Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வளர்ந்து விட்ட தென்னை வாடியது-தன் உடலைப்பார்த்து! தான் இழந்துவிட்ட ஓலைகள் எத்தனை... எண்ணிப் பார்த்தது வடுக்களை... கீழே வீழ்ந்து விட்ட ஓலையொன்று ஆறுதல் சொன்னது! வந்து போகும் சொந்தம் யாவும் நிலைப்பதில்லை எனது வீழ்ச்சியிலும் உனக்கு வளர்ச்சியுண்டு! இழப்பின் வடுவை-நீ பாராதே.... தவித்திருக்கும்-மானிடர்கு இளனீர் கொடு...! உன் பிறப்பின் நோக்கை அறிந்துவிடு... அதனால் வடுவை பாராதே வானை நோக்கி-இன்னும் வளர்ந்து விடு..!

    • 22 replies
    • 3.4k views
  2. திருமலை தந்த சீலனே திரும்பி பார்க்க மறந்தனர் புல தமிழன் புலிகளின் மூத்த தாக்குதல் தளபதி நீ உன் முதல் இலக்கு சிங்க கொடி உயிர் குடிக்கும் ஆயுததாரிகளின் முன்னே தனித்து நின்று தீக்கிரையாக்கினாய் அக்கொடியை தந்தையும் தனயனும் நெஞ்சில் சுமந்தனர் அக்கொடியினை புலத்தில் சுமந்தாய் நீ தமிழை நெஞ்சில் விளையாட்டு வேறு அரசியல் வேறு விளக்கம் கொடுத்தனர் கனவான்கள் விளையாட்டு பருவத்தையே துறந்தாய் விடுதலைக்காக,மறந்தனர் புல தமிழர் படைத்தான் தலைவன் உன் பெயரில் படையணி உன் உறவுகள் தொடர்ந்த்னர் உன் பணியினை தகர்ந்தன சிங்க கொடி இராணுவ தளங்கள் கொடி காவி விமானங்கள்,நிலையங்கள் காவுகின்றனர் கொடியினை கையில் புல தமிழர்கள் விளக்கம் கொடுக்கின்றனர் நடுநி…

  3. வெறி பிடித்து திரியுது பார்... சிங்கள இனம்- இங்கே சொறி பிடித்து அலையுது பார்... சில தமிழரினம்! கொள்கை என்று குழு பிரிந்த குரங்குக் கூட்டம்-இப்ப கொப்புத் தாவி போனது பார்... கொள்கை வேஷம்! இருந்தாலும்.... மக்களுக்காய் மடிகின்ற மறவர் கூட்டம்! எதிரி வந்தால்தான்-பதில் அடி கொடுப்போம்.... என்குது பார்..! அன்று தொட்டு இன்றுவரை பேச்சு வார்த்தை இடை..இடையே.... எல்லைச் சண்டை....! எதிரி அழைப்பது.... இப்ப-போருக்கு இன்னும் நாம் சொல்லவில்லை இ....தோடா வாறம் என்று! இன்னும் எதற்காக வெயிற்ரிங்.... அடிக்கின்ற மணிக்கும்.. பாடுகின்ற குருவிக்கும்... செயலால காட்ட வேணும்.... இறுதி போரிங்கு …

  4. மாற்றுக்கருத்து! மண்ணுக்குள் மகனை புதைத்துவிட்டு........... மார்பிலடித்து அழுகிறாள் தாய்......... இவன் முன்னே போய் நின்று சொல்கிறான்.......... மகிந்த ராஜபக்சவும் - மனிசனே என்று! கட்டியணைத்து கொஞ்சிய - தன் மகளும் .......... தொலைந்தாள்.......... தங்கமே என்றழுதான் தகப்பன்.......... இவன் சிங்கத்தின் வால்பிடித்து சிரித்துக்கொண்டே - சொல்கிறான்.. தவறென்ன அதிலே.......... கதிர்காமரும் - தமிழனே எங்கிறான்! சேற்றுக்குள் கிடந்தாலும்................ சோற்றுக்காய்............ தாயின் சேலையை கூவிவிற்று . குடல் நிரப்பி கிடக்கிறான்! குருத்துக்கள் எரிந்து போச்சு. கொள்ளி போட............. மயானம் நோக்கி மனிதம் . பயணம் ஆச்சு . கொள்ளிசட்டியின் …

    • 17 replies
    • 3k views
  5. மன்னா மாமன்னா! நீ ஒரு மாமா மன்னா! பூமாரி தேன்மாரி நான் பொழியும் நீ ஒரு மொள்ள மாறி அரசியலில் நீ தெள்ளியதோர் முடிச்சவுக்கி! தேடிவரும் வறியவர்க்கு மூடா! நெடுங்கதவு உன்கதவு என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு! எதிர்த்து நிற்கும் படைகளை நீ புண்ணாக்கு மண்ணோடு மண்ணாக்கு! இந்த அகிலத்தை அடைகாக்கும் அண்டங் காக்கையே!!! - இந்தக் கவிதை மாமன்னர் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியாரைப் போற்றி புலவர் பாலபத்ர ஓணாண்டி அவர்களால் பாடப்பட்டது....

  6. Started by karu,

    எண்பத்தி மூன்றினிலே (யுகசாரதி) எண்பத்தி மூன்றினிலே - ஆ இலங்கைத் தீவினிலே எண்பத்தி மூன்றினிலே இந்து மா கடலுக்கு நடுவினிலே - ஆடி இருபத்து நான்கிற் தொடங்கியதே துயர் இலங்கைத் தீவினிலே கண்பட்டதோ இத் தமிழினத்திற்கென கண்டவர் யாரும் வருந்திட எங்களைப் புண்படச் செய்தனரே-ஒரு போக்கிடமற்ற அகதிகளாக்கியே எண்பட்ட யாவரையும் தமிழ் என்றறிந்தால் உடன் கொன்றெறிந்தார் - அந்தோ (எண்பத்தி...) நெஞ்சங் குமுறிடவே-கற்பு நீங்கிடச் செய்த கொடுமையிலே - அந்தப் பஞ்சைத் தமிழ் மகளிர்-கொடும் பாவிகளாற் தங்கள் ஆவியை விட்டிட அஞ்சிய பாலகர்கள்-தங்கள் அன்னையர் மார்பில் அமுதமருந்தியே துஞ்சிய செய்திகளும்-பல துயரக் கதைகளும் மறந்திடுமோ-அந்த (எண்பத்தி...) …

    • 13 replies
    • 2.4k views
  7. Started by Kaviipriyai(Ziya),

    பணம் மனிதனின் உடலை வருத்தி மனதை திடப்படுத்தி சேகரிக்கத் தூண்டுவது பணம்.... தம் அன்றைய தேவைகளிற்காக எதிர்காலக் கனவுகளின் தேடல்களிற்காக சிறுகச் சிறுக சேர்த்துவைக்க தூண்டுவது பணம்... மனிதர்களின் நல்வழியையும் தீயவழியையும் சந்தோஷத்தையும் துக்கத்தையும் உருவாக்குவது பணம்.... மொத்தத்தில் பணம் தான் வாழ்க்கை என்று வாழ்பவர்களின் நிலை கடலினுள் இறங்கி உப்புத் தண்ணீரை பருகுவது போன்றது.... அடிப்படை வாழ்க்கைக்கு பணம் அளவுடன் தேவை என்று வாழ்பவர்களின் நிலை தெளிந்த நீரோடையில் மீன்கள் வசிப்பது போன்றது....

  8. Started by jcdinesh,

    சாந்த முகமதியாள் - அவள் சந்தண மணத்தழகாள் காந்தள் மலர் விரலாள்- என் கவிதைக்கு கருப்பொருளாள் கவரி மானொத்த மானத்தாள் கனிரசக் குரலழகாள் பாவலனாய் என்னைக் கவி படைக்க வழி சமைத்தாள் சின்ன இடை ஒடிந்து விழும் - அவள் சிங்கார நடையழகாள் அன்பொழுக பேசுவதில் -என் அன்னையையே வெண்றுவிட்டாள் சின்னக் குடைபோல் விரியம் செம்பவள வாய் திறந்தால் மின்னுகின்ற நட்சத்திரப் பல்லழகு கவிபடைக்கும் விம்மித் ததும்புகின்ற பொன் வண்ண அழகு அவள் தீபம் அவள் பெயரில் - எனக்கு அளவுக்கு மேல் ஆசை பட்டுத் தளிர் மேனி அவள் பாதம் செந்தாமரை -வெண் பட்டுத் துகில் உடுத்து நான் கவிஎழுத வைத்தவள் தான் என் கவிக்கு நாயகியாள் கற்பனைக்கு கருப்பொருளாள் ஆனால் இன்னும்…

    • 18 replies
    • 2.8k views
  9. Started by Kaviipriyai(Ziya),

    நண்பனின் நட்பு போலி முகம் காட்டி புன்னகைத்ததும் இல்லை.... இவள் மனதினை என்றும் நோகடித்ததும் இல்லை... நண்பனைப் போல் நடித்ததும் இல்லை... நட்பினுள் புகுந்து சுத்து மாத்து செய்ததும் இல்லை... வாழ்க்கையில் தடம் மாறி போக சொன்னதும் இல்லை.... வீணான கதைகள் என்றும் கதைத்ததும் இல்லை... உன் நட்பெனும் உறவில் நான் பிரிய நினைத்ததும் இல்லை... உன்னை என்றும் நான் நினைத்துப் பார்க்க மறந்ததும் இல்லை... இல்லை இல்லை என்று சொல்ல நல்லவைகள் குறுகியனவும் இல்லை.... நம் நட்பெனும் வட்டம் போலியானதும் இல்லை....!

  10. உனனைத் தொடமாட்டேன் உன்னைத் தொடமாட்டேன் வெண்நிலவே உன்னைத் தொடமாட்டேன் கண்களிலே உன்னை நானும் கொள்ளை இடமாட்டேன் காதல் என்று சொல்லி உன்னை இழுக்கமாட்டேன் உன்னைப்போல நானும் தேய்ந்து வளரமாட்டேன் காதல்கன்னி அவள்போல உன்னை இம்சை செய்யமாட்டேன் எட்டாத உயரத்தில்-நீ ஏனி வைத்தும் உன்னைப் பிடிக்கமாட்டேன் உன்னைப்போல நானும் இங்கே தனிமையில் ஏங்கமாட்டேன் தேன் நிலவு தேவதையே-நான் தேம்பியழமாட்டேன் தேடி நீ என்னை வந்தாலும் உன்னைத் தீண்டிவிடமாட்டேன்

  11. நினைவுகள் வருது நினைவுகள் வருது நனவாய் இருந்த நினைவுகள் இன்று கனவாய் வருது கடலின் அலைபோல் மழைபோல் பொழிந்து கவியாய் வருது பிறந்த மண்னில் தவழ்ந்த ஞாபகம் நினைவினில் வருது மயிலின் நடைபோல் நடைபயின்ற செம்மண்வாசம் நறு மணமாய்வருது கிளியின் மொழிபோல் தமிழ் சொன்ன முதல் ஆசான் நினைவுகள் வருது பொழியும் மழையில் ஆடும் மயில்போல் மழையில் நனைந்த நினைவுகள் வருது ஆலமரத்து விழுதில் ஊஞ்சல் ஆடிய நினைவு கடல்அலை போல் அடி வருது நிலாவின் முற்றத்தில் உறவுகள் சேர்ந்து கூழ் குடித்த நினைவுகள் கண்ணீராய் வருது திருவிழாக்காலத்தில் கன்னி அவளைக் காதல் செய்த நினைவுகள் வலியாய் வருது பள்ளி நாட்களில் தோள் தோள் நின்ற …

  12. உன் நிழல் கூட இனி உனக்கு இல்லை!! வெட்டி வெட்டி எறிந்தாலும் நகம் துளிர்விடும்...! துட்டகைமுனு படை... விட்ட தவறை.... சரி செய்ய.. விளங்காமல் தவிக்கும்! செத்து செத்து பிழைக்கும்... இனத்தின் முகத்தில்-ஒரு சிரிப்பு பூக்கும்...!! யூலை படுகொலை... ஆரம்பம் அவருக்கே-இனி முடித்து வைக்க.... முடியுமா அவராலே? தன் வினை.. தன்னைச் சுடும்... தமிழனை எரித்தவர்.. வாழ்வு........ இனி தலைவர் அனுமதி பெற்றே... தன் நிழலைக்கூட இனி தான் நம்பும்!!

    • 16 replies
    • 2.3k views
  13. கடந்த காலமும் எதிர் காலமும் நடந்தவை பற்றி சிந்திக்காதீர்கள் நடக்கபோறவை பற்றி சிந்தியுங்கள் நடந்தவை எல்லாமே கனவுகள் நடக்கபோறவைகள் தான் நிஜங்கள் நடந்த பாதையில் நிழல்கள் அதிகம் நடக்கபோகும் பாதையிலோ நியங்கள் நடந்து வந்துவிட்டேன் என பெருமிதம் கொள்ளாதீர்கள்...இடர் பட்டாலும் நடக்கபோகும் பாதயில் இடர் வராது பாதுக்காத்துக்கொள்ளுங்கள் நடந்தவை நாடகங்கள் ஆகட்டும் நடக்கபோறவை நிஜங்கள் ஆகட்டும் கடந்த கால நினைவுகளில் எதிர்கால கனவுகளில் இந்த நிகழ் காலத்தை தொலைத்துவிடாதீர்கள்

  14. நெருப்புக் குயில்கள் நிந்தனை எத்தனை வந்தணைத்தாலும் தங்கள் கருத்தை தயங்காது உரைக்கும் சிகப்புப் பக்கச் சிந்தனையாளர்கள். சகட்டுமேனிச் சமூகத்தை - தங்கள் சிகப்பு எண்ணங்களால் சீர்தூக்கி வைப்பவர்கள். முரட்டு மாட்டின் முதுகில் ஏறி - அதைப் புரட்டி எடுத்து சிறு பேனா முனையில் விரட்டும் விவேகிகள். முட்டாள்த் தனத்தின் முகமூடி கிழிப்பவர்கள். கட்டாக் காலிகளையும் தம் எழுத்துக்களால் கட்டி வைப்பவர்கள். எட்டா உயரத்தில் எதுவும் இல்லையென்று சிட்டாகப் பறந்து சிறகடித்துக் காட்டுபவர்கள் சாட்டையாய் வீசும் சடுகுடு வார்த்தைக்குள் - ஓர் சமுதாயத்தின் பொல்லாச் சங்கதிகள் உரைப்பவர்கள். பழமையை எதிர்த்து புதுமையை அணைத்தாலும் பாழாய் போகாமல் பண்பு…

    • 10 replies
    • 1.9k views
  15. Started by Rasikai,

    எது சுகம்? ---------------------- பட்டப்படிப்பு சுகமா? அதனால் வந்த பதவி வாழ்வு சுகமா? கட்டிக்காத்த சொத்து சுகமா? இல்லை கட்டிலறை என்னும் மனித இச்சை தான் சுகமா? அள்ளி அள்ளி சேர்க்கும் பணம் சுகமா? அதனால் வரும் பகட்டு சுகமா? உண்மை சொல்லுங்க அம்மா இல்ல ராசா இல்ல சாப்பிடுடா செல்லம் என்று சொல்ல அன்னை கையால் சோறு உண்டு வாழ்ந்தோமே அதை விடவா இத்தனையும் சுகம்????

    • 34 replies
    • 4.1k views
  16. யார் அந்தக் கள்ளி?? வானத்தில் தூங்கும் கள்ளி உனக்கு அங்கு வாழ்வு தந்தது யாரடி? தாரகைகளிடையினுள் ஒரு தாஜ்மகால் உறக்கம் தங்கத்தட்டாய் பூமிக்கு மேலே ஒரு புதையலை தூங்க விட்டது யாரடி? கறுத்து போனது வானம் இறுக மூடிய விழிகளுக்குள் இருட்டின் பேரால் ஊரடங்கு சட்டம் ! விழித்தெழுந்து பார்த்தேன்! காணவில்லை! விண்வெளியில் வெள்ளை நிறம் அடித்தது யாரோ?? கும்மியடித்த இருளை ..... கொன்று போனது யாரோ? எங்கு போனாள் அவள்? அள்ள அள்ள குறையாத அழகுக் கள்ளியா நீ? யாரிடம் வாங்கினாய் யாருக்கும் சொல்லாமல் இந்த அழகை...! மெல்ல வானம் விடிகையில் சொல்லாமல் மறைகிறாய் மெல்ல வானம் சிவக்கையில் கேட்காமலே வந்து அணைக்கி…

    • 30 replies
    • 3.2k views
  17. அழகா அழகா வான் மதிதான் அழகா பூமியில் பெண்மதி அவள்தான் அழகா வானத்து விண்மீன்கள் ஒளிதான் அழகா மங்கை அவள் கண் சிமிட்டல்தான் அழகா மேகத்தில் தோன்றுகின்ற வானவில்தான் அழகா மங்கை அவள் தாவணியின் வர்னங்கள்தான் அழகா கீழ்வானம் சிவக்கின்ற சூரியன் தான் அழகா வெக்கத்தால் சிவக்கின்ற அவள் கன்னங்கள்தான் அழகா பூமியை நனைக்கின்ற மழைத்துளிகள்தான் அழகா க்ண்களைக் கழுவும் அவள் குறும்பு அழுகைதான் அழகா கூவுகின்ற குயிலின் குரல்தான் அழகா அவள் பேசுகின்ற தமிழ்தான் அழகா

  18. இன்று யாழ்ப்பாணம் பரியோவான் - மத்திய கல்லு}ரிகளுக்கிடையில் நிகழும் துடுப்பெடுத்தாட்டத்தை எண்ணியதும் நான் முன்னார் எழுதிய இக்கவிதை நினைவுக்கு வந்தது. படித்துப்பாருங்கள். துடுப்பெடுத்தாட்டம் ஒருமரத்தின் உடலெடுத்து உரித்துப் பதனுமிட்டு ஒத்தடம்போல் எண்ணெய் தேய்த்து - அதற்கு "கிரிக்கட்" மட்டையென பெயருமிட்டு துடுப்பு எனசொல்வார் தமிழில். பத்துப்பேர் சுற்றிநிற்க பந்தை ஒருவர்வீச தத்திவரும் தோல்ப்பந்தை மட்டை கொண்டடிக்க - நிலத்தில் பட்டுவிடாமல் பிடித்தால் அகல்வார் வெளியே முக்கி முக்கி அடித்தவர். கையை மடிக்காது வீசவேண்டும் அதனை கைகொண்ட மட்டையால் தடுக்கவேண்டும் - இல்லையெனில் தகர்க்கும் தடிமூன்றும் தன்காலை முன்வைத்தால் …

    • 11 replies
    • 1.2k views
  19. விடுதலை வேண்டும் என்கின்ற மானிடா இறக்கை அடிக்கும் பச்சைகிளிதான் நானடா என்னை சிறைப்படுத்தி அழகு பார்ப்பது ஏனடா அழகா இருப்பது என் தப்பா நீயும் சொல்லடா உனக்கு இருக்கும் உரிமை எனக்கு ஏன் இல்லையா? இது என்ன நியாயம் நீயும் சொல்லடா?

  20. இன்னுமா உறக்கம்?...... இன்னுமா....உறக்கம்? இடியேறு உன்னில் விழ.. ஈழத்தில் உன்னினம் அழிப்பு. இங்கு நீ இன்னும்..... இதமாய் உறங்கு! ஊருக்கொரு சங்கமென்று கூறுபோட்டதுதான் மிச்சம் ஊர்ச்சனத்தின் வாழ்வு உனக்கெதற்குப் போய் உறங்கு! நிலம்விட்டு வந்த உந்தன் புலன்போற திக்கைப் பார்த்து புல்லரிப்புப் பொங்குது! புூரிப்பாக் கிடக்குது! புளுகுக்குச் சொல்லவில்லை பக்குவமா உறங்கு! எல்லாம் முடிந்த பின்னால்எங்கே? ஏது பிழை? ஆயிரமாய்க்கூடி அங்கலாய்க்க வேண்டுமே.. அதற்காக உறங்கு! கறுப்புப் படிந்துவிடக் கதவோரம் நிற்கிறது களையாகக் கைகூப்பி வரவேற்க நிற்கவேணும் இப்போது கண்ணுறங்கு! பிடறியில கொண்டு வந்து வெடிகுண்டைப் போட்டாலும் புண்ணாக்குத் தின்னிகளே! போர்த்திக்கொண்டு உறங்குங்கள்! ம…

  21. என்றேனும் நினைத்ததுண்டா? புலம்பெயர்ந்து வந்திங்கே புதுவாழ்வு பெற்றாலும் பிறந்தஎம் மண்நினைவாய் என்றென்றும் வாழ்கின்றோம். எல்லோர் முன்னாலும் எடுப்பாகப் பேசும்பலர் எமமண்ணின் குறைகளைய எதனையுமே செய்ததில்லை பசியெடுக்க வில்லையெந்தன் பிள்ளைக்கு எனச்சொல்லி பரிகாரம் செய்வதற்காய்ப் பகலிரவாய் அலைபவர்கள் பசியெடுத்த போதெல்லாம் பச்சைத் தண்ணீரால் பசிமாற்றும் எம்மீழக் குழந்தைகளை நினைப்பதில்லை கிழங்குப் பொரியலுடன் குளிர்பானம் கொடுத்துத்தம் குழந்தை இடையுணவுத் தேவையினைப் போக்கும்பலர் கிழங்கை அவித்துத்தம் முழுநேர உணவாக்கும் கண்மணிகள் பசியகற்ற உருப்படியாய்ச் செய்ததில்லை பிறந்த நாளென்றும் பிறவென்றும் கொண்டாடிப் புகைப்படப் பெட்டிமுன்னால் புன்னகைத்து நிற…

    • 15 replies
    • 2.1k views
  22. நோயினை சொல்லுவார் நொடிகளை விரையமாக்குவர் நோக்கமின்றியே -பலர் ஊக்கத்தை கெடுப்பார்கள் வாதிடு என்பார் போதுமினி என்கண்டாய் என்பர் மேடையின் எறி முழக்கம் மடமையில் பல உளறல்கள் வாடையில் கூட இல்லை அவர் வாயில் வாய்மை எழு எழு என்றார் எழுந்த பின் மறைந்தார் மானத்தமிழராம் இவர்கள் மக்கள் தொண்டராம் இவர்கள் மண்ணுக்காய் மக்களுக்காய் மாய்த்திட தம் சொகுது மறுத்தே நிற்கும் ம(ா)ன தமிழர்கள் ஆனையிறவை மீட்க அதை வைத்து ஓடி வந்தார் அடுத்த முகாம் பிடிக்க அடுத்தடுத்து வந்தார் ஆனாலும் தடை கண்டு அடுப்படி சென்றார்.. ஆகுதியான வீராரின் நமத்தை சுமந்து அடிக்கடி வந்தார் தடைச் செய்தி கேட்டு தம் சுய நலத்திற்காய் தியாகச்சுடர்களை மறந்தா…

    • 13 replies
    • 1.6k views
  23. Started by N.SENTHIL,

    காட்டுமல்லிக்கொடியாய் யாருமற்ற வனத்தில் முளைத்து கிடந்தேன் பூப்பறிக்க வந்தவள் - இந்த கொடியில் ஆசை வைத்து பறித்து போனாள் பதியம் போட்டாள் , பொழுது தவறாமல் நீர் ஊற்றினாள் உரம் போட்டு என் வளர்ச்சிகண்டு பூரித்தாள் மொட்டுவிடும் பருவத்திலொரு நாள் நன்று கொதித்த வெந்நீர் ஊற்றினாள் வேர் வரை பாய்ந்து துடித்தேன் - ஏன் இப்படியென்றேன் பூக்கள் பிடிக்காதென்றாள் பூப்பதுதானே என் இயற்கை விதி என்றேன் பூக்காது பார்த்துக்கொள் என்றாள் ............. முயற்சிக்கிறேன் என்று சொல்லி செத்துப்போனேன்

    • 7 replies
    • 1.5k views
  24. கரை தேடும் அலை மீண்டு(ம்) கடல் சேர்கிறது இலைஉ திரும் மரம் மீண்டும் துளிர் விடுகிறது மண் வீழும் நீரும் ஆவியாய் விண் மீள்கிறது என்ன தான் விசித்திரமோ? பிரிந்து போன நம் காதல் மட்டும் இன்னும் உயிர்ப்படைய வில்லை தரித்து நிற்கும் புகைவண்டி மீண்டும் பயணிக்கிறது இடைவேளைக்குப் பின்னரும் திரைப்படம் தொடர்கிறது நின்று போன யுத்தம் மீண்டும் நிகழ்கிறது என்ன தான் விசித்திரமோ? நின்று போன நம் காதல் மட்டும் மறுபடி தொடரவே யில்லை :wink:

    • 41 replies
    • 4.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.