உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
- பாகம் 1 http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=1213&cat=32 - பாகம் 2 http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=1212&cat=32 தமிழக மாணவர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை தீவிரம் ( அக்டோபர் 22,2010 ) தமிழக மாணவர் காங்கிரஸ் தேர்தலையொட்டி, கல்லூரிகளில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் தீவிரம் அடைந்துள்ளது.அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் உத்தரவின்படி, தமிழக மாணவர் காங்கிரஸ் கலைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. கல்லூரிகள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற அற…
-
- 0 replies
- 581 views
-
-
புலிகள் பயங்கரவாதிகளா?அமெரிக்க நீதிபதி அண்மையில் கருணா என்று அழைக்கப்படும் கந்தசாமி கருணாகரன் என்பவருக்கு எதிரான வழக்கில் நடந்த விவாதம். NY Judge Asks: Are Tamil Tigers A Threat To US? by Associated Press, October 15, 2010 The case against the jailed Kandasamy doesn't neatly fit the definition of "a more obvious or garden variety terrorism case, where ... our security interests are compromised and the safety of our citizenry is in jeopardy," More than three years after federal agents locked up a Sri Lankan immigrant they say was the top U.S. representative of the Tamil Tigers, his fate may hinge on a complex question: Was the rebel group a terrorist…
-
- 4 replies
- 946 views
-
-
புதுடில்லி: இந்தியாவின் பாதுகாப்புக்கு பாகிஸ்தானும் சீனாவும் மிகப்பெரிய தொல்லையாக இருக்கின்றன என்று இராணுவத் தளபதி வி.கே.சிங் கூறினார். இந்திய இராணுவம் பங்கும் பணியும் என்ற கருத்தரங்கை டில்லியில் சனிக்கிழமை தொடக்கி வைத்து வி.கே.சிங் பேசியதாவது; இந்தியாவுக்கு இரண்டு பெரிய தொல்லைகள் இருக்கின்றன. பாகிஸ்தானில் ஆட்சி நடத்துவதில் பிரச்சினை இருக்கிறது.அங்குள்ள உள்நாட்டு நிலைவரம் நன்றாக இல்லை.ஆனால், தீவிரவாத அமைப்புகள் இப்போதும் கட்டுக்கோப்பாக இருக்கின்றன. இது நமக்கு கவலை அளிக்கிறது. பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் சீனாவும் இந்தியாவுக்கு கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. அந்த நாட்டின் உடனான எல்லைகள் ஸ்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருந்தாலும் எல்லைப் ப…
-
- 2 replies
- 810 views
-
-
மகிந்தவுக்கு போதனை செய்த தமிழன். ஏழாவது நிமிடத்திலிருந்து அவரது உரை ஆரம்பமாகிறது. யாரும் மொழி பெயரக்க்க கூடியவரகள் இருந்தால் அவரது உரையை தமிழாக்கம் செய்யவும்.
-
- 1 reply
- 905 views
-
-
ஒரு காலத்தில் கனடா இராணுவத்தின் புகழ்பூத்த அதிகாரியாக இருந்த கேர்ணல் ரசல் வில்லியம்ஸின் இரட்டை வாழ்க்கையின் இரகசியங்கள் இன்று முதல் நீதிமன்றத்தில் அம்பலமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவர் மீதான இரட்டைக் கொலை வழக்கு விசாரணைகள் இன்று ஆரம்பமாகின்றன. கனடாவின் மிகப்பெரிய இராணுவ விமானத்தளமான CFB Tenton இன் கட்டளையிடும் தளபதியாக இருந்தவர்தான் கேர்ணல் வில்லியம்ஸ். 27 வயதான ஜெஸிகா லோய்ட் மற்றும் 38 வயதான கோப்ரல்.மேரி பிரான்ஸ் கொமயோ ஆகிய இரண்டு பெண்களையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திக் கொலை செய்தார் என்பதுதான் இவர் மீதான குற்றச்சாட்டுக்களாகும். கடந்த பெப்ரவரியில் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்காக இவர் கைது செய்யப்பட்டபோது கனடா இராணுவமே அதிர்ச்சியடைந்தது. இவர் ஒர…
-
- 2 replies
- 910 views
-
-
சவூதி இளவரசருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சவூதி இளவரசரான சவுத் அப்துல் அஜிஸ் பின் நாசர் அல் சவுத் தன்னுடய பணியாளரை கொலை செய்த வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி பீன் கூறுகையில், "ஒரு இளவரசர் தண்டனைக்கு உள்ளாவது வழக்கமாக இல்லாத ஒன்று. சட்டத்துக்கு அப்பாற்பட்டு இந்த நாட்டில் யாருக்கும் இடம் இல்லை. சவூதி அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவரான உங்களுக்கு இதை விட கடுமையானதாகவோ அல்லது குறைவாகவோ தண்டனை வழங்குவது எனக்கு தவறான ஒன்றாகும்" என்றார். http://www.z9world.com/view.php?2edY…
-
- 0 replies
- 673 views
-
-
இந்திய அமைதிப்படையினரால் யாழ். ஆஸ்பத்திரி ஊழியர் 21 பேர் படுகொலையுண்ட நினைவு நாள் யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆண்டு ஒக்ரோபர் 21 ஆம், 22 ஆம் திகதிகளில் இந்திய அமைதிப்படையினரால் கொல்லப்பட்ட 21 பணியார்களின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. கடமை நேரத்தில் பலியான இந்த 21 பணியாளர்களினதும் நினைவாக வைத்தியசாலையில் உள்ள அவர்களுடைய உருவப் படங்களுக்கு சுடர் ஏற்றி மலரஞ்சலி செய்யும் நிகழ்வு இடம்பெறும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. கொல்லப்பட்ட பணியாளர் களின் உறவினர்கள், வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலைப் பணியாளர்கள் எனப் பலர் இந்த நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தப் படுகொலைச் சம்பவத்தில் யாழ். போதனா…
-
- 0 replies
- 582 views
-
-
இராவணனை வழிபடக்கூடிய பழங்குடி மக்கள் இந்தியாவில் இருக் கிறார்கள். இராமாயணம் – ஆரிய திராவிடப் போராட்டத்தையே குறிக் கிறது என்றார், மறைந்த ஜவகர்லால் நேரு. நேரு குடும்பத்தில் வந்ததாகக் கூறிக் கொள்ளும் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும், குடியரசுத் தலைவரும் டெல்லியில் இராவணன் உருவத்தை எரிக்கும் ‘ராமலீலா’ ஆரியத் திருவிழாவில் பங்கேற்று, தென்னாட்டு மக்களை திராவிடர்களை இழிவுபடுத்தி இருக்கிறார்கள். மாவீரர் இராவணன் பூமியில் வாழ்ந்த ஈழத் தமிழர்களை அழித் தொழித்தக் கூட்டம், மீண்டும் ஆர்ப்பரிக்கிறது. ‘இராமன் பிறந்த இடத்தை’ உயர்நீதி மன்றங்கள் தீர்மானிக்கின்றன. ‘இராவணன்’ அழிவில் சோனியா குடும்பம் மகிழ்ச்சி கூத்தாடுகிறது. அன்று ராஜாஜியின் ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்ற இராமா…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஊட்டி: விடுதலைப் புலிகள் [^] இயக்கம் மீதான தடை நீங்கும் வரை ஓய மாட்டோம். இப்போது நடக்கும் விசாரணை நம்பிக்கை தருவதாக உள்ளது, என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ததற்கு போதிய காரணங்கள் இருகின்றனவா, இல்லையா என்பதை விசாரிப்பதற்காக சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் தலைமையில் மத்திய தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயத்தின் கூட்டம் ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் காலை 11 மணிக்கு நடந்தது. இந்த கூட்டத்தில் தீர்ப்பாயத்தின் தலைவர், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் தலைமையில் 13 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த அமர்வின்போது நேரில் ஆஜரான மதிமுக பொத…
-
- 0 replies
- 562 views
-
-
வாஷிங்டன், அக்.19: அமெரிக்க வாழ் இந்தியப் பேராசிரியர் சுப்ரா சுரேஷ், வாஷிங்டனில் உள்ள தேசிய அறிவியல் அறக்கட்டளை (என்.எஸ்.எப்) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மிக உயர்ந்த அறிவியல் அமைப்பாக என்எஸ்எப் விளங்கிறது. இவரது நியமன உத்தரவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதி செய்துள்ளார். அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்படும் 740 கோடி டாலரை நிர்வகிக்கும் பொறுப்பு இவரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் அமைப்பாக என்எஸ்எப் திகழ்கிறது. இதன்கீழ் 2,000 நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஏற்கெனவே இப்பொறுப்பில் இருந்த ஜான் ஹோல்ட்ரன், அமெரிக்க அதிபரின் ஆலோசகராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இந்த அறக்கட்டளையின் 13-வது …
-
- 0 replies
- 691 views
-
-
நூறு வயதைக் கடந்தும், ஆராய்ச்சி படிப்புக்கு (பிஎச்.டி.,) விண்ணப்பித்துள்ளார் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முதியவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான போலராம் தாஸ். கடந்த வாரம், தன் 100வது பிறந்த நாளைக் கொண்டாடிய தாஸ், கவுகாத்தி பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி., சேர்ந்துள்ளார்.மனைவியை இழந்த இவருக்கு ஒரு மகள், ஐந்து மகன்கள், 10 பேரன், பேத்திகள் மற்றும் ஒரு கொள்ளுப் பேத்தி உள்ளனர். இவருக்கு அவரது மகளே ஆசிரியராக இருந்து வழிகாட்டுதல்களை வழங்குகிறார் என்பது தான் குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும். இது குறித்து தாஸ் உற்சாகத்துடன் கூறியதாவது:பிஎச்.டி., படிப்பை படிக்க வேண்டும் என்பது பல நாள் கனவு. என் 100 வயது அனுபவத்தில், அரசியல், நிர்வாகம், மதம், சமுதாயம் என எல்லாவற்றிலும் பல சாத…
-
- 0 replies
- 607 views
-
-
. தலைப்பாகைப் பிரச்சினை: பொற்கோயிலுக்குச் செல்லமாட்டார் ஒபாமா!! டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமா அடுத்த மாதம் இந்தியா வரும்போது அமிர்தசரஸுக்கு செல்ல மாட்டார் எனத் தெரியவந்துள்ளது. ஒபாமா, நவம்பர் 6-ம் தேதி மும்பை வருகிறார். அங்கு ஒருநாள் தங்கிய பின்னர் தில்லிக்கு செல்கிறார். முன்னதாக மும்பையில் இருந்து பொற்கோயிலைப் பார்வையிடுவதற்காக அமிர்தசரஸுக்குச் செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவருடைய பயணத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள் காரணமாக அவர் அங்கு செல்லமாட்டார் எனத் தெரிகிறது. ஒபாமாவின் இந்திய வருகையை முன்னிட்டு வெள்ளை மாளிகை அதிகாரிகள் குழு கடந்த மாதம் இந்தியா வந்தது. ஒபாமா பொற்கோயிலுக்குச் செல்லும்போது பாரம்பர…
-
- 1 reply
- 687 views
-
-
பேரழிவுக்கான ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி 2003 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி ,அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அதன் நேசநாடுகள் ஈராக்கின் மீது போர்தொடுத்தன. 2002 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 1441 நிறைவேற்றியது. அது ஈராக்கை ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுத ஆய்வாளர்கள் ஈராக்கிடம் பேரழிவிற்கான எந்த வித ஆயுதமும் இல்லை என்பதனை உறுதிப்படுத்த ஒத்துழைக்குமாறு கூறியிருந்தது.ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு சரி பார்த்தல் மற்றும் சோதனைக் குழு பேரழிவிற்கான எந்த வித ஆயுதங்களும் ஈராக்கிடம் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை.இருப்பினும் ஈராக்கின் ஆயுத இருப்பு அறிக்கையின்படி நிச்சயமாக கூறமுடியவில்லை என்று கூறியது. அமெரிக்காவால் அனுப்பப்பட்ட ஈராக் ஆய்வுக்குழு 1991 ஆம் ஆண்டிலே…
-
- 3 replies
- 916 views
-
-
சென்னை : விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி தமிழ் அமைப்புகள் நாளை சென்னையில் நடத்த உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை திடீரென தடை விதித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விடுதலைப்லிகள் மீதான தடையை நீக்குவது தொடர்பான விசாரணை தீர்ப்பாயத்தின் 3வது கட்ட ஆலோசனைக் கூட்டம் உதகையில் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், புலிகள் அமைப்பின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இயக்குநர் புகழேந்தி தலைமையில் பனகல் மாளிகை முன்பு 50 மீட்டர் துணி பேனரில் கையெழுத்து இயக்கப் போராட்டம் நாளை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு வார காலத்திற்கு முன்பாக அனுமதி பெற வேண்டும் என்று கூறி மாநகர காவல்துறை இதற்கு அனுமதி மறுத்துள்ளது. …
-
- 1 reply
- 699 views
-
-
சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோ வ்ஸ் சாலையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீடு உள்ளது. இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்நிலையில் நேற்று (அக்.17) நள்ளிரவில் ப.சிதம்பரம் வீட்டின் பின்புறத்தில் உள்ள மாடி வீட்டில் மூன்று இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களது கையில் டிஜிட்டல் கேமராக்கள் இருந்தது. ப.சிதம்பரம் வீட்டை புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது. உடனே கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்து ஓடிச் சென்று இளைஞர்களை பிடித்தனர். வீட்டின் கீழே நின்று கொண்டிருந்த மேலும் 2 பேரையும் பிடித்து ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இன்ஸ்பெக்டர் மோகன் புகைப்படம் எடுத்த 5 இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் 5 பேரும்…
-
- 3 replies
- 1.1k views
-
-
குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ தமிழ் சினிமா ஹீரோக்களை ஜீரோக்களாக்கவும், தனது குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்கவும் முயல்கிறார் கருணாநிதி என்றார் ஜெயலலிதா. மதுரையில் திங்கள்கிழமை நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் கருணாநிதி குடும்பத்தின் சினிமா ஆதிக்கம் குறித்து கடுமையாக விமர்சித்தார் அதிமுக பொதுச் செயலாளர். அவர் பேசுகையில், "தமிழ் சினிமாவையே தன் கைக்குள் போட்டுக் கொள்ளப் பார்க்கிறார் கருணாநிதி. இவருக்கு எதிராக எந்த ஹீரோவாவது பேசினால் உடனே அவர்களை வீட்டுக்கு அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். முன்னணி ஹீரோ ஒருவரை சமீபத்தில் அப்படித்தான் திட்டினார் கருணாநிதி. வீட்டுக்கு வரவைத்து அசிங்கமாகப் பேசி அனுப்பியுள்ளார். இன்னொர…
-
- 4 replies
- 798 views
-
-
வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பாடலை உருவாக்குவதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அனுகவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.எல்.குரேஷி கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாட்டு மக்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பாடலை உருவாக்க தீர்மானித்துள்ளோம். இதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அணுக திட்டமிட்டுள்ளோம். அவரை அணுகி அவரிடமிருந்து விழிப்புணர்வு பாடலைப் பெற்று, காட்சிப்படுத்தி, அதை நாடு முழுவதும் ஒளிபரப்பி வாக்களிப்பதன் அவசியத்தை மக்களிடையே பரப்பத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் இதுதொடர்பாக ரஹ்மானை தேர்தல் ஆணையம் அணுகும் என்றார். http://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/9-r…
-
- 2 replies
- 690 views
-
-
புலிகள் மீதான தடையை நீக்கு. கையெழுத்து இயக்கம் அன்பார்ந்த தோழர்களே, புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தோழர் புகழேந்தி தங்கராஜ் எடுக்கும் முன் முயற்சியில், ஒரு கையெழுத்து இயக்கம் நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது. இது குறித்து, காவல்துறையிடம் அனுமதி கேட்டு அளித்த கடிதத்திற்கு பதில், திங்கட்கிழமை வரும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பாக சென்னை மெமோரியல் ஹால் அருகே, இதே காரணத்தை வலியுறுத்தி செவ்வாயன்று, ஆர்ப்பாட்டம் நடத்த உத்தேசிக்கப் பட்டு, அதற்கும் அனுமதி கேட்டு அதன் செயலர் புகழேந்தி கடிதம் அளித்துள்ளார். உங்களுக்கு அனுமதி ஏன் மறுக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு, வெள்ளியன்று, தமிழக மக்கள் உர…
-
- 0 replies
- 649 views
-
-
தமிழ் தேசிய தோழர் - நிகரன் விடைகள் மாவோயிஸ்டுகளை ஒழிக்க வான்படையைப் பயன்படுத்த வேண்டும் என்று சிபிஎம் தலைவர்களில் ஒருவரான சீத்தாராம் எச்சூரி கூறியுள்ளாரே அது சரியா? காங்கிரஸ்காரர்கள், பா.ஜ.க.வினர் போன்ற இந்திய ஆளும் வர்க்க அரசியல் தலைவர்கள் கூட சொல்லாத வான்படைத் தாக்குதலை சி.பி.எம். கட்சி வலியுறுத்துகிறது. இந்திய ஆளும் வர்க்கத்தின் தீவிர இடதுசாரிப் பிரிவுதான் சி.பி.எம் கட்சி என்று நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இந்தோனேசியப் பன்னாட்டு முதலாளி நிறுவனமான சலீம் பிரதர்ஸ்க்காக மேற்கு வங்கம் நந்திகிராமத்தில் உழவர்களின் நிலங்களைத் துப்பாக்கி முனையில் பறித்த ஆட்சிதான் சி.பி.எம் ஆட்சி. அங்கு பலரைச் சுட்டுக் கொன்றார்கள். காவலர் சீருடை அணிவித்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
”இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு தமிழின துரோகி. அவர் மலேசியாவுக்குள் காலடி வைக்கின்றமையை அனுமதிக்கவே முடியாது.” இப்படிச் சீறுகின்றது மலேசியாவின் அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்றான Malaysia Consumer Advisory Association. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் 27 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கோலாலம்பூர் வருகின்றார். இந்நிலையில் மன்மோகன் மலேசியா வருகின்றமையை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்து freemalaysiatoday இணையப் பத்திரிகைக்கு காட்டமாக பேட்டி வழங்கி உள்ளார் Malaysia Consumer Advisory Association இன் தலைவர் எம்.வரதராயு. அவரது பேட்டி வருமாறு:- கடந்த இலங்கையில் 80 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளில் இந்தியாவின் பங்…
-
- 0 replies
- 655 views
-
-
உலகின் மிகவும் நீளமான சுரங்கப்பாதையைத் தோண்டும் நடவடிக்கை இன்று நிறைவடையவுள்ளது. சுவிற்சர்லாந்தில், அல்ப்ஸ் மலைத் தொடருக்குக் கீழே 57 கிலோ மீற்றர் நீளமான கொதார்ட் (Gotthard) என்ற பெயரைக் கொண்ட சுரங்கப் பாதையை அமைக்கும் பணி, 14 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமாகியது. இன்று இரண்டு திசைகளில் இருந்தும் தோண்டிவரும் பணியாளர்கள் இடையில் இருக்கும் பாறைகளை உடைத்துத் தொடர்பை ஏற்படுத்துவார்கள். எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு அந்தப் பாதையில் தொடரூந்துகள் இயங்க ஆரம்பிக்கும். இத்தாலியின் மிலான், மற்றும் சுவிற்சர்லாந்தின் சூரிக் ஆகிய நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து நேரத்தை அந்தப் பாதை கணிசமாகக் குறைக்கும். பாதை திறக்கப்பட்ட பின்னர், நாளொன்றுக்கு 300 வரையான தொடரூந்துகள், மண…
-
- 3 replies
- 797 views
-
-
காஷ்மீர், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவின் உணர்வுகளை சீனா மதிக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார். தில்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வரும்போது, சமீப காலமாக இந்திய மாநில விவகாரங்களில் சீனா தலையிடுவது குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் எஸ்.எம். கிருஷ்ணா கூறினார். "சீனாவுடனான பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்களின் நிலை தொடர்ந்து நீடிக்கும். இந்திய விவகாரங்களில் சீனா எங்கள் உணர்வுகளை மதிக்க வேண்டும்." என்றும் அவர் தெரிவித்தார். http://www.dinamani.com/edition/story.aspx? இந்திய- சீனா ரயில்வே பாதை அருணாச்…
-
- 4 replies
- 823 views
-
-
”ஜெயா ரீ.வியின் சென்னை அலுவலகம் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்துவோம்.” இப்படி அத்தொலைக்காட்சி சேவை அலுகத்துக்கு தொலைபேசி அழைப்புக்களை விடுத்து மிரட்டி உள்ளார் புலிகள் இயக்க ஆதாரவாளர் ஒருவர். இலங்கைத் தமிழில் பேசி இருக்கின்றார். கேணல் என்று அவரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஜெயா ரீ.வி புலிகள் இயக்கத்துக்கு எதிரான செய்திகளை ஒளிபரப்புச் செய்து வருவதனாலேயே இம்முடிவை எடுத்துள்ளனர் என்று கூறி உள்ளார். கடந்த புதன்கிழமை புலிகள் இயக்கத்துக்கு எதிரான செய்தி ஒன்றை ஜெயா ரீ.வி ஒளிபரப்பியதைத் தொடர்ந்தே இம்மிரட்டல்கள் இடம்பெற்றிருக்கின்றன. செய்தி ஒளிபரப்பாகி ஐந்து நிமிடங்களில் முதலாவது மிரட்டல் வந்திருக்கின்றது. எதிர்வரும் 18 ஆம் திகதி மதுரையில் இடம்பெற இருக்கும் …
-
- 5 replies
- 771 views
-
-
அரசியல் உள்நோக்கங்கள் நோபல் பரிசுக்கும் உண்டு நோபல் பரிசுகள் மீது உலகம் முழுவதும் உள்ள பொதுவான மரியாதைக்குக் காரணம் பரிசுக்கான தொகை மட்டுமல்ல, நோபல் பரிசுத்திட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது என்ற நோக்கமும்தான். டைனமைட் வெடிகுண்டு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருள்களைக் கண்டுபிடித்து கோடிகோடியாய்ப் பொருளீட்டியவரான ஸ்வீடன் நாட்டு வேதியியல் வல்லுநர் ஆல்பிரட் நோபல், அழிவுக்குப் பயன்படும் தம் கண்டுபிடிப்புகளால் மன உளைச்சலுக்கு உள்ளானவராக, தமது மரணத்திற்குப்பின் நோபல் பரிசு அறக்கட்டளை அமைக்கப்படவும், தங்களது கண்டுபிடிப்புகளால் உலகளாவிய மனித சமுதாய மேம்பாட்டுக்குப் பங்களிக்கிற அறிவியலாளர்களுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படவும் விருப்பம் தெரிவித்து உயில் எழுதி வைத்திருந்தார். …
-
- 2 replies
- 603 views
-
-
இந்தியா, சீனாவுடன் கல்வி ஆயுதப் போட்டி - ஒபாமா எச்சரிக்கை இந்தியா, சீனா ஆகியவற்றுடன் கல்வி ஆயுதப் போட்டி நிலவுவதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எச்சரித்துள்ளார். அதிபரின் வெள்ளை மாளிகை ரோஜா தோட்டத்தில் இன்று செய்தியாளரிடம் பேசிய அவர், இந்த நிலையில் குடியரசு கட்சியினர் கோரியுள்ள கல்வி பட்ஜெட் குறைப்பு அமெரிக்க நலன்களுக்கு எதிரானதாக அமையும் என்றார். இப்போது உலகெங்கும் , சீன முதல் ஜெர்மனி வரையும், இந்தியா முதல் தென் கொரியா வரையிலும் , கல்வி ஆயுதப் போட்டி ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் கல்வி பட்ஜெட் குறைப்பு என்பது அமெரிக்காவை பொறுத்த வரை தன்னிச்சையான ஆயுதக் குறைப்பு போன்றது என்றும் இப்போதைக்கு இதனை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார். இன்றைய நிலையில் எந்…
-
- 0 replies
- 519 views
-