Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க இராஜதந்திர ஆவணங்களை வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ் இணையத்தளம் தொடர்பாக உலக நாடுகளுக்கிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் சீனா – வடகொரியா ஆகிய நட்பு நாடுகளுக்கிடையிலான நட்பு முறிவடையும் நிலை உருவாகியுள்ளது. வடகொரியா மோசமான குழந்தை என சீனா தெரிவித்துள்ளதாக அமெரிக்க இராஜதந்திரத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இரகசிய ஆவணமொன்றில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திச்சேவையொன்று தெரிவிக்கிறது. ஆசியாவில் சீன ஆதிக்கத்தன்மை இதன்மூலம் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் மூலம் வெளியாகிய தகவல்கள் எவ்வாறு கசிந்தது என்பது குறித்து அமெரிக்க தீவிரமாக ஆராய்…

    • 0 replies
    • 431 views
  2. நடிகர் விஜய் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் திங்கள்கிழமை திடீரென ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார். தன்னுடைய ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் இயக்கமாக மாற்றுவது குறித்தும், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்தும், தலைமை அலுவலகம் அமைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கடந்த வருடம் அரசியல் பிரவேசம் குறித்து தன் கருத்தை வெளியிட்ட நடிகர் விஜய், காங்கிரஸ் கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக ராகுல் காந்தியையும் அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், காங்கிரஸில் இணைய ராகுல் கோரிக்கை வைத்ததாகவும், அப்படி இணைந்தால் இளைஞர் காங்கிரஸில் முக்கிய பதவி தர வேண்டும் என விஜய் கேட்டதாகவும் செய…

    • 0 replies
    • 513 views
  3. எதிராளியைவிட ஒரு மணி நேரமாவது கூடுதலாகச் சிந்தித்தால்தான் அவனை வெல்ல முடியும் என்பது போர்த் தந்திரங்களில் ஒன்று. உலகம் முழுவதும் இதனை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளோ, போராளி இயக்கங்களோ பின்பற்றுகின்றனவோ.. இல்லையோ.. யூத தேசமான இஸ்ரேல் மட்டுமே தாரக மந்திரமாகப் பின்பற்றி வருகின்றது. தான் தூங்கினால் பாலஸ்தீனம் முழித்துக் கொள்ளும் என்பதில் இன்றைக்கும் தெளிவான சிந்தினையுடன் ஆட்சி நடத்தி வருகிறார்கள் இஸ்ரேலியர்கள். மத்திய கிழக்காசியாவில் தனிப்பெரும்பான்மையுடன் அமெரிக்காவைப் போல் சர்வாதிகாரத்துடனும், சகல செல்வாக்குடனும் இருந்து வந்தாலும், ஒவ்வொரு நொடியையும் தனது பாலஸ்தீன எதிர்ப்பிலும், தனது நாட்டின் பாதுகாப்பு பற்றிய கண்காணிப்பிலும் உறுதியுடனேயே இருக்கிறது இஸ்ரேல். …

  4. பெரியார் திராவிடர் கழக கொளத்தூர் நகர செயலாளர் தோழர். பெ.இளஞ்செழியன் 24.11.10 மாலை 7.00 மணியளவில் வாகன விபத்தில் மரணமடைந்தார். கழக செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் கழகம் இதுவரை நடத்திய ஆர்ப்பட்டம், போராட்டம் அனைத்திலும் பங்கேற்று சிறைக்கும் சென்றுள்ளார். ஒவ்வொரு விழாக்காலங்களிலும் தகுந்த துண்டறிக்கை விநியோகித்து பெரியாரிலை மக்களிடையே பரப்பியவர். சிங்கள இராணுவத்தால் ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல் அதிகரித்த காலங்களில் தமிழக, இந்திய அரசுகளை கண்டித்து பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார். - மீனகம்

  5. விக்கிலீக்ஸ் விவகாரத்தில் பொறுத்திருந்து முடிவு: இந்தியா விக்கிலீக்ஸ் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்கள் குறித்த விவகாரத்தில் பொறுத்திருந்து செயல்படுவோம் என்று இந்தியா அறிவித்துள்ளது. இத்தகவலை வெளியுறவுத்துறை இணையமைச்சர் ப்ரிநீத் கெளர் இன்று தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஐநா சபை மற்றும் பல நாடுகளின் தலைவர்களை அமெரிக்கத் தூதரகங்கள் உளவு பார்ப்பது குறித்து விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ப்ரிநீத் கெளரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இவ்வாறு கூறினார். "விக்கிலீக்ஸ் தகவல்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவை. அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு மிகச்சிறந்த உறவு உள்ளது. வி்க்கிலீக்ஸ் ஆவணங்கள் குறித்து அவர்கள் ஏற்கெனவே இந்தியாவை எச்சரித்…

    • 2 replies
    • 813 views
  6. இந்தியாவின் கருப்புப் பணம் எவ்வளவு என்பதை ஆய்வுகள் நடத்தி அறிந்து கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளாக மத்திய நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த 1985ஆம் ஆண்டு நாடு முழுவதும் கருப்பு பணம் எவ்வளவு இருக்கிறது என்பதை அறிய முதல் முறையாக ஆய்வு நடத்தப்பட்டது. நேஷனல் இன்ஸ்டிடிïட் ஆப் பப்ளிக் பைனான்ஸ் அண்ட் பாலிசி என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது. அப்போது ரூ.31 ஆயிரத்து 584 கோடி முதல் ரூ.36 ஆயிரத்து 786 கோடி வரை கருப்பு பணம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தத் தொகை அப்போதைய இந்திய பொருளாதாரத்தில் 16.53 சதவீதம் ஆகும். அதன் பின் இந்தியப் பொருளாதாரம் 31 மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, தற்போதைய நிலையில் எவ்வளவு கருப்பு பணம் இருக்கிறது என்று அறிய ஆய்வு நடத்த மத்தி…

    • 0 replies
    • 655 views
  7. விக்கி லீக்ஸ் இணைய தளம் நாடுகளுக்கு இடையேயான முக்கிய ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளது. 1. ஈரானை தாக்க, சவுதி அரேபியா அமெரிக்காவை வலியுறுத்தியதாகவும், 2. பாக்., அணு ஆயுதங்கள் குறித்து இங்கிலாந்து, அமெரிக்காநாடுகள் அச்சம் அடைந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும், 3. ஒருங்கிணைந்த கொரிய மீது தாக்குதல் நடத்தகோரி தென்கொரியா கூறியதாகவும் தகவல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை, விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் அபாயகரமானதும், பிரச்னைக்குரியதுமாகும் என தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகம் அனுப்பிய இரண்டரை லட்சம் ரகசிய தகவல்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு பரபரப்புக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=135966 …

    • 3 replies
    • 969 views
  8. குற்றம் செய்த வெளிநாட்டவர்களை திருப்பு அனுப்புதல் சட்டமானது சில வகையான குற்றங்களை செய்த வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு அகற்றப்படுவார்கள். ஞாயிற்றுக்கிழமை நடந்த மக்கள் வாக்கெடுப்பின்படி ஒரு மாநிலத்தை தவிர மாநிலங்களில் 26 (கான்ரான்) இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். சர்வதேச சட்டங்களை மீறாத வகையில் இந்த வெளியேற்றங்கள் நடக்கும் என சட்ட அமைச்சர் தெரிவித்தார். கடந்த வருடங்களில் 300-400 பேர் நாட்டை விட்டு அகற்றப்பட்டனர் குற்றங்கள் செய்தமைக்கு. இந்த புதிய சட்டத்துடன் இந்த தொகை 1500 ஆகலாம் என அஞ்சப்படுகின்றது. Swiss approve automatic expulsion of foreign criminals GENEVA — Switzerland endorsed Sunday a far-right push to automatically expel foreign residents con…

    • 0 replies
    • 437 views
  9. 1. The Republic of Ireland will receive a bail-out worth about 85bn euros ($113bn; £72bn). 2. European minister agreed to the deal that will see 35bn euros supporting the Irish banking system with the remaining 50bn euros going towards the government's day-to-day spending. 3. An average interest rate of 5.8% will be payable on the loans, above the 5.2% paid by Greece for its bail-out.

    • 0 replies
    • 619 views
  10. கருணாநிதியின் சாதனை வரைபடம்

  11. வட கொரியா, தென் கொரியா இடையிலான பதட்ட நிலை மேலும் அதிகரித்துள்ளது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கப் படைகள் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து தனது பகுதிக்குள் ஏவுகணைகளை தயார் நிலையில் வைக்கத் தொடங்கியுள்ளது வட கொரியா. தென் கொரிய தீவு மீத வட கொரியா திடீர் பீரங்கித் தாக்குதல் நடத்தி 2 ராணுவ வீரர்களைக் கொன்றது. இந்தத் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதனால் ஆத்திரமடைந்த தென் கொரியாவும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் தற்போது அமெரிக்காவும் மூக்கை நுழைத்துள்ளது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அது களம் இறங்கியுள்ளது. தென் கொரியாவுடன் இணைந்து அமரிக்கப் படைகள் கூட்டு ராணுவப் பயிற…

  12. அமெ‌‌ரி‌க்காவு‌ம், தெ‌ன் கொ‌ரியாவு‌ம் இணை‌ந்து போ‌ர் ஒ‌த்‌திகை நட‌த்துவதா‌ல் கொ‌‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌தி‌ல் போ‌ர் மூளு‌ம் அபாய‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக வட கொ‌‌ரியா எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது. தெ‌ன் கொ‌ரியா‌‌வி‌ன் ‌லியோ‌ன் ‌பியோ‌ல் ‌தீ‌வி‌ல் வட கொ‌ரியா கு‌ண்டுகளை ‌வீச‌ி தா‌க்‌கியது. இ‌தி‌ல் 4 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். இத‌ற்கு ப‌‌திலடியாக தெ‌ன் கொ‌‌ரியாவு‌ம், வட கொ‌ரியா ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தியது. இதை‌த் தொட‌ர்‌ந்து வட கொ‌ரியா ‌மீது போ‌ர் தொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று தெ‌ன் கொ‌ரியாவை சே‌ர்‌‌ந்த நூ‌ற்று‌க்கண‌க்கான மு‌ன்னா‌ள் போ‌ர் ‌வீர‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். இ‌ந்‌நில‌ை‌யி‌ல் 75 போ‌ர் ‌விமான‌ங்க‌ள், 6 ஆ‌யிர‌ம் ‌வீர‌ர்களுட‌ன் அமெ‌ரி‌க்கா‌வ…

    • 0 replies
    • 447 views
  13. விக்கிலீக்ஸ் என்றால் என்ன ? http://www.youtube.com/watch?v=zRo4rtN3ACk இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரதொடக்கத்தில் புதிதாக வார இருக்கும் விக்கிலீக்ஸ் அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் ஆழ்ந்த சங்கடத்துக்குள் தள்ளும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இம்முறை இந்த இணையத்தளம் முன்பு வெளியிட்ட இராணுவ இரகசியங்கள் அல்லாது "இராசதந்திர இரகசியங்களாக" இருக்கும். இது முன்பு வெளியிட்ட அறிக்கையை விட ஏழு மடங்கு பெரிதாக இருக்கும். இது அமெரிக்காவின் இராசாங்க திணைக்கள செயலாளர் நாயகம் ஆன ஹிலரி கிளின்ரனை நித்திரை கொள்ள விடாது என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதை உறுதி செய்யுவது போல உலக நாடுகளில் உள்ள தனது தூதுவர்கள் மூலமாக இதைப்பற்றி அறிவுறுத்தல் செய்து முற்பாதுகாப்பாக தன…

    • 2 replies
    • 1.1k views
  14. ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா, தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் ‌‌சண்டை நடத்தி வரும் வேளையில் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயை, தலிபான் முக்கிய தலைவர்கள் திடீரென ரகசியமாக சந்தித்து பேசியது பரபரப்பினை ஏற்படுத்தி இருந்தனர். இப்பொழுது இவர் ஒரு தலிபான் நபர் அல்ல எனவும் இவர் நேச படைகளை ஏமாற்றி பணம் வேண்டி தலைமறைவாகி விட்டார். இது பெரிய அவமானமாக பார்க்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுத்தும் பொருட்டு அதிபர் ஹமீத் கர்சாய் அமைதிக்குழுவினை நியமித்துள்ளார். இதில் பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் உள்ளன. இந்நிலையில் தலிபான்கள்,மற்றும் அல்-கொய்தா அமைப்பைச் சேர்நத மூன்று முக்கிய தலைவர்கள் அதிபர் ஹமீத் கர்சாயை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர். இ…

    • 0 replies
    • 532 views
  15. நத்தார் தினத்தையொட்டி மரம் கட்டவிருந்த நிகழ்வில் குண்டு வெடிக்கப்பட இருந்ததா? அமெரிக்காவில் ஒருவர் கைது.

    • 0 replies
    • 479 views
  16. மகளையும், மகளின் காதலனையும் படுகொலை செய்ய முயற்சித்த இலங்கைத் தமிழருக்கு, கனேடிய நீதிமன்றம் ஐந்து ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 47 வயதான செல்வநாயகம் செல்லத்துரை என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மகளையும் மகளின் காதலனையும் வாகனத்தில் மோதி கொலை செய்ய முயன்றதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், மூன்று மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது செல்லத்துரை குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மகள் தமது அறிவுரைகளை கேட்காத காரணத்தினால் அவரது காதலன், மற்றும் மருமகன் ஆகியோரை வாகனத்தில் மோத முயற்சித்ததாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த யுவதியை மூன்று தினங்கள…

    • 8 replies
    • 734 views
  17. Nov 23, 2010 / பகுதி: உலக வலம் / தாயகன் கொரிய தீப கற்பத்தில் மோதல் அணுவாயுதம் தயாரிப்பதாக நேற்று குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருந்த வட கொரியா, தென் கொரியா மீது ஆட்டிலறித் தாக்குதல் மேற்கொண்டிருப்பதாகவும், தென் கொரியா பதில் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தென் கொரியாவிற்குச் சொந்தமான சுமார் ஆயிரம் பேர் வரையில் செறிவாக வாழும் தீவொன்றை நோக்கி வட கொரிய 100 ஆட்லறி எறிகணை வீசி இருப்பதாகவும், இவற்றில் 12 எறிகணைகள் மக்கள் குடியிருப்புக்களில் வீழ்ந்து வெடித்து பலர் காயமடைந்திருப்பதாகவும் தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது. பதிலுக்கு தாமும் 60 வரையிலான எறிகணைகளை வீசியிருப்பதாகவும், போர் வானூர்திகளை அனுப்பி இருப்பதாகவும் தென் கொரியா அறிவ…

    • 3 replies
    • 872 views
  18. சீமானை சிறையிலேயே முடக்க நினைத்தால் புரட்சி வெடிக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தடா.ராசா அறிக்கை; தமிழக மீனவர்களை படுகொலை செய்து வரும் இலங்கை கடற்படையை கண்டித்து கடந்த ஜூலை 10-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சீமான் அவர்கள் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் நம் சொந்த இனத்தை கொன்றொழித்த சிங்கள அரசுடனான இந்திய அரசின் நட்புறவை கெடுக்கும் வகையில் பேசியதாக ஜூலை 12-ம் தேதி கைது செய்யப்பட்ட சீமானின் மீது ஜூலை 16-ம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டது.கடந்த நான்கரை மாதகாலமாக இவ்வழக்கின் மீதான விசாரனை நடைபெற்று வருகிறது. ஒவ்வொருமுறையும் இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் இழுத்தடிக்கும் நோக்கத்தோடு அரசு தரப்பினர் வா…

  19. மரண அடி வாங்கிய காங்கிரஸ் கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆனது என ஒரு சொலவடை உண்டு.. காங்கிரஸ் கட்சி விஷயத்தில் அது நடந்திருக்கிறது. ஏதோ உத்தர பிரதேசத்தில் தனித்து நின்று சில தொகுதிகள் வென்றதும்..இனி நாம் தான் என்ற இறுமாப்பும்..பேச்சில் ஆணவமும் கொண்டு திகழ்ந்தது காங்கிரஸ். அவர்களுக்கு சரியான பாடம் கற்பித்துவிட்டது பீகார்.. பீகார் மக்களே..காங்கிரஸிற்கு சரியான பாடம் புகட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதன் ஆட்டம் அதிகமாய் இருந்தது.திராவிடக் கட்சிகளும் அதன் துணையிருந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்னும் எண்ணத்தில் உள்ளன.அந்த எண்ணம் எவ்வளவு தவறானது என பீகார் முடிவுகள் தெரிவிக்கின்றன. அங்கும் மூன்று அணிகள்.. …

  20. நான் எந்த ஒரு நடிகருக்கும் விரோதி கிடையாது. ஆனால் யாராவது தமிழர்களைப் பழித்தால் அவர்களது குரல்வளையைக் கடிப்பேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன். இலங்கைக்கு யாரும் போக வேண்டாம் என்று பல்வேறு தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள், உலகத் தமிழர்கள் கோரிக்கை விடுத்து வந்தபோதிலும் அதை மதிக்காமல் நடிகை ஆசின் இலங்கைக்குப் போனார். போனதோடு நில்லாமல் ராஜபக்சே மனைவியோடும் பல இடங்களுக்கு சுற்றுலா போல சென்று வந்தார். இதுதொடர்பாக நடிகர் சங்கம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியும் இதுவரை ஆசின் மீது உருப்படியாக எதுவும் எடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் தமிழ் நடிகர்களை மறைமுகமாக கேலி செய்வது போல பேசிய நடிகர் ஆர்…

  21. மும்பை, நவ.26- மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான தனது வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். மும்பையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். நமது அண்டை நாடுகளை முழுமையாக நம்பிவிடுகிறோம். ஆனால், மும்பை தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது தொடர்பான உறுதிமொழியை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை. இதில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டுள்ளோம். மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் குரல் பதிவை கூட ஆய்வுக்காக இன்னும் பாகிஸ்தான் தரவில்லை. கொடூரமான மும்பை தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் கடைபிடிக்கப்படுகின்ற இந்த நேரத்தில், பாகிஸ்தான் …

  22. அணு குண்டுகளை ஏந்திச் சென்று தாக்கக்கூடிய அக்னி-1 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. ஒரிசா மாநிலம் பாலசூரில் உள்ள வீலர் தீவிலிருந்து அக்னி-1 ஏவுகணை, வியாழக்கிழமை வெற்றிகரமாக ஏவப்பட்டது. அக்னி-1 ஏவுகணை தரையிலிருந்து 700 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்த சோதனை எவ்வித இடையூறின்றி, வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்று ஒருங்கிணைந்த சோதனைப் பிரிவு (ஐடிஆர்) இயக்குநர் எஸ்.பி. தாஸ் தெரிவித்தார். இந்த ஏவுகணை முற்றிலும் உள்நாட்டிலேயே, இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. திட எரிபொருள் மூலம் இயங்கும் இந்த ஏவுகணை வியாழக்கிழமை காலை 10.10 மணி அளவில் ஏவி சோதித்துப் பார்க்கப்பட்டது. சோதனையின்போது அனைத்து நிகழ்வுகளும் கன கச்சிதமாக இருந்த…

    • 0 replies
    • 504 views
  23. வரும் 2012-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சித் தலைவர் சாரா பாலின் போட்டியிடுவார் என்று ஊகிக்கப்படுகிறது. அந்தத் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் போட்டியிட்டால் அவரைத் தோற்கடிப்பேன் என்று அவர் சவால் விட்டுள்ளார். பாலின் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் குடியரசுக் கட்சி தேர்தலில் தோல்வியடைந்தது. இந்தநிலையில், 2012ல் நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும், அது பற்றி தனது குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர் அலாஸ்கா மாகாண ஆளுநராக இருந்தவர். பின்னர் ராஜினாமா செய்து விட்டார். அவரிட…

    • 4 replies
    • 694 views
  24. கிரேமெளத்: நியூசிலாந்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்ட 29 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கிரேமெளத் பகுதியில் உள்ள பைக் ரிவர் நிலக்கரிச் சுரங்கத்திற்குள் இந்த 29 பேரும் சிக்கியிருந்தனர். கடந்த ஐந்து நாட்களாக இவர்கள் உள்ளேயே தவித்து வந்தனர். வெடிவிபத்து ஏற்பட்டதில் சுரங்கம் மூடிக் கொள்ளவே இவர்கள் அனைவரும் உள்ளே மாட்ட நேரிட்டது. இந்தநிலையில் இன்று பிற்பகல் இன்னொரு வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் சுரங்கம் முற்றிலுமாக மூடி விட்டது. இதையடுத்து உள்ளே சிக்கியிருந்த 29 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று போலீஸ் கண்காணிப்பாளர் கேரி நோல்ஸ் கூறியுள்ளார். முதலில் நடந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து மிகவும் அபாயகரமான மீத்தேன் வாயு சுரங்கத்திற்குள் பரவியிருந்தது.…

    • 0 replies
    • 423 views
  25. பிரிட்டனின் Portsmouth நகரத்தில் சுற்றுவளைப்புத் தேடுதல், இலங்கையர் உட்பட எண்மர் கைது! நவ 24, 2010 Font size: Decrease font Enlarge font பிரித்தானியாவின் Portsmouth நகரத்தில் அந்நாட்டு பொலிஸார் தலைமையில் கடந்த திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்று வளைப்புத் தேடுதல் நடவடிக்கை ஒன்றின்போது இலங்கையர் ஒருவர் உட்பட சட்டவிரோத தொழிலாளர்கள் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஏனைய 07 பேரும் இந்தியர்கள் ஆவர். New Kwiki Marts கடைத் தொகுதிகள், மதுபான விற்பனை நிலையங்கள், தனியார் வீடுகள் ஆகியன உட்பட நகரம் முழுவதும் இத்தேடுதல் முடுக்கி விடப்பட்டது. கைது செய்யப்பட்ட 08 பேரும் சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கி இருந்து வேலை பார்த்திருக்கின்றனர் என்றும் வி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.