உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26644 topics in this forum
-
டெல்லி: காதலர் தின விழாவை முன்னிட்டு, சாக்லேட், ரோஜாப் பூக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் விற்பனை அதிகரிப்பதன் கூடவே, ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனையும் படுஜோராக நடக்கிறதாம். காதலர் தினத்தை குறிப்பிட்ட ஒரு நாள் மட்டும் கொண்டாடுவதற்கு பதிலாக காதல் வாரமாகவே இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலை பயன்படுத்தி, ஆணுறை விற்பனையாளர்களும், தங்களின் விற்பனையை உயர்த்த தேவையான அனைத்து வழிகளையும் கையாள்கின்றனர். ஆண்டுதோறும் காதலர் தின சமயத்தில் சராசரியாக 20 சதவீதம் ஆணுறை மற்றும் பெண்கள் உபயோகப்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் கூடுதல் விற்பனை இருப்பதாக 24 மணி நேர ஆணுறை விற்பனை மையமான எஸ்2காண்டம் நிறுவனத்தின் இயக்குனர் சிஷிர் மிக்லானி தெரிவித்தார். கா…
-
- 2 replies
- 999 views
-
-
எரிவாயு விஷயத்தில் ஏமாற்றப்படுகிறது தமிழகம் பிப்ரவரி 10,2010,00:00 IST கிருஷ்ணா - கோதாவரி படுகையில் கிடைக்கும் எரிவாயுவில் தமிழகத்துக்கும் பங்கு அளிக்கப்படும் என்று வாக் குறுதி அளிக்கப்பட்டிருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வெறும் ஏட்டளவில் மட்டுமே இருக்கும் இந்த வாக்குறுதி, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உட்பட சம்பந்தப்பட்ட சில அரசு துறைகளுக்கு இடையே, கால்பந்து போல, மாறி மாறி உதைபட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கிருஷ்ணா - கோதாவரி படுகையில் இயற்கை எரிவாயு கிடைத்துள்ளது. இந்த எரிவாயுவில் தமிழகத்திற்கும் பங்கு வேண்டுமென்று, எரிவாயுவை எடுத்து வழங்கும் உரிமம் பெற்ற, ரிலையன்ஸ் நிறுவனத்திடமும், மத்திய அரசிடமும், பல முறை தமிழக அரசு கோரிக்கை வைத…
-
- 5 replies
- 626 views
-
-
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி.கத்தரியை வணிக நோக்கில் பயிரிட தற்போது அனுமதி வழங்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், “சுதந்திரமாக நடத்தப்படும் ஆய்வுகளின் முடிவுகள் வெளியாகும் வரை பி.டி.கத்தரியை வணிக நோக்கில் பயிரிட அரசு அனுமதி அளிக்காது. பி.டி.கத்தரி பயிரிடுவதற்கு அனுமதி வழங்க இன்னும் கால அவகாசம் தேவை” என்றார். முன்னதாக, பி.டி.கத்தரியை இந்தியாவில் பயிரிடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என குஜராத், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது http://tamil…
-
- 3 replies
- 599 views
-
-
''பச்சை வேட்டை'' இலங்கை சாயலில் இந்தியாவில் ஒரு உள்நாட்டுப் போர் ஆரம்பம் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காகப் 'பச்சை வேட்டை' என்கிற பெயரில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியிருக்கிறது மத்திய அரசு. மாவோயிஸ்டுகள் செல்வாக்குள்ள பகுதிகளில் ஏற்கெனவே குவிக்கப்பட்டிருந்த 45,000 துணை ராணுவப் படைகளோடு மேலும் 30,000 வீரர்கள் சென்ற இரு மாதங்களில் இதற்காக இறக்கப்பட்டுள்ளனர். 18-பெடாலியன் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இதில் அடக்கம். நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கென சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட 'கோப்ரா' கமாண்டோக்கள், இப்படியான நடவடிக்கைகளுக்கென மாநில அளவில் பயிற்சிபெற்ற 'சிறப்பு நடவடிக்கை போலீஸ் பிரிவுகள்(SAG)' ஆகியனவும் இந்தத் தாக்குதல் படைகளில் உள்ளடக்கம். இவர்களைக் கொண்டு மேற்…
-
- 4 replies
- 1.2k views
-
-
மரபணு மாற்றுப் பயிர்களின் நுழைவுக்கு இரண்டாவது பச்சைப் புரட்சி என்று பட்டமும் சூட்டப்படுகிறது. ஆனால் முதல் பச்சைப் புரட்சியின்போது அமைதியாக இருந்துவிட்ட பாரதம் இன்று பி.டி. கத்தரிக்காயை எதிர்த்து போர்க் கோலம் பூண்டுள்ளது. இதன் விளைவாக அனுமதி வழங்கும் குழு பரிந்துரை செய்த பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்குவதற்காக முன்பு ஐந்து மாநிலங்களில் பொதுமக்கள் முன்பு கலந்தாய்வு நடத்தி கருத்துக்களைப் பெறுவேன் என்று சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை விடுத்து இருக்கிறார். ஜனவரி 27-ம் தேதி முதலமைச்சர்களை அழைத்து கருத்து அறிவேன் என்றும் சொல்லியிருப்பது வரவேற்கத்தகுந்தது. பி.டி. பயிர்கள் பாரதத்திற்குள் அனுமதிக்கப்படக் கூடாது என்று சொல்லுபவர்கள் முன் வைக்கும் வாதம் என்ன? …
-
- 0 replies
- 1.5k views
-
-
வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்கள் பிட்டனில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் அத்தகைய விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதென பிரிட்டன் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அலன் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இரண்டு வாரத்திற்குள் இப்புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவிருக்கின்றன. மாணவ விசாக்களை வழங்குவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு ஆங்கிலம் பேசும் ஆற்றல் இருக்க வேண்டும் என்பதும் குறுகியகால பிரிட்டிஷ் கற்கை நெறிகளுக்கு வருவோர் அவர்களில் தங்கியிருப்போரையும் தம்முடன் அழைத்து வருவதை தடை செய்தல் போன்றவை உட்பட பல கட்டுப்பாடுகள் அமுல்செய்யப்பட இருக்கின்றன என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார். உண்மையாக கல்…
-
- 9 replies
- 870 views
-
-
செஞ்சி கோட்டை - சிதலமடையும் தமிழக வரலாற்று சின்னம்.. வரலாற்றில் செஞ்சி தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் பெயர் வாங்கியது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக…
-
- 1 reply
- 10.8k views
-
-
நடிகர் ஜெயராம் வீடு தாக்கப்பட்டது : சீமான் மீது வழக்கு நடிகர் ஜெயராம் தனது வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை கறுத்து தடித்த எருமை போன்ற தமிழச்சி என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார். இது குறித்து அவரை தொடர்பு கொண்டவர்களிடம் காமெடிக்காக அப்படி குறிப்பிட்டதாக பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னையிலுள்ள ஜெயராமின் வீடு தாக்கப்பட்டது. வீடு தாக்கப்பட்டது தொடர்பாக இயக்குனர் சீமான் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வன்முறையை தூண்டியதாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயராம் வீடு தாக்கப்பட்டது தொடர்பாக ‘நாம் தமிழர் இயக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழர்களுக்கு தமிழ் ஈன தலைவரின் மரியாதை.. செங்கல்பட்டில் சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறையில் நேற்று முன் தினம் இரவு 150க்கும் மேற்பட்ட காவல் துறையினர் உட்புகுந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று வெளியான செய்தி ‘உண்மைக்கு புறம்பானது’ என்று கூறி தமிழ்நாடு காவல் துறையின் தலைமை இயக்குனர் லத்திகா சரண் அறிக்கை விடுத்துள்ளார். தமிழக காவல் துறையின் தலைமை இயக்குனராக முதன் முதலாக பொறுப்பேற்ற ஒரு பெண் காவல் அதிகாரி என்ற பெருமை பெற்ற லத்திகா சரண் விடுத்துள்ள அறிக்கையின் கடைசி பத்தி இதுதான்: “காவல் துறையினர் இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. இச்சம்பவத்தில் இலங்கைத் தமிழர்கள் எவரும் கடு…
-
- 0 replies
- 886 views
-
-
தமிழர்கள் விற்பனைக்கு- சிங்கள ஆரிய கூட்டமைப்பு ஆந்திரா தமிழ்நாடு தமிழர்கள் தமிழர் நிலங்களில் இருந்து அடிமைகளாக ஏற்றுமதி செய்யபடுவது இன்று நேற்றல்ல வெள்ளைக்காரன் காலத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது. ஒப்பீட்டளவில் ஆந்திர தெலுங்கர்களுக்கு அடுத்து நாம் தான் உள்ளோம்.. நாம் இங்கே கூறவருவது அலுவலக வேலைகளை அல்ல. கூலி வேலை செய்பவர்களை பற்றியே.. மலேசிய சிறைகளில் தமிழர்கள் அவதி.. சவுதி அரேபியாவில் கட்டுமான தொழிலாளர்கள் பலி.. வெளிநாட்டு வேலை என்று கூறி ஏஜண்ட் ஏமாற்றினார்.. இது நாளாந்தம் செய்திதாள்களில் வாசிக்கும் நிகழ்வுகள்.அதிலும் மோசம் நம்மவர்கள் வெளிநாட்டில் இறந்த உடல்களை எடுத்துவர டெல்லி வாலாக்களிடம் சொம்பி சோப்பு போடும் பரிதாப நிலை. …
-
- 2 replies
- 916 views
-
-
“ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் மீதான வெள்ளை நிறவெறித் தாக்குதல்” சென்ற மாதம் முழுவதும் இந்திய ஊடகங்களில் முக்கியச் செய்தியாகத் தொடர்ந்து இடம் பெற்றிருந்தது. பஞ்சாபைச் சேர்ந்த நிதின் கார்க் என்ற 21 வயது வணிகவியல் பட்டதாரி மாணவர், அவர் பகுதி நேரமாக வேலை செய்து வந்த உணவு விடுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் வழிமறித்துக் குத்திக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நிதின் கார்க் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த போதிலும், அடுத்த ஒரு வாரத்திலேயே ஜஸ்பிரீத் சிங் என்ற டாக்சி ஓட்டுனரைத் தீ வைத்துக் கொளுத்த ஒரு கும்பல் முயன்றிருக்கிறது. தீக்காயங்களுடன் அவர் உயிர் தப்பியிருக்கிறார். இந்தியர…
-
- 3 replies
- 729 views
-
-
சூடான் அதிபர் இனப்படுகொலை குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை டார்ஃபுரில் நடந்த மோதல் தொடர்பில், இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சூடானிய அதிபர், ஒமர் அல் பஷீர் எதிர்கொள்ள வேண்டுமா என்பது குறித்து மீண்டும் ஒரு முறை பரிசீலிக்குமாறு, பன்னாட்டு கிரிமினல் நீதிமன்றத்தை, மேல் முறையீட்டு நீதிபதிகள் கோரியுள்ளனர். குற்றம் சாட்டும் வழக்குரைஞர்கள், அத்தகைய குற்றச்சாட்டுகளை கொண்டுவரலாம் என்று காட்டுவதற்கான போதிய ஆதாரங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை என்று முன்பு அளித்த ஒரு தீர்ப்பை இந்த நீதிபதிகள் மாற்றிவிட்டனர். டார்ஃபுரில் இருந்து இயங்கும் முக்கிய கிளர்ச்சிக் குழுவான, ஜே.இ.எம், இந்த தீர்ப்பை வரவேற்றது. ஆனால் சூடானிய அரசோ இது ஒரு அரசியல்…
-
- 0 replies
- 375 views
-
-
லண்டன்: லண்டனைச் சேர்ந்த ஓ2 செல்போன் நிறுவனம் தன்னிடம் இனவெறியுடன் நடந்து கொண்டதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கி எனப்படும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் புகார் கூறியுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் இதை மறுத்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஓ2 என்ற நிறுவனத்திடம் ஐபோன் ஒன்றை வாங்க விண்ணப்பித்திருந்தார் வெங்கி. ஆனால் அந்த போனுக்கான சேவையை அளிக்க 3 மாத கட்டணமான 325 டாலரை டெபாசிட்டாக கட்ட வேண்டும் என ஓ2 நிறுவனம் வெங்கியிடம் கூறியுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் வெங்கி. காரணம், வழக்கமாக இதற்கு டெபாசிட் தொகையெல்லாம் கோரப்படாது. வங்கிக் கணக்கில் சிக்கல் உள்ளவர்கள், கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தாதவர்களிடம் தான் டெபாசிட் கோரப்படும். ஆனால், அப்படி எந்த…
-
- 11 replies
- 1.1k views
-
-
அகதிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என பழ.நெடுமாறன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் குறைகளைத் தீர்ப்பதாக …
-
- 1 reply
- 809 views
-
-
பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிக் கட்டுமானத்தில் 5 வயதுப் பாலகரையும் ஈடுபடுத்தும் "பிராந்திய வல்லரசு" எதிர்வரும் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெறவிருப்பது அனைவரும் அறிந்ததே.இதற்கென பெருமளவு பனம் செலவழிக்கப்பட்டிருப்பதோடு, வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனாலும் குறித்த கால எல்லைக்குள் முடிந்துவிடும் என்று அமைப்பாளர்களால் எதிர்வுகூறப்பட்ட கட்டுமாணப் பணிகள் இன்னும் பூர்த்தியாக்கப்படாதமையினால் பொதுநலவாய அமைப்பின் கண்டனத்துக்கு இந்திய அமைப்பாளர்கள் உள்ளாகியிருக்கின்றனர். இதனால், வேலைகளை துரிதமாக்கும் பொருட்டு கட்டுமாணப்பணி நடைபெற்றுவரும் பிரதேசத்தின் அயலிலுள்ள குடியிருப்புக்களிலிருந்து பெருமளவு மக்கலை வேலைகளுக்காக …
-
- 1 reply
- 642 views
-
-
காப்புறுதிப் பணத்திற்காக தனது காரை தானே எரியூட்டி அதில் மாட்டிக்கொண்டபின், வெள்ளை இனத்தவர் என்னை தீமூட்டப் பார்த்தனர் என்று கூறிய இந்தியன் ! http://au.news.yahoo.com/a/-/latest/6753886/man-faked-attack-to-claim-insurance/ Man 'faked attack to claim insurance'By Jamie Duncan, AAP February 3, 2010, 6:12 am Buzz up! Send EmailIMShare DeliciousTwitterMyspaceDiggStumble UponFacebookPrintRelated Links Cadbury cuts 60 workers in Melbourne February 2, 2010, 5:21 pm Cat killer sent to youth detention February 2, 2010, 4:41 pm Aussie stars among Tropfest finalists February 2, 2010, 6:20 pm Students in 'limbo' after college co…
-
- 15 replies
- 1.2k views
-
-
'' இனி, தமிழர் பகுதியில் சிங்களர் குடியேற்றமா?'' இலங்கை எம்.பி. செல்வம் அடைக்கல நாதன் பேட்டி! கருத்துக் கணிப்பையும் தமிழர்களின் கண்ணீ ரையும் தாண்டி அமோக வெற்றி பெற்று சர்வதேசங்களையும் நிமிர்ந்து பார்க்க வைத் திருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே! இலங்கை அரசியல் சாசன சட்டப்படி, முன்கூட்டித் தேர்தல் நடத்தப்பட்ட ஒன்றரை ஆண்டும், தற்போது அதிபர் பதவிக் காலமான 6 வருடங்களோடும் சேர்ந்து இன்னும் ஏழரை ஆண்டுகளுக்கு ராஜபக்ஷே அதிபராக நீடிப்பார் என பேச்சும் உடனே கிளம்பியிருக்கிறது. இந்த ஆட்சி தமிழர்களுக்கு எப்படிப்பட்டதாக அமையும் என்பது குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி-யான செல்வம் அடைக்கல நாதனிடம் பேசினோம். ''இன்னும் ஏழரை ஆண்டுகளுக்கு ராஜபக்ஷேதான் அதிபராக நீடிப…
-
- 0 replies
- 573 views
-
-
காசா தாக்குதலில் எரிரசாயன குண்டுகள்: இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மத்தியகிழக்கின் காசாவில் சென்ற வருடம் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவத் தாக்குதலின்போது, வெள்ளை பாஸ்பரஸ் எரிரசாயன குண்டுகள் விழுந்து அங்குள்ள ஐ.நா. கிடங்கொன்று தீக்கிரையாகிய சம்பவம் தொடர்பில், தமது இராணுவத்தின் இரண்டு மூத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. யுத்த விதிமுறைகளை மீறும் விதமாக பொதுமக்கள் அடர்த்தியாக வாழும் ஒரு பகுதியில் ஆர்டில்லரி ஷெல் குண்டுகளைப் பயன்படுத்தி சிவிலியன்களின் உயிருக்கு பங்கம் விளைவித்தன் பேரில் இந்த இராணுவ அதிகாரிகள் கண்டிக்கப்பட்டுள்ளனர். காசாவில் போர்க்குற்றங்கள் நடந்ததாகத் தெரிவிக்க்கப்படுவது குறித்து இஸ்ரேல், பாலஸ்…
-
- 0 replies
- 509 views
-
-
ஜெர்மனியில் பெய்து வரும் கடும் பனிப் பொழிவினால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பனிப் பொழிவினால் நாடு முழுவதிலும் 300 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. வடக்கு ரெயின் பகுதியில் ஒருவரும், தென் சோவ் பகுதியில் இருவரும் உயிரிழந்துள்ளனர். சில பகுதியின் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன், விமானப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. ரொஸ்டொக் நகரில் 30 சென்றி மீற்றர் அளவிற்கு பனிப் படர்ந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.z9world.com
-
- 8 replies
- 742 views
-
-
'ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட நளினியை சிறையிலிருந்து விடுவிப்பதை காங்கிரஸ் கட்சியினர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்' காங்கிரஸ் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறை, அனைத்து சட்டக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் வன்முறை மற்றும் தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு ஈரோட்டில் நேற்ற நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், வன்முறையும், தீவிரவாதமும் எந்த ரூபத்தில் வெளிப்பட்டாலும், அதை காங்கிரஸார் எதிர்ப்பார்கள். எனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி என்னை பயமுறுத்தப் பார்த்தார்கள். ஆனால் உயிருக்குப் பயந்தவர்கள் நாங்கள் அல்ல. தீவிரவாதத்தை ஒழிக்க எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறோம். தமிழக முதல்வர் கரு…
-
- 10 replies
- 1.7k views
-
-
தமிழீழம் அமைய ஈழத்தவர் செய்யவேண்டிய உடனடி அறிவிப்புகள்.. பல ஈழசொந்தங்கள் ஈழ போரின் போது தமிழகம் சரியான பங்களிப்பை அளிக்கவில்லை என்றும் சந்தியாவை தடுத்து நிறுத்தவில்லை என்றும் குறைபாடு உள்ளது.. கீழ் பட்டியலில் உள்ளவற்றை இப்போதாவது செயல்படுத்துவதாக அறிவிப்பு செய்யுங்கள்.. இனியாவது உங்களுக்கு ஆதரவாகவும் தமிழ் ஈழத்தை ஆதரித்தும் இந்தியாவில் தமிழகத்தில் ஆட்சியில் அல்லது முக்கிய பொறுப்புகளில் இருக்கும் தலைவர்கள் உடனடியாக குரல் கொடுப்பது மட்டும் இன்றி செயலிலும் இறங்க வேண்டுமா? இதோ கீழே இருப்பது போல் அறிவிப்பை தலைவர் பிரபாகரனை அறிவிக்க சொல்லுங்கள். தமிழ் ஈழம் மலர முதலில் குரல் கொடுத்து ஆதரவு திரட்டும் முதல் 10 தலைவர்களுக்கு கீழ்கண்ட சலுகைகள் வழங்கப்படும் என்று சொ…
-
- 5 replies
- 1.1k views
-
-
. மஹாத்மா காந்தியின் அஸ்தி தென்னாப்பிரிக்க கடற்பரப்பில் கரைக்கப்பட்டது. பிபிசி 1/31/2010 12:39:24 PM - மஹாத்மா காந்தியுடைய அஸ்தியின் ஒரு பாகம் சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்க கடற்பரப்பில் கடலில் கரைக்கப்பட்டுள்ளது. காந்தியடிகளின் 62ஆவது நினைவு தினமான சனிக்கிழமையன்று, டர்பன் அருகே அஸ்திக் கரைப்பு வைபவம் நடந்துள்ளது.அர்ச்சகர் ஒருவர் மந்திரங்களை ஓத, கடலில் மலர்கள் தூவப்பட்டு நடந்த இந்த வைபவத்தில் இருநூறு பேர் வரையிலானோர் கலந்துகொண்டிருந்தனர். 1948 இல் காந்திபடிகள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது அஸ்தி பல கலசங்கங்களில் பகிர்ந்து அடைக்கப்பட்டு பல இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தன. அவ்வாறு தென்னாப்பிரிக்கா அனுப்பப்பட்ட அஸ்தியின் ஒரு பகுதி …
-
- 6 replies
- 2.2k views
-
-
ஈழத்தில் இந்தியத்தின் தலையீடும் தமிழினத்தின் இன்றைய தேவையும். காங்கேசன் துறை சிமெண்ட் தொழிற்சாலை.. இந்தியா இலங்கை பெட்ரோலியம் கார்பரேசன்.. சம்பூர் அனல் மின் நிலையம்.. பசுமை புரட்சி திட்டம்.. மன்னார் எண்ணை அகழ்வாராய்ச்சி.. தமிழ்நாட்டில் இருந்து கேபிள் வழியாக சிங்களவனுக்கு மின்சாரம்.. இந்திராகாந்தி பல்கலை கழகம்.. யாழ்பாணத்தில் துணை தூதரகம்.. தொடர்வண்டி தொழிற்சாலை.. அசோக் லைடேண்டு.. காங்கேசன் துறை சிமெண்ட் தொழிற்சாலை காங்கேசன் துறை சிமெண்ட் பல வருடங்களாக பூட்டியே கிடந்தது..ஈழத்தின் சுண்ணம்பு வளத்தை பங்கு போட்டு விற்க பிர்லா குழுமத்தை சந்தியா களமிறக்கி உள்ளது.இன்று தடுப்பதற்கு புலிகள் இல்லை. இளிச்சவாயன் பொண்டாட்டி ஊருக்கெல்லாம் வப்பாட…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஜனவரி 29 அன்று காலை 10.45 - லிருந்து 11 மணிக்குள் இருக்கும். சென்னை சாஸ்திரி பவனுக்கு ஒரு வேலையின் நிமித்தம் சென்றிருந்த என் நண்பர். படபடப்போடு தொலைபேசி மூலம் அந்தத் தகவலைச் சொன்னார். ''இங்கே ஒருவர் ஈழப் பிரச்சினைக்காக தீக்குளித்து விட்டார். அவர் எரிந்தபடியே கீழே விழுகிறார்... எரிந்து கொண்டிருக்கிறார்'' என்றார். ஒரு விதமான பரபரப்பு என்னிடம் தொற்றிக் கொண்டது. உணர்வலைகளால் உந்தப்பட்டு எரிந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன் தமிழக அரசியல் வரலாற்றில் ஆழமான பாதிப்பு ஒன்றை ஏற்படுத்தப் போகிறான் என்றும் நான் நினைத்தேன். என்னிடம் தகவலைச் சொன்ன என் நண்பரிடம் ''அங்கே என்ன இருக்கு?" என்றேன். ''நிறைய பேப்பர்ஸ் வைத்திருக்கிறார் அந்த பேப்பர்களும் அவரோடு எரிகிறது'' என்றார். ''ந…
-
- 4 replies
- 713 views
-
-
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள், படிக்கிறார்கள். ஆனால் இந்தியாவுக்கென ‘தேசிய மொழி’ என்று எதுவும் கிடையாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று கூறிக் கொள்வோர் பலர். குறிப்பாக வட மாநிலங்களில்தான் இந்தக் கருத்து ரொம்ப அதிகம். ஆனால் அப்படியெல்லாம் கிடையாது, இந்தியாவுக்கென்று தேசிய மொழியே கிடையாது என்று சம்மட்டியால் அடித்தது போன்ற ஒரு தீர்ப்பை அளித்துள்ளது குஜராத் உயர்நீதிமன்றம். சுரேஷ் கச்சாடியா என்பவர் கடந்த ஆண்டு ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்தார். அதில், உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் தாங்கள் விநியோகிக்கும் உணவுப் பொருள் அடங்கிய பாக்கெட்க…
-
- 12 replies
- 831 views
-