கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
விரிக்கப்பட்ட ஒரு துண்டின் மேல் விழும் எச்சில்களுக்கு இரத்தம் வருத்த ஆடுகிறான் தன் பிஞ்சுகளோடு கனத்த உடலும் கால் தெரியும் அமைப்பும் ரசிக்கத்தான் கூட்டமுண்டு காலணா வீச ஆளில்லை கரணம் அடிக்கும் பூக்களை ரசிக்கத் தெரிகிறது சிந்தும் துளி ரத்தங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை உழைக்கப் பல தொழில்கள் பிழைக்கப் பல தொழில்கள் பிச்சைக்குத் தொழிலுண்டா? வீசுங்கள் உங்கள் சட்டைப்பை காசுகளை. ஆகாயத்தின் மத்தியில் ஆடும் இவர்களின் வாழ்க்கையும் அடிக்கடி கலையும் மேகங்கள் கயிறின் நுனியில் உயிரை வைத்து பூக்கள் வாடும் மஞ்சள் வெயிலில் உதடுகள் வெடிக்க இவர்கள் ஆடுகிறார்கள் இறைவனின் கூத்து இறைவன் ஆடுகிறான் இவர்களின் வாழ்க்கையில் கூத்து.…
-
- 6 replies
- 1.4k views
-
-
தபால் காரனுக்கு என் மீது இரக்கம் அதுதான் எவர் வீட்டு கடிதத்தையோ என் வீட்டில் போடுகிறான் நீ தான் இரக்கமில்லாம இருக்கிறாய் எனக்கு தர வேண்டிய கடிதத்தை இன்னும் எழுதாமல் எழுது எனக்கொரு கடிதம் என்னை நேசிக்கின்றாய் என்றல்ல நீ வேறு எவரையும் நேசிக்கவில்லை என்று அதுவும் உன்னால் முடியாதுவிடில் கையொப்பத்தை மட்டும் நீ போடு கடிதத்தை நானே எழுதுகிறேன் நண்பண் ஒருவனின்ட காதல் சக்சஸ் இல்லாம போச்சு அவன் என்னிடம் ஒரு கவிதை எழுதி தரும்படி கேட்க நம்மளுக்கு தெரிந்த அளவில இதை எழுதி கொடுத்து 2பேரும் சேர்ந்து விட்டார்கள் அது தான் யாழிலையும் போட்டேன் கவிதை மாதிரி தெரியுதா,இல்லாட்டி நக்கல் அடிக்க வேண்டாம்.
-
- 28 replies
- 4k views
-
-
வேண்டும், வேண்டும் இவன் இதயம் வேண்டும் அவன் அதை கேடுக்க மருத்தான் கேடுக்க மருத்ததை, எடுக்கநினைத்து அவன் இல்லத்தின் வாசலில் நடத்தினேன் என் காதல் உண்ணாவிரத்தை
-
- 19 replies
- 2.9k views
-
-
தேசத் தேர் நிலைக்கு வராமல் சிலருடைய சிலைக்குக் கீழே சிறைப்பட்டு விட்டது! எங்கள் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டு வடமிழுக்கச் சொல்கிறார்கள் இந்த வல்லவர்கள் தண்ரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது தாய் நாடு- எங்களுக்கே தாகம் இன்னும் தணி‘யமல் இருக்கிறது! B)
-
- 3 replies
- 994 views
-
-
கரைகளே... நெருப்பாய் இருந்தால் நதிக்கொன்றும் நஷ்டம் இல்லை... நண்பர் உனக்கு நம்பிக்கை இருந்தால் தடைகளொன்றும் கஷ்டம் இல்லை B)
-
- 3 replies
- 1.1k views
-
-
உள்ளம் பயந்து ஊமையாகுது கள்ளப் பெண்ணவளிடம் காதல் கொள்ளுது கொடி முல்லையென ஆடி வருவாள் குயிலின் நாதமெனக் கூவி வருவாள் செம்பருத்தி அவளென்னை ஊடல் செருமுனைக்கு* அழைப்பாள் பின்னே ஓடி வந்து என்னைக் கட்டி அணைப்பாள் நீள் முடி கோதி நிம்மதி நாடி புன்னகை செய்வாள் பின்னே பெருநகை செய்து என்னை ஏளனம் செய்வாள் முகத்திரண்டு கருவண்டு என்னை கிறங்கடிக்க வைக்கும் மூக்குத்தி மின்னொளியை மழுங்கடிக்கச் செய்யும் பேனாவை எடுத்து சிந்தனைக் குதிரையை தட்டிக் கொடுத்து புதுக் கவிதை ஒன்று எழுத்தில் வடிப்பேன் பூவை அணைத்து உயிர்க் கவிதை ஒன்று …
-
- 14 replies
- 2.1k views
-
-
அன்னை மடிதொட்டு தந்தை கரம்தொட்டு மாமன்உறவைத்தொட்டு மாமியின்பாசம் தொட்டதால் அன்பே உனைத்தொட்டு இன்பம் எனைத்தொட்டு மழலைகள் வாழ்வைத்தொட்டு சொர்கம் எனைத்தொட்ட வேளை சோதனை நமைத்தொட்டு இறப்புக்கள் வாழ்வைத்தொட்டு பிரிவுகள் எனைத்தொட்டதால் இதயம்வலியைத்தொட்டு கண்கள் நீரைத் தொட்டு கவிதைசோகம்தொட்டு தவிப்புகள்எனைத் தொட்டு துடிக்கின்றேன் உன்னால் இதுதான் விதியா?
-
- 24 replies
- 3.8k views
-
-
குள்ளமானவர்களே.. குறுக்கு வழியிற் செல்பவர்களே... கதிரவனை நெஞ்சில் சுமந்து விண்ணில் பயணிக்கும் என்னை உங்களுக்கு தெரிகிறதா? எனக்கு சுற்றி வளைத்து பேசத் தெரியாது... என்னால் உள்ளொன்று வைத்து புறமொன்று சொல்லவும் முடியாது.. நான் நடக்கும் பாதை நேர்கோடு... வானுயர்ந்த சோலை... நீண்ட தென்னை, பனைகமுகு... தொடுவானம்... இவை எந்தன் விம்பங்கள்! கண்களில் ஒளி.. கைகளில் உறுதி... நான் நெடுக்காலபோவான் வந்திருக்கின்றேன்!
-
- 12 replies
- 2.1k views
-
-
-
- 27 replies
- 6.8k views
-
-
உன் கண்களில் மிதக்க ஆசைபட்டு மூழ்கிப்போனது யார் யாரோ கண்களில் என் கவிதைகள் * என்னைக் காட்டிக் கொடுப்பவன் தான் தூரோகி என்றால் என்னவளைக் காட்டிக் கொடுக்கும் என் கண்களை யார் என்பேன் * நீ அழகாய் கிழித்தெறிவதை ரசிப்பதற்காகவே அழகான கவிதைகளாய் எழுதிக் கொண்டுவருகிறேன் * சாண் ஏற முழம் சறுக்கிறது உன் வீட்டு வாசல்படி எனக்கு * என் நம்பிக்கை மீது நம்பிக்கையில்லாமல் போனது நீ என்னை மறந்ததை நான் இன்னும் நம்பவில்லை * அவளைச் சிரிக்கவைத்து அழாமல் எடுத்துக் கொடுத்தேன் என் செத்தவீட்டு புகைபடக்காரனாய் அவளின் கல்யாணவீட்டுப் புகைப்படத்தை * உன் வீட்டுச் சுவரில் எனக்கு யாரோ எழுதிய இரங்கல் கவிதை இன்…
-
- 9 replies
- 1.5k views
-
-
அன்பர்களே, நான் சிங்கப்பூரை விட்டு 3 வருடங்களுக்கு முன் கனடாவுக்கு வந்தபோது என் துறையில் (கட்டடவியல் பொறியியல்) வேலை கிடைக்கவில்லை. 3 மாத முயற்சியின் பின் பலர் சொற்படி தொழிற்சாலை வேலையில் சேர்ந்தேன். சோகம் தாங்க முடியவில்லை. பின்னே? சிங்கப்பூரில் முதுநிலை வடிவமைப்பாளராக இருந்துவிட்டு, அதை சும்மா விட்டுவிட்டு இங்கே வந்து இப்படி ஆகிவிட்டதே என்று. சிங்கபூர் நிரந்தரவாசி (PR) உரிமையைக்கூட கைவிட்டுவிட்டு வந்துவிட்டேன். தொழிற்சாலையில் மரப்பொருட்கள் செய்யும் வேலை. மேசை, நாற்காலி போன்றவை. அப்போது சோகத்தில் கவிதை பொத்துக்கொண்டு வந்தது. 1) மரக்காலை வேலை ஒன்று... ("மழைக்கால மேகம் ஒன்று.." என்ற வாழ்வே மாயம் படப் பாடல் மெட்டில் பாடவும்.) மரக்காலை வேலை ஒன்று எனை ரொம்…
-
- 10 replies
- 3k views
-
-
தாயகத்தில் ஓர் அன்புறவு என் தாயகத்தில் ஒர் அன்புறவு நான் இங்கு வந்தேன் அவளைத் துறந்து என் மனம் முழுதும் அவளின் இருப்பு நான் பாடுகிறேன் என்னை மறந்து. குங்குமப் பூப்போல் செவ்விதழும் - அதில் பூத்துக் குலுங்கும் புன்சிரிப்பும் பல கவிதைகள் பேசும் கயல் விழியும் - என்னை வாட்டுதம்மா அவை இன்றளவும். வானம்பாடிபோல் பாடுகிறாள் - அவள் தோகை மயில் போல் ஆடுகிறாள் - தென்றல் காற்று போல் என்னைத் தழுவுகிறாள் - நம் பிரிவினால் தினம் வாடுகிறாள். வானில் ஒளி விடும் விண்மீனாய் - என் மனதில் இனிக்கிறாள் செந்தேனாய் உடல் வாடிப் போனது ஒரு சருகாய் - நான் காலம் கழிக்கின்றேன் அவள் நினைவாய்.
-
- 12 replies
- 2.2k views
-
-
நரை விழ பதறியடிச்சு.. பூசிட கரிக்கறை தேடும் உலகம்.. எனக்கு இட்ட பெயர் கறுப்பி...! நான் தவறியியும் இட்டதில்ல கறுப்பாய் ஒரு முட்டை..! தலைக்கனத்தில்.. கறை பிடிச்ச படிமானங்கள் சுமந்திடும் மானிடன் மனசெங்கும் இருள்..! இருளில் வாழும் நீ... தோலில் மட்டும் தேடுவது...??! நிறமணிகள் தொலைத்த பின்னடைவுகள் கூட நிறைவடா அங்குனக்கு...! நிறமணிகள் காவும் உன் கண்மணி நானடா.. புரிந்து கொள்..!
-
- 28 replies
- 4.8k views
-
-
நானும் நோக்கினேன் அவளும் நோக்கினாள் அவள் கண்ணுக்குள் காதலைத்தேடினேன் கானகத்துக்குத்தான் வழி காட்டின
-
- 15 replies
- 3.9k views
-
-
கடைசியாக எப்போது மழையை இரசித்தேன்? நினைவில்லை. கருநிறக் காளானென தெருவெங்கும் ஆங்காங்கே முளைத்திருக்கும் குடைகளின் விளிம்புகளிலிருந்து வெண்பனித் துகள்களாய்.. சரம் சரமாய்.. மழைநீர் கோர்த்துத் தொங்குவதை, தார்ச்சாலைகளில் விழுந்து தெறிப்பதை கடைசியாக எப்போது விழிவிரியப் பார்த்திருந்தேன்? அதுவும் நினைவில்லை. இன்றும் மழைபெய்தது. உச்சந்தலையில் தென்னைமரக் கொண்டையிட்டலைந்து, வீட்டுமுற்றத்தில் தேங்கி நிற்கும் மழைநீரில் காகிதப் படகு விடவென கொப்பித்தாள்களைக் கிழித்து அம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட நாட்களில் பெய்த அதே மழை.., மறுபடியும் இன்று. இப்போதெல்லாம்.., என் கண்களுக்கு எதுவுமே தெரிவதில்லை எதிர்ப்படும் மனிதர்கள், தெருவில் கடந்து போ…
-
- 3 replies
- 1.1k views
-
-
விரிகின்ற எந்தன் நினைவதிலே திரிகின்ற ஒர் உரு உன்னையன்றி வேறெது குவிகின்ற உந்தன் இதழ்தனை இமைக்காமல் நோக்குங்கால் அவிகின்றதம்மா எந்தன் மனது! நடக்கின்ற நிலாவோ நீ? அட.... ட... ட... சுவைக்கின்ற பலாவோ நீ? தவிக்கின்ற மனமெங்கும் நீ தவிக்க விடலாமோ என்னை இனி? பிறக்கின்ற கவிக்குள்ளே உள்ள கரு நீ துடிக்கின்ற இதயத் துடிப்பினிலுள்ள சுதி நீ கடக்கின்ற ஒவ்வெரு நாழியும் நான் நினைக்கின்ற பாவையம்மா நீ மொத்தத்தில் மன்மதன் மனதில் நின்று விளையாடும் ரதிக்கு ஒப்பான மதி நீ!
-
- 10 replies
- 1.7k views
-
-
என் குடும்பம்..! மீசை அரும்ப ஆசை முளை விட அலை பாயும் ஆண் மனம் பெண் மனம் பொழுதொரு காதல் காமம் கண்டு கரங்கோர்க்க அற்ப சுகம் தேடிய உடலிணைவின் கதறலில் அழுகையில் உறவுகள் பிறக்கும் அதுவே குடும்பமாக.. மானிட வாழ்வு அடங்குகிறது குறுகிய விட்டமுடன் வட்டமாக..! ஓமோன்களின் ஆசைக்கு அடங்கும் சுயநலப் பொதிகளாய் எங்கும் மானிடர் மனங்கள். எல்லைகள் கடந்து.. தீட்டிய சம்பிரதாயங்கள் தாண்டி.. சிந்தனை விரித்துப் பறந்து வா... மனதை அகட்டி வா.. காண்பாய்.. அன்பின் பரிசாய் அளந்து கட்டி அன்பளிக்கப்பட்டவை.. அன்புக்கு ஏங்கும் குழவிகளாய்.. தந்தை தாயிருந்தும் அநாதைகளாய்... போர்களின் உச்சரிப்பில் உறவுகள் சிதைய …
-
- 16 replies
- 3.8k views
-
-
தினமும் இரவை எதிர் பார்க்கினண்றேன் உன்னை கனவு காண்பதற்காகவில்லை நிலவில் உன் முகத்தை பார்ப்பதற்காக **** பட்டமரமாய் பாலைவனம் தன்னில் தனிமையில் தவித்திருந்த போது தென்றலாக என்னுள் புகுந்து என்ன சோலை வனமாக்கியவள் நீதான் **** அமாவாசைக் காலத்தில் நிலவிற்க்காக ஏங்குகிறது வானம் இரவு நேரத்தில் சூரியனிற்காய் ஏங்குகிறது ஆகாயம் மழை நேர இரவில் நட்சத்திரங்களை தேடுகிறது முகில்கள் அவற்றிற்கே தேடலிருக்கும் போது நான் உன்னை தேடக்கூடாதா............? கிறுக்கல்கள் தொடரும்............
-
- 43 replies
- 4.9k views
-
-
கைபிடித்து நடந்த கால்தடங்கள் என் பின்னால் வருகின்றன! ஆனால்... நான் இறுக பிடித்த கையையும் காணவில்லை.. ஊரி குத்தும் எனதூர் தெருக்களையும் காணவில்லை! காலமாகிப்போன தெருக்கள்.. ஊனமாகிப்போன உறவுகள்.. என் கண்தேடும் எனதூரின் அழகை காணமுடியவில்லை! கவிபாடும் பனைமரங்கள் தலையறுந்த முண்டங்களாக.... பேயாட்டம் ஆடும் தென்னைகள் பேச்சு மூச்சற்று உறங்குகின்றன! ஊர் அரண்மனையாக திகழ்ந்த கோவில் வௌவால்களின் இருப்பிடமாக.... மழைக்காலத்தில் கூட புல் முளைக்காத எனதூர் மைதானங்கள் பற்றைகளாக.... கோவில் தேர்முட்டியில் குடியிருக்கும் ஆட்டுக் கூட்டம் எங்கே.. மடிந்து விட்டதா.......? கோவில் மடத்தில் கச்சான் விக்கும் ஆச்சியின் குரல் எங்கே..... ஓய்ந்து …
-
- 18 replies
- 2.1k views
-
-
<span style='font-size:30pt;line-height:100%'><span style='color:green'>நடந்து போவதென்ன...</span> நடந்து போவதென்ன... நந்தவனமா-நீ நதிகள் நீந்தி வந்த தங்கரதமா.. விழிகள் இரண்டுமே.... வேலினமா-இடை தேடிப்பார்த்தேன் நான் நூலினமா... இடியோடு சுூறாவளி.. இதயத்திலே உன்னாலடி... புூங்கொடியோடு பொன்மாங்கனி(கள்) கொண்டாட வருவாயோ... நீ கூந்தல் கருமேகம்.. நீண்டு அலை பாயும் நிம்மதி பறிபோகும் கால்கள் மடல் வாழை மூடும் வண்ணச்சேலை.. காதல் கவி பாடும்.. இரண்டு விழிகள் கொண்ட பளிங்கு ரதமொன்று நடந்து வருகின்றது... இந்தப் பாலைவனம் தாண்டி ஈரப்புூங்பாற்று எங்கு போகின்றது.. தேகம் செவ்வானம் வதனம் மதி போலும்.…
-
- 16 replies
- 2.1k views
-
-
உன் பார்வை கல்லைக் கரைக்கும்-நான் கள்வன் இல்லையடி.... நீ காதல் முல்லையடி.... உன் விரல்கள் வீணை இசைக்கும்-நான் கலைஞன் இல்லையடி.... நீ அன்புக் கிள்ளையடி... ஊரும் பேரும் நாலும் சொல்வார்.. நீதானன்பே எந்தனுயிரே.. ஜென்மங்கள் தோறும் கைகள் இணைவோம்.. காதல் வந்து சேரும் வழி கண்களல்லவா... நம்போல் காதலர்கள் பேசும் மொழி மௌனமல்லவா... கனவுகள் நாளும் வந்து.. கவிதைகள் தருமே... கண்மனியுனை நினைக்க குளிருது மனமே.. இதழ்களில் தேன் குடிக்க இன்றேன் சொல் தாமதமே.. இரவுகள் தனித்திருக்க நிலா உலா போய் வருமே... மெத்தை மடி தந்தவளே மெல்லத்தூங்கவா....நீ நிம்மதியில் புன்னகைத்தால் காதில் பேசவா... கருவிழி பார்த்துத்தான்.. …
-
- 43 replies
- 6.1k views
-
-
* காதலும் வாழைபோல் வெட்ட வெட்ட வளரும். **திருமணம் நாணயங்களால் தீர்மானிக்கப்படுவதால் நாணயமான காதல்கூட செல்லாதகாசாகி விடுகிறது. ***நேற்று மலைமேல் கண்களால் பேசினோம் மறுநாள் மாதா கோவிலில் மனங்களால் பேசினோம் பின்பு கடற்கரை மணலில் கைகோர்த்து பேசினோம் இன்று தனித்தனியாய் வாழ்கிறோம் ஊமைகளாய். இதுதான் காதலா?
-
- 12 replies
- 1.7k views
-
-
உன் மௌனங்கள் என்னை, வாட்டும் போது விழிகளில் பொங்குகின்றன , கண்ணீர்த் துளிகள் உன் மௌனத்தோடு சிதைந்துவிடுமா என் ஞாபகங்கள்
-
- 9 replies
- 2.4k views
-
-
சமாதான தேவதை - நீ சமர் கண்டு சோர்வதா? அவமான அர்ச்சனை - நீ அருகிராமல் எங்கெங்கோ போவதே! சுகமான வாழ்வது சுடராமல் அணைவதா? சாவின் கரத்தில் உயிர் சடுகுடு விளையாடி மாய்வதா? நிழலாக எம் கழல் தனை தொடர்கின்ற சுற்றமது சுவர்க்கமதை அணைப்பதா? இமையாக நின்றெமை சுமையாக நினையாத அன்னை, அப்பனை அடுத்தடுத்து அவலமாய் இணைப்பதா? தமையனாய் நின்றவர் தம்பியாய் வந்தவர் தமக்கையாய் அணைத்தவர் தங்கையாய்ச் சிரித்தவர் நீட்டி முழங்கிப் போக அனுமன் வாலாய் நீள்பவர் கவலை மறந்து, சிரித்து மகிழ்ந்து இந்நாட்டு மன்னராய் நின்றவர் அன்பென்னும் ஆகுதியில் உயிர்தனைச் சலவை செய்து அவலம் எதுவென மறந்தவர் பட்... பட்... எனப் பறக்கும் வேட்டுக்கு சட்... ச…
-
- 9 replies
- 1.7k views
-
-
*** பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் - அந்தக் காலம் பாலுக்காய் பாலகனே கால் கடுக்க பாதையில் நிற்பது - இந்தக் காலம் *** மங்கைக்கு மாலையிட சுயம்வரம் நடப்பது - அந்தக் காலம் மங்கைக்கு மாலையிட பணவரம் கொடுப்பது - இந்தக் காலம்
-
- 4 replies
- 1.4k views
-