின் சர்வாதிகாரி அடொல்வ் ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகளிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சால்ஸ்பர்கர் வோர்ஸ்டாட் 15 என்ற முகவரியுடன் காணப்படும் கல்லினால் கட்டப்பட்ட அந்த வீடு பழுப்புநிற வர்ணம் பூசப்பட்டு காணப்படுகின்றது. முதல் தளத்தின் ஜன்னல்களை மறித்தவாறு இரும்புக் கம்பிகள் காணப்படுகின்றன, ஒரு பேருந்து நிறுத்தம் அருகில் காணப்படுகின்றது. அதற்கு அருகில் கிரனைட்கல்லினால் கட்டப்பட்ட நினைவுத்தூபி காணப்படுகின்றது --அமைதி, சுதந்திரம், ஜனநாயகத்திற்காக மீண்டும் பாசிசம் வேண்டாம் உயிரிழந்த மில்லியன் கணக்கானவர்கள் அதனை நினை…

  14. 26 நிமிடங்களுக்கு முன்னர் பண்டைய உலகின் மேதைகளான அரிஸ்டாடில், எரடோஸ்தீனஸ் மற்றும் டோலமி இக்கண்டத்தைப் பற்றி விவரித்தனர். வரைபடங்களை வடிவமைத்தவர்கள் இதற்கு Terra Australis Incognita – ‘தெற்கிலிருக்கும் அறியப்படாத நிலம்’ என்ற லத்தீன் பெயராலும் அழைத்தனர். இது நாள் வரை இது ஒரு கற்பனை கண்டம் என்று நம்பப்பட்டது. பண்டைய கிரெக்க மக்கள், பூமியின் வடிவியல் காரணங்களுக்காக இது உலகின் மறுபுறத்தில் இருக்க வேண்டும் என்று நம்பினர். டச்சு ஆய்வாளர் ஏபெல் தாஸ்மன், 1642-இல் ஒரு புதிய நிலத்தைத் தேடி இப்போது நாம் நியூசிலாந்து என்று அழைக்கப்படும் தீவுக் கூட்டத்தை கண்டுபிடித்தார். ஆனால் அவர் தேடியதைவிட இது மிகவும் சிறியதாகத் தோன்றியது. அதன…

  15. 29 SEP, 2023 | 02:04 PM சுமார் 6,000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் புல்லால் நெய்யப்பட்ட செருப்புகளான ஐரோப்பாவின் பழமையான காலணிகளை தென்மேற்கு ஸ்பெயின் அண்டலூசியாவில் உள்ள வௌவால் குகையில் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 19 ஆம் நூற்றாண்டில் சுரங்கத் தொழிலாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட ஸ்பெயினில் உள்ள வௌவால் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலப் பொருட்களில் அவை அடங்கும். ஆராய்ச்சியாளர்கள் கூடைகள் மற்றும் கருவிகளின் தொகுப்பையும் ஆய்வு செய்தனர். கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் தெற்கு ஐரோப்பாவில் மிகவும் பழமையான மற்றும் சிறந்த பாதுகாக்கப்பட்ட தாவர இழை என ஆய்வின் இணை ஆசிரியர் மரியா ஹெர்ரெரோ ஓட்டல் கூறினார். …

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நிதின் ஸ்ரீவஸ்தவா பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த ஜூன் 18-ஆம் தேதி, காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இந்தக் கொலையின் பின்னணியில் இந்தியாவின் ரகசிய அமைப்புகளின் ஈடுபாடு இருக்கலாம் என அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இக்குற்றச்சாட்டு ஆதாரமற்றது என இந்தியா கூறியது. மேலும் இந்தக் கொலையில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறியிருக்கிறது. பார்க்கப்போனால், ஒரு நாடு வேறொரு …

  17. Published By: RAJEEBAN 28 SEP, 2023 | 10:55 AM பிரான்சில் லொறியொன்றில் மறைந்திருந்த ஆறு பெண்கள் பிபிசியின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத குடியேற்றவாசிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். லொறியொன்றின் பின்பகுதியில் இவர்கள் காணப்படுவதை அறிந்த பிபிசி பிரான்ஸ் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்தே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். லொறிக்குள் சிக்குண்டிருந்த அச்சத்துடன் சுவாசிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த நான்கு வியட்நாம் பெண்களும் இரண்டு ஈராக் பெண்களும் மீட்கப்பட்டுள்ளனர். லொறிச்சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் ஆள்கடத்தல் கும்பல் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது குறித்து பிப…

  18. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் Automobile தொழிலாளர்கள் போராட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற Automobile தொழிலாளர்கள் போராட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி நேற்று (செப்.26) கலந்து கொண்டார். ஜனாதிபதி தேர்தலுக்கான பரபரப்பு அதிகரித்துள்ள நேரத்தில் ஜோ பைடனின் இந்த செயல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்க வரலாற்றிலேயே தொழிலாளர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் ஜோ பைடன் தட்டிச் சென்றுள்ளார். Automobile தொழிலாளர் கூட்டமைப்பு (UAW) சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை அணிந்தபடி போராட்டத்தில் கலந்து கொண்ட பைடன், தொழிலாளர்களுக்கு தன்…

  19. பட மூலாதாரம்,GETTY படக்குறிப்பு, பிக்மி நீல திமிங்கலங்களின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது இந்த இனத்தின் பாதுகாப்புக்கு ஓர் நற்செய்தியாகும். கட்டுரை தகவல் எழுதியவர், ரிச்சர்ட் ஃபிஷர் பதவி, பிபிசி ஃபியூச்சர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடலில் உள்ள பிக்மி நீல திமிங்கலங்கள், பல தலைமுறைகளாக மனிதனின் கண்களில் படாமல் தான் இருந்து வந்தன. இன்னும் சொல்லப் போனால் சமீப காலம் வரை இப்படியொரு வகை திமிங்கலம் இருப்பது கூட மனிதர்களுக்கு தெரியாது. இவற்றில் சில 24 மீட்டர் நீளமும், 90 டன் எடையும் கொண்டவை. கடந்த 2021 இல் பிக்மி நீல திமிங்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விதம் இவை குறித்த ஆச்சர…

  20. ஈராக்கில் திருமண மண்டபத்தில் தீ -100 பேர் பலி! ஈராக்கில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 150 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கின் வடக்கில் உள்ள நினவா மாநிலத்தின் அல்-ஹம்டனியா பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் தீயணைப்பாளர்கள் நெருப்பை அணைக்க முயலும் படங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன. எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை வழங்க எல்லா வகையிலும் முயற்சி எடுக்கும்படி ஈராக்கியப் பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட…

  21. பட மூலாதாரம்,ALAMY/CANADIAN PRESS படக்குறிப்பு, யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கனடா நாடாளுமன்றத்திற்கு வந்த போது யாரோஸ்லாவ் ஹன்கா (வலது) அவையில் கௌரவிக்கப்பட்டார் கட்டுரை தகவல் எழுதியவர், நாடின் யூசிஃப் மற்றும் மேக்ஸ் மாட்சா பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரண்டாம் உலகப் போரில் நாஜிப் படைக்காகப் போர் புரிந்த யுக்ரேனைச் சேர்ந்த ஒருவருக்கு கனடா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகு அழைப்பு விடுக்கப்பட்டது "கடும் சங்கடத்தை" ஏற்படுத்துவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். யுக்ரேன் அதிபர் வெள்ளிக்கிழமையன்று கனடாவுக்கு வந்த போது, நாடாளுமன்ற பொது அவையில் (ஹவுஸ் ஆ…

  22. சட்டவிரோத பெற்றோல் விற்பனையின்போது நிகழ்ந்த அசம்பாவிதம் ஒன்று பெரும் தீ விபத்தாக மாறியது. இதில் 2 குழந்தைகள் உட்பட 35 பேர் பலியாகி உள்ளனர். ஆபிரிக்க நாடான பெனினில் இந்த சோகம் நிகழ்ந்திருக்கிறது. மேற்கு ஆபிரிக்க தேசங்களின் ஒன்று பெனின். நைஜீரியாவின் அண்டை தேசமான பெனினில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத தீ விபத்தில் 35 பேர் பலியாகி இருக்கின்றனர். தீயில் சிக்கிய பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. பெனின் நாட்டில் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதோடு அங்கே விலையும் அதிகம். எனவே பெற்றோல்ல் மலிவாகவும், தாராளமாகவும் கிடைக்கும் எல்லை தேசமான நைஜீரியாவிலிருந்து சட்ட விரோதமாக ப…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவ கிளர்ச்சி நடந்த ஏழு நாட்களுக்குப் பிறகு தனது பெயரை கதாஃபி அறிவித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி செய்தியாளர் 22 செப்டெம்பர் 2023 இருபத்தியோராம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தின் தொடக்கத்தில், கர்னல் முயம்மர் கதாஃபியின் காலம் கடந்துவிட்டது. அவர் 2011 வாக்கில், யாரும் மீண்டும் பார்க்க விரும்பாத பழைய திரைப்படத்தின் கதாபாத்திரம் போல் ஆகிவிட்டார். வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில், மனிதன் ஏற்கெனவே நிலவில் கால் பதித்துவிட்ட சமயத்தில், ரிச்சர்ட் நிக்சன் அமெரிக்க அதிபராக இருந்த காலகட்டத்தில் அவர் ஆட்சிக்கு வந்தார்.…

  24. சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடங்களில் புர்காக்கள் அணிய தடை விதித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த சில பெண்கள் நிக்காப் எனும் முகத்தை மறைக்கும் துணிகள் மற்றும் புர்காக்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொது இடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் குழப்பம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மையானோர் நிக்காப்புகளை அணிய அனுமதிக்க வேண்டும் எனவும் புர்காக்களை அணிய தடை விதிக்கலாம் எனவும் வாக்களித்தனர். இதையடுத்து சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தெற்கு டிசினோ மற்றும்…

  25. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட மாணவிகளின் நிர்வாணப்படங்கள் - அதிர்ச்சியில் ஸ்பெயின் நகரம் Published By: Rajeeban 25 Sep, 2023 | 11:12 AM செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட மாணவிகளின் நிர்வாணப்படங்கள் ஸ்பெயின் நகரமொன்றை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. ஸ்பெயினின் நகரமொன்றில் வசிக்கும் இளம்பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளன என்ற செய்தி அந்த நகரமக்களிற்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முன்வைத்து இந்த படங்கள் உருவாக்கப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.