Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மாவீரர் நினைவில் கவிஞர் காசி ஆனந்தன்.. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.2k views
  2. மலரும் ஆண்டே!!!... பறந்து போனதோ இல்லையோ பதற வைத்த ஆண்டு 2007 எத்தனையோ இளவல்களையும் புன்னகைப் பூவையும் தன்னுள் இழுத்துக்கொண்ட ஆண்டு! கண்களில் தமிழீழம் தாகம் மின்ன மின்ன ஒவ்வொரு ஆண்டையும் வரவேற்கின்றோம் நம்பிக்கை மாறாப் புன்னகையோடு!. எங்கள் வீட்டிலும் ஏட்டிலும் எழுதப்பட்ட சோக காவியங்களை எரியூட்டி எம்மை உயிர்ப்பிக்க செய்கின்றன போர்களமாடும் எம் உயிர் நாடிகள்! இழப்புகளின் எல்லை விரிந்துகொண்டே செல்லும் வேளையிலும் தன்னம்பிக்கை தளராத் தலைவனின் கொள்கைதான் நீர் வார்க்கிறது காயும் எங்கள் உயிர்வேர்களுக்கு!. மலரும் ஆண்டே! இரத்த வாடை நீக்கி இன்பம் கூட்டுவாயா?! அவல ஓலம் போக்கி அன்பு மொழிகள் மீட்டுவாயா?! உப்புக்கண்ணீர் துடைத்து சொந்தங்கள் சேர்ப்பாயா?! எங்…

    • 4 replies
    • 1.7k views
  3. Started by nunavilan,

    எழுச்சி பொறிகக்கும் விழியோடு புறப்பட்டு விட்டோம்! போராட நாள் குறித்தோம்! எறிகுண்டு பாய்ந்தாலும் இருகைகொண்டேற்போம்! எதற்கும் நாம் துணிந்துவிட்டோம்! நெறிகெட்ட பகைவரின் முறைகெட்ட வாழ்வால் நெருப்பாக மாறிவிட்டோம்! வெறிகொண்டு தாவினோம்! வீரத்தின் மடியில் விளையாடத் தொடங்கிவிட்டோம்! திசையெட்டும் அதிரயாம் பறைகொட்டி நின்றோம்! தெய்வத்தை வணங்கி வந்தோம்! தசையெலாம் முறுக்கேறி நின்றோம்! எழுந்தோம்! தாயின் மேல் ஆணையிட்டோம்! வசைகெட்டு வாழாத வரலாறு கொண்டோம்! வல்லமை நூறு கொண்டோம்! இசை பெற்ற மிளிர்கின்ற எதிர்காலம் ஒன்றை இப்போதே செய்து வைப்போம்! கடல் பொங்கினாற்போல் உடல்பொங்கி வந்தோம் களத்திலே ஆட வந்தோம்! படைகொண்டு மானத்தின் நடைகொண்டு வந்தோம் பழி தீர்க்…

    • 4 replies
    • 5.7k views
  4. Started by nunavilan,

    காமம் அரவணைத்துக் கொள்! அன்பே அரவணைத்துக் கொள்! புறம் மறைத்தாய் பொறுத்துக் கொண்டேன் அகம் மறைக்காதே ஆத்திரப்படுவேன் ஆசைப்படு! அதிகாரத்தோடு கேட்டுக்கொள் மோகப் படு! முடிந்தவரை முத்தமிட்டுக்கொள் உன் கரம் மட்டும் அறிந்த என் நெஞ்சத்தை உன் மார்பு கொண்டு பழுது பார் விதைத்துக் கொள்! விளைய விடு! மேய்ந்து கொள்! மீதம் வைக்கதே! அங்கம் அனைத்தும் அடக்கி விடு! ஆண்மை கொள்! பெண்ணே ஆண்மை கொள் என் ஆயுள் முழுவதும் உன் அங்கம் மட்டும் பணி செய்ய! மோகப் புரட்சி செய்! நீயே தொடங்கு! நீயே முடி! சேர்த்துக் கொள்! செப்பனிடு! படர்ந்து கொள்! பறக்க விடு! என் விரல் கொண்டு உன் உடல் உழுது கொள்! என் உதட்டு வரிகளி…

  5. குளிர் போக்கும் ஞாபகங்கள். பாலத்தின் கீழே படர்ந்தோடும் நீரேபோல் பாய்ந்தோடிப்போனதடி கண்ணம்மா காலத்தின் பயணம். கனியெனவே நானுரைத்தேன் நின் பெயரை இனியொருகால் வருமோடி அவ்வின்பம். வருடங்கள் பலவாகியென்விழிகள் உனைக்காணும் வழக்கிழந்து போனதுண்மை கண்ணம்மா. இருந்துமென்ன மனதுழலும் நினைவுகளை மறுத்தலொன்று ஆகுதலோ நடக்குதில்லை. ஒருத்திக்கே தினமும் அன்புரைத்தல் ஓரவஞ்சம் என அறிவேன் இருந்துமென்ன வேறு வழியில்லையடி கண்ணம்மா. வேதனைதான் மிஞ்சி இப்போ நிற்குதடி. கூடிவாழ்ந்தோம் உண்மையடி கண்ணம்மா கூடுடைந்து போனதுவும் குட்டை கலங்கியதும் பீடை வந்து நாம் பிரிந்தது போனதுவும் காடெரிந்து சாம்பரென ஆகியதாய்ப் போனதடி. தொலைத் தொடர்பில் கேட்டேனுன் குரலின்று …

    • 6 replies
    • 2.5k views
  6. Started by nunavilan,

    பெருமூச்சு வலிபடைத்து முறமெடுத்துப் புலியடித்த தமிழகம் கிலிபிடித்த நிலைபடைத்து வெலவெலத்து வாழ்வதோ? பகையொதுங்கப் பறைமுழங்கிப் புகழடைந்த தமிழகம் கதிகலங்கி விழிபிதுங்கி நடுநடுங்கி வாழ்வதோ? படைநடத்தி மலைமுகத்தில் கொடிபொறித்த தமிழகம் துடிதுடித்து அடிபிடித்துத் குடிகெடுத்து வாழ்வதோ? கடல் கடந்த நிலமடைந்து கதையளந்த தமிழகம் உடல் வளைந்து நிலை தளர்ந்து ஒளியிழந்து வாழ்வதோ? மகனிறக்க முலையறுக்க முடிவெடுத்த தமிழகம் புகழிறக்க மொழியிறக்க வெளிநகைக்க வாழ்வதோ? கவிஞர் காசியானந்தனின் கவிதை தொகுப்பிலிருந்து

  7. கனவின் பொருளுரையீர். களிகொண்ட மனமொன்றுகூடும் அதிகாலையொன்றில் காட்டினிடையேகித் தனியனாய் நடைபயின்றேன். மனிதருடன் உரையாடல் சலித்து மரங்களுடன் உரையாடும் அவாவெழுந்து ஊர்தாண்டி உவகையுடன் தொலைந்தேன். பசுமைக்கும் பழுப்புக்கும் இடைப்பட்ட பருவமது பார்வைக்கு இதமழித்ததெனினும் காட்டினிலும் பதுங்கிக் கிடந்ததோர் ஊமைச்சோகம். எதிர்காலமெண்ணித் துயருற்றாற் போலான ஏக்கமெங்கும் மரங்களிலும் கிளைகளிலும் பற்றிப் படர்ந்தது போல் ஒரு தோற்றம். "ஆரூடக்காரனே, எம்மொழியைப் புரிந்தாய் நன்று. எம்முடனே நட்பிழைந்தாய் நன்று. வானமொழியிழக்கும் பருவமிது நம் வாழ்வும் என்னாகுமென்றெண்ணித் துயிலிழக்கும் காலமிது. தன்னந்தனியர்களாய் நின்றிருந்தோம் நாமிங்கு வந…

    • 5 replies
    • 1.7k views
  8. விழித்துக்கொண்ட முல்லை. பற்றிப் படர்ந்தேறக் கொம்பற்ற வயலோரம் முளைத்ததனால் முல்லை தனக்கு வெறும் புல்லே போதுமெனத் தானும் படர்ந்திருந்த வேளையில்தான் அவ்வழியால் பாரிமன்னன் பவனிவந்தான் பரிவாரம் சூழத் தேரேறிப் பவனிவந்த வேந்தன் பாதையோரம் கொம்பற்றுத் துவண்ட கொடிகண்டான்;. என்னேயிது நீதியிங்கு ஏற்றம் பெறக்கொம்பிலா வாழ்வுற்தோ முல்லைக்கென நெகிழ்ந்தான். பின் தேரிறங்கி முல்லையிடம் சென்று 'சின்னஞ் சிறு கொடியே, உன் விதி கண்டு மனம் நொந்தேன் யான்" என உரைத்தான். "என்னேயுன் பெருமை மன்னா, சின்னஞ்சிறு கொடிக்காய் நீ உளம் நெகிழ்ந்தாய் கண்டேன் போதுமதுவெனக்குப்போதும் புற்களுடன் வாழ்வேன் இனியான் போய் வருக" என நன்றியுடன் நயம்படச் செப்பியது செடி…

    • 4 replies
    • 1.4k views
  9. Started by கிருபன்,

    சைவப்பற்று -பாவேந்தர் பாரதிதாசன்- இரும்புப் பெட்டியிலே - இருக்கும் எண்பது லக்ஷத்தையும், கரும்புத் தோட்டத்திலே - வருஷம் காணும் கணக்கினையும், அருந்துணையாக - இருக்கும் ஆயிரம் வேலியையும் பெருகும் வருமானம் - கொடுக்கும் பிறசொத்துக்களையும், ஆடை வகைகளையும் - பசும்பொன் ஆபரணங்களையும் மாடு கறந்தவுடன் - குடங்கள் வந்து நிறைவதையும், நீடு களஞ்சியம்கள் - விளைந்த நெல்லில் நிறைவதையும், வாடிக்கைக் காரர்தரும் - கொழுத்த வட்டித் தொகையினையும், எண்ணிஎண்ணி மகிழ்ந்தே - ஒருநாள் எங்கள் மடாதிபதி வெண்ணிறப் பட்டுடுத்திச் - சந்தனம் மேனியெலாம் பூசிக் கண்கவர் பூஷணங்கள் - அணிந்து கட்டில் அறைநோக்கிப் பெண்கள் பலபேர்கள் - குலவிப் பின்வர முன்நடந்தா…

  10. சமாதானத்தின் எதிர்பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்ட இன்றைய நிலையின் நாளைய நோக்குக் குறித்து எழுதும் கவிஞர் புதுவை இரத்தின துரையின் உலைக்கள வரிகள் இவை நெஞ்சுக்குள் அலையெற்றிய மாயக்கனவுகள் வெளியேற நிஜமனிதர்களாக நிற்கிறோம் இப்போது. மினுங்கிய மின்சாரமற்று தொடர்புக்கிருந்த தொலைபேசியற்று செப்பனிடப்பட்ட தெருவற்று மாவற்று - சீனியற்று - மருந்தற்று ஏனென்று கேட்க எவருமற்று கற்காலத்துக்குத் திரும்புகிறோம் மீண்டும். கணினிகளையும் காஸ்சிலிண்டர்களையும் வீட்டு மூலையில் வீசிவிட்டு மெருகு குலையா மதில்களின் மின்குமிழ்களையும் விறாந்தையின் தரைவிரிப்புகளையும் மாடியிற் பூட்டிய அன்ரனாக்களையும் அசுமாத்தமின்றி அகற்றிவிட்டு பதுங்கு குழிக்குப் பால்காச்சிவிட்டோம். …

    • 9 replies
    • 3.8k views
  11. வாசனை --- வ.ஐ.ச.ஜெயபாலன் அதிலாந்திக் சமுத்திரத்தின்மேல் பறந்தபோது அவளது வாசனையை உணர்ந்தேன். நாங்கள் பிரிந்தபோது வசந்தத்தைக் கொண்டுவந்த பறவைகளும் ரொறன்ரொவை நீங்கின. ஒன்ராறியோ ஏரியின்மீது தெற்கு நோக்கிப் பறந்த வாத்துக்களுள் கண்ணீரை மறைத்தபடி நாம் விடைபெற்றோம். அந்த வசந்தத்தில் சினைப் பிடித்த சல்மன் மீன்கள் நீந்திய ஒன்ராறியோ ஏரிக்கரையின் எந்தச் செடிகளை விடவும் பூத்துப்போயும் வாசனையோடும் என் படகில் இருந்தாள். படகை விட்டு இறங்கும்போது ஈழத் தமிழர் தலைவிதி என்றாள். நாங்கள் மட்டக்களப்பின் வாவிக் கரைகளில் சந்தித்திருக்கலாமே என்று பெருமூச்செறிந்தாள். வானை வெண்பறவைகள் நிறைத்தன. ஒருகணம் போர் ஓய்ந்தது. வடமோடிக் கூத்தர்களி…

    • 24 replies
    • 4.6k views
  12. Started by kavi_ruban,

    குருதி ஓடையும் பிண வாடையும் என் தேசத்து தெருக்களில்... உயிர் சுமந்து இருப்பதில் சில சுமந்து இடையில் குழந்தை சுமந்து நடையில் என் தேசத்து எல்லை கடக்கின்றனர் மக்கள்! என் மண்ணின் உயிர் ஆயிரமாயிரம் 'பூட்ஸ்' கால்களின் காலடியில் நசுங்குண்டு சுதந்திர தாகத்தோடு காத்திருக்கிறது! பலிகள் பல கொடுத்து நரிகளின் ஊளை கேட்டு பரிகளாகி மேனி விடைத்து அரிகளின் தேகத்தை 'ரவை' களால் கிழித்து கரிகாலன் கண்ணசைவில் பாய்கின்றனர் புலிகள்! இருந்தும் அரசு கட்டில் அமர்ந்திருக்கும் ஆந்தைகள் அலறும் ஒலி கேட்டு காது பொத்தி 'அடைத்த செவியினர்' ஆக வெளிநாடுகள்! படை மட்டும் நடாத்தி கிடைப்பதல…

  13. அவர்கள் சூரியனை தேடிநடக்கவில்லை சூரியனாக மாறினார்கள் இருள் மறைய தொடங்கியது என்னும் அவர்கள் மாறுகின்றார்கள் புளியமர இடுக்கினூடே நிலவு மேறகில் இருந்து இறுமாப்புடன் வேகமாக எழும்பியது நிலவுக்கு எதிர்ப்புறமாக கிழக்கு நோக்கி நடந்தார்கள் நிலவும் சில கிளிகளும் கெக்கட்டம் விட்டு சிரித்தது கேட்டது விடியலை நோக்கி நடந்தார்கள் நடுங்கிய தேகத்திலும் வன்மம் வான்வரை எட்டி நின்றது தள்ளாடி தடுமாறினார்கள் இருந்தும் பசியும் தாகமுமும் வலியும் முன்னேற சக்தி தந்தது செவிப்பறைகளில் வீறிட்ட ஓலங்கள் வழித்துணைக்கு தாலாட்டின தொடர்ந்து வந்தது நிலவு சிரித்துக்கொண்டே வந்தது ஏளனம் செய்தது எள்ளிநகையாடியது என்ன ஒரு இறுமாப்பு …

    • 10 replies
    • 1.9k views
  14. Started by nunavilan,

    மீண்டும் அங்கே! - சத்தி சக்திதாசன் உள்ளத்தின் வெள்ளமது நதிபோல அசைகிறது என்னிதயத்தின் ஓரத்தில் உறங்கிக் கிடந்த என் மனப்பறவையது விழித்துக் கொண்டு இசைப்பது சோக கீதம் என் மண்! என் மக்கள்! என் மொழி! நான் மீண்டும் அங்கே போக வேண்டும் பாதைதான் தெரியவில்லை பயணம்தான் புரியவில்லை சென்று வந்த நண்பனவன் சொன்ன ஒரு செய்தியொன்று கல்லிலே எழுத்துப்போல இளமையில் கல்வி தந்த இனிமையான கல்விச்சாலை இடிபாடுகளுடன் இடர்படுகிறதாம்! நானுதித்து தவழ்ந்த அந்த நினைவகலா இல்லமது தாய்மடியின்றும் தாவி அன்று தவழ்ந்திருந்த முற்றமது மழைபோல வானிலிருந்து மதியற்ற வீணர் தம்மால் வீசப்பட்ட குண்டுகளினால் வளமிழந்து வாடுகின்றதாம்! வாசமிக்க முல்லைய…

  15. அப்பால் தமிழ் இணையத்தளத்தில் வெளிவந்துள்ள கவிதை இது. படித்தேன். பிடித்திருந்தது. பகிர்கிறேன். எதிரிக்காயும் கவலைப்படும் உள்ளம் தமிழர் உள்ளம் என்பது கவிதையில் மீண்டும் வெளிப்படுகிறது. போர்த்துக்கீசரில் தொடங்கி, சிங்களவரிடம் வந்து... கவிஞர் மிக இயல்பாகவும், கவிநயத்தோடும் கவிதை வடித்து வைத்துள்ளார். இந்தக் கவிதையை வாசித்ததும் எனக்கு நினைவில் வந்த வரிகள்: இசையை மட்டும் நிறுத்தாதே எழுதியவர்: க.வாசுதேவன் 1. அமெலியா, போர்த்துக்கல் அழகியே, நீ சற்று அதிகமாகவே குடித்துவிட்டாய் இன்று இது எம் இறுதி இரவு சாளரத்தினூடே பார் இருள் அடர்த்தியாக இருக்கிறது வானெங்கும் அளவிற்கதிகமாகவே விரவிக் கிடந்தாலும் நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்? …

    • 5 replies
    • 1.8k views
  16. மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ஒளியின் நர்த்தனம்! மின்னொளியே! என்னரும் ஒளியே! உள்ளத்துக் கினிய ஒளியே! விழிகள் முத்தமிடும் ஒளியே! உலகை மூழ்க்கிடும் ஒளியே! என் கண்மணியே! நர்த்தனம் ஆடும் ஒளிக்கதிர்கள், வாழ்வின் வாலிபக் காலத்தில்! மோதி மீட்டும் ஒளிச் சிதறல், காதல் வீணையின் நாண்களை! மின்னலிடி திறக்கும் விண்ணை! மீறிக் கொண்டு ஏறி அடிக்கும் காற்று! என் கண்மணியே! வானத்தின் மின்னல் வெடிச்சிரிப்பு ஞாலத்துக்கும் அப்பால் தாவிச் செல்லும்! தமது பாய்மரத்தை விரித்துப் பட்டுப் பூச்சிகள் படகாய் மிதந்தேகும் ஒளிக் கடல் மீது! அல்லி மலர்களும், மல்லிகைப் பூக்களும் ஒளியலைகளின் சிகரத்தில்…

  17. Started by nunavilan,

    மழை - கிரிதரன் ஊரே வேண்டி நிற்க எனக்குமட்டும் மழை விருப்பமில்லை ஏனென்றா கேட்டாய் தோழி? காலடியில் நீரோடையும் சுவரெல்லாம் நீர்வீழ்ச்சியும் அடுப்பில் எரியும் நீரும் பார்த்திருக்கிறாயா நீ? வா வந்துபார் எம் குடிசையில்!! அடுக்களையும் அடுக்குமிடமும் ஒன்றாயிருக்க படுக்கையும் கூரையும் பகலில் கைகோர்க்கும் ஒற்றையறைக் குடிசைக்குள் பார்! கொஞ்சம் முயன்றால் எண்ணிவிடலாம் வின்மீண்களையும் எம்குடில் கூரைக்கண்களிடம் பலிக்காது உன் திறமை! ஓட்டைக்கு ஒன்றாய் இறங்கினாலும்போதும் காலடியில் ஓடையென்ன, ஓராழியே ஓடும் தோழி! ஒருநாள் இல்லை ஒவ்வொரு நாளும் பிழைத்திருக்க இருட்டுமுதல் இருட்டும்வரை ஓடவேணும் நாங்கள் ஓரிடம் முடங்கினால் உண்டியேது? கையூன்றிக் கர…

    • 3 replies
    • 1.2k views
  18. புறநானூற்றில் இருந்து தொடரும் தமிழ் இலக்கிய மரபில் புகழ்பூத்த சில கவிதைகளில் கவிஞர்களின் ஊடலும் கோபமும் பதிவாகியுள்ளது. சின்ன்ம் சிறுவயதில் சாதி ஒடுக்குதலுக்கு எதிரான வன்முறைப் போர்க் களத்தில் சந்தித்ததில் இருந்து கவிஞர் புதுவை இரத்தினதுரையும் நானும் ஆப்த நண்பர்கள். மாக்சிய கருத்தாடல்களோடும் கள்ளோடும் கவிதைகளோடும் கழிந்த நாட்கள் பல. 2006ம் ஆண்டின் பின்பகுதியில் வன்னியில் என்னுடைய அம்மா நோய்வாய்ப் பட்டிருந்தபோது நான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அம்மவை புதுவை சென்று பார்க்கவில்லையென கேழ்விப்பட்ட கோபத்தில் அம்மா கவிதையை எழுதினேன். அதனை புதுவையே தான் வெளியிடும் வெளிச்சம் 100 மலரில் வெளியிட்டது சிறப்பு. 1000 வருடங்கள் நிலைக்கவுள்ள எனது கவிதைகளுள் அ…

    • 7 replies
    • 1.9k views
  19. Started by kavi_ruban,

    காலக் கலண்டரில் ஒருநாள் கிழிக்கப்பட ஓராண்டு ஓடிப் போனது! வெளிநாட்டிலிருந்து வரும் அப்பாவை எதிர்பார்க்கும் குழந்தை போல நானும் புதுவருட எதிர்பார்புடன்... வழக்கப் போல "இந்த வருஷத்திலாவது செய்யவேண்டியவை" என ஒரு பட்டியல் ரெடி... கண்மடலில் காதல் எழுதி வருவாள் ஒரு வஞ்சி... நேர்த்திக்கடன் செய்தவைபோல மொட்டத்தலையோடு முணுமுணுக்கும் என்னூர் மரங்கள் துளிர்க்கும்... இரத்தத்தில் உடல் நனைந்து... வெட்க்கத்தில் முகம் மறைத்து... ஏக்கத்தில் வாடும் வெண்புறா... சிறகு கழுவி உலர்த்தும்... புண்பட்ட ஈழ மண்ணின் காயங்கள் ஆறும்! "Gun" இல் பூக்காது சமாதானம் "கண்"கள்…

  20. கண்ணே!... வருகின்றேன். உறங்காத கண்மணிக்கு உயிர் நண்பன் வரையும் மடல் கூதலுக்குள் ஒடுங்கும் குருவிக் கூட்டம்போல - அன்று சுய தேவைகளுக்குள் ஒடுங்கிப்போனது என் சுதந்திரவேட்கை காதலுக்குச் சாவு மணி அடித்துவிட்ட பெண்ணே! சாதலுக்கு அழைப்புமணி கட்டிவிட்டாய் கண்ணே! உறவுகள் தேடும் உணர்வுகளை ஒதுக்கிவிட்டு உரிமைப்போருக்கு உன்னையே கொடுத்தவளே! உறவுகளை வாழ வைக்க உயிர்காத்து வந்தவன்நான். என்னுள்ளம் இங்கு இன்று உறங்கவில்லைக் கண்மணியே! களங்களில் சதிராடிக் காலிழந்து விட்டாயாம், இருப்பினும் கரும்புலிக் களத்திற்குக் காலாகி நிற்கிறாயாம்! செவிப்புலன் மோதும் சேதிகள் கேட்டுத் தவிப்புகள் என்னிடம் தளம் சமைத்துக் கொண்டன. உள்ளத்தில் எழுந்த அலையில் …

  21. Started by sathiri,

    விஞ்ஞானம் விதவிதமாய் விந்தையாய் விதைக்கிறான் விதையில்லா விருட்சம் விதையில்லா விரும்பழம் விதையில்லா விரும்காய் விதையில்லா விரும்கறி விதையுள்ள மனிதன்

  22. Started by Kavallur Kanmani,

    கேள்வி ? நீ எந்த ஊர் என்று கேட்டனர் ஊரைச் சொன்னாள் ஊரில் எத்தனையாம் வட்டாரம் என்று கேட்டனர் இடத்தைச் சொன்னாள் எந்த வீதி என்று கேட்டனர் வழியைச் சொன்னாள் யார் மகள் என்று கேட்டனர் பெற்றவர் பெயர் சொன்னாள் அதன் பின் 'ஓ' 'நீ அந்த வாத்தியார் மகளா' என்று வாய் நிறையச் சிரித்தனர் அவளோ மனதுக்குள் அழுதாள் இத்தனை கேள்வி கேட்டது அவள் குலப் பெருமை அறிவதற்கு என்று புரிந்து கொண்டபோது அவளோடு அவர்களும் புலம் பெயர்க்கப் பட்டனர்.

  23. நங்கூரம் என்று ஒரு புது சஞ்சிகைக்கு எனது கவிதை கேட்டிருந்தார்கள். கனடா தமிழர் வாழ்வு குறித்த எனது எழுத்துக்களை ஆரம்பிபதற்க்கு ஒரு சந்தர்ப்பமாக் அந்த அழைப்பை எடுத்துக்கொண்டேன். கனடாவுக்கு மூன்று தடவைகள் சென்று ஒரு வருடங்களுக்கும் மேலாக ஒன்ராறியோவிலும் கியூபெக்கிலும் பயணம் செய்து கொஞ்சம் தங்கியிருந்து கற்றிருக்கிறேன். இரண்டாவது தடவை நான் சென்றிருந்தபோது "காங்" குழுக்களின் வன்முறைகள் உச்சதில் இருந்த காலம். குழு வன்முறை பற்றிய ஆய்வுகளிலும் விவாதங்களிலும் ஈடுபடக்கூடியதாக இருந்தது. முன்ன்றாவதுதடவை தேர்தல்காலம். கனேடிய அமைப்பை அறிந்துகொள்ளும் ஆவலில் ஜோன்காணிசுக்கும் மற்றும் பிளிண்டா ஸ்ரொனாச்சுக்கும் தேர்தல் வேலைகள் செய்தேன். இதற்க்குமேல் சொன்னால் என்னைத் தெரியாதவர்களுக்கு நம்பு…

    • 9 replies
    • 2.2k views
  24. தமிழ்க் கன்னி தோற்றம் எத்தனை எத்தனை இன்பன் கனவுகள்.... என்ன புதுமையடா! - அட புத்தம் புதுக்கிளி சோலைப் புறத்திலே போடும் ஒலியிவளோ? - வந்து கத்துங் குயிலின் இசையோ? கலைமயில் காட்டும் புதுக்கூத்தோ? - அட முத்தமிழ்க் கன்னியின் பேரெழிலை ஒரு மொழியில் உரைப்பதோடா? மன்னர் வளர்த்த புகழுடையாள்! இவள் மக்கள் உறவுடையாள்! - நல்ல செந்நெல் வளர்க்கும் உழவ ரிசையில் சிரிக்கும் அழகுடையாள்! - சிறு கன்னி வயதின் நடையுடையாள்! - உயர் காதல் வடிவுடையாள்! - தமிழ் என்னு மினிய பெயருடையாள்! - இவள் என்றும் உயிருடையாள்! முந்திப் பிறந்தவள் செந்தமி ழாயினும் மூப்பு வரவில்லையே! - மணச் சந்தனக் காட்டுப் பொதிகை மகளுக்குச் சாயல் கெடவில்லையே! - அட விந்தை மகளிவள் சிந்தும் …

    • 10 replies
    • 2.1k views
  25. Started by putthan,

    கம்பனிற்கு கவி படித்தார்கள் நம் கற்றோர்கள் ஆறுமுகதானுக்கும் கவி படித்தார்கள் நம் அறிஞர்கள் கற்பனா சக்திக்கு பாராட்டு தெரிவித்தார்கள் நம் கவிஞர்கள் அட நம் அன்டனின் அறிவை அண்டம் புகழ பாட அறிஞர்கள் இல்லையா ஆசியா புகழ்பாடும் அரிடி உண்ணும் அண்டத்தில்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.