உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
3 மணி நேரம் முன் இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர் படகு விபத்துக்குள்ளானதில் 41 பயணிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துனிசியாவிலிருந்து இத்தாலியை நோக்கி பயணித்த படகில் பயனித்த புலம்பெயர் பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் குறித்த விபத்தில் என உயிருடன் மீட்கப்பட்ட 4 பேர் வழங்கிய தகவலுக்கமையவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 1800 பேர் உயிரிழப்பு மேலும் உயிருடன் தப்பியவர்களில் 3 ஆண்கள் மற்றும் 1 பெண் உள்ளடங்குகிறார்கள். மேலும், மூழ்கிய படகில் மூன்று குழந்தைகள் உட்பட 45 பேர் சென்றதாக மீட்புப் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். லம்பேடுசா பகுதியானது இத்தாலியின் தெற்கே…
-
- 1 reply
- 203 views
- 1 follower
-
-
வாழ்வில் தூக்கம் என்பது சோம்பல் என்றும், அது தேவையற்றது என நான் எனது இளம் வயதில் நினைத்தேன்” என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் அவர் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பில் கேட்ஸ். மைக்ரோசோப்ட் நிறுவனர்களில் ஒருவர். 67 வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் சிறப்பிடத்தில் இருந்தவர். உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார் பில் கேட்ஸ். இப்போது கூட உலக பணக்காரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 134 பில்லியன் டொலர்கள். தனது சொத்துகளை தானமாக வழங்குவது குறித்து கடந்த ஆண்டு பேசி இருந்தார். “என்னுடைய 30 மற்றும் 40 வயதுக…
-
- 0 replies
- 472 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,VOLOCOPTER படக்குறிப்பு, வோலோகாப்டர் நிறுவனத்தின் 'வோலோசிட்டி' மின்சார விமானம் கட்டுரை தகவல் எழுதியவர், பென் மோரிஸ் பதவி, வணிக ஆசிரியர் 8 ஆகஸ்ட் 2023 பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்னும் ஒரு வருடத்தில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்தப் போட்டிகளில் பங்கேற்று புதிய சாதனைகள் படைக்க தடகள வீரர்கள் ஆவலுடன் இருப்பார்கள். இந்த கோடை திருவிழா ஒருபுறமிருக்க, அதற்கு முன்பே பாரிஸ் மாநகரம் மற்றொரு புதிய பயண அனுபவத்துக்கு ஆயத்தமாகி வருகிறது. ‘வோலோசிட்டி’ (Volocity) என்றழைக்கப்படும் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு இருக்கைகள் கொண்ட சிறிய விமானம…
-
- 0 replies
- 399 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ளது பிரபல மெளண்ட் ஸினாய் மருத்துவமனை. அங்குள்ள புற்றுநோய் சிகிச்சை துறையில் மருத்துவராக பணிபுரிந்தவர் டாக்டர். கிரிஸ்டல் காஸெட்டா. இவர் அந்த மருத்துவமனையில் மார்பகம், எலும்பு, மகளிர் நோய் மற்றும் இரைப்பை குடல் புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பு வாய்ந்த மருத்துவர். மேலும், மெளண்ட் ஸினாய் குயின்ஸ் செண்டரில் நிலைய தலைவராகவும், இகான் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராகவும் பதவிகள் வகித்தார். இவருக்கு ஒரு குழந்தை உண்டு. டாக்டர்.கிரிஸ்டலின் இல்லம் நியூயோர்க் நகரிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் சோமர்ஸ் பகுதியில் உள்ளது. டாக்டர். கிரிஸ்டலுடன் அவ்வீட்டில் வசிக்கும் ஒருவர், நேற்று முன் தினம் கா…
-
- 2 replies
- 341 views
- 1 follower
-
-
தனது மனைவி சோஃபியை பிரிவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்த தம்பதியரின் 18 ஆண்டுகால மண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 51 வயதான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் 48 வயதான அவரது மனைவி சோஃபி கடந்த 2005இல் மண வாழ்க்கையில் இணைந்தனர். இந்த தம்பதியருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தங்களது பிரிவு முடிவை சார்ந்து இருவரும் சட்டப்படியான ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளனர். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. “அனைவருக்கும் வணக்கம். சோஃபியும் நானும் இந்த உண்மையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நீண்ட ஆலோசனைக்கு பின்னர் நாங்கள் இருவரும் கலந்து பேசி பிரிவதாக முடிவு செய்துள்ளோம். நாங்கள் ஒருவருக…
-
- 3 replies
- 635 views
- 1 follower
-
-
Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிக அளவிலான மக்களுக்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. இது அதிகமான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் இது குறித்து ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப் பட்டது. தற்போது இந்த வைரஸ் இங்கிலாந்தில் ஏழு பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாகவும், இதற்கு கிரேக்க தெய்வத்தின் பெயரான எரிஸ் என்ற பெ…
-
- 1 reply
- 660 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தோ்தலில் தனது தோல்வியை மாற்றியமைக்க முயன்றதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட 4 குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த ஜனாதிபதி தோ்தலில் தனது தோல்வியை ஏற்க மறுத்து, தோ்தல் முடிவுகளை மாற்றியமைக்க ட்ரம்ப் முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதை கொலம்பியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தன்யா சுட்கன் உறுதி செய்துள்ளாா். அமெரிக்காவை ஏமாற்றுவதற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டது, தோ்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை புதிய ஜனாதிபதிக்கு வழங்குவதற்காக நடைபெற்ற அரசுப் பணிக்கு இடையூறு விளைவித்தத…
-
- 2 replies
- 360 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்துக்கு உட்பட்ட பால்டிமோரில் உள்ள லாக்சின் பேரக்குழந்தை ஒருவரின் வீட்டில் இருக்கும் அவரது உருவப்படம் 5 ஆகஸ்ட் 2023, 10:51 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆராய்ச்சியாளராகவோ, கல்வியாளராகவோ இருக்கும் ஒருவரின் பெயர் அவர் சார்ந்த துறையால் அங்கீகரிக்கப்படுவதில் வியப்பேதும் இருக்க முடியாது. ஆனால், இப்படி எந்தவொரு அடையாளமும் இல்லாத சாதாரண ஒரு பெண்ணின் பெயர் இன்று உயிரி அறிவியல் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எழுபது ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் அவர் இறந்தாலும், அவரது உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட ச…
-
- 0 replies
- 406 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,FLORIDA FISH & WILDLIFE படக்குறிப்பு, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், பர்மிய வகை மலைப்பாம்புகளை வேட்டையாடுவதற்கான போட்டி (Python Challenge) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், மேக்ஸ் மாட்சா பதவி, பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்துக்கு உட்பட்ட நேபிள்ஸை பூர்வீகமாகக் கொண்டவர் ஜேக் வாலேரி. 22 வயது துடிப்பான இளைஞரும், ஓஹியோ பல்கலைக்கழகத்தின் மாணவருமான இவர், பாம்புகளை வேட்டையாடுவதைத் தனது கோடை விடுமுறையின் ஒரு பெரிய திட்டமாக வைத்திருக்கிறார். தொழில்முறையாக பாம்புகளை வேட்…
-
- 0 replies
- 329 views
- 1 follower
-
-
Published By: SETHU 01 AUG, 2023 | 04:05 PM சீனாவில், சூறாவளியினால் ஏற்பட்ட கடும் மழை காரணமாக குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 19 பேர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தோக்சூரி எனும் சூறாவளி காரணமாக, தொடர்ச்சியாக 4 ஆவது நாளாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால், பல நதிகளின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதுடன் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், குறைந்தபட்சம் 20 பேர் பலியானதுடன் மேலும் 19 பேரை காணவில்லை என சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தலைநகர் பெய்ஜிங்கில் சுமார் 52,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், 100 இற்கும் அதிகம…
-
- 2 replies
- 638 views
- 1 follower
-
-
Published By: SETHU 02 AUG, 2023 | 09:58 AM பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஆபரண விற்பனை ஒன்றில் புகுந்த 3 நபர்கள், சுமார் 15 மில்லியன் யூரோ (சுமார் 530 கோடி இலங்கை ரூபா, 136 கோடி இந்திய ரூபா)) பெறுமதியான ஆபரணங்களை கொள்ளைடித்துச் சென்றுள்ளனர். ஆடம்பர கடிகார விற்பனை நிலையமொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 10 முதல் 15 மில்லியன் யூரோ பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பாரிஸ் வழக்குத்தொடுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. டிப்டொப்பாக ஆடையணிந்த 2 ஆண்கள், ஒரு பெண் அடங்கிய குழுவினர், கைத்துப்பாக்கியொன்றுடன் கடையின் உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த ஊழிய…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
வல்லரசுகளின் சுரண்டலே கலகங்களுக்குக் காரணம்! நியாமே, ஆக.1- அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் மேலா திக்க நடவடிக்கைகளே ராணுவத்தினர் கலகங்களை மேற்கொள்வதற்குக் கார ணம் என்று தகவல்கள் வெளியாகி யுள்ளன. ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதி காரத்தைக் கைப்பற்றிக் கொண்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்தது. கலகம் நடந்தவுடன் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்தன. ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை மறுபடியும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் இந்த கலகத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள் ளது. தலைநகர் நியாமேயில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்ற ஆதரவு பேரணியும் நடைபெற்றிருக்கிறது. பிரான்ஸ் ந…
-
- 0 replies
- 239 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறிய சண்டை பெரும் வன்முறையாக மாறி ரயில் நிலையம் வரை தாக்குதல் நடைபெற்றது. கட்டுரை தகவல் எழுதியவர், டேரியோ ப்ரூக்ஸ் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "கிஸ் மீ தி ••••," என்ற வாசகங்களுடன் ஒரு அமெரிக்கர் தூண்டிய கிளர்ச்சி பனாமா தீவின் வரலாற்றையே புரட்டிப்போட்டது. அவர் ஃபிலிபஸ்டர்கள் என அழைக்கப்படுபவர்களில் ஒருவர். தீய வழிகளில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். தங்கத்தைப் பெறவேண்டும் என்பதற்காகவே பல ஏமாற்றுவேலைகளைச் செய்யக்கூடிய அந்த வடஅமெரிக்கர், அமெரிக்காவின் மேற்கு பகுதியிலோ, கரீபி…
-
- 0 replies
- 522 views
- 1 follower
-
-
Published By: SETHU 01 AUG, 2023 | 12:08 PM அவுஸ்திரேலியாவின் முன்னாள் சிறுவர் பராமரிப்பு ஊழியர் ஒருவர் 91 சிறார்களை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதுடன், அக்காட்சிகளை படம்பிடித்தார் என வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இது மேற்படி நபர் மீது தொடர்பாக நீதிமன்றத்தில் 1,600 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள ஒரு டசினுக்கும் அதிகமான சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் 15 வருடங்களுக்கும் மேலாக, இளம் சிறுமிகளை இந்நபர் துஷ்பிரயோகப்படுத்தினார் என பொலிஸார் கூறுகின்றனர். 45 வயதான இந்நபர், 2022 ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்டார். எனினும், பொலிஸார் விசாரணை நடத்துவதற்கும் பாதிக்கப்பட்ட…
-
- 0 replies
- 295 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குர்ஆன் எரிக்கப்படுவதைக் கண்டித்து பல இஸ்லாமிய நாடுகளில் போராட்டம் நடந்தன. 31 ஜூலை 2023, 03:31 GMT புதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர் பாதுகாப்பு, சர்வதேச எதிர்ப்புகள் காரணமாக குர்ஆன் அல்லது பிற மத நூல்களை எரிக்கும் போராட்டங்களை தடை செய்வது குறித்து டென்மார்க் பரிசீலித்து வருகிறது. எனினும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்றும் டென்மார்க் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. கோபன்ஹேகன் நகரின் வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெளியில் நடக்கும் போராட்டங்கள் உட்பட சில சம்பவங்களில் தலையிட சட்டப்பூர்வ வழிகளை டென…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
Published By: VISHNU 23 JUL, 2023 | 06:10 PM சுவிசிலிருந்து சண் தவராசா புவியின் வெப்பநிலை அண்மைக் காலமாக அதிகரித்துச் செல்வது தொடர்பான செய்திகளையும் ஆய்வுகளையும் அடிக்கடி ஊடகங்களில் பார்க்க முடிகின்றது. இவ்வாறு உலகின் வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதால் ஏற்படக் கூடிய பாரதூரமான விளைவுகள், பாதிப்புகள் என்பவை தொடர்பான எச்சரிக்கைகளையும் அவற்றிலே அவதானிக்க முடிகின்றது. ஒரு சாமானிய மனிதனாக இந்தச் செய்திகள் எமக்குக் கவலை தருவதாக உள்ள போதிலும் இந்த நிலையை மாற்ற எம்மால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையிலேயே நாம் இருக்கிறோம் என்ற யதார்த்தம் நெஞ்சை…
-
- 7 replies
- 546 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் 21 ஜூலை 2023 அது 16 ஜூலை 1945 அன்றைய அதிகாலை நேரம். ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் உலகை புரட்டிப் போடும் ஒரு கணத்திற்காக பாதுகாப்பான பதுங்கு குழி ஒன்றுக்குள் காத்திருந்தார். சுமார் 10 கிலோ மீட்டர் (6 மைல்) தொலைவில், நியூ மெக்சிகோவில் உள்ள ஜோர்னாடா டெல் மியூர்டோ பாலைவனத்தின் வெளிர் மணலில் "டிரினிட்டி" என்ற ரகசிய பெயரில் உலகின் முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. ஓப்பன்ஹெய்மர் மிகுந்த களைப்புடன் இருந்ததைப் போல் தோன்றியது. அவர் எப்போதும் மெலிந்தவராகத்தான் இருந்தார். ஆனால் அணுகுண்டை வடிவமைத்து உருவாக்கிய "மன்ஹாட்டன் இன்ஜினியர் டிஸ்ட்ரிக்ட்" இன…
-
- 3 replies
- 943 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, எம்.எஸ். படிக்க அமெரிக்கா சென்ற ஹைதராபாத் பெண்மின்ஹாஜ் ஜைதி கட்டுரை தகவல் எழுதியவர், அமரேந்திர யர்லகட்டா சதானந்தம் பதவி, பிபிசிக்காக 28 ஜூலை 2023, 08:30 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் இளம்பெண் ஒருவர் சாலையில் படுத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தை சேர்ந்த பிஆர்எஸ் தலைவர் கலேகர் ரெஹ்மான் இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் காணப்படும் இளம் பெண் தனது பெயர் மின்ஹாஜ் ஜைதி என்று கூறுகிறார். வெ…
-
- 0 replies
- 524 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, அரிசி வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் இந்தியர்கள் கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி செய்தியாளர் 22 ஜூலை 2023, 10:13 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அரிசியின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, அரிசி வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் மத்திய அரசு கடந்த ஜூலை 20ஆம் தேத…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2018 ஆம் ஆண்டு 30 கிராம் ஹெராயின் கடத்திய வழக்கில் 45 வயதான சாரிதேவி ஜமானி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், நிகோலஸ் யோங் பதவி, பிபிசி நியூஸ், சிங்கப்பூர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அவரது பெயர் சாரிதேவி ஜமானி. 2018 ஆம் ஆண்டு 30 கிராம் ஹெராயின் கடத்திய வழக்கில் 45 வயதான சாரிதேவி ஜமானி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மூன்றே நாள்களில் …
-
- 2 replies
- 499 views
- 1 follower
-
-
நடுகடலில் பற்றி எரிந்த கப்பல்; ஒருவர் உயிரிழப்பு: சுமார் 3000 கார்கள் தீக்கிரை நெதர்லாந்தின் வடக்கு கடற்பரப்பில் சுமார் 3000 கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு கப்பலொன்று நேற்றைய தினம் (26) நடுக்கடலில் வைத்து தீ பிடித்து எரிந்துள்ளது. ஜேர்மனியின் துறைமுகமான ப்ரெமனில் இருந்து எகிப்தில் உள்ள போர்ட் சைட் துறைமுகத்தை நோக்கிப் பயணித்த சரக்குக் கப்பலே இவ்வாறு தீவிபத்திற்கு உள்ளாகியுள்ளது. இவ் விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் கப்பலில் இருந்த23 ஊழியர்களும் ஹெலிகொப்டரின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் காயமடைந்தவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 393 views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஷோய்கு தலைமையிலான ரஷ்ய பிரதிநிதிகளையும், சீன அதிகாரிகளையும் கிம் ஜோங் உன் தங்கள் நாட்டுக்கு அழைத்திருந்தார் கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி எங் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வடகொரியாவின் நவீன ஆயுதங்களை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவிடம் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் காட்டினார். ஷோய்கு தலைமையிலான ரஷ்ய பிரதிநிதிகளையும், சீன அதிகாரிகளையும் கிம் ஜோங் உன் தங்கள் நாட்டுக்கு அழைத்திருந்தார். கொரிய சண்டை நிறுத்தத்தின் 70-ஆவது ஆண்டு விழாக்களில் அவர்கள் கலந்துகொள்வார்கள். இதில் பொதுவாக …
-
- 0 replies
- 644 views
- 1 follower
-
-
பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதிக்க யுனெஸ்கோ அழைப்பு விடுத்துள்ளது. கல்வியில் தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி மற்றும் அறிவியல் பிரச்சினைகளைக் கையாளும் குழுவான யுனெஸ்கோவின் 2023 உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கையில் இந்த விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும், கல்வியின் தரத்தை மேம்படுத்த ஓன்லைன் கல்வியை அதிகம் நம்பக்கூடாது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறியுள்ளது. அறிக்கையின்படி, ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடு கற்றலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் குழந்தைகளின் உணர்…
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
Published By: SETHU 26 JUL, 2023 | 09:38 AM அவுஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்திய கடற்கரையொன்றில் 51 திமிங்கிலங்கள் கரையொதுங்கி உயிரிழந்துள்ளன அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். பேர்த் நகரிலிருந்து 400 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அல்பானி நகருக்கு அருகிலுள்ள செய்னேஸ் கடற்கரையில் பைலட் வேல் இனத்தைச் சேர்ந்த சுமார் 100 திமிங்கிலங்கள் செவ்வாய்க்கிழமை மாலை காணப்பட்டது. மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் பூங்கா மற்றும் வனஜீவராசிகள் துறை அதிகாரிகள் இத்திமிங்கிலங்களை காப்பாற்றுவற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இரவிலும் இந்நடவடிக்கை நீடித்தது. இந்நலையில், இன்று காலை 51 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன என அதிகாரிகள் உறுதி…
-
- 1 reply
- 461 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 24 JUL, 2023 | 06:23 AM இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம். மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டை நினைவுகூர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாற்பது வருடங்களுக்கு முன்னர் இலங்கையெங்கும் தமிழர்களுக்கு எதிராக கொடுரமான கொலைகள் புரியப்பட்டன. இவற்றில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்தார்கள், இடம்பெயர்ந்த…
-
- 1 reply
- 234 views
- 1 follower
-