Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காலில் போட்டு உழக்கு.... வடக்கு கிழக்கு பிணைப்பு இனி என்ன பிரிப்பு....??? தமிழர்களின் பரப்பு அதை பகையேன் இன்று பறிப்பு....??? நீதி மன்ற தீர்ப்பு நீதியற்ற உரைப்பு.... வாய்மையற்ற வழக்கு காலில் போட்டு உழக்கு.... உதயம் வரும் கிழக்கு ஒளி எறிவதந்த வடக்கு.... இன்று போயு எதற்கு பிரிக்க அதற்கு வழக்கு....??? இது யாரு பார்த்த கணக்கு...??? இருக்குது தப்பு கணக்கு.... மாத்திப் போடு கணக்கு வடக்கு கிழக்கு நமக்கு..... நீதி மன்ற தீர்ப்பு நீதியற்ற கணக்கு.... அதை காலில் போட்டு உழக்கு....!!! வன்னி மைந்தன் :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :…

  2. மழைத்துளியின் சோகங்கள் மண்ணுக்குத்தெரிவதில்லை மழலையின் இனிய மொழி மற்றவர்க்குப் புரிவதில்லை மலர்களின் வாசம் தன்னை மலர்க்கூந்தல் அறிவதில்லை மங்கையின் மன ஆழத்தை மன்மதனும் அறிந்ததில்லை இதயத்தின் உணர்வுகளை இதயங்கள் உணர்வதில்லை தந்தையின் சுமைகள் இளமையில் புரிவதில்லை தாயின் அன்புதன்னை தானிருக்கும்போது புரிவதில்லை கண்ணீரின் ஈர வலியது கண்களுக்குப்புரிவதில்லை வானவில்லின் வர்ண ஜாலம் சந்திரனுக்குத்தெரிவதில்லை உடலின் முடிவுதன்னை உணர்வுக்குப்புரிவதில்லை காலனின் வருகைதன்னை காலத்துக்கும் தெரிவவதில்லை காதலின் வலிகள் காமுகர்க்குப்புரிவதில்லை நட்பின் இலக்கனம் நயவஞ்சகர்க்குப்புரிவதிலை இலக்கியனின் உணர்வுகள் இங்கு உங்களுக்குப்பு…

  3. தன்வினை தன்னை சுடும்...(நொருங்கிய கிபிர்) முகில்கிழித்து வானதிர உள் நுழைந்தாயே.... எம் தமிழர் உயிர் குடித்து நீ மகிழ்ந்தாயே.... காலையிலே வந்து வேறு குண்டடித்தாயே... கணப் பொழுதில் உடல்கிழிந்து நீ அழிந்தாயே.... செருக்கோடு வந்துயன்று நீ திரிந்தாயே.... அந்த செஞ்சோலை உயிர்களையும் நீ குடித்தாயே.... வெறிபிடித்து உயிர்குடிக்க நீ அலைந்தாயே... இன்றோ பார் உடல் சிதறி நீ விழுந்தாயே....!!! - வன்னி மைந்தன் - :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :P :P :P :P

  4. நினைவஞ்சலி..( சந்தன கடத்தல் வீரப்பனுக்கு) எம் தமிழ் நாட்டின் எல்லையை காத்தவன்.... எண்ணிலே ஆண்டுகள் ஏறியே ஆண்டவன்.... தன் இனம் அழித்தவன் தலைகளை அறுத்தவன்..... தவறுகள் செய்தானை தவறாமால் அழித்தவன்... எம் தமிழ் அழிகையில் எண்ணியே அழுதவன்... நாம் அகதியாய் அலைகையில் அன்றவன் துடித்தவன்.... கருணை கொண்டவன் காட்டுக்குள் வாழ்ந்தவன்.... தன் வாழ்வு இழந்தவன் தமிழ் எல்லையை காத்தவன்... கடத்தலின் வீரனாய் காலமுன் எழுந்தவன்... சரித்திர வீரனாய் சாதனை படைத்தவன்.... பெண்களை தாயாய் எண்ணியே மதித்வன்... மதிப்பினை அவருக்கு மான்பாய் கொடுத்தவன்.... கடத்தல்கள்…

  5. கூலிப் படையே உனக்கு இரக்கம் இல்;லையா....??? பகை முகாம்கள் காலடியில் எம் சிறார்கள் பிச்சைகேட்டு.... பட்டினியால் தவிக்கையிலே பாவம் அவர் கையேந்தி.... நீ உண்டெறிந்த மிச்சம் கேட்டு உந்தன் முன்னால் நிரையடுக்கில்.... ''பிஞ்சு வந்து கேட்கையிலே எட்டி எட்டி உதையிறியே....'' ஈவ் இரக்கம் இன்றியவரை எள்ளி நடை ஆடுறியே..... முட்டி விழியில் நீர் கொட்ட முண்டியடித்து நிக்கையிலே.... திட்டி திட்டி வந்தவரை எட்டி எட்டி உதையிறியே.... அவர் விட்ட கண்ணீர் கூட உந்தன் இதயமதை கரைக்கலயா....??? ''வறுமை என்று தானே வந்து படையில் நீயும் இணைந்தாயே...'' அட உந்தன் மனம் கூட கொஞ…

  6. துப்பாக்கி எப்போது பூப்பூப்பது -- அன்பனே உன் தோழியைவிட துப்பாக்கியை நேசிக்கும் தோழனே என்னோடு மெழுகுவத்திகளும் அழுதுகொண்டிருக்கும் இந்த மெல்லிய இரவில் கடிதத்தில் விழும் என் கண்ணீர்ச் சொட்டு கடிதத்தில் அழிவது மெல்லினமும் வல்லினமும்தான் கண்ணீரில் அழிவது தமிழினமே அல்லவா? நாங்கள் நட்சத்திரங்களைப் பார்த்து நாளாயிற்று எங்கள் வானத்தைப் புகைமண்டலம் போர்த்திருக்கிறது மனிதன் மட்டும்தான் சிரிக்கும் ஜீவராசியாம் அப்படிப் பார்த்தால் இப்போது இங்கு யாரும் மனிதராசி இல்லை. காதலா நீயும் நானும் ரகசியமாய் நடந்து போகும் ராத்திரிச் சாலை இப்போது - வெடிகுண்டுகளின் விதைப் பண்ணையாகிவிட்டது …

    • 5 replies
    • 1.2k views
  7. சேய்கள் நாங்கள் வளர்ந்தோம்-தமிழ்த் தாய் வயிற்றில்தானே பிறந்தோம்.. நாய்கள் போல்தான் குரைப்போம்-நம் தூய்மை ஒன்றே உரைப்போம்... தேய்கின்ற நிலவை நகைப்போம்-ஒரு பேய் உள்ளிருக்கும் மறைப்போம்.. பாய்களில் தூங்கிய உடலம்-வெயிலில் காய்ந்ததே ஊரில் மறந்தோம்.. ஏய்ப்பதும் நகைப்பதும் திறமை-அடச் சீய் எனவுரைத்தால் பெருமை ஓய்ந்திடும் பொழுதினும் உயிரே-நம் வாய் ஓய்வதென்பது அரிதே.. செய்வதற்கினியென்ன பாவம்-வேகும் மெய் தொட்டு விழிமையிட்டு வாழ்வோம்.

  8. Started by sathiri,

    யாழிலை எவ்வளவோபேர் வவந்து கவிதைகள் எழுதி தள்ளினம் அதை பாத்த எனக்கும் ஒரு ஆசை கவிதைதஒண்டு எழுதவேண்டும் என்று அதுவும் காதல் கவிதை கண்ணைமுடிஎன்ரை முனியம்மாவை நினைச்சன் கவிதையா வந்து கொட்டிச்சுது அதிலை நீங்களும் நனைந்து கருத்தை சொல்லுங்கோ அப்பதான் அடுத்த கவிதைஎழுதுவன்* கோதுமை மா நீ கொதி தண்ணி நான் இருவரும் சேர்ந்தால் ஆசையயாய் சாப்பிடும் தோசையாகலாம் உள்ளி நீ மல்லி நான் இருவரும் சேர்தால் இரசம் ஆகலாம் மிதுவான தேங்காய்் பூ நீ மிளகாய் செத்தல் நான் சேர்த்தரைத்்தால் சம்பல் ஆகலலாம் வழிப்பான புளி நீ வாடல் மரக்கறி நான் வா சேர்ந்து சாம்பாறு ஆகலாம்

    • 26 replies
    • 4.2k views
  9. ''பயந்தோடிய படைகள் சிதைந்ந நிலை.....!!!'' கிழக்கின் மீது ஏறி ஆடி சிரிச்சு முடிச்சீக... இப்போ உங்க கிழிஞ்ச உடலை கண்டு ஏனோ வழி பிதுங்கி நிண்டீக....??? கண்ணை மூடி கணைகளை தான் ஏவி விட்டிக.... எண் கணக்கில் புலிகள் பலி என்று சொன்னீ;க.... வெற்றி கள நாயகராய் உம்மை உரைத்தீக.... இன்று வேண்டி கட்டி வாயடைத்து ஏன் நீண்டீக....??? முகமாலை முன்னரணில் முதுகுடைத்தீக... முறிந்து விழுந்த படைகளையே பொதியில் ஏற்றீக.... கனரகங்கள் கொண்டு வந்து கை அளித்தீக.... கரிகாலன் படையணியை பலமாக்கி விட்டிக.... இனி ஏறி வரும் களங்களிலே வேண்டி கட்டுங்க.... ஜயா மகிந்த ஆட்சிக…

  10. இந்த மண்ணின் மைந்தர் நீங்கள் ( காயப்பட்ட ஆமி சொல்லுறான்) என் கைகளில் இரண்டும் கட்டு.... வழியினால் கண்ணீர் சொட்டு.... உண்ணவே முடியல உணவு... கெஞ்சிறேன் உனை நான் கேட்டு.... புலியே வந்தெனக்கு ஊட்டு... எந்தன் கடமைகள் யாவையும் தொட்டு.... செய்கிறாய் இனப்பாகு விட்டு... மனிதத்தை நெஞ்சதில் கூட்டி.... செய்கிறாய் பணியதை சுட்டி.... உன்னையா வந்தேன் நான் கொல்ல....??? இந்த உணர்வதை எங்கே நான் சொல்ல....??? வெறியதை ஊட்டியே வளர்த்தார்.... உன்னை கொல்லவே எம்மையே வைத்தார்..... உம்மை பார்த்ததும் இன்றே அறிந்தேன்... மனிதத்தை இன்றே உணர்ந்தேன்.... …

  11. நீயிருந்த கருவறையில் நானும் இருந்தேன் பெருமை அண்ணா.... கல்லறையில் நீ உறங்க கண்ணீரில் நானும் இங்கே தாய் மண் காத்திடவே தலைவரின் வழியில் நின்றாய் தாய் தந்தை வாழ்வுக்காய் அகதியாக நானும் இங்கே கல்லறையில் நீயும் அன்பே நிம்மதி உறக்கமா அண்ணா??? நாலுசுவர் வீட்டினிலே இங்கே நரகப்பட்ட வாழ்க்கையடா நானும் வந்து இணைந்திடவே நாளங்கள் துடிக்குதடா நான் வந்து உனைக்கான காத்திருந்த வேளை அண்ணா..... வீரச்சாவு செய்தி கேட்டு என்னை நான் இழந்தேன என் குரல் கேட்காமல் எப்படி நீயும் உறங்குகின்றாய்? உன் இனிய குரல் ஓலி இன்னும் என் காதில் ஒலித்து ..... என் கண்களில் நீராய் கரையுது அண்ணா........ என்…

  12. போதும் என்ற மனம்.. பொன்னான மனம்.. இனிப் பொறுத்தது போதும்.. என பொங்கிய மனமே.. தமிழுக்காய் போர்க்களமாடும்.. மனம்.. போருக்கும் மனமில்லை.. தாய் ஊருக்கும் ஒட்டில்லை உயிருக்குப் பயந்தோடி வந்தேன்.. புகழுக்கும் பொன்னுக்கும் தான் ஆசை கொண்டேன்.. தாய் மண்ணுக்காய் போராடும் அண்ணா.. உன்தம்பி ஒரு கோழை எனை மன்னிப்பாயா அண்ணா எனை மன்னிப்பாயா...

  13. Started by ivann,

    பிணம் தின்னி கழுகுளாக மாறிய மனிதர்கள் மதம் என்ற மதம் பிடித்த மடையர்கள் நிலம் கேட்காத நிலத்திற்கு நீட்டிய வாள்கள் தன்னவரையும் எதிரியையும் துளைக்கும் குண்டுகள் கொன்று கூவித்துவிட்டு கூச்சலிடும் பீரங்கிகள் அலைந்து பறந்து மரணத்தை அடித்த உலோகப் பறவைகள் கால்களை காகிதமாய் துண்டித்த கண்ணி வெடிகள் ஆடவரை இழந்து விதவையான பெண்களின் ஒப்பாரிகள் தந்தையை இழந்து அனாதையான பிஞ்சுகளின் கூக்குரல்கள் காதலியை தொலைத்து நாட்டிற்காக உயிர்தொலைத்த வீரர்கள் மரணத்தை விட கொடுமையான ஊனங்கள் அந்த ஊனத்தை குறைக்க மருந்தை விற்கும் வியாபாரிகள் நீர் போல ஓடிய ரத்த ஆறுகள் குருதியை குடித்து குளித்த மானிட ராட்சதர்கள் கன்னிகளின் கற்பை சூறையாடிய கயவர்கள் தாயின் பாலை வற்ற வைத்த நயவஞ்சகர்…

    • 8 replies
    • 1.7k views
  14. ஓப்ரா கவுசில் ஒரு மாலை பொழுது ஒலித்தது ஒரு கணீர் குரல் ஒவசீஸ் தமிழன் தனை இழந்தான் ஓப்பாரியும் ஓலங்களும் களத்தில் ஒப்ரா கவுசில் தேனிசை மழை ஒமந்தையில் குண்டு மழை ஒரு சாண் வயிற்று பசியிலும் போராட்ட உணர்வு அங்கு ஓய்யார பகட்டிலும் களியாட்டம் இங்கு ஓசி தமிழன் நாம் ஓடி விளையாடி,பாடி பாரதி கனவினை நனவாக்கிடுவோம் ஓடு ஓடு என்று விரட்டுகிறார்கள் ஓப் போடுகிறோம் நாம் ஒப்ரா கவுசில் தமிழ் வாழ்க தமிழன் வாழ்க

    • 12 replies
    • 1.9k views
  15. Shine தமிழ் இளைஞர்களின் படைப்புகள்... கேட்டுப்பாருங்கள்.... பாடல்கள்(ஒலி வடிவம்) Right click and select "Save as.." to download http://www.roughrhythm.com/filestore/Shine...heendoftime.mp3 http://www.roughrhythm.com/filestore/Shine...nwillwerise.mp3 http://www.roughrhythm.com/filestore/Shine...meflywithme.mp3 http://www.roughrhythm.com/filestore/Shine...swillchange.mp3 பாடல்(ஒளி வடிவம்) http://www.roughrhythm.com/Artister/Shine/Video/ மேலதிக தகவல் http://www.roughrhythm.com/Artister/Shine/ நன்றி சாணக்கியன்

  16. அதிர்ஸ்டம் என்பது ஒரு ஆண் தனது மனைவியின் முதல் காதலனாக இருப்பது.. அதிர்ஸ்டம் என்பது ஒரு பெண் தனது கணவனின் கடைசி காதலியாக இருப்பது... இந்த இரண்டு வசனங்களிளும் ஏகப்பட்ட கருத்துகள் இருக்கின்றன....உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்... வாழ்க்கையில் அனுபவமுள்ளவர்களின் கருத்துக்கள் இளையோருக்கு நல்ல அறிவுரையாக அமையும் என நம்புகின்றேன்.

    • 11 replies
    • 2.2k views
  17. ஏன்டா என்னை கொண்டீங்க....??????? பத்தவைச்சா பத்தவைச்சா என்னை ஏண்டா பத்த வைச்சா...??? பாவி புள்ள என்னில் ஏண்டா தீயை வந்து பத்த வைச்சா...??? மூணு புள்ள பெத்த என்னை முளுசாய் ஏண்டா எரிச்சுப் புட்டா...??? உயிர் வதங்கி உடல் கருகி இறக்கும் படி ஏண்டா வைச்சா...?? என்ன பாவம் செய்தேன் என்று என்னை வந்து கொளுத்தி புட்ட....?? கூட்டத்தோடு கூட்டமாக கூடியங்கு நானும் வந்தேன்.... ஜயோ பாவி ஏனோ வந்து என்னை அங்கு கொளுத்தி புட்ட....??? தீக்குளித்து மடிந்தான் என்று ஏண்டா வந்து அறிக்கை விட்ட....??? ஓலம் இட்டு கத்தையிலே ஓடி வந்து அணைக்க வில்லை... கூட எண்ணை ஊற்றி நீயும் ஏண்ட…

  18. [color=darkred] தப்பி ஓடிய படைகள்..... பறையடித்து படையெடுத்த பகை அழிந்தது.... பனிச்சங்கேணி பறிக்க வந்த படை சிதைந்தது.... அடியெடுத்து வைக்கையிலே அடி விழுந்தது.... எண் கணக்கில் ஜம்பதுகள் அங்கு முடிந்தது..... பொறுத்திருந்த புலியணிகள் பொங்;கி எழுந்தது.... போர் முரசு கொட்டி பகையை பிணமாய் எடுத்தது.... உயிரோடு ஒருவனையும் உடனெடுத்தது.... போர் கருவிகள் போட்டெறிந்து படை ஓட்டம் எடுத்தது.....!!! - வன்னி மைந்தன் - பனிச்சங்கேணி போர் ... 06- 10-06 :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

  19. ஏன் மௌனமானாய்....??? சிங்களவன் அழிகையிலே சீறி எழும் உலகமே... எம் தமிழ் அழிகையிலே ஏன் உனக்கு மௌனமோ...??? பயங்கர வாதியேன்றேன் பயங்கரமாய் தூற்றுகிறாய்...??? பயங்கரமாய் வந்து அவன் பயங்கரங்கள் ஆடுகிறான்... பார முகமாய் ஏனோ நீ பாரினில் இருக்கிறாய்...?? ஏழை என்றா எம் தமிழை ஏறி இன்று மிதிக்கிறாய்....??? நடு நிலை என்றேன் நா வறள கத்துகிறாய்... இன்று நடு நிலை மறந்தேன் நரகத்திலே கிடக்கிறாய்...??? நா நனைந்து எம் தமிழர் நாட்கணக்காய் ஆச்சு... நலிவடைந்து உடலதுவோ உயிர் பிரியும் நிலை போச்சு.... நின்மதி இன்றியவர் நிர்கதியாய் ஆச்சு... எண் கணக்கில் பயங்கரங்க…

  20. Started by N.SENTHIL,

    கண்கள் பார்வைக்கு கண்கள் பார்வைக்கு உன்னுள் விழுந்த பின் இந்த கண்கள் பார்வைக்குத்தான் கண்களாய்......

  21. பத்து மாதம் சுமந்தவளே எனை பாலூட்டி வளர்த்தவளே கண்ணின் இமையாய் காத்தவளே கற்றவனாக்க பெரிதும் முயன்றவளே நோயின்றி வளர்ப்பதற்காய் நோயாளி ஆனவளே அம்மா ஆனாலும் உனை வெறுக்கின்றேன். பாசத்தையும் நேசத்தையும் ஊட்டியவளே தவறுசெய்துவிட்டாய் என்னம்மா வீரம்மில்லாத கோழையாய் நான் நண்பர்கள் மாவீரர்களாய் போராளிகளாய். நான் மட்டும் முகமிழந்து அந்நிய நாட்டில் ஆனாலும் சற்று ஆறுதல் அதற்காக போற்றுகின்றேன். தாய்பாலுடன் துரோகத்தையும் ஊட்டவில்லை. என் கருத்துக்களாவது விடுதலைக்காய் தாயே அதற்காக போற்றுகின்றேன் நன்றியம்மா

  22. வரும் தமிழீழம் தமிழீழம் சொர்க்கந்தான்.. பெருந் தமிழ்நாடும் தமிழ்நாடும் பக்கந்தான்.. இனியேனும் தணியாதோ யுத்தந்தான்... இளங்காற்றோடு இசைகேட்டேன்.. சந்தந்தான்.. மழலை சிரிக்க... மான்கள் குதிக்க... மண்ணெல்லாம் மலரோடு ஜொலிக்க...முற்றங்களெல்லாம்.. மங்கையர்.. கரங்கள்.. வளையல் குலுங்க.. மாக்கோலம்..போட்டிருக்க... இமயங்கள் காண.. இளைஞர்கள் யாவரும்.. ஞானஒளி ஏற்றிவைக்க.. ஏழ்மையில்லை..இனி ஒரு பயமுமில்லை.. நள்ளிரவில்.. மின்விளக்கு சிரிக்க... வரும்... தமிழீழம் தமிழீழம் சொர்க்கந்தான்.. மண்ணின் வளத்துக்கு உரமான உள்ளங்கள் வாழ்க.. மண்ணின் வளத்துக்கு உரமான உதிரங்கள் வாழ்க...

  23. Started by slgirl,

    நினவுகளில்... என் அன்பே ஏனோ நான் இன்னமும் உன் நினைவுடனே நீ தான் சொல்லி விட்டாயே நாம் இனிமேல் நண்பர்கள் என்று என்னால் ஏனோ இதனை ஜீரணிக்க முடியவில்லை என்ன நான் செய்வேன் உந்தனை மறக்க நீயே எனக்கு ஏதும் வழி சொல் உன்னில் நான் நிஜமான உள்ளம் இழந்தேன்...இதை நான் திருப்பி பெற்றுகொள்ள விரும்பவில்லை நீயோ எடுத்து செல் என்று கூறி பல காலம் ஆகி விட்டது முடியாது அன்பே என்னால் அது என்றுமே முடியாது அன்பே எப்படி நான் வாழ்வேன் உந்தன் அன்பு அது என்னில் இல்லை என்றால் பதில் ஏதும் கூறு அன்பே என்னவனாய் நீ வர மாட்டாயா...???

    • 7 replies
    • 1.2k views
  24. நட்புக்கு இலக்கணம் நான் கண்டு கொண்டேன்... நங்கை அவளிடம்.. ஆணுக்கும் பெண்ணுக்கும்.. காதலும்.. காமமும்தான் பாலம் போடுமா.. இல்லை... நட்புப்பாலத்தில்.. நானும் அவளும்.. அவள் என் வாழ்வுக்கு ஒளி தந்த வெண்ணிலவு.. என் தாயைப்போல.. அவள்..என் துயருக்கு தோள் தந்த தோழி.. என் மனைவி போல.. அவள் என் சிரிப்புக்கு சேதி சொன்ன சினேகிதி ஆருயிரைப்போல.. அவள் என் துயிலுக்கு மடி தந்த நாயகி நான் மழலை போல... அவள் என் சோர்வுக்கு விடை தந்த தாதி என் தந்தை போல... அவள் கண்ணீரால்.. என்னைக் காயப்படுத்தியிருக்கிறாள்... என் கண்ணீரால் நான் அவளைக்குணப்படுத்தியிருக்கி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.