கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கனன்றே எரிவாய் தீக்கனலாக...... காலத்தின் உப்பரிகையில் கை கொட்டிச் சிரிக்கிறான் காலன் இது யாரோ ஒருவரின் கனவுக் கலைப்பல்ல விடுதலை விரும்பும் விதியின் விரல் பிடித்து விளையாடும் மொழியாக தினமும் இழப்புக்கள் அறுவடைக்கு ஆட்களை அசைபோடும் இரைமீட்பில் ஆண்டவனை அர்ச்சிக்கும் வரம் பெற்ற வள்ளலுக்கும் வழங்கிய பரிசு மரணம் குழந்தை இயேசு குடிகொண்ட மண்ணில் நிரந்தரமாய் நீ விடைபெற்ற செய்தி அறிந்ததால் அதிர்ந்தோம் அந்நிய மண்ணில் தடம் பதித்தாலும் மண்ணின் நினைப்பில் மனம் புதைந்தே கிடக்கும் மண்ணின் விழுதுகள் நாம் இறை உணர்வினில் கனல் மணக்கும் ஏழிலான வெண்மலரே மானிட வதையினால் மனம் கனக்க உம்மை கல்லறைக்குள் வைத்தோம் இது காலத்தின் கட்டளை ஈழ விடுதலையில் இதய…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஆண்டகை அகதியாக அல்லலுறும் பூமியிலே மாண்ட அடிகளே! மானிடக் கருணையே! நீண்டதொரு சரித்திரத்தின் நிதர்சனச் சான்றென்று நீசர்கள் வைத்தகுறி நேசரும்மைப் பறித்ததுவோ?
-
- 4 replies
- 1.5k views
-
-
ஏனிந்தக் கேள்வி ? ----------------------------------------------------------------------------- எப்படியெனப் புரிகிறது. ஏனெனப் புரியவேயில்லை. எந்தப் பதிலாலும் திருப்திகொள்ளாது ஏந்தச் சாக்குப் போக்குகளாலும் ஏமாற்றுப்படாது நிரந்தர விழிப்பிலிருக்குமொரு ஒற்றனைப்போல் கேள்வி மட்டும் தொடர்நது கொண்டேயிருக்கிறது சொந்தப் பதில்கள் இரவற்பதில்கள் சொத்திப் பதில்கள் சுரணையற்ற பதில்கள் குள்ளப் பதில்கள் கூனற்பதில்கள் குதர்க்கப் பதில்கள் குருட்டுப் பதில்கள் குழந்தைப் பதில்கள் வயோதிபப் பதில்கள் அழகிய பதில்கள் அற்பப் பதில்கள் ஆரவாரப் பதில்கள் ஊமைப்பதில்கள் நூதனப் பதில்கள் நொண்டிப்பதில்கள் ஆயிரமாயிரம் பதில்களெனப் பதில் வெள்ளம் பாயும் போதும்…
-
- 5 replies
- 1.8k views
-
-
நேசிப்பின் நிலாவரையல்ல நெருப்பின் உலாமுகமே நிகழ்காலத்தேவை. கொடுங்குலத்தின் கூர்ப்புடைக்கும் மடுத்தலத்தின் மத்தியிலே தடுத்தாட் கொள்ள என்று தமிழருக்கு இருந்த தாய் அடங்காச் சினங் கொண்ட அநியாயச் சிங்களத்தின் நெடுங்காலத் திட்டமதில் மடுத்தல மாதாவும் இப்போது இடப்பெயர்வு அகதி பரம்பொருளே!.... தடுத்தாட் கொள்ள யார் உள்ளர் உலகில்? இருதயநாதரும் இராணுவ ஷெல்வீச்சில் சிதைவுற்று போனாராம். சீர்தூக்கி இறைமகனை காக்க ஒரு கையின்றி, கட்டிட சிதைவுக்குள் கருணைக்கடல் நிற்கிறாராம் கண்கொண்டு பார்த்து கனக்கும் இதயமெங்கே? ஆருக்கும் எம்மினம் அவதியைக் கொடுக்கவில்லை ஆனால் போர் வித்தை கற்கவரும் வல்லாண்மைகளின் மானுட நேசிப்பு எம் மண்ணைக் குதறுகிறது மானுட ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
மீண்டும் பேரிடி மீண்டும் பேரிடி!மூண்டது போரடி! எங்களின் மண்ணிலா பகைவனின் காலடி? பேரினவாதமே இது வேண்டாத தலையிடி! எரிகுழல் கொண்டு எத்தனை குண்டு கொண்டுவந்தாலும் பொடிப்பொடியாகும் மறத் தமிழரின் கால்மண் பட்டு! 'வெட்டியாய்" எம்மை நினைத்தோ வந்தாய்! "கொட்டியா" பலம் கண்டாய் இனி வேண்டாம் அப்பு சுருட்டு உன் வாலை! மகிந்தவுக்கு உது வேண்டாத வேலை கடனைப் பெருக்கி கைகட்டி நின்று வாங்கினாய் ஆயுதம் புலிக்கே என்று! உந்தச் சொல்லு பலித்தது சரிதான் புலிக்கே ஆயுதம் கொண்டு வந்தாய் எம்மண்ணில் எமக்கே வந்து தந்தாய்! இதுதான் இந்த ஆண்டுத் தொடக்கம் இனியும் வெடிக்கும்! தெற்கில் தெறிக்கும்! கிழக்கின் விடியலில் புலிக்கொடி பறக்கும்!
-
- 5 replies
- 2.1k views
-
-
பைத்தியா் நாமெல்லோ...? சாவீடு வந்த பார்ப்பன் தான் திண்ண கேட்கிறான் பச்சை அரிசி அள்ளியேனோ பைய்யினிலே போடுறான்....? சோம்பேறி பார்பானுக்கு சுக போகம் நல்லாயிருக்கு பெரியாராய் இவரை எண்ணி பெரும் கடன்கள் செய்யிறாங்க.. தன்னை தான் வருத்தி தான் உண்ண மாட்டாங்க குருவாய் இவரை எண்ணி குரு தெட்சனை கொடுப்பாங்க.. மாட்டு சானகத்தை மடையன் சாமியென்றான்- இதை கேட்டு நாமிருந்தால் கேணையா் நாமெல்லோ...? http://www.kalakam.com/forum/viewtopic.php?t=660
-
- 1 reply
- 1.4k views
-
-
முதன் முதலாய் அம்மாவுக்கு... ஆயிரந்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய் சொன்னேன் பெத்தவளே ஒம்பெரு(மை)ம ஒத்தவரி சொல்லலையே! காத்தெல்லாம் மகன்பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து ஊரெல்லாம் மகன் பேச்சு ஒங்கீர்த்தி எழுதலையே! எழுதவோ படிக்கவோ ஏலாத தாய்பத்தி எழுதிஎன்ன லாபமின்னு எழுதாமாப் போனேனோ? பொன்னையாத் தேவன் பெத்த பொன்னே! குலமகளே! என்னைப் புறந்தள்ள இடுப்புல்வலி பொறுத்தவளே! வைரமுத்து பிறப்பான்னு வயித்தில்நீ சுமந்ததில்ல வயித்தில்நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிருச்சு கண்ணுகாது மூக்கோட கறுப்பா ஒருபிண்டம் இடப்பக்கம் கெடக்கையில என்னென்ன நெனச்சிருப்ப? கத்தி எடுப்பவனோ? களவாணப் பிறந்தவனோ? தரணிஆள வ…
-
- 1 reply
- 1k views
-
-
வணக்கம் நண்பர்களே! இது ' வேங்கையன் பூங்கொடி" எனும் காவியம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யும் பகுதி.
-
- 70 replies
- 11.5k views
-
-
தெந்தமிழீழத் தாயவள் செருக்களம் போயினள் உடலினில் குண்டு சுமந்தல்ல.. வயிற்றினில் பசி சுமந்து.. நெஞ்சினில் புதல்வர் தம் உணர்வோடு..! தமிழீழ விடுதலைக்காய் மாமாங்கம் தனில் மங்கை அவள் தனித்து நின்று துணிந்து திறந்தாள் சாத்வீகப் போர்க்களம். காந்திய தேசத்தின் ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழீழ மகளிர் தம் மானம் குதறுகையில் பொங்கினள் பூபதி அம்மா நேருவின் பேரனிடம் நீதி கேட்டு..! தாயவள் பசியினில் துடிக்கையில் நேருவின் பேரன் நெஞ்சினில் களிப்புடன் தமிழின அழிப்பினில் கழித்தனன் காலத்தை டில்லியில்..! நாட்கள் கழிகையில் பொங்கிய பூவவள் பூகம்பமாய் சிதறினள் சாவினில் சரித்திரம் படைத்திட்ட தமிழீழத் தாயவளாய் மின்னினள் தமிழீழ வானில்.…
-
- 15 replies
- 3.2k views
-
-
என்னைச் சுற்றிப் பெண்கள் அம்மா உயிர் உலுக்கி உலகுக்குள் கொண்டு வந்தாள்.. ஊனை உருக்கிப்பருகத்தந்தாள்.. என்னைச் செதுக்கித் தமிழனாய் செய்தாள்!.. தங்கை எனக்காக அழுவாள்.. என்னையும் அழவைப்பாள்.. என் எச்சம் அருந்தியவள்.. ஆருயிர் நண்பியாயும் அழகிய உறவாயும் வந்த...என் தாய்வீட்டுக் கடமை. நண்பி அவசரமாய் வரும் ஆறுதல் வார்த்தைக்கு சொந்தக்காரி..என் வெற்றிக்கு குதூகலிக்கும் முதல் நலன்விரும்பி.. கல்யாணமான பின்தான் காணாமல் போய்விட்டாள்!! காதலி வற்றாத தமிழ் வார்த்தைககடலில் குதித்தாள்;..கரைந்து போகாத என் காதலை கவிதையாய் கண்டெடுத்தாள்.. தான் மட்டும் படித்து பெரும் சுயநலவாதியானாள்!! மச்சாள் அனுமதி இல்லாமல் என்அறைக…
-
- 39 replies
- 5.2k views
-
-
என் இருப்பும், உன் இருப்பும் அவசியம் பருத்த கலசங்களும், பெருத்த தம்புராவுமே நட்பை நிலைப்படுத்தும் நிர்வாண நிலையென்றால் கரிக்கிறது கண்மணிகள். உறுத்தலின்றி தரித்த விசம்போல் ஒரு பேராற்றில் கலக்கும் துளிகளில் மாள்வது நட்பாகில்.... மானுடம் சிகிலமாகி, நாகரீக வெளிகளெல்லாம் நரகல் புவியாகி சீழ் பிடித்து மணக்கும். என்னிருப்பும், உன்னிருப்பும் அவசியம். நட்பென்ற உன்னதத்தின் மேன்மையைப் புரிய வைக்க நண்பா! என்னிருப்பும், உன்னிருப்பும் அவசியம்.
-
- 6 replies
- 1.9k views
-
-
புதுமனைப் புகுவிழா. என் செய்தி உனக்கானதென்பதை நீ மட்டும்தான் அறியமுடியும் யாரிடமும் இதுபற்றி எதையும் கூறிவிடாதே நான் மூடிப்போய்விட்ட என் கதவுகளின் முன்னால் நீ சினமுற்றிருக்கக் கூடும் நகர்வற்றுக் கிடந்த ஒரு நத்தையோட்டினுள் நான் குடிபெயர்ந்துகொண்ட செய்தி உனக்கெட்டியிருக்காதென்பதை நானறிவேன் புரியாமை உனக்குள் பிறப்பித்த சூறாவழிக்குக் காரணமானவன் நான் மட்டுமேயென நீ பிரலாபம் செய்துகொண்டிருக்கக்கூடும் என்னை நீ திட்டித்தீர்த்திருக்கவும் கூடும் என்சார்ந்து ஒரு பகையுணர்வை நீயுன்னுள் வளர்த்திருக்கவும் கூடும் இவையெல்லாம் நடைபெறட்டும் என்பதுதான் என்னை மீறிய எனது விருப்பமாகவுமிருந்தது நீ எனக்குப் பொம்மைகள் வாங்கித் தரவில்லை …
-
- 8 replies
- 4.1k views
-
-
தமிழ் ஈழம் அமைவதை இந்தியா அனுமதிக்காது. இலங்கை பிரதமர் இஸ்ரேலில் பேட்டி. அடப்போங்கப்பா... இஸ்ரேல் தடுத்தாலும் சரி... இலங்கை குதித்தாலும் சரி... இந்தியா குமுறினாலும் சரி.... தமிழ் ஈழம் நிச்சயம் அமையும்டா என் டுபுக்கு தமிழச்சி கவிதைகள் குமுதம்/பாமரன் பக்கம்
-
- 6 replies
- 3.5k views
-
-
நட்பு அவனும் அவளும் நட்பின் பரந்த வெளியில் கைகோர்த்து நடந்தனர். ஆண், பெண் பால்நிலைக்கு அப்பால் உன்னதப் பொருளின் விரிதளத்தில், கிண்டலாய், கலகலப்பாய், சண்டைகளாய் அவ்விருவரின் முன் விரிந்தது உலகம். ஆயிரங்கண்கள் அவர்களின் புனிதத்தை அறியாமல் இழிவாகப் பார்த்தன. ஆண்,பெண் பிம்பங்களுக்கு அப்பால் நட்பின் வளர்வைச் சமுதாயம் ஏற்கவில்லை. ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும் மோகிக்கும் பாலியல் கண்கொண்டே பார்த்துப் பழக்கப்பட்ட சமுதாயம் வேறென்ன செய்யும்? மீள எண்ணாத சமூக எச்சங்களாக, அவன் காதல் மனையாளின் கண்ணீரும், அவள் வாழ்க்கைத் துணைவனின் சந்தேகமும் நெய்யிட்ட பெருந்தீயாய் சுவாலை வீசிற்று. கனத்த மனங்களுடன்... சுருங்காத உன்னத விரிதளத்தி…
-
- 54 replies
- 12.6k views
-
-
அன்னையே! ஆங்கில மோகத்தில் அனைவரும் திளைத்து ஆனந்தப் படுகையில் அன்னைத் தமிழை எண்ணி ஏங்கிட என்னை ஏன் பெற்றாய்?! பெண்ணடிமைத்தனத்தை பெண்களே ஏற்று பெருமைப் படுகையில் பெண்ணின் விடுதலையை நேசிக்கும் ஒருவனாய் என்னை ஏன் பெற்றாய்?! சாதியால் இணைந்து சமூகமாய் முன்னேறும் சந்ததியினர் மத்தியில் சாதியை வெறுக்கும் சமரசப் பித்தனாய் என்னை ஏன் பெற்றாய்?! பொன்னையும் பொருளையும் பொக்கிஷமாய்க் கருதும் பொல்லாத உலகில் பொது நலம் விரும்பும் போக்கிரி மைந்தனாய் என்னை ஏன் பெற்றாய்?!
-
- 4 replies
- 1.6k views
-
-
*என் கனவு....* என் இரவுகளை நீ சிறை பிடித்ததால் என் கனவுகள் களவாடப்பட்டு விட்டன !!!... விடுதலைக்கு இன்றும் என்விழிகள் சாட்சி கூண்டில் ... *என் ஆசைகள் ...* அழகாய் இருக்கிறதடி உன் வாசல் கோலங்கள்... புள்ளிகளாய் நீயும் என் ஆசைகளை வைப்பதாலோ !!!... நசுங்கித்தான் போனதடி அதுவும் உன் வீட்டு நாய்குட்டி முதல் பால்காரன் வரை பாதங்கள் பட்டு !!!.. *என் நினைவுகள் ....* மறந்துவிடு எனச்சொல்லி நீ எறிந்த கல்லில் உடைந்து விட்டது ... கண்ணாடியாய் !!!... ஓராயிரம் உன் பிம்பங்கள் உடைந்த துண்டுகளில் உட்கார்ந்து கொண்டு இன்றும் கீறுகின்றன... என் இதயத்தை !!!... *என் சிரிப்பு ...* அதை எட…
-
- 1 reply
- 987 views
-
-
குருதி படிந்த சுவடுகள் கழுமரம் கூடப் பூத்தது புதுமை கவ்வாரியில் அன்பு பெருகிய மகிமை பகைவரின் மனமும் கனிந்திடும் இனிமை பார்த்தவர் கண்களும் பகர்ந்திடும் எளிமை சிந்திய குருதியால் சிவந்தது வானம் சிதறிய வார்த்தையால் பிறந்தது கானம் முந்திய மானிடம் இழந்தது ஊனம் முகவரி இழக்குமோ முதல்வனின் மானம் தனிமையின் வேளையில் துணையாக வருவார் தடுமாறும் வேளையில் தாங்கியே சுமப்பார் அவமான நேரத்தில் ஆறுதல் தருவார் அன்பினால் அனைத்தையும் ஆற்றியே மறப்பார் வருத்தங்கள் வாழ்வில் திருத்தங்கள் தரலாம் நெருக்கடிகள் எம்மை நெறிப்படுத்திடலாம் அழுகைகள் அகத்தில் அமைதியைத் தரலாம் வறுமைகள் வாழ்வில் திறமைகள் பெறலாம் குருதியில் குளித்து இக் குவலயம் சிறக்க இறுதிவரை இ…
-
- 8 replies
- 2k views
-
-
வரலாறு. ---------------------------------------------------- தாயம் விளையாடிக் கடவுள் ஒருதடவை தன்னை மறந்ததனால் காலம் பெருக்கெடுத்துக் கரையுடைந்து தொடங்கியது வரல் ஆறு மறதிக் கருங்குழியில் மறைவுபெறும் மானிடமும் மற்றனைத்தும் வெறும் மடையிழந்த பாய்ச்சல்களே எறும்புகளின் புற்றானாலென்ன தேனீக்களின் கூடுகளானாலென்ன மனிதர்களின் நகரங்களானாலென்ன காலத்தின் கண்களில் இவையெல்லாம் ஒன்றே. எங்கே அந்த பபிலோனியா? எங்கே என் மொகஞ்சதாரோ ? பாலைவனங்களுக்குள் எத்தனை நகரங்கள் தூசியாய் போனது ? மசெடோனியாவின் மகாபுதல்வன் பபிலோனியாவில்மரித்தது விதியின் முரண்நகை. வீழ்த்திய நகரிலேயே வீழ்தான் இப்பேர்மனிதன். எங்கே உறங்குகிறாய் நீ அலெக்ஸாண்டர்?…
-
- 10 replies
- 2.3k views
-
-
நிழல்!! அழகிய நந்தவனத்தில் அநாதையான பறவை நான் சிறகுகள் எனக்கிருந்தும் சிறகடிக்க தெரியாது தவித்தேன் வானத்தில் பறக்க ஆசை வந்தும் தனிமையில் பறக்க வெறுத்தேன்..!! பறக்கும் பறவைகளை கண்டு பலநாட்கள் ஏங்கினேன். என் ஏக்கம் அறிந்து ஒரு பறவை என்னிடம் பதுங்கி பதுங்கி வந்தது.. எனக்கு பறவை மொழி கற்று தந்தது நானும் கற்றேன் மொழியை... மறந்தேன் என் தாய் மொழியை இறக்கைவிரித்து பறந்தேன் வானத்தில் பறந்த போது என் கண்களுக்கு தெரிந்த எல்லாமே சின்னதாகவே இருந்தன.. நிஜத்தை தொலைத்தேன் நிழலாக பறந்தேன் வானத்தில்.. நிஜம் எது நிழல் எது என குழம்பினேன் நானும்.. நந்தவனத்தில் இருந்த இனிமை எனக்கு கிடைக்கவில்லை வானில் நிஜத்தை தொ…
-
- 42 replies
- 8.8k views
-
-
உனக்கென்ன சீதனமா...? /தங்க தாலியெடுத்து தமிழா நீ கட்டிக்கடா-உன் சம்பிர..தாயம் இது வென்றால் தமிழா நீ முடிச்சுக்கடா.... ஆயிரம் பவுணில தாலி அட மனைவிக்கு ஏனடா வேலி...? ஆடம்பரம் எல்லாம் போலி அதை உணரலென்னா ..நீயோ..காலி..காலி.. ஏழ்மை வாழ்விலை நிலையில்லடா- இதை புரிஞ்சிட்டா நீயோ..புனிதனடா.... திருமண வாழ்விற்கு சீதனமா நீயென்ன விலை போகும் கேவலமா...? முதுகெலும்பு இல்லாத ஆணினமா- நீ ஊா்வன பட்டியல் சோ்வனவா..? பிச்சை எடுக்கின்ற வாழ்வுனக்கா வாழ்க்கையில் உனக்கென்ன மதிப்பிருக்கா...? வியா்வையால் உழைத்து முன்னேறடா விலை போகும் நிலையை மாற்றிட..டா.. அடிமையாய் வாழ்வது முறையில்லடா..- மொத்த ஆணிற்கும் இதனால் வெட்கமடா...…
-
- 0 replies
- 1.3k views
-
-
இனி வருமா டோறா...??? ஆழக் கடல் ஏறி... ஆடி வந்த டோறா பாதி வழி வந்து பாதியானதே..... தமிழ் ஈழமது காற்றில் சேதி யானதே...இன்று சேதியானதே.... பாயும் புலி வேங்கை படை தனை அழிக்க ஓடி வந்த டோறா ஒய்ந்து போனதே - இன்று ஓய்ந்து போனதே.... அண்ணனவர் சொல்லில்- வேங்கை அலையதில் நடக்க பாய்ந்து வந்த டோறா பாதியானதே சுக்குநுாறாய் போனதே... எங்கள் புலி வீரரை ஏளனங்கள் செய்தவன் அஞ்சி ..அஞ்சி ..போனான்- இன்று அஞ்சி..அஞ்சி..போனான்... எங்கள் கடலேறி இன்னும் பகை வரு..மா..? வந்தால் அடி முழங்கும்- வானில் வேங்கை கொடி ஆடும்... //// ஆழக் கடல் ஏறி... ஆடி வந்த டோறா பாதி வழி வந்து பாதியானதே..... தமிழ் ஈழமது காற்றி…
-
- 6 replies
- 2.1k views
-
-
பாவலனா நீ..?...சீ....துா... தோளிலே துண்டிட்டு தோழனாகி நீ வந்தால் கட்சி தலைவனா நீ- உன்னில் காறி உமிழாரா..? குப்பைகளை கூட்டி உன்- இதய கூடையிலே போட்டு விட்டு நாற்றம் அடிக்குதென்றால்-உன்னில் நாறாமல் என் செய்யும்..? பட்டாடை கட்டி வந்த பா வரியை உதறிவிட்டு கவிதை இதுவென்று கருநெஞ்சே நீயுரைத்தால்- உன்னை கல்லால் அடிக்காரா காறி உமிழாரா..? சிலித்தெழுந்த வரிகளிற்கு சிரச் சேதம் செய்பவனே உன்னையா கவிஞனென்று-நீ உலகேறி பறையடிதாய்...?? நல்ல நாடகம் தான் நல்லாய் அரங்கேற்று கண்முன்னே நீ வந்தால்-உன்னை கல்லால் நானடிப்பேன்....! குறிப்பு..- ஒரு பத்திரிகைக்கு எழுதிய கவிதையை-அங்குள்ளவர் அதன் பொருளை வரிகளை சிதைத…
-
- 6 replies
- 2.3k views
-
-
ஊடக காரனா நீ...? மக்களின் தொண்டனாய் மன்றேறி வந்தவரே நீதியை கொன்றிங்கே நின்றென்ன உரைக்கின்றாய்..? பிழைகள் செய்தாரென்று பிழையாய் உரைக்கின்றாய் வதைகள் செய்வதற்கா வந்தாய் நீயிங்கே...? கும்பிடு போட்டுனக்கு குலவி வந்தால் தான் சந்திக்கு விடுவாயா சம்பந்த காறனே...? மறையது கழன்றாரென்று மன்றில் நீயுரைத்தால் செருப்பதை எறியாமல்- என்ன செங்கம்பளமா விரிப்பார்...? சுதந்திர தா்மத்தை சுடு காடனுப்பி விட்டு மன்ரேறி என் செய்வாய் மடையனே நீ சொல்லு...? விதி முறை போட்டென்ன விலையா பேசுகின்றாய்..? சீா் கேடி என்செய்வான்- அவன் சிந்தை இது காண்... மதியது தானிழந்தாய் மறையது நீ கழன்றாய் உடையில்லா அல…
-
- 5 replies
- 1.7k views
-
-
ஆயிரம் கைகள் சேர்ந்து செய்த மெத்தையில் படுத்திருக்கிறேன் உன் இருகையில் மட்டும்தான் தூங்கி இருக்கிறேன் * அம்மா உனக்கு அவ்வளவு பாரமாய் இருந்தேன் என்றா பால் கொடுத்து என்னை வளர்த்தாய் நீ தூக்கவே முடியாதளவுக்கு * வெற்றி பெற்றால் தேடி வந்து வாழ்த்த ஆயிரம் உறவுகள் தோற்றுப்போனால் தேடி வந்து அணைக்க உன்னைத் தவிர யார் எனக்கு * ஆயிரம் முறை தலை சீவிய சந்தோசம் நீ ஒரே ஒரு தடவை தலை கோதிவிடும் போது * எல்லாம் சேலைதான் எனினும் நீ கட்டிய சேலையில்தான் என் நிம்மதியான தூக்கம் அவிழ்ந்து கிடக்கிறது * என்னை நடக்க வைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட …
-
- 5 replies
- 1.4k views
-
-
செல்லாதா எங்கள் பா...?? துடுப்பை பறித்து- நீ தூர எறிந்தால் கரைக்கு போகாதா எம் கவிதை படகு...?? இடுப்பை உடைத்து- எம்மை இருத்தி வைத்தால் நடந்து போகாதா- எங்கள் நறுக்கு வரிகள்...?? குப்பி விளக்கதில்- நாம் குத்தும் வரிகள் எட்டி பார்க்காதா எங்கள் தேசம்...? எழுது முனையை- பறித்து சிறையில் இட்டால் பறந்து போகாதா- எங்கள் பா வரிகள்...?? -வன்னி மைந்தன்-
-
- 8 replies
- 1.7k views
-