Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பப்புவா நியூகினி தீவில் இன்று செவ்வாய்க்கிழமை 7.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தோனேசியா மற்றும் சுலைமான் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூகினியா தீவில் ராபாலுவுல நகரத்திலிருந்து தெற்காக 15 கிலோமீற்றர் தூரத்திலேயே ஜி.எம்.டி நேரப்படி 1.40க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த சுனாமி எச்சரிக்கையினால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது http://www.tamilmirror.lk/145375#sthash.nJ4g3RjZ.dpuf

    • 0 replies
    • 273 views
  2. மலேசியாவில் பொலிஸாரை தாக்க திட்டம் தீட்டிய 14 பேர் கைது மலேசியாவில் பொலிஸாரை குறிவைத்து நடத்தப்படவிருந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 14 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் நடந்த பரவலான சோதனையில் 13 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சுமார் ஒரு கிலோ எடையுள்ள குறித்த நேரத்தில் வெடிக்கும் குண்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/9340

  3. பொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி ஆரம்பித்து வைத்துள்ளார் பொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி எலிசபெத் பக்கிங்காம் அரண்மனையில் இன்று தொடங்கி வைத்துள்ளார். தனக்கு பின்னர் இளவரசர் சார்ள்ஸ் பொதுநலவாய கூட்டமைப்புக்கு தலைமை தாங்குவார் என அவர் தெரிவித்துள்ளார். பொதுநலவாய கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள 53 நாடுகளின் தலைவர்கள் இந்த மகாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் உரையாற்றிய 91 வயதான எலிசபெத் மகாராணி பொதுநலவாய கூட்டமைக்கு தனக்கு பின்னர் இளவரசர் சார்ள்ஸ் தலைமை தாங்குவார் எனவும் அவரது தலைமைக்கு உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப், கடந்த ஏப்ரல் மாதம் தனக்கு எதிரான முதல் குற்றவியல் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜரானார். எழுதியவர், மேடலின் ஹால்பர்ட் பதவி, பிபிசி நியூஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் மீது பல குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தீர்ப்பளிக்கப்படாத பல குற்றவியல் வழக்குகள் உள்ள ஒருவர் அமெரிக்க அதிபராவது இதுவே முதல்முறை. பல குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் அதேவேளையில் டிரம்ப் அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவியில் உட்காரப் போவது, அமெரிக்காவில் இதுவரை நடந்திராத ஒன்று. டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள் நுழையும் போது, அவர் எதிர்கொள்ளும் நான்க…

  5. உக்ரைன் மீது 1300 ட்ரோன் தாக்குதல்களை நடத்திய ரஷ்யா; போர், தொடங்கிய இடத்துக்கே திரும்பும்! - உக்ரைன் ஜனாதிபதி 22 Dec, 2025 | 11:39 AM கடந்த வாரம் உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 1300 ட்ரோன் தாக்குதல்கள், 1200 வான்வழிக் குண்டுத் தாக்குதல்கள், 9 ஏவுகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களில் உக்ரைனின் ஒடேசா பகுதியும் நாட்டின் தெற்குப் பிராந்தியங்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். தாக்குதல்களால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர பல்வேறு துறைகளில் சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “ரஷ்யாவின் பயங்கரவாதத் தாக்குதல்களை பல்வேறு மட்…

  6. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் மீது தாக்குதல் By Digital Desk 5 29 Oct, 2022 | 09:48 AM அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் அவரின் கணவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் கணவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் 82 வயது பொல் பெலோசியின் மீது சுத்தியலால் தாக்குதலை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. போல் பெலோசியின் தலையிலும் கையிலும் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நான்சி பெலோசியை சந்திக்கவேண்டும்…

    • 1 reply
    • 273 views
  7. மனுஸ் தீவு தடுப்புமுகாம் அரசியல் யாப்பை மீறுகிறது'- உச்ச நீதிமன்றம் அகதிகளையும் அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களையும் மனுஸ் தீவில் தடுத்து வைத்துள்ளது அரசியலமைப்பிற்கு முரணானது என்று பாப்புவா நியூ கினியின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. `ஆஸி. தடுப்பு முகாம் சட்டவிரோதமானது' சட்டவிரோத குடியேறிகள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் குற்றத்துடன் தொடர்புடையவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தவிர அனைவரினதும் தனிப்பட்ட சுதந்திரத்தை பப்புவா நியூ கினியின் அரசியலமைப்பு உறுதிப்படுத்துகின்றது. கடல்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியாவிற்கு வரும் தஞ்சக் கோரிக்கையாளர்களை தமது நாட்டிற்கு வெளியே வைத்து விசாரிக்கும் ஆஸ்திரேலியாவின் கொள்கையின் கீழ் அகதித் தஞ்சக்…

  8. ஆந்திரா, தெலுங்கானாவில் வெயிலுக்குப் பலியானோர் தொகை 750 ஐ எட்டியது! [Tuesday 2015-05-26 07:00] ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 750-ஐ தாண்டி உள்ளது. கத்திரி வெயில் இந்த ஆண்டு ஆரம்பித்தது முதல் நாட்டின் பல மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில் சுட்டெரித்து வருகின்றது. இந்த வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் ஆந்திர மாநிலத்தில் மட்டும் சுமார் 551 பேர் இதுவரை பரிதாபமாக பலியாகி உள்ளனர். இதேபோல், தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 213 பேர் இதுவரை பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்தியாவிலேயே வெயிலுக்கு இந்த இரண்டு மாநிலங்களில் தான் அதிகமானவர்கள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. …

  9. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தாட் வான் பாதுகாப்பு கவசத்தை மத்திய தரைக் கடலுக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு 2 விமானம் தாங்கிக் கப்பல், மற்றும் ஜெட் விமானங்களை அமெரிக்கா அனுப்பியிருந்தது. தற்போது, அவற்றுடன் தாட்(THAAD) என்னும் வான் பாதுகாப்பு கவசத்தை மத்திய தரைக் கடலுக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது தாட் அமைப்பு, குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கக் கூடியது. இதுகுறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின், கூடுதல் படையினர் எந்த நேரத்தில…

  10. ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிப்பு அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த மினியாபொலிஸ் காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மினியாபொலிஸ் நகரில் செயற்பட்டு வரும் குறித்த காவல்துறையை முற்றிலும் கலைத்துவிட்டு புதிதாகக் கட்டமைக்க முடிவு செய்துள்ளோம் என மினியாபொலிஸ் நகரின் சபை தலைவர் லிசா பெண்டர் அறிவித்துள்ளார். தங்கள் சமூகம் மற்றும் மக்களுடன் இணைந்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல்துறையை உருவாக்க தாங்கள் கடமைப்பட்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகர் மினியாபொலிஸில், மே 25ம் திகதி, 46 வயத…

  11. கொரோனா வைரஸ்: கட்டுப்பாடுகள் விதித்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளும் சுவீடன் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க முடக்கத்தை அமுல்படுத்துவதில்லை என தீர்மானித்திருந்த சுவீடனில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேண்டும் என தொற்றுநோயியல் நிபுணர் கூறியுள்ளார். தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் பல மாதங்களாக மற்ற நாடுகளினால் அமுல்படுத்தப்பட்ட முடக்கம் தொடர்பாக கடுமையான விமர்சங்களை முன்வைத்து வந்தார். இருப்பினும் இன்று (புதன்கிழமை) காலை, ஸ்வெரிஜஸ் வானொலியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், நாட்டில் அதிகமானோர் உயிரிழப்பதை ஒப்புக்கொண்டார். உலகில் கொரோனா வைரஸிலிருந்து அதிக இறப்பு விகிதம் ஸ்வீடனில் பதிவாகியுள்ளது. நாட்டி…

  12. கான்பெராவிலுள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஆஸ்திரேலியாவில் சொத்துக்களை வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சட்டத்தை மீறினால் கடுமையான புதிய தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படவுள்ள புதிய தண்டனைகளில் மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர்கள் அபராதம் ஆகியவை அடங்கும். வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியாவில் புதிய குடியிருப்புகளை மட்டுமே வாங்க முடியும். பழைய குடியிருப்புகளை அவர்கள் வாங்கத் தடையுள்ளது. நாட்டில் சட்டம் தெளிவாக இருந்தாலும், அதை நடைமுறைபடுத்துவது சிறிய அளவிலேயே உள்ளது என அரசு வாதிடுகிறது. ஆஸ்திரேலியாவில் வீடுகளின் விலை உயர்வதற்கு முதலீட்டாளர்கள், குறிப்பாக சீனாவிலிருந்து வருபவர்களே க…

    • 0 replies
    • 273 views
  13. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் வாகனப் பிரசாரம் வெள்ளிக்கிழமை துவங்குகிறது. இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் ஆயிரக் கணக்கான ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் போரில் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நவம்பர் 15ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாடு இலங்கையில் நடைபெற்றால், ஈழத்தமிழர்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்டது மற்றும் 800க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு உலக நாடுகள் அங்கீகாரம் அளி…

  14. மியன்மாரில் கத்திகள், கம்புகள் மற்றும் பிற ஆயுதங்களை கொண்ட கலவரக் கும்பல் ஒன்றால் நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள மசூதி ஒன்று தீ வைத்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் மத சகிப்பு தன்மையற்ற நிலை கவலை அளிப்பதாக உள்ளது காச்சின் மாநிலத்திலுள்ள ஹபாகான்ட் என்ற இடத்தில் நடைபெற்றுள்ள இந்தத் தாக்குதல், கடந்த வாரம் மியான்மரின் மத்தியப் பகுதியில் மசூதி ஒன்றிற்கு எதிராக நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் மத சகிப்புதன்மையற்ற நிலைமைகளை பற்றி அந்நாட்டில் பயணம் மேற்கொண்டு வரும் ஐநா மனித உரிமைகள் புலனாய்வாளர் யாங்ஹீ லீ கவலை வெளியிட்டுள்ளார். இத்தகைய சம்பவங்களில் முழுமையான புலனாய…

    • 0 replies
    • 273 views
  15. கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர்! இங்கிலாந்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில், கொரோனா வைரஸ் இறப்பு நிகழ்ந்த மருத்துவமனையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், 19 சதவீதம் பேர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த கணக்கு மொத்த மக்கள் தொகையை கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து தேசிய சுகாதார இயக்குநர், ஹபீப் நக்வி கூறுகையில், இதுபோன்று கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் அதிகம்பேர் உயிரிழந்தது கவலையை அளித்துள்ளது. இது மிகவும், கடினமான சூ…

  16. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததாக வடகொரியா அறிவிப்பு, கடுமையாக கண்டித்திருக்கும் அமெரிக்கா ; மூளையின் செயற்பாட்டை மிகத்துல்லியமாக கண்டறியும் புதிய ஸ்கேன்னர் கண்டுபிடிப்பு, பிரிட்டன் விஞ்ஞானிகள் சாதனை குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தி ; மற்றும் மாமிசத்துக்காக வளர்க்கப்பட்ட பசுக்களை கொல்ல மறுத்த விவசாயி, அறுபதாயிரம் டாலர் இழப்பென்றாலும் மனதுக்கு மகிழ்ச்சியான செயல் என்கிறார், இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  17. உலகப் பார்வை: டிரம்புடன் உறவு - மன்னிப்பு கேட்ட `பிளேபாய்` பத்திரிகை மாடல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். மன்னிப்பு கேட்ட மாடல் படத்தின் காப்புரிமைDIMITRIOS KAMBOURIS அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் 2006 ஆம் ஆண்டு உறவில் இருந்ததற்காக `பிளேபாய்` பத்திரிக…

  18. நாளிதழ்களில் இன்று: ''பா.ஜ.கவை வீழ்த்த இதுவே ஒரே வழி'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி படத்தின் காப்புரிமைGETTY IMAGES காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு டெல்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. நாடு முழுவதும் இருந்த…

  19. நாங்கள் இணைந்தால் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் வலிமைபெறும்- ஜெலன்ஸ்கி Posted on June 13, 2022 by தென்னவள் 3 0 உக்ரைனின் தென்கிழக்கு கெர்சன் மற்றும் ஜபோரிஜியா பிராந்தியங்களில், ரஷிய படைகளிடம் இருந்து கிராமங்கள் மற்றும் நகரங்களை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றிவிட்டதாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார். எனினும், சிவியரோடோனெட்ஸ்க் பகுதியில் இன்னும் சண்டை தொடர்ந்து நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா, உக்ரைனுக்கு சென்று ஜெலன்ஸ்கியைச் சந்தித்து பேசினார். அப்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான உக்ரைனின்…

    • 0 replies
    • 273 views
  20. இஸ்ரேல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம்! பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதை 12 மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் 124 நாடுகளின் ஒப்பந்தத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணைக்கு எதிராக 14 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தன. மேலும் கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400194

  21. அதிபர் டிரம்ப் விதித்த பயணத்தடைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஆறு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அதிபர் டிரம்ப் விதித்திருந்த பயணத்தடை முழுமையாக அமல்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், சாட், இரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் நாட்டு பயணிகளுக்கு எதிராக பெறப்பட்ட உத்தவுகள் இன்னும் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளது. அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு, பயணத்தடை குறித்து அவர் பிறப்பித்த உத்தரவின் மூன்றாவது வரைவை இந்த தீர்ப்பு குறிப்பிடுகிறது. நேற்றைய தினம் (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்துவரும் ஒன்பது நீதிபதிகள் …

  22. இறை­தூ­தரை அவ­தூறு செய்யும் கேலிச்­சித்­தி­ரங்­களை வெளி­யிட்ட பிரான்ஸ் சஞ்­சி­கை­யான சார்ளி ஹெப்­டோ­வுக்கு எதிர்ப்­புத் ­தெ­ரி­விக்கும் வகையில், லண்­டனில் முஸ்­லிம்கள் ஒன்று கூடி எதிர்ப்பு ஆர்ப்­பாட்ட மொன்றை நடத்­தி­யுள்­ளனர். டவுணிங் வீதிக்கு அப்பால் கூடிய மேற்­படி ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள், 100,000 பிரித்­தா­னிய முஸ்­லிம்­களின் கையொப்­பங்­களை உள்­ள­டக்­கிய மகஜர் ஒன்றை பிரித்­தா­னிய பிர­த­மரின் அலு­வ­ல­கத்தில் கைய­ளித்­துள்­ளனர். மேற்­படி ஆர்ப்­பாட்ட ஊர்­வ­லத்தில் ஆண்­களும் பெண்­களும் இணைந்து பங்­கேற்க அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்­தது.அதனால் ஆண்கள் தனி­யா­கவும் பெண்கள் தனி­யா­கவும் ஊர்­வ­ல­மாக சென்­றனர். அமை­தி­யாக இடம்பெற்ற இந்த ஊர்வலத்தில் 1,000 பேருக்கும் அதிகம…

  23. தெலுங்கானா போல கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி 2வது நாளாக முழு அடைப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இன்றைய முழு அடைப்பின் போது தனி மாநிலம் கோரி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலத்தில் இருந்து டார்ஜிலிங் மலை பிரதேசத்தை பிரித்து தனி மாநிலம் அமைக்கக் கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்ற நிலையில் கூர்க்காலாந்து கோரிக்கையும் தீவிரமடைந்துள்ளது. நேற்று முதல் 3 நாள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. டார்ஜிலிங் உள்ளிட்ட கூர்க்காலாந்து பகுதிகளில் நேற்றைப் போல இன்றும் முழு அளவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தன. …

  24. பைலட்கள் வேலைநிறுத்தம்: லுப்தான்ஸா நிறுவனத்தின் 876 விமானச் சேவைகள் இன்று ரத்து ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ‘லுப்தான்ஸா ஏர்வேஸ்’ நிர்வாகத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான விமானிகள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 876 விமானங்களின் இயக்கம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிராங்ப்ரட்: ஐரோப்பா மற்றும் ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ‘லுப்தான்ஸா ஏர்வேஸ்’ நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஜெர்ம…

  25. டிரம்ப் பதவியேற்ற ஓரிரு மணித்தியாலங்களில் குடியேற்றவாசிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் - சி.என்.என். Published By: Rajeeban 18 Jan, 2025 | 11:53 AM டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு சில மணித்தியாலங்களில் குடியேற்றவாசிகள் குறித்து மிகக்கடுமையான உத்தரவுகள் வெளியாகலாம் என தெரிவித்துள்ள சிஎன்என் டிரம்பின் குழுவினர் இதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர் என செய்தி வெளியிட்டுள்ளது. சிஎன்என் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர் பதவியேற்று ஒரு சில மணித்தியாலங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.