Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. லக்னோ : உ.பி., மாநிலத்தில், லெஸ்பியன் உறவு வைத்திருந்த பெண்களை பிரிக்க நடந்த முயற்சியில், கணவரை கூலிப்படை மூலம் கொலை செய்தார், பிரிவை தாங்க முடியாத நர்ஸ். உ.பி., மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ஹைவாட்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுமன் (24); நர்சாக வேலை பார்க்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன் அலிகாரில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் படித்த போது, அதே கிராமத்தை சேர்ந்த அனிதா என்பவரும் சுமனுடன் படித்தார். இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர்.இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்பட்டனர். லெஸ்பியன்களாக கூடித்திரிந்தனர். மொரதாபாத்தில் உள்ள ஒரு கோவிலில், 2006ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், பெற்றோரின் சம்மதத்தைப் பெறவில்லை. இதற்கு பின், குடும்பத்தாரின் நிர்பந்தத…

    • 4 replies
    • 3.6k views
  2. செங்கோட்டை: திருமணமாகி தாயைவிட்டு தனிக்குடித்தனம் செல்ல மனமில்லாமல் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து இறந்தார். செங்கோட்டை அருகேயுள்ள காலாங்கரை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன் மகன் மாரியப்பன். டீக்கடை தொழிலாளி. இவரது தாய் திருமலை. மாரியப்பனுக்கும் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த காளீஸ்வரி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு மாரியப்பனை தனிக்குடித்தனம் போகுமாறு திருமலை கூறினார். ஆனால் அதற்கு மாரியப்பன் ஒப்புக்கொள்ளவில்லை. தனது தாயை விட்டுப் பிரிய மனமில்லாமல் வருத்தத்தில் இருந்தார். ஆனால் தனிக்குடித்தனம் பற்றி தொடர்ந்து திருமலை வலியுறுத்தியதால் மனமுடைந்த மாரியப்பன் நேற்று விஷம் குடித்தார். ஆபத்த…

    • 2 replies
    • 2k views
  3. சாராய சாவு 53 ஆக உயர்வு . Monday, 19 May, 2008 12:46 PM . பெங்களூர்/ஓசூர்,மே 19: கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் விஷச்சாராயம் குறித்து இறந்தவர் களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் 22 பேரும், கோலார் மாவட்டத்தில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. . கள்ளச்சாராயத்தை காய்ச்சியவர்கள், விற்றவர்கள் என இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர். கர்நாடகத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் 13 பேர் இறந்துள்ளதை அடுத்து மொத்தம் 53 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கோலார்…

  4. கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று இரவு நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வெளியே படுத்துத் தூங்கினர். இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று இரவு 8.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இரவு 10.07 மணியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. வீடுகளில் இருந்த பொருட்கள் ஆட்டம் கண்டன, கட்டில்கள் ஆடின, சில பொருட்கள் கீழே விழுந்து உடைந்தன. சில வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். வீடுகளை விட்டு வேகம் வேகமாக வெளியேறி தெருக்களில் கூடி நின்றனர். சுனாமி வருமோ என்ற அச்சமும் மக்களிடையே காணப்பட்டது. நில அதிர்வு சில விநாடிகளே நீடித்த…

  5. தமிழில் வழிபாடு சட்டப்படியும் ஆகமப்படியும் சரியானதே நீதியரசர் சந்துருவின் தெளிவான தீர்ப்பு -பூங்குழலி தமிழில் வழிபாடு நடத்துவது சட்டப்படியும் ஆகமப்படியும் சரியானதே” என பல வித மேற்கோள்களின் அடிப்படையில் அண்மையில் நீதியரசர் சந்துரு தெளிவான தீர்ப்பினை அளித்துள்ளார். தமிழக கோயில்களில், சமஸ்கிருதத்தில் அல்லாமல் தமிழில் அர்ச்சனை செய்வது, இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 25லிஇன் கீழ் வழங்கப்படும் இந்து மத உரிமைகளை மீறுவதாகும் என இந்துக் கோயில்கள் பாதுகாப்புக் குழு என்னும் அமைப்பின் தலைவர் என கூறிக் கொள்ளும் சிவக்குமார், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரகோச மங்கை கோயிலில் பரம்பரை அர்ச்சகராக இருக்கும் பிச்சை பட்டர் எனும் இருவர் இரு தனித் தனி வழக்குகள…

  6. சைவ - வைணவ சண்டை ஓயவில்லை சிதம்பரத்தில் இருக்கும் கோயில் சைவமா? வைணவமா? குடுமிப்பிடிச் சண்டைக்குத் தீர்வுகாண அறநிலையத் துறை முயற்சி கூடலூர், மே 20- சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழ் மொழியில் உள்ள தேவாரம் பாடுவதற்கு மறுத்து வந்த தீட்சதர்கள் ஒருவாறு பணிந்து அந்தப் பிரச்சினை முடிந்த நிலையில் அதே கோயிலில் வேறொரு பிரச்சினை கிளம்பி யுள்ளது. கோயிலில் நடைபெற விருக்கும் பிரம்மோற்சவத்தை நடத்துவது பற்றிய பிரச்சினை வெடித்துள்ளது. இது சைவ, வைணவப் பிரச்சினையாக வளர்ந்துள்ளது. சைவ, வைண வப் பிரச்சினை என்றோ ஓய்ந்துவிட்டது என்று ராம கோபாலன் பேசுவது பொய் என்று சிதம்பரம் சம்பவம் கூறுகிறது. சிதம்பரம் கோயிலில் நடராசன் பொம்மைக்குப் பக்கத்தில் கோவிந்தராஜனின் பொம்மை படுக்க வைக்…

    • 2 replies
    • 4.6k views
  7. பிரிட்டனில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மிஸ் பிரிட்டன் ஜெம்மா கரேட் போட்டி 19.05.2008 / நிருபர் குளக்கோட்டன் பிரிட்டனில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் `மிஸ் பிரிட்டன்' பட்டத்தினை வென்ற அந்நாட்டு அழகி ஜெம்மா கரேட் போட்டியிடுகின்றார். இதனால் அந்நாட்டு பிரதமர் கோர்டன் பிறவுணுக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் தொழிலாளர் கட்சி அரசில் பிரதமராக கோர்டன் பிறவுண் இருந்து வருவதுடன் அண்மையில் அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அவரது கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளதால் கோர்டன் பிறவுண் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். பிரிட்டன் பாராளுமன்றில் பிரதிநிதிகள் சபையில் தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கைனித் டன்வூடி மரணமடைந்…

    • 0 replies
    • 749 views
  8. குவைத் தேர்தலில் 27 பெண்கள் போட்டி குவைத் நாட்டில் பாராளுமன்றத்துக்கு நாளை தேர்தல் நடக்கிறது. 50 உறுப்பினர்கள் கொண்ட இந்த சபைக்கு கடந்த 2006-ம் ஆண்டு முதன் முதலாக பெண்கள் போட்டியிட்டனர். ஆனால் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து 2 பெண்கள் மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர். இப்போது மீண்டும் தேர்தல் நடக்கிறது. இதில் 246 ஆண்களும் அவர்களை எதிர்த்து 27 பெண்களும் போட்டியிடுகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ரோலா தஷ்டி குறிப்பிடத்தக்கவர். இவர் 40களின் மத்தியில் இருக்கிறார். ஒரு பொருளாதார நிபுணர் ஆவார். 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெண்களிலேயே அதிக எண்ணிக்கையில் ஓட்டுக்கள் பெற்றார். http://www.tamilnews.dk/article/worldnews/2181/

    • 0 replies
    • 755 views
  9. பீபீசீ வானோலி சேவையாளர் குறைப்பு : சொந்த நாடுகளில் இருந்து ஒலிபரப்பு Saturday, 17 May 2008 பீபீசீ வானோலி சேவையின் செலவுகளை குறைப்பதற்காக பீபீசீ வானோலி சேவைகளில் பணிபுரியும் தமிழ் , கிந்தி , சிங்களம், உர்து மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் ஒலிபரப்பாகும் சேவையாளர்களை அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பவும், அங்கிருந்தே அந்தந்த ஒலிபரப்புகளை செய்யவும் புதிய திட்டம் ஒன்று நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. தவிரவும் தற்போது பணிபுரியும் மேற் கூறுப்பட்ட மொழி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை லண்டனில் இருந்து அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பவும் பீபீசீ முடிவு எடுத்துள்ளது. இந் நடைமுறை மூன்று ஆண்டுகளுக்கு முன் கிந்தி ஒலிபரப்பு தில்லிக்கு கொண்டு செல்லப்பட்ட போது ஆரம்பமா…

  10. சென்னை: சிறுமியைக் கல்யாணம் செய்து அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாக 45 வயது நபரை போலீஸார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த சிறுமி பவித்ரா (15). பத்தாவது வகுப்பு மாணவியான இவர் சென்னை புறநகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 18ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து போலீஸில் பவித்ராவின் பெற்றோர் புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில், பவித்ராவை ஆயிஷா மற்றும் அவரது கூட்டாளி சதீஷ் ஆகியோர் கடத்தினர். பின்னர் கோவையைச் சேர்ந்த அப்துல் என்பவரிடம், ரூ. 50 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு விற்றுள்ளனர். சிறுமியை விலை கொடுத்து வாங்கிய அப்துல் அவரை கல்யாணம் செய்து கொண்டார். பின்னர் பவித்ராவை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றார். இதையடுத்து அவரிடமிருந்து பவித்ரா தப…

  11. வடிவமைத்த ஜெட் இயந்திரப் பொறிமுறையோடு இயங்கவல்ல hang-glider மூலம் சுவிஸ்லாந்தின் பனி படர்ந்த அல்ப்ஸ் மலைத் தொடர்களின் மேல் பறந்தார் சுவிஸ்லாந்தைச் சேர்ந்த 48 வயதான Yves Rossy என்பவர். இவர் ஒரு படைத்துறை வீரராவார். விமானம் ஒன்றின் உதவியோடு குறித்த உயரத்தை அடைந்ததும் வான் வெளியில் குதித்து அதில் மிதந்தபடி தனது ஜெட் இயந்திரம் பூட்டிய hang-glider ஐ இயக்கிய Yves Rossy, அதி வேகமாக வான் வெளியில் பறந்து வான வேடிக்கை காட்டிவிட்டு, பரசூட்டின் உதவியுடன் மீண்டும் தரையைத் தொட்டார். இச்சாதனை மிகு பறப்பினை உலகு வியந்து பார்க்கின்ற அதேவேளை ஆதிகாலத்தில் இப்படி இறக்கைகளைக் கட்டி மனிதன் பறக்க முயன்று மனிதன் தோற்றுப் போயிருப்பினும் பின்னர் விமானப் பொறிமுறை, விண்ணோடப் பொறிமுறைகளைக் …

    • 0 replies
    • 753 views
  12. இந்தியர்கள் சாப்பாட்டு ராமன்களா? உருவாக்கிய சர்ச்சை புஷ்ஷின் கருத்து இந்தியா என்ற வார்த்தைக்கு அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷின் அகராதியில் கசப்புமிக்க வேப்பங்காய் என்று அர்த்தம் போடப்பட்டிருக்கும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. மனிதர் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவையும் இந்தியர்களையும் வார்த்தைகளால் வறுத்தெடுப்பார். செயல்பாடுகளால் சீண்டிவிடுவார். அதற்கான பதிலடியை வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக்கொள்ளவும் தவறுவதில்லை. ஒருமுறை தன்னுடைய செல்ல நாய்க்குட்டிக்கு `இந்தியா' என்று பெயர்சூட்டி அழைத்தது இந்தியர்கள் மத்தியில் பெரிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தற்போது இந்தியர்களை `சாப்பாட்டு ராமன்கள்' என்பது போல வர்ணித்துக் குற்றம் சாட்டியிருப்பது …

  13. டான்டி டவுன் : ஆர்கன்சாசை சேர்ந்த பெண், இதுவரை 17 குழந்தைகள் பெற்று, தற்போது 18வது முறையாக கர்ப்பம் தரித் துள்ளார். ஆர்கன்சாசின் வடமேற்கு பகுதியில் உள்ளது டான்டிடவுன். இங்கு வசிப்பர் மிச்லே; வயது 41. இவரது கணவர் டுகார். இந்த தம்பதி, இனப் பெருக்கத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவரை மிச்லேவுக்கு 17 குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது, மீண்டும்கர்ப்பம்தரித்துள்ள

    • 0 replies
    • 1k views
  14. இரண்டு ரூபாய் குறைந்ததால் பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட தந்தை, மகள் சாவு ஜார்சுகுடா(ஒரிசா): டிக்கெட் கட்டணத்தைவிட இரண்டு ரூபாய் குறைவாக கொடுத்ததால் பேருந்திலிருந்து நடத்துநரால் தள்ளிவிடப்பட்ட பழங்குடியினர் ஒருவரும், அவரது நான்கு வயது மகளும் பேருந்தின் சக்கரங்களில் நசுங்கி உயிரிழந்தனர். ஒரிசா மாநிலம் ஜார்சுகுடாவிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள தால்பட்டியாவில் இச்சம்பவம் நடந்தது. இதுபற்றி போலீசார் கூறியதாவது: முப்பந்தைந்து வயதான பழங்குடியின நபர் சனிச்சார் தோப்போ செவ்வாய்க்கிழமை தனது மகளுடன் பேருந்தில் ஏறினார். தன்னிடம் பணம் இல்லாததால் சரியான டிக்கெட் கட்டணத்தை அவரால் கொடுக்க இயலவில்லை. டிக்கெட் கட்டணத்தில் குறைவாக இருந்த இரண்டு ரூபாயை ந…

  15. பெய்ஜிங்: சீனாவில் இன்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிஸ்வான் மாகாணத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 12ம் தேதியன்ற இதே பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 12000 பேருக்கு மேல் பலியாயினர். இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த பரிதாபம் நடந்துள்ளது. கடந்த முறையைவிட இந்த பூகம்பம் கடுமையாக இருந்தது. 12ம் தேதி ஏற்பட்ட பூகம்பம் ரிக்டர் அளவில் 7.61 ஆக பதிவாகியிருந்தது. பயங்கர பூகம்பம் ஏற்பட்ட சில நாட்களில் மீண்டும் லேசான பூகம்பம் ஏற்படுவது வழக்கம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது மு…

    • 1 reply
    • 928 views
  16. சேலம்: சேலத்தில் குப்பையில் கிடந்த மூதாட்டியின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சேலம் அம்மாபேட்டை கூட்டுறவு மேலாண்மை மையம் அருகே மாநகராட்சி குப்பைகள் கொட்டும் கிடங்கு உள்ளது. இந்த குப்பை மேட்டில் ஒரு மூதாட்டியின் சடலம் அநாதையாக கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்குள் அந்த இடத்தில் குவிந்த தெரு நாய்கள் மூதாட்டியின் உடலை கடித்து குதறி விட்டன. இதனால் அப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசியது. இதையடுத்து பொதுமக்கள் நாய்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த அம்மாபேட்டை போலீசார், அந்தப்ப்பகுதி தங்களது லிமிட்டில் இல்லை என்று கூறி …

    • 2 replies
    • 1.4k views
  17. சீனாவில் பயங்கர பூகம்பம்-நூற்றுக்கணக்கானோர் பலி? திங்கள்கிழமை, மே 12, 2008 பெய்ஜிங்: சீனாவின் தென் மேற்கு மத்திய பகுதியில் இன்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவானது. இதில் பள்ளிக் கூடங்கள் உள்பட பல கட்டடங்கள் இடிந்துள்ளன. பள்ளிக் கட்டடத்தில் 900க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிக்கியுள்ளனர். இதுவரை 5 மாணவர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளனது. இன்று பகல் 2.28 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வு தாய்லாந்து, வியட்நாம் வரை உணரப்பட்டது. சீனாவின் தென் மேற்கு-மத்தியப் பகுதியான செங்க்டூ-சாங்கிங் பகுதிகளில் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. இதையடுத்து மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு அலறிய…

  18. மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே உத்தபுரத்தில் உள்ள தீண்டாமைச் சுவரின் 15 அடியை இன்று காலை அதிகாரிகள் இடித்தனர். அப்பகுதியில் தலித் மக்களுக்கு பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. உத்தபுரம், உசிலம்பட்டி அருகே உள்ள குக்கிராமம். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் 21வது நூற்றாண்டில் பீடு நடைபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கிராமம் மட்டும் கற்காலத்தை நோக்கி வேகமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது. 1989ம் ஆண்டு இந்தக் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், இன்னொரு வகுப்பினருக்கும் இடையே ஏற்பட்ட ஜாதிக் கலவரத்தில் 8 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டன. இதையடுத்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களது பகுதிக்குள் வருவதைத் தடுக்க இன்னொரு சமூகத்தினர் ஊரில் சுவர் எழுப்பி, தங்களது ப…

  19. ஜெய்பூரில் தொடர் குண்டு வெடிப்பு 80 பேர் பலி! 150 பேர் காயம் புதன், 14 மே 2008 [கொழும்பிலிருந்து மயூரன்] ஜெய்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 7 தொடர் குண்டு வெடிப்புகளில் 80 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 150 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தி‌ரிபோ‌லியா பஜா‌‌ர், ஜோஹ‌‌ரி பஜா‌ர், மா‌ணி‌க் செள‌க், பேடி செளபா‌ட், சோ‌ட்டி செளபா‌‌ட் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் நேற்று மாலை 7.35 ம‌ணியள‌வி‌ல் அடு‌த்தடு‌த்து ச‌க்‌திய்‌ந்த கு‌ண்டுக‌ள் வெடி‌த்துள்ளன. 12 நிமிடங்களில் தொடராக அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன. திரிபோலியா பகுதியில் உள்ள அனுமன் கோயிலில் குண்டுவெடித்துச் சிதறியதில் பலர் பலியாகினர். ஒரு கு‌ண்டு கா‌ரிலு‌ம் ம‌ற்றொ‌ன்று கடை ஒ‌ன்‌றிலு‌ம் வெடி…

    • 0 replies
    • 787 views
  20. மியன்மாரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டும் 2 இலட்சத்திற்கும் அதிகம் [13 - May - 2008] * ஐ.நா.வின் ஆய்வில் தகவல் மியன்மாரை தாக்கிய நர்கீஸ் புயலினால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டும் 2 இலட்சத்திற்கும் அதிகமாக இருப்பதாக ஐ.நா.வின் ஆய்வொன்று தெரிவித்துள்ளது. மியான்மாரை கடந்த 2 ஆம் திகதி இரவு நர்கீஸ் என்ற பயங்கர புயல் தாக்கியது. இதில் ஐராவதி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் சமூக சேவை அமைப்பு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின்படி, இறந்தவர்களின் எண்ணிக்கை 63,290 இல் இருந்து 1,01,682 வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. மேலும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டும் 2,20,000 வரை இருக்கும் என்றும் …

    • 0 replies
    • 617 views
  21. வெற்றி திருமகள் ” பசாரா நகரை குறிவைக்கும் ஈராக்கிய அணுகுமுறைகள்” திங்கள், 12 மே 2008 [கொழும்பிலிருந்து மயூரன்] ஈராக்கின் பசாரா மாநிலத்தில் பிரித்தானிய அமெரிக்க படைகள் கூட்டாக களமிறக்கப்பட் டிருப்பது பற்றிய செய்திகள் பரவலாக பேசப் படும் இத்தருணத்தில், பசாரா மாநிலத்தின் முக்கியத்துவம் பற்றியதாகவும் பசாரா மாநிலத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத் திருக்கும் சியா இஸ்லாமிய பிரிவினர் பற்றிய தாகவும் அமைகின்றது இச் சிறுகட்டுரை. ஈராக்கை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பன்னாட்டுப் படைகள் பசாரா மாநிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சியா இஸ் லாமிய பிரிவினரை உள்ளடக்கிய மெகிடி போராளிகளுக்கு எதிராகவும், பாக்தாத்தில் சியா இஸ்லாமிய பிரிவினர் பிரதேசத்தில் வாழும் போராளிகளுக்க…

    • 0 replies
    • 572 views
  22. கவுசல்யாவிற்க்கும் லாலுவிற்க்கும் கல்யாணம்... ராஜஸ்த்தானில் உள்ள ஒரு கிராமத்தில் லாலுவிறக்கும் கவுசல்யாவிற்க்கும் சடங்கு சம்பிரதாயங்களுடன் கோலகலமாக திருமணம் நடந்தது.விருந்தினர்களுக்கு சுவையான உணவும் வழங்கப்பட்டது.இதில் என்ன அதியம் என்று கேட்டகத்தோன்றுகின்றதா? கவுசல்யா என்பது பசு மாடு லாலு என்பது காளை மாடு. இதுபோல திருமணம் நடத்தினால் செல்வ செழிப்பு ஏற்படும் நல்ல மழை பொழியும் என்ற நம்பிக்கையில் தான் நடத்தப்பட்டதாக அக்கிரரம மக்கள் கூறினர்... அப்ப நானும் இங்க றெண்டு கங்காருவ பிடிச்சிட்டு வந்து சிட்னி முருகன் கோயில்ல கல்யாணம் கட்டி வைக்கபோறன்...

    • 6 replies
    • 2.1k views
  23. சென்னை: தமிழகம் ஆயுதக் கிடங்காக மாறிவிட்டது போலிருக்கிறது என்று சட்டசபையில் அதிமுக கடுமையாக சாடியுள்ளது. சட்டசபையில் போலீஸ் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தை நிறைவுசெய்து அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது: கடந்த 1991ல் அதிமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாதான், ராஜிவ்காந்தியை கொன்ற விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். அதிமுக அரசின் கடுமையான நடவடிக்கையால்தான் சந்தனக்கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டான். இதுபோன்ற நடவடிக்கைகளால் தீவிரவாதிகளின் கொலைப்பட்டியலில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 'இசட்' பிளஸ் பிரிவு பாதுகாப்பை அளிக்க இந்த அரசு மறுத்துவிட்டது. ஜெயலலிதாவின் வீட்டுக்குள் அட…

  24. வாஷிங்டன் (ஏஜென்சி), 9 மே 2008 தென்னாப்பிரிக்கா அதிபராக நெல்சன் மண்டேலா பதவியேற்று 14 ஆண்டுகள் கழித்து தற்போது அவரை தங்கள் நாட்டின் தீவிரவாதிகள் பட்டியலிலிருந்து நீக்குவதற்கான மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது. இதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிகள் சபையில் ஒருமனதாக நேற்று நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவின் மூலம், நெல்சன் மண்டேலாவும், அவரது ஆப்பிரிக்கன் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் தீவிரவாதிகள் பற்றிய அமெரிக்காவின் அனைத்து புள்ளிவிவர பட்டியலிலிருந்தும் நீக்கப்படுவார்கள். இத்தகவலை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரங்களுக்கான கமிட்டி தலைவர் பெர்மன் தெரிவித்தார். நன்றி யாகூதமிழ்(மூலம் - வெ…

    • 3 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.