கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நட்போடு வாழ்தல் வ.ஐ.ச.ஜெயபாலன் இன்னும் தொடுவானில் கையசைக்கும் மணக்கோலச் சூரியன். கீழே படுக்கையில் பொறுமை இழந்த பூமிப் பெண் வெண்முல்லைப்பூ தூவிய நீல மெத்தைவிரிப்பை உதைக்கிறாள். எப்படியும் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம். என் இரு கண்களிவை என்ற துடுப்புகளை கரையில் வீசிவிட்டுச் செல்கின்றான் மாலுமியும். வழித்துணையை போற்றினும் புணரினும் எப்படியும் ஒருநாள் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம். தோழி உடன் இருக்கிற இன்பங்களும் பிரிகிற துன்பங்களும் அடுக்கிய நினைவு நிகழ்வு நூலகம் அல்லவா நம் வாழ்வு. பறவைகளாக உதிர்ந்து உதிர்ந்து ஆர்ப்பரித்த வானம் இனி வீதியோரப் பசும் மரங்களுள் அடைந்துவிடும். என் தலைக்குமேல் இன்று நிலா முளைக்குமா …
-
- 6 replies
- 1.9k views
-
-
வள்ளி திருமணம். வள்ளி திருமணம் (பாலபாடம்) எங்கள் புராணக் கதைகள் பலவற்றுள் எங்கள் முன்னோர்களின் கிராமியக் கதைகள் பொதிந்துள்ளன என்று கருதுகிறேன். முருகன் வள்ளி காதல் எனக்கு பிடித்த கதை. பின்னர் வட இந்திதிய ஸ்கந்தரையும் முருகனையும் இணைத்தபோது தெய்வஞானி வருகிறதாக கருத்துள்ளது. ஸ்கந்தர் கிரேக்க மன்னன் அலக்ஸ்சாந்தர்தான் என்றும் சொல்கிறார்கள். வசதியின்மையால் இந்த இசை நாடகத்தை ஒலிவட்டடாக்கும் /மேடை ஏற்றும் வாசுகியின் முயற்ச்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை. நானனும் அக்கறைகாட்டவில்லை. ஏனேனில் அது எனது பணியல்ல. எனினும் தமிழ் நாட்டு மேடைகளில் பாடப் பட்டபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வள்ளி திருமணம் ஒலிவடிவம். http://tamil.sify.com/audio/fullstory.php?id=14213814 வள்ள…
-
- 9 replies
- 5k views
-
-
வாசனை --- வ.ஐ.ச.ஜெயபாலன் அதிலாந்திக் சமுத்திரத்தின்மேல் பறந்தபோது அவளது வாசனையை உணர்ந்தேன். நாங்கள் பிரிந்தபோது வசந்தத்தைக் கொண்டுவந்த பறவைகளும் ரொறன்ரொவை நீங்கின. ஒன்ராறியோ ஏரியின்மீது தெற்கு நோக்கிப் பறந்த வாத்துக்களுள் கண்ணீரை மறைத்தபடி நாம் விடைபெற்றோம். அந்த வசந்தத்தில் சினைப் பிடித்த சல்மன் மீன்கள் நீந்திய ஒன்ராறியோ ஏரிக்கரையின் எந்தச் செடிகளை விடவும் பூத்துப்போயும் வாசனையோடும் என் படகில் இருந்தாள். படகை விட்டு இறங்கும்போது ஈழத் தமிழர் தலைவிதி என்றாள். நாங்கள் மட்டக்களப்பின் வாவிக் கரைகளில் சந்தித்திருக்கலாமே என்று பெருமூச்செறிந்தாள். வானை வெண்பறவைகள் நிறைத்தன. ஒருகணம் போர் ஓய்ந்தது. வடமோடிக் கூத்தர்களி…
-
- 24 replies
- 4.6k views
-
-
ஏழையும் இறைவனும் வ.ஐ.ச.ஜெயபாலன் 1 தந்தன தான தனாதன தந்தன // தந்தன னானானா .........// தந்தன தான தனாதன தந்தன // தந்தன தானானா - தன // தந்தன தானா....னா // அகதிகளாகி உலக உருண்டையில் // அலைகிற செந்தமிழா // கபோதிகளாக இருளின் புதல்வராய் காணாமல் போவோமோ - நாம் காணாமல் போவோமோ. // ( தந்தன...... ) அகிலத்தில் எங்கள் இளைய தலைமுறை // அடியற்றுப் போகாமல் // புகழ்மிகும் எங்கள் கலைகளில் வேரோடி // பூத்திட வேண்டாமோ - நாம் // பூத்திட வேண்டாமோ // ( தந்தன .... ) பாட்டியின் பாட்டி பாட்டனின் பாட்டன் சொல்லிய கதை ஒன்றை நாட்டியம் ஆடி * ச…
-
- 14 replies
- 2.9k views
-
-
என்னடா நீ நாலுக்கு ஐந்தடி அறையில் கொண்டாட்டம் ஏதுவுமின்றி கொல்கின்றாய் நிமிடங்களை! வெளிநாடு வந்துமென்ன கண்டாய் இங்கே? ஒருநாடு உனக்கில்லாது குளிர்நாடு வந்து குமைகின்றாய் உள்ளே! காலைச் சூரியன் பார்த்ததுண்டா? கடலலை கால் நனைக்க மகிழ்ந்து சிரித்ததுண்டா? போடா... போ... சூரியனுக்கு முன்னெழுந்து நடுங்கும் குளிரில் வீதியில் நடைபயின்று வேலைக்குப் போனால் நடுநிசியில் வீடு திரும்பி மீண்டும் மறுநாள் அதே செக்குமாட்டு வாழ்க்கை...! கேட்டால் நாளை சந்தோசத்திற்கென்பாய்! உனை கேலியாய் பார்த்துச் சிரிக்கும் சமகாலத்தைக் கவனி... கண்களில் மின்னும் தங்கையின் கல்யாணக் கனவு... கஸ்டத்தில் ஆடும் குடும்பத்தின் வாழ்க…
-
- 5 replies
- 1.4k views
-
-
எங்கிருந்தோ எனை ஆழ்கின்ற என்னவளே... முன்னொருபோதும் இத்தனை சந்தோசம் அடைந்தவனில்லை நான்! பின்பு ஒருநாள் தேவதை நீ வருவாய் எனும் அசரீரி ஏதும் கேட்டதில்லை... ஆனாலும் உன் தரிசனம் கிடைத்தது... காதலெனும் புதுசுகம் மலர்ந்தது! நீ இல்லாத போது வலிக்கின்ற நெஞ்சம் அருகில் வந்தபின் கவனிப்பதே இல்லை பிரிவின் போது தான் உள்ளிருக்கும் காதல் விழித்துக் கொள்கிறது! கண்ணே கலங்காதே... நகருகின்ற நாட்களில் எம் வாழ்வு எங்கே என்று தேடாதே... நாட்களின் வரையறைக்குள் இல்லையடி நம் வாழ்வு! பூக்களைப் பார் மாலையில் மரணம் என்றாலும் காலையில் இதழ்விரித்துச் சிரிக்கின்ற பக்குவம் அதற்கு... …
-
- 4 replies
- 1.5k views
-
-
ஆயுள் கைதி அந்த வெள்ளைப் புடவைக்காரி என் வேதனைக்குச் சொந்தக்காரி சின்ன உதட்டுக்காரி சிலர் சிந்தனைக்கு உந்துசக்தி சொந்த மனங்களுக்குள் சந்தமிடும் சலங்கைக்காரி புள்ளித் தீ விழித்து புன்னகைக்கும் புகைபோக்கி கள்ளத்தை உள்ளே வைத்து களிப்பூட்டும் வித்தைக்காரி மெல்ல மேகமதில் மனம் மிதக்க வைக்கும் மாயக்காரி கொள்ளை சுகம் கொடுத்து கொள்ளையிடும் கொடுமைக்காரி பள்ளம் அருகே வைத்து பார்வை வீசும் பகட்டுக்காரி உள்ளம் இணைந்த பின்னும் உரிமை கொள்ளும் சக்களத்தி துள்ளும் இளமையையும் துரத்திவிடும் சாலக்காரி வெள்ளைப் பல்லின் வண்ணம் வித்தை மாற்றும் வேசக்காரி உள்ளும் புறமும் புற்று நோய் விதைக்கும் மோசக்காரி சுருள்சுருளாய் வளையமிட்டு சுகம் கொடுக்…
-
- 7 replies
- 2.3k views
-
-
நட்பாய் என்னில் அமர்ந்து காதலாய் என்னில் உறங்கி இன்று கானலான எனது நாட்குறிப்பின் நனைந்து போன பக்கங்கள் கண்ணீரில்.... நண்பனென்ற அடையாளத்தில் நீயும் அட்டகாசம் செய்கையில் .. அவ்வப்போது சிறகடிக்கும் உன் விழிகளில் அடிக்கடி காதல் அரங்கேறுவதை எட்டி நின்று ரசிக்கத்தான் எத்தனை ஆசை எனக்கு .. உன்விழிகளில் நான் கண்ட காதலை நீ,... என் மொழிகளில் கேட்க வேண்டுமென அடம்பிடித்தது இன்றும் என்னில் அழியாமல் இருக்கிறதே .... வசந்தங்களில் மட்டுமே .. பூக்கள் பூக்குமாம்.. ஆனால்.. நீ மட்டும் எப்படி பெண்ணே .. வேனலில் கூட கவிச்சோலையாய் ... எப்பொழுதும் என்னில் ?.... கேட்டதும் நீ தானே .. அன்று ஆற்றோ…
-
- 10 replies
- 2.3k views
-
-
வாராய் தைப்பாவாய்! வாராய் தைப்பாவாய்! வாராய்! வையம் தழைத்தோங்க வழிவகைகள் தனைக்கொண்டு வாராய் தைப்பாவாய்! வாராய்! உய்விக்கும் உழவர் குலம் உதயனுக்குப் படியளக்க, மையிட்ட விழியாளே!.. மலர்ந்து நீ வாராயோ! பெய்யும் மழை நின்று வெய்யோன் கரம் நீட்டக் கைகள் தனை அசைத்துக் கனிமயிலே! வாராயோ! செய்யுள் படித்திருக்கும் சேற்று வளர் நெல்லாகி சுந்தரமாய் நடமிட்டுச் செந்தமிழே! வாராயோ! பொய்மை ரதமேறிப் போரைப் பெரிதேவும் தூய்மை மறந்தோரைத் துடைத்தெறிய வாராயோ! தொய்யும் மெய்யரையும், துவளும் கொடியரையும் மெய்யாய் நிலை நிறுத்த மெல்லியளே வாராயோ! ஐயந்தனை நீக்கி அனைவர் வாழ்வினிற்கும் ஆதாரத் தோளாக ஆரணங்கே வாராயோ! தையலே!, தளிரே!, தங்கமணிக் கதிரே கேள்! வையம் …
-
- 4 replies
- 1.6k views
-
-
நகர்ந்து-போன-நாட்க்கள், ஓலிவடிவில்............. நட்பாய் என்னில் அமர்ந்து காதலாய் என்னில் உறங்கி இன்று கானலான எனது நாட்குறிப்பின் நனைந்து போன பக்கங்கள் கண்ணீரில்.... இனியும் மறக்கவில்லை .. உனை பார்த்த அந்த முதல் நாளை ... நல்ல நட்பு... நல்ல நண்பன் ... இப்படிதானே இறுமாப்போடு இருந்தேன் நானும்... நல்ல தோழியாய் நானும் உன்னில்... நடை பயில்கையில் ... நாளொரு நாடகம் பொழுதொரு கவிதையென . நீயும் என்னை சுற்றி.. பூமியும் நிலவை சுற்றுமென எனக்கும் காட்டி தந்தாயே ... உன்னோடு பேச ஆரம்பித்த பின்தானே . பூக்கள் உதிரும் ஓசை கூட கவிதையாய் தெரிந்தது என் கண்களுக்கு ... உனது தோழனின் காதலுக்கு …
-
- 12 replies
- 2.4k views
-
-
1997 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற பொங்கல் கவியரங்கில் பாடப்பட்ட கவிதை இது. பொருத்தப்பாடு கருதி இப்போது பதிகின்றேன். புது வருஷம் ஒன்று புஷ்பமாகுது - அதில் ஒரு நிமிஷம் கூட அர்த்தமாகுது ஆண்டு பல கண்டோம் - அதில் என்ன சுகம் கொண்டோம் வேண்டும் வரம் வேண்டி நின்றோம் '97 இன் உதயத்தையே தொழுது நின்றோம் தையே நீ கிழிந்த மனங்களை தையேன் வெய்யோன் கண்டு அஞ்சாதே அவனுன்னை வையான் பையவே வருவாய் நல்லதே தருவாய் மின்னலே உன்னைத் தொழுதேன் என்னுள்ளே புகுவாய் கோடிப் பிரகாசம் கூட்டுவாய் 'தை' என்ற தையலுக்கு தாலி கட்டவென்றே 'வெய்' என்ன வெய்யோனும் வேளை பார்த்து நின்றான் மை பூசும் தையலவள் சு…
-
- 1 reply
- 1.7k views
-
-
நான் - உறக்கம் நீ - கனவு உன் வரவுக்காகவே விடிய விடியத் தூங்குவேன் * என்னைத் தொலைக்காமல் உன்னைத் தேடினேன் என்பதில் பெருமை எனக்கு என்னை நான் தேடவே நீ கிடைத்தாய் என்பதில் பெருமை உனக்கு * என் சொந்தங்களில் நான்தான் முதல் கவிவாசகன் என்பதில் சிறியகவலை எனக்கு இதுவரை யாருமே உன்னை பார்த்து யார் எழுதியது என்று விசாரித்ததில்லையே * உன் தாயைப்போல் என் நேரமும் உன்னைக் கவனிக்க என்னால் முடியாமல் போனாலும் உன்னைக் காணத நேரங்களில் தாயாக நான் ஏங்கித் தவிப்பதுண்டு * உனக்காக காத்திருந்தால் என் கால்கள் வலிப்பதில்லை என் மனசு ஏறி நிற்பதால் என் தலைதான் வலிக்கும் -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 928 views
-
-
நடந்து சென்ற 2007 நன்மை பயக்கவில்லை நாடி வந்த 2008 ஏ நன்மை பல கொண்டு வா! அழுகையும் அவலமும் அனுதினம் கேட்ட செவிகளுக்கு சிரிப்பும் மகிழ்ச்சியும் தினம் தினம் கொண்டு வா... நடந்த போர்களில் போன உயிர்கள் உடைந்த மனங்களுடன் ஓடிய மக்கள் கிடைத்ததை உண்டு ஏப்பம் விட்ட பரிதாபங்கள் அனைத்தும் அலையில் அகப்பட்ட துரும்பாய் ஓடி மறைந்திட ஓர் புது வழி சமைத்து வா! தாய் ஓர் இடம் தனயன் ஓர் இடம் வாழ்ந்திடல் தகுமா? ஊர் ஓர் இடம் உற்றார் உறவினர் ஓர் இடம் - நான் மட்டும் இங்கு வாழ்தல் முறையோ? பெற்றமும் கன்றும் பிரிந்து வாழ்ந்தால் பாசமும் அன்பும் தான் விளைவதெங்கே? சொல் வீரராய் இருப்பார் செயல் வீர…
-
- 4 replies
- 1.4k views
-
-
மூக்கறையனிசம். முன்னுரை: தேசம் என்றான் ஒருவன் தேசியம் ஒரு கற்பிதம் என்றான் இன்னொருவன் தேவையில்லை இவையெல்லாம் மாயையென்றான் மூன்றாமவன் முதலாமவனுரை: என்னிடம் தேசமில்லை தேசம் எனக்குத் தேவையில்லாதிருந்தது இருப்பினும் தேசம் உள்ளவர்கள் என்னுரிமைகளை மறுத்தார்கள் என்னுரிமைகளை மீட்டெடுத்து உயிர் கொடுக்க எனக்குமோர் தேசம் தேவையென தங்களையறியாமலே எனக்கு அறிவுறுத்தினார்கள் தமக்கெனத் தேசமிருந்ததால் என்னை ஒடுக்கியவர்கள் தேசியத்தை அவர்கள் என்மீது திணித்தார்கள் தேசம் என்பது என் இருத்தலின் தேவை தேசம் இன்றி என்னால் தப்பி வாழமுடியாது ஆகையினால் நான் தேசம் வேண்டிப் போராடுகிறேன். யாருக்கெனவும் ஒரு தேசமின்றி உலகம் முழுவதும்…
-
- 4 replies
- 2.3k views
-
-
மலரும் ஆண்டே!!!... பறந்து போனதோ இல்லையோ பதற வைத்த ஆண்டு 2007 எத்தனையோ இளவல்களையும் புன்னகைப் பூவையும் தன்னுள் இழுத்துக்கொண்ட ஆண்டு! கண்களில் தமிழீழம் தாகம் மின்ன மின்ன ஒவ்வொரு ஆண்டையும் வரவேற்கின்றோம் நம்பிக்கை மாறாப் புன்னகையோடு!. எங்கள் வீட்டிலும் ஏட்டிலும் எழுதப்பட்ட சோக காவியங்களை எரியூட்டி எம்மை உயிர்ப்பிக்க செய்கின்றன போர்களமாடும் எம் உயிர் நாடிகள்! இழப்புகளின் எல்லை விரிந்துகொண்டே செல்லும் வேளையிலும் தன்னம்பிக்கை தளராத் தலைவனின் கொள்கைதான் நீர் வார்க்கிறது காயும் எங்கள் உயிர்வேர்களுக்கு!. மலரும் ஆண்டே! இரத்த வாடை நீக்கி இன்பம் கூட்டுவாயா?! அவல ஓலம் போக்கி அன்பு மொழிகள் மீட்டுவாயா?! உப்புக்கண்ணீர் துடைத்து சொந்தங்கள் சேர்ப்பாயா?! எங்…
-
- 4 replies
- 1.7k views
-
-
மாட்டுப்பொங்கல் வாய்க்கு ஒழுங்கா தீனி போடலை என்றாலும் வாய் நிறையா அம்மா என்று அழைக்கிறேனே உழைச்சு உழைச்சு ஓடா தேய்ஞ்சேனே எலும்பும் தோலுமா நிக்கிறேனே வருஷம் பூராவும் உழைக்கிற எனக்கு பொங்கலுக்கு மட்டும் என்னை கவனிச்சா போதுமா கதறி கதறி கண்ணிர் விடுற இந்த ஐந்தறிவுள்ள வாயில்லா ஜீவனை ஆறறிவுள்ள மனிதன் வருடம் பூரா கவனிக்க மாட்டானோ (இலங்கைப்பெண் கவிதைகளில் இருந்து)
-
- 1 reply
- 1.9k views
-
-
உன் பொங்கல் கவிதை தித்திப்பதற்காகவே சேர்த்தாயா உன் சக்கைரைப் பெயரை இப்படி இனிக்கிறதே * தினம் நீ முறித்து தரும் கரும்பின் சுவை அலுத்துவிட்டது எங்கே கரும்பொன்றை கடித்துவிட்டு தா உன் இதழ் தொட்ட சுவை அறிய வேண்டும் நான் * நீ கண் மூடி வழிபட வழிபட தன் நெற்றிக் கண்ணையும் திறந்து பிரகாசிக்கிறான் சூரியபகவான் * சூரியபகவானுக்காய் நீ போடும் நட்சத்திரக் கோலத்தோடு உன்னை பார்க்கும்போது நிலாக்கோலம்தான் ஞாபகம் வந்தது எனக்கு * எல்லாரும் கண்மூடி ரசித்துக் கொண்டிருந்தார்கள் நீ பாடிய தேவாரத்தை நான் மட்டும் கண்திறந்து கவனித்துக் கொண்டிருந்தேன் எப்போ பிரியும் உன் இமைகள் என்று -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 914 views
-
-
இலக்கிய நண்பர்களே, கவித்துவ ரசிகர்களே, தமிழ்கவிதையுலகம் ஓரு அடர் வனம். அதனூடே பயணிக்கும்கோது ஏற்படும் பரவசம் அற்புதமானது. 1970 ம் ஆண்டில் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் எழுதிய ஒரு சிறு கவிதை என் கவனத்தையீர்த்தது. இக்கவிதையை நான் எழுதியிருந்தால்... என ஒரு நப்பாசையும் உள்ளெழுந்தது. "அற்பங்கள்" எனும் தலைப்பையுடைய இக்கவிதையை மொழிபெயர்த்து என் பிரஞ்சு நண்பனிடம் கொடுத்தேன். வாசித்துவிட்டு அற்புதம் என்றான். ஆனந்தமாகவிருந்தது. வாசியுங்கள். வளமடைவோம். அன்புடன் வாசு. ----------------------------------------------------- அற்பங்கள். அற்ப நிகழ்வும் அர்த்தம் அற்றதும் என்னுடன் வருக. உதிரும் மணலும் உருவழியும் நீர்வரையும் எனது உவப்பு…
-
- 8 replies
- 2.1k views
-
-
மாவீரர் நினைவில் கவிஞர் காசி ஆனந்தன்.. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.2k views
-
-
குளிர் போக்கும் ஞாபகங்கள். பாலத்தின் கீழே படர்ந்தோடும் நீரேபோல் பாய்ந்தோடிப்போனதடி கண்ணம்மா காலத்தின் பயணம். கனியெனவே நானுரைத்தேன் நின் பெயரை இனியொருகால் வருமோடி அவ்வின்பம். வருடங்கள் பலவாகியென்விழிகள் உனைக்காணும் வழக்கிழந்து போனதுண்மை கண்ணம்மா. இருந்துமென்ன மனதுழலும் நினைவுகளை மறுத்தலொன்று ஆகுதலோ நடக்குதில்லை. ஒருத்திக்கே தினமும் அன்புரைத்தல் ஓரவஞ்சம் என அறிவேன் இருந்துமென்ன வேறு வழியில்லையடி கண்ணம்மா. வேதனைதான் மிஞ்சி இப்போ நிற்குதடி. கூடிவாழ்ந்தோம் உண்மையடி கண்ணம்மா கூடுடைந்து போனதுவும் குட்டை கலங்கியதும் பீடை வந்து நாம் பிரிந்தது போனதுவும் காடெரிந்து சாம்பரென ஆகியதாய்ப் போனதடி. தொலைத் தொடர்பில் கேட்டேனுன் குரலின்று …
-
- 6 replies
- 2.5k views
-
-
காமம் அரவணைத்துக் கொள்! அன்பே அரவணைத்துக் கொள்! புறம் மறைத்தாய் பொறுத்துக் கொண்டேன் அகம் மறைக்காதே ஆத்திரப்படுவேன் ஆசைப்படு! அதிகாரத்தோடு கேட்டுக்கொள் மோகப் படு! முடிந்தவரை முத்தமிட்டுக்கொள் உன் கரம் மட்டும் அறிந்த என் நெஞ்சத்தை உன் மார்பு கொண்டு பழுது பார் விதைத்துக் கொள்! விளைய விடு! மேய்ந்து கொள்! மீதம் வைக்கதே! அங்கம் அனைத்தும் அடக்கி விடு! ஆண்மை கொள்! பெண்ணே ஆண்மை கொள் என் ஆயுள் முழுவதும் உன் அங்கம் மட்டும் பணி செய்ய! மோகப் புரட்சி செய்! நீயே தொடங்கு! நீயே முடி! சேர்த்துக் கொள்! செப்பனிடு! படர்ந்து கொள்! பறக்க விடு! என் விரல் கொண்டு உன் உடல் உழுது கொள்! என் உதட்டு வரிகளி…
-
- 3 replies
- 2.7k views
-
-
கனவின் பொருளுரையீர். களிகொண்ட மனமொன்றுகூடும் அதிகாலையொன்றில் காட்டினிடையேகித் தனியனாய் நடைபயின்றேன். மனிதருடன் உரையாடல் சலித்து மரங்களுடன் உரையாடும் அவாவெழுந்து ஊர்தாண்டி உவகையுடன் தொலைந்தேன். பசுமைக்கும் பழுப்புக்கும் இடைப்பட்ட பருவமது பார்வைக்கு இதமழித்ததெனினும் காட்டினிலும் பதுங்கிக் கிடந்ததோர் ஊமைச்சோகம். எதிர்காலமெண்ணித் துயருற்றாற் போலான ஏக்கமெங்கும் மரங்களிலும் கிளைகளிலும் பற்றிப் படர்ந்தது போல் ஒரு தோற்றம். "ஆரூடக்காரனே, எம்மொழியைப் புரிந்தாய் நன்று. எம்முடனே நட்பிழைந்தாய் நன்று. வானமொழியிழக்கும் பருவமிது நம் வாழ்வும் என்னாகுமென்றெண்ணித் துயிலிழக்கும் காலமிது. தன்னந்தனியர்களாய் நின்றிருந்தோம் நாமிங்கு வந…
-
- 5 replies
- 1.7k views
-
-
கிறிஸ்மஸ் விடுமுறை வ.ஐ.ச.ஜெயபாலன் விடுமுறைத் தூக்கம் மதியப் பசியில் கலைய எழுந்தேன். வீடு அமைதியில். இன்று இரட்டிப்புக் கூலியென வேலைக்கு ஓடிவிட்டாள் மனைவி. வெளியே கொட்டுதே வெண்பனி. உள்ளே மின்னுதே என் பிள்ளைகள் கோலமிட்டு நிறுத்திய கிறிஸ்மஸ் மரம். முண்றிலில் கணகணப்பு ஆடைச் சிறுவர்கள் வெண்பனியில் வனைந்தனரே ஒரு மனிதனை. சிறுமி ஒருத்தி கறட் மூக்குவைத்துக் கைகொட்டிச் சிரிக்கிறாள். தேர்ந்த பொற்கொல்லனாய் கண் வாய் என்று கற்கள் பதிக்கிறான் என் பையன். ஒருநாள் உருகிவிடும் எனினும் ஆக்கி மழ்கிறாரே பனிமனிதனை. நாளை குப்பையில் எனினும் இன்றை ஒளிர வைக்குதே என் பிள்ளைகளின் கிறிஸ்மஸ் மரம். நீண்ட தூக்கமும், பெருஞ் சமையலும் ம…
-
- 9 replies
- 2.5k views
-
-
வாடி வதங்கி நின்றாலும் - எமக்கு வல்லரசுகள் எதிராகும். நலமா?....... என்றும்மை நான் கேட்கப் போவதில்லை, நாடு விட்டுப் போனவர்கள்... அனைவரும் நலமென்று.. நானறிவேன் கண்ணாளா! - இதை கேடு கெட்ட பிழைப்பென்று பழித்தவரும் நீங்கள்தான்! கொண்ட கொள்கை மாறி - மனம் களிப்பவரும் நீங்கள்தான்! அன்று... இலட்சியங்கள் பேசி - எனை இலாவகமாகக் காதலித்து - இன்று அந்நிய புலத்தில்.... ஏன் அவலட்சணம் ஆகிவிட்டீர்? சாகச வீரனென்று - உம் சந்ததியே உமைச் சொல்லும்! ஆதலால்தானே - உம்மில் ஆசைகள் கோடி வைத்தேன் - இன்று சாகரம் கடந்து சென்று சா...தப்பும் கோழைத்தனம்!?....... நான்... ஆதி நாளில் பார்த்ததில்லை அது எப்படி வந்ததும்மில்? அன்பே! வாகை …
-
- 13 replies
- 3k views
-
-
விழித்துக்கொண்ட முல்லை. பற்றிப் படர்ந்தேறக் கொம்பற்ற வயலோரம் முளைத்ததனால் முல்லை தனக்கு வெறும் புல்லே போதுமெனத் தானும் படர்ந்திருந்த வேளையில்தான் அவ்வழியால் பாரிமன்னன் பவனிவந்தான் பரிவாரம் சூழத் தேரேறிப் பவனிவந்த வேந்தன் பாதையோரம் கொம்பற்றுத் துவண்ட கொடிகண்டான்;. என்னேயிது நீதியிங்கு ஏற்றம் பெறக்கொம்பிலா வாழ்வுற்தோ முல்லைக்கென நெகிழ்ந்தான். பின் தேரிறங்கி முல்லையிடம் சென்று 'சின்னஞ் சிறு கொடியே, உன் விதி கண்டு மனம் நொந்தேன் யான்" என உரைத்தான். "என்னேயுன் பெருமை மன்னா, சின்னஞ்சிறு கொடிக்காய் நீ உளம் நெகிழ்ந்தாய் கண்டேன் போதுமதுவெனக்குப்போதும் புற்களுடன் வாழ்வேன் இனியான் போய் வருக" என நன்றியுடன் நயம்படச் செப்பியது செடி…
-
- 4 replies
- 1.4k views
-