வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5563 topics in this forum
-
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் மொன்றியல் உலகத் திரைப்பட விழாவில் கனடியத் தமிழ்த் திரைப்படம் – A Gun & A Ring இதுவரையில் யாரும் சொல்லாத கதையைச் சொல்ல வேண்டு-மென்ற முனைப்போடு இளம் கனடிய இயக்குநர் லெனின் எம். சிவத்தின் எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு முரளியின் தயாரிப்பில் உருவான ‘A Gun & A Ring’ திரைப்படம் 37வது மொன்றியல் உலகத் திரைப்பட விழாவுக்குத் தெரிவாகியுள்ளது. ஈழத்துப் போர்கால உயிரிழப்புகள், கொடூர நினைவுகளிலிருந்து மீளவும் முடியாமல் அவற்றை மறக்கவும் முடியாமல், தாம் குடியேறிய நாட்டில் புதியதொரு வாழ்வைக் கட்டியமைக்க முனையும் வெவ்வேறு தலைமுறையினர் எதிர்கொள்ளும் கடினமான யதார்த்தத்தை இத்திரைப்படம் ஆழமாக ஆராய முயல்கின்றது. ‘படத்துக்குக் கிடைக்கும் இவ் அங்கீக…
-
- 0 replies
- 281 views
-
-
இந்தியாவே கொண்டாடும் ஒளிப்பதிவு இயக்குனர் சந்தோஷ் சிவன். மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக அறிமுகமாகி ஹிட் படங்களை கொடுத்தவர். ரோஜா, இருவர், ராவணன், துப்பாக்கி போன்ற புகழ் பெற்ற தமிழ் படங்களிற்கும், அசோகா, டில்சே போன்ற புகழ் பெற்ற ஹிந்தி திரைப்படங்களிற்கும் ஒளிப்பதிவு இயக்குனராக தனது முத்திரையைப் பதித்தவர். இவர் தனியே ஒளிப்பதிவு இயக்குனர் மாத்திரம் அல்ல மல்லி, உறுமி, அசோகா போன்ற புகழ் பெற்ற படங்களின் இயக்குனரும் ஆவார். இவர் ஈழப் பிரச்சனையை, ஈழ மக்களின் அவலத்தை “இனம்” என்ற தலைப்பில் படமாக்கியுள்ளார். அரவிந்தசாமி, சரிகா, கருணாஸ் நடித்த இத் திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ஈழப் போரால் அநாதையான சிறுவர்களைப் பற்றிய இந்த திரைப்படத்தில் யாழ்ப்பாணம…
-
- 0 replies
- 502 views
-
-
“வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர் படங்களில் நடித்த மனிஷா யாதவ், கமர்சியல் கதாநாயகி ஆக முடிவெடுத்து விட்டார். “பட்டயக்கிளப்பு பாண்டியா என்ற படத்தில் கவர்ச்சி பிளஸ் முத்தக்காட்சி என்றெல்லாம், புகுந்து விளையாடியுள்ளாராம். அவர் கூறுகையில், “சினிமாவில் அறிமுகமான போது, அழுத்தமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து, நடிக்கும் முடிவில் இருந்தேன். ஆனால், சினிமா வேறு மாதிரியாக உள்ளது. அதாவது வெயிட்டான வேடமாக இருந்தாலும், பாடல் காட்சிகளில் கதாநாயகியை கிளாமராக காண்பித்து, ரசிகர்களை ரிலாக்ஸ் செய்ய நினைக்கின்றனர். அதனால் தான் சினிமாவுக்கேற்ப, என் முடிவை மாற்றிக் கொண்டுள்ளேன் என்கிறார். மேலும் அவர், “இந்த படத்துக்கு பின், எனக்கு ஏராளமான வாய்ப்புகள் குவியும். தமிழில், நானும் முன்…
-
- 0 replies
- 428 views
-
-
ராஜராஜ சோழனின் போர்வாள் எனும் படத்துக்கு மக்கள் முன் இசையமைக்கப் போகிறார் இளையராஜா என்று முன்பே கூறியிருந்தோம். அவர் அப்படி இசையமைக்கப் போகிற இடம் ரொம்ப சுவாரஸ்யமானது. மாமன்னன் ராஜராஜ சோழனின் குரு எனப்படும் கருவூர் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடத்தில்தான் இளையராஜா மக்கள் முன் மெட்டமைக்கிறார்.இந்த இடம் கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 11-ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. கருவூர் சித்தரின் ஜீவசமாதி உள்ள இடத்தில் இசைஞானி இசையமைப்பதைக் காண பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது .இளையராஜா இந்த இடத்தைத் தேர்வு செய்தது ஏன் தெரியுமா? சோழ மன்னர்களில் தலை சிறந்தவரான ராஜராஜ சோழனுக்கு குருவாகத் திகழ்ந்தவர் கருவூர் …
-
- 2 replies
- 2.9k views
-
-
சென்னை: காசோலை மோசடி வழக்கில் பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரபல சினிமா இயக்குனரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ககன் கோத்ரா என்பவர் என் மீது 65 லட்சம் ரூபாய்க்கான செக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில் முகுல் சந்த் கோத்ராவிடம் தான் 65 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அவருக்கு பதில் தான் இந்த வழக்கை தொடருவதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு பவர் ஏஜெண்டாக செயல்பட்டு என் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆர். சுப்பைய…
-
- 0 replies
- 347 views
-
-
சென்னை: பாடலாசிரியர் சினேகன் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ராஜராஜனின் போர்வாள் எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்துக்கான ட்யூன்களை மக்கள் முன்னிலையிலேயே மெட்டமைக்கப் போகிறார் இசைஞானி. ‘யோகி' படத்தில் அமீருடன் நடிகராக அறிமுகமானார் சினேகன். அடுத்து பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரேம்நாத் இயக்கிய ‘உயர்திரு 420' என்ற படத்தில் நடித்தார். இப்படம் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை.இந்நிலையில், மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு சினேகனுக்கு கிடைத்துள்ளது.ஆர்.எஸ்.அமுதேஷ்வர் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். ‘இராஜராஜ சோழனின் போர்வாள்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இளையர…
-
- 0 replies
- 720 views
-
-
சென்னை: காதலும் வேண்டாம் காதலனும் வேண்டாம் என நீதிமன்றத்தில் கூறிவிட்டு மகள் தாமினி தன்னோடு வந்ததில் மிகுந்த சந்தோஷமடைந்த இயக்குநர் சேரன், மீடியாவுக்கு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி நன்றி தெரிவித்தார். நீதிமன்றத்தில் இன்று தாமினி காதல் வழக்கு விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. பழையபடி தாய் தந்தையுடன் சேர்ந்துவிட்டார் தாமினி. தன் மகள் திரும்பக் கிடைத்தது சேரனுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்துள்ளது. இதற்காக அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர் அவரைச் சுற்றி நின்றிருந்தனர். ஏராளமான மீடியாக்காரர்களும் வந்திருந்தனர். தரையில் விழுந்து... அப்போது அனைவர் மத்தியிலும் பேசிய சேரன், 'என் பொக்கிஷம் திரும்பக் கிடைத்துவிட்டது. எ…
-
- 4 replies
- 1.2k views
-
-
சேரனின் இரு மகளுக்கும் I LOVE U சொன்ன மகளின் காதலன் – சேரன் பர பரப்பு பேட்டி வீடியோ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9UfJrmCb6vI http://www.ampalam.com/2013/08/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-i-love-u/
-
- 3 replies
- 1k views
-
-
அசின் வாய்ப்பை கைப்பற்றிய ஸ்ருதி தெலுங்கு, இந்தி சினிமாவில், சில முன்னணி நடிகைகளுக்கு, கிடைக்கவிருந்த படங்கள், ஸ்ருதி பக்கம் திரும்பியுள்ளன.தெலுங்கில், கப்பர் சிங்-2 படத்தை எடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோது, காஜலைத்தான், ஹீரோயினாகஒப்பந்தம் செய்ய, பேசி வந்தனர். ஆனால், கடைசியில், அந்த வாய்ப்பு, ஸ்ருதிக்கு வந்தது. அடுத்ததாக, இந்தியில் தமன்னாவை, ரமணா ரீ-மேக் படத்துக்கு கதை சொல்லி ஓ.கே., செய்து வைத்திருந்தனர். டி-டே படம் வெற்றி பெற்றதால், ஸ்ருதியை, அந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்து, தமன்னாவுக்கு அல்வா கொடுத்து விட்டனர். தற்போது, அசின் இந்தியில் நடிக்கவிருந்த, வெல்கம் பேக் என்ற படமும், ஸ்ருதிக்கு கிடைத்துள்ளது.இந்த கதைக்கு ஸ்ருதியே பொருத்தமாக இருப்பதாக, படத் தயாரிப்பாள…
-
- 1 reply
- 1.3k views
-
-
தலைவா ரிலீஸ்: ஆடு வெட்டி, மொட்டை போட்டு, பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள். நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் திருட்டு சி.டி வெளிவந்துவிட்டது. இந்த சி.டியை ரசிகர்களே பல இடங்களில் பிடித்து கொடுத்தனர். இந்த நிலையில் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து இன்று செவ்வாய் கிழமை தலைவா திரைப்படம் தமிழ கத்தில் திரைக்கு வந்தது. புதுக்கோட்டையில் திரையரங்கம் முன்பு திரன்ட ரசிகர்கள் மாவட்ட அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜாபர் அலி தலைமையில் ஆடு வெட்டி, மொட்டை போட்டு விஜய் படத்திற்கு பாலா பிஷேகம் செய்தனர். அப்போது அவர்கள் கூறும் போது தலைவா படம் தமிழகத்தில் நீண்ட நாட்கள் ஓட வேண்டும் என்பதற்காகத் தான் இந்த ச…
-
- 13 replies
- 1.6k views
-
-
பாலா இயக்கிய சேது படம் மூலம்தான் விக்ரமுக்கு தமிழ்சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் அதை தக்கவைத்துக்கொண்டு விக்ரம் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக மேலேறிவரமுடியவில்லை! இதை தில், தூள் படங்களின் மூலம் மாற்றிக்காட்டியவர் இயக்குனர் தரணி! இருவரும் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். கல்லூரிக் காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இதைவிட ஆச்சர்யம்.. இருவருமே மிகப்பெரிய சாலை விபத்தில் சிக்கியவர்கள். இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்த தில், தூள் படங்களின் அதிரடி வெற்றியை தமிழ்சினிமா ஃபாக்ஸ் ஆபீஸ் அத்தனை சீக்கிரம் மறந்து விடாது! இப்படி இரண்டு மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்தும்கூட இருவரும் நீண்ட நாட்களாக இணைந்து படம் பண்ணாமல் இருந்தார்கள். விக்ரம் - தரணி இருவருக…
-
- 0 replies
- 794 views
-
-
டைரக்டர் சேரனின் 2-வது மகள் தாமினி, சூளைமேட்டைச் சேர்ந்த நடன கலைஞர் சந்துரு காதல் விவகாரம் கோர்ட்டு வரை சென்றது. தாமினி 2 வாரங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி சந்துரு குடும்பத்தினருடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தார். அதில் காதலன் சந்துருவை கொலை செய்ய முயற்சிப்பதாக தந்தை சேரன் மீது புகார் கூறினார். இதை மறுத்த டைரக்டர் சேரன் சந்துருவின் நடவடிக்கை சரியில்லை. எனவேதான் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இது தொடர்பாக கண்ணீர் மல்க பேட்டி அளித்த சேரன் ``தனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். காதலுக்கு நான் எதிரி இல்லை'' என்று தெரிவித்தார். இதையடுத்து சேரனின் மகள் தாமினிக்கு பெண் போலீசார் கவுன்சிலி…
-
- 0 replies
- 559 views
-
-
காதலன் தேடும் டாப்சி – யாராச்சும் பிறியா இருந்த மனு போடுங்க video http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Sgmbql6s-ss http://www.ampalam.com/2013/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/
-
- 31 replies
- 2.1k views
-
-
விஸ்வரூபம் திரைப்படத்துக்கு சிக்கல் வந்தபோது, பெரும்பாலானோருக்கு கமல் மீது ஒரு அனுதாபம் இருந்தது. ஆனால், எது சிக்கல் என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் விஜய் மீது ஏன் அவர் ரசிகர்களைத் தவிர யாருக்குமே அனுதாபம் இல்லை... ? 2007 - ஆம் ஆண்டு. விஜய் டிவியில் வரும் லொள்ளு சபா நிகழ்ச்சியை பார்த்து ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. பல திரைப்படங்களை ரசிக்கும் வகையில் கலாய்ப்பார்கள். அப்படி பல படங்களை கலாய்த்து பெரிய நடிகர் ஆனவர்தான் சந்தானம். சந்தானம் திரைத்துறைக்கு சென்றதையடுத்து, அவர் இடத்தில் லொள்ளு சபாவில் நடித்தவர் நடிகர் ஜீவா. விஜயின் போக்கிரி படத்தை பேக்கரி என்ற பெயரில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் செம்மையாக கலாய்த்தார். நடிகர் விஜய்க்கும் அவர் தந்தை சந்திரசேகருக்கு…
-
- 2 replies
- 1.6k views
-
-
மௌனகுரு படத்தில் ஆரம்பித்து சூடுபிடிக்க ஆரம்பித்தது ஜான் விஜயின் மார்க்கெட்! தற்போது பெரும்பாலான படங்களில் குறைந்தது துணை வில்லனாக நடித்து விடிகிறார். தற்போது 'விடியும் முன்’ படத்தில் நான் கடவுள் பூஜா நீண்ட இடைவெளிக்குப் பின் நடிக்கிறார். திகில் படமான இதில் நான்கு வில்லன்களில் ஜான்விஜயும் ஒரு வில்லன். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிக்கப்போன இடத்தில் ஜான் மூணு கிலோ சிக்கன், மூணு கிலோ மட்டன், மூணு கிலோ மீன் என தன் சொந்த பணத்தில் வாங்கி வரச்செய்து யூனிட்டிற்கு சமைத்துப் போட்டிருக்கிறார். இதில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டவர் பூஜா. இது பற்றி ஜான் விஜய், “நான் ஓரம்போ படத்திற்குப் பிறகு நடிச்சு தள்ளியிருக்குற படம் விடியும் முன் படம்தான். படத்துல நான் ரொம்ப கெட்டவன். ரெட் ஹில்ஸ், …
-
- 0 replies
- 437 views
-
-
முதல்முறையாக பாட்டு பாடும் சூர்யா…. ரசிகர்களே மிஸ் பண்ணிடாதீங்க!… – (video song) http://www.ampalam.com/2013/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-2/
-
- 0 replies
- 655 views
-
-
ஜேம்ஸ் வசந்தனின் செவ்வி http://youtu.be/I6NDryB9Liw
-
- 0 replies
- 646 views
-
-
விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் ’மெட்ராஸ் கபே’ திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று தமிழ் அமைப்புகள் தடை கோரியுள்ளன. இந்நிலையில் அப்படத்தின் கதாநாயகனும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜான் ஆபிரகாம், சென்சார் போர்டு ’மெட்ராஸ் கபே’ திரைப்படத்தை வெளியிட அனுமதித்து நற்சான்று வழங்கியுள்ளது. எனவே அப்படத்தை நான் நிச்சயம் திரையில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார். இப்படத்தில், ராஜீவ் காந்தியை கதாநாயகனாகவும், பிரபாகரனை வில்லனாகவும் சித்தரித்து காட்டப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான், ம.தி.மு.க. தலைவர் வைகோ உள்ளிட்டோர் அப்படத்திற்கு தடை கோரியுள்ளனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் சண்டை தீவிரமாகிறது. அங்கு அமைதி …
-
- 1 reply
- 578 views
-
-
சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப் பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக் கொண்டபுரம்!. கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் முற்போக்கான மேற்கோள்கள் தெறிக்கும். `பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்! பாரதிராஜாதான் `கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். `16 வயதினிலே’ தான் அறிமுகப் படம்! அம்மாவை `ஆத்தா’ என்று தான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டு விட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் …
-
- 1 reply
- 2.8k views
-
-
நடிகர் விஜய், அமலாபால், சத்யராஜ், சந்தானம் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கியுள்ள படம் ‘தலைவா’. இப்படத்தை மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். இப்படம் கடந்த 9-ந் தேதி உலகமெங்கும் வெளியாக இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்டால் திரையரங்குகளில் வெடிகுண்டு வைக்கப்படும் என மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து, இப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் படம் வெளியானது. அங்கு படம் வெளியானதால், திருட்டு விசிடி கும்பல், இப்படத்தை திருட்டு விசிடி தயாரித்து புழக்கத்தில் விட ஆரம்பித்தது. இதனால் தயாரிப்பு வட்டாரம் பெரும் நெருக்கடியை சந்தித்தத…
-
- 6 replies
- 685 views
-
-
சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் காலமான நடிகர் மற்றும் இயக்குனரின் மனைவி செங்கமலம் இன்று மாரடைப்பால் காலமானார், அவரது உடல் சென்னையில் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது. http://goldtamil.com/?p=6777
-
- 31 replies
- 2.3k views
-
-
உலக இசை அமைப்பாளர்களுக்கு இளையராஜா சவால் வருகிற ஆகஸ்ட் 24ந் தேதி சனிக்கிழமை இசைஞானி இளையராஜா முதன் முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் 19 டாப் பாடகர், பாடகிகளும், 75 இசைக் கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஒத்திகை பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் தீவிரமாக நடந்து வருகிறது. ஜயங்கரன் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. லண்டனிலேய மிகப்பெரிய உள்ளரங்கான ஓ2 வில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இது தொடர்பாக இளையராஜா சென்னையில் பேட்டி அளித்தபோது உலக இசை அமைப்பாளர்களுக்கு ஒரு சவால் விட்டார் அது இதுதான். “நான் இசை அமைத்த ப்ரியா படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் சிங்கப்பூரை சுற்றி பார்ப்பது போன்று பத்து நிமிடங்களுக்கு காட்சி வைத்திருப்பார்கள். தெருவில்…
-
- 23 replies
- 1.8k views
-
-
மறைந்த காதல்...! மறைக்க முடியாத பெயர்...! நயன்தாராவின் கையில் அழியாத முன்னாள் காதலன்! வெள்ளிக்கிழமை காலை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நயன்தாராவுடன் தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிக்கும், பெயர் வைக்கப்படாத தமிழ் படத்திற்கான பூஜை நடந்தது. இதில் மீடியா முன்பு அதிகம் தோன்றாத நயன்தாரா கலந்து கொண்டார். பிரபுதேவாவுடன் காதலில் இருந்தபோது, தனது கையில் பிரபுதேவா பெயரை பச்சை குத்தியிருந்தார். தற்போது அந்த காதல் முறிந்துவிட்டது. ஆனாலும் பச்சை குத்திய மறைக்கவில்லை. இதனால் கேமராக்கள் அவரையே மொய்த்தன. இருந்தாலும் பூஜை முடிந்ததும், அவர் யாருக்கும் பேட்டியளிக்காமல் தனது காரில் புறப்பட்டார். படங்கள்: எஸ்.பி.சுந்தர் http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=105727
-
- 3 replies
- 545 views
-
-
பாலாவின் ‘நான் கடவுள்’ படத்துக்குப் பிறகு காணாமலே போய்விட்ட பக்காவான இலங்கை நடிகை பூஜா, நீ……………..ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘விடியும் முன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘நான் கடவுள்’ படத்துக்கு முன்பாகவே கமிட்டான அப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் இன்று காலை சென்னையில் நடைபெற்றது. பங்ஷனுக்கு வந்திருந்த பூஜா தனக்கும் டைரக்டர் சீமானுக்கும் உள்ள நெருக்கத்தை மேடையிலேயே பகிர்ந்து கொண்டார். “இந்தப்படத்தோட ஆடியோ பங்ஷனுக்கு வர்றதுக்கு முன்னாடி எனக்கு சீமான் சார் போன் பண்ணினார். நீ நடிச்ச படத்தோட போஸ்டர்கள் எல்லாத்தையும் பார்த்தேம்மா… நீ சென்னைக்கு வந்திருக்கிறதா சொன்னாங்க… என்றவர், கன்னுக்குட்டி எப்படி இருக்கே? நல்லாருக்கியா? என்று பூஜாவிடம் அன்பொழுக நலம் விசாரித்தாராம். அதுமட்டுமி…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஈழத்தமிழர்களின் வாழ்வியலை வலிகளை அவர்கள் பட்ட.. பட்டுக்கொண்டிருக்கின்ற துன்பங்களைப் பலர் பல கோணங்களில் இன்று படமாக்கி வருகின்றனர். அந்தவகையில் தனது வித்தியாசமான கேமிரா கோணங்கள் மூலம் புகழ் பெற்ற பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் “இனம்” என்ற படம் மூலம் மீண்டும் இயக்குனராக களமிறங்கி இருக்கிறார். “அசோகா”, “உறுமி” போன்ற ஒருசில படங்களை ஏற்கனவே இயக்கிப் புகழ் பெற்ற இவர் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் “Ceylon” எனவும் தமிழில் “இனம்” எனவும் இப் படத்துக்கு பெயர் சூட்டியுள்ளார். துப்பாக்கி, தளபதி, ரோஜா, உயிரே, இராவணன் போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர் அண்மையில் “இனம்” படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரை தனது ட்விட்டர் பக்க…
-
- 0 replies
- 687 views
-