Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முற்குறிப்பு - வழக்கம் போல் ஓரளவு நீண்ட கவிதை, பொறுமை உள்ளவர்களுக்கு மட்டும்.. - இது போன்ற தொனிப்பொருளில் நான் எழுதுவது குறைவு போட்டி காரணமாக எழுத விழைந்தேன் .(ஏனென்றால் உணர்வு பற்றிய கவிதைகள் பாதிப்பது அதிகம் என உணர்ந்ததால், பற்றும பழைய கசப்புகள் ) விழிபற்றி விதையாகி... (வழங்கப்பட்ட கருப்பொருள் விழியதன் வழியினிலே) எழுதியவர்: மதுரகன் செல்வராஜா துடிக்கின்ற விரல்களிலிருந்து கண்களைப்பற்றி ஆயிரம் கவிதைகள் எழுதவேண்டும் - காதல் மயக்கத்தில் அல்ல... கண்ணீர் பற்றியெரியும் கதைகளையும் வற்றிப்போன விழிகளையும் கொண்டு இன்னும் சிலிர்க்கின்ற மயிர்களும் புடைக்கின்ற நரம்புகளும் கொஞ்சம் மீதமிருப்பதை எதிரிக்குப்புலப்படுத்த வலிக்கின்ற இதயங்களுடன…

    • 10 replies
    • 1.8k views
  2. அறுத்தெறியப்பட்ட இதயத்தின் இரத்தக் குழாய்கள் கொப்பளித்த சிவப்பணுக்களில் - என் உயிர் உச்சரித்த உன் காதற் சிதறல்களைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் இன்னும்! புரிதல்களும் புரியாமையும்.... புரிந்துகொள்ளப்படுவதற்கு, சில காலங்கள் செல்லும்! - அதுவரை, இந்த ரணவலித் தேடல்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்!!!

  3. பிரிவுகளும் இழப்புக்களும் அடிக்கடி வந்து பழக்கப்பட்டதென்றாலும், வலிகளும் வேதனைகளும் சர்வசாதாரணமென்று நினைத்தாலும், மீண்டும் பார்ப்போம்... என்ற நம்பிக்கையில் பிரியும் போதும் கூட, விழியோரத்தில் கசியும் நீர்த்துளிகள் ... கட்டுப்பாட்டை மீறும் தருணங்கள், கேள்விகள் கேட்டு நிற்கின்றன..... இது உனக்குப் புதியதா?... என்று !!!

    • 2 replies
    • 912 views
  4. தூக்கமில்லாத இரவுகளோடு போராடித் தோற்றுப்போனபோதும் கனவுகளுக்கு ஏங்கிய இரவுகள் அதிகம்! நினைவுகளும் ஞாபகங்களும் ஒவ்வொரு இரவிலும் என்னைக் கொன்று போட்டாலும், உன் நினைப்புடன்தான் உயிர்க்கின்றேன் ... அதிகாலைகளில்...! இப்பொழுதெல்லாம்... அதிவிரைவுச் சாலைகள் எனக்கு , பழக்கப்பட்ட ஒழுங்கைகள் போல இருக்கிறது ! வேகங்கள் என்னைப் பயமுறுத்துவதில்லை! சதா ரணமுமாய் சாவதைவிட செத்துப்போனால் பரவாயில்லை என்று தோன்றும்போது, சில அசாதாரணங்கள் கூட.... சாதாரணமாய் மாறிவிடுகின்றனவோ ? நான்.... செத்துத் தொலைந்தால் நன்றாய் இருக்கும்!

  5. ஜாதிகளும்.... மதங்களும்..... தூக்கிப் பிடிக்கும் கொடிகளாகிவிட்ட பின்னர், "ஜனநாயகம்" என்ற போலிச்சாயம் பூசிய அழுக்குத் துணிகளுக்கு, ஏன் வெள்ளைச் சிறகுகள்....???????

  6. வெள்ளைப் புறாவுடன் வந்து... "சமாதானம்" வந்துவிட்டது என்றார்கள்!? சிவப்புப் பறவைகளாய்... சிதறிப் போயின அவை! அதன்பின்புதான் பார்த்தோம்... நம் மண்ணில், புறாக்களும் பிணந்தின்னும் என்று!

  7. Started by கவிதை,

    வண்ண வண்ணக் காகிதங்கள் வேண்டுமென எண்ணி... மனித நேயங்களை காலி பண்ணிய உலகத்திலே, காசு மட்டும் பேசும் என்று முடிவாகிவிட்ட பிறகும்.. என்றாவது ஒருநாள் அந்த வண்ணமுத்திரைகள், வானவில்லாகிப் போகாதா? என்று... ஏங்கும் , பசித்து ஒட்டிய வயிறுகள்!!! மனித நேசங்கள் பேசிக்கொள்ளும்போது... பணம் பந்தியில் இருக்காது! "காலங்கள் மாறும்" என்பது.... வெறும் நம்பிக்கையாய் மட்டும்!!!

  8. Started by கவிதை,

    பூக்கள் பூப்பதற்கு காத்திருப்பதைப் போல உன் அழைப்புக்களுக்காக விழிகள் பூத்திருப்பேன்! இந்த உலகத்தில் பறக்கும் அத்தனை பட்டாம்பூச்சிகளும் என்னைச் சுற்றியே பறப்பதாய் உணர்வேன்... நீ என்னோடு பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில்! இத்தனை இனிமை இருப்பதாய்க் கேள்விப்பட்டால்... தேனீக்கள் உன்னை மட்டும் சுற்றியே வட்டமிடும்! நிலவும் உன்னைப் பார்க்கப் பூலோகம் வரும்! தென்றலும் உன்னைத் தேடி தெருத்தெருவாய் அலையும்! கடலலைகள் உன் காலடியில் தவங்கிடக்கும்! என்னைப் போலவே....!

  9. Started by கவிதை,

    நான் உச்சரித்த முதன்முதற் கவிதை... ஒரேயொரு வார்த்தையில் " அம்மா " என்பதுதான்! இன்னும் எத்தனை கவிதை எழுதினாலும்... அத்தனை அழகு இதில் மட்டுந்தான்!

  10. நீ கவனமாக இரு……… போராட்டம் வீண் போகாது.” Posted by: on Jul 24, 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் உலகம் முழுமையும் விழுது பரப்பி நிற்க்கும் பெரு விருட்ச்சம். குருவிச்சைகளும் மாயமான்களும் மாவீரர் தடம் பற்றி ஒருபோதும் தலைதூக்க முடியாது. எவரேனும் ஆணிவேரை அழிக்க நினைத்தால் விழுதுகள் வீரியம் கொடுக்கும ; கறுப்பு யூலைகளும் சிவந்த மேய்களும் உலகின் மனச்சாட்சியை தட்டத் தொடங்கிவிட்டது சாட்சியங்களை ஒப்புவிப்போம். அன்று சிங்களத்தின் சிறைக்கூண்டில் - குட்டிமணி நெஞ்சை நிமிர்த்தி சொன்ன வார்த்தைகள் எங்கோ ஒரு மூலையில் உள்ளுணர்வாய்…. ”ஒரு குட்டிமணியைக் கொல்வீர்களனால் பல்லாயிரம் குட்டிமணிகள் தோற்றம் பெறுவார்கள.;” நான் ஓர் விடுதலைப் போராளி இறுதியா…

  11. நான் லிங்கமாலா ஆனேன் ஜுனில் வெளிவந்த ராவய பத்திரிகையில் அதன் ஆசிரியர் குழுவிலுள்ள மஞ்சுள வெடிவர்தன எழுதி, செல்வர் என்பவரால் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதை இது. சிங்கள வாசகர்களை நோக்கி எழுதப்பட்ட இந்த கவிதை மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட கவிதை. சிங்கள பேரினவாத சக்திகள் மத்தியில் சர்ச்சையையும் கிளப்பிவிட்டிருந்த கவிதை இது. மஞ்சுள வெடிவர்தனவின் கன்னி மரியா எனும் சிறுகதைத் தொகுதி சென்றவருடம் இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. அது இன்னமும் நீதிமன்ற விசாரணையில் சிக்கியிருக்கிறது. ”பறை” வாசகர்களுக்காக மீண்டும் அவரது கவிதை. வெசாக்தின முழுநிலவு தலையில் கைவைத்து அழுகிறது அதன் மூக்குச் சளி சாரளம் வழியால் தெறிக்கின்றது அயல்…

  12. மணல் சுமக்கும் கடற்கரை , இந்தக் கன்னம் சுமக்கும் கை விரல் , . நித்தம் உன் நினைவுகள் சுமக்கும் இந்த இதயம் என மெல்ல நீள்கிறது இந்த கடற்கரை காட்சிகள் இன்னும் என்னுள் கரை தொடாத அலைகலென கனக்கிறது கைரேகை முழுவதும் அழியாத உன் ஞாபகங்கள் !.. - பனித்துளி சங்கர்

    • 0 replies
    • 1.5k views
  13. தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள்! சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற ஒரு நாடகத்தொடக்க விழாவில் பேசிய ஒரு பட்டதாரி சிறு கதாசிரியர், சில்லையூர் செல்வராசனின் கவிதைகளைப் பற்றிப் பேசும்போது அவை வெறும் Blank Verse என்று குறிப்பிட்டாராம். இத்தகைய தீர்ப்பை அளிக்க, ஒருவருக்கு யாப்பிலக்கணம், தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் வாயைப் பிளந்தால் அவரது அறியாமையின் நாற்றந்தான் ஊரெல்லாம் பரிமளிக்கும். பட்டதாரிச் சிறு கதாசிரியரின் பேச்சு இதற்கு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது. நமது நாட்டிலுள்ள 'மரபு'களில் ஒன்று, நாலு நூல்களை நெட்டுருப் போட்டு, நான்கு முறை நூன சித்தியும் ஐந்தாம் முறை மூன்றாம் வகுப்பில் முழுச் சித்தியும் பெற்றுப் பண்டிதரோ…

    • 0 replies
    • 814 views
  14. இரதை வாழையில் இடிவிழும் போது குறுக்க வெட்டி தங்கம் எடுக்க இலவுகாத்த கிளிகளாக காத்து இருந்தோம் இடி தலையில் விழுந்து முகம் உருக்குலைந்துபோனது வேலியில் சற்று சரிந்து நிற்கும் கருகிய கம்பிக் கட்டையாய் பற்றைகள் வளர்ந்த வயல்க் கரைகளில் எஞ்சியவர்கள் நிற்கின்றார்கள் புரட்டாதிச் சனி விரதம் பிடிப்பவர்கள் காகத்துக்கு சோறுவைக்க இன்னும் கம்பிக்கட்டைகளில் குந்தியிருக்கும் காகங்களை கூப்பிடுகின்றார்கள் நலமடித்த நாம்பன்கள் போல் வேரறுந்த மரங்கள் போல் கப்பாத்து பண்ணப்பட்ட நாய்கள் போல் பரிதவிக்கும் இந்த வாழ்க்கையின் வேதனைக்கு விரதமிருந்து காகத்துக்கு சோறுவைத்து விடிவுகள் தேடும் அவல வாழ்வு எமக்கு மட்டும் எல்லாப் பிரச்சனைகளும் எமக்கு வெ…

  15. நினைவுவலிகளை நீக்குமொரு நிகழ்வுப்பயணத்தை நினைவுகளூடே நீட்டிக்கொள்கிறேன்..... காலக்கரைவுகளில் புது வர்ணங்கள் பூசப்பட பூரித்துப்போகிறது நிகழ் கணங்களில் முகம் . வல்வைக்கடலுவர்க்காற்று வந்துமோதி முற்றத்து முல்லை பூவுருத்திப்போகும்_ .அதுவே மயங்குமாலையில் மன்மத வாசம் பூசும் காற்றில் ............. எருக்கலையும் நாயுருவியும் தெருக்கரைகளில் கதைபேசும் உருக்குலைதிருந்தாலும் எந்தநூர் திருக்கலையாதிருக்கும் பிணிஎதுமில்லாமல் போய்வர முனியப்பரை துணை கேட்டு வல்லை வெளியூடே எல்லைத்தாண்டும் பயணம் தொடரும் . உடுவை சந்தியில் உணர்வரியா உவர்ப்புடன் தேடல் பாடுபொரு…

  16. நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது! எமக்குப் பின்னால் பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது! தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது வெண்பனி தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி எம் செவி வழி நுழைந்தது வங்கக் கடலில் எழுகின்ற அலையோசை ! சந்தடி ஓய்ந்த தெரு வழியே நீயும் நானும் விடுதிவரை நடந்தோம் ! இப்படியே எத்தனையோ இரவுகளில் விவாதிப்போம் நெடு நேரம் முடிவில் ,எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளுடன் பிரிந்து செல்வோம் ! பின் வந்த, பதற்றமான பொழுதொன்றில் உன் விடுதலை வேட்கைக்குத் தடையாயிருந்த அனைத்தையும் உதறி அடவி புகுந்தாய் ! பரணி... உன் நினைவுகள் தேய்ந்து கொண்ட…

    • 0 replies
    • 681 views
  17. [தாய் மண்ணைப் பிரிந்து வந்த ஏக்கம் எல்லா உயிர்களிடத்தும் இருப்பது.பறவைகள் விலங்குகள் கூட தங்கள் கூடுகளையும் இருப்பிடங்களையும் தேடிப்போகவே எப்பொழுதும் முனைகின்றன.மண்ணைப்பற்றிய ஏக்கமானது ஒவ்வொரு புலம்பெய்ர்ந்த மனிதனது ஆன்மாவையும் ஓயாத தீயாக எரித்துக் கொண்டே இருக்கும்.சிதறிக்கிடந்த யூதர்களின் மனங்களில் எல்லாம் எரிந்த அந்தத்தீயே இன்று ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழர்களின் மனங்களிலும் கணல்கிறது, என்னுள்ளும் இருக்கும் அணைந்து போகாத அந்ததத் தீயில் உருகிய சில கவித்துளிகள்....தொடரும்] பெருங்கூட்டமாய் நெடிதுயர்ந்து நிற்கும் ஓக் மரங்களின் கீழ் நான் தனிமையைத்தேடி வந்தமர்ந்தபோது காற்று துருவப்பாறைகளிலிருந்து பனித்திவலைகளைக் காவிக்கொண்டு விரட்டிவரும் வெளிச்சத் துண்டுகளிடமிருந்து …

    • 29 replies
    • 3.7k views
  18. எனது உலகம்... போரில் தொலைந்த நகரத்தைச் சுற்றிலும் சிதறிக்கிடக்கும் ஓலங்களால் என் உலகத்தை வனைந்துகொண்டு கண்ணீராய் அருவிகளில் வழிந்தோடும் எம் மக்களின் துயரங்களில் மூழ்கிக்கிடக்கிறது என் ஆன்மா என் மன நிலத்தில் சுழன்றடிக்கும் துயர்க்காற்றின் அணல் உடலெங்கும் பெருநெருப்பாய் எரிக்கிறது பசியால் வாடுமெங்கள் குழந்தைகளை நினைத்து முகில் உரசும் முகடுகளில் பெருங்குரலில் காற்று மோதி இரைகிறது வயல் நிலங்கள் நீளவும் எம் இனத்தின் துயரங்களை உதிர்த்தபடி பெயர் தெரியாத பறவைகள் பிணங்களைக் கட்டி இழுத்துக்கொண்டு கழுகுகளைச் சபித்தபடி செல்கின்றன மேகங்கள் எம் மக்களின் அவலங்களைக் காவிக்கொண்டு கோபமாய் அலைகின்றன நாய்கள் ஊளையி…

  19. ஆண்மை ஊரே மெல்லுறக்கம் கொள்ளும் பின்மதிய நேரம் தெருமுடக்கில் நீட்டிக்கொண்டிருந்தது அன்று விசித்திரப்பிராணியாகிச் சொல்லாமல் வகுப்பினின்று வெளிநடந்தேன் ஓடும் பேருந்தில் திடுக்குற்று விழிதாழ்த்தி அவமானம் உயிர்பிடுங்க கால்நடுவில் துருத்தியது பிறிதொரு நாள் வீட்டிற்குள் புகுந்து சோபாவிலமர்ந்தபடிக் காட்சிப்படுத்திற்று இருள் படர்ந்த தெருவொன்றில் மார்பழுத்தி இறைச்சிக்கடைமிருகமென வாலுரசிப்போனது பின்கழுத்தை நெருங்கி சுடுமூச்செறியும் போதில் ஈரம் படர்ந்து திகைப்பிருள் சூழ்ந்த உன் கண்களை நினைத்தபடி ‘குறி’ தவறாது சுடுகிறேன் இதழ்க்கடையிரண்டிலும் முளைக்கின்றன பற்கள் என் சின்னஞ்சிறுமியே! http://koodu.thamizhstudio.com/thodargal_14_15.php

  20. . எல்லாம் நிறைந்ததே வாழ்க்கை வாழ்க்கையின் எல்லா மணித்துளிகளும் சந்தோசமானவையல்ல எவன் ஒருவன் துன்பத்தை எதிர்த்து போராடுகிறானோ அவனே வாழ்க்கையில் வெற்றிபெறுகிறான் இறக்கும் திகதி தெரிந்து யாரும் பிறப்பதில்லை பிறந்த எல்லோரும் சாதனை படைத்து இறப்பதில்லை எதைக் கண்டும் அஞ்சாதே எதை செய்வதாக இருந்தாலும் ஆழமாய் யோசி யோசித்தது சரியா என்று இன்னொரு முறை யோசி உன்னை நீ நம்பு யாரலும் முடியாததைக்கூட முயற்சித்தால் உன்னால் முடியும் என்று நம்பு வாழத் தெரியாதவன் தற்கொலை செய்து இறந்து போகிறான் …

  21. இன்னொரு அநாதை தமிழ்மொழி, பஹ்ரைன் பசியை போக்கிக்கொள்ளவே பழைய சோறு கேட்டு பலபேர் வீட்டு வாசலில் போய் நின்றேன். ஒரு சிலர் சுடச்சுட சோருபோடுவதாக வீட்டுக்குள் அழைத்து விருந்தும் வைத்தனர், உண்ட மயக்கத்தில் உறங்கினேன் என்று அன்று நினைத்தேன் ஆனால் இன்று தான் தெரிந்தது என் கர்ப்பை சூறையாட ஒரு பிடி சோற்றையும் ஒரு துளி மயக்கமருந்தையும் தியாகம் செய்த தியாகிகள் என்று. எது எப்படியோ என்னைப்போல் இன்னொரு அநாதை வீதியிலே கையேந்தி ஊர்வலம் போக என் கருவறைக்குள்ளே ஒத்திகை பார்க்கின்றன. http://www.koodal.com/poem/tamil/kavithai.asp?id=1666&c=1&title=another-orphan&author=tamilmozhi-baharain

  22. Started by சுபேஸ்,

    எனது நாள்... வடதுருவத்து நடு நிசியில் விழித்துக் கொள்ளும் என் உயிர்ப்பறவை மனவறையின் சுவர்களைப் பிளந்து வெளியேறுகிறது கண்டங்களைத் தாண்டி என் ஊரின் வீதிகளில் காலாற உலாவித் தீர்ப்பதற்காய்... வழிமறிப்புச் சாவடிகள் கொழுத்தப்பட்ட வீதிகளில் பாரதியின் கனவுகளும் புதுவையின் கனவுகளும் கூட தூரத்தே பயணிக்கின்றன... பச்சை அரக்கர்கள் விரட்டி அடிக்கப்பட்டதாக எல்லோரும் மகிழ்வுடன் பேசிக்கொள்கிறார்கள் முன்னரைப் போல மனிதர்கள் யாரும் தங்கள் அடையாளங்களை சட்டைப்பைகளில் சரிபார்த்துக் கொள்ளாத வீதிகளில்... என் மனக்கப்பல் அசைந்தலைந்த தொடுவானம் பால் வீதிகளில் என் கற்பனைச் சிறகடிப்பின் பயணங்களைச் சேமித்துவைத்த வி…

  23. முன்னாள் பெண் புலியின் கண்ணீர் கதை http://www.munainews.com/news/index.php?option=com_content&view=article&id=2676%3A2011-06-22-23-46-22&catid=59%3A2011-04-09-15-25-47&Itemid=107 இடம் பெயர்ந்த பின்னர் இடிந்து போன துயிலுமில்லமொன்றின் அருகிருந்து கைவிடப்பட்ட நிலையிலிருந்த லுமாலா சைக்கிள் ஒன்றை(க்) கண்டெடுத்தேன் துயிலுமில்லமருகே இருந்த மகிமையோ என்னவோ இன்று வரை துருப்பிடிக்காதிருந்தது சைக்கிள் வேகமும், அதற்கே ஊரிய வீரியமும் சிறிதளவு குன்றாது உந்தி மிதிக்க உருண்டோடி, இவ் உலகின் மேர்சிடேஸ் காரின் மோகத்திற்கு நிகரான சுகத்தை அது எனக்குத் தந்தது! முதன்மைச் சாலையென முன்பொரு காலத்தில் அழைக்கப்பட்ட கிளி நொச்சி…

    • 0 replies
    • 954 views
  24. Started by putthan,

    என் மதத்தை கேலி செய்தேன் மாற்று மதத்தான் அரவனைத்தான் என் இனத்தை குறைகூறினேன் மாற்று இனத்தவன் புகழ்ந்தான் எம் போராட்டத்தை இழிவுபடுத்தினேன் மாற்றான் முற்போக்குவாதி என்றான் எம் போராளிகளை காட்டி கொடுத்தேன் என்னை புலனாய்வாளன் என்றான் எம் இனத்தின் உரிமைகளை தடை செய்தேன் என்னை அமைச்சராக்கினான் எம் இனத்தின் எதிரிக்கும் எதிராக ஆயுதம் தூக்காதே என்றேன் அகிம்சாவாதி என்றான் என் சனத்தின் சனநாயகத்தை சாகடித்தேன் என்னை சனநாயகவாதி என்றான் என் இனத்தின் அவலங்களை கண்மூடி பாராமல் காதை பொத்தி கேட்காமல் வாயை மூடி பேசாமல் இருந்தேன் காந்தியவாதி நீர் காந்தியவாதி என்றான்

  25. "சாக்காட்டின் சரிதை" அவர்கள் தமது உரிமைக்காக உடமைகளை மட்டுமல்ல உடலுறுப்புக்களையும் ஒப்பற்ற "உயிரையும்" ஒப்புக்கொடுத்திருந்தனர். அவர்களது தியாக வேள்வி நியாயத்தின் அடிப்படையில் நம்பிக்கையை முதலீடாக்கி நடத்தப்படுவதாக அவர்கள் மட்டுமல்ல உலகமும் நம்புகிறது. ஆனாலும் அவர்களது வேகத்தை நம்பிக்கையை மழுங்கடிக்க, ஒரு வர்க்கக் கூட்டம் பல இடங்களில் ஒளிந்திருந்து ஓங்காரமாக பூசை செய்து கொண்டிருக்கிறது. அவர்கள் சுயமாக நாட்டி வளர்த்த மரங்களும், கட்டி வாழ்ந்த வீடும், வாழ்வாதாரங்களும், அடிக்கடி கொடிய விலங்குகளால் சுடுகாடாக்கப்பட்டபோது, ஏன் என்று ஒருவரும் கேட்கவில்லை. அவர்கள் ஒருமுகமாக ஒப்பற்ற தலைமையுடன் எதிர்கொண்டு எழுந…

    • 0 replies
    • 823 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.