உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
போதை மருந்து கடத்தல்:சிக்குகிறார்கள் 60 நடிகர்-நடிகைகள் போதை மருந்து விவகாரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்-நடிகைகள் 60 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் பரத்ராஜூ, ரகுநாத்ராஜூ ஆகியோரை ஆந்திர போலீசார் அண்மையில் கையும்,களவுமாக கைது செய்தனர். இவர்களுக்கு போதைமருந்து விநியோகம் செய்ததாக, நைஜீரியாவைச்சேர்ந்த சிமா கிளமெண்ட் என்பவர் பிடிபட்டார். அவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் பற்றி போலீசார் செய்த விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. சிமா கிளமெண்ட் வைத்திருந்த செல்போனை ஆய்வு செய்ததில் தெலுங்கு முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் வளர்ந்துவரும் நடிகர்-நடிகைகள் உட்பட 60 பேருக்கு போதை மருந்து …
-
- 0 replies
- 942 views
-
-
இலங்கைத் தமிழர்கள்.. பிரபாகரன்.. விடுதலைப்புலிகள்.. தமிழக அரசியல் தலைமைகள்.. பற்றி இவர்கள் சொல்வதையும் கேளுங்கள்.
-
- 10 replies
- 1.7k views
-
-
மியான்மர் இராணுவ அரசுக்கு எதிராக போர்க்குற்ற ஆணையம்‐ அமெரிக்காவின் முடிவுக்கு வரவேற்பு 19 August 10 02:35 pm (BST) மியான்மர் இராணுவ அரசுக்கு எதிராக ஐ.நா. போர்க்குற்ற ஆணையம் அமைப்பதற்கு ஆதரவளிப்பது என்ற அமெரிக்காவின் முடிவுக்கு மியான்மர் ஜனநாயக ஆதரவு கட்சித் தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜனநாயகம் கோரி போராடி வரும் ஹான் சூ கியின் தேசிய லீக் கட்சியின் (இக்கட்சி தற்போது கலைக்கப்பட்டுவிட்டது) முன்னாள் துணைத் தலைவர் டின் ஓ இது குறித்து கூறுகையில், இது ஒரு முதல்கட்ட நடவடிக்கைதான் என்றும், இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மியான்மரில் ஆட்சி செய்து வரும் இராணுவ அரசை, அரசியல் அமைப்பை திறந்துவிடச் ச…
-
- 2 replies
- 479 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு அமெரிக்கா உதவுமா?: செண்பகத்தாரின் திறனாய்வு பார்வை [ செவ்வாய்க்கிழமை, 17 ஓகஸ்ட் 2010, 12:54.03 AM GMT +05:30 ] இது காலம் கடந்த கேள்வியாக இருப்பினும் நம்பி ஏமாறுவதை எதிர்வரும் காலத்தில் தவிர்ப்பதற்காக விடை காணும் தேவை எழுந்துள்ளது. அமெரிக்காவின் பார்வையில் ஈழத்தமிழர்கள் விவகாரம் ஒரு பெரிய விடயம் அல்ல என்றாலும் அதை அமெரிக்காவால் முற்றாகப் புறந்தள்ளமுடியாது. அமெரிக்காவின் 44ம் சனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நடந்த சென்ற தேர்தலில் ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற தன்னார்வக் குழு தனது முழு ஆதரவை ஜனநாயகக் கட்சிக்கு வழங்கியது. இந்தக் கட்சியின் வேட்பாளராக பாரக் ஒபாமா போட்டியிட்டார். தமிழ் ஈழத் தமிழர்கள், தமிழ் நாட்டுத் தமிழர்கள் அமெரிக்காவில் பிறந்து …
-
- 4 replies
- 800 views
-
-
அமெரிக்க இராணுவத்தின் கடைசி படையணி இன்று வெளியேறியது ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தின் கடைசி படையணியும் இன்று வெளியேறி குவைத் எல்லைப் பகுதிக்குச் சென்றது. கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக் மீது படையெடுத்த அமெரிக்க இராணுவம், சதாம் உசேன் தலைமையிலான அரசை அகற்றிவிட்டு, தனது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பொம்மை அரசு ஒன்றை அமைத்தது. சதாம் உசேன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களும் தூக்கிலிடப்பட்டார்கள். இந்நிலையில், நீண்டகாலமாக அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கில் முகாமிட்டிருப்பது மற்றும் அதற்கு ஆகும் செலவினங்கள், இராணுவ வீரர்களின் உயிரிழப்புகள் குறித்து சொந்த நாட்டிலேயே விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் கிளம்பியதைத் தொடர்ந்து, ஈராக்கிலிருந்து அமெரிக்க…
-
- 3 replies
- 594 views
-
-
. வெனிசூலா விமான நிலையத்திலிருந்து விமானம் திருட்டு. கராகஸ்: வெனிசூலாவின் கராகஸ் நகர விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தை யாரோ சிலர் திருடி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கராகஸில் உள்ள மைகுயெட்டியா சர்வதேச விமான நிலையத்தில்தான் இந்த திருட்டு நடந்துள்ளது. அந்த விமானம் எங்கு போனது என்பது தெரியவில்லை. விமானம் எப்படிக் கிளம்பிச் சென்றது என்பதும் புரியவில்லை. விமானம் கிளம்பிச் சென்றது தொடர்பான எந்த தகவலும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிடம் இல்லை. போதைப் பொருள் கடத்துபவர்கள்தான் இந்தக்காரியத்தைச் செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இந்த விமானம் ஒரு விவசாய வர்த்தக நிறுவனத்திற்குச் சொந்…
-
- 10 replies
- 1.4k views
-
-
ஞாநி குமுதத்திலிருந்து கழற்றிவிடப்பட்டோ, அல்லது அதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டு அவராகவே வேறு பத்திரிகைக்குப் போய்விட்டதைப் பற்றியோ பத்திரிகைகளில் பெரிய அளவில் பரபரப்பான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.உண்மையில் அவ்வளவு பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய எழுத்துக்களாக அவரது எழுத்துக்கள் இருந்தனவா என்பதே கேள்விக்குரியது. ஞாநி பிரபலமாக இருந்ததற்குக் காரணம் அந்தப் பத்திரிகைகள்தாமே தவிர அவரது எழுத்துக்கள் அல்ல. ஆங்கிலத்தில் குல்தீப் நய்யார், எம்.ஜே.அக்பர் போன்ற எழுத்தாளர்கள் அளவுக்குத் தமிழில் பிரபலமான அரசியல் விமர்சகர்கள் இல்லை. சோலை, சின்னக்குத்தூசி, ஜென்ராம் போன்றவர்களைத்தான் பிரபலமானவர்களாகச் சொல்ல முடியும். இவர்களைவிடப் பிரபலமான ஒருவராகச் சோவைச் சொல்லலாம். ஆனால…
-
- 1 reply
- 910 views
-
-
கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் தெய்வாதீனமாக 130 பேர் உயிர் தப்பியுள்ளனர் 17 August 10 04:24 pm (BST) கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் தெய்வாதீனமாக 130 பேர் உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கரீபிய தீவான சென் அன்ட்ராஸில் தரையிறக்கப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஏனைய அனைவரும் அதிசமானய முறையில் உயிர் பிழைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. விமான தரையிறக்கப்பட உள்ளதாகவும், பயணிகள் தயாராகுமாறும் விமானி அறிவித்து சில நொடிகளில் விமானம் பாரிய சத்தத்துடன் ஓடு தளத்தில் விபத்துக்குளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் பரவிய தீ உடனடியாக கட்ட…
-
- 0 replies
- 524 views
-
-
காதலியைக் கற்பழித்து கர்ப்பம் ஆக்கிய சிங்களவருக்கு இத்தாலியில் மறியல்! சனி, 14 ஆகஸ்ட் 2010 17:14 மின்னஞ்சல் அச்சிடுக PDF காதலியை கற்பழித்துக் கர்ப்பம் ஆக்கினார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் சிங்கள இளைஞன் ஒருவர் ( வயது 21) இத்தாலியின் பொலொக்னா நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் போடப்பட்டுள்ளார்.பாலியல் வல்லுறவுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு இருப்பவர் 25 வயது உடைய இந்திய யுவதி ஒருவர் ஆவார். இந்த யுவதியை துஷ்பிரயோகம் செய்தார், பொல்லால் அடித்துக் காயப்படுத்தினார், கடத்தினார்,கற்பழித்தார், பலாத்காரமாக உடலுறவில் தொடர்ந்தும் ஈடுபடுத்தி வந்தார் என்றெல்லாம் இளைஞன் மீது ஏராளமான புகார்கள் உள்ளன. யுவதி கர்ப்பம் தரித்து 21 நாட்கள் ஆகியுள்ளமை மருத்துவ பரிசோ…
-
- 4 replies
- 1.6k views
-
-
காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா நேற்று தேசிய கொடி ஏற்றிய போது அவர் மீது ஷீ வீசப்பட்டது.விழாவில் கலந்து கொண்ட முன்னாள் போலீஸ் ஏட்டு அப்துல் ஆசாத் ஜான் ஷீவை வீசினார். அவரை உடனடியாக கைது செய்தனர். இவர் பணியில் இருந்த போது தவறு செய்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். அவர் எதற்காக ஷீவை வீசினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் போது அரசியல் தலைவர் ஒருவர் சொன்னதால் தான் ஷீவை கழற்றி வீசியதாக கூறி இருக்கிறார். அவர் யார் என கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். உமர் அப்துல்லா கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் பலத்த பாதுகாப்பு போட்டிருந்தும், அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்ப…
-
- 4 replies
- 848 views
-
-
இந்திய வெளிநாட்டு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வெகு விரைவில் இலங்கை வர உள்ளார். அவர் இங்கு அரச உயர் மட்டத்தினரைச் சந்தித்து தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறித்து பேச உள்ளார். அவர் இந்திய நாடாளுமன்றத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=8269:2010-08-13-07-17-04&catid=126:2010-05-07-12-27-22&Itemid=676
-
- 1 reply
- 729 views
-
-
புதுடில்லி : நக்சலைட்கள் தாக்கும் பட்சத்தில், தற்காப்புக்காக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என, இந்திய விமானப் படைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நக்சலைட் அச்சுறுத்தல் அதிகமுள்ள மாநிலங்களில் அவர்களை ஒடுக்க, விமானப்படை விமானங்களை பயன்படுத்த வேண்டும் என, விமானப்படை கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக பார்லிமென்டிலும் விவாதங்கள் நடைபெற்றன. உள்நாட்டு பாதுகாப்புக்கு நக்சலைட்கள் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளனர் என, பிரதமர் மன்மோகன் சிங்கும் கவலை தெரிவித்திருந்தார். தற்காப்புக்காக நக்சலைட்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் பட்சத்தில், அதற்காக சிறப்பு அனுமதி பெற தேவையில்லை என, ராணுவ அமைச்சர் அந்தோணியும், கடந்த நவம்பரில் நடந்த பார்லி கூட்டத்தொடரில் தெரிவித்திருந்தார…
-
- 1 reply
- 600 views
-
-
மதுரையை மிரட்டும் அநாமதேய சுவரொட்டிகள்! சமீபகாலமாக மதுரையை பல அநாமதேய சுவரொட்டிகள் மிரட்டுகின்றன. ''எட்டு பிட்டு” சுவரொட்டிகள்.. அதாவது எட்டு சுவரொட்டிகளை ஒட்டினால்தான் அது ஒரு சுவரொட்டியாகி, முழு விபரம் அதில் தெரியும். அதுதான் “எட்டு பிட்டு” சுவரொட்டிகள்! இந்த சுவரொட்டிகள் எதிலும் அச்சகத்தின் பெயர் இருக்காது. அச்சகத்தின் பெயர் இல்லாமல் சுவரொட்டி அடிக்கக்கூடாது என்பது மதுரை காவல்துறையின் சுற்றறிக்கை கூறுகிறது. அச்சக உரிமையாளர்களை மிரட்டும் இந்த சுற்றறிக்கை, சமீபகாலமாக மதுரையில் ஒட்டப்படும் சிலரது சுவரொட்டிகளுக்கு பொருந்தாது! காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் முதல் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள்வரை இந்த “மிரட்டல்” சுவரொட்டிகளைப் பார்த்துக்கொண்டே செல்லுவா…
-
- 1 reply
- 948 views
-
-
18 வயது ஆண்-16 வயது பெண் திருமணம் செல்லும்: நீதிமன்றம் வியாழக்கிழமை, ஆகஸ்ட் 12, 2010, 10:12[iST] டெல்லி: 16 வயது பெண்ணும் 18 வயது ஆணும் திருமணம் செய்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 18 வயது கணவனும் 16 வயது மனைவியும் இணைந்து தாக்கல் செய்த வழக்கில் இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களை அவர்களது பெற்றோர் காலி செய்ய முயன்றதையடுத்து ஊரைவிட்டு ஓடினர். ஆனாலும் இவர்களை தேடிக் கண்டுபிடித்த பெண்ணின் பெற்றோர் இருவரையும் பிரித்தனர். மகளை தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டனர். அவர்கள் தந்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது போலீசார் ஆள் கடத்தல், பாலியல் வல்லுறவு வழக்குகள…
-
- 1 reply
- 4.1k views
-
-
தெற்காசிய ரவுடியின் கனவும் தமிழீழ தேசிய தோழர்களின் கடமையும்... போர் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது... தீவிரவாதிகள் என்றார்கள் பயங்கரவாதிகள் என்றார்கள் பயங்கரவாதாத்திற்கு எதிரான போர் என்றார்கள் .. கத்திய கோட்டாங்கள் இன்று எங்கே உள்ளன? எங்கே ஆணி புடுங்குகின்றன? லோக்கல தெற்காசிய பேட்டை ரவுடியின் நிகழ்ச்சி நிரலை ஒத்தே அனைத்து தீர்மனங்களும் உலக அரங்கில் சர்வதேசத்தால் எடுக்க படுகின்றன... தாதாவின் ஈழம் சார்ந்த கோட்பாடுகளும் கொள்கைகளும்.. 1. இனபரம்பலை ஊக்குவிப்பது 2. கலப்பினத்தினை உண்டாக்குவது 3. தேசிய சாக்கடைக்குள் கலக்க செய்தல் 4. இலவசங்களுக்கு மக்களை பழக்குவது.. 5. வளங்களை சூறையாடுவது.. இனப்பரம்பலை ஊக்குவிப்பதானது ஈழ தாயக பரப்பில் ச…
-
- 11 replies
- 1.5k views
-
-
வில்லனா – காமெடியனா ? டாக்டர் (?)ஆசன ஆண்டியப்பன் ! டாக்டர் (?)ஆசன ஆண்டியப்பன் ! கீழ்க்காணும் புகைப்படங்கள் தென் சென்னையில் வசிப்பவர்கள் பலருக்கும் அறிமுகமானவை தான். அநேக தெருக்களில் ‘no parking area’ அறிவிப்புகளின் கீழே (அல்லது மேலே ) இத்தகைய விளம்பரத்தைப் பார்க்கலாம். இதைத்தவிர டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் படத்தைப் போட்டும் இவர் தனது பெரிய விளம்பரம் ஒன்றைப் போட்டிருக்கிறார். நம் நாட்டில் எதை எதை எல்லாமோ வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இந்தப் மனிதர் தேர்ந்தெடுத்தது யோகாசனத்தை ! கவர்ச்சியான விளம்பரங்கள் -வாக்குறுதிகள் ! பதினைந்தே நாட்களில் யோகா பயிற்சி அத்தனை வகை நோய்களையும் போக்குவதற்கான…
-
- 0 replies
- 3.8k views
-
-
எம்.வீ.சண் கப்பல் 500 பேருடன் கனடாவின் பொருளாதார வலயத்தை சென்றடைந்துள்ளது. திகதி:12.08.2010, சுமார் 200 இலங்கை அகதிகளுடன் செல்லும் சன் சீ கப்பல் தற்போது கனடா பசுபிக் கரையோரத்தை சென்றடைந்துள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடாவின பொருளாதார வலயத்தை சென்றடைந்துள்ள இந்தகப்பலை கனடாவின் கடற்படை கப்பல் சந்தித்துள்ளது. இந்தநிலையில் குறித்த கப்பல் இன்று வியாழக்கிழமை மாலை அல்லது நாளை காலையில் பிரிட்டிஸ் கொலம்பியாவுக்கு கனேடிய கடற்படையினரின் பாதுகாப்புடன் வழிநடத்தி செல்லப்படவுள்ளதாக வன்குவார் சன் செய்திசேவை தெரிவித்துள்ளது. இதன் போது கனேடிய கடற்படையினர் கப்பலில் சோதனை மேற்கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது இந்த கப்பலில் முன்னதாக 200 இலங்கைய…
-
- 3 replies
- 619 views
-
-
அதிமுகவில் இணைகிறார் நடிகை ரோஜா? வியாழக்கிழமை, ஆகஸ்ட் 12, 2010, 10:34[iST] ஹைதராபாத்: நடிகை ரோஜா அதிமுகவில் இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஹைதராபாத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்தவரான ரோஜா தமிழ் சினிமாவில் தான் முதலில் அறிமுகமானார். தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வமணியை மணந்தார். சினிமா வாய்ப்புகள் எல்லாம் தேய்ந்து போன பின்னர் ஆந்திர அரசியலில் நுழைந்தார். முதலில் தெலுங்கு தேசத்தில் இணைந்தார். அந்தக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட மோதலையடுத்து, காங்கிரசுக்குத் தாவினார். மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி இவரை காங்கிரசில் சேர்த்துக் கொண்டார். ஆனால், …
-
- 0 replies
- 707 views
-
-
வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு துவங்கியது துபாய்: வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டதையடுத்து புதன்கிழமை (11.08.2010) முதல் ரமலான் மாதம் துவங்கியுள்ளது. சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ரமலான் மாதம் துவங்கியதையடுத்து தராவீஹ் எனும் சிறப்பு இரவுத் தொழுகை செவ்வாய்க்கிழமை மாலை முதல் அனைத்து பள்ளி வாசல்களிலும் துவங்கியது. துபாயில் பிறை தென்பட்டதையடுத்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. ரமலான் துவங்கியதையடுத்து பல்வேறு வணிக நிறுவனங்களிலும் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வளைகுடா நாடுகளின் ஆட்சியாளர்கள் ம…
-
- 3 replies
- 784 views
-
-
எந்திரன் - தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை உங்களுக்கு தமிழ்ச்சினிமாவில் பிடிக்காத இயக்குனர் யார் என்று கேட்டால், உடனடியாக ‘ஷங்கர்’ என்று சொல்வேன். அப்படியொரு திடமான நம்பிக்கையை அவர் குறித்து அவரே எழுப்பி இருக்கிறார். நமது நிறத்தின், பண்பாட்டின், அடையாளங்களின், விழுமியங்களின், மகத்துவங்களின் மீது அப்படியொரு வன்மமும், துவேஷமும் ஷங்கரின் படங்களில் தொடர்ந்து இருக்கிறது. மொத்த தமிழ்ச்சினிமாவையும் தன் உள்ளங்கைக்குள் அடக்கி வைக்கும் ஏகபோகமாக தன் நிறுவனம் உருவெடுக்க வேண்டும் என்கிற வெறியும், வேட்கையும் கொண்டவராக கலாநிதி மாறன் சமீப காலங்களில் தனக்கான அரசியல் அதிகாரம் பயன்படுத்தி முன்னுக்கு வந்திருக்கிறார். சினிமா, அதன் கலை அழகு, வடிவம், மொழி எல்லாவற்றையும் சிதைத்து, தன்…
-
- 5 replies
- 1.3k views
-
-
. காஷ்மீருக்கு சுயாட்சி உரிமை தர தயார்-பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி: இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி உரிமை வழங்க அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். காஷ்மீருக்கு சுதந்திரம் கோரி பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதப் போராட்டம் நடந்து வரும் நிலையில் அங்கு புதிய வகையான போராட்டம் வெடித்துள்ளது. காஷ்மீரில் இருந்து ராணுவத்தை உடனே அகற்ற வேண்டும், காஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும் என்று பிரிவினைவாத கட்சிகளி்ன் ஆதரவுடன் பொது மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். முதலில் சிறிய அளவில் தொடங்கிய இந்தப் போராட்டம் மாநிலம் முழுவதும் பரவிவிட்டது. பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் போர…
-
- 7 replies
- 904 views
-
-
உலகில் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் 8000 பக்கங்கள் கொண்ட மனிதாபிமான சட்டத் தகவல்கள் தளம் ஒன்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு ஆரம்பித்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவை சங்கக் குழுவின் பிரித்தானியக் கிளையின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இத்தளத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆயுதக் கலவரங்கள், நீதிமன்ற தீர்ப்புக்கள், சட்ட வியாக்கியானங்கள் போன்ற தகவல்கள் அனைத்தும் அடக்கப்பட்டுள்ளன. கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் உள்ள சர்வதேச மனிதாபிமான சட்டங்களில் தேர்ச்சி பெற்ற சட்ட வல்லுநர் குழுவின் பங்களிப்புடன் இந்த தகவல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் ஆயுதக் கலவரங்களில் பாதிக்கப்பட்டோருக்…
-
- 1 reply
- 506 views
-
-
சைமன் பியர்ட், 56 இளைஞர் ஆலோசகராக பணிபுரிவதாக கூறிக்கொண்டு பல இளைஞர்களுடன் பாலியல் ரீதியாக தவறாக பேசுவதையே தொழிலாக வைத்துள்ளார். இணையத்தில் இருக்கும் பொது அரட்டை அறைக்குள் சென்று இளம் வயது பெண்களை தேடி அவர்களுடன் பேசுவது பின் அரட்டையை பாலியல் ரீதியில் திசை திருப்புவது உள்ளிட்ட வேலைகளை ஆறு வாரங்களாக முனைப்புடன் செய்து வந்த இவரை ரகசியமாக படம் பிடித்தனர் ஸ்கை செய்தி குழுவினர். தான் நிருபர்களால் கண்காணிக்கப்படுகிறோம் என்பது தெரியாமல் 13 வயது சிறுமி அமியுடன் நட்புடன் முதலில் அரட்டையை துவங்கினார். முதலில் இணைய காமெராவில் தன படத்தை போட்ட சைமன் , பின் சிறுமி அமியையும் இணைய காமெராவில் வருமாறு வலியுறுத்தினார். பின்னர் சிறிது சிறிதாக பாலியல் ரீதியாக அரட்டையை திசை திரு…
-
- 6 replies
- 1.3k views
-
-
கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்; பொதுமக்கள் முன்னிலையில் கொடூரம் ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் செயல்பட்டாலும் இவர்கள் தனியாக சட்ட திட்டங்களை செயல்படுத்தி தனி சாம்ராஜ்யமே நடத்தி வருகின்றனர். திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்ணின் மூக்கையும், காதையும் அறுத்து மானபங்கம் செய்தனர். இச்செய்தி படத்துடன் வெளியானதால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது கர்ப்பிணி பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொன்று அராஜகம் செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் வட மேற்கு பகுதியில் உள்ள பாட்கீஸ் மாகாணத்தில் குவாடேஸ் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 4…
-
- 8 replies
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்காலில் சென்ற ஆண்டு எமக்கு எதிராக கொத்துக் குண்டுகளை வீசிய ரஷ்சிய தேசம் காட்டுத்தீயினால் பேரழிவுகளை சந்தித்துக் கொண்டுள்ளது. இதுவரை 48 பேர் கொல்லப்பட்டு பல ஆயிரம் பேர் வீடிழந்துள்ளனர். இந்த நூற்றாண்டிலேயே ரஷ்சியா சந்திக்கும் பெரும் காட்டுத்தீ இதுவாகும். http://www.bbc.co.uk/news/world-europe-10868482 எமக்கெதிராக பல்குழல் எறிகணை செலுத்திகள் உட்பட்ட கொடிய ஆயுதங்கள் மற்றும் படைத்துறை ஆலோசனை வழங்கிய பாகிஸ்தான் வெள்ளத்தில் சீரழிகிறது. 1,500 மேற்பட்டோர் கொல்லப்பட்டு 30 இலட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர். http://www.bbc.co.uk/news/world-south-asia-10874116 எமக்கெதிராக நயவஞ்சகம் புரிந்த இந்தியா காஷ்மீரில் அடிவாங்கும் அதேவேளை மாவோஸ்டுக்களின் இன்றைய தாக்…
-
- 59 replies
- 4.1k views
-