Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. என் செல்லமே செல்லமாக நான் வளர்த்த நாய்க்குட்டியே சொல்லாமல் எங்கு சென்றாய் இன்று நீ கடுங்கோவங்கொண்டு பிறர் உனை கடி நாய் என அழைத்த போதிலும் ரொம்ப பாசத்தோடு நான் உனை ரொம்மி என நாமமிட்டு அழைக்கையில் செல்லமாக வாலை ஆட்டி வேகமாக வந்து மெல்ல என் காலடியில் இருக்கும் என்குட்டியே காலை மாலை என தவறாமல் பாலை நான் தட்டில் ஊற்றுகையில் நன்றியோடு என நோக்கி நாவால் வருடும் நான் வளர்த்த செல்ல நாய்க்குட்டியே எங்கு நான் வெளியில் சென்றிடினும் என் வழித்துணையாக வந்த உனை எவர் கடத்தி சென்றனர் இன்று எப்படி இருக்கின்றாய் அங்கு நீ நான் உறங்கிய போதில் என்னருகில் விழித்திருந்து காவல் செய்வாயே நீ இன்று இல்லாத இந்த நாட்களில் விழிகள் …

    • 19 replies
    • 3.4k views
  2. ஞாலம் தமிழை எவண் வைத்தாலும், ஞாயம் என்னவிதி செய்தாலும், காலம் என்னவிடை சொன்னாலும், கனிய வேண்டியது தமிழீழம்! தமிழன் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும், தாங்கொணாத் துயரம் சூழ்ந்தாலும், குமுறி அழுதபடி வீழ்ந்தாலும், கொள்ள வேண்டியது தமிழீழம்! கத்து கடலில் உயிர் கரைந்தாலும், காடையோர் கொடுமை தொடர்ந்தாலும், (இ)ரத்த நாளங்கள் வறண்டாலும், எய்த வேண்டியது தமிழீழம்! குடிசை யாங்கெணும் எரிந்தாலும், குருதி எத்தனை சொரிந்தாலும், வெடிமுழக்கம் இனி விரிந்தாலும், வெல்ல வேண்டியது தமிழீழம்! பகைமை பேயரசு புரிந்தாலும், பரத தேசம் அதை அறிந்தாலும், அகதி ஆயிரவர் குவிந்தாலும், அடைய வேண்டியது தமிழீழம்! …

  3. ஓயுதல் தீருமடா புதியதோர் ஒளி பிறக்குமடா! பாயுதல் இன்றிப் பதுங்கியிருந்த புலி பாய்ந்தே சீறுமடா! சீயத்தின் பிடறி கிழித்து விளையாடி காயங்கள் ஆற்றுமடா! சிங்கத்தை கொடியில் தாங்கியதால் வீரம் வருமோடா? அடே மோடா... பாடங்கள் இன்னும் பல இருக்கு படிக்க! கூட்டங்கள் பல கூடி கூவிப் பிதற்றி நின்றோரெல்லாம் ஓட்டங்கள் விடுவர் ஆட்டங்களின்றி தலைவன் போடும் திட்டங்கள் கண்டு திசையெங்கும் வியந்தே நிற்குமடா! பயந்தே நடுங்கிப் பகை யோடுமடா விரைந்தே எமக்கொரு தனி ஈழம் உருவாகுமடா!

    • 4 replies
    • 1.3k views
  4. என்றும் நீ எனக்கே...... வீசும் காற்று ஓயும் நேரம் கங்கை நதிகள் காயும் நேரம் நம் காதலை நானும் மறந்து போவேன் பேசும் பேதை ஊமை ஆனால் வீசும் பார்வை ஓய்ந்து போனால் உயிரே நானும் என்ன செய்வேன் கன்னி நீயும் என்னை வெறுந்தால் காரணம் அதை சொல்ல மறுத்தால் பெண்னே நானும் என்ன செய்வேன் விழிகள் தீண்டி காதல் கொண்டேன் வழிகள் மாறி எங்கோ சென்றேன் விதிகள் இது என விட மாட்டேன் கண்கள் கலங்கி கணவுகள் தொலைந்தால் காதல் ரகங்கள் நெஞ்சை எரித்தால் வாழ்க்கை இதுவேன வாட மாட்டேன் வாடும் மலர்கள் பூத்தவை தான் சொட்டும் மழைதுளி மண்ணிற்கே தான் என்னவளே நீ என்றும் எனக்கே தான் வானத்தில் பல நட்சத்திரம் உலா இருதும் ஒரே ஒரு வெண்ணிலா ஏங்…

    • 24 replies
    • 4.4k views
  5. Started by Jamuna,

    இன்றைய விடியல் என் வாழ்வு என்று நான் அறியவில்லை! மனம் என்னை விட்டு போகுமென கணப்பொழுதும் நினைக்கவில்லை! கண்ணில் விழுந்த தூசு போல் என் கண்மணியினுள் விழுந்தாள்! விழுந்த நீ கண்ணிற்கு இதமானதால் எடுக்க நான் விரும்பவில்லை!! கண்மணிக்குள் விழுந்தவள் கண்மணி ஆவாளா என் கரும்விழிகளை நீ கேட்கையில் என் கண்மணிபட்ட பாட்டை கண்ணே உன் விழிகள் அறியுமா! இருவரின் கண்கள் பேசுகையில் உதடுகள் பேச மறுத்தன உதடுகள் பேச எத்தணித்த போது கண்களிள் ஒரு ஏக்கம்! கண்களின் ஏக்கம் காதலின் தாகம்! கண்மணியின் மெளனம் காதலின் நெருக்கம் விழிகளின் இருந்து வரும் கண்ணீர் - நம் கண்கள் மோதியதால் கிடைத்த காதல்சின்னம்! கண்கள் கூடியதால் இமை மூட மறுக்கின்றன இமைகள் மூ…

    • 33 replies
    • 5k views
  6. தமிழ் ஈழம் தாரீர்!.. கடலிடைக் கிடந்த தீவின் கவின்மிகு கரைகள் எங்கும் படர்ந்துநல் வாழ்வு கொள்ளும் பைந்தமிழ் வம்சம் காண்மோ! இடரிடைப் படுமோ? எங்கள் ஈழமண் இழப்ப தாமோ? மடமதிக் காடையோர் முன் மறத்தமிழ் தோற்ப தாமோ? இலங்கையின் ஏறத் தாழ இரண்டிலோர் பகுதி யான நிலங்களை உடைமை கொண்டு நிமிர்ந்துவாழ் தமிழர் தம்மைக் கலங்கிட வைக்கும் நீதிக் கயவர்கள் நம்கண் முன்னே விலங்கினம் என்ப தல்லால் வேறெது சொல்வ தற்கே? இந்திய நாடே! மற்றும் ஏனைய நாட்டோரே! நீர் தந்திட வாரீர், உங்கள் தார்மிகக் கருணை எம்மேல்! மந்திகள் மேயும் எங்கள் மண்ணினை மீட்டுத் தாரீர்! சிந்நிய குருதி போதும்: செந்தமிழ் ஈழம் தாரீர்!.. செந்தமிழா, நம் தமிழீழம்…

  7. Started by Thamilthangai,

    என் கண்ணே சிரி!! எதற்காக அழுகிறாய் கண்மணி? என் ஒவ்வொரு தோல்விகளிலும் சோராமல் தோள் தந்தவள் நீ! "துவள்வதும், துவண்டு புரள்வதும் ஆண்மைக்கு அழகல்ல" என்று என்னையே எனக்கு அடையாளம் காட்டியவள் நீ!!.. இன்று உன் விழிகளில் ஏனடி நீர்த்துளி?!! முள் கிழித்த என் விரல்கள் பார்த்தா?! முட்டாள் மனிதர்கள் முதுகில் குத்திய தடயம் பார்த்தா?!!கண்ணி வெடி என் ஒரு கால் தின்றதைப் பார்த்தா?!! அடி பேதைப்பெண்ணே! உன் கையும் நம்(பிக்)கையும் இருக்கிறதே! துவளாதே கண்மணி வீரனுக்கு நம்பிக்கையே போதும்! சோராதே பெண்மணீ!. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!! எங்கே சிரி! துயரம் எரி!!...உன் புன்னகையில் தானடி என் வெற்றிக்கனி! நன்றி!

    • 8 replies
    • 1.9k views
  8. மூன்றாவது மனிதனின் கவிதை. - வ.ஐ.ச.ஜெயபாலன். என்றோ ஆழ்மனதுள் தைத்து இன்னும் சிப்பிச் சிறு மணலாய் நெருடும் காலமுகமான ஒரு கவிதையடி நீ. தொடுவான் எரிய மணல் ஊருகி அலை புரளும் பாலையிலே ஈடன் பூந்தோட்டத்து வழி தவற ஓயாமல் சபிக்குமொரு ஒட்டகத்தைப் புணர்ந்தவன் நான். ஏவாள் நீ இன்றெங்கே. உந்தன் உடற் தணலின் முலைச் சுவாலை இதழ் பொசுங்கத் தின்று உயிர் எரிந்த காலத்தே நீ இச்சித்தும் நான் தவிர்த்த அந்த விலக்கப் பட்ட கனி இன்னும் இருக்கிறதா. உன்னிடத்தே வளைய வளைய வந்து எனைக் கண்டால் நச்சுப் பொறாமை வழியச் சிரித்திடுமே அந்த அருவருத்த பாம்பு அது எங்கே. உன் பிள்ளை ஒன்றுக்குப் பாம்புக் கழுத்து மற்றதற்ககுப் பாம்புக் கண் என்ற ஊர்வாய் மொழியைஒப்பவில்ல்லை …

    • 0 replies
    • 1.1k views
  9. தன்மானத் தந்தையே! திருநிறை பழநெடு மாறன் ஐயா! தன்மானத் தமிழனாய்த் தகைசார் அறிஞனாய்த் தரணியில் இலங்கிடும் தமிழகத் தந்தையே! இன்னலில் ஆழ்ந்த ஈழத்தவன் பசிதனை இல்லா தொழிக்க எண்ணம் கொண்டுநீர் உன்னதப் பணிபுரிந்தீர் உலகமே வியந்திட உறுதியாய் நின்றங்கு உயிர்தனை வருத்தும் மன்னும் உண்ணா நோன்புதனில் இறங்கி மனிதம் நின்னிடத்தே என்பதை எண்பித்தீர்! தங்கத் தம்பியாம் திலீபனின் நாளில் தந்தையே நீவீரும் திருவுளம் கொண்டு அங்கம் நொந்து அறிவினா லுயர்ந்து ஆரும் புரிந்திடா அறப்போராட் டம்தனில் இங்கிதமாய் இசைந்தீர் ஏற்றமிகு தந்தையே! என்னகைம் மாறுநாம் இதற்காய்ச் செய்வோம்? இங்கிருந்து நெஞ்சத்தால் இனியவுயிர் நிலைத்திட எஞ்ஞான்றும் இறைவனை வணங்கி நின்றிடுவோ…

  10. ஈர்பத்து ஆண்டுகளில் திலீபனின் நினைவுகள். தித்திக்கும் பெயர்கொள் தேன்தமிழ் மறவா! திலீபா! சென்றனவே ஈர்பத்து ஆண்டுகள் எத்தனையோ பொன்மொழிகள் உதிர்த்தாய் திருவாயால் ஈழத்தாய் ஈன்றெடுத்த அரும்பொருட் பேறே! அத்தனையும் ஆணித்தர மாயெம் நெஞ்சினில் ஆழப் பதிந்து அகலவிரி கின்றனவே பத்தரை மாற்றுத் தங்கம்நீ புரிந்த பாங்கான ஈகைக்குப் பாரினில் நிகருண்டோ? கல்விச் செல்வமே கொடையெனக் கொள் கவினுறு இனத்தின் எண்ணத்தை உடைத்துத் துல்லியமாய் உணர்ந்தாய் தமிழீழ விடுதலையே தொடரும் வாழ்விற்கு முதன்மை வகிக்குமென. நல்கினாய் இன்னுயிரை இந்தியா நாணமுற நலமிகு உடலையும் ஈய்ந்தாய் மாணவர்க்காய் வல்லவனே இத்தகு கொடையினை அளித்திட வையகத்தில் யாருளர்? வணங்கினோம் வந்திடுவாய்! …

  11. Started by subytha,

    காரணம் என்ன? அசட்டுத்தனமான பேச்சுக்கும் அசட்டுத்தனமான வாழ்க்கைக்கும் என்ன காரணம் ? புரியாத சில பாசங்களுக்கும் அறியாத சில கேள்விகளுக்கும் என்ன காரணம் ? முடியும் என்றொரு துணிவிற்கும் வானைத்தொடும் ஓர் உணர்விற்கும் என்ன காரணம் ? இதை அறிந்தவர்க்கு நரகம் அறியாதவர்க்கு சொர்க்கம் மனித வாழ்விற்கு இது ஓர் மகுடம் இது இல்லை எனில் பார் கூட வெறும் மாயை இதை அறிந்தும் அறியாமையில் செல்வர். புத்தி கூறியும் வருடாமல் போனவர் பல பேர் பருவத்தின் தேடல் இதை அறியத்துடித்தவர்கள் பண்டைய காலத்தில் நாகரிகமாக தேடியவர்கள் நட்பு என்ற ரீதியில் வரும் போது நடுக்காட்டில் விட்டுச் சென்றவர் ஆயிரம் அனுபவித்துச் சொல்லியும் ஆயிரம் இருந்தும் அனுபவிக்காது மாற்றம் கொண்டவர் எவரும…

  12. Started by cawthaman,

    யாழிலும் இனிது உன் தேன்மதுர குரல். மனக்கண்களிலும் இனிது முகம். சிறு குழந்தையின் மழழை புன்னகை உன் கண்வழிய, பார்க்கும் கண்கள் மயங்கும்நிலை தாண்டியும் உரக்கம் மாண்டு >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> சிறு வெற்றிகளும் இமைய மலை உச்சி கொண்டு சென்றது, நீ அருகில் இருந்ததால். சிறு தோழ்விகளும் ஆழ்கடலின் இருளை காட்டியது. நீ இல்லாபோது சேரும்போது கண்ட மகிழ்ச்சியும் பிரியும்போது கண்ட உணர்ச்சியும் …

  13. Started by yaal_ahaththiyan,

    உன்னால் கவிஞன் ஆனதிலிருந்து உனக்காக எழுதி எழுதி என் அயுளைக் குறைத்துக் கொண்டத்துதான் மிச்சம் நீ என்னை புரிந்து கொண்டதுமில்லை இனியும் புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையும் இல்லை நீ என்னை வாசித்ததில்தான் தவறு என்று எண்ணியிருந்தேன் இப்போதுதான் புரிகிறது உனக்கு தெரிந்த மொழியில் நானிருக்கவில்லையென்று என்னை உனக்கு விளங்கப்படுத்திக் கொண்டேயிருக்க என் அயுளை உனக்காக கரும்பலகையாக்க முடியாது பொறுமைக்கும் எல்லை இருக்கிறது தண்ணீர் கூட மூன்று தடவைக்குமேல் பொறுக்காது நான் எத்தனை ஆண்டுகள் பொறுப்பது நீ என்னை புரிந்து கொண்டு வருவாய் என்று போதும் இதுவரை உனக்காக கவிதையோடு நான் காத்திரு…

  14. Started by கறுப்பி,

    அம்மா தாய் அவள் தந்த உயிர் துடிப்புக்கள் சேயாய் தந்தவிட்ட சிறு சிணுங்கல்கள் தாய் மடி மீது கண் உறங்கிய பொழுதுகள் பாய் மீது படுத்த போதே தொலைந்ததே தாய் மீது கொண்ட எல்லையில்லா அன்புக்கும் தாய் மண் மீது கொண்ட பற்றுதலுக்கும் பாய் சொல்லி விட்டு பவித்திரமாய் ஹாய் ஆக புகுந்துவிட்ட வாழ்வின் அந்நியம் தேயாமல் மறையாமல் வளரும் நினைவுகள் தாய்மைக்கு தாயாக நானிங்கே பார்த்திட இயலாமல் இயங்குகின்ற பொழுதுகளில் தாயின் நோய் கண்டு மனம் நொந்து அம்மா என்றே வாய் விட்டு அழைக்கும் ஆன்மா இங்கே

  15. Started by yaal_ahaththiyan,

    உன் அமைதியான வேண்டுதலால் பொறுமையை இழந்திருப்பாள் பூமாதேவி * நீ சுற்றி வந்ததால் சனிஸ்வரனுக்கு பிடித்தது தேவதை தோசம் * நீ முருகனைச் சுற்றுகையில் முருகன் மீது சந்தேகப் படுகிறார்கள் வள்ளியும் தெய்வானையும் * அழகானவள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் உன்னைக் கண்டதும் தேவதை கிடைக்க வேண்டும் என்கிறார்கள் * கடைசியில் எனக்கும் சந்தேகம் வந்துவிட்டது பக்தர்கள் உன்னைச் சுற்றுகிறார்களா? கோயிலைச் சுற்றுகிறார்களா? -யாழ்_அகத்தியன்

  16. எதற்காகப் பிறந்தேன் என்று தெரியவில்லை அன்பு செலுத்த மறுக்கும் உனக்கு அன்பு செலுத்தவா? நம்பிக்கையில்லாத உன் வாழ்வில் நம்பிக்கை தான் வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டவா? யாருக்காகவும் இதுவரை கண்ணீர் வடித்ததில்லை கல்மனம் கொண்ட உனக்காக கண்ணீர் வடிக்கவா? என் எதிர்காலத்திற்காக கடவுளை வணங்கியதில்லை உன் எதிர்காலம் நன்றாக அமைய கடவுளை வணங்கவா? ஏனடா நான் இப்படி? இது என் காதலின் ஆரம்பமா? இல்லை என் அன்பின் இறுதியா? ஒலிவடிவில்..

  17. கண்மணி சுகமா.. கண்மணி சுகமா..மனக் காயங்கள் குணமா... ஆறுதல் சொல்லவே.. அருகினில் இல்லையே... விதி வரைந்த இடைவெளி விடியல்தேடும் நினைவடி... நிலவில்லாத நீலவானம்.. அழகில்லையே... நீயில்லாமல் இங்கு ஏதும் சுகமில்லையே... என்னுயிரை அங்கு வைத்து உன்னுயிரை இங்கு வைத்து இறைவன் நடத்தும் கூத்து இளமை கருகும் காத்து.. கண்மணி சுகமா..மனக் காயங்கள் குணமா... ஆறுதல் சொல்லவே.. அருகினில் இல்லையே... தொட்டுஇட்ட முதல்முத்தம்.. நெஞ்சை தொடும் இளரத்தம்.. உன் கடிதம் விழிநீரில் கரைகிறதே.. என்னுயிரை எண்ணி உயிர் கரைகிறதே.. ஆறுகடல் தாண்டி ஒன்று ஆசைகொண்ட ஜோடி இன்று காதல் என்னும் காடு மாட்டிப் படும் பாடு கண்மணி சுகமா..மனக் காயங்கள் குணமா... ஆறுதல் …

  18. நீர்தேடச் சென்று தொலைந்து போனவற்றைத் தேடி மணற்பாதைகளில் சங்கமிக்கின்றன கால்தடங்கள். ஊதமுடியா சங்குகள் வெடித்துப் போய் இருக்கின்றன திங்கமுடியா பிணங்கள் ஆங்காங்கே கிடக்கின்றன உச்சி வெயில் உக்கிரத்தில் பாதமும் வெளுக்கிறது பிழிந்த வியர்வைகள் மகிழ்கின்றன இன்றாவது இங்கே இருக்கிறோமே என்று.. தொண்டை அடைத்த ரணத்தோடு ஓவியங்கள் படர்ந்த பாதங்கள் வீடு திரும்ப, பாதச்சுவடுகளை அழிக்கமுடியா விரக்தியில் ஊர் கதைப் பேசி திரிகுதுகள் பிளவுபட்ட கரைகள்.

  19. வாருங்கள் பக்த கோடிகளே உங்கள் வேண்டுதல்களை என் மேல் உடைத்து எனக்கும் சேர்த்து வேண்டிக் கொள்ளுங்கள். என்றாவது நான் இதே கோயிலில் சிலையாக வேண்டும் என்று நீங்களே கூறுங்கள் எத்தனை நாள் மட்டும்தான் நான் வாசல் கல்லாய் இருப்பது. எதிலும் இறைவன் இருப்பான் என்பதை நம்பும் நீங்கள் ஏன்? என்னை மட்டும் கல்லாய் எண்ணி எண்ணுக்கணக்கின்றி உங்கள் நேத்திக்காய்.... என் மேல் தேங்காய்களால் எறிந்து என்னைக் காயப்படுதுகிறீர்கள். உண்மையைச் சொல்லப் போனால் இதே கோயிலுக்கு நானும் சிலையாக வேண்டும் என்றுதான் வந்தேன். நான் சிற்பியின் உளிக்கு பயந்ததால் என்னை வாசலிலே விட்டுவிட்டார்கள் தேங்காய்களால் சிலையானால் வ…

    • 7 replies
    • 1.6k views
  20. Started by slgirl,

    வேசங்கள்! மனித பிறவியது மண்ணில் சிறப்பு பிறப்பாமே! கவலைகல் கண்ணீர்கள் சந்தோசங்கள் சாகசங்கள் இவை எல்லாம் அனுபவிக்குமாமே! சோதனைகளை விரட்டிவிட்டு சாதனை படிகளை கண்டறிந்து வெற்றிப்பாதையில் செல்லுமாமே! மனிதம் உள்ளோர் மட்டும் தானோ இத்தனைக்கும் உரியவர்கள்! மனிதமின்றி மனிதனாய் நித்திலத்தில் வேசங்கள் போட்டு நடைபோடும் வேடதாரிகளுக்கு என்ன தெரியும்! கவலை மறக்க கண்ணீரும் கண்ணீரை மறக்க புன்னகையும் இறைவன் தந்த வரமென்று அறியா வேடதாரிகளே நில்லுங்கள்! நித்திலம் நின் ஆயுள் தந்தது மனிதனாய் வாழவே -ஆனால் நீயோ வேசங்கள் பல தரித்து வேடதாரி பட்டம் பெற்று நித்திலத்தையே நிலைகுலைக்கின்றாயே உன்னால் முடியாது என்…

  21. Started by subytha,

    போலிக் காதல் மயக்கத்தில்_மது போதை வகுத்த ஒழுக்கத்தில் நீலிக்கண்ணீர் உறவுகளில் _பலர் நிகழ்காலங்கள் இறந்து போகின்றன இரை தேடி வந்து இரையாகும்_விதி எண்ணி சிரித்திருக்கலாம் சமுத்திரம் கடக்க முடிந்தும்_கண் கடக்க முடியவில்லை என்று கலங்கியிருந்திருக்கலாம் மேகத்தில் இரத்தம் பூக்களில் மாமிசம்_கத்தியில் கண்ணீர் விழிந்தன் கனவில் நியத்தைதான் சொல்கிறேன் மாற்றமில்லை_ காதல் நெருப்பொன்றே புதுப்பிக்கும் மானிடத்தை

    • 31 replies
    • 4.7k views
  22. Started by yaal_ahaththiyan,

    நம் வாய்ச் சண்டைகளை எல்லாம் முடித்து வைக்கிறது நம் இதழ்கள் ஒன்று சேர்ந்து * பலர் என் மேல் படர்ந்தபோதும் என்னுள் முளைத்தது நீ மட்டும்தான் * நீ நடுங்கி நடுங்கி தந்த உன் முதல் முத்தத்தை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை நிலா நடுக்கத்தில் பயந்து பயந்து வாங்கியதால் * நீ பூச் சூடி பொட்டு வைக்கும்போது முடித்து வைக்கிறேன் உனக்கான என் அன்றைய கவிதையை * அடிக்கடி நீ காணாமல் போகும் தருணங்களில்தான் உணர்கிறேன் நீ தேவதை என்பதை -யாழ்_அகத்தியன்

    • 3 replies
    • 1.1k views
  23. Started by yaal_ahaththiyan,

    உனக்கு சந்தேகம் அதிகம்தான் இல்லையென்றால் எதற்காக உன்னோடு நட்சத்திரங்களையும் கூட்டிப் போகிறாய் * என் இதயக் கரும்பலகையில் உன் பெயரே நிலவு * உன் இதழைத் தொட்டுக் கொடுப்பதால்தான் கேட்டு வாங்குகிறாய் என் முத்தங்களை * முத்தக் கவிதைக்காய் என் காது மடலையும் விட்டு வைக்கவில்லை உன் இதழ்கள் * அம்மா எவ்வளவுதான் சுற்றிப் போட்டாலும் உன் கண்படும் இடத்தில் எப்போதும் நான் -யாழ்_அகத்தியன்

    • 3 replies
    • 1.2k views
  24. தலைப்பின்றி ஒரு கவிதை அவள் பெயர் * வார்த்தைகள் வற்றிவிட்டது கலந்து பேச வரச் சொல்லுங்கள் என்னை ஏமாற்றியவளை ஆணையிட்டான் கவிஞன் * காதலியின் பெயரை வைக்க சம்மதித்தாள் என்னால் தாயான மனசை புரிந்த மனைவி * தாரம் தாயானதில் புரிந்து கொண்டேன் ஏன் தாரத்துக்கு முன் தாய் என்பதை * இருந்த இடத்தில் இருந்து உலகம் சுற்றுகிறாள் என் கவிதையில் அவள் * கவிஞனின் கல்யாணவீட்டில் கவலைப்பட்டாள் கவிஞனாக்கியவள் * கவனமாக இருக்கிறான் காதலிக்கு கவிதை எழுதுபவன் ஆயுத எழுத்தை பாவிக்கக் கூடாது என்பதில் * காதலிக்கே மிஞ்சவில்லை எப்படித் தானம் செய்வேன் என் கவிதைகளை அன்னைக்கு சொன்னான் கவிமகன் …

    • 10 replies
    • 1.6k views
  25. காலத்தால் மறைந்திடுமோ அம்மா பாலமு தூட்டடிட நீ காட்டிய வெண்நிலவு பாட்டில் கதைகளில் நீ பாங்குடன் ஊட்டிய சோற்றினிலே நாற்றில் பயிரெனவே நல்லறிவோடு நான் செழித்து விட்டேன். எத்தனை கற்பனைகள் அங்கே எத்தனை சுடர்கின்ற நம்பிக்கைகள் முத்தேன நெஞ்சில் வைத்தாய் என் முழுமையின் வேரேன மறைந்து நின்றாய். ஒலிவடிவம் http://tamil.sify.com/audio/fullstory.php?id=14465321 கண்ணம்மா இந்த பனி கொட்டும் இரவினீலே இலையற்ற தனி மரமாய் உன்னையே நினைத்திருந்தேன். என்று உன் பூவிரல்கள் தீண்டிடுமோ என்று ஏங்கிடும் வீணையைப்போல் துயருறுதே நெஞ்சம். பூத்திடும் கனவினில் கானகங்கள் எங்கும் புலர்ந்திடும் வச்சந்ததின் கற்பனைககள் தேற்றுமுன் காதலில் பாரதியி…

    • 17 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.