Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பெத்லகேமில் நிறுத்தப்பட்ட நத்தார் கொண்டாட்டங்கள் கத்தோலிக்க மக்களின் மிகவும் புனிதமான நகரமான பெத்லகேமில் இந்த ஆண்டு நத்தார் பண்டிகை கொண்டாட்டங்கள் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பெத்லகேம் ஒரு பாலஸ்தீனிய நகரமாக ஆளப்படுவதே இதற்குக் காரணம். நகரில் பாரம்பரியமாக நத்தார் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டாலும், காஸா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆண்டு நத்தார் கொண்டாட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சமீபகால வரலாற்றில் பெத்லகேம் நகரில் நத்தார் பண்டிகை கொண்டாடப்படாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். நத்தார் பண்டிகையை முன்னிட்டு வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில், பாப்பரசர் பிரான்சிஸ் அவர…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பார்பரா பிளெட் அஷர், அந்தோனி ஸர்ச்சர், வட அமெரிக்கா நிருபர் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸா போர் குறித்து அமெரிக்கா ஒரு புதிய ராஜதந்திர முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. வரவிருக்கும் வாரங்களில் இஸ்ரேலை சமாதானப்படுத்துவது தான் அது. இது பைடன் நிர்வாகத்தின் ஒரு முக்கியத்துவம் மிக்க நடவடிக்கையாகும். மேலும் இந்த நடவடிக்கை வெற்றி பெறுமா என்பது போரின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்க உதவும் - அத்துடன் அமெரிக்காவில் அதிபரின் சொந்த அரசியல் அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கும் வாய்ப்பும் உள்ளது. வெளிப்படையாகப் பேசினால், இஸ்ரேலின் போரைக் கட்டுப்படுத்துவதற்கான அமெ…

  3. 23 DEC, 2023 | 03:55 PM துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிக்கரகுவா நாட்டிற்கு 303 இந்தியர்களுடன் பயணித்த விமானம் பிரான்ஸில் தரையிறக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கரகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு விமானம் சென்றுகொண்டிருந்தது. இதனிடையே, துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் எரிபொருள் நிரப்புவதற்காகவும், தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளதா என்பதை சரிபார்ப்பதற்காகவும் செல்லும் வழியில் பிரான்ஸ் நாட்டின் வட்ரே நகர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, விமான நிலைய…

  4. அமெரிக்க பொலிஸாருக்கு எதிராக வெடித்த போராட்டம்! அமெரிக்காவில், பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய பொலிஸார் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு மானுவல் எல்லிஸ் (Manuel Ellis) என்ற 33 வயதான நபர் வொஷிங்டன் பொலிஸாரின் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த நபர் பொலிஸார் தாக்கியதினாலேயே உயிரிழந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து குறித்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பொலிஸ் அதிகாரிகளையும் நீதிமன்றம் அண்மையில் விடுதலை செய்தது. …

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யா - இரான் இடையிலான உறவு 26 நிமிடங்களுக்கு முன்னர் பிப்ரவரி 2022இல் யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யாவிற்கும் இரானுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு வலுவடைந்து வருகிறது. இரானை 'ரஷ்யாவின் சிறந்த ராணுவ கூட்டாளி' என்று அமெரிக்கா கருதுகிறது. இரான் மாஸ்கோவிற்கு பீரங்கி மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs) உட்படப் பல்வேறு ஆயுதங்களை வழங்குகிறது. இரானுடனான ராணுவ உறவுகள் 'நேர்மறை' திசையில் வளர்ந்து வருவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இரு நாட்டு உறவுகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். ரஷ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை அன…

  6. Published By: DIGITAL DESK 3 22 DEC, 2023 | 12:09 PM அமெரிக்காவின் ஓக்லஹாமா மாநிலத்தில் தான் செய்யாத குற்றத்திற்கு 48 வருடகால சிறைதண்டனை அனுபவித்த நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 1975ம் ஆண்டு மதுக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை முயற்சியில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் க்ளின் சிம்மன்ஸ் என்ற இளைஞர் மற்றும் டான் ராபர்ட்ஸ் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் க்ளின் சிம்மன்ஸ், குற்றம் நடந்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில் தான் லூசியானா மாநிலத்தில் இருந்ததாகவும், இந்த கொலையில் தனக்கு சம்பந்தம் இல்லையென்றும் கூறி வந்தார். ஆனால், நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி, பின்னர் மரண தண்டனை சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டது. …

  7. புலம்பெயர்ந்தோருக்கு எதிரான சர்ச்சைக்குரிய குடியேற்ற சீர்திருத்தம்: பிரான்ஸ் ஜனாதிபதி வரவேற்பு! புலம்பெயர்ந்தோருக்கு எதிரான சர்ச்சைக்குரிய குடியேற்ற சீர்திருத்தத்தை, ‘நாட்டிற்கான கவசம்’ என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வர்ணித்துள்ளார். பிரான்ஸ் 5 தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த, நாட்டில் குடியேற்றப் பிரச்சனை இருப்பதனை ஒப்புக்கொண்ட மக்ரோன், இது எங்களுக்குத் தேவையான ஒரு கவசம் என்று அவர் புதிய சட்டத்தைக் குறிப்பிட்டார். நாட்டில் நிலவும் பதற்றத்தை தணிப்பதுடன், இந்த நடவடிக்கைக்கு தனது அரசாங்கம் பக்கபலமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். சுகாதார அமைச்சர் ஆரேலியன் ர…

  8. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஒரு டாலருடன் ஹாங்காங்கில் வாழ்க்கையைத் தொடங்கிய லாய் பின்னாளில் மிகப்பெரும் கோடீஸ்வரர் ஆனார். 21 டிசம்பர் 2023 சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகக் குரல் எழுப்பத் துணிந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இப்படி குரல் எழுப்பியவர்களில் ஒருவர் தான் ஜிம்மி லாய். தனது 12வது வயதில் ஒரு டாலரை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சீனாவிலிருந்து ஹாங்காங் வந்தடைந்த ஜிம்மி, வெளிப்படையாகப் பேசும், அச்சமற்ற, ஒருபோதும் அடங்கிப்போகாத கிளர்ச்சியாளராக விளங்கினார். இது தவிர, செல்வாக்கு மிக்க ஹாங்காங் செய்தித்தாளான ஆப்பிள் டெய்லியின் உரிமையாளரான அவர் ஒரு மிகப்பெரும் கோடீஸ்வரர் ஆவார். உலகிலேயே பணக்காரர…

  9. 21 DEC, 2023 | 09:49 PM செக் குடியரசின் சென்ட்ரல் ப்ராக் நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜோன் பலாச் சதுக்கத்தில் அமைந்துள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக கட்டிடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/172247

  10. அமெரிக்கா- தென்கொரியா இடையிலான உறவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், இரண்டு நாடுகளின் போர் ஒத்திகை, கொரியா தீபகற்பத்தில் இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கை ஆகியவை தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக வடகொரியா நினைக்கிறது. இதனால் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் அணுஆயுதங்களை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கி அழிக்கும் “ஹ்வாசோங்-18” ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணையாக பார்க்கப்படுகிறது. வடகொரியாவில் இருந்து அமெரிக்காவின் ஒரு பகுதியை துல்லியமாக இலக்கு நிர்ணயித்து தாக்க முடியும் எனக் கூறப்படுகிறது. அதே வேளையில் கடந்த ஆண்டில் இருந்…

  11. புதிய ஒமிக்ரோன் பிறழ்வு வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா, சீனா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் JN.1 பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மக்களுக்கான ஆபத்து தற்போது குறைவாக உள்ளதாகவும் தற்போதைய தடுப்பூசிகள் தொடர்ந்தும் பாதுகாப்பை வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது. எனினும், குளிர்காலத்தில் கொரோனா மற்றும் பிற நோய் தொற்றுகள் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/285478

  12. Published By: VISHNU 18 DEC, 2023 | 08:22 PM (நா.தனுஜா) அடுத்த தேர்தலில் தமது கட்சி ஆட்சியமைத்தால், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையுடன் தொடர்புபட்ட ஆட்சியாளர்களுக்கு எதிராக 'மக்னிற்ஸ்கி' முறையிலான தடைகளை விதிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக கனேடிய எதிர்க்கட்சித்தலைவர் பியெர் பொலியெவ்ர் தெரிவித்துள்ளார். கனடாவின் பிரதமரைத் தெரிவுசெய்வதற்கான அடுத்த தேர்தலில் தமது கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்துகையிலேயே கனேடிய பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொலியெவ்ர் மேற்கண்டவ…

  13. பட மூலாதாரம்,NATIONAL GRID 9 மணி நேரங்களுக்கு முன்னர் ‘வைகிங் லிங்க்’ உலகின் நாடுகளுக்கு இடையே உள்ள மிக நீளமான நில மற்றும் கடல் மின் கேபிள் ஆகும். இது ‘மெகாஸ்ட்ரக்சர்’ எனப்படும் ராட்சதக் கட்டமைப்பாகும். இதன் கட்டுமானத்தில் பெரும் கைவினைத்திறன் அடங்கியுள்ளது. இது டென்மார்க்கிலிருந்து பிரிட்டன் வரை 765 கி.மீ.-க்கும் அதிகமான தூரத்திற்கு மின்சாரத்தை மேலும் கீழும் கடற்பரப்பில் கடத்திச் செல்கிறது. இது ஒரு மகத்தான பொறியியல் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இந்த இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் ‘வட கடல்’ ஆழம் குறைந்த கடல். இதனால் சேதம் அல்லது நாசவேலைகல் சுலபமாக ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இத்ற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். …

  14. Published By: DIGITAL DESK 3 20 DEC, 2023 | 09:53 AM 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு கொலராடோ (Colorado) உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதன்படி, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றுவதற்கு தகுதியற்றவர் என்றும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி அன்று அமெரிக்க தலைநகர் மீது அவரது ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் அவருக்கு பங்கு இருப்பதால் காரணமாக கொலராடோவில் போட்டியிட முடியாது என்றும் நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் 3 ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதி வேட்பாளரொருவர் தகுதி நீக்கம் செய்ய…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 23 வயதான ஷிஹ் சின்-டே 1969ம் ஆண்டு கோடைகாலத்தில் அமெரிக்காவிற்கு செல்ல விமானத்தில் ஏறியபோது, அவர் முற்றிலும் வேறு உலகத்திற்கு பயணிக்க தொடங்கியிருந்தார். அவர் கரும்பு வயல்களால் சூழப்பட்ட ஒரு மீனவ கிராமத்தில் தான் வளர்ந்தார். பின்னர் தூசி நிறைந்த தெருக்கள் மற்றும் சாம்பல் நிற அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த அரிதாகவே சொந்த கார்களை கொண்ட மக்கள் நிறைந்த தைவானின் தலைநகரான தைபேயில் உள்ள பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை மேற்கொண்டார். தற்போது அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளார். அமெரிக்கா ஒரு மனிதனை நிலவிற்கும் , போயிங் 747 விமானம் மூலம் வானிற்கும் உயர்த்துகிறது. சோவியத் யூ…

  16. செங்கடலில் ஹவுதி தாக்குதல்களை எதிர்கொள்ள பன்னாட்டு படை – அமெரிக்கா யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்கள் காரணமாக பல கப்பல் நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் செங்கடலில் கப்பல் வர்த்தகத்தைப் பாதுகாக்க ஒரு பன்னாட்டுப் படையைத் தொடங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, சீஷெல்ஸ் மற்றும் பிரித்தானியா என 10 நாடுகள் இதில் இணையும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் கூறியுள்ளார். காசாவில் போர் தொடங்கியதில் இருந்து, ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் அல்லது இஸ்ரேலியர்களுடன் தொடர்புடைய கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வரு…

  17. அமெரிக்காவை எச்சரிக்கவே சக்திவாய்ந்த ஏவுகணையை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது – வடகொரியா. அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கிம் ஜொங் உன் மேற்பார்வையில் மிக சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்ததாக வடகொரியா அறிவித்துள்ளது. அமெரிக்காவில் எங்கும் சென்றடையும் திறன் கொண்ட இந்த இந்த ஏவுகணை பரிசோதனை நேற்று இடம்பெற்றதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்திருந்தது. https://athavannews.com/2023/1363660

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூசிலாந்து தனது வேளாண் துறை மீத்தேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், எலன் ரைக்கர்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் நியூசிலாந்தில் 1 கோடி பசுக்கள் மற்றும் 2 கோடியே 60 லட்சம் ஆடுகள் உள்ளன. புவி வெப்பமடைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளின் இலக்குகளை அடைய, அந்நாடு அறிவியல் மற்றும் தனித்துவமான கொள்கையைப் பயன்படுத்தி, கால்நடை வளர்ப்பு தொழிலில் இருந்து அதிக அளவிலான மீத்தேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இளம் காளை ஒன்று பிளாஸ்டிக் டப்பாவில் இடப்பட்டுள்ள…

  19. சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் நிலநடுக்கத்தில் 220 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகவும் இருந்ததாகவும்10 கிமீ (ஆறு மைல்) ஆழத்தில் இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் நிலநடுக்கத்தில் 220 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூட…

  20. அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனை பின்னுக்குத் தள்ளி முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, அரிசோனா, விஸ்கான்சின், பென்சில்வேனியா உள்ளிட்ட பிரதான மாகாணங்களில், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை, டொனால்ட் டிரம்ப் பின்னுக்குத் தள்ளிய விடயம் கருத்துக் கணிப்பில் வெளியாகியுள்ளது. 2020 தேர்தலில் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜார்ஜியா மாகாணத்தில் ஜோபைடன் வெற்றியை தன்வசமாக்ககியிருந்தார். கருத்துக் கணிப்பு எனினும் தற்போது குறித்த மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் ஐந்து சதவீத அதிக வாக்குகளை பெறக்கூடும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்க…

    • 1 reply
    • 507 views
  21. Published By: RAJEEBAN 18 DEC, 2023 | 01:20 PM வடகுயின்ஸ்லாந்தில்பெரும் வெள்ளத்தில் சிக்குண்டுள்ள மக்கள் அவசர உதவியை கோரியுள்ளனர். குயின்ஸ்லாந்தின் தொலைதூர வடபகுதியில் சிக்குண்டுள்ள மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களிற்கான விநியோகங்கள் முடிவடையும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளதுடன் அவசர இராணுவ தலையீட்டிற்காக காத்திருக்கின்றனர் என டக்ளஸ் சயரின் மேயர் தெரிவித்துள்ளார். குக்டவுன் முதல் இனிஸ்பெயில் வரை பல நகரங்கள் வெள்ள நீரினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பிரதான வீதிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன கெயர்ன்சின் மக்களை அவசர தேவைக்காக மாத்திரம் நீரை பயன்படுத்துமாறு அதிக…

  22. Published By: RAJEEBAN 18 DEC, 2023 | 12:15 PM வடகாசாவில் உள்ள மருத்துவமனையொன்றின் நோயாளிகளை இஸ்ரேலிய படையினர் புல்டோசர்களை பயன்படுத்தி நசுக்கிகொலை செய்தனர் என வெளியானகுற்றச்சாட்டுகள் குறித்து பாலஸ்தீன அதிகார சபை விசாரணைகளை கோரியுள்ளது. வடகாசாவில் உள்ள கமால் அட்வான் மருத்துவமனையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மருத்துவமனைக்குஅருகில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்களை இஸ்ரேலிய படையினர் புல்டோசர்களை பயன்படுத்தி அழித்தனர் இதன்போது நோயாளிகள் உட்பட பொதுமக்களை கொலை செய்தனர் என வைத்தியர்களும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் குறிப்பிட்டனர். பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்குவைக்கப்பட்டனர் புல்டோச…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹசாசின்கள் தங்கள் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் வகையில் ராணுவ, கல்வி மற்றும் மதப் பயிற்சிகளைப் பெற்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ பதவி, பிபிசி நியூஸ் 52 நிமிடங்களுக்கு முன்னர் "முதியவர் ஒரு பெரிய பிரபுவைக் கொல்ல விரும்பும்போது, அவர் மிகவும் துணிச்சலான (...) இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை (...) அந்த பிரபு மறைந்தால், அவரைக் கொன்றவர்களுக்கு சொர்க்கம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சொல்லி அனுப்புகிறார்." இந்த வார்த்தைகளுடன், வெனிஸ் நாட்டு ஆய்வாளர் மார்கோ போலோ தனது "புக் ஆஃப் வொண்டர்ஸ்" என்ற நூலில் பல தசாப்தங்களுக்கு முன்னர…

  24. மத்திய தரைக்கடல் விபத்துக்கள் : இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! லிபியாவின் கடலோரப் பகுதியில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 86 பேருடன் லிபியாவின் சுவாரா நகரிலிருந்து இந்தக் கப்பல் புறப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உயரமான அலைகள் காரணமாக படகு கவிழ்ந்துள்ளதாகவும், குழந்தைகள் உட்பட 61 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயிருப்பதாகவும், அவர்கள் உயிரிழந்து விட்டதாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், உயிர் தப்பிய 25 பேர் லிபிய தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்…

  25. பட மூலாதாரம்,AFP 16 டிசம்பர் 2023, 12:56 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகள் வரிசையில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் எண்ணெய் வளம் மிகுந்த நாடாகப் பார்க்கப்படும் குவைத்தின் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா வயது முதிர்வு காரணமாக இன்று மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. குவைத் நாட்டை 263 ஆண்டுகளாக ஆண்டு வரும் சபா குடும்பத்தின் தொடர்ச்சியாக கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்நாட்டின் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத். இவர் யார்? அவரது வரலாறு என்ன? இங்கு விரிவாகப் பார்க்கலாம். ஷேக் நவாஃப் பிறப்பு குவைத்தில், “அமைதியான அதே நேரம் தேவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.