கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5133 topics in this forum
-
மாசி மாத விடுதலைப்புலிகள் 2007ல் வெளிவந்த வியாசன் எழுதிய கவிதை பலத்தோடு இருந்தால் மதிப்பார்கள் நிலத்தோடு கிடந்தால் மிதிப்பார்கள் சுற்றிச் சுழன்றேறி வருகின்றன நரமாமிச உண்ணிகள். சம்பூரைத் தின்று சமித்து, வாகரையை வளைத்து முடித்து, குடாநாட்டின் குரல்வளையை நெரித்தபடி முகமாலையின் முன்னரணேற முயல்கின்றன உண்ணிகள். வன்னிதான் உண்ணிகளின் ‘நம்பர்வண்’ இலக்கு பாதைகளை அடைத்துப் பட்டினி போடுவதால் விடுதலை இதயங்களின் துடிப்பை நிறுத்தலாமென உண்ணிகளை ஏவுவோர் உறுதியாக நம்புகின்றனர். கொட்டிக் குவிக்கும் ஆயுதங்களை மட்டுமல்ல பட்டினியையும் சேர்த்தே பயன்படுத்தப்போகின்றனர். விடுதலையின் விகர்சிப்பை விழுத்துவதற்கு பட்டினியையும் பயன்படுத்திய சிலர் முன்னர் வெற்றியும் …
-
- 2 replies
- 1k views
-
-
முதலிரவில், என் காலில் விழுந்து வணங்கிய அந்த கணங்களிலேயே நொறுங்கிப்போனது உன் மீதான என் ஒட்டு மொத்த மரியாதையும். ஒவ்வொரு நாள் காலையிலும், தாலியைத் தொட்டு ஒற்றிக் கொள்ளும் வேளைகளில், பொய்த்துக் கொண்டிருக்கிறது மீதமிருக்கும், என் கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்புகளும். புடவைக் கடைகளிலும், நகைக் கடைகளிலும், உன் முகம் அடையும் பிரகாசத்தை நம் வீட்டு படுக்கையறையில் கூட இதுவரை கண்டதில்லை. உப்புப் போட மறந்ததையும், சர்க்கரை அதிகமாய்ப் போட்டதையும், தாண்டி என்னிடம் பேச விஷயங்களே உனக்கு தோன்றியதில்லை. 'அவரு', 'என் வீட்டுக்காரர்' உன் உதடுகள் உச்சரிக்க மறுத்து கூசுமளவிற்கு என் பெயர் கெட்ட வார்த்தையாகிப் போனது உனக்கு. "ம்ம்ம்........ வந்து…
-
- 17 replies
- 3.3k views
-
-
என் காதலியின் இடை கடவுள் போல... இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்....!
-
- 10 replies
- 4.2k views
-
-
முன்னழகு முந்திவர பின்னழகு அசைந்து வர என்னருகே வந்தவளே காதல் கனிமொழி தந்தவளே எங்கையடி சென்றாய் நீ என்னை விட்டு? அசைந்துவரும் உன் இடையதிலே கட்டிவிட்டேன் என் மனமதையே மாயமாய் சென்று மறைந்தனையே நீ மங்கை தானா மறுமொழி கூறடியே தங்கம் என மின்னும் உடலோடு சொர்க்கம் எனச் சொக்கும் மன்மதக் கணையோடு அன்னம் என எழிலுறும் நடையோடு மொத்தம் இதுவென நித்தம் பருகிட கருவண்டு நானென ரோஜா நீயென - என் அர்ப்பணம் இதுவென தந்தனை நின் உடலினை பசியாற பணி செய்யும் பாவை நீயென மகிழ்ந்தனன் நான்... இதழதில் இதழ் வைத்து இன்பரசம் அருந்துகையில் மனமதில் கள்ளம் வைத்து நடித்தனையே நீயும் பாவி கொடும்பாவி என்னாவி துடி துடிக்க வைத்த மாபாவி என்னவாகி நான் போனேன்... …
-
- 6 replies
- 1.8k views
-
-
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் உண்மை தானடா புத்தன் நிற்கின்ற பூமியில்தான் இந்தப் படுகொலைகள் போதிச் சாமிக்கு வீதியெங்கும் தமிழ் பலிகள் ஒருவன் புலம் பெயர்ந்தது சென்றாய் ஒரு இனத்தையே புலம் பெயர்ந்து ஒடூகிறது அன்பை போதித்த நீ அடக்குமுறையை போதித்தது எப்போது ஆசையின்றி வாழ சொன்னாய் ஒசையின்றி ஒரு இனத்தை அழிக்கிறார்கள் உன் பெயரால் அண்டத்தின் அனைத்துயிர் பிண்டத்தை உண்டபின்தான் அடங்குமா உன் பசி…
-
- 3 replies
- 1.2k views
-
-
''அதிரடி தாக்குதல் நடக்குது விடுதலை ஈழம் பிறக்குது....|| தீயாய் எழுந்து தீங்குகள் எரி கயவர் என அறிந்தால் காவு எடு... ஈழத் தாய் ஈன்ற- நீ ஈழ மகனென்றால் இன்னல் துடை இரும்பு கரம் அறு.... போர் வாளெடுத்து போருக்காய் வந்த பகை வாளை பந்தாடு..... நீ காவிய தாய் மகனெ;னறால் கலங்கம் துடை ''புலம் பெயர்ந்து வந்தாயாயினும் புலியாகி எழு.......'' சிறும் பம்பாகி - பகை சீறி வந்தால் சிரச் சேதம் செய்..... உன் தமிழை உரையாடி உன்னோடு உறவாடி உள்ளிருந்து உளவெடுத்து உன்னை உதைப்பானாயின்- அவனை வெட்டி எறி- உலகிருந்து வெற்றிட மாக்கு..... போலியென நீ அறிந்தால் பொறுக்கியாய் இரு கயவன் அவனே தான் களுத்தை அறு..... ''வந்த நாடதுவ…
-
- 1 reply
- 1k views
-
-
வாழ்க! நீடு வாழ்கவே! வையம் போற்ற வாழ்கவே! வாழ்க! தமிழ் ஈழமே! வாழ்க! என்றும் வாழ்கவே! ஆற்றலுடை தொழில் வளமும், அறிவியல் துறை வளர்வும், மாற்றமுறாப் பண்பு நிறை மாட்சிமைகொள் ஆட்சிசெய்தும், ஏற்றமுடன் தமை ஈந்த சரித்திரத்து நாயகரை சாற்றிவைத்து கூற்றியம்ப சத்தான புலமை செய்தும், வாழ்க! நீடு வாழ்கவே! வையம் போற்ற வாழ்கவே! வாழ்க! தமிழ் ஈழமே! வாழ்க! என்றும் வாழ்கவே! காடுகளும், கழனிகளும் கலை கொழிக்கும் கூத்துகளும், களங்கள் பல கண்ட – வீரக் கதைகள் சொல்லும் ஆவணமும், வேழமொத்த பகை விரட்ட வெகுண்டெழுந்த வேங்கையமும், வீரமுடன் பாடிப் பாடி வெற்றி வாகை சூடியே வாழ்க! நீடு வாழ்கவே! வையம் போற்ற வாழ்கவே! வாழ்க! தமிழ் ஈழமே! வாழ்க! என்றும…
-
- 4 replies
- 1.2k views
-
-
''இது இறுதிப் போர்....'' எந்தன் வீட்டில் மஞ்சள் அட்டை ஏறி வந்து விழுகுதப்பா கண் விழித்து பார்க்கையிலே சிவப்பு அட்டை நிக்குதப்பா... எங்கு போய் ஒளிவதப்பா...? எனக்கு வழி தெரியவில்லை எறி வள்ளம் ஓடிவிட எல்லைக்கது போனேனப்பா... அங்க வைத்து என்னை ஜயா பிடிச்சிழுத்து வந்தாங்கப்பா... எங்கள் மண்ணை காத்து விட எம் படையில் இணைந்து விடு... காலமதின் கட்டளையை கண்ணா நீயும் ஏற்றுவிடு தோளின் மேலே சுடுகளனை சுமந்து நீயும் நடந்து விடு... எல்லைக்கின்று போய் நீயும் எங்கள் நாட்டை காத்துவிடு எத்தனை காலம் எம் மண்ணில் அடிமையாக நீ இருப்பாய்...??? உன் உரிமை காத்து விட உன் உயிரை விட்டு விடு எங்கள் ஈழம் மலர்ந்து விட எங்கள் களம் வந்து விடு..…
-
- 13 replies
- 2.1k views
-
-
புலிப்படை வீரர் இருக்கிறார் – அவர் எங்கும் எதிலும் இருக்கிறார் புலிப்படை வீரர் இருக்கிறார் – அவர் எதிலும் எங்கும் இருக்கிறார் கடலினில் தரையினில் காட்சிகள் நடத்துறார் வானத்தில் எதிரியின் கதையை முடிக்கிறார் புலிப்படை வீரர் இருக்கிறார் – அவர் எங்கும் எதிலும் இருக்கிறார் வாகரை மண்ணில் இருக்கிறார் – அவர் பற்றியில் இன்னும் இருக்கிறர் கோணமலையிலும் இருக்கிறார் – திருக் கேதீச் சரத்தில் இருக்கிறார் கொழும்பில் இருக்கிறார் காலியில் இருக்கிறார் கொடும்பகை இதயத்தில் குண்டுகள் வெடிக்கிறார் விலைகளை விண்மண் ஆக்குறார் – பங்கு விலைச் சுட்டெண்ணில் இருக்கிறார் (புலிப்படை) நிலத்தில் நிலையாய் இருக்கிறார் – இவர் நலமாய் நாட்டை நடத்துறார் கடல…
-
- 2 replies
- 1k views
-
-
-
தோரண வாயில் எல்லாம் விளம்பர விசாரிப்புகள் வெள்ளை கோபுரம் வண்ணமேற்றி கொண்டுள்ளது கருங்கல் தூண்கள் பளிங்குப் போர்வையில் பதுங்கிவிட்டன தொன்னையில் சிரித்த பொங்கல் நயிலான் பையில் அழுகின்றது அர்ச்சகரெல்லாம் நகைக்கடை ஒப்பனைகளாய் சாமி சயனத்தில் இருப்பதால் சந்திக்க இயலாதாம் ஏமாற்ற் வெளினடப்பில் எதிர்ப்பட்ட சிறுவன் ஏந்திய கையில் இருந்த இறைவன் கேட்டான் “இங்கு விடுத்து எங்கு தேடினாய் என்னை” என்று
-
- 7 replies
- 1.4k views
-
-
என் காதலை உன்னிடம் சொன்னபோது உன் இதயம் வெற்றிடமாக இல்லையென்றாய், உன் இதயக் கோயிலில் குடியிருக்கும் குபேரனை நினைத்துப் பொறாமைப்பட்டேன், அவனைவிட அதிஸ்டசாலி இருக்கமுடியாதென்று. அப்புறம்தான் அறிந்துகொண்டேன் உன் இதயம் ஒரேயொரு ஆண்டவனுக்குரிய ஆலயமல்ல, பல குடியிருப்பாளர்களைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பென்று. ஆறுதலாக வீடு தேடிய அதிஸ்டசாலி இப்போது நான்தான்.
-
- 1 reply
- 926 views
-
-
மலர்களிலே குருதி மணக்கிறது, நாளை அவைகள் குண்டுகள் காய்க்கலாம் வன்டுகள் இப்பொழுதெல்லாம் தேன் குடிப்பதில்லை - அவை குருதி குடிக்கப் பழகியதால் துப்பாக்கிகளையல்லவா காதலிக்கின்றன. காற்றில் உயிர்கள் மிதக்கின்றன அவை பலாத்காரமாக பறிக்கப் பட்டதனால் உரிய இடம் சேராமல் காற்றில் மிதந்து அலைகின்றன. நாளைகளில் ஊர்கள் இருக்கும் புல் பூண்டு, மிருகம், பறவைகள் எல்லமே இருக்கும் மனிதனைத் தவிர..............
-
- 15 replies
- 2k views
-
-
ஆகாயக் கூரையின் கீழ் அலைபாயும் நினைவுகளை அலையவிட்டு அலையவிட்டு ஆனசுகம் தேடுகின்றேன். காயம்பட்ட நினைவுகளை கண்ணீரில் தோய்த்தெடுத்து நாளைவரும் தலைமுறைக்கு நல்லகவி பாடுகின்றேன். தண்ணீரில் துன்பம் கரையாது என்றே கண்ணீரில் மையெடுத்து கவியெழுதப் பார்க்கின்றேன். மேகம்போல் நெஞ்சில் முன்னோடும் நினைவுகளை முன்னிறுத்தி முன்னிறுத்து முகவரியை தேடுகின்றேன். முன்நிலாக் காலத்தில் - என் முதிராத பருவத்தில் கண்டதெல்லாம் கனவாமோ ? கண்டறியத் துடிக்கின்றேன். இந்தநிலாக் காலத்தில் யாருமில்லா பக்கத்தில் அந்தநிலா ஒளியெறிந்து - என்னை விளையாட அழைக்கிறதே. உள்ளசுகம் அத்தனையும் அடைந்துவிடத் துடித்தாலும் வந்ததெல்லாம் வலி…
-
- 2 replies
- 1k views
-
-
அம்மா மூக்குவழி நீருகுக்க வைக்கும் இந்த முன்பனிக் காலம் இதயமாயில்லை. காதுமடல் களவாடிச் செல்லும் பைன்மரக்காடுகளின் ஊதற்காற்று துன்பம் தருகிறதம்மா! என்னிலும் சற்று வெளிறியவன் ஏவலிட்டான். மாதக் கடைசியை மனம்கொண்டு தேய்த்ததில் பாத்திரங்கள் போலத்தான் கைகளும் வெளுத்துப் போயின. என்ன குறையென்று நேற்றென் நண்பன் கேட்டான். ஏதுமில்லைத்தான் சொல்லுதற்கு. ஆனாலும் ஆனாலும் உறுத்துகிறது ஏதோவொன்று கவளம் சோற்றில் கடிபட்ட கல்லாய். அம்மா! நானும் அப்பா போல் பெரியவனாகி விட்டேன் அப்பாக்கு அறுபத்தாறில் அடங்காதென்ற "நாரிப்பிடிப்பு" உன்மகனுக்கு இருபத்தாறில். இங்கு பருவங்களில் ஒன்றாம் வசந்த க…
-
- 8 replies
- 1.4k views
-
-
நண்பர்களே! தமிழீழ தேசிய கீதத்தை எழுதும் போட்டியொன்றை விடுதலைப்புலிகள் அறிவித்திருந்தமை நீங்கள் அறிந்திருக்கக் கூடியதே. இது வரை அப்படி ஒரு தேசிய கீதம் இயற்றப்பட்டதாகவோ யாரும் பரிசு பெற்றதாகவோ நான் அறியவில்லை. இங்கு கவி வடிக்கும் பல கவிஞர்களின் திறமையையும் கண்டு வியந்த நான் ஏன் நீங்கள் அதற்கு முயற்சி செய்யக்கூடாது என்று கேட்கிறேன்? தமிழீழ தேசிய கீதம் மிக எளிமையான சொற்களால் ஆனதாக இருக்கவேண்டும். ஆக, இது வரை நாம் அறிந்த இலகுவான தமிழ்ச் சொற்களின் கோர்வையே தமிழீழ தேசிய கீதமாக மலரப்போகிறது. ஆனால், அது எதைச் சொல்லப்போகிறது, சொல்ல வேண்டும் என்பதே கேள்வி. எனவே, பல்வேறு நாடுகளின் தேசிய கீதங்களையும் தமிழில் சேகரிப்போமென ஒரு முயற்சியைத் தொடங்குகின்றேன். சேகரிக்கப்படும் …
-
- 12 replies
- 4.9k views
-
-
-
அலங்காரக் கந்தனே ! அஞ்சற்க, என்று அறிவித்த பொருளே!! அஞ்சுக அருகில் வந்திருப்பது பேய்களென்பதை அறிக!! வங்காளப் பேய்களுடன் கூடிநின்ற "பெருமாளின்" பின்னவர்கள் , மஞ்சள் துண்டுக்கே கழுத்தறுக்கும் கும்பல்கள் விடுதலை கேட்டு வயிறு வளர்க்கும் முகமூடிகள் ஜனநாயகத்தின் விபச்சாரிகள் எல்லாமே இப்போது உன்னருகில் வந்துள்ளன. குப்பையள்ளும் பதவி பெற்று குப்பையெல்லாம் உன் தெருவில். எப்படி முருகா நிம்மதியாய் உறங்குகின்றாய்? உன் கழுத்தில் உள்ளவற்றில் தங்கத்தை அகற்றிவிடு. இல்லையென்றால் ... உன் கழுத்தும் களவாடப்படலாம். வேலெடுத்த வேலவனே ! வேலை விட்டெறி - உன் பன்னிரு கரங்களில் ஒன்றால் "ஆட்லெறியை" கையிலெடு!! பதினொரு க…
-
- 6 replies
- 1.5k views
-
-
'' போராட போ'....'' எம் தமிழா ஏனழுதாய் என்று கொஞ்சம் எண்ணு விளங்கி விட்டால் எம் படையில் வந்துயின்று நில்லு... உந்தன் முன்னால் நிக்கும்- பகை வந்துயின்று கொல்லு- எங்கள் உரிமை போரில் வந்து நீயும் பங்கெடுத்து நில்லு.... அன்னை மண்ணை ஆளவந்தான் அடித்தவனை கொல்லு அந்த பகையை அழித்திடவே போர்களமே செல்லு.... துரத்தி வந்த பகையவனை துரத்தி நீயும் கொல்லு- நீ ஈழ மண்ணின் மைந்தனென்றால் இன்று அதை செய்யு.... பாத்திருந்த போதும் நீயும் பங்கெடுத்து நில்லு - அந்த பல்லிழித்த காலமதை இன்றுடனே வில்லு.... உன்னடிமை நீ உடைக்க உரிமையுடன்; செல்லு அந்த புனித போரில் பங்கெடுத்து இன்று நீயும் வெல்லு.... அன்னை மண்ணை ஆள வந்தான் அடித்தவனை…
-
- 4 replies
- 1.3k views
-
-
குண்டு மழை பொழிந்து குருதி ஆறு காணும் ஈழம் ஈன்றெடுத்த என் இனிய சிநேகிதியே உறவு தேடி வந்தாயா இல்லை உதவி தேடி வந்தாயா நம் மொழி பேசிய மக்கள் நம்மொடு இல்லையடி அமெரிக்க ஆங்கிலம் அழகாகப் பேசுவேன் தாய் மொழி கேட்டால் பேய் விழி விழிப்பேன் மென்பொருள் உறவில் மெய்ப்பொருள் மறந்து வீறுநடை போடும் சீறுடைப் பிணமடி நான் அடுக்குமாடி குடியிருப்பின் அங்கமாய் ஆறு மாத குழந்தை அப்பா என் முகம் பார்ப்பது தப்பாது இரவு பத்து மணி அவள் அம்மாவை பார்ப்பது அரை மணி நேரம் முன்னதாக அச்சடித்த காகிதத்தின் அவசர தேவைக்கு அகுறிணை யாகிப்போன உயர் திணையடி நான் திரைப்படம் இல்லையென்றால் திகட்டாது என் வாழ்க்கை நாளொரு "தினம்" கொண்டாட வேண்டும் …
-
- 9 replies
- 1.6k views
-
-
-
உனக்காய் காத்திருந்து நிலவுகூட பகலில் வந்து விட்டது பகல் நிலவாய் இன்னும் நீதான் வரவில்லை காக்க வைப்பதில் உனக்கு அவ்வளவு சுகமா அதைவிட சுகம் உனக்காய் காத்திருப்பதில் உன் வருவுக்காய் எதிர் பார்த்திருந்தால் நீ வரும் பாதைகூட உன்னை போல் அழகாக வெக்கப்படுகிறது உனக்காய் காத்திருந்து இறந்துபோக ஆசைதான் உனக்காக கவிதைகள் பிறக்காமல் போகுமென்றால் உனக்காய் காத்திருந்து நான் வாடிப் போகவில்லை என் கவிதைகளுக்குத்தான் தாடி முளைக்கிறது நீ தாமதமாய் வரும்வரை எப்படி சமாளிபேன் என் கவிக்குழந்தைகளை ஒவ்வொன்றும் அம்மா வேணும் என்கிறது என்னைக் காக்க வைக்க வேண்டும் என்பதற்காக தயவு செய்து வராமல் விட்டு விட்டாதே என் பேனா ஒரே நாளிளே இறந்…
-
- 4 replies
- 1.5k views
-
-
தூரம் அதிகமில்லை துயரம் இனியுமில்லை கைகட்டி நிற்பதனால்.. தமிழன்கை சோரவில்லை பொறுமையைக் காப்பதனால் பொறுப்புணர்வு மறையவில்லை.. நூறாண்டு இழப்புகள் தேடித்தரப்போவதை.. ஓராண்டு இழப்பால் உருக்குலைத்தல் விவேகமில்லை தலைவர் வீரத்தை தரம் பேசும் தகுதி தரணியில் எவர்க்குமில்லை உறவைப்பிரிந்த உயிர் உரம் கண்டதேயொழிய சோரவில்லை வீரம் மாறவில்லை மக்கள்வரிப்பணத்தால் மகிந்த கந்தக அரிவாள் செய்து தமிழனை அரிவதற்கு.. துணைபோகும் இனத்துரோகியர் வாழ்நாட்கள் நீளமில்லை கீபீர் போட்ட குண்டுகள் கிண்டிய குழிகளில் எங்கள் வயலுக்கு நீர் வார்க்கும்- சிங்களவன் பறித்த உயிரெல்லாம் போராளி ஆன்மாவில் புகுந்து உரம் சேர்க்கும்.. எரிந்த கொட்டில்கள்.. அடுக்குமாடி…
-
- 11 replies
- 2.2k views
-
-
நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம் நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும் குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை பேசவைக்க வேண்டுமே என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள் உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும் உயிர் பெற்று விடுகின்றது மழை விட்டது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இருந்தும் என் குடைக்குள் இன்னும் நீ கோவம் வரும் போது உன்னை நினைக்க சொன்னாய் வராத போதும் உன்னை நினைத்தேன் இப்ப என்னை நினைப்பாயோ யாழ்_அகத்தியன்
-
- 5 replies
- 1.5k views
-
-
கறுப்பு ஆடியின் வலிகள் கருவிலே உரிமைக் குரல் கொடுத்து சாவிலும் வாழ்கிறோம் உலகத்தின் இதயத்தில் ஈழத் தீபம் ஏற்றுவோம்! திரும்பத் திரும்ப வந்து புன்னகைக்கும் துயரத்தில் உயிர் கொதிக்கவும் உதிரம் கொதிக்கவும் குளிர்க் கூட்டிலே வலிகள் சுடச் சுட வாழ்க்கை தொடர்கிறது! கண்ணீர்த் துளிகள் விழிகளில் வழிகிற காலம் போய்... கண்ணீர்க் கட்டிகளாய் உதிரம் கொட்டுகிற கலி காலமிது! கருவறையில் இருந்து கனத்த குரல் ஒலிக்கிறது. "அம்மா நான் தலையோடு பிறக்கவா? இல்லை... தலையில்லாமல் பிறக்கவா?" எப்படிப் பிறந்தாலும் என் இறப்பு என்னவோ தலையில்லா முண்டாமாகுமே! நான் வரவா கருவிலே கரைந்து போய்விடவா? இன்னும் இன்னும் மனிதக் குருதி நிரம்ப…
-
- 1 reply
- 820 views
-