Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சினிமாவை வாழவைக்கும் ஈழத் தமிழரின் பணம்! - பாரதிராஜா சென்னை: தமிழ் சினிமாவை வாழவைக்க ஈழத் தமிழன் கஷ்டப்பட்டு பணம் தருகிறான். அவனது தயர் துடைக்க குரல் கொடுக்க ராமேஸ்வரம் வரைக்கும் நடிகர்-நடிகைகளால் வர முடியாதா? என உணர்ச்சிவசப்பட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா. ராமேஸ்வரத்தில் திரையுலகம் சார்பில் நடைபெற இருக்கும் போராட்டத்தையொட்டி, திரையுலக தமிழ் இன உணர்வு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், டைரக்டர் பாரதிராஜா, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகிய மூவரும் தலைவர்களாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு சார்பில் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தரையிலும், கடலிலும், மலை…

  2. வீரகேசரி நாளேடு - 10 நிமிடத்தில் 45 "பீஸா' துண்டுகளை அநாயசமாக விழுங்கி உலக பீஸா உண்ணும் போட்டியில் அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த ஜோய் செஸ்ட்நட் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளார். மேற்படி உலகப் பிரபல பீஸா உண்ணும் போட்டியானது ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க்கிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்றது. கலிபோர்னிய மாநிலத்திலுள்ள சான் ஜோஸ் எனும் இடத்தைச் சேர்ந்த ஜோய் செஸ்ட்நட் (24 வயது) மேற்படி போட்டியில் கலந்துகொள்வதற்கு தயாராக ஒரு நாளுக்கும் அதிகமான காலம் எதுவித உணவையும் உட்கொள்ளாமல் பட்டினி கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விழுங்குவதற்கு இலகுவாக பீஸா துண்டுகளை மடித்து அவர் உண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற "ஹொட்டோக்' உணவு அருந்தும் போட்…

  3. மகாநதிக்கும் மதத்தீக்கும் நடுவே... மன்னை சமஸ் ஒருபக்கம் மகாநதியின் வெள்ளம்; மறுபக்கம் மதத்தீ இதைவிடவும் மோசமான சூழல் ஒரிசா மக்களுக்கு வரப்போவதில்லை வரவும் கூடாது! கந்தமால் மாவட்டத்தில் ஆகஸ்ட் 23 ஆம் திகதி விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் லட்சுமணாந்த சரஸ்வதி கொல்லப்பட்ட மறுநாள் மதக்கலவரம் வெடித்தது. இந்த 42 நாள்களில் அங்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தம் சொந்த மண்ணிலேயே அகதிகளாக இருக்கின்றனர். வீடுகள் சூறையாடப்பட்டு கொளுத்தப்படுகின்றன. மக்கள் ஊரைவிட்டு துரத்தப்படுகின்றனர். வெறித்தனமாக தாக்கப்படுகின்றனர். பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகின

  4. வட கொரியா அணுவாயுத திட்டம் சம்பந்தமாக அமேரிக்காவோடு செய்த உடன்படிக்கை காரணமாக பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7665206.stm

  5. ஜம்மு: குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் கணவனின் காதை அறுத்துவிட்டார் மனைவி. இந்த சம்பவம் காஷ்மீர் மாநிலத்தில் நடந்ததது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஜம்மு அருகே வசிப்பவர் மொஹிந்தர் சிங். இவரது மனைவி ஜஸ்விந்தர் கவுர். எல்லா குடும்பத்திலும் நடப்பது போல இவர்களின் குடும்பத்திலும் ஏதோ பிரச்சனை. கணவன் மனைவியிடையே வாக்குவாதம் வலுத்தது. இதில் ஆத்திரமடைந்த ஜஸ்விந்தர், கணவரின் காதை அறுத்து எடுத்து விட்டார். இதனால் வலி தாங்காமல் மொஹிந்தர் அலறித் துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், மொஹிந்தர் காது இல்லாமல் கதறிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை மீட்டு உடனே அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மொஹிந்தருக்…

  6. சென்னை: இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்படுதவைக் கண்டித்தும், இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ உதவியை அளிப்பதைக் கண்டித்தும் மதிமுக சார்பில் இன்று சென்னையில் மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து கட்சிப் பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இலங்கை இனப் படுகொலையை கண்டித்தும், இலங்கைக்கு ராணுவ உதவி செய்யும் மத்திய அரசை கண்டித்தும், இலங்கை தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்து ஆகியவற்றை வழங்கிட மத்திய அரசின் அனுமதி வேண்டியும் மதிமுக சார்பில் இன்று மறியல் போராட்டம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி இன்று காலை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் திரண்டனர். காலை 10 மண…

  7. சென்னை: இலங்கையில் ராணுவத் தாக்குதலிலிருந்து தமிழர்களைக் காக்கவும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கையில் ராணுவத் தாக்குதலிலிருந்து தமிழர்களைக் காக்கக் கோரி பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்திகள் அனுப்புமாறு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து இன்றுகாலை முதல்வர் கருணாநிதியை, பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலங்கையில் ராணுவம் நடத்தி வரும் இனப்படுகொலை குறித்து முதல்வர் கருணாநிதி, பிரதமரிடம் புகார் க…

    • 4 replies
    • 1.4k views
  8. கையெழுத்திட்டார் புஷ் . Thursday, 09 October, 2008 02:02 PM . புதுடெல்லி, அக். 9: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை அனுமதிக்கும் சட்டத்தில் அதிபர் ஜார்ஜ் புஷ் இன்று அதிகாலை கையெழுத்திட்டார். இதனையடுத்து, நாளை மறுதினம் அமெரிக்காவில் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள். . இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருளான யுரேனியத்தை பெறுவதற்காக மன்மோகன் சிங் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. 2005ம் ஆண்டு ஜுலை மாதம் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றிருந்த போது அந்த நாட்டிடம் இருந்து யுரேனியம் பெறுவதற்கான ஒப…

    • 0 replies
    • 600 views
  9. மலேசியாவில் ஹிண்ட்ராப் குழு தடை செய்யப்படும்: விடுதலைப் புலிகளுடன் தொடர்பாம் [ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 02:10.24 AM GMT +05:30 ] இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அமைப்பு என குற்றம் சுமத்தி, மலேசிய அரசாங்கம், அந்த நாட்டில் செயற்படும் இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழுவைத் தடை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹிண்ட்ராப் என்ற இந்த அமைப்பு, மலேசியாவில் ஒரு அமைப்பாகப் பதிவு செய்யப்படவில்லை. இந்தநிலையில் அந்த குழுவின் நடவடிக்கையை கட்டுப்படுத்த முனைப்புகளை மேற்கொள்வதாக மலேசியாவின் உள்துறை அமைச்சர் அப்துல் அஸிஸ் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மலேசியாவில் உள்ள 2.6 இந்திய தமிழர்களின் உரிமைகளுக்காக போராட்டம் நடத்திய ஹிண்ட்ராப் அமைப்பி…

    • 0 replies
    • 803 views
  10. சென்னை: மத்திய அரசின் எச்சரிக்கைகள் இலங்கையில் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில் இந்த அரசு எங்களுக்குத் தேவையா என்கிற கேள்விக்கு விடை கண்டாக வேண்டும் என முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார். 'இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் நிலையும் மத்திய அரசுக்கு வேண்டுகோளும்' எனும் தலைப்பில் தி.மு.க. சார்பில் சென்னை மயிலை மாங்கொல்லையில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தி.மு.க. பொதுச் செயலாளரும், நிதி அமைச்சருமான பேராசிரியர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: நீண்ட காலத்திற்கு பிறகு இலங்கை பிரச்சினை குறித்து பேசவேண்டிய, செயல்பட வேண்டிய உறுதி எடுக்க வேண்டிய, ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ…

    • 3 replies
    • 1.8k views
  11. கிர்கிஸ்தானில் பயங்கர பூகம்பம் - 58 பேர் பலி - பலர் காயம் திங்கள்கிழமை, அக்டோபர் 6, 2008 பிஷ்கெக்: முன்னாள் சோவியத் நாடான கிர்கிஸ்தானில் இன்று ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் சிக்கி 58 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஏராளமான வீடுகள் இடிந்தன. மத்திய ஆசியாவில் உள்ள கிர்கிஸ்தானின் அலாய்ஸ்கி மாவட்டத்தில் இன்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 6.3ஆக பதிவாகியுள்ளது. பூகம்பத்தில் சிக்கி 120 கட்டடங்கள் இடிந்து நாசமடைந்தன. இடிபாடுகளில் சிக்கி 58 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் கிர்கிஸ்தானின் அவசர கால அமைச்சகத்துறை செய்தித் தொடர்பாளர் அப்துஸ்சமத் பயஸோவ் தெரிவித்தார். …

  12. லண்டன்: சர்வதேச வங்கிகளுக்குப் போதாத காலம் இது. இதோ சிக்கலில் சிக்கி விரைவில் கைமாறப்போகும் இன்னொரு வங்கியின் கதை. வாஷிங்டன் மியூச்சுவல் வங்கியை விடிவதற்குள் அதன் இயக்குனர், தலைவர், வாடிக்கையாளர்களுக்குக் கூடத் தெரியாமல் வேறு வங்கியிடம் ஒப்படைத்து அதிரடி செய்தது அமெரிக்க அரசு. இப்போது அமெரிக்காவைப் போலவே பிரிட்டனின் பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பும் தடுமாறத் துவங்கிவிட்டது. இங்கும் வங்கித் துறையில் நெருக்கடிகள் ஆரம்பித்துள்ளன. முதல் கட்டமாக பிராட்ஃபோர்டு அண்ட் பிரிக்லி வங்கி மூடுவிழாவுக்குத் தயாராகி வருகிறது. இந்த வங்கியை வேறு வங்கிக்கு கைமாற்றி விடாமல், அரசுடைமை ஆக்குகிறது பிரிட்டிஷ் அரசு. அதாவது இந்த வங்கியின் சேமிப்புகள், அசையும் அசையா சொத்துக…

  13. தமிழகத்தில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற போராட்டம் குறித்த காணொளிகள். பழ. நெடுமாறன் ஐயா அவர்களின் செய்தி... பத்திரிகையாளர் அப்துல் ஜஃபார் அவர்களின் குறிப்பு... தோழர் மகேந்திரன் அவர்களின் குறிப்பு...

  14. சென்னை: இலங்கை கடற்படையுடன், இந்திய கடற்படை கூட்டு ரோந்து செல்வது உகந்ததாக இருக்காது. எனவே இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இலங்கை கடற்படையினரின் கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டிற்கு ஏராளமான மீனவர்கள் பலியாகி வருகின்றனர். இதுதொடர்பாக சமீபத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், இனி இலங்கை கடற் படையினர் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த மாட்டார்கள் என்று இலங்கை உறுதி அளித்திருப்பதாக தெரிவித்தார். …

  15. "எயார் திராவிடா' தமிழ்நாட்டில் புதிய விமான சேவை விரைவில் ஆரம்பம் [24 - September - 2008] [Font Size - A - A - A] "எயார் திராவிடா' என்ற பெயரில் தமிழகத்தில் புதிய விமான சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் உட்பட இந்தியாவின் அனைத்து மாநில தலைநகரங்களிடையேயும் இவ்விமான சேவை நடத்தப்படவுள்ளது. தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள இவ்விமான சேவைக் கம்பனிக்கு 100 கோடி இந்திய ரூபா முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்விமான சேவை தொடர்பாக ஷேக் தாவூத் தகவல் தெரிவிக்கையில்; ஆங்கில மோகம் தலைவிரித்தாடும் இன்றைய காலகட்டத்தில் உலகமெங்கும் தமிழுக்கு பெரும…

  16. இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகிக்க 3 நாடுகள் எதிர்ப்பு 45 நாட்டு பிரதிநிதிகளிடம் இந்தியா விளக்கம் அளித்தது வியன்னா, இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகம் செய்யுமாறு 45 நாட்டு பிரதிநிதிகளிடம் இந்தியா கேட்டுக்கொண்டது. ஆனால் இந்தியாவுக்கு அணு எரி பொருள் வினியோகம் செய்ய 3 நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு, 45 நாடுகள் அடங்கிய அணு எரிபொருள் வினியோக நாடுகள் அமைப்பு, அணு எரிபொருளை வினி யோகம் செய்து வருகிறது. இந்தியா - கடந்த 1974 ஆம் ஆண்டு, முதன்முறையாக பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. இத னால், இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகிக்க தடை விதிக்கப்பட்டது. 34 ஆண்டுகளாக இத்தடை அம லில் …

    • 0 replies
    • 927 views
  17. ஜோத்பூர்: ராஜஸ்தானில் ஜோத்பூர் அருகே மெஹ்ரான்கர்க் என்ற இடத்தில் கோவிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 130 பேர் பலியாயினர். மேலும் 450 பேர் படுகாயமடைந்துள்ளனர். நவராத்திரியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெஹ்ரான்கர்க் மலைப் பகுதியில் அமைந்துள்ள சாமுண்டா கோவிலில் இன்று அதிகாலை தரிசனத்துக்காக குவிந்தனர். மலையடிவாரத்திலிருந்து கோவிலுக்குச் செல்லும் சுமார் 2 கி.மீ. நீளமுள்ள பாதை மிக மிகக் குறுகலானதாகும். அதன் வழியே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறிக் கொண்டிருந்தனர். மலையேறியவர்கள் கோவிலின் வெளியே கதவு திறப்பதற்காக காத்திருந்தனர். காலை 5.30 மணியளவில் மின்சாரம் தடைபட்டது. அப்போது சிலர் திடீரென கோவிலுக்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைய முயன்றனர்.…

  18. சென்னை: தமிழகத்தில் அரசு அமல்படுத்தி வரும் மின்வெட்டு மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. எம்.பிக்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது மக்கள் மிகக் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்று சென்னை லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை லயோலாக் கல்லூரியின் ஊடகவியல் துறை சார்பில் நடத்தப்படும் கருத்துக் கணிப்பு பிரபலமானது. அந்த வகையில் தற்போது பல்வேறு அரசியல் பிரச்சினைகள் நிலவி வரும் சூழ்நிலையில், புதிய கருத்துக் கணிப்பு ஒன்றை லயோலா கல்லூரி எடுத்து வெளியிட்டுள்ளது. தேர்தலில் முக்கிய பிரச்சனை-மின்வெட்டு: அதில் தமிழகத்தில் அடுத்த தேர்தலில் மின்வெட்டுதான் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு கு…

  19. வீரகேசரி நாளேடு 9/28/2008 - சென்னை, இலங்கைத் தமிழருக்கு எதிராக மத்திய அரசு செயற்படுகின்றது. இலங்கைத் தமிழர் நலனைக் காற்றில் பறக்க விட்ட கருணாநிதி, இனிமேலாவது தனது தவறை உணரவேண்டும் என பா.ஜ.க.பொதுக்கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சேலத்தில் பா.ஜ.க. பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டன. அவற்றின் விபரம் வருமாறு: மத்தியில் தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுகிறது. இப்பிரச்சினை குறித்து கவலைப்படாமல் தமிழக முதல்வர் கருணாநிதி மௌனம் காக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசின் செயற்பாடு அமைந்துள்ளது. இப்பி…

    • 4 replies
    • 1.4k views
  20. இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்க வரும்போதே முதல்வர் நாற்காலிக் கனவுடன்தான் வருகிறார்கள் நடிகர்கள் என முன்பு ஒருமுறை டாக்டர் ராமதாஸ் கமெண்ட் அடித்திருந்தார். நேற்றைய மாலைப் பத்திரிகைகளைப் பார்த்தவர்கள் அனைவரும் ராமதாஸின் கூற்றை ஒப்புக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டிருப்பார்கள். பிரபலமான அந்த மாலை நாளிதழில் பெரிய அளவுகளில் பல வண்ண விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. இவை அனைத்துமே இரு நடிகர்களுக்காக வழங்கப்பட்டிருந்தன. ஒருவர் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் டபுள் ரோல் செய்து கொண்டிருக்கும் விஜய்காந்த். மற்றொருவர் மாவட்டம் தோறும் இப்போதே ரசிகர் மன்ற தலைமை அலுவலகம் கட்டிக் கொண்டிருக்கிற விஜய். இந்த இரண்டு விளம்பரங்களுமே கட்சிக்காரர்கள் மற்றும் ரசிகர்களின் பெயர்களி…

  21. கென்யா அல்லது தென் சூடானை நோக்கி பயணித்த உக்ரேய்ன் கப்பலை 3 படகுகளில் வந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள் கைப்பற்றி உள்ளனர். இந்த கப்பலில் 30 T-72 டாங்கிகள் இருந்தனவாம். http://news.bbc.co.uk/2/hi/africa/7637257.stm

  22. டெல்லியில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி Saturday, 27 September, 2008 04:26 PM . புதுடெல்லி, செப். 27: டெல்லியில் இன்று மாலை நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகõயமடைந்தனர். தெற்கு டெல்லியில் உள்ள எலக்ட்ரா னிக் கடைக்கு வெளியே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. . டெல்லியில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. 30 பேருக்கும் மேல் இதில் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு காரணமான தீவிரவாதிகள் எண்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சதியில் சிக்கியவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை 2.15 மணியளவில் தெற்கு டெல்லியில் மெகாருலி பகுதியில் எலக்ட்ரானிக் …

  23. அன்புமணி ராமதாஸ் முதலிடம் சென்னை தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் நன்றாக செயல்படுபவர்களின் பட்டியலில் அன்புமணி ராமதாஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். மணிசங்கர் ஐயரின் செயல்பாடு மோசம் என்று லயோலா கருத்துக் கணிப்பு கூறுகிறது. மத்திய அரசில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் அன்புமணியின் செயல்பாடுகள் நன்றாக உள்ளதாக 39.4 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அவரது செயல்பாடு குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை என 20.9 சதவிகிதம் பேரும், மோசம் என 39.7 சதவிகிதம் பேரும் கருத்து கூறியுள்ளனர். இந்தப் பட்டியலில் சிதம்பரம் 2ஆவது இடத்திலும் (35.6), ஆர்.வேலு (28.3) 3ஆவது இடத்திலும், டி.ஆர்.பாலு (26.5) 4ஆவது இடத்திலும் உள்ளனர்.…

  24. சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் நளினியை விடுதலை செய்வது குறித்து, புதிய ஆலோசனைக் குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் நளினி உள்ளிட்ட 3 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து விட்டது. கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார். மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் பலியானார். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் கருணை அடிப்படையில் மரண தண்டனையை ரத்து செய்துவிட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மகளிர் சிறையில் நளினி சிறை வாசம் அனுபவித்…

  25. சென்னை: வட சென்னையில் மீஞ்சூரில் அமைக்கப்பட்டுள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 80 சதவீதம் முடிந்து விட்டது. பொங்கல் திருநாள் முதல் சென்னை நகருக்கு சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் விநியோகிக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி என்ற இடத்தில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 10 கோடி லிட்டர் கடல் குடிநீர் இந்தத் திட்டம் மூலம் சப்ளை செய்யப்படும். திட்டப் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அப்போது திட்டம் எந்த அளவில்உள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜனவரி 15ம் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.