கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
கள்ளத்தோணி இம்முறையும் குழந்தையை நாங்கள்தான் கொன்றோம் ஏனெனில் அவனுக்கென்று எம்மிடம் எதுவுமில்லை மூன்று வயதுச் சிறுவனொருவனுக்கு ஆழ்கடலில் என்ன வேலையென நீங்கள் கேட்கக்கூடும்? அவன் தன் தந்தையைச் தேடிச்சென்றான் தந்தை எதற்காகச் சென்றார்? யாருக்கும் இங்கு ஒன்றுமில்லையே அதனால் அக்குழந்தையை நாம்தான் பேர்த் நகருக்குச் செல்லுமாறு துரத்தினோம் தந்தைக்கு கொடுப்பற்காக நெடுநாளாக வைத்திருந்த முத்தங்களைத் தவிர அவன் எதையும் எடுத்துச்செல்வில்லை கடலில் இறங்கிய பொழுது முன்னால் எதிர்கரையும் மரணமும் மிதந்தது எனினும் அவன் சென்றான் ஏனெனில் அவனுக்கென்று நிலம்தான் இல்லையே …
-
- 0 replies
- 440 views
-
-
காலை புலர்ந்தது காலை புலர்ந்தது- பா.உதயன் காலை புலர்ந்தது காலை புலர்ந்தது காலைச் சேவல் கூவிச் சொன்னது கதிரவன் எழுந்தான் கனவுகள் உயிர்த்தது பொழுது புலர்ந்தது பூக்கள் மலர்ந்தது உழவனுக்கு என்றே உலகம் செய்து உன்னையும் என்னையும் உயிரோடாக்கி மண்ணையும் தந்து மகிழ்வித்த தாயினை எண்ணுக மனமே எண்ணுக எண்ணுக காலை புலர்ந்தது காலை புலர்ந்தது எழுக தமிழா இன்னும் துயிலுவியோ இன்றைய காலை உனக்காய் விடிந்தது பொங்குக மனமே பொங்குக பொங்குக ஆலய மணிகள் அன்பினை ஒலிக்க ஆயிரம் பறவைகள் கூடியே பாடின அழகிய குயில்கள் கூவி இசைத்தன கதிரவன் வாசலை திறந்து இங்கு வந்தான் வயல் வெளி எங்கும் தீபங்கள் எரிய வானத்து தேவனை விருந்துக்கு அழைத்து வாசல்கள் …
-
- 2 replies
- 439 views
-
-
அன்னை கருவில் அழகான வாழ்வு அகிலம் கண்டும் ஆனந்தம் கொண்டு மனிதப்பிறவியாய் மண்ணில் ஆர்ப்பரித்து மனிதனாய் வாழ மறுக்கின்ற உலகம் செய்த பிழை எதுவென்று சொல்லாது தளம்பறித்து சிசுவாய் இருந்தாலும் சிதைத்து சுகம் கண்டு ஓடு மட்டும் துரத்தி ஓட்டாண்டியாக்கி ஒய்யாரமாய் படம் போட்டு ஒப்பாரியில் வாழ்கிறார்கள் எல்லார் வாழ்விலும் எட்டப்பர்களாய் எட்டி உதைத்து எரித்துப் போட்ட சுதந்திரம் அங்குமிங்குமாய் அலைமோதும் அகதியாய் அல்லல் படுத்தும் அறிவு கெட்ட உலகம் சுதந்திரம் என்ற சுவாசம் அடைந்து பெற்றவர்களும் அதனை அளிக்க மறுத்த ஆட்சியாளர்களாய்.... மரத்துப்போன வாழ்வுடன் மடிந்தொழிந்து போகுமுன் மனிதன் என்றாவது மறதியிலாவது ந…
-
- 0 replies
- 437 views
-
-
"அன்புக்கோர் இலக்கணம் ஆனவள் அன்னை" "அன்புக்கோர் இலக்கணம் ஆனவள் அன்னை அகிலத்தில் அவளைப்போல் வேறெவரும் இல்லை? துன்பங்கள் தாங்குமவள் தியாகமோ பெருவியப்பு தூயபெரும் இறைவனுக்கோ உலகிலிவள் மறுபதிப்பு!" "சுமையென நமையொரு கணமும் நினையாதாள்; சூழும் இடர்கள்நோவு துயரங்கள் பொறுப்பாள்; குமையாள்; கொதியாள்; குலுங்காமலே நடப்பாள்; குழவி, மடி தவழ்கையிலோ கொண்டதுன்பம் மறப்பாள்!" "நடைதவறி வீழ்கையிலே நாடிவந்தே அணைப்பாள்; நமதவறுகள் மறந்தே மன்னித்தன்பால் பிணைப்பாள்; கடையனென்று பிறர்சொலினும் கைதடுத்துக் காத்திடுவாள்; கருமத்தில் வெல்ல மெல்ல நெஞ்சில் துணிவேற்றிடுவாள்!" "வானும் கடல்மலையும் கானகமும் விந்த…
-
- 0 replies
- 436 views
-
-
"யாரோ? நான் யாரோ ?" "தெருவோர மதகில் இருந்து ஒருவெட்டி வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும் செய்யா கருங்காலி தறுதலை நான்" "கருமம் புடிச்ச பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும் குனிந்து விலக எருமை மாடு நான்" "வருடம் உருண்டு போக வருமாணம் உயர்ந்து ஓங்க கருணை கடலில் மூழ்க மிருக-மனித அவதாரம் நான்" "தருணம் சரியாய் வர இருவர் இரண்டாயிரம் ஆக ஒருவர் முன் மொழிய தரும-தெய்வ அவதாரம் நான்" "ஊருக்கு கடவுள் நான் பாருக்கு வழிகாட்டி நான் பேருக்கு புகழ் நான் பெருமதிப்பு கொலையாளி நான்" "குருவிற்கு குரு நான் …
-
- 2 replies
- 436 views
-
-
பற்றி எரிகிறது பாலஸ்தீனம்-பா.உதயன் பற்றி எரிகிறது பாலஸ்தீனம் அன்று ஒரு நாள் முகம் எரிந்த முள்ளிவாய்க்கால் போலவே எரிந்துகொண்டிருப்பது பாலஸ்தீனம் மட்டும் இல்லை அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் பொய்ச் சத்தியமும் போலி முகங்களும் வரலாற்றுத் துரோகங்களும் அவர்கள் மனசாட்சியும் கூடவே எரிகிறது ஐ நாவின் அறமும் அதன் தர்மமும் அமைதியாகவே பார்த்திருக்கிறது எரிந்து கிடக்கும் சாம்பலில் இருந்து எப்போதாவது ஒரு பூ பூக்காத என்று ஏங்கித் தவிக்கின்றன பாலஸ்தீன குழந்தைகள். பா.உதயன்✍️
-
- 2 replies
- 433 views
-
-
-
- 0 replies
- 430 views
-
-
இருபத்தேழு ஆண்டு முன்னால் இதே போன்ற ஒரு நாளில் இருளிலே வெடிச் சத்தம் இஷாவின் பின் உலுக்கியது புலி நாய்கள் பூந்து புள்ளைகளையும் ஆட்களையும் பலியாக்கிப் போட்டாண்டா பாதையிலே அவலக் குரல். பக்கத்துப் பள்ளிக்கு பறந்து வந்த செய்து கேட்டு திக்கற்று ஓடினோம் விக்கித்துப் போனோம் அள்ளாஹ் அள்ளாஹ் என்று அடங்கும் உயிரோடு பிள்ளைகள் துடி துடிக்க.. உள்ளம் நொறுங்கியது இருண்ட பள்ளிக்குள் எங்கும் மரண ஓலம் கரண்டிக் கால் நனைய காட்டாறாய் ரத்தம் காயப் பட்டோரை கைகளால் தூக்கும் போதே சாய்கின்ற தலை கண்டு வாய் விட்டு அழுதோம். கலிமாவைச் சொல்லி கண்களை மூடி விட்டோம் புலி நாயைப் பிடித்து பொசுக்க வெறி கொண்டோம் நூற்றி சொச்சம…
-
- 0 replies
- 430 views
-
-
"அந்த பிள்ளையைத் தெரியுமாடா? " நண்பனிடம் கேட்டேன் "நந்தினியைத்தானே சொல்கிறாய்? பாவப்பட்ட குடும்பமடா ஒரு அண்ணன் வீரச்சாவு அக்கா போராளியாய் போய் இறுதி யுத்தத்தோடே இல்லாமல் போய் விட்டாள் இவள் மட்டும் தான்டா மிச்சமாயிருந்தாள் தகப்பனைக்கூட இந்தியாமி தனங்கிளப்பில் வைத்து சுட்டுட்டான் இவளையும் நாய்கள் விடவில்லையே" ஈரவிழிகளோடு சொல்லி முடித்தான் நண்பன் இவளுக்கு ஏதோ நடந்திருக்கிறது இல்லையென்றால் ஏனந்த பிஞ்சு தன்னையே கருக்கிக் கொண்டிருக்கும் நண்பனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் நாலு வீடு தள்ளித்தானே இருக்கிறான் "என்னடா நடந்தது அவளுக்கு?" "எதையடா சொல்வது? எப்படியடா சொல்வது? எங்கட தெருவின் செல்லப்பிள்ளை அவள் அழகாய் இருப்பாள் என்ட மூத்த…
-
- 2 replies
- 429 views
-
-
-
- 0 replies
- 428 views
-
-
[size=4]செங்கொடி சுமந்த செல்வங்கள் _இவர்கள் [/size] சங்கத்தமிழ் காத்த செம்மல்கள் [size=1][size=4]வெங்களம் புகுந்த வேங்கைகள் _இவர்கள் வீரத்தமிழின் மங்கள கீதங்கள்[/size][/size] தேகம் கரைத்த தெய்வங்கள் _எங்கள் [size=1][size=4]தேசம் சுமந்த விழுதுகள் யாகம் நடத்திய அக்கினிபிஞ்சுகள் _எங்கும் யாதுமாகி நிறைந்த தென்றல்கள்[/size][/size] முத்தமிழ் காத்த மூலவர்கள்_எம் [size=1][size=4]மூச்சாகி நிலைத்த காவலர்கள் [/size] [size=4]நித்திலம் எங்கும்ஒளிரும் தாரகைகள்_எம் [/size] [size=4]நினைவுகளில் வாழும் ஓவியங்கள். [/size][/size] மலர்சொரிந்து மணியோலித்து விழிகலங்கி [size=1][size=4]முகம்துடைத்து அகல் ஏற்றுவோம்[/size] [size=4]தளர்வகற்றி தடையுடைக்குமொர…
-
- 0 replies
- 428 views
-
-
எனக்குத் தெரியும் என்றாலும் எதிர்மாடித் தமிழனைக் கேட்டேன், எப்போது வரும் தமிழ்ப் புத்தாண்டு? 'எப்போதும் தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரலில் தப்பாது வரும்' என்றான்! 'கண்ணீர் வடிக்கும் சித்திரையாளுக்குக் கைகுட்டை கொண்டுபோ' என்றேன். 'எங்கும் இன்பத் தமிழ் ஒலிக்க வேண்டும்' ஏமாற்றமா? இல்லவே இல்லை என் ஆசைக்கு! காதாரத் தமிழ்ப் பேச்சைக் கேட்கிறேன் கல்லறைகளிலிருந்து! மறைமலை, திரு.வி.க., பாரதிதாசன், பாவணர் தனித் தமிழில் இனிக்க உரையாடுகிறார்களே... கேட்கலையா உங்கள் செவிகள்? ஆனாலும் ஆவலினால் அன்றைய தொல்காப்பியன் திரும்பி வந்தான். மழலையர் பள்ளியில் ஆங்கிலம் படித்தான் அதிலே தவறி ஐந்தாம் வகுப்பிலேயே கல்வியை முடித்தான். ஆர்வத்தால் வள்ளுவனும் திரும்பி வந்தான். தமிழில் படிக்க வாய்ப்பில…
-
- 0 replies
- 425 views
-
-
தேசியத்தலைவர் மேதகுவைப் பற்றிய சிங்களக் கவிதை. வட்ஸ்அப்பில் எனக்கு ஒரு அன்பர் பகிர்ந்ததை யாழ்க்கள உறவுகளோடு பகிர்ந்துகொள்கின்றேன். நன்றி
-
-
- 2 replies
- 425 views
-
-
ஒரு தூக்கு கைதியின் கடிதம் http://youtu.be/tsiZx9omDjo
-
- 1 reply
- 423 views
-
-
ஒரு போராளியின் மகனின் மரணத்தை மற்றொரு பதிப்பாக கண்ட கோலம் ... நெஞ்சுக்குள் எரிமலையை வெடிக்கச் செய்தது. மனிதநேயம் செத்தவர்கள் செய்கின்ற படுகொலைகளில் இதுதாம் உச்சகட்டம். போகட்டும். அணையப் போகும் விளக்கு பிரகாசமாகத்தானே எரியும்? தமிழ்க்குடிகளுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கெல்லாம் நிச்சயம் பதிலடி உண்டு. ஒரு பாலகனை அழைத்து வைத்துக்கொண்டு உணவுகொடுத்து நெஞ்சில் சுட்டுக் கொல்வதற்கு எப்படி மனம் வந்தது? மிருகம் கூட அப்படி எண்ணாதே? சிறிது நேரத்தில் தாம் கொல்லப்படுவோம் என அறியாது பசியாறிக்கொண்டிருக்கும் அந்தப் பிஞ்சைக் கொல்ல எப்படி ஐயா துணிச்சல் பிறந்தது? மனிதனுக்குப் பிறந்தவர் செய்கிற காரியமா இது? இந்திய தூக்குத் தண்டனைக் குற்றவாளிகள…
-
- 0 replies
- 419 views
-
-
"கில்கமெஷ் பாடல் / Love Songs In Sumerian Literature" "ஆடை நெகிழ உடல் மிளிர சாடை காட்டி நளினமாய் அமர்ந்தாள் காலை அகட்டி காமம் தெளித்து தலை அசைத்து சிலையாய் இருந்தாள்!" "பெண்மை வனப்பு சுண்டி இழுக்க ஆண்மை ஆசை அவளில் போக்க கருத்த என்கிடு மிரண்டு வந்தான் பருத்த உடலை காட்டி வந்தான்!" "அருகில் வந்து முகர்ந்து ரசித்தான் உருண்டை கண்களால் கூர்ந்து பார்த்தான் எடுத்த எடுப்பில் அவளை தழுவினான் அடுத்து தன் உடையை நழுவினான்!" "ஈடுஇல்லா அவன் ஆண்மை கண்டாள் நடுங்கும் அவன் தொடையை பற்றினாள் மலை சாரலில் மந்தை மேய மாலை மயக்க…
-
- 0 replies
- 418 views
-
-
தாயின் பாசம்-பா.உதயன் உரிமை மறுக்கப்பட்ட தேசம் ஒன்றில் ஓரமாக ஒரு மர நிழலில் உட்கார்ந்தபடி தனிமையாக பேசிக் கொண்டிருந்தாள் கரும்புலியின் தாய் ஒருத்தி அவர் அவர் பிள்ளைகளுடன் கொஞ்சிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் எங்கும் உலா வருகிறார்கள் எங்கள் பிள்ளைகளை இப்போ மறந்திருப்பவர்கழும் அவர்கள் தியாகத்தை பேசாமல் இருப்பவர்களும் நாளை உன்னை பேசாமல் இருந்திருப்பார்கள் என்று நினைத்து நீயும் போய் இருக்க மாட்டாய் போகட்டும் விடு மகனே யார் மறந்தால் என்ன மூக்கும் முழியுமாய் உயிர் தந்து உன்னை பெற்றெடுத்த தாய் மனம் உனக்காய் அழுகிறது மகனே காற்றோடு சொல்லி கண்ணீரில் எழுதி அனுப்புகிறேன் உன்னை நான் கண்ணுறங்க …
-
- 0 replies
- 417 views
-
-
இலங்கையின் குரங்கு வியாபாரம் Sri Lanka’s monkey business 🙊 -பா.உதயன் மனிதம் கொண்ட மக்களுக்காய் குரங்கு நான் எழுதுவது குரங்குகள் எங்களையே விற்று கடனை அடைக்க நினைக்கும் இலங்கை இது தம்பி இனி நாய் பூனை எலி என்று எதையும் விடாமல் ஏறும் கப்பல் நாளை நாடு போற போக்கை பார்த்தால் காக்கை குருவி கூட இங்கு வாழ பயந்து ஓடும் வரப் போறான் பிடிக்க வென்று இனி அவையும் அகதியாய் ஓட நினைக்கும் காணி நிலம் கடல் என்று கடனுக்காய் சீனாவுக்கு வித்துப் போட்டு கடைசியில தமிழரையும் அகதி வாழ்வாய் அலையவிட்டு அவன் நிலத்தையும் உழைப்பையும் பறித்துப் போட்டு தம்பி இப்போ எங்களையும் அதே வாழ்வாய் வி…
-
- 6 replies
- 413 views
-
-
"பாரிஸ் பையா பாரிஸ் பையா" [திருமண நிகழ்வை மையமாக வைத்த துள்ளு பாட்டு / முதல் முயற்சி] "பாரிஸ் பையா பாரிஸ் பையா பாய்ந்து வாடா பாய்ந்து வாடா பைசா கோபுரம் கொஞ்சம் சரியுது தோள் கொடுடா தோள் கொடுடா" "படிப்பு பாதி தியாகம் பாதி பல்லக்கில் வருவாள் உந்தன் பாதி எண்ணம் பாதி கனவு பாதி மஞ்சத்தில் சாய்வாள் உந்தன் பாதி" "பாரிஸ் பையா பாரிஸ் பையா பச்சை கிளி எட்டி பார்க்குது பஞ்சு மெத்தை காத்து இருக்குது தோள் கொடுடா தோள் கொடுடா" "ஆண்மை கொண்ட அழகு சிங்கமே ஆசை நிறைந்த அழகு வாலிபனே ஆலாத்தி எடுக்க மாமி நிற்கிறா கழுத்…
-
- 3 replies
- 412 views
-
-
1. "ரேசன் கடைக்காரருக்கு குழந்தை பிறந்தது.... எடை குறைவாக...!" 2. "வராந்தாவிலேயே இருந்த வயதான தந்தை.... இறந்த பின் ஹாலுக்குள் வந்தார் புகைப்படமாய்...!" 3. “வீட்டின் பெயரோ அன்னை இல்லம்..! அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்..!” 4. " புறாக்கள் வளர்க்கும் எதிர் வீட்டுக்காரர் என்னிடமிருந்து பறிக்கிறார் பூனை வளர்க்கும் சுதந்திரத்தை...." - நா. முத்துக்குமார். 5. " பறித்த மலரை ஆண்டவனுக்குச் சூட்டினாலென்ன? கல்லறையில் வைத்தாலென்ன? மலருக்கென்னவோ பறித்ததுமே வந்துவிட்டது மரணம் ! " 6. “சர்க்கரை இல்லை... கொழுப்பு இல்லை... எஜமானரோடு வாக்கிங் போகுது ஜிம்மி...!” 7. "வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட…
-
- 0 replies
- 411 views
- 1 follower
-
-
நேற்றிருந்த வாழ்வகற்றி புதியதோர் ஒளியைத் தேடி விரைந்து மாணவனாக தமிழீழ மண்ணில் விடுதலை வேண்டி உயர்ந்த கரங்களால் உலகின் புருவங்கள் விரிந்தன !!!
-
- 1 reply
- 411 views
-
-
நள்ளிரவு கடக்கும் நேரம் "உறங்கப் போகிறேன்" என்கிறாய் குறுந்தகவல் வழியாக..! "கனவில் ஒரு நடை வந்து விட்டுப் போ..!" என்கிறேன். நிஜத்திற்கு ஆசைப்படும் நீயோ கனவில் வர மறுத்து சிணுங்குகிறாய்..! மயிலிறகால் வருடும் உன் நினைவுகளின் கூட்டம் மலையாய் கனக்கிறது..! நீ வந்து சேரும் வேளை மலைக்கும் நினைவுகள் மேகக்கூட்டமாய் மிதக்கிறது..! புயல் கடக்கும் போது பெய்யும் பெருமழையைப் போல தென்றல் தீண்டும் வேளை பொழிகிறது காதல் மழை..! ஆண் பெண் என்னும் வண்ணங்கள் கரைகிறது. அன்பை உடுத்திக் கொள்கின்றன நிர்வாணங்கள்..! ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மறுக்கப்பட்ட கனியை மன்மதன் திருடிச் செல்கின்றான்..! காதலிக்கப் படாமல் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்…
-
- 0 replies
- 410 views
-
-
"என் இறுதி சடங்கில்" "என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது" "ஓய்வு எடுக்க பெட்டியில் வைத்து ஒளி தீபங்கள் சுற்றி வைத்து ஒதுங்கி இருந்து தமக்குள் கதைத்து ஒழுங்கு படுத்துவது எனக்கு தெரிகிறது" "சிறந்த ஆடைகளை தேர்ந்து அணிவித்து சிறப்பான அலங்கார பாடை தருவித்து சிறார்கள் கையில் பந்தம் கொடுத்து சிரிப்பு இழந்து தவிப்பதை பார்க்கிறேன்" "நரம்பு நாடி தளர்ந்து போகையில் நம்மைநாடி நோய் வந்து சேர்கையில் நமக்கு பிடித்தவர் இல்லாமல் போகையில் நல்வரமாய் தான் இறப்பு இருக்குது" "மன்னனாய் பிறந்தாயென்று கர்வம் கொள்ளாதே மன்மத அழகனென்று லீலைகள் செய்யாதே மதுபோதை…
-
-
- 4 replies
- 406 views
- 1 follower
-
-
ஒரு கோடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும்!! by வித்யாசாகர் சுதந்திரம் என்று சொன்னாலே உள்ளே இதயம் படபடக்குமொரு பயம்; ஏன்? அதன் ஒவ்வொரு எழுத்திற்கும் எம் முந்தையோர் சிந்திய ரத்தமும் கொடுத்த உயிரும் காலம் பல கடந்தும் மறக்கவேண்டாத நினைவின் வலிபற்றிய பயமுமது; நிற்க முறைத்தலும் பார்க்க அடித்தலும் எதிர்த்துப் பேச உயிர்துறத்தலுமென நீண்ட கொடுமைதனைத் தாளாது திருப்பியடித்ததில் வாங்கியச் சுதந்திரம் – இன்று எம் தேசத்தின் ஒற்றைதின சிரிப்புசப்தமாகக் கேட்டாலும் இன்னுமன்றைய வலிக்கான கண்ணீர் ஓய்ந்தபாடில்லையென்பது வருத்தமில்லையா ? சேற்றிலிருந்து எடுத்த காலை மீண்டும் மனிதசாணத்தில் வைத்துக்கொண்டதைப் போல வெள்ளையனை வெளியேற்றிய கையோடு ஒற்றுமையை மண்ணில…
-
- 1 reply
- 405 views
-
-
தமிழனின் விஸ்வரூபம் திருவள்ளுவர்; தமிழரின் விஸ்வரூபம் தந்தை பெரியார்! ... ஈழத்தின் விஸ்வரூபம் பிரபாகரன்; ஈகத்தின் விஸ்வரூபம் திலீபன்! ... சோற்று வயிறின் விஸ்வரூபம் தோழர் ஜீவானந்தம்; ஆற்று மணலின் விஸ்வரூபம் தோழர் நல்லகண்ணு! ... தரையுலகம் விடுத்து திரையுலகம் பார்ப்போமாயின்… கொடையின் விஸ்வரூபம் கண்டி; கொள்கையின் விஸ்வரூபம் காஞ்சி; நடிப்பின் விஸ்வரூபம் விழுப்புரம்; வசனத்தின் விஸ்வரூபம் திருவாரூர்; ... இசையின் விஸ்வரூபம் பண்ணைப்புரம்; இயக்கத்தின் விஸ்வரூபம் அல்லி நகரம்; பாடலின் விஸ்வரூபம் சிறுகூடல்பட்டி; தேடலின் விஸ்வரூபம் பரமக்குடி; .... ஆம்; ஆழிசூழ் உலக நாயகனாம் - கமல் எனும் கலைஞன்… பரமக்குடியில்; ஒரு பார்ப்பனக் குடியில் - கதர…
-
- 1 reply
- 399 views
-