Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தீபத்திருநாள் எங்கள் வீட்டு புன்னகையை இறைவன் தின்ற வீரம் செறிந்த நாள் என் வீடு முழுக்க நிறைந்து கிடந்தது இரத்தச் சிதறலும் சிதைந்த உடலும் என் உடலம் தினமும் குளித்து துவண்டது பெருக்கெடுத்தோடிய உறவுகளின் செந்நீரில் என் பதுங்ககழியில் பாம்பு தூங்கியது சுகமாக தறப்பாள் கொட்டிலில் தம்பி தூங்கினான் பிணமாக தந்தை மூட்டிய தீயில் கொதித்த நீரின் சுவையறிய துடித்தது நா ஆனால் தர மறுக்கிறது காலம் தங்கையின் அழுகுரலிலும் தாயின் அசையாத உடல் இயக்கத்திலும் நான் தவித்துக் கிடந்தேன் சிங்களத்தின் தீபாவளி கொண்டாட்ட வானவேடிக்கைகள் எம்மை தின்று தீர்த்தன பிறந்தகம்…

  2. அ ன்பு உள்ளங்களே..... அ ன்பு காலை வணக்கம் .....அ திகாலை எழுத்தவன் ......அ திசக்தி ஆதவ்னையே.....அ ருகில் வரவைப்பான்......!!!அ ன்பினால் ... அ கிலத்தையே வெல்லலாம் ....அ ங்கிகள் தொடக்கம் ...அ ருகில் உள்ள உயிர்வரை ... அ ன்பு செலுத்துங்கள் .....!!!அ ற்புதங்கள் என்பது ....அ திசயம் செய்வதல்ல ...அ ன்புக்கு கட்டுபட்டு ...அ ண்ட சராசரத்தோடு ....அ டக்கமாவதே .........!!!அ ன்று சொன்னதை செய்ததை ....அ ன்றே மறப்பவனே ....அ தி உயர் மனிதன் ....அ தையே நினைத்துகொண்டிருந்தால் ...அ ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!!!அ ந்தி சாயும் நேரம் ....அ ன்றைய நிகழ்சிகளை ...அ சைபோட்டுபாருங்கள் ....அ ருவருப்பான செயல் எது ...?அ ரவணைப்பு செயல் எதுவென .....!!!

  3. நிச்சயதார்த்தம் முடிந்ததும்... புதுப் பெண்பிள்ளையும், புது ஆண்பிள்ளையும் செல்போனில் பேசிக்கொள்கிறார்கள்...   ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்! பெண்: நீ என்னைவிட்டு விலகிவிடுவாயா? ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன். பெண்: நீ என்னை விரும்புகிறாயா? ஆண்: ஆமாம். இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும். பெண்: நீ என்னை மறந்து விடுவாயா? ஆண்: அதைவிட நான் செத்துப் போயிடலாம்! பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா? ஆண்: கண்டிப்பாக... அதுதானே எனக்கு மிகப்பெரிய இன்பமான தருணம். பெண்: நீ என்னை அடிப்பாயா? ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன். பெண்: நீ என்னுடன் கடைசிவரை கை கோர்த்து வருவாயா? …

    • 3 replies
    • 1.2k views
  4. உன்னை தேவதை ஆக்கியது உன்னை ...நான் காதலியாக.... மட்டும் நினைக்கவில்லை..... வழிபடும் தெய்வமாகாவும் கருதுகிறேன் ......சில வேலை நீ கூட ......சிரிப்பாக எடுக்கலாம் ......!!!. நீ இருந்துபார் நீயே ,,,,,உனக்கு கடவுளாக தெரிவாய் ....உன்னை தேவதை ஆக்கியது என் "நினைவு அலை" தான் இந்த உலகில் எண்ணத்தை விட ஒரு கருவி இல்லை....!!!

  5. கலை நயம் பாதி மெய்யறிவு பாதி கலந்து செய்த கலவை நீ. நாத்திக மொழியில் நீ பேசினாலும் - அதில் ஆன்மிக உணர்வு கொண்டேன் நான். நடிப்புக்கு இலக்கணம் நீ என்பர் - அன்பு மனிதத்துக்கு இலக்கணமும் நீ என்பேன் பரந்த அறிவாற்றல், தூரநோக்குப் பார்வை, சீரிய சிந்தனை தொனிக்கும் உன் வீரியப் பேச்சு. சமூகப் பிரச்சினைகளின் ஆழம் அறிந்தோன்; சிக்கல்கள் நீக்க அதுவே வழி என்பான். தமிழின் அழகை உன் வாய் மொழி மொழியும்! கலையின் வனப்பை, புதுமையின் பொலிவை கமலின் ஆளுமையை அவன் படைப்புகள் பேசும்!

  6. சிந்தனை எனை விட்டு என்றோ போனதனால் கேட்கும் எதுவும் மனதில் பதிய மறுக்கின்றது பசிதாகம் கூட எடுக்காமல் கிடக்கின்றது நாவின் சுவை மறந்து நாளாகி விட்டது பச்சைத் தண்ணீர் மனம் மறுக்க எப்போதும் பழசெல்லாம் வந்து வந்து போகின்றது காதில் கலகலப்புக் கதைகேட்டு நாளாகி கட்டியவன் கூட காலாண்டாய் இல்லாமல் தொட்டதுக்கும் துணைவேண்டி துயரோடு தூக்கமிழந்து கிடக்கிறேன் கடைகண்ணி சென்றும் கனகாலம் ஆகி கண்ணாடி கூடக் கறுப்பாகிப் போச்சு கண்பார்வை போயும் கனநாளாய் ஆச்சு கோயில் குளமுமில்லை கூடிப்பேச யாருமில்லை கொண்டை மயிர் முடியக் கூந்தலில்லை கோதிக் காயவைக்கும் நிலையுமில்லை பத்துப் பிள்ளை பெற்றும் பசியாற வழியுமில்லை பட்டினி கிடக்கவும் பாள்மனது கேட்குதில்லை பக்கத்தில் இருப்போரின் பாசம் இழந்…

  7. கவிதையால் காதல் செய்கிறேன் இந்த கவிதை பகுதி ஒரு தொடர் கவிதை போல் எழுதுகிறேன் ஆனால் தொடர் கவிதை அல்ல .ஒவ்வொரு கவிதையும் தனி தனி அர்த்தமும் கருத்தும் கொண்டது . ஒரே திரியில் பலமுறை எழுதபோகிறேன் நன்றி கே இனியவன் ஏய் வான தேவதைகளே .... மறைந்து விடுங்கள் .... என் தேவதை வருகிறாள் .....!!! ஏய் விண் மீன்களே ..... நீங்கள் கண்சிமிட்டுவதை .... நிறுத்தி விடுங்கள் .... என் கண் அழகி வருகிறாள் ....!!! ஏய் வண்ணாத்தி பூச்சிகளே .... வர்ண ஜாலம் காட்டுவதை .... நிறுத்திவிடுங்கள் ..... என் வண்ண சுவர்னகை வருகிறாள் ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன்

  8. இதமான வசந்த காலம் தன் வனப்பை இழந்து நொடிந்து போகிறது தெளிவான அந்த நீல வானமும் கருமையை வேண்டி பூசிக்கொள்கிறது குதூகலிப்புடன் பூத்து குலுங்கிய மலர்களும் தன் சோபையை பறிகொடுத்து வாடி வதங்குகின்றன பச்சை வர்ண இலைகள் மண்ணில் விழுந்து ஒப்பாரி வைக்கிறது அதெப்படி முடிகிறது ? வசந்தகாலத்தில் இலையுதிர்காலம் எப்படி நுழைந்தது ? நேற்றைய சந்தோஷ வானில் இன்று மின்னலுடன் கூடிய பேரிடி ! நட்சத்திர விளக்குகள் அத்தனையும் அணைந்த நிலையில் வானமும் இருண்ட நிலையில் ! என் சந்தோஷ இறகுகள் விரிக்க திரணியற்று வலுயிழந்து போன நிலையில் உணர்வலைகளும் தோற்றுப் போய்விட்டன இன்று நட்பாக வந்த நல்ல இதயம் நஞ்சு ஊறிப்போய் தன் சுயநல போர்வையில் நினைவுகளுக்கு சுகமான ராகம் மீட்ட நினைத்த வேளையில் நரம்பருந…

  9. ஒழித்து விளையாடும் அம்மாவும் தெருவும் தேயிலை மலையும் மீண்டும் வருமெனக் காத்திருக்கும் குழந்தையின் முன்னால் குருதியை உறிஞ்சும் அட்டைகளும் வெறும் கூடைகளும் துளிர்த்திருக்கும் கொழுந்துகளும் அடர்ந்த செடிகளுமாயிருக்கும் தேயிலைத் தோட்டங்களும் உழைத்துழைத்துக் கூனிய முதுகளுடன் கொழுந்துப் பைகள் கொழுவிய தலைகளுடன் மலைக்கு வந்த நலிவுண்ட பரம்பரையின் புகைப்படங்களுடன் எல்லாவற்றையும் மூடியது மண் ஒவ்வொருவராய் தேயிலைச் செடிகளுக்குள் புதைக்கப்பட அதன்மீதேறி கொழுந்தெடுத்த சந்ததியை ஊரோடு மலை விழுங்கிற்று எவ்வளவெனிலும் சம்பளம் எத்தகைய குடிசைகளெனிலும் வாழ்வு மயானங்களுமற்றவர்களின்மீது சரிந்தது பெருமலை ஒடுங்கியிருக்கும் லயன்களிலிற்குள் வெளியில் வர முடியாதிருந்தவர்கள் ஒரு நாள் மலைகள…

  10. நீ நடந்து வரும் பாதையை ... காத்திருந்தே என் கண்கள் .... காய்ந்து போகிறது....!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை (S M S ) இதயத்தில் இருந்து வெளியேறாதே.... என்னைவிட உன்னை யாரும் .... இந்தளவுக்கு காதல் செய்ய மாட்டார்கள் ...!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை (S M S )

  11. நீயல்லவோ உயிரே ....!!!***பத்து மாதம் என்னை சுமந்து பெற்றவள்என் உயிர் தாய் ....!!!வாழ்நாள் முழுதும் உன்னைசுமக்க இருக்கும்என்னை என்னவென்று ...அழைப்பாய் உயிரே ...?உயிரை உயிரால் எடுத்து ...என் உயிரை சுமப்பவளே ....தாயின் இன்னொரு பிறப்பு ....நீயல்லவோ உயிரே ....!!!+கே இனியவன் காதல் கவிதைகள் உன்னை வயிற்றில்சுமக்கும் பாக்கியம்தாய்க்கு கொடுத்தாய் ....!!!உன்னை தோளில்...சுமக்கும் பாக்கியம்தந்தைக்கு கொடுத்தாய் ...!!!உன்னை இதயத்தில் ....சுமக்கும் பாக்கியத்தை ...எனக்கு கொடுத்தாய் .....!!!வாழ்க்கை முழுவதும் ....ஏதோ ஒருவகை சுமை ....காதல் எல்லா சுமைகளின் ....கூட்டு மொத்தம் ....!!!+கே இனியவன் காதல் கவிதைகள் வளர விட்டேன் காதலை ....மனதில் அதுவே இன்றுஎன்னை மாற்றி சுற்றவைத்து விட்டது....!…

  12. என்னவள் எனக்கு தந்த ....அத்தனை நினைவு பொருட்களும் .....கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!என்னையும் அவளையும் ....ஓவியமாய் வரைந்ததை ....கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!என் காதலை திருப்பி தா ....கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....வலிகள் நெருஞ்சி முள்போல் ....குத்துகின்றன அவளுக்காக ....காதலையும் கொடுத்துவிட்டேன் ....!!!அவளுக்காக எழுதிய அத்தனை .....கவிதைகளையும், கிழித்து விட்டேன்....வரிகளை தான் மறக்க முடியவில்லை.......!நினைவில் என்றும் வைத்திருப்பேன் ....ஆயுள் வரை கவிதைக்காக ....ஆயுள் வரை காதலிப்பதற்காக ....!!!+கே இனியவன் காதல் சோக கவிதை உன்னை மறுக்கும் நேரத்தில்....என்னை மறக்கிறேன் ....உன்னை நினைக்கும் நேரத்தில் ...என்னை மறக்கிறேன் .....!!!என்னை மறக்கிறேன்...உன்னை நினைக்கிறன் .…

  13. ஆனந்த விகடனில் இந்த வாரம் (28.10.15) "பூம்பாவாய்" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பூம்பாவாய் பூம் பூம் மாடு வாசலில் நிற்கிறது. அதன் அலங்கார உடை கண்டு அறியாதார் அதிசயிப்பர். கொம்புகளின் கூர்மை குத்திக் கிழிக்குமோ என்று குழந்தைகள் அஞ்சும். பூம்பூம் மாட்டுக்காரன் வந்துவிட்டால் செய்கிற வேலையை விட்டுவிட்டு ஓடிவந்து பத்து ரூபாய் கொடுப்பாள். நான் அந்த மாட்டுக்கு இரு வாழைப்பழங்கள் கொடுப்பேன் அவளிடம் கேட்டுக்கொண்டு! (நன்றி: ஆனந்தவிகடன் 28.10.15)

  14. என் தாயே ...உன் பாத திருவடியே ...உலகில் அத்தனை ஆலயங்களின் ...திறவு கதவு ....!!!என் தாயே ....உன் கருணை கொண்ட பார்வையே ....நான் வணங்கும் இறைவனின் ...கருணை பார்வை ....!!!என் தாயே ....என்னை விட்டு நீங்கள் இறை ...பயணம் சென்றாலும் ....உன் திருப்பாதத்தின் நினைவுகள் ...தான் நான் வணங்கும் இறைவன் ...!!!+கவிப்புயல் இனியவன் குடும்ப கவிதைகள் (அம்மா கவிதை )

  15. ஞாபக சக்தி குறைவானவர்கள் ....காதலில் பொய்சொல்ல ....முயற்சிக்க கூட்டாது ....அதுவே சந்தேகமாக ....உருப்பெற்று விடும் ....!!!பெற்றோர் காதலித்து ....திருமணம் செய்தாலும் ...பிள்ளைகளின் காதலுக்கு ....தடையாகவே இருப்பார்கள் இல்லையேல் விருப்பம் ....இன்றி ஏற்கிறார்கள் ....!!!காதலின் பின்னால் ஓடாதீர் ....காதல் இல்லாமலும் வாழாதீர் ....காதல் பேச்சை கூட்டி ....மூச்சை நிறுத்தும் ,,,,,!!!+கவிப்புயல் இனியவன்ஈழக்கவிஞர் காதல் தத்துவ கவிதை

  16. Started by nedukkalapoovan,

    தமிழினி.. எனி... முகநூலில் தெரிந்தவள்.. படைப்பில் என்னை கவர்ந்தவள்.. வந்த இடத்தில் அறிமுகமானவள்.. போர்க்களத்தில் துணிந்து நின்றவள்.. சேனைகள் அழிந்த போதும் சோரமே போகாதவள்.. பொய்யில் புலம்பெயர விரும்பாதவள்.. நோயில் கூட உதவி தேடாதவள்.. போர் முடிந்தும் மங்கை மறைமுகமாகப் போராடினள்.. வாழ்ந்து பார்க்க ஆசை இருந்தும் அடக்கிக் கொண்டவள்.. இன்னும் என்னென்னவோ பிறர் தரும்.. அடைமொழிகளை தாங்கி நிற்பவள்.... இத்தனை இதயங்களிலும் யார் உளர் அவள் கனவை இனங்காண.. நனவாக்க....??! தமிழினி எனி......................................................!!

  17. கிளைகளை வெட்டி விட்டேன் பக்கத்துவீட்டுக்காரன் ஒரே சத்தம் காணியை கடத்து கொப்பு வருவதாக மீண்டும் மீண்டும் துளிர்த்து அத்திசையே போகிறது கொஞ்சம் யோசிச்சேன் மரம் இருந்தால் தானே மாதம் மாதம் வெட்டும் வேலை நச்சரிப்பு தாங்கும் எண்ணம் இல்லை இனி ஆதலால் மரத்தை அறுத்து விட்டேன் அட ஆறுதலா அமரும் இடம் எந்த போக்கத பயல் வெட்டியது பக்கத்துக்கு வீட்டு கிழவி இது ஒம்மென ஆச்சி என்றால் பேத்தி எதிரில் வந்த வேலிக்காரன் ஏன் மரத்தை வெட்டினியல் என்றான் இருக்கும் போது என்னை நீ இருக்க விட்டியா இப்ப சோகம் வேர் இருக்கு மீண்டும் துளிர்க்கும் கிளை என் பக்கம் வரட்டும் பிள்ளைக்கு ஊச்சல் கட்டனும் இது அவன் சேர்த்து இருத்து கதை பேசலாம் இனி இது நான் .

  18. போருக்குப் புதல்வர்களை தந்த தாயக வானம் அழுகிறதென எழுதிவளுக்காய் கவிழ்ந்து கிடக்கிறது பூமி பாலையை கிழிக்கும் குரலில் பேரன்பு கந்தகம் படிந்த முகத்தில் அழகிய புன்னகை இரும்பு மனுசியின் கம்பீரத்தில் சீரழகு தாய்மை நிறைந்த நிகரற்ற தலைவி வீரக் கதைகளில் சீருடைகளுடன் இன்னும் உலவும் தலைவியின் மௌனத்திலும் இறுதி வார்த்தைகளில் உறைந்திருந்தது மாபெரும் நெருப்பு வாதையின் பிணியே சூழ்ச்சியாய் தன் புதல்வியை தின்றதென புலம்புகிறாள் தாயொருத்தி நெஞ்சில் மூண்ட காலத் தீயே தன் தலைவியை உருக்கியதென துடிக்கிறாள் சேனைத்தோழியொருத்தி மௌனமாகவும் சாட்சியாகவும் வாழட்டுமென நினைத்திருந்த தலைவியையும் இழந்தோம் பரந்தன் வெளியில் அலறி விழுமொரு பறவையை தேற்ற வார்த்தையற்றிருக்கிறது துயருண்ட தேசம் …

  19. இந்த வார ஆனந்த விகடனில் (8.10.15-14.10.15) சொல்வனம் பகுதியில் "உள்ளுறையும் ஈரம்" என்ற எனது கவிதைவெளியாகியுள்ளதை, யாழ் களத் தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். உங்கள் ஊக்கத்துக்கும் வாசிப்புக்கும் நன்றி! வடை மழை வயற்காட்டிலிருந்து திரும்பும்போது கணக்கு வைத்திருக்கும் மளிகைக் கடையில் தேன் மிட்டாயோ வரிக்கியோ மறக்காமல் வாங்கி வருவார் அப்பா வானம் இருட்டிக்கொண்டு மழை வரும் அறிகுறி தெரிந்தால் உளுந்தை ஊறவைத்துவிடுவாள் அம்மா. மழை வரும் நாளில் கண்டிப்பாக வடை சுடுவாள் என்று தூறலோடு ஓடிவருவார் அப்பா, அன்றைக்கு மட்டும் வெறுங்கையோடு. ‘என்ன வாங்கி வந்தேப்பா?’ என்று ஓடிவரும் பிரியாக்குட்டியிடம் அம்மா சொல்வாள் ‘இன்னைக்கு உங்கப…

  20. Started by nirubhaa,

    முகம் மற்றுமோர் உயிருள்ள கண்ணாடி.. உண்மையும் பேசும் -அதுபோல் பொய்யும் பேசும் ...! அகத்தின் அழகு முகத்தில் என்றார்... அகம்,முகம் அப்படியென்ன இணைப்பு அதற்குள்.? ஒன்று பேசுவதை மற்றொன்று காட்டிக் கொடுக்கிறதே...! முகம் முதலில் ஓர் அறிமுகச் சாதனம் ...¨! முகமே பலசமயம் நம் முகவரியும் ஆகும்..! நினைவின் விம்பங்கள் - பதியப்படும் நிலம் முகம்..! மனம் மகிழ்ந்தால் முகம் ஒளிரும்...! துக்கமானால் அது அழும்...! முன்னால் நிற்பவருடன் பேசுவதா வேண்டாமா , நல்லவரா கெட்டவரா - முகம் தீர்மானிக்கும்...! உள்ளே இருப்பது அன்பா விஷமா ...! முகம் சொல்லும்...! அன்பை சொல்ல சொல் தேவையில்லை - முகமே போதும் நம் எண்ணங்கள் சொல்ல...! விருப்புக்களுக்கு முதலில் சம்மதம் சொல்வதும் - வெறுப்புக்கள…

    • 0 replies
    • 1.4k views
  21. மிக மிக எளிதாக சிந்தவைக்கப்பட்டதுபோல மிக மிக எளிதாக துடைக்க முடியாத குருதி யாரும் அறிந்திரா விதமாய் உறிஞ்சினர் வாழ்பவர்களின் குருதியையும் மாபெரும் சவக்கிடங்கைமூடும் மாபெரும் இரத்தப் பெருவெளியை துடைக்கும் உதவிக்கு மாபெரும் சனங்களை வீழ்த்திய அதே கரங்கள் வெடிலடிக்கும் கொடிகளோடு எலும்புக்கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட ஐ.நாவில் பேரம் பேசும் கொலையாளிகள் இடைவேளையில் அருந்தினர் ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் குருதியை இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர் கொன்று தின்றவனே தன் வாயினை துடைக்கட்டுமென பூமியெங்கும் நீங்க மறுக்கும் குருதிக்கறைகள் அது அவ்வளவு எளிதல்ல மிக மிக எளிதாக சிந்தவைக்கப்பட்டதுபோல மிக மிக எளிதாக துடைக்க முடியாத குருதி எளிதாக மறைக்கப்பட்ட ஒன்றரை லட்சம் உட…

  22. Started by karu,

    காந்தீயம் (அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்காக.) இமயத்தின் முன் ஓர் சிறுவனாய் அண்ணாந்து நிற்கிறேன் பிரமாண்டம்! அது ஒன்றுதான் புரிகின்றது. கலப்பு, பிறப்பு, இளமை, ஒழுக்கம், கல்வி, குடும்பம், வாழ்வில் எளிமை சமூகம், பண்பு, சமயம். சேவை, தர்மம், சத்தியம,பக்தி அகிம்சை அரசியல், தொழிலில் அறம் எனப் பலவாய் பாறைகள் அடுக்கிப் பார்க்கவே எட்டா உச்சமாய்த் திகழும் தியாகப் பாறை எட்டிப் பிடிக்க முடியாத் தெலைவில் எங்கோ முடியாய் இருக்க நானோ பிரமாண்டத்தின் வைர மலைகளை யானையைப் பார்த்த குருடனைப்போல ஒன்றொன்றாகத் தொட்டுத்தடவி... ... கூழாங்கற்களாய் உணர்ந்து மயங்கும் முட்டாள்தனத்தில் மூழ்க முடியுமா? ஏனோ எனக்கு எதுவும் புரியவி;லை கலப்புப் பற்றி காந்தீயம் சொல்கிறது: இயற்கை உனக்குக் காமக் கிளர…

    • 4 replies
    • 1.1k views
  23. Started by nirubhaa,

    சத்தம் ... உற்றுக் கேட்டால் உனக்கும் எனக்கும் புரியும்... உலகம் முழுவதும் இடையறாது ஒலிக்கும் .... ஓம் எனும் சத்தம் .....! இதனை இயற்கையின் இரைச்சல் என்கிறார் சிலர் ....!-மற்றும் சிலரோ ஓம்கார மந்திரம் என்றனர்....! சத்தமில்லா உலகமும் இல்லை- மனித உள்ளமும் இல்லை....! நித்தமும் ஒரு சத்த யுத்தம் மனங்களுக்குள் சத்தமின்றியே நடக்கும்...! வாய் திறந்தால் சத்தமும் -திறக்காத போது மௌன யுத்தமும் நடக்கிறது...! மலர்கள் அசையும் போதும் - பட்டாம் பூச்சி பறக்கும் போதும் சத்தம் வருகிறது - மலர்களின் அசைவிற்கு ஒலி அளவுண்டு, விஞ்ஞானம் சொல்கிறது...! மனிதன் தான் கேட்பதில்லை மலர்கள் பேசும் போது ...! நம் வாழ்க்கையில் .. மனிதன் அழுவது சத்தம் ! அவன் சிரிப்பது சத்தம்...! பேசுவது சத்தம்!…

  24. இனவாதச் சிங்கள அரசின் - தமிழ் இனப் படுகொலைப் பாதிப்பால் ஐ.நா.சபையில் நீதி தேவதை தற்கொலை மரணவிசாரணை மட்டும் தொடர்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.