Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by Paranee,

    சிங்களக்கோட்டையில் சீறியே பாய்ந்த புலிவீரர்களிற்கு காணிக்கையாக. . . . ஏறுது ஏறுது புலிக்கொடி பார் ஏற்றிடுவோர் எம் மறவர் பார் வெற்றியை முத்தமிட்ட வீரர் மாற்றான் பகைமுடித்த தோழர் தோற்காமல் நின்ற தமிழர் கூற்றவனை கொன்றழித்து காற்றிலே கரைந்திட்ட புலிவீரர் அன்று உற்றார் உறவினரை இழந்தோம் வேற்று மனிதராய் வாழ்ந்தோம் - அந்த கற்கால வாழ்க்கை கழிந்ததடா - கண்முன்னே பொற்கால வாசல் தோன்றுதடா வலிகள் தாண்டி வலிமை தாங்கி வழிகள் பல கண்டோம் எம் கதியை எண்ணி கலங்கியதில்லை - தினம் விதியை வென்று நின்றோம் பொறுமை போர்த்தி போர்க்களம் வென்று புதுமைகள் பல செய்தோம் தலைவன் வழியிலே தடைகள் பலவுடைத்து தமிழனாய் தலைநிமிர்ந்தோம் அன்னியசக்தியின்…

    • 6 replies
    • 1.7k views
  2. விடுதலை வேள்வியில் விறகானாய்! வீரர்களின் சுடர்களுடன் இணையானாய்! வெந்திட்ட புண்ணுக்குள் வேல்கொண்டு குத்திவிட்டார் தந்திரமாய்ப் பேச்சுவார்த்தை புதைகுழிக்குள் தள்ளிவிட்டார் விந்தையல்ல நீதிகொல்லல் எங்களுக்கே என்று காட்ட இயந்திரக் கழுகுகொண்டு குண்டுவீசிக் கொன்று விட்டார்! ஆயுதங்கள் போரில்நிற்க அறிவுடனே பேசி நின்று ஆயிரமாய்ப் பொய்யுரைப்போர் நேரெதிர்க்கும் ஆற்றல்தன்னைத் தகர்ப்பதற்கு ஆள்அழித்தல் என்றுநிற்கும் கோழைகளால் அகம்அழவே அகிலமெங்கும் தமிழரினம் கலங்குதம்மா! சத்தியத்தைத் தலைநிமிரற் கிடமளியோம் என்பவர்க்கே சுற்றிநின்று துணைபுரிவோர் இதற்கும்கூடத் தலையசைப்பார் பற்றிநின்று சுதந்திரத்தை மீட்கநிற்போர் வழிமறுப்பார் பற்றுகின்ற தீபெருக மட்டுமன்றி என்னச…

    • 0 replies
    • 1.5k views
  3. Started by இளைஞன்,

    இதன் கேள்வி வடிவிலான உள்ளடக்கம் எனக்குப் பிடித்திருந்தது. அதனால் ஏனையவர்களும் படித்து ரசிக்க இங்கு இணைக்கிறேன். அனுராதபுரத்தில் உயிர்க்கொடை தந்து உலகதிரத் தமிழர் தலைநிமிரச் செய்த தற்கொடை வீரர்களின் தாக்கத்தில் உதித்ததாய் இருக்கலாம் இக்கவிதை... என்றே நான் நினைக்கிறேன். முட்கள் அ.பாலமனோகரன் முட்கள் எப்போது தோன்றின? முதலில் தோன்றியவை முட்கள்தானா? இல்லையென்றுதான் எனக்குத் தோன்றுகின்றது. ஏதோ ஒன்றைப் பாதுகாக்க வேண்டியே முட்கள் முதலில் தோன்றியிருக்க வேண்டும். தன்னைப் பாதுகாக்க இயலாத உயிர்க் கலம் ஒன்று தான் தாக்கப்படுகையில் ஏதோவோர் வகையில் எதிர்க்கவே செய்யும். இறக்குமட்டிலும் இந்த எதிர்ப்பு இருக்கவே செய்யும். இந்த எதிர் முனைப்பு …

  4. பாயுது வேங்கை பதறுது...சிங்களம்.. பாரடா தமிழா பாரடா.. இந்த சரித்திர வெற்றிக்கு.. உதிரங்கள் ஊற்றிய மறவனைப் பாடடா.. வெகுண்டது வேங்கை.. வெடிக்கின்றபோது... தமிழன் வெற்றிக்குத் தடைகள் ஏது.. சீரிய தவைவன்... கூறிய பாதையில்.. போரிடும்..புலிகளைப் பாடு... தமிழனின் மானத்தை காத்திட உயிர் தந்த வித்துடல்.. ஆடையைக் கலைந்தாய்.. தமிழ் விழிகள் சிந்தும்.. கண்ணீர் மூடும்... அம்மணமேலுடை ஆகும்.. உணவைப் பறித்தாய்.. உயிர்கள் தவிக்க.. உயிரைப் பறித்தாய்.. உன் மத்தம் சிரிக்க.. இதுதான் கரிகாலன் அடி.. இப்போ சிரிடா சிரி... இருக்குது..பின்னூட்டமுனக்கு... இது வெறும்.. முன்னோட்டக் கணக்கு.. எத்தனை உயிர்கள் போனாலும்.. சத்திய வேள்வியில் வ…

  5. மெதுவாகப் பேசலாம்... அரசியல் பேசினால்.. அடுத்த அறைச்சுவரும் கேட்குமாம்..ஏன்.. நமக்கு வம்பு... மௌனிகளாயிருப்போம்... யாரங்கே.. பேசவே பயப்படும் பேடிகள்.. இவர்கள்.. என்ற உண்மைகளை சத்தமாய்.. உள்ளே உறைப்பது.. வேறென்ன் செய்ய.. சத்தமாய் பேசிவிட்டால்.. கூட இருப்பவன்தான்.. குழி பறிக்கிறான் என்பது.. மரணத்தருவாயில் மனதறியும்.. தமிழன் காப்பியங்களிலும்.. இலக்கியங்களிலும்தான்.. உயர்வாகப் பேசப்பட்டிருக்கிறான்.. இன்றோ இழிநிலை நோக்கியல்லவா நடக்கிறான்... ஒப்பற்ற வீரன்.. தலைவனாய்க் கிடைத்தும்.. உருப்படத் தெரியாமல்.. கஞ்சாக்கும் காசுக்கும்.. சோரம் போன துரோகிகள் பாதி பதவிக்கும் பட்டத்திற்கும் பல்லிளித்த பாவிகள் பாதி.. …

  6. Started by விகடகவி,

    அமாவாசை இரவுகளில்.. அவளோடு புறப்பட்டால்.. நிலவை மறந்து விடுகிறேன்... பனித்துளிகள் படர்வதனால்... நான் ஏக்கப்பட்டும் பூக்களைப் பறிப்பதில்லை.. சலங்கைகள்.. அடிபட்டுக்கொள்வதை.. தலையாட்டி ரசிப்பவன்.. விமர்சகன்.. மழைத்துளி விழுந்து வழிந்து.. ஓடாவிட்டால்.... நதிகள் பாவம்.. இரவில் மட்டும் பெருமையடிக்கும்.. மின்மினிப்பூச்சிகளுக்கு.. அருந்ததி..நகர்வது.. தெரிவதில்லை.. என் திருவிழா நாட்கள்.. என் செல்வத்தைக் கரைப்பதில்லை.. இதயத்தை.. தந்தை சொன்னது போல்.. நண்பர்கள்..துன்பத்தில்.. உதவிட வரவில்லை உயிர் விட வந்தார்கள்.. கசக்கிய காகிதத்தைப் பார்த்து பேனா சிரிக்கிறது.. அதன்..மை முடிவது தெரியாமல்.

  7. மனிதா..மனிதா... கலைக்கு விசிறியாய் இரு... "தல"க்கு விசிறியாய்.. இராதே... திரைக்கு விசிறியாய் இரு.. விஜய்க்கு விசிறியாய் இராதே.. தமிழ்த்தாய் செத்துக்கொண்டிருக்கிறாள்.. அவளுக்கென இல்லையாம் ஊர் சுற்றும்.. உல்லாசப்பிறவிகளுக்கு ஊரெல்லாம் மன்றம். தமிழன் பட்டினியில் இறப்பெதெதிர்த்து.. தீக்குளிக்க ஆளில்லை.. தலைவனென்றும் கட்சியென்றும்.. தன்னிலை மறந்து தீக்குளிக்கிறான்.. அண்ணன் தம்பியாயிருந்தும்.. யாரோ நடிகனுக்காய்.. வீட்டினுள்ளே.. அடித்துக்கொண்டு..தலையுடைத்து

  8. பணத்திற்காய் சீதனச் சந்தையில் உனது வாழ்க்கையை பொருளுக்காய் விற்கும் ஆண் ஜாதியே- நாம் உனக்காய் குரல் கொடுக்கவா? இந்த கோழைகளுக்காக குரல் கொடுப்போம் சீதனம் என்னும் கொடிய அரக்கனை கொன்றொழித்திடுவோம்... பெண்ணே விழித்தெழு! பேரம் பேசி தனது வாழ்க்கையை விற்கும் நிலையில் இந்த ஆண்மகனா? அவமானம்..... அவமானம்.... கேவலம் கேவலம் உன் நிலை கேவலம் பணத்திற்காய் விலைபோகிறவள் விபச்சாரி பணத்திற்காய் வாழ்க்கையை விற்பவன் நீ மட்டும் எந்த வர்க்கம்? நீங்கள் விலைக்கு வாங்கி விளையாட நாங்கள் பொம்மைகள் அல்ல -நாங்கள் மானமுள்ள, உணர்வுகொண்ட மாதர்கள் பணம் செலுத்தி,பல் இளித்து பஞ்சனை நாங்கள் தேடவில்லை மானம் உள்ள ,எங்களுக்கேற்ற மகராஜனைத் தேடுகின்றோம்.…

  9. படத்தைப் பெரிதாக்கி வாசிப்பதற்கு : http://www.kathala.net/gallery/albums/user...lood-Flower.jpg படம் சிறிதாக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  10. Started by இலக்கியன்,

    ஓவியங்கள் செந்-தமிழ் ஓலைக்காவியங்கள் உள்ளத்து உணர்வுகளின் உன்னதக் கோலங்கள் கண்கண்ட கவிதைகளை கவர்ந்திடும் வண்ணமிட்டு கலை நயம் கலந்து காட்சியாக விரியவிடும் எண்ணற்ற சிந்தனையை-மன எண்ணத்தில் தீட்டி விடும் மாசற்ற புதுமை மொழி மண்ணுலகில் மகிமை வரி பட்டறிந்த பண்டிதனும் பாரறியா பாமரனும் பார்த்து அறியும்-இனிய பன்னாட்டு தொடர்பு மொழி எதுகை மோனையில்லை எடுகோள் எதுவுமில்லை தூரிகை தூவிவிடும் தூய்மையான கவிதை

  11. புலி மௌனம் கலைத்த பூகம்பச் செய்தி காலப் பெரு வெளியில் - ஈழக் கதை எழுதும் இளைய தேவரீரே! தமிழர் வாழ்வெடுக்கத் திறனாயும் பணியதனை தரணிக்கு விட்டுச் சென்ற தமிழ்மானப் புதல்வர்களே! வரலாறு எழுதும் வண்டமிழ்க் கோல்களுக்கு உரமூறும் கரு தந்த காலக் கருவூலங்களே! கருவூறும் உயிரணுவும், காடேகும் திருவுருவும், இருப்புக்கு மத்தியிலே இயங்கும் எவ்வுயிரும் சிரம் தாழ்த்தி உமைத் தொழுதெழும். நீங்கள் இலக்கெடுத்துப் போனகதை இதயத்தில் வலித்திடினும், இனவாத இதயத்தில் அறைந்த சேதி இனிக்கிறது. வெள்ளரசின் அடியினிலே வேதாளக் கழுத்தறுத்து, விம்மியழும் அன்னையவள் விழிநீரைத் துடைத்து விட்டீர். இது இனங்காக்கும் போர், ஈழ நிலங்காக்கும், மனித வளங்காக்குமெனச் சிங…

  12. Started by இளைஞன்,

    மலர்களின் அழகில் களித்திருப்போம் வேர்களின் வலிகள் புரிவதில்லை மரங்களின் நிழலில் குளித்திருப்போம் வேர்களின் தியாகம் புரிவதில்லை மண்ணுக்குள்ளே அவை புதைந்திருக்கும் எங்களின் கண்ணுக்குத் தெரிவதில்லை - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ஒவ்வொரு முறையும் உங்கள் மரணத்தின் போது நான் மெளனித்துப் போகிறேன் கூனிக் குறுகித் தலை குனிந்து!

  13. Started by yaal_ahaththiyan,

    அவ்வளவு ஆசையா உனக்கு என் மீது கோவத்தில் நீ சட்டி பானையோடு சண்டைபிடித்தும் இவ்வளவு ருசியா சமைத்திருக்கிறாய் * அமாவாசை விரதத்தில் நீ "கா கா கா" என கரைந்து கொண்டு வெளியே வருகிறாய் உன்னைக் கண்டதும் காகங்கள் குழம்பிவிட்டது பெளர்ணமி விரதமோ என்று * இந்த மழை உடனே நின்றுவிடும் பார் எப்படித் தெரியும் நீதான் குடை விரித்துவிட்டாயே * என் கவிதை படிப்பவர்கள் எல்லாரும் என் காதலி கொடுத்து வைத்தவள் என்கிறார்கள் அதற்காகவாவது உன்னைக் காதலிக்க வேண்டும் எங்கே நீ... * என் கண்களுக்கு இமைக்க மட்டும்தான் தெரியும் உன் கண்களில் ஒன்றைக்கொடு உன்னை மாதிரியே உன்னை நான் இமைக்காது பார்க்க வேண்டும் -யாழ்_அகத்…

    • 4 replies
    • 1.2k views
  14. அவசரமாய் நான் வீதி கடக்கையிலும் நீயே நினைவுக்கு வருகிறாய் எப்போதோ உன்னோடு வீதி கடக்கையில் நீ குட்டுவைத்து குழந்தை போல் எனை கூட்டிச் சென்றாயே * என்னை எழுத வைப்பதற்காகவே கவிதையாய் படுத்துக் கிடப்பாய் எனக்கு முன் நீ * நீ எழுதிய முதல் கவிதை நான் ஒவ்வொரு பத்திரிகை குப்பைத் தொட்டியிலும் கிழிந்து கிடக்கிறேன் * உன்னை விட தொட்டால் சிணுங்கி பரவாயில்லை நீ பேசினாலே சிணுங்கிறாயே * பெண்களுடன் சுற்றி இருக்கீங்களா என்று கேக்கிறாய் இல்லையென்றால் நீ எனக்கு தேவதையாய் தெரிந்திருக்கமாட்டாய் -யாழ்_அகத்தியன்

    • 6 replies
    • 1.5k views
  15. Started by yaal_ahaththiyan,

    நீ வரும்வரை என்னை எவரும் கவனிப்பதில்லை உன்னோடு இருக்கையில் கவனிக்காததென்று எதுவும் இல்லை அதற்காகவாவது உன்னோடு கூட வரலாம் நான் * உன்னோடு பார்க்கவேண்டிய உலக அதிசயங்கள் எல்லாமே எங்கே என் அதிசயம் என்று கேக்கிறது அதற்கு எப்படித் தெரியும் உன்னை நான் சுற்றிச் சுற்றி ரசிப்பது * தினம் நீ சாய்ந்து தூங்கும் என் தோல்களை தடவித் தடவித்தான் என்னையே நான் தூங்க வைக்கிறேன் * உன்னை நிற்க வைத்து யார் புகைப்படம் எடுத்தது அதை பார்க்கும் போதெல்லாம் எனக்கல்லவா கால் வலிக்கிறது * நீங்க தூங்கவே மாட்டிங்களா என்கிறாய் நான் தூங்கினால் என்னை உன் மடியில் இருந்து தூக்கிவிடுவாயே -யாழ்_அகத்தியன்

    • 2 replies
    • 949 views
  16. நீ கேட்கும் போதெல்லாம் என் கவிதைகளை தந்துகொண்டே இருக்கிறேன் ஏதாவது ஒரு கவிதையை படித்துவிட்டாவது என்னைக் கேட்பாய் என்ற நம்பிக்கையில் * தினமும் நீ என்னை பார்த்தும் பாராமல் போகிறாய் அதையும் பார்ப்பம் பாரமல் பார்க்காம எத்தனை மட்டும் பார்க்கப் போறாயென்று * சொன்னா கேக்க மாட்டிங்களா என்றதை கேக்கிறதற்காகவே தினமும் மழையில் நனைந்து வரலாம் * ஒரு இரவாவது நீ தூங்குவதை தூங்காமல் பார்க்க வேண்டும் என்ற என் ஆசை இன்னும் நிறைவேறவில்லை ம்ம் கொடுத்து வைத்த கணவன் நான் கொடுத்து வைக்கப் போகிற அம்மா நீ * நான் தொடர்ந்தும் உனக்காகவே கவிதை எழுத வேண்டும் என்பதில் எவ்வளவு ஆசை உனக்கு என் கவிதையை படித்துவிட்டு யாரு எழுதிய கிறுக்கலுக்கு …

  17. கடற்கரையில் நாம் நடந்த சுவடுகளை கடலலை அழிக்கும்! கண்ணே நீ என் இதயத்தில் நடந்த சுவடுகளை யாரழிப்பார்? *********** மனசுக்குள் மத்தாப்புக் கொளுத்தியவள்... மனசையே கொளுத்துவாள் என்று யார் அறிவார்? *********** வீணை அங்கே விரல்கள் இங்கே இராகத்தை மட்டும் ஏனடி திருடிக் கொண்டாய்? *********** என் இதயச் சுவற்றில் உன் ஞாபகச் சிலுவைகள்! எப்போதடி உயிர்த்தெழும்?

  18. Started by kavi_ruban,

    கண் மூடி உள் நினைக்க படம் போல உன் நினைவு விரியும்! தடம் மாறி பல மனம் மாறி அலைந்த என்னை உன்னோடு அணைத்துக் கொண்டாய் உள்ளத்தில் அமிர்தத்தை தெளித்துச் சென்றாய் வனம் போல் இந்த மனம் பல மிருகங்கள் அதில் நடமாடும் உன்னிரு கரம் பட்டதாலே அவை சாந்தமாகிச் சாதுக்களான விந்தையென்ன? உருவத்து அழகில் மயங்குவது சில மாதத்தில் முடியும் உள்ளத்து அழகில் வாழ்நாள் உள்ளளவும் மயங்கலாம் என்று உன்னாலே அறிந்தேன்! நில்லாத உயிர் நிலைக்காத வாழ்க்கை எல்லாமே புரிகிறது நீயில்லாத வாழ்வை நினைக்க நினைவெல்லாம் சுடுகிறது! திட்டுவது போல் பாசாங்கு செய்வதும் சற்றே என் முகம் வாடினால் 'என்னடா' என்றென்னைத் தழுவி அணைப்…

    • 9 replies
    • 1.6k views
  19. காதலை தருகின்றேன் இரண்டாண்டுகளுக்கு முன் இதயத்தில் உதித்த காதலை இன்று என்னிடம் சொல்லிய இளங்காளையே நீ நலமா? இன்று எனை சந்தித்த போது உன் கைவிரல்கள் நடுங்கியதேனோ பேச்சுக்கள் தடுமாறியதுமேனோ வியர்வைத்துளிகள் பூத்ததுமேனோ "எந்தன் குரல் கேட்டு உந்தன் பேச்சதனை மறந்தனையோ என் கண்களைப் பார்த்து உன் தூக்கத்தையும் தொலைத்தனையோ" ஓ...! இதைச் சொல்லத்தானோ இவ்வளவு தயக்கங்களா இருப்பினும்... நீ சொல்லிய காதலை உடன் ஏற்க மறுத்த என்னில் கோவங்கள் சிறிதுமின்றி சோகமான சிரிப்போடு நாளை என் பிறந்ததினம் நீ கட்டாயம் வரணும் என என் தலையில் கைவைத்து சத்தியம் செய்து சென்றவனே உன் பிறந்தநாள் பரிசாக என் காதலை உன்னிடம் தருகின்றேன்

  20. காதல் மலர்ந்து இன்பம் கனிந்து கவிதை தவழ்கின்ற இந்நேரம் என்னை சேரமுடியாமல் பிரிந்தாய் -நீ என்ன பாவம் செய்தாய்? நீ சுவாசித்த மந்திரத்தை தினம் கேட்க கோவிலுக்கு சென்றாய் இன்று பூசைகளில் நிம்மதியை நாடுகின்றாய் அப்படி நீ என்ன பாவம் செய்தாய்? இலவசமாக கூட குடிபூற மறக்கும் உன் உள்ளத்தில் தீபத்தை கையில் ஏந்தியபடி உன் வாசல் வந்தவளை- நீ இழந்ததேன்?? தாய்க்கு தாயாக தோழிக்கு தோழியாக காதலிக்கு காதலியாக அவள் மடியில் தவழ்ந்த உன் வாழ்க்கை இன்று கேள்விக் குறியானதேன்??! ஒலிவடிவில்....

  21. 7ம் ஆண்டு வகுப்பறை மேசையில் முதல் முதலாக கிறுக்க ஆரம்பித்தேன் இன்றும் கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன் கண்ணில்படும் கரும்பலகையிலும் விளம்பர சுவர்களிலும் பேருந்து இருக்கையிலும் பிடித்த மரங்களிலும் ரசித்த உலக அதிசயங்களிலும் கிடைக்கும் வெற்றுக் காகிதங்களிலும் உன் பெயரோடு என் பெயரை எனினும் இன்றுவரை என் பெயர் கிறுக்கலாகத்தான் தெரிகிறது நான் கவிஞனான பிறகும் ஆனாலும் உன் பெயரே எனக்கு பிடித்த கவிதையாகவே இன்றும் இருக்கிறது -யாழ்_அகத்தியன்

  22. தும்மலுக்கு மருந்தெடுக்க போனவன் குண்டுமழையில் நனைந்தபடி வீடு வந்து சேர்ந்தான் பிணமாக * கொள்ளி வைக்க யாரும் மிஞ்சவில்லை ஒரே குண்டில் குடும்பமே பலி * குழந்தையில் வீட்டில் ஊர்ந்து பழகியது உதவி செய்கிறது குண்டுவிமானம் வருகையில் தெருக்களில் ஊர * பத்து மாதம் சுமந்தவளும் இறந்து போகிறாள் பதினைந்து நிமிடம் சுமக்க முடியாத விமானத்தின் குண்டுகளால் * எனக்கும் யோதிடம் தெரியும் என் சாவும் குண்டுகளால்தான் எந்த குண்டால் என்பதைத்தான் கணிக்கமுடியவில்லை * குண்டுகளை தயாரிப்பவர்களே நீங்கள் அக்கா,அண்ணா,தம்பி, தங்கையோடு பிறந்ததில்லையா...? -யாழ்_அகத்தியன்

  23. ஈழத்து இளம் பாடகன் சுஜித்ஜீ ராப் இசையில் வழங்கும் புத்தம் புதுப்பாடலான விடுதலை 2007 பாடலை உங்களோடு பகிர்கின்றேன். நம் ஈழத்து நிலையினை வரிகளில் தோய்த்து இன்றைய காலகட்டத்து இளம் நெஞ்சங்களுக்கு வழங்கும் துள்ளிசைப் பகிர்வு இது. listen to the song at ; http://radiospathy.blogspot.com/2007/10/2007.html http://uk.youtube.com/watch?v=JBD8qHHm_TI வாழ்வும் வரும் சாவும்; வரும் ஏதோ ஒருநாள் விடிவும் வரும் கொஞ்சம் பொறு ஓய்ந்தே இரு நாளைய நாளில் வரமாய் வரும் வீதியிலே நடக்கிறேன் விதியை நினைக்கிறேன் தமிழனாய்ப் பிறந்து நான் தினமும் தவிக்கிறேன் எங்கள் நாட்டு விடுதலை ஆனதோ விடுகதை எங்கள் மண்ணில் ஏது இல்லை இருந்தும் ஏதும் இல்லை தினம் தினம் உயிர்க்கொலை உயிர்க…

    • 6 replies
    • 1.6k views
  24. உன்னோடு ஓடிக்கொண்டிருந்த நதியாக நான் இருந்த போது ஒவ்வொன்றும் புதிதாய் இருந்தது ஏனோ குளமாக தேங்கிவிட்டேன் ஆனாலும் என்னைச் சுற்றி உன் நினைவென்னும் குளக்கட்டுகளே உன்னோடு ஓடியதும் நானே உன்னோடு உருண்டதும் நானே உன்னோடு விழுந்ததும் நானே உன்னோடு கலந்ததும் நானே ஆனாலும் நீ நானில்லாமலே சேர்ந்துவிட்டாய் வாழ்க்கை எனும் கடலில் நான்தான் உன்னை நினைத்தே தேங்விட்டேன் குளமாய் இருந்தாலும் யார் வீட்டு குழம்பிலாவது நீயும் ஒரு நாள் உப்பாகலாம் நானும் ஒரு நாள் நீராகலாம் அப்போதாவது உண்மை சொல்வாயா..? ஏன் என்னை விட்டு சென்றாயென்று -யாழ்_அகத்தியன்

    • 2 replies
    • 1k views
  25. என்ன உலகமிது..ஐயா என்ன உலகமிது... பசியினில் மனிதன் பரிதவித்தே.. தூக்கிலிட்டு..வாழ்விழந்து போகிறதே... பார்க்க.. கேட்க மனிதத்தின் உதவியின்றி.. ஒரு சமுதாயம்.. உணவின்றி சாகிறதே.. உணவின் மேலே.. உருளுது ஒரு உலகம்.. உணவிற்காக உயிரைக் கரைத்து அலையுது ஒரு உலகம்.. பசி பசி என்றே அழுகின்ற குழந்தையை பார்த்திட மறுத்தே.. உயிரைத்துறக்கிறான் ஒரு தந்தை.. பசியில்லை என்றே.. மறுக்கின்ற குழந்தைக்கு பலவித உணவாய்ப் படைக்கின்றான் ஒரு தந்தை.. ஏற்றமும் இறக்கமும்.. ஏனிந்த உலகில்-நல் மாற்றங்கள் வருமோ மனிதனின் வாழ்வில் உனக்கான உணவை.. அளவாக அருந்து.. பிறர்க்காக உனது.. உணவினைப்பகிர்ந்து ஏழைக்கு உதவ நாளைக்கு என்றேன்.. இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.