Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மியன்மார் நடக்கும் இனப்படுகொலையின் நெஞ்சைப் பிழியும் காட்சிகள் - மௌனம் கலைக்காத முஸ்லிம் நாடுகள் நாகரீகத்தின் உச்சத்தில் மனிதர்கள் வாழ்வதாக கருதப்படும் இக்கால கட்டத்தில் இப்படியொரு பயங்கரமும் நடைபெறுகின்றதா? என்று சிந்திக்கும் அளவு மியன்மார் – பர்மா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் உச்சத்தை அடைந்திருக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், கலவரங்கள் காரணமான ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு கடல் வழியாக தப்பி ஓடுகின்றார்கள். இரும்புத் திரை நாடு – மியன்மார் ( மறுபிரசுரம் 2015 ) பௌத்த மதத்தை ஆட்சி மதமாகக் கொண்டுள்ள மியன்மார் உலக நாடுகளினால் “இரும்புத் திரை நாடு” என்று அழைக…

  2. மியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா ரொகிங்யா முஸ்லீம்களிற்கு எதிரான இன சுத்திகரிப்பில் தொடர்புபட்ட நான்கு மியன்மார் படை அதிகாரிகளிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. மியன்மாரின் இராணுவ தளபதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிற்கு எதிராகவே அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது என அந்த நாட்டின் திறைசேரி திணைக்களம் அறிவித்துள்ளது. மியன்மாரில் உள்ள சிறுபான்மை இன சமூகத்தினரிற்கு எதிராக அந்த நாட்டின் படையினர் இனசுத்திகரிப்பு,படுகொலைகள் , பாலியல் வல்லுறவுகள்,சட்டவிரோத படுகொலைகள் மற்றும் ஏனைய பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என அமெரிக்க திறைசேரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மனித துயரத்தி…

  3. மியன்மார் மண்சரிவில் 162 பேர் பலி! மியன்மார் – வடக்கு பகுதியில் பச்சை மரகத கல் அகழ்வு இடம்பெறும் ஜாட் சுரங்கத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இறந்தவர்களில் இதுவரை 162 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று (02) காலை 6:30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 200 சுரங்க தொழிலாளர்கள் வரை மண்சரிவில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 162 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்த 54 பேர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். https://newuthayan.com/மியன்மார்-மண்சரிவில்-162-பே/

  4. மியன்மார்: ஆலங்கட்டி மழையில் சிக்கி 8 பேர் பலி மியன்மாரில் ஆலங்கட்டி மழையில் சிக்கி குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் புயலுடன் கூடிய இந்த ஆலங்கட்டி மழை பொழிவில் கோல்ஃப் பந்து அளவுக்கு நீர்க்கட்டிகள் விழுந்துள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடு ஓடுவதை தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன. இந்த புயல்காற்றில் 1700 பகோடாக்கள் (மியன்மாரின் பௌத்த வழிபாட்டுக் கோபுரங்கள்) சரிந்துள்ளதாக கூறப்படுகின்றது. மற்றபல கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. மியன்மாரின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவிய நீண்ட வெப்பக் காலநிலைக்குப் பின்னதாக இந்த புயல்காற்று வீசியுள்ளது. http://www.bbc.com/tamil/global/2016/04/160424_myanmar_hailstone?ocid=social…

    • 1 reply
    • 393 views
  5. மியன்மார்: இராணுவம் பற்றிய பேஸ்புக் கருத்துக்காக பெண்ணுக்கு சிறை மியன்மார் இராணுவம் (கோப்புப் படம்) மியன்மாரில் இராணுவத்தை ஏளனம் செய்து சமூக வலைத்தளம் ஒன்றில் கருத்துக்களை தெரிவித்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று 6-மாதம் சிறைத் தண்டனை அளித்துள்ளது. ஜனநாயக-ஆதரவு தலைவி ஆங் சான் சூ கியின் பாரம்பரிய ஆடைகளுடன், அந்நாட்டு இராணுவத்தின் புதிய சீருடையின் நிறங்களை ஒப்பிட்டு வெளியான பேஸ்புக் கருத்து தொடர்பிலேயே கடந்த அக்டோபர் மாதம் அந்தப் பெண் கைதுசெய்யப்பட்டார். எந்தவொரு தொலைத்தொடர்பு வலையமைப்பு மூலமாகவும் அவதூறு செய்வதை தடைசெய்யும் பரந்துபட்ட அர்த்தங்களை கொடுக்கக்கூடிய சட்டம் ஒன்றினாலேயே சாவ் சாண்டி டுன் என்ற அந்தப…

  6. மியான்மரில் அடுத்தடுத்து இரு பெரிய நிலநடுக்கங்கள்.. அண்டை நாடான தாய்லாந்திலும் அதிர்ந்த கட்டடங்கள் VigneshkumarUpdated: Friday, March 28, 2025, 12:49 [IST] மியான்மர்: மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பெரிய நிலநடுக்கங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலநடுக்கம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் உணரப்பட்டது. இதில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. பூமிக்கு அடியில் பல்வேறு டெக்டோனிக் தட்டுகள் இருக்கின்றன. அவை ஒன்றுடன் ஒன்று மோதும் போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதற்கிடையே மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் 7.7 & 6.4 என்று அடுத்தடுத்து ஏற்பட்ட பூக…

  7. மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின் முதல் முறையாக நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட ஆங் சான் சூகி 24 Views மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு முதல் முறையாக ஆங் சான் சூகி நீதிமன்றத்தில் நேரடியாக முற்படுத்தப்பட்டுள்ளார். மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை இராணுவம் அறிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இத…

  8. மியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா? 97 Views வரலாற்றில் பெரும்பாலான காலம் இராணுவ ஆட்சியில் இருந்த மியான்மரில், 2015ஆம் ஆண்டுதான் சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டு, ஆங் சான் சூகி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது. இதையடுத்து 2017ஆம் ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் புலம்பெயர்ந்தனர். இந்த சம்பவத்தால் ஆங் சான் சூகி தலைமை யிலான அரசு சர்வதேச ரீதியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த சூழலில் 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப் பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது மியான்மர…

  9. படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை மாலை மியான்மர் ராணுவம் வெடிகுண்டு வீசியதாக கூறப்படும் பகுதியில் சேதமடைந்த கட்டடங்களின் சில புகைப்படங்கள் பிபிசிக்கு அனுப்பப்பட்டுள்ளன கட்டுரை தகவல் எழுதியவர், ரெபெக்கா ஹென்ஷ்கே பதவி, பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன்ஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் மியான்மரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையிலும், ஏற்கெனவே போரால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டில் சில பகுதிகளில் ராணுவம் வெடிகுண்டு தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றது. இந்த தாக்குதல்கள், "அதிர்ச்சிகரமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என ஐ.நா சபை விவரித்துள்ளது. நிலநடுக்கத்துக்குப் பிறகு மக்களை மீட்பதற்கு நாம் முயற்சித்துவரும் வேளையில் ராணுவம் "வெடிகுண்டுகளை தொடர்ந்து வீசுவது…

  10. மியான்மரில் நிலநடுக்கம் கோப்புப் படம் இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவில் 6.8 என பதிவாகியுள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உண்டான நில அதிர்வுகள் தொலைவில் உள்ள நாடுகளிலும் உணரப்பட்டது. தாய்லாந்தின் பாங்காக் மற்றும் வங்கதேச தலைநகர் டாக்கா ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால், எந்த உயிரிழப்போ அல்லது சேதமோ ஏற்பட்டதாக இது வரை எந்த தகவலுமில்லை. முன்னதாக, இன்று மத்திய இத்தாலியில் அம்பிரியா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 6.2 என்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.bbc.com/tamil/global/2016/08/160824_myanmar

  11. மியான்மர் நாட்டில் உள்ள ரஹினி மாகாணத்தில் பௌத்த, முஸ்லிம் மதத்தினர் இடையே கடந்த 2012ம் ஆண்டு ஜூன் முதல் மோதல்கள் நடைபெற்று வருகிறது. அதில் 240 பேர் பலியானதுடன், 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் குடிபெயர்ந்து வேறு இடத்துக்கு ஓடி விட்டனர். இதற்கிடையில் தான்ட்வே நகரில் மீண்டும் பௌத்த பிக்குகள் பயங்கர ஆயுதங்களுடன் சென்று முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். தாக்குதலில் கின் 5 பேர் இறந்தனர். மேலும் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. பெருமளவு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. http://seithy.com/breifNews.php?newsID=94202&category=WorldNews&language=tamil

    • 1 reply
    • 308 views
  12. மியான்மருக்காக பிரார்த்தியுங்கள்’ - மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் பதாகையுடன் பங்கேற்ற போட்டியாளர் வாஷிங்டன், 69-வது ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் ஹாலிவுட் அரங்கில் உள்ள ராக் ஓட்டல் அண்ட் கேசினோவில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையில் மிகுந்த பாதுகாப்புடன் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நேற்று நடைபெற்றது. 74 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த 26 வயதான ஆண்ட்ரியா மெஸாவும், பிரேசிலின் ஜூலியா காமாவும் (28) இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதில் பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவின் 26 வயதான ஆண்ட்ரியா மெஸா அறிவிக்கப்பட்டார். இந்நிலைய…

  13. இம்பால்: மணிப்பூர் எல்லையில் தமிழர் கோயில் உள்ளிட்ட இந்திய கிராமங்களை மியான்மர் ஆக்கிரமிக்க முயற்சித்து வரும் நிலையில் மணிப்பூர் மாநில ஆளுநர் அஸ்வனி குமார் என்று எல்லைப் பகுதியான மோரே நகருக்கு சென்று தமிழ்ச் சங்கப் நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். மணிப்பூர் எல்லையான மோரே நகரத்தைச் சுற்றிய இந்திய கிராமங்களில் முகாம்களை அமைக்க, எல்லை வேலிகளை அமைக்க மியான்மர் ராணுவம் தொடர்ந்து மும்முரம் காட்டி வருகிறது. இதற்கு அங்கு முகாமிட்டிருக்கும் அசாம் ரைபிள்ஸ் படையினரும் இந்திய அரசு அதிகாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மோரே நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசித்துவருகின்றனர். இங்குள்ள பிரம்மாண்ட தமிழர் கோயில்தான் வடகிழக்கு மாநிலங்களிலேய…

  14. மியான்மர் ஆட்சி கவிழ்ப்பு: சித்ரவதைக்கும் பாலியல் துன்புறத்துலுக்கும் ஆளாக்கப்பட்ட பெண் கைதிகள் லாரா ஒவன் மற்றும் கோ கோ ஆங் பிபிசி உலகச் சேவை 10 டிசம்பர் 2021 மியான்மரிலுள்ள பெண்கள் காவலில் இருந்த போது, சித்ரவதைக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும், பாலியல் வன்முறை மிரட்டலுக்கும் ஆளாக்கப்பட்டனர் என பிபிசிக்கு கிடைத்த பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில், நாட்டை ராணுவம் கைப்பற்றியதை எதிர்த்து போராடிய ஐந்து பெண்கள் கைதுச்செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்ட பின், தடுப்புகாவலிலில் இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கும் சித்ரவதைக்கும் ஆளாக்கப்பட்டனர் என்று கூறுகின்றனர். …

  15. மியான்மர் இராணுவ அரசுக்கு எதிராக போர்க்குற்ற ஆணையம்‐ அமெரிக்காவின் முடிவுக்கு வரவேற்பு 19 August 10 02:35 pm (BST) மியான்மர் இராணுவ அரசுக்கு எதிராக ஐ.நா. போர்க்குற்ற ஆணையம் அமைப்பதற்கு ஆதரவளிப்பது என்ற அமெரிக்காவின் முடிவுக்கு மியான்மர் ஜனநாயக ஆதரவு கட்சித் தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜனநாயகம் கோரி போராடி வரும் ஹான் சூ கியின் தேசிய லீக் கட்சியின் (இக்கட்சி தற்போது கலைக்கப்பட்டுவிட்டது) முன்னாள் துணைத் தலைவர் டின் ஓ இது குறித்து கூறுகையில், இது ஒரு முதல்கட்ட நடவடிக்கைதான் என்றும், இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மியான்மரில் ஆட்சி செய்து வரும் இராணுவ அரசை, அரசியல் அமைப்பை திறந்துவிடச் ச…

  16. மியான்மர் இராணுவத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் மீது பிரித்தானியா, கனடா பொருளாதாரத் தடை 22 Views மியான்மர் இராணுவத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் மீது பிரித்தானியா மற்றும் கனடா நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. கடந்த வாரம் மியான்மர் இராணுவ அதிகாரிகள் மீதும் அவர்கள் குடும்பத்தினர் மீது அமெரிக்க பொருளாதாரத் தடையை விதித்தது இந்த நிலையில் பிரித்தானியாவிலும், கனடாவும் மியான்மரின் 9 இராணுவ அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இதுகுறித்து பிரித்தானியா வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ நாங்கள் எங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து மியான்மர் மக்களுக்கு நீதி கிடைக்க இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடு…

  17. இம்பால்: மணிப்பூரின் மோரே அருகே மியான்மர் ராணுவம் ஊடுருவலை அதிகரித்து இருப்பதுடன் இந்திய கிராமங்களையும் ஆக்கிரமிக்க மும்முரம் காட்டுவதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சக குழு நேற்று அப்பகுதிகளை பார்வையிட்டது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீரின் லடாக் , வடகிழக்கின் அருணாசலப்பிரதேசத்தின் சீனாவின் ஊடுருவல்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்த நிலையில் 40க்கும் மேற்பட்ட மணிப்பூர் கிராமங்களையே தமக்குரியதாக உரிமை கோரி ஊடுருவலை நிகழ்த்தி வருகிறது மியான்மர். இந்தியா- மியான்மர் இடையேயான உறவிரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது இப்புதிய ஊடுருவல். நீண்டகாலமாகவே மணிப்பூர் எல்லைகளை குறித்துவைத்து மெல்ல மெல்ல நகர்ந்து வந்தது மியான்மர். தற்போது இதில் பெரும் பாத…

  18. 12-வது ஆசியான்-இந்தியா மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக மியான்மர் நாட்டுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி நே பி தா நகரில் உள்ள பார்க் ராயல் ஓட்டலில் தங்கி உள்ளார். நேற்று பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசிய மோடி, மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவியும், அந்த நாட்டில் ஜனநாயகத்துக்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக குரல் கொடுத்து வருபவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகியையும் சந்தித்தார். இந்த சந்திப்பு மோடி தங்கியிருந்த ஓட்டல் அறையில் நடந்தது. அப்போது இந்தியாவை தனது 2-வது தாய்நாடு என்று ஆங் சான் சூகி தெரிவித்தார். சூகியை மோடி சந்தித்து பேசியது இதுவே முதல் முறை ஆகும். சூகியின் தாயார் தா கின் யி 19…

  19. மியான்மர் தேர்தலில் ஆங் சாங் சூகி வெற்றி! ரங்கூன்: மியன்மார் நாட்டின் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆங் சாங் சூகியின் என்எல்டி கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மரில் நேற்று(ஞாயிறு) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவை தனது தலைமையிலான அரசும், ராணுவமும் ஏற்றுக்கொள்ளும் என்று அந்நாட்டு அதிபர் தெய்ன் செய்ன் தெரிவித்திருந்தார். ஆளும் கட்சியான ஐக்கிய சகோதரத்துவ மேம்பாட்டுக் கட்சி (யுஎஸ்டிபி) கட்சித் தலைவர் ஹதே ஊ, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் தோல்வியை தழுவிவிட்டோம். எனது சொந்த தொகுதியான ஹின்தாடாவிலும் தோல்வி ஏற்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. எனது…

  20. மியன்மாரில் கத்திகள், கம்புகள் மற்றும் பிற ஆயுதங்களை கொண்ட கலவரக் கும்பல் ஒன்றால் நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள மசூதி ஒன்று தீ வைத்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் மத சகிப்பு தன்மையற்ற நிலை கவலை அளிப்பதாக உள்ளது காச்சின் மாநிலத்திலுள்ள ஹபாகான்ட் என்ற இடத்தில் நடைபெற்றுள்ள இந்தத் தாக்குதல், கடந்த வாரம் மியான்மரின் மத்தியப் பகுதியில் மசூதி ஒன்றிற்கு எதிராக நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் மத சகிப்புதன்மையற்ற நிலைமைகளை பற்றி அந்நாட்டில் பயணம் மேற்கொண்டு வரும் ஐநா மனித உரிமைகள் புலனாய்வாளர் யாங்ஹீ லீ கவலை வெளியிட்டுள்ளார். இத்தகைய சம்பவங்களில் முழுமையான புலனாய…

    • 0 replies
    • 273 views
  21. மியான்மர் மசூதி தீ வைத்து தகர்ப்பு மியன்மாரில் கத்திகள், கம்புகள் மற்றும் பிற ஆயுதங்களை கொண்ட கலவரக் கும்பல் ஒன்றால் நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள மசூதி ஒன்று தீ வைத்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் மத சகிப்பு தன்மையற்ற நிலை கவலை அளிப்பதாக உள்ளது காச்சின் மாநிலத்திலுள்ள ஹபாகான்ட் என்ற இடத்தில் நடைபெற்றுள்ள இந்தத் தாக்குதல், கடந்த வாரம் மியான்மரின் மத்தியப் பகுதியில் மசூதி ஒன்றிற்கு எதிராக நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் மத சகிப்புதன்மையற்ற நிலைமைகளை பற்றி அந்நாட்டில் பயணம் மேற்கொண்டு வரும் ஐநா மனித உரிமைகள் புலனாய்வாளர் யா…

  22. திருவாளர்கள் வக்லவ்ஹவெல், டெஸ்மன்ட் டூடு ஆகியோர் கொண்ட அமைப்பு 2005 ம் ஆண்டு அளித்த "பர்மா அறிக்கை" யின் அடிப்படையில், மியான்மர் ராணுவ ஜெனரல் பியன்மனா(Piynmana)வின் ஆட்சிக்கு எதிராக, படைகளை பயன்படுத்த, அமெரிக்கா, ஐ.நா சபையில் கொண்டு வந்த வரைவு தீர்மானம், சைனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள்,தங்களது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்க கருதியதால், அமெரிக்கா அவ்வரைவினை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜெனரல் பியன்மனாவின் ஆட்சிக்கு எதிராக படைகளை பயன்படுத்தினால் அது அந்நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாகிவிடும் என சைனாவின் ஐநா சபைக்கான தூதர் தெரிவித்துள்ளார். கடைசியில் ஐநாவின் பாதுகாப்பு சபை, நாடுகளின் அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான குழுவிடம்(State Peace and Develo…

  23. மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: 90 பேருக்கும் மேல் சுட்டுக் கொலை பட மூலாதாரம், GETTY IMAGES மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் கண்மூடித் தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குழந்தைகள் உள்பட 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக அரசியல் கைதிகளுக்கான உதவி கூட்டமைப்பு (ஏ.ஏ.பி.பி) எனும் கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி மியாமரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபின், போராட்டக்காரர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்ட அதிக எண்ணிக்கை இதுவே ஆகும். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று ஏ.ஏ.பி.பி தெரிவிக்கிறது. மியான்மரில் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு …

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோதனாத்தன் ஹெட் & நிகோலஸ் யாங் பதவி,. இருந்துபாங்காக் & சிங்கப்பூரில் இருந்து 12 ஏப்ரல் 2023, 06:03 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சியை எதிர்த்து வரும் மக்கள் மீது அந்த ராணுவ ஆட்சியாளர்கள் நடத்திய விமானத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தாங்கள் 80க்கும் மேற்பட்ட உடல்களை கண்டெடுத்துள்ளதாக கூறும் உயிர் பிழைத்த மக்கள், ஆனால் உயிர்ப் பலி எண்ணிக்கை இதைவிட அதிக…

  25. மியான்மர் ராணுவம்: சொந்த மக்களையே வேட்டையாடும் கொடூரம் - இத்தனை பலம் பெற்றது எப்படி? 5 பிப்ரவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மியான்மர் ராணுவம் டஜன் கணக்கான குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான சொந்த பொதுமக்களைக் கொன்றதன் மூலம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ஓராண்டுக்கு முன்னர் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூ ச்சீ அரசாங்கத்தை கவிழ்த்ததில் இருந்து, மியான்மரின் ராணுவம் - தாட்மடா என்று அழைக்கப்படுகிறது. - கொடூரமான அடக்குமுறை மூலம் டஜன் கணக்கான குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான சொந்த பொதுமக்களை கொன்று உலகையே அந்நாட்டு ராணுவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மியான்மர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.