உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
செங்கடலில் ஹவுதி தாக்குதல்களை எதிர்கொள்ள பன்னாட்டு படை – அமெரிக்கா யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்கள் காரணமாக பல கப்பல் நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் செங்கடலில் கப்பல் வர்த்தகத்தைப் பாதுகாக்க ஒரு பன்னாட்டுப் படையைத் தொடங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, சீஷெல்ஸ் மற்றும் பிரித்தானியா என 10 நாடுகள் இதில் இணையும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் கூறியுள்ளார். காசாவில் போர் தொடங்கியதில் இருந்து, ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் அல்லது இஸ்ரேலியர்களுடன் தொடர்புடைய கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வரு…
-
- 0 replies
- 248 views
-
-
அமெரிக்காவை எச்சரிக்கவே சக்திவாய்ந்த ஏவுகணையை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது – வடகொரியா. அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கிம் ஜொங் உன் மேற்பார்வையில் மிக சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்ததாக வடகொரியா அறிவித்துள்ளது. அமெரிக்காவில் எங்கும் சென்றடையும் திறன் கொண்ட இந்த இந்த ஏவுகணை பரிசோதனை நேற்று இடம்பெற்றதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்திருந்தது. https://athavannews.com/2023/1363660
-
- 0 replies
- 222 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூசிலாந்து தனது வேளாண் துறை மீத்தேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், எலன் ரைக்கர்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் நியூசிலாந்தில் 1 கோடி பசுக்கள் மற்றும் 2 கோடியே 60 லட்சம் ஆடுகள் உள்ளன. புவி வெப்பமடைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளின் இலக்குகளை அடைய, அந்நாடு அறிவியல் மற்றும் தனித்துவமான கொள்கையைப் பயன்படுத்தி, கால்நடை வளர்ப்பு தொழிலில் இருந்து அதிக அளவிலான மீத்தேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இளம் காளை ஒன்று பிளாஸ்டிக் டப்பாவில் இடப்பட்டுள்ள…
-
- 0 replies
- 311 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனை பின்னுக்குத் தள்ளி முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, அரிசோனா, விஸ்கான்சின், பென்சில்வேனியா உள்ளிட்ட பிரதான மாகாணங்களில், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை, டொனால்ட் டிரம்ப் பின்னுக்குத் தள்ளிய விடயம் கருத்துக் கணிப்பில் வெளியாகியுள்ளது. 2020 தேர்தலில் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜார்ஜியா மாகாணத்தில் ஜோபைடன் வெற்றியை தன்வசமாக்ககியிருந்தார். கருத்துக் கணிப்பு எனினும் தற்போது குறித்த மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் ஐந்து சதவீத அதிக வாக்குகளை பெறக்கூடும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்க…
-
- 1 reply
- 507 views
-
-
Published By: RAJEEBAN 18 DEC, 2023 | 12:15 PM வடகாசாவில் உள்ள மருத்துவமனையொன்றின் நோயாளிகளை இஸ்ரேலிய படையினர் புல்டோசர்களை பயன்படுத்தி நசுக்கிகொலை செய்தனர் என வெளியானகுற்றச்சாட்டுகள் குறித்து பாலஸ்தீன அதிகார சபை விசாரணைகளை கோரியுள்ளது. வடகாசாவில் உள்ள கமால் அட்வான் மருத்துவமனையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மருத்துவமனைக்குஅருகில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்களை இஸ்ரேலிய படையினர் புல்டோசர்களை பயன்படுத்தி அழித்தனர் இதன்போது நோயாளிகள் உட்பட பொதுமக்களை கொலை செய்தனர் என வைத்தியர்களும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் குறிப்பிட்டனர். பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்குவைக்கப்பட்டனர் புல்டோச…
-
- 2 replies
- 337 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 18 DEC, 2023 | 01:20 PM வடகுயின்ஸ்லாந்தில்பெரும் வெள்ளத்தில் சிக்குண்டுள்ள மக்கள் அவசர உதவியை கோரியுள்ளனர். குயின்ஸ்லாந்தின் தொலைதூர வடபகுதியில் சிக்குண்டுள்ள மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களிற்கான விநியோகங்கள் முடிவடையும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளதுடன் அவசர இராணுவ தலையீட்டிற்காக காத்திருக்கின்றனர் என டக்ளஸ் சயரின் மேயர் தெரிவித்துள்ளார். குக்டவுன் முதல் இனிஸ்பெயில் வரை பல நகரங்கள் வெள்ள நீரினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பிரதான வீதிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன கெயர்ன்சின் மக்களை அவசர தேவைக்காக மாத்திரம் நீரை பயன்படுத்துமாறு அதிக…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹசாசின்கள் தங்கள் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் வகையில் ராணுவ, கல்வி மற்றும் மதப் பயிற்சிகளைப் பெற்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ பதவி, பிபிசி நியூஸ் 52 நிமிடங்களுக்கு முன்னர் "முதியவர் ஒரு பெரிய பிரபுவைக் கொல்ல விரும்பும்போது, அவர் மிகவும் துணிச்சலான (...) இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை (...) அந்த பிரபு மறைந்தால், அவரைக் கொன்றவர்களுக்கு சொர்க்கம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சொல்லி அனுப்புகிறார்." இந்த வார்த்தைகளுடன், வெனிஸ் நாட்டு ஆய்வாளர் மார்கோ போலோ தனது "புக் ஆஃப் வொண்டர்ஸ்" என்ற நூலில் பல தசாப்தங்களுக்கு முன்னர…
-
- 0 replies
- 626 views
- 1 follower
-
-
மத்திய தரைக்கடல் விபத்துக்கள் : இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! லிபியாவின் கடலோரப் பகுதியில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 86 பேருடன் லிபியாவின் சுவாரா நகரிலிருந்து இந்தக் கப்பல் புறப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உயரமான அலைகள் காரணமாக படகு கவிழ்ந்துள்ளதாகவும், குழந்தைகள் உட்பட 61 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயிருப்பதாகவும், அவர்கள் உயிரிழந்து விட்டதாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், உயிர் தப்பிய 25 பேர் லிபிய தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்…
-
- 1 reply
- 348 views
-
-
பட மூலாதாரம்,AFP 16 டிசம்பர் 2023, 12:56 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகள் வரிசையில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் எண்ணெய் வளம் மிகுந்த நாடாகப் பார்க்கப்படும் குவைத்தின் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா வயது முதிர்வு காரணமாக இன்று மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. குவைத் நாட்டை 263 ஆண்டுகளாக ஆண்டு வரும் சபா குடும்பத்தின் தொடர்ச்சியாக கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்நாட்டின் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத். இவர் யார்? அவரது வரலாறு என்ன? இங்கு விரிவாகப் பார்க்கலாம். ஷேக் நவாஃப் பிறப்பு குவைத்தில், “அமைதியான அதே நேரம் தேவ…
-
- 1 reply
- 339 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 14 DEC, 2023 | 01:59 PM பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது கல்லறை அமைக்கப்பட வேண்டிய இடம் எது என்பதை அறிவிக்கும் விதமாக, "ரோம் நகரில் உள்ள சான்டா மரியா மேகியோர் பசிலிக்காவில் எனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன்" என நேற்று (13) மெக்சிகோ ஒளிபரப்பான டெலிவிசாவின் N+ ஸ்ட்ரீமிங் சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். வத்திக்கான் அதிகாரபூர்வ ஊடக தகவலின்படி, இதுவரை பரிசுத்த பாப்பரசர் பதவி வகித்த 7 பேரின் கல்லறைகள் வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிலேயே கட்டப்பட்டுள்ளன. ஆனால், அங்கு தனக்கான கல்லறை அமைக்கப்பட விரும்பாமல், சான்டா மரியா மேகியார் (santa maria maggiore) …
-
- 2 replies
- 616 views
- 1 follower
-
-
இணையத்தில் தகவல்களை தேடுவோரின் முதன்மைத் தேர்வாக கூகுள் தேடுபொறி இருக்கிறது. எந்த விஷயமாக இருந்தாலும் கூகுளில் தேடினால் கிடைக்கும் என்று சொல்லும் அளவுக்கு கூகுள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இவ்வாறு கூகுள் மூலம் தேடப்படும் விஷயங்களை ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்நிறுவனம் பட்டியலிடுகிறது. அவ்வகையில் 2023ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகளை பட்டியலிட்டிருக்கிறது. செய்திகளைப் பொருத்தவரை உலகம் முழுவதும் இப்போது பேசப்படும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பான தேடல் இந்த ஆண்டு முதலிடத்தில் இருக்கிறது. டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்ய சென்ற நீர்மூழ்கிக் கலன், பெப்ரவரியில் துருக்கி மற்றும் சிரியாவில் பேரழிவுகளை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஆகிய தேடல்கள் அடுத்தடுத்த இடங்களில் உள…
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ஹன்னா ரிச்சி பதவி, பிபிசி நியூஸ், சிட்னி 15 டிசம்பர் 2023, 03:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தனது நான்கு குழந்தைகளைக் கொன்றதற்காக 'ஆஸ்திரேலியாவின் மோசமான தாய்' என்று முத்திரை குத்தப்பட்ட ஒரு பெண்ணின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றம் வியாழன் அன்று, கேத்லீன் ஃபோல்பிக் (Kathleen Folbigg) என்ற அந்தப் பெண் சிறையில் அடைக்கப் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்கள் "நம்பகமானவை அல்ல" என்று தீர்ப்பளித்தது. 56 வயதான அவர் 20 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் ஜூன் மாதம் மாநில அரசால் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். …
-
- 0 replies
- 252 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,EUROPEAN SPACE AGENCY படக்குறிப்பு, ஐரோப்பிய ஒன்றியம் 2026இல் இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. அவை மனித நடவடிக்கைகளால் ஏற்படும் கரிம உமிழ்வை அடையாளம் காட்டும் என்று நம்பப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், நவீன் சிங் கட்கா பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி உலக சேவை 13 டிசம்பர் 2023 துபாயில் நடந்த COP28 காலநிலை உச்சிமாநாட்டில் பங்கேற்பாளர்கள் புதைபடிம எரிபொருள் தொழில்நுட்பங்களை படிப்படியாக வெளியேற்றுவது பற்றி வாதிடுவதால், வாக்குறுதிகளுக்கும் உண்மைக்கும் இடையே எப்போதும் இடைவெளி இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இவ்வாறு, நாடுகள் தங்கள் கடமை…
-
- 0 replies
- 358 views
- 1 follower
-
-
கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி ரஷ்யர் ஒருவர் விமானத்தில் பயணித்த சம்பவமானது சமூக ஊடகங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸுக்கு விமானத்தில் பயணித்த சம்பவம் தொடர்பிலேயே அதிகாரிகளால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. டென்மார்க்கில் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மீறினார் என்பது தொடர்பில் எதுவும் நிலைவில் இல்லை என்றே குறித்த நபர் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். வழக்கு பதிவு இந்த நிலையில் அவர் மீது பெடரல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 46 வயதான குறித்த நபர் கடந்…
-
- 0 replies
- 439 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சரப்ஜித் சிங் தலிவால் பதவி, பிபிசி நிருபர் 13 டிசம்பர் 2023, 05:29 GMT படிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து கனடாவுக்கு வரும் மாணவர்களுக்கு அந்நாடு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள், மாணவர்கள் கனடாவுக்கு செல்வதை அதிக செலவானதாகவும் கடினமாகவும் மாற்றும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். புதிய விதிகளின்படி, கனடா அரசாங்கம் ஜி.ஐ.சி. (GIC - உத்தரவாத முதலீட்டுச் சான்றிதழ்) தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது. மேலும், பணி அனுமதியிலும் (Work permit) பல மாற்றங்களை செய்துள்ளது. பிற நாடுகளில் இருந்து கனடாவுக்குச் செல்லும் மாணவர்கள் தங்கள் பொருளாதார தகுதிய…
-
- 1 reply
- 376 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 11 DEC, 2023 | 10:56 AM 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெற்றால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக மாறும் என தெரிவிக்கப்படுவதை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். டிரம்ப் தான் ஜனாதிபதியானால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என தெரிவிக்கப்படுவதை வதந்தி ஜனநாயக கட்சியினரின் தவறான பிரச்சாரம் என வர்ணித்துள்ளார். நியுயோர்க்கின் இளம் குடியரசுகட்சியினர் கழகத்தில் ஆற்றிய உரையில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனே ஜனநாயகத்திற்கு உண்மையான ஆபத்து என குறிப்பிட்டுள்ளார். ஆனால் நான் அச்சுறுத்தல் இல்லை நான் ஜனநாயகத்தை பாதுகாப்பேன் உண்மையான ஆபத்து நேர்மையற்ற ஜோ பைடனே எனவு…
-
- 1 reply
- 315 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 11 DEC, 2023 | 11:24 AM guardian இஸ்ரேலிய படையினர் கான்யூனிசின் மையப்குதிக்குள் நுழைந்துள்ள அதேவேளை ஹமாஸ் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் தன்னிடம் உள்ள பணயக்கைதிகளின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளது. இஸ்ரேலிய டாங்கிகள் கான் யூனிசின் முக்கியமான வடக்கு தெற்கு வீதிக்குள் நுழைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நகரின் கிழக்கு பகுதி ஊடாக இஸ்ரேலிய படையினரின் முன்னேற்றம் கடும் மோதல் காரணமாக கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளது இஸ்ரேல் கடும்குண்டுவீச்சு தாக்குதல்களையும் மேற்கொண்டுவருகின்றது. இதேவேளை ஞாயிற்றுக்கிழமை விடுத்துள…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் இரண்டாம் உலகப்போரின் போது இமயமலையில் விழுந்த அமெரிக்க விமானங்களின் பாகங்கள் இந்தியாவில் புதிதாக திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்குள் உலகப்போர் அடியெடுத்து வைத்தபோது நடந்த ஒரு துணிச்சலான, அபாயகரமான வான்வழி நடவடிக்கை குறித்து பிபிசியின் சௌதிக் பிஸ்வாஸ் இங்கு விவரிக்கிறார். 80 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மலைகளில் விபத்துக்குள்ளான நூற்றுக்கணக்கான விமானங்களின் சிதைவுகள் மற்றும் உடைந்த பாகங்களை 2009-ஆம் ஆண்டு முதல் இந்திய மற்றும் அமெரிக்கக் குழுக்கள் தேடி வந்தனர். இரண்டாம் உலகப்போரின் போது 42 மாத கா…
-
- 0 replies
- 390 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க்லோ கிம் மற்றும் மேக்ஸ் மாட்ஸா பதவி, பிபிசி செய்திகள் 8 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வரி ஏய்ப்பு செய்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் ஒன்பது கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். இதுகுறித்த 56 பக்க குற்றப் பத்திரிகையில் அவர் 2016-19 வரை இந்திய ரூபாய் மதிப்பில் 11.67 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் கொக்கைன் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்த ஹண்டர் பைடன் இந்த வரி ஏய்ப்பு குற்றங்களில் பெரும்பாலானவை…
-
- 5 replies
- 588 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ஜெய்தீப் வசந்த் பதவி, பிபிசி குஜராத்தி 16 நிமிடங்களுக்கு முன்னர் 'அலோஹா' ஹவாய் மொழியைச் சேர்ந்த இந்த வார்த்தை ஒருவரை வாழ்த்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, இந்த வார்த்தைக்கு ஒருவரை 'வாருங்கள்' என்று அழைக்கும் அர்த்தமும் உண்டு. இப்படி மகிழ்ச்சிகரமான வார்த்தையைக் கொண்ட 'அலோஹா ஏர்லைன்ஸ்' விமானத்தில் 1988ம் வருடம் ஏப்ரல் மாதம் பயணம் செய்த 95 பயணிகளை நோக்கி மரணம்தான் ‘அலோஹா’ எனக் கூறியது. 1988-ஆம் வருடம் ஏப்ரல் 28-ஆம் தேதி ஹவாய் தீவுகளில் உள்ள இரண்டு தீவுகளுக்கு இடையே ஒரு குறுகிய பயணத்தை அந்த விமானம் மேற்கொண்டது. 24,000 அடியில் விமானம் நிலையாக பறந்துகொண்டிருந்தது. தி…
-
- 2 replies
- 588 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறுவயது முதலே வித்தியாசமான சிந்தனை உடையவராக ஆச்சார்யா ரஜ்னீஷ் திகழ்ந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள், சீடர்கள் மற்றும் பின்பற்றுபவர்களால் எளிமையாக அவர் 'ஓஷோ' என அழைக்கப்பட்டார். இந்தியாவிலும் பின்னர் உலகம் முழுவதும் 'ஆச்சார்யா ரஜ்னீஷ்' மற்றும் 'பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ்' என்று அவர் அழைக்கப்பட்டு வருகிறார். 'ஓஷோ' என்றால் கடலுடன் தன்னை இணைத்துக் கொண்டவர் என்று பொருள். அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து ஏறக்குறைய 33 வருடங்கள் ஆகின்றன. ஆனால் இன்றும் அவர் எழுதிய புத்தகங்கள்…
-
- 0 replies
- 393 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஐசரியா பிரைதோங்யேம் பதவி, பிபிசி உலக சேவை 9 டிசம்பர் 2023 பள்ளி மாணவர்களிடையே கணிதம், வாசித்தல் மற்றும் அறிவியல் செயல்திறன் ஆகிய பிரிவுகளில் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட பிசா தேர்வுகள் 2022-இல் தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வரலாற்று ரீதியாகவே சிங்கப்பூர் மாணவர்கள் குறிப்பாக கணிதத்தில் மிகவும் வெற்றிகரமாக உள்ளனர். இந்த வெற்றியில் தனித்துவமான முறையில் கணிதம் கற்பிக்கப்படுவது முக்கிய பங்கு வகிக்கிறது. சிங்கப்பூர் கணிதம் என்பது என்ன? ஏன் அது வெற்றிகரமாக இருக்கிறது? பிசா (சர்வதேச அளவில் மாணவர்களை மதிப்பிடும் தேர்…
-
- 1 reply
- 269 views
- 1 follower
-
-
குடியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் கடுமையான விசா விதிகளை வெளியிட்டது பிரித்தானியா. வரலாறு காணாத அளவுக்கு இடம்பெயர்வு உயர்ந்ததை அடுத்து, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் குடியேற்றத்தை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டத்தை உள்துறை அமைச்சின் செயலாளர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார். திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தேவையான குறைந்தபட்ச சம்பளத்தை 26,200 பவுண்டில் இருந்து 38,700 பவுண்டாக உயர்த்துவதும் இதில் அடங்கும். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு வர தகுதி பெற்ற 300,000 பேர் எதிர்காலத்தில் வர முடியாது என உள்துறை அமைச்சின் செயலாளர் ஜேம்ஸ் குறிப்பிட்டுள்ளார். …
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
08 DEC, 2023 | 04:02 PM அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 செல்சியசிற்கும் அதிகமாக காணப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாஸ்மேனியாவை தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் அதிகளவு வெப்பநிலை காணப்பட்டது. தென் அவுஸ்திரேலியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுஇமாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பினால் மூண்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலை வார இறுதிவரை தொடரலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது. கடும் காற்று மின்னல் கடும் வெப்பம் காரணமாக தென் அவுஸ்திரேலியா கிழக்கு அவுஸ்திரேலியா வடமேற்கு அவுஸ்திரேலியா தென்கிழக்கு நியுசவுத்வ…
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
லூசி வில்லியம்சன் பதவி,மத்திய கிழக்கு செய்தியாளர், ஜெருசலேம் 6 டிசம்பர் 2023, 10:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல்களின்போது பாலியல் வன்முறை மற்றும் பெண்கள் கொடூரமாக சிதைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பிபிசிக்கு கிடைத்துள்ளன. எச்சரிக்கை: பாலியல் வன்முறை மற்றும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் குறித்த விளக்கங்கள் உள்ளன. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்களைச் சேகரித்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருந்த பலர், மனிதர்களின் உடைந்த இடுப்பு எலும்புகளுடன் கூடிய உடல்கள், காயங்கள், வெட்டுக் காயங்களுடன் கூடிய உடல்கள் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை தாக்குதல…
-
- 12 replies
- 981 views
-