Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஹவாய் தீவில் காட்டுத்தீ : உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு! 1000 பேர் மாயம்! அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஒன்றான மெளயி-ல் (Maui) கடந்த ஒகஸ்ட் 8ஆம் திகதி காட்டுத் தீ ஏற்பட்டிருக்கிறது. இந்த காட்டுத் தீயில் மாட்டி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்திருக்கிறது. ஆயிரக்க்கணக்கானோர் மாயமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் இந்த காட்டுத் தீயிலிருந்து தப்பிக்கக் கடலினுள் குதிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தீ கட்டுக்கட…

    • 0 replies
    • 399 views
  2. நைஜர் ஜனாதிபதியை கைது செய்தது அந்நாட்டு இராணுவம்! மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரை இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு கலைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிறுவனங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நைஜர் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனை அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி ஊடாக பாதுகாப்பு தரப்பினர் மக்களுக்கு அறிவித்தியுள்ளது. மேலும் நைஜர் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2023/1341810

  3. Published By: SETHU 10 AUG, 2023 | 10:30 AM (ஆர்.சேதுராமன்) பிரிட்டனில் புகலிடம் கோருபவர்களை சர்ச்சைக்குரிய கப்பலில் தங்கவைக்கும் நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. 'பிபி ஸ்டொக்ஹோம்' எனும் இக்கப்பலுக்கு முதல் கட்டமாக 15 பேர் கடந்த திங்கட்கிழமை அனுப்பப்பட்டனர். பிபி ஸ்டோக்ஹோம் ஆனது ஒரு பாரிய தெப்பம் (barge) ஆகும். 222 அறைகள் இதில் உள்ளன. 500 ஆண்களை இதில் தங்க வைப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு எதிர்க்கட்சியினரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆதரவான குழுக்களும் சட்டத்தரணிகளும், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் இதை மிதக்கும் சிறைச்சாலை என வர்ணிக்கின்றனர். …

  4. ஹவாய் தீவு காட்டுத் தீ ஒரு பேரழிவு: அதிபர் ஜோ பைடன் வேதனை- பலி 53 ஆக அதிகரிப்பு வைலுகு (ஹவாய்): அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ள நிலையில் இதனை ஒரு பேரழிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தீவு மாநிலமான ஹவாய் தீவுகள், முக்கிய நிலப்பகுதியில் இருந்து மேற்கே 2,000 மைல் தொலைவில் பசிபிக் கடலில் அமைந்துள்ளது. இதில் அமைந்துள்ள இரண்டாவது மிகப்பெரிய தீவு மாய் ஆகும். இத்தீவின் சில இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காட்டுத் தீ பற்றியது. அருகில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான லைஹானா நகருக்குள் தீ மிக …

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1950 களில் பூமியின் மேற்பரப்பில் பல்வேறு இடங்களில் அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன கட்டுரை தகவல் எழுதியவர், ரிச்சர்ட் ஃபிஷர் பதவி, பிபிசி ஃபியூச்சர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் அது உங்கள் பற்களில் இருக்கிறது. உங்கள் கண்களுக்குள் ஊடுருவியிருக்கிறது. ஏன் உங்கள் மூளைக்குள்ளும் புதைந்திருக்கிறது. விஞ்ஞானிகள் இதை "வெடிகுண்டு முனை" என்கிறார்கள். கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக அது உங்கள் உடலுக்குள் தனது அடையாளத்தை வைத்திருக்கிறது. கடந்த 1950 களில் பூமியின் மேற்பரப்பில் பல்வேறு இடங்களில் அணுகுண்டு சோதனைகள் நடத்தப்ப…

  6. பட மூலாதாரம்,BRITISH GOVERNMENT கட்டுரை தகவல் எழுதியவர், அனகா பதக் பதவி, பிபிசி மராத்தி 7 மணி நேரங்களுக்கு முன்னர் டைட்டானிக் கப்பல் மூழ்கப்போகும் தறுவாயில், முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் படகுகளில் மீட்கப்பட்டனர். அத்தகைய படகில் ஒரு பெண், ஒரு சிறிய குழந்தை மற்றும் ஒரு நபர் அமர்ந்திருந்தனர். படகை தண்ணீரில் செலுத்தும் முன், ஒரு அதிகாரி, " வேறு பெண் பயணிகள் யாராவது இருக்கிறீர்களா?" என்று கேட்டார். யாரும் முன்வரவில்லை. "பெண்கள் யாராவது இருக்கிறீர்களா?" என்று மற்றொரு அதிகாரி கத்தினார். கப்பலின் மேல் தளத்திலிருந்து ஒரு பெண் வந்து, “நான் இந்தக் கப்பலில் …

  7. Published By: RAJEEBAN 11 AUG, 2023 | 12:03 PM சூரிய ஒளியை நான் இழந்துவிட்டேன் - மரங்களை பார்த்து மூன்று வருடங்களாகிவிட்டன என சீனாவில் மூன்று வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய பெண் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். முதல் தடவையாக கருத்து தெரிவித்துள்ள அவர் நான் சூரியனை தவறவிட்டுவிட்டேன். எனது ஜன்னல் ஊடாக சூரியஒளி வருகின்றது எனினும் என்னால் பத்து மணித்தியலாங்கள் மாத்திரம் அதன் கீழ் நிற்க முடியும் என ஜெங் லே தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய மக்களுக்கான பகிரங்க கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார் - தன்னை ஒவ்வொரு மாதமும் சந்திக்க வரும் இராஜதந்திரிகள் மூலம் அவர் இதனை அனுப்பியுள்ளார். நான் அவுஸ்த…

  8. Published By: RAJEEBAN 10 AUG, 2023 | 06:04 AM அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக இணையவழி அச்சுறுத்தலை விடுத்த நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். யுட்டாவிற்கு ஜோபைடன் விஜயம் மேற்கொள்வதற்கு சில மணி நேரங்களிற்கு முன்னர் அந்த நபரை கைது செய்வதற்காக வீட்டிற்கு எவ்பிஐ அதிகாரிகள் சென்றவேளை இடம்பெற்ற சம்பவத்தில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கிரெய்க் ரொபேர்ட்சன் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார், இணையவழி மூலம் பைடனிற்கும் முன்னாள் ஜனாதிபதி டிரம்பிற்கு எதிரான குற்றவியல் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதிகாரிக்கும் எதிராக ரொபேட்சன் கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளார் என குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. முகநூலில் இந்…

  9. 3 மணி நேரம் முன் இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர் படகு விபத்துக்குள்ளானதில் 41 பயணிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துனிசியாவிலிருந்து இத்தாலியை நோக்கி பயணித்த படகில் பயனித்த புலம்பெயர் பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் குறித்த விபத்தில் என உயிருடன் மீட்கப்பட்ட 4 பேர் வழங்கிய தகவலுக்கமையவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 1800 பேர் உயிரிழப்பு மேலும் உயிருடன் தப்பியவர்களில் 3 ஆண்கள் மற்றும் 1 பெண் உள்ளடங்குகிறார்கள். மேலும், மூழ்கிய படகில் மூன்று குழந்தைகள் உட்பட 45 பேர் சென்றதாக மீட்புப் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். லம்பேடுசா பகுதியானது இத்தாலியின் தெற்கே…

  10. வாழ்வில் தூக்கம் என்பது சோம்பல் என்றும், அது தேவையற்றது என நான் எனது இளம் வயதில் நினைத்தேன்” என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் அவர் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பில் கேட்ஸ். மைக்ரோசோப்ட் நிறுவனர்களில் ஒருவர். 67 வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் சிறப்பிடத்தில் இருந்தவர். உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார் பில் கேட்ஸ். இப்போது கூட உலக பணக்காரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 134 பில்லியன் டொலர்கள். தனது சொத்துகளை தானமாக வழங்குவது குறித்து கடந்த ஆண்டு பேசி இருந்தார். “என்னுடைய 30 மற்றும் 40 வயதுக…

  11. பட மூலாதாரம்,VOLOCOPTER படக்குறிப்பு, வோலோகாப்டர் நிறுவனத்தின் 'வோலோசிட்டி' மின்சார விமானம் கட்டுரை தகவல் எழுதியவர், பென் மோரிஸ் பதவி, வணிக ஆசிரியர் 8 ஆகஸ்ட் 2023 பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்னும் ஒரு வருடத்தில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்தப் போட்டிகளில் பங்கேற்று புதிய சாதனைகள் படைக்க தடகள வீரர்கள் ஆவலுடன் இருப்பார்கள். இந்த கோடை திருவிழா ஒருபுறமிருக்க, அதற்கு முன்பே பாரிஸ் மாநகரம் மற்றொரு புதிய பயண அனுபவத்துக்கு ஆயத்தமாகி வருகிறது. ‘வோலோசிட்டி’ (Volocity) என்றழைக்கப்படும் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு இருக்கைகள் கொண்ட சிறிய விமானம…

  12. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ளது பிரபல மெளண்ட் ஸினாய் மருத்துவமனை. அங்குள்ள புற்றுநோய் சிகிச்சை துறையில் மருத்துவராக பணிபுரிந்தவர் டாக்டர். கிரிஸ்டல் காஸெட்டா. இவர் அந்த மருத்துவமனையில் மார்பகம், எலும்பு, மகளிர் நோய் மற்றும் இரைப்பை குடல் புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பு வாய்ந்த மருத்துவர். மேலும், மெளண்ட் ஸினாய் குயின்ஸ் செண்டரில் நிலைய தலைவராகவும், இகான் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராகவும் பதவிகள் வகித்தார். இவருக்கு ஒரு குழந்தை உண்டு. டாக்டர்.கிரிஸ்டலின் இல்லம் நியூயோர்க் நகரிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் சோமர்ஸ் பகுதியில் உள்ளது. டாக்டர். கிரிஸ்டலுடன் அவ்வீட்டில் வசிக்கும் ஒருவர், நேற்று முன் தினம் கா…

  13. தனது மனைவி சோஃபியை பிரிவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்த தம்பதியரின் 18 ஆண்டுகால மண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 51 வயதான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் 48 வயதான அவரது மனைவி சோஃபி கடந்த 2005இல் மண வாழ்க்கையில் இணைந்தனர். இந்த தம்பதியருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தங்களது பிரிவு முடிவை சார்ந்து இருவரும் சட்டப்படியான ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளனர். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. “அனைவருக்கும் வணக்கம். சோஃபியும் நானும் இந்த உண்மையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நீண்ட ஆலோசனைக்கு பின்னர் நாங்கள் இருவரும் கலந்து பேசி பிரிவதாக முடிவு செய்துள்ளோம். நாங்கள் ஒருவருக…

  14. Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிக அளவிலான மக்களுக்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. இது அதிகமான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் இது குறித்து ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப் பட்டது. தற்போது இந்த வைரஸ் இங்கிலாந்தில் ஏழு பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாகவும், இதற்கு கிரேக்க தெய்வத்தின் பெயரான எரிஸ் என்ற பெ…

  15. அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தோ்தலில் தனது தோல்வியை மாற்றியமைக்க முயன்றதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட 4 குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த ஜனாதிபதி தோ்தலில் தனது தோல்வியை ஏற்க மறுத்து, தோ்தல் முடிவுகளை மாற்றியமைக்க ட்ரம்ப் முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதை கொலம்பியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தன்யா சுட்கன் உறுதி செய்துள்ளாா். அமெரிக்காவை ஏமாற்றுவதற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டது, தோ்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை புதிய ஜனாதிபதிக்கு வழங்குவதற்காக நடைபெற்ற அரசுப் பணிக்கு இடையூறு விளைவித்தத…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்துக்கு உட்பட்ட பால்டிமோரில் உள்ள லாக்சின் பேரக்குழந்தை ஒருவரின் வீட்டில் இருக்கும் அவரது உருவப்படம் 5 ஆகஸ்ட் 2023, 10:51 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆராய்ச்சியாளராகவோ, கல்வியாளராகவோ இருக்கும் ஒருவரின் பெயர் அவர் சார்ந்த துறையால் அங்கீகரிக்கப்படுவதில் வியப்பேதும் இருக்க முடியாது. ஆனால், இப்படி எந்தவொரு அடையாளமும் இல்லாத சாதாரண ஒரு பெண்ணின் பெயர் இன்று உயிரி அறிவியல் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எழுபது ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் அவர் இறந்தாலும், அவரது உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட ச…

  17. பட மூலாதாரம்,FLORIDA FISH & WILDLIFE படக்குறிப்பு, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், பர்மிய வகை மலைப்பாம்புகளை வேட்டையாடுவதற்கான போட்டி (Python Challenge) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், மேக்ஸ் மாட்சா பதவி, பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்துக்கு உட்பட்ட நேபிள்ஸை பூர்வீகமாகக் கொண்டவர் ஜேக் வாலேரி. 22 வயது துடிப்பான இளைஞரும், ஓஹியோ பல்கலைக்கழகத்தின் மாணவருமான இவர், பாம்புகளை வேட்டையாடுவதைத் தனது கோடை விடுமுறையின் ஒரு பெரிய திட்டமாக வைத்திருக்கிறார். தொழில்முறையாக பாம்புகளை வேட்…

  18. Published By: SETHU 01 AUG, 2023 | 04:05 PM சீனாவில், சூறாவளியினால் ஏற்பட்ட கடும் மழை காரணமாக குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 19 பேர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தோக்சூரி எனும் சூறாவளி காரணமாக, தொடர்ச்சியாக 4 ஆவது நாளாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால், பல நதிகளின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதுடன் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், குறைந்தபட்சம் 20 பேர் பலியானதுடன் மேலும் 19 பேரை காணவில்லை என சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தலைநகர் பெய்ஜிங்கில் சுமார் 52,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், 100 இற்கும் அதிகம…

  19. Published By: SETHU 02 AUG, 2023 | 09:58 AM பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஆபரண விற்பனை ஒன்றில் புகுந்த 3 நபர்கள், சுமார் 15 மில்லியன் யூரோ (சுமார் 530 கோடி இலங்கை ரூபா, 136 கோடி இந்திய ரூபா)) பெறுமதியான ஆபரணங்களை கொள்ளைடித்துச் சென்றுள்ளனர். ஆடம்பர கடிகார விற்பனை நிலையமொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 10 முதல் 15 மில்லியன் யூரோ பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பாரிஸ் வழக்குத்தொடுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. டிப்டொப்பாக ஆடையணிந்த 2 ஆண்கள், ஒரு பெண் அடங்கிய குழுவினர், கைத்துப்பாக்கியொன்றுடன் கடையின் உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த ஊழிய…

  20. வல்லரசுகளின் சுரண்டலே கலகங்களுக்குக் காரணம்! நியாமே, ஆக.1- அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் மேலா திக்க நடவடிக்கைகளே ராணுவத்தினர் கலகங்களை மேற்கொள்வதற்குக் கார ணம் என்று தகவல்கள் வெளியாகி யுள்ளன. ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதி காரத்தைக் கைப்பற்றிக் கொண்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்தது. கலகம் நடந்தவுடன் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்தன. ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை மறுபடியும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் இந்த கலகத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள் ளது. தலைநகர் நியாமேயில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்ற ஆதரவு பேரணியும் நடைபெற்றிருக்கிறது. பிரான்ஸ் ந…

    • 0 replies
    • 238 views
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறிய சண்டை பெரும் வன்முறையாக மாறி ரயில் நிலையம் வரை தாக்குதல் நடைபெற்றது. கட்டுரை தகவல் எழுதியவர், டேரியோ ப்ரூக்ஸ் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "கிஸ் மீ தி ••••," என்ற வாசகங்களுடன் ஒரு அமெரிக்கர் தூண்டிய கிளர்ச்சி பனாமா தீவின் வரலாற்றையே புரட்டிப்போட்டது. அவர் ஃபிலிபஸ்டர்கள் என அழைக்கப்படுபவர்களில் ஒருவர். தீய வழிகளில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். தங்கத்தைப் பெறவேண்டும் என்பதற்காகவே பல ஏமாற்றுவேலைகளைச் செய்யக்கூடிய அந்த வடஅமெரிக்கர், அமெரிக்காவின் மேற்கு பகுதியிலோ, கரீபி…

  22. Published By: SETHU 01 AUG, 2023 | 12:08 PM அவுஸ்திரேலியாவின் முன்னாள் சிறுவர் பராமரிப்பு ஊழியர் ஒருவர் 91 சிறார்களை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதுடன், அக்காட்சிகளை படம்பிடித்தார் என வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இது மேற்படி நபர் மீது தொடர்பாக நீதிமன்றத்தில் 1,600 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள ஒரு டசினுக்கும் அதிகமான சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் 15 வருடங்களுக்கும் மேலாக, இளம் சிறுமிகளை இந்நபர் துஷ்பிரயோகப்படுத்தினார் என பொலிஸார் கூறுகின்றனர். 45 வயதான இந்நபர், 2022 ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்டார். எனினும், பொலிஸார் விசாரணை நடத்துவதற்கும் பாதிக்கப்பட்ட…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குர்ஆன் எரிக்கப்படுவதைக் கண்டித்து பல இஸ்லாமிய நாடுகளில் போராட்டம் நடந்தன. 31 ஜூலை 2023, 03:31 GMT புதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர் பாதுகாப்பு, சர்வதேச எதிர்ப்புகள் காரணமாக குர்ஆன் அல்லது பிற மத நூல்களை எரிக்கும் போராட்டங்களை தடை செய்வது குறித்து டென்மார்க் பரிசீலித்து வருகிறது. எனினும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்றும் டென்மார்க் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. கோபன்ஹேகன் நகரின் வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெளியில் நடக்கும் போராட்டங்கள் உட்பட சில சம்பவங்களில் தலையிட சட்டப்பூர்வ வழிகளை டென…

  24. Published By: VISHNU 23 JUL, 2023 | 06:10 PM சுவிசிலிருந்து சண் தவராசா புவியின் வெப்­ப­நிலை அண்மைக் கால­மாக அதி­க­ரித்துச் செல்­வது தொடர்­பான செய்­தி­க­ளையும் ஆய்­வு­க­ளையும் அடிக்­கடி ஊட­கங்­களில் பார்க்க முடி­கின்­றது. இவ்­வாறு உலகின் வெப்­ப­நிலை தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்துச் செல்­வதால் ஏற்­படக் கூடிய பார­தூ­ர­மான விளை­வுகள், பாதிப்­புகள் என்­பவை தொடர்­பான எச்­ச­ரிக்­கை­க­ளையும் அவற்­றிலே அவ­தா­னிக்க முடி­கின்­றது. ஒரு சாமா­னிய மனி­த­னாக இந்தச் செய்­திகள் எமக்குக் கவலை தரு­வ­தாக உள்ள போதிலும் இந்த நிலையை மாற்ற எம்மால் எதுவும் செய்ய முடி­யாத கையறு நிலை­யி­லேயே நாம் இருக்­கிறோம் என்ற யதார்த்தம் நெஞ்சை…

  25. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் 21 ஜூலை 2023 அது 16 ஜூலை 1945 அன்றைய அதிகாலை நேரம். ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் உலகை புரட்டிப் போடும் ஒரு கணத்திற்காக பாதுகாப்பான பதுங்கு குழி ஒன்றுக்குள் காத்திருந்தார். சுமார் 10 கிலோ மீட்டர் (6 மைல்) தொலைவில், நியூ மெக்சிகோவில் உள்ள ஜோர்னாடா டெல் மியூர்டோ பாலைவனத்தின் வெளிர் மணலில் "டிரினிட்டி" என்ற ரகசிய பெயரில் உலகின் முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. ஓப்பன்ஹெய்மர் மிகுந்த களைப்புடன் இருந்ததைப் போல் தோன்றியது. அவர் எப்போதும் மெலிந்தவராகத்தான் இருந்தார். ஆனால் அணுகுண்டை வடிவமைத்து உருவாக்கிய "மன்ஹாட்டன் இன்ஜினியர் டிஸ்ட்ரிக்ட்" இன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.